Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கை நடைபெற்ற காலம் வன்னியின் மேற்கு கிழக்கை கிழமைக்கு கிழமை மாறி மாறி திரிந்தவண்ணம் இருந்தோம்... எமது அணி விஷேட வேவு பிரிவு என்பதால் நாளாந்தம் எதிரி நிலை கண்காணித்து அறிக்கை கொடுக்க வேண்டிய பணியாக இருந்தது.. எமக்கு என்று ஒரு காப்பரண் எல்லை கிடையாது. வன்னியின் கிழக்கு பகுதியில் நின்ற எமக்கு அழைப்பு உடனும் கிளம்பி வரும்படி.. இரவுப் பயணம்.. வந்தவேகத்தில் நித்திரை தூக்கம் நல்லாய் உறங்கீட்டம்.. ஆனாலும் காதுகளில் பெண்களின் குரல் கூடுதால கேட்டபடி இருந்தது.. அதிகாலை விடியலை தேட கண்விழித்து பார்த்து பொறுப்பாளருக்கு தொடர்பை எடுத்தோம்.. எங்க வரணும்..? அவர் நீங்க நில்லுங்க நான் வந்து கூடி வாறன் என் பதில் சொல்லி தொடர்பை துண்டித்தார் . சரி எழும்பி முகம் கழுவ போவ…

  2. தேசத்திற்கு விலைதந்த மகளுக்கு தேவையானது 5 பவுண்கள் மட்டுமே. தேசத்தின் விடுதலைக்குக் கொடையளித்தவர்கள் பலருக்கு முகமில்லை முகவரியில்லை பெயரில்லை அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை. அநாமதேயமாய் அவர்களது வரலாற்றை அவர்கள் பெற்றுத் தந்து வெற்றியும் அவர்களைப் பெற்ற தேசமும் மட்டுமே அறியும் கதைகள். ஈகத்தின் உச்சமாக இந்த மனிதர்களின் கொடை எங்கள் தேசத்தில் எழுதப்பட்ட பலரது வரலாற்றோடு வரலாறாக....! இப்படித்தான் ஒரு வெற்றியைப் பெற்றுத்தர அந்தக் கரும்புலி தான் நேசித்து ஊரை உறவுகளை விட்டு விடுதலையமைப்பில் இணைந்து கொண்டது. அந்தப் போராளி ஒருநாள் கரும்புலியாகி தனது ஈகத்தின் உச்சத்தையடையும் நாளொன்றை காலம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. தேவைகளும் கடமைகளும் தமிழர் வாழ்நிலங்களுக்கும் அப…

    • 0 replies
    • 882 views
  3. கனடாக் கனகத்துக்கு கந்தர்மடக் கனகம் எழுதின கடிதம். பட்சமுள்ள கனகத்திற்கு! பாசத்துடன் கனகமக்கா எழுதிக் கொள்வது. நான் நலம் அதுபோல் நீயும் குடும்பமும் நல்லாயிருக்க நல்லூர்க் கந்தன் துணையிருப்பார். உன்ரை கடிதம் கிடைச்சது. என்னடா இவள் மறந்து போனாளோ எண்டு நினைச்சுக் கொண்டிருந்தனான். அட அப்படியே சீமைக்குப் போனதும் மறக்கிற மாதிரியே நாங்கள் பழகினனாங்கள். என்ரை கலியாண வீட்டுக்கு ஒரு கிழமைக்கு முதலே நீ சுன்னாகத்திலை இருந்து வந்து நிண்டு ஒவ்வொரு பலகாரமாச் சுட்டு வன்னமா அடிக்கி வைச்சது இண்டைக்கு மாதிரி கண்ணுக்குள்ளை நிக்குது. என்ன செய்யீறது ஒண்டுக்குள்ளை ஒண்டாப் பழகின எங்களைக் காலம் இப்படித் திக்குக்கு ஒராளா பிரிச்சுப் போட்டிட்டது, என்ன செய்யிறது எல்லாம் அவன் விட்ட வழி எண்ட…

