Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "பிறந்தநாள் வயதைக் கூட்டுது ஒருபக்கம்" [01/11/2023 எழுதியது] "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழ பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலச தொடங்கினேன் வேஷம் போட்ட பலதை கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களை கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்த…

  2. "நொட்டி நொடிய விடாதே பெண்ணே?" "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகும் பெண்ணே!" "பட்டி தொட்டி எங்கும் சொல்லி கட்டி தங்கம் வெட்டி எடுத்து செட்டி செய்த மோதிரம் மாற்றி மெட்டி காலில் கண் சிமிட்ட தட்டி கேட்கத் துணை சேர ஒட்டி உரசிப் போகலாம் பெண்ணே!" "மூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும் கூட்டி பெருக்கித் துடைக்க வேண்டும் ஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும் லூட்டி அடித்து குழப்ப வேண்டும் போட்டி போட்டு கொஞ்ச வேண்டு…

  3. வேர் - வ.ஐ.ச.ஜெயபாலன் * நாற்பது வருடங்களுக்குப் பின்னும் எங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள் முட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும் வேர்கள் கோர்த்த காதலுடன் இன்னும் அருகருகாய். விடைபெறும் காதலரை வாழ்த்தி புதியவர்களுக்குக் குடை விரித்தபடி. . அன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அலைந்தோமே இப் புனித நிழல்களைக் காணும்வரை. . சாதி அற்று காதலர் சிறகசைப்பது இருளின் வரமாய் மட்டுமிருந்த . யாழ்ப்பாணத்தின் நடுவே ஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய் ஒரு பல்கலைக் கழகம் வருமெனவும் அங்கு அஞ்சேலென மலைவேம்புகள் நிழலாகுமெனவும் என் பதின்ம வயசுகளில் கனவுகூடக் கண்டதில்…

    • 1 reply
    • 1.5k views
  4. Started by Kaviarasu,

    என்னை சுமந்த உன்னை நான் சுமக்க ஆசை படுகிறேன் தாய்யாகவா ? அல்லது தாரமாகவா ? நீயே சொல் என் தமிழே...!

  5. ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....! ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...! அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..! என்ன பாடம் என்றில்லை.., எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..! ஒரு நாள் கேட்டார்...! உனக்கு உரிமை இருக்கா எண்டு...? என்னடா இது புது வில்லண்டம்? வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..! அப்போது புரியவேயில்லை...! ஆறாம் வகுப்பு முடிஞ்சு ..., அட்வான்சு லெவல் வந்த போது.., எல்லாமே புரிஞ்சது...! நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு.... ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....! கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சது மாதிரி...! மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல…

    • 3 replies
    • 1.5k views
  6. "வீழ்ந்தாலும் வித்தாகிடு!" "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!" "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!" "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. எல்லைகள் தாண்டி கருந்தேகம் ஒன்று கரங்கள் அறுந்து கால்கள் ஒடிந்து தழும்புகள் நிறைந்து கனவில் வந்து கதை பேசிச் சென்றது. வடக்கே என் வீட்டுக் கோடியில் ஆக்கிரமிப்பு எதிரியோடு தான் இட்ட சண்டையில் கரம் ஒன்று அறுந்தது.. கிழக்கே என் சொந்தங்களின் வளவில் தான் இட்ட சண்டையில் கால் ஒன்று ஒடிந்தது.. கந்தகத் துகள் துப்பி உடல்கருகிக் கரும்புலியானதன் அடையாளம் கருந்தேகம் என்று சொன்னது.. முள்ளிவாய்க்கால் தனில் உயிர் சுவாசம் தேடிய இறுதி மூச்சு வேளையில் வெள்ளைப் பொஸ்பரசில் உலக வல்லரசுகள் ஒன்றாய் வீசிய குண்டுகளில் அவன் முகமே தழும்புகளால் ந…

    • 2 replies
    • 1.5k views
  8. காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்! அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்! நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் …

