நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
மாரடைப்பை விரட்டும் விரதம்: ஆய்வு லண்டன்: மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாதம் ஒருமுறை விரதம் இருந்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்பதுதான் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் …
-
- 2 replies
- 1.6k views
-
-
மாரடைப்பைத் தடுக்கும் வெள்ளைப் பூண்டு. வெள்ளைப் பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது. அதன் பெருமையை தமிழர்கள் நீண்டகாலமாகவே அறிந்திருந்தார்கள். அத்துடன் வெள்ளைப் பூண்டு சிறந்த கிருமி நாசினி. இந்தியாவிலுள்ள விவசாய விஞ்ஞானிகள் தாவரத்தை அழிக்கும் பூச்சி வகைகளை வெள்ளைப் பூண்டு கொல்லக் கூடியது என்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள். வெள்ளைப் பூண்டுக்கு எத்தனையோ அரிய குணங்கள் உண்டு. அது வியர்வையைப் பெருக்கும்இ உடல் சக்தியை அதிகப் படுத்தும்இ சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும்இ தாய்ப்பாலை விருத்தி செய்யும்இ சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும். அத்தோடு இன்னபல நோய்களையும் தடுக்கும் சக்தி கொண்டது வெள்ளைப் பூண்டு. தமிழர்கள் அதிகளவாக இருதய நோய்க்கு உள்ளாகிறார்கள். …
-
- 1 reply
- 2.6k views
-
-
Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment “நாளும் ஒரு அப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது. கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய அய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார். அப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய அப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. அப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போன…
-
- 2 replies
- 1.1k views
-
-
முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்று நீண்ட காலம் நடந்து வந்த விவாதத்திற்கு, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவு விடையை தந்துள்ளது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஆனால் முட்டையிலிருந்து தான் ஆரோக்கியம் வந்தது என்று சொல்லவே இந்த கட்டுரையை நாங்கள் இங்கு கொடுத்திருக்கிறோம். இந்த கட்டுரையின் மூலம் முட்டையின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். முட்டையிலுள்ள வெள்ளை கரு, மஞ்சள் கரு உட்பட அனைத்து பகுதிகளுமே ஏதாவது ஒரு விதத்தில் உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆதாரங்களாக உள்ளன. அதிலும் நாட்டு முட்டையின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தினந்தோறும் ஒரு நாட்டு முட்டையை பச்சையாக குடித்து வந்தால் உடல் உரம் பெறும். பொதுவாக உடலின் வளர்ச்சிக…
-
- 4 replies
- 993 views
-
-
தேனீக்களில் காணப்படும் விஷம், ஆய்வக அமைப்பில் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஷத்தில் மெலிட்டின் என்கிற பொருள், சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும் ட்ரிப்பிள் நெகட்டிவ் மற்றும் HER2 Enriched ஆகிய இரு புற்றுநோய் வகைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருக்கிறது என்று விவரிக்கப்படுகிறது. ஆனால், மேலும் இதுகுறித்த பரிசோதனைகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். உலகளவில் பெண்களை தாக்கும் பொதுவான நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது. ஆய்வக அமைப்பில் பல ஆயிரக்கணக்கான ரசாயன கலவைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை இருந்தாலும்…
-
- 8 replies
- 1.1k views
-
-
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என்றால், ”சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்” நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், 'சரிந்து, தொங்கி காணப்படுகிறது' என்று கவலைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. ஒரு செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லுமோ அதைப் போன்றுதான் மார்ப…
-
- 3 replies
- 4.9k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மருத்துவர் பிரதீபா லக்ஷ்மி பதவி,பிபிசிக்காக 11 ஜூன் 2023, 05:34 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் ஆந்திராவின் விஜயநகரத்தில் அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தனது மகளை கதாநாயகியாக்க வேண்டும் என்று விரும்பிய பெண் ஒருவர் மகளுக்கு ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத மகள் இதுதொடர்பாக குழந்தைகள் உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு கூறியதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது சிறுமி, அரசு பாதுகாப்பு காப்பக்கத்தில் உள்ளார். பணம…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