    • 13 replies
    • 1.4k views
  4. பர்வதம் ஆச்சி இரண்டுநாளா போன சிவலையை காணம் எங்க போனானோ..? ஒன்னும் தெரியாது யாருட்ட கேட்க..? தனிக்கட்டை எண்டு தெரியும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வராமல் எங்க மேயுறான்...? வரட்டும் குறி இழுக்கிறன்.. என பேசியபடி களனித்தண்ணியை பழைய வாளியில் ஊறினார். சிவலை எப்படியாவது தன்னை பிணையெடுக்க கிழவி வரும் என்ற நம்பிக்கையில் கொடுத்ததை சாப்பிட்டபடி நின்றிருந்தான்... ஆனாலும் மனதில் நான் பரமர் வீட்டுப்பக்கம் போனது பிழைதான் என எண்ணி வேதனை பட்டபடி எவ்வளவு பணம் கட்டவேண்டி வருமோ தெரியல்லை ஆச்சி பாவம் என் யோசினையில் நின்று இருந்தான்... அடே முனியாண்டி எங்கால போற..? வடக்கால போனால் இவன் சிவலை நிண்டா அனுப்பி விடு நேற்று பூரா தேடி களைச்சு போனன்.. இன்னும் வீடு வாசல் வராமல் என்ன உத்தியோகம் எண…

    • 15 replies
    • 1.5k views
  5. புலம்பெயர்ந்த சொந்தங்கள் எல்லாருக்கும் வணக்கம்… இப்ப இந்தக் கண்டறியாத கொம்பியுட்டர் வந்த பீறகு எல்லாரும் பேஸ்புக், ருவிற்றர், ஈமெயில் எண்டு அலையிறதிலை ஆற அமர இருந்து ஒரு கடிதத்தை எழுதி எவ்வளவு காலமாப் போச்சுது. பிள்ளையளின்ரை கொப்பீயிலை நடுத்தாளைக் கிழிச்சு ஒரு மூலையிலை குந்தியிருந்து யோசிச்சு யோசிச்சு எழுதி என்வலப்பக்குள்ளை வைச்சு என்னதான் கம் பூசியிருந்தாலும் ஆவெண்டு அண்டா வாயைத் திறந்து நாக்காலை ஈரமாக்கி ஒட்டி பிறகு முத்திரையிலையும் இன்னொருக்கா நாக்கை நீட்டித் துப்பலைப் பூசி ஒட்டி தவால் பெட்டிக்குள்ளை போட்டிட்டு வாற சந்தோசமிருக்கே.! அது ஒரு தனிச் சந்தோசம் தான். அதே மாதிரித் தான் தவால்காரன் வந்து பெல்லடிச்ச உடனை ஓடிப் போய் காயிதத்தை வாங்கிக் கொண்டு வந்து ஒரு …

  6. Started by லியோ,

    ஊரெழு யாழ் நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செழிப்புமிக்க கிராமம் .இக்கிராமத்தை பலாலி வீதி ஊடறுத்து கிழக்கு,மேற்கு என பிரிக்கிறது.இக்கிராமத்தில் 27/11/1963 அன்று திரு,திருமதி இராசையா தம்பதியினருக்கு இளைய மகனாக பாத்தீபன் பிறந்தான். அவனது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர்.அவனது தாயார் அவன் குழந்தையாய் இருக்கும் போதே இறந்து போனார்.இவனது தந்தை தாயாகவும் தந்தையாகவும் இவனையும் இவனது மூன்று மூத்த சகோதரர்களையும் வளர்த்தார். இவன் சிறுவயதிலிருந்தே இரக்ககுணம் நிறைந்தவனாகவும் எல்லோருடனும் பாசமாய் பழகுபவனுமாய் இருந்தான். கல்வியில் சிறந்து விளங்கியதால் யாழ் இந்துக்கல்லூரியில் கற்கும் வரம் பெற்றான்.யாழ் இந்துக்கல்லூரி பல கல்விமான்களையும் விடுதலைப்போராளிகளையும் தந்த …