  9. வாழ்வு என்றும் வசந்தங்களே மல்லிகை பூ வாசனையும் வசந்தத்தின் புன்சிரிப்பும் உன் கண் வரைந்த சித்திரமும் கால் கொலுசு சந்தங்களும் இன்னும் என்னை விட்டு போகவில்லை கால்நடை கொஞ்சம் தளர்ந்து கட்டினிலே நான் படுத்தாலும் உன் பூ மணம் விட்டு போகுமோடி முடியாது போடி என் முழு நிலவின் சித்திரமே உன் கன்னத்தின் குழிகளிலே என் கவிதைகளை புதைத்தவளே காலம் ஒன்று இருந்தால் கல்அறையிலும் வாழ்வு செய்வோம் அதன் வழியால் செல்பவன் எவனாக இருந்தாலும் எழுதிவிட்டு செல்லட்டும் எம் கல்லறையின் நடுவினிலே வாழும் வரை காதல் செய்த வண்ணக் கிளிகள் நாங்கள் என்றும் காதல் கிளி இரண்டு கண் மூடி தூங்குதென்றும் …

    • 2 replies
    • 1.5k views
  10. "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது] "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கித் தன்னை அலங்கரிக்கிறான் ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும் ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் !" "நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான் நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !" "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !" "மகிழ்ச்சி என்பது மனிதனின் …

  11. கடவுள் ஒரு கைப்பிள்ள! முன்பொரு நாளில்... கடவுளை மனிதன் படைத்தான்... அன்றிலிருந்து கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்... தாயுமானார், தந்தையுமானார்... பின்னொரு நாளில்... "மகனே நந்தனா, உள்ளே வா" சொல்லத் தயங்கினார்... பதிலுக்கு "சற்றே தள்ளி இரும் பிள்ளாய்" திருவாய் மலர்ந்தார்... நிற்க... "எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்" "பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்... தன் பெயராலே ஓர் அதர்மம் தடுப்பதற்கோ அஞ்சினார்... இன்றொரு நாளில்... கடவுளுக்கு மனிதன் தேவையோ இல்லையோ தப்ப முடியாது... மனிதனுக்கு "கடவுள்த்தேவை" மிக அதிகம்... ஏனென்றால் கடவுள் ஒரு கைப்பிள்ள... - பராபரன்

  12. ஊருக்கு போய்வந்த தம்பர்..! *********************** ஊருக்கு போனபோது ஒருபோத்தல் பியர் அடிக்க பாருக்கு.. (Bar) போன்னான் பாருங்கோ.. அங்கவந்த சின்னம் சிறுசு பெருசுகள் எல்லாம் தாள் தாளா எறிஞ்சு-பின் தண்ணியில குளிச்சு தவளுதுகள். ஒரு கூட்டம் உட்காந்து காசுவந்த கதை சொல்லி கதைச்சு பெருமைபேசி கஞ்சா, புகையில என புகையாக் கக்குதுகள். பிச்சைக்காஸ் அனுப்பினான் இவனுக்கு பின்னால போனவன் கொட்டிக்குவிக்கிறானாம் என தான் கொடுத்தனுப்பினவன் போல வெட்டி முறிக்கிறான் ஒருத்தன் விட்டுத்தொலை மச்சான் நீ மற்றவனுக்கு போன் போடு வந்தா மலை …

  13. மாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட…

      • Haha
      • Thanks
      • Like
    • 13 replies
    • 1.5k views
  14. இந்த நடுநிசியில் ஒலமிடும் ஆந்தைகளின் சாபங்கள் செவி மடுத்தேன். உங்கள் கவியையுமா கோத்தா சிறையெடுத்தான்? நானும் சபிக்கின்றேன் எங்கள் கவியை சிறையிட்ட பாதகன்மேல் இடியாய் நரகம் இறங்க அறம்பாடுகிறேன். ஆசை மச்சான் புதுவை, . ”விமர்சிக்கிறாய் சகிக்கிறோம் எனெனில் நீ தேசபக்தன்” என்ற உன் தோழமையை எண்ணிக் கரைகின்றேன் தோழமையே உனது மொழி தோழமையே உனது வழி தோழமையே உன் கவிதை தோழமையே தத்துவமாய் எனக்கு தோழ்கொடுத்த பெருவாழ்வே வேடமில்ல நட்ப்பின் வேந்தனே ஊதுகிறேன் சங்கு உனைத் தின்ற கோழைக்கு.