  7. வன்னியின் சந்தோஷங்களை கொண்டுவருவதில் ஒருநாள் திருவிழா காணும் கோயில்கள் முக்கியம் ஆனவை.... வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் செய்து எல்லா ஊர்களிலும் இருந்து வண்டிகட்டியும் உழவு இயந்திரங்களிலும் புறப்பட்டு வந்து சேர்த்து கூட்டமா ஒரு இடத்தில் பாய் விரித்து உறவுகள் ஒன்றுகூடி விரதங்கள் பிடித்து தீ மிதித்து படையல் போட்டு அந்த ஒரு இரவில் போதுமடா சாமி என சாமி சொல்லும் அளவிற்கு மக்களின் வேண்டுதலும் படையலும் இருக்கும்.... அப்படியான ஒரு கோயில்தான் மாங்குளம் மல்லாவி வீதியின் இடையில் உள்ள வன்னிவிளாங்குளம் அம்மன் கோயில்...அக்கோயிலின் சிறிது தூரத்தில்தான் மாவீரர் துயிலும் இல்லமும் அமைந்து உள்ளது... பின்னேரம் வர ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் இரவு பத்து மணிவரை தொடரும்... கூடுதலா சைட்…

  8. ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டான் உதவியவர்களுக்கு நன்றிகள். அன்பின் சாந்தி, எனது தம்பி ஜெகதீஸ்வரன் 14.09.2013 அன்று இறந்துவிட்டார். அவரது உயிர் காக்க நேசக்கரம் ஊடாக நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள். அவரது கடைசி ஆசைப்படி திருக்கேதீஸ்வரத்தில் இறுதி நிகழ்வுகள் செய்தோம். நேசக்கரம் ஊடாக எனது தம்பிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள். தம்பியின் மரணச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க முயன்றேன் உங்கள் தொலைபேசி வேலை செய்யவில்லை. 15.09.2013 அன்று வந்தடைந்த செய்தியிது. இந்த செய்திக்குரிய முன்னாள் போராளி இறந்துவிட்டான். இவனைப் பற்றியொருமுறை மீள் நினைவு கொள்வோம். ஒரு முன்னாள் போராளி மகசீன் சிறைச்சாலையில் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலமையில் இருப்பதாக 2011 செப்ரெம்பர்…

    • 15 replies
    • 2k views
  9. நாட்டில் இருந்து வெளிக்கிட்டு ஐரோப்பா வந்து ஒரு ஆறுமாதம் வெளிஉலகம் தெரியாது இருந்தன். அங்க போகாத இங்க போகாத அவனோட சேராத இவனோட சேராத அவங்கள் குறுப் பெடியள் இவனுகள் இவங்களுக்கு எதிர் பெடியள் எண்டு என்னை வெருட்டி வீட்டில இருத்தி போடுவாங்க. வீசா போடு அப்புறம் போய் வரலாம் எண்டு சொல்லி டிகெட் காசு போயிடும் எண்டு என்னை கூட்டி போறது இல்லை. சரி எண்டு வேலைக்கு போறவங்களுக்கு சமைச்சு கொடுப்பன். நல்லா தூள் அள்ளி போட்டு கறி வைப்பன். யாருக்கு தெரியும் அளவு.. என்ன சிவக்கவில்லை எண்டு போட்டு போட்டு கடைசியா கூடி போடும் பாவம் பேசி பேசி சாப்பிட்டு போவாங்கள் பெடியள்.. படமும் நான் பெரிதா பார்ப்பது இல்லை. அதோட இருந்த வீட்டில் தமிழ் சனல் வராது. வீட்டில் இருந்த ஒருத்தன் மட்டும் ஒரு சிறிய மடிக்…

  10. சியாமளாவுக்கு இப்பொழுதெல்லாம் இதயம் அடிக்கடி வேகாமாக்த் துடிக்கிறது. எத்தனைதான் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவே இல்லை. கண்களை கண்ணீர் மறைக்க, தன்னிலையை எண்ணித் தானே கழிவிரக்கம் கொண்டாள். என்னால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லையே. யாரிடம் போய் இதைச் சொல்வது. யார் என்றாலும் எனக்குக் காறித் துப்புவார்களே. ஏன் நான் இப்படி ஆனேன் என எண்ணியே மனது குமைந்ததில் தலைவலி இன்னும் அதிகமாகியதே அன்றிக் குறையவில்லை. எல்லோரும் போல் என் வாழ்வும் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதனால் இப்படி ஆனதோ என எண்ணியவளின் மனம், தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் எண்ணிப் பார்த்தது. கணவன் தனக்கு என்ன குறை வைத்தார்?. என் விருப்பம் எல்லாம் நிறைவேறியதே அன்றி ஒருநாளாகிலும் நிறைவேற…

  11. அன்புள்ள சின்னண்ணா....! (11வருடங்கள் முதல் எழுதப்பட்டு ஒரு பகுதி மட்டும் எங்கோ பத்திரிகையொன்றுக்கு அனுப்பப்பட்டது. இன்று தியாகி திலீபனின் பழைய பதிவுகள் தேடப்போனதில் மீளக்கிடைத்துள்ளது. தியாகி திலீபனண்ணாவின் நினைவு சுமக்கும் நாட்களில் 26வருடங்கள் கழித்து நினைவில் வரும் திண்டு வளந்தான் சின்னண்ணாவின் நினைவோடும் மீளும் நினைவு இது) அதுதான் நான் அவனுக்கு வைத்தபெயர் அவனும் தனது பெயரைச் சொல்லாமல் அடம்பிடித்துக் கொண்டு திரிந்தான். மற்றவர்களும் தனது பெயரைச் சொல்லக் கூடாதென்று எல்லோரையும் தனது சொற்களால் கட்டிவைத்திருந்தான். சமாதிகோவிலடிக் காவலரணில் அறிமுகமான அந்தச் சின்னண்ணா ! எங்கேயிருக்கிறாய் ? 1987இல் இராணுவம் கட்டுவனுக்கு வந்ததோடு வீடுகளைவிட்டு வெளியேறிய நாங்கள் வளவும…

  12. சுமாரா அவளுக்கு ஒரு 17 வயது இருக்கும். தமிழ் பண்பாட்டுக்கு உரிய நான்கு குணமும் இருக்கு முதல் நாள் பார்வையில் என்னை ஒரு நிமிடம் திரும்பி பார்க்கவைத்தாள். யார் இவள்? ஒருநாளும் இவ்வழியில் நான் கண்டதா இல்லை என யோசிச்சு நிக்கையில் மறுபடியும் மூலையில் திரும்பும் போது கடைக்கண்ணால் ஓரப்பார்வை வீசிபோனால். பல முறை இடம் பெயர்ந்து பல இடங்களில் இருத்து எழும்பி வந்த எனக்கு பல பெண்களை கடந்து போன எனக்கு இவள் மட்டும் எப்படி என் உள் மன இடைவெளியில் குடி புகுந்தால்? மறுபடியும் இவ்விடத்தால் வருவாளா இல்லையா அல்லது யாரவது ஒரு சிநேகிதியை தேடி வந்தவளா இருக்குமா என பல கேள்வி எழ பல்லை தீட்டியபடி கிணற்றடியில் நின்று யோசிச்சு கொண்டு வாளியை கிணற்றுக்கு விட்டனான் கயிற்றைபிடிக்க மறந்து போனேன் . தண்ண…