    • 3 replies
    • 1.5k views
  15. பொங்கல் 2022 எங்கிருந்தோ தோன்றி எம்மை உயிர்ப்பித்த செங்கதிரே உன்றன் திருவருளைப் போற்றுகிறேன் நீயின்றி நானில்லை நீயே எனை இயக்கும் நேயப் பெருஞ்சக்தி நித்தியமாம் பொற்சோதி தாயாய் இஞ்ஞாலத்தைத் தன்மகவாய் ஏற்று ஓளிப் பாயத்தை எங்கும் பரவவிட்ட பேரருளால் மாய வெளியினிலோர் மண்துகளாம் பூமிதனில் காயமெனும் எமது காற்றடைத்த பையினிலே உள்ளம், உணர்வு, உயிர்ப்பெல்லாம் பெற்றுவிட்டோம் வெள்ளமெனப் பொலியும் நின்னருளைக் கண்டுருகி அன்பால் மகிழ்ந்து ஆரமுதப் பொங்கலிட்டு நின்பால் எம் நன்றியினால் நேர்த்திக் கடன்செலுத்தி உடலால் வயலுழுது உண்ணவும் பாலளிக்கும் விடையையும் ஆவினையும் மேன்மையுறப் போற்றும் நற்றமிழர் பண்பாட்டை நம்முன்னோர…

    • 5 replies
    • 1.5k views
  16. "வரமாக வந்தவளே" "வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!" "தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க சரமாலை கொண்டையில் அழகாக ஆட ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே மரணம் பிரித்தாளும் மறவேன் உன்னை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  17. மனிதநேயம் பேசும் மகாத்மாக்கள் இங்கு அதிகம்! மதவெறியை பிரசவிக்கும் ஜாதிக்கட்சிகள் இங்கு ஏராளம்! மக்களாட்சியைப் பேசும் மன்னராட்சிக் கட்சிகள் இங்கு ஏராளம்! க‌வர்ச்சி காட்டி பணமீட்டும் கலர்ஃபுல் சேனல்கள் இங்கு ஏராளம்! பெண்களைத் துர‌த்தும் நடுநிசி நாய்கள் இங்கு ஏராளம்! அன்னையின் கருவறையில் நசுக்கப்படும் பெண் சிசுக்கள் இங்கு ஏராளம்! பெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும் கார்ப்பரேட் காலர்கள் இங்கு அதிகம்! ஏழையின் செந்நீரை உறிஞ்சும் இலட்சாதிபதிகள் இங்கு ஏராளம்! இவைய‌னைத்தும் அழிய‌ வேண்டிய‌ அவலங்களே !!!

  18. அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..? முடியாது மகனே.. ஏன் முடியாது..? வந்தால் கொன்று விடுவார்கள் ஏன் கொன்று விடுவார்கள்...? நான் என் மக்களுக்காகப் பேசினேன் ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..? பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக, ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..? சமமாக வாழ நினைத்தபோது ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..? நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..? அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக, அவர்கள் பிழைத்தார்களா..? பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள் என்னவோ பிழைத்தார்கள் தானே..? இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே.. சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்…

  19. குட்டிக் கவிதைகள்..! உணவு..! உணவை அறிந்தே உண்ணுவோம் உலகின் உயர்வையே எண்ணுவோம். விவசாயி..! கரையழுது நுரை தள்ளுவது-ஒருபோதும் நடுக் கடலுக்கு தெரிவதில்லை. அன்பு..! அறுக் கமுடியாத இரும்புச் சங்கிலி அறுந்துடைந்தால் ஒட்டமுடியாத கண்ணாடித் துவள்கள். துர்நாற்றம்..! பொறாமைச் செடியில் பூக்கும் இதயம் அன்பை அழிக்கும் மணமே வீசும். அன்புடன் -பசுவூர்க்கோபி-

  20. கோடுகள் ஒன்பதின் வைகாசி வைகாசியில் அவனொருவன் பெற்றது ஒளி ஒளி அணைந்ததும் அதே வைகாசி - எங்கள் வீடுகளில் இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம் நெஞ்சில் தீயுடன் மேல் நொந்து போயிற்றே என்றால் -மீண்டும் எண்பத்து மூன்றாம் மாப் புளிப்பது தோசையின் நலம் நாடி அணைத்த உலை - மீண்டும் கொதிக்க விறகை தள்ளும் நண்பா – நன்றி இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம் நெஞ்சில் தீயுடன் இரு கோடுகள் சமன் செய் பாதைகள் பல கோடொன்றை சற்றே நீட்டினால் எல்லோரும் நலமே மறு கோட்டின் நுனியை சற்றே தட்டினாலும் முடிவு ஒன்றே இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம்…