  13. எழுகின்ற தேசத்தின் விழுதாக....விலையாக....! அம்மா நான்...! முடிக்க முதலே அம்மா அழத்தொடங்கிவிட்டார். என்ரையம்மா இண்டைக்கு எடுக்க வேணுமெண்டு நேந்து கொண்டிருந்தனான். ஒவ்வொரு நாளும் நினைக்கிறனான் என்ர செல்லத்தை....! அம்மா அப்படித்தான் ஒவ்வொரு முறையும் குரல் கேட்டதுமே அழத் தொடங்கிவிடுவா...! தன் சோகங்களை தனது கனவுகளை ஒவ்வொன்றாய் ஒவ்வொரு முறை தொலைபேசும் போதும் கொட்டிவிட்டு கண்ணீரோடே விடைபெற்றுக் கொள்வா. அம்மாவின் பிள்ளைகளுக்காக நோர்வேயிலிருந்து ஒரு குடும்பம் மாதம் 6ஆயிரம் ரூபா கல்விக்காக நேசக்கரம் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உதவியில் அம்மாவின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தின் காலாண்டு அறிக்கை தொகுப்பதற்காகவே அம்மாவை இன்று அழைத்திருந்தேன். வளமைபோல அம்மா சொ…

    • 10 replies
    • 1.6k views
  14. Started by sathiri,

    உதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி யோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு என்று தனக்கு தானே சொல்லி சமாதானமாகிக் கொண்டாலும் முதன் முதலாக குமுதினியை பார்க்கப்போகிறோம் அவள் தன்னுடைய வயதை 56 எண…

  15. விநாசியர் வீட்டில இருந்ததை விட தோட்டத்தில் நின்றதுதான் அதிகம் தனது வயதான காலத்தில் ஒய்வை சற்றும் விரும்பாத மனிதர் எப்பபாரு வயல் ..தோட்டக்காணி என்று மாறி மாறி நடந்து திரிவது பிள்ளைகளின் படிப்பு வாழ்க்கை என குடும்ப சுமையை தூக்கி நிக்கிற ஒரு மனிதனா அவரை ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கலகலப்பான பேச்சு சினம் கொள்ளாத முகம் இடம் பெயர்ந்து அவர் கணியில் ஒரு குடில் போட்டு இருந்த எமக்கு அம்மாபச்சை அரிசிக்கு அவரின் கத்தரிக்கா பலமுறை ஒன்றி இருந்தது..இருக்கு. ஒருபக்கம் வெங்காயம் ..ஒருபக்கம் முளகாய் ..தண்ணி ஓடும் பாத்திக்கு இரு கரையும் மேல் கீரை மிகுதி தண்ணி வழிந்து போகும் இடத்தில் பூசணி என மிக நேர்த்தியா திட்டம் இட்டு பயிர் செய்வது அவரின் சிறப்பு.இறைக்கும் தண்ணி போகும் இடம் எல்லாம் ஒ…

  16. முனேறிபாய்தல் நடவடிக்கை மூலம் வட்டுக்கோட்டை , சங்கானை கரையோரமான யாழ்ப்பாணத்து ஆறு வழுக்கியின் கரை வரைக்கும் இராணுவம் முன்னேறி இருந்த போது புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் முறை அடிக்கும் சமருக்கு தலைவர் பிரதான கட்டளை இட்டு கொண்டு இருந்தார்... பால்ராஜ் அண்ணை, சொர்ணம் அண்ணை, பாணு அண்ணை அனைவரும் முன்களங்களின் நிண்றார்கள்.... நானும் இன்னும் 10 பேர் வரை சங்கானை சண்டிலிப்பாய் எல்லையில் இருந்த வயல் கரையோரம் இருந்த ஒரு வீதியும்( மானிப்பாய் வீதியாக இருக்க வேண்டும்) சின்ன மதகு கொண்ட எல்லை பிரதேசத்தை பிடிச்சு அதில் ஒரு பாதுகாப்பு அமைக்க சொல்லி வந்த சொர்ணம் அண்ணையின் கட்டளையை நிறைவேற்ற போன போது த்னது முதலாவது அரனை ஆயுதங்களோடு கைவிட்டு போட்டு இரண்டாவது அரணாக இருந்த ஒ…

  17. யாரும் தன்ர கதையை காது கொடுத்து கேக்கினம் இல்லை என்ற இயலாமையை மெல்லிய முனுமுனுப்பால் ஒருத்தருக்கும் கேட்டுவிடக்கூடது என்ற கவனத்துடன் கொட்டிக் கொண்டிருந்தாள் கண்மணி. என்னதான், தான் புறுபுறுத்தாலும், யாரும் தன்னை கண்டுகொள்ளப் போவதில்லை என்ற உண்மை கண்மணிக்கும் புரிந்திருந்தது. இருந்தும், அவளால் புறுபுறுப்பதை விட்டு விட முடியவில்லை. புறுபுறுத்துக்கொண்டே வீட்டின் உற்புறத்தை எட்டிப் பார்த்தாள். ஒரு பேத்தி ரிவியிலும், மற்றவள் கணணியிலும் தங்கள் தலையை புதைத்துக்கொண்டிருத்தார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை உதுகளை வேண்டிகொடுத்து பிள்ளையளைக் கெடுத்து வச்சிருக்கிற தாயையல்லோ சொல்லணும், உதுகளை அடிச்சு கலைக்கனும் ஓடிப்போய் விளையாடுங்கோ எண்டு, கண்டறியாத கரண்டு ஒண்ட கொடுத்து …

  18. "மனிதம் தொலைத்த மனங்கள்"……. அந்தக்கிராமத்தில் அதிகாலைவேளையிலும் சூரியன் உக்கிரமூர்த்தியாக இருந்தான் .அருகே இருந்த கோவில் மணி ஓசை காலை ஆறு மணி என்பதை ஆறுமுகம் வாத்தியருக்கு உணர்த்தியது . அருகே படுத்திருந்த மனோரஞ்சிததை சிறிதுநேரம் உற்றுப்பார்த்தபொழுது அவரை அறியாது அவர்கண்ணில் எட்டிப்பார்த்த கண்ணீரை , உள்ளே செல் என்று அவரால் சொல்ல முடியாது இருந்தது . ஏனெனில் சிறிது நேரத்திற்கு முதலே தனது ஏக்கப்பார்வையுடன் ஆறுமுக வாத்தியாரின் மடியில் அவளது மூச்சு அடங்கியிருந்தது. அவளது இழப்பால் ஒருகணம் தடுமாறிப் பெருங்குரலெடுத்துக் குளறினார் ஆறுமுகவாத்தியார் . உள்ளே படுத்திருந்த சுகுணா கலவரத்துடன் ஓடிவந்தாள் . ஆறுமுகம் வாத்தியார் தன்னுடன் படிப்பித்த மனோரஞ்சித்தை பலத்த எதிர்ப்பகளு…

  19. 70வதுக்கு முந்திய இலங்கை தமிழர்களின் ஆதிக்கம் நிறைத்து இருத்தது சிங்களவனை எவரும் மதிப்பது இல்லையாம் கேட்டால் மோட்டு சிங்களவன் எண்டு சொல்லுவார்கள் எதுக்கும் அவன் தமிழ் வர்த்தகர்கள் முதலாளிகளிடம் கைகட்டி நின்று ஊதியம் வாங்குவது இவர்கள் சொல்வதை செய்வது ஆக தென்னிலங்கையில் நாங்கள் தான் ராஜாக்கள் என்கிற நினைப்பில் எம்மவர் இருத்தனர் என்பது உண்மை ஒரு உதாரணம் கொழும்பு செக்கட்டி தெருவில ஒருமுறை கோயில் திருவிழா நடத்து கொண்டு இருந்தது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் மக்கள் கூட்டம் மிக அதிகம் அரோகரா ஒலிகள வானை பிளக்க நடந்த திருவிழாவில் தேர் அசைந்து வர தேரின் சில்லுக்கு கட்டை வைத்து திருப்பிய படி ஒருவர் வர அதை கவனித்த படி இருத்த சிங்கள போலிஸ்காரன் கட்டை வைத்தவரை பிடித்து …