    • 1 reply
    • 1.4k views
  21. என்னவளே! *********** காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் பலர் நானோ உன் கண்ணுக்குள் தானே முதலில் விழுந்தேன். இதயத்தை பூட்டிவைத்து திரிந்தாய்-ஏனோ என்னிடத்தில் உன் சாவியை தந்து மகிழ்ந்தாய். என்னை காணவில்லை என்று நானே தேடினேன் பின்புதான் அறிந்தேன் உன்னுக்குள் நான் இருந்ததை. திருட்டு எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும்-கள்ளி எப்படி நீ என்னை திருடி வைத்தாய். காதல் தோல்வியில் தாடி வளத்தார்கள் அன்று தாடி வளர்க்கச்சொல்லியே காதலித்தாயே இன்று. உன் கன்னக் குழிக்குள் விழுந்த பின் என்னால் எழ முடியவில்லையே-நீ என்ன மாயம் ச…

  22. இளவேனிலும் உழவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1970ல் பிரசுரமான எனது ஆரம்பகால கவிதை ஒன்று காட்டை வகிடுபிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப்பாதை. வீடுதிரும்ப விழைகின்ற காளைகளை ஏழை ஒருவன் தோளில் கலப்பை சுமந்து தொடர்கிறான். . தொட்டதெல்லாம் பொன்னாக தேவதையின் வரம்பெற்ற மாலைவெய்யில் மஞ்சட்பொன் சரிகையிட்ட நிலபாவாடை நீளவிரிக்கிறது: இதயத்தைக் கொள்ளையிட வண்ணத்துப் பூச்சிகள் வழிமறிக்கும் காட்டுமல்லிகைகள் காற்றையே தூதனப்பி கண்சிமிட்டும். அழகில் கால்கள் தரிக்கும். முன்நடக்கும் எருதுகளோ, தரிக்கா. ஏழையவன் ஏகும்வழி நெடுந்தூரம். . . .

    • 2 replies
    • 1.4k views
  23. படிக்க தவறிய புத்தகம் தந்தை படிக்க விரும்பும் புத்தகம் அன்னை படித்தும் பிடித்து போகும் புத்தகம் மழலை தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை மரணத்தை விட கொடியது போலி வார்த்தைகளுக்கு அடிமையாக இருந்தோம் என்பது . பணம் தான் உலகம் என்று நினைக்கும் சிலரிடம் சொல்லுங்கள்.பணம் பூமியை தவிர வேறெங்கு ம் செல்லுபடியாகாது என்று .... அன்று அடிப்படை வசதி கூட இல்லத்திருந்தோம். ஆனால் மகிழ்ச்சிஇருந்தது .இன்று எல்லாம் இருக்கிறது ஆனால் ... எதோ ஒரு மனக் கவலையுடன் தான் நகர்கிறது ஒவ்வொரு நாளும். உதவி செய்வதில் தவறில்லை,உனக்கென்று கொஞ்சம் வைத்துக் கொள் நாளை உனக்கொரு தேவையென்றால் உதவி பெற்ற்வர் எட்டிக் கூடப் பார்க்க மாடடார். இன்று இருக…

  24. கனவாய் வந்தாய் காவியமே எங்கு இருந்தாய் எங்கு இருந்தாய் எந்தன் கவியே எங்கு இருந்தாய் கண்ணில் உனை நான் கட்டிவைத்தேன் என் காதல் கவியே எங்கு இருந்தாய் என்னில் உனக்காய் உயிர் வடித்தேன் என் இதயம் முழுக்க உனை வரைந்தேன் உன்னில் பின்னால் நிழல் போலே உன்னோடு இருந்தேன் உன் உயிர் போலே காலை வந்த மழை துளிபோல் கவித்துளி போலே உனை வரைந்தேன் மாலை வந்த மதி போலே காலைக் கனவில் உனை கண்டேன் அழகே தமிழே என் கவியே என் அருகில் பூவாய் பூத்தவளே புலரும் பொழுதில் எனை எழுப்பி கனவாய் வந்தாய் காவியமே .

    • 2 replies
    • 1.4k views
  25. ஈழம் - அகமும் புறமும் புதிய தொகுப்புக்கான10 கவிதைகள் 1. நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலு…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.