  20. எங்கள் ஊரில் ஒருவர் டுவிஸ்ட் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைப்பதற்கு முடிவெடுத்து அதற்கான ஒழுங்குகள் கே கே எஸ் வீதியில் உள்ள சந்தி ஒன்றில் ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அப்போது நான் காபொத உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன். எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் அது பெரிய வியப்பூட்டும் விடயமாக இருந்ததால், மாலையில் ஒரே சனக்கூட்டமாக இருக்கும். தொடர்ந்து பத்து நாட்கள் விடாமல் ஆடுவதுதான் சாதனை. ஏற்கனவே ஒருவர் ஆடி சாதனை படைத்திருந்தார். அவரை முறியடிப்பதற்காய் இது. முதல் இரண்டுநாட்கள் என்னால் போக முடியவில்லை. மூன்றாம் நாள் நானும் தம்பி தங்கையும் அம்மாவுடன் போனோம். அங்கே மேடையில் பலர் நின்று ஆடிக் கொண்டிருந்தனர். எனது டியூசன் நண்பிகளும் பலர் வந்து நின்று பார்த்த…

    • 103 replies
    • 14.6k views
  21. நினைவழியாத்தடங்கள் - 09 காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பால்ராஜ் அண்ணை அப்பொழுது தான் வெளியில் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். உடனே லக்ஸ்மன் அண்ணையைத் தனது அறைக்கு வருமாறு அழைத்தார். சிறிது நேரத்தின் பின் அவசர அவசரமாக வெளியில் வந்தவர், உடனடியாக அங்கு இருந்தவர்களை புறப்படுமாறு கூறினார். இரண்டு வாகனங்களில் புறப்பட்டோம். லக்ஸ்மன் அண்ணையின் வாகனத்தில் ஏறிய பால்ராஜ் அண்ணை மற்றவர்களைப் ”பின்னால் வாங்கோ” எனக் கூறிவிட்டுப் புறப்பட்டார். வாகனம் பண்டத்தரிப்புப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. எங்களுக்கு அவசரத்தின் காரணம் புரியவில்லை. இராண…

  22. 2010 ஜனவரியோடு அவனும் அஞ்சலியும் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகிவிடும். இந்த நிலையில்தான், அஞ்சலி அவனுடன் பேசும்போதெல்லாம்.... அடிக்கடி அவனிடம் ஒரு விடயத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள். "எப்பயடா உன்னை பாக்கிறது?" என அவள் அடிக்கடி கேட்க ஆரம்பித்ததிலிருந்தே, அஞ்சலி அவனை ரொம்பவே மிஸ் பண்ணுறாள் என்பதனை இவனால் உணரமுடிந்தது. ஆனால் இவனது அப்போதைய சூழ்நிலை அவளது விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றக்கூடியதாக அமைந்திருக்கவில்லை 'அஞ்சலியை பார்க்கவேணும்... அவளோடையே இருக்கவேணும்....ரொம்ப சந்தோசமாக.... மனம் நிறைந்த காதலோடு வாழவேணும்..... !' இதைத்தவிர அவனுக்கு அதிகபட்ச ஆசைகள் என்று எதுவும் இருந்ததில்லை. அவனது எண்ணமும் சிந்தனையும் அதுமட்டுந்தான். அவனது மனம் பூராவும் அஞ்சலியும் அவ…

  23. Started by கோமகன்,

    ஊடறுப்பு (ஒருபேப்பருக்காக கோமகன் ) அதிகாலை நேரம் ஐந்து மணியை நேரக் கம்பிகள் அடித்துப் பிடித்துத் தொடமுயன்ற வேளையில் , இரவுக்கும் வானத்துக்கும் நடந்த கட்டிபிடி விளையாட்டில் மேகங்கள் வெட்கத்தால் சிலிர்த்து சிவப்படையத் தொடங்கிக் கொண்டு இருந்தன . இந்த ஆல்லோல கல்லோலதால் வெறி கொண்ட கூழைக் கடாக்கள் வானத்தில் சித்திரம் வரைந்து சீறிக்கொண்டு பறந்தன . தூரத்தே ஒலித்த பிள்ளையார் கோயில் மணி ஐயரின் வருகையை அந்த ஊர் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தது . புல்லுப் பாயில் படுத்திருந்த தம்பையா தனது உள்ளங்கைகளைத் தனது முகத்துக்கு நேராகப் பிடித்து அவை இரண்டையும் சரசரவென்று தேய்த்தவாறே அவற்றில் கண்களைத் திறந்தார் .இததற்கு அவரிடம் ஒரு காரணமும் ஒன்று உண்டு யாரோ ஒரு புண்ணிய…

  24. எங்கள் ஊரில் மிக அதிக மக்கள் தெரிந்து இருக்க கூடிய ஆள் நம்ம பார்வதி அக்கா எவர் என்ன உதவி கேட்டலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பா சிலர் அதை அவர் கஸ்ரம் என்பதால் செய்கிறார் என்றும் சொல்லுவினம் ஆனால் அவா அப்படி இல்லை அருமையான ஆள் வீடுக்கு தன் மகனுடன் வரும் நண்பர்களை வாங்கோ தம்பி இருக்கு என்ன சாப்பிடிறியல் என தனது கஸ்ரம் காட்டாது உபசரிப்பு செய்வதில் எங்கள் மனம் நெகிழ்த்து போகும் இப்படி இருத்த பார்வதி அக்காக்கு சமாதான காலம் வர போக்குவரத்து சுகம் ஆக பிரிந்து இருத்த உறவுகள் எல்லாம் தேடிவந்து உதவி செய்ய கொஞ்சம் வசதியா வர தொடங்கினா அவாவின் செயல்பாடுகளும் ஓவரா போக ஒரு மாமன் முறையான ஒருவரின் உதவியுடன் மகன் வெளிநாடு வந்தான் பின்னர் அவன் உழைத்து யுரோ ரூபாவா மாற பார்வதி அக்காவு…

  25. இரவு பெய்த மழை ஓய்வடைந்திருந்தாலும் சற்று தூறிக்கொண்டிருந்தது அந்த அதிகாலை வேளையில், ஆனால் எதிரியினால் வீசப்பட்ட எறிகணைகள் ஆங்காங்கே வெடிக்கும் சத்தத்துடன் மக்களின் அழுகுரல்களும் கேட்டுக் கொண்டேயிருந்தது. இரவு பெய்த மழையினால் பதுங்கு குழியினுள் நிரம்பியிருந்த மழைநீரினை வாளியினால் அள்ளி வெளியேற்றிக் கொண்டிருந்த வேளையில் அப்போது ஒரு எட்டு வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் வந்து எனது முகத்தைப் பார்த்து ஏதோ ஒன்றைக் கேட்பதற்கு முனைகிறான் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவன் கேட்கும் முன்பே நான் அவனைப் பார்த்து என்ன வேணும் தம்பி என்று கேட்டேன். அப்போதும் அவன் முகத்தில் கேட்பதற்கான ஒரு தயக்கம் தெரிந்தது. நான் மழை நீரை இறைத்துக் கொண்டிருந்த வாளியைக் காட்டி "மாமா அந்த வாளியைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.