உலகில், பல பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் தங்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கவனிக்கும்படியும், சுயபரிசோதனைகளை சரியான கால இடைவேளையில் செய்யும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இத்தகைய மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான 12 அறிகுறிகளை விளக்குகிறது இந்த காணொளி. BBC
-
- 1 reply
- 688 views
-
-
குழந்தைக்கு பால் கொடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் - Breast Cancer-ல் இருந்து மீண்ட தன்னம்பிக்கை பெண் பாபி ஷகியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட போது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் மார்பக புற்றுநோயுடன் போராடினால் கூட, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியம் தான் என்பதை அவரது கதை நிரூபிக்கிறது. பாபி ஷகியா மார்பகங்கள், எலும்பு மற்றும் தோலில் நான்கு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவருக்கு 27 வயதில் முதல்முறையாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. 2022இல், உலகளவில் 2.3 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக உலக சு…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 01:45 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் 2020இல் மார்பகப் புற்று நோயளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரித்துள்ளதோடு, பெண்களில் 26 சதவீதமானவர்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்தார். மார்பகப் புற்றுநோய் வருவதை தடுக்க முடியாவிட்டாலும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் முழுமையாக சுகப்படுத்த முடியும் என்றும் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் '101 கலந்துரையாடல்' நிகழ்வில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மார்பகப் புற்றுநோய் …
-
- 1 reply
- 708 views
- 1 follower
-
-
பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம். இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. “மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை…
-
- 7 replies
- 1.8k views
-
-
[size=4]பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும்.[/size] [size=4]இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. 'மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்' என்கிறார் இவர்.[/size] [size=4]இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, 'ஹைப்போகிளைசீமிக்' (ரத்தத்…
-
- 0 replies
- 479 views
-
-
மார்பகப் புற்றுநோயை, தடுக்கும்.... அத்திப்பழம்! அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது. அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன. …
-
- 0 replies
- 985 views
-
-
மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய பிராவுக்குள் நவீன சாதனம் - 2013ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது! [saturday, 2012-10-13 12:59:12] அமெரிக்காவில் ஒரு நவீன பிராவை உருவாக்கியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால், அணிந்தவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியுமாம். இந்த பிராவுக்குள் மார்பகப் புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாம். இதுதான் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவுகிறதாம். வழக்கமான மாமோகிராம் செய்வதற்குப் பதில் இந்த பிராவை அணிந்தாலே மார்பில் புற்றுநோய் அறிகுறி இருக்கிறதா என்பதை இது காட்டிக் கொடுத்து விடுமாம். புற்றுநோய் கட்டிகள், மார்பகத்தில் இருக்கிறதா என்பதை இந்த பிரா கருவி துல்லியமாக காட்டி விடுமாம். இதன்…
-
- 0 replies
- 678 views
-
-
. எனது உறவினர் ஒருவருக்கு, மார்பகப் புற்று நோய் வந்து.. ஒரு பக்க மார்பகத்தை பத்து வருடடங்களுக்கு முன்பு, சத்திரசிகிச்சை மூலம் அகற்றி விட்டார்கள். அதன் பின் அவர், சுகதேகியாக தனது அன்றாட வேலைகளை... மற்றவர்களை விட சுறுசுறுப்பாக வாழ்ந்தவர். தனது வழமையான பரிசோதனைகளையும், வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு இணங்க செய்து வந்தவருக்கு, அடுத்த மார்பிலும் புற்று நோய் உள்ளதை வைத்தியர்கள் கண்டுபிடித்து... ஆரம்பத்திலேயே அகற்றி விட்டார்கள். இது, பரம்பரை வியாதியா? இப்படியான சம்பவம் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்ததா? இதனைத் தடுக்க என்ன வழி என்று ஆலோசனை இருந்தால் கூறுங்களேன்.
-
- 29 replies
- 2.4k views
-
-
பெண்கள் தமது மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் மேல் கீழ் மற்றும் பக்கப்புறமான அசைவுக்கும் தகுந்த அளவு இடமளிக்காது மார்புக் கச்சுக்களை அணிவதால் மார்பகங்களில் உள்ள இணையங்கள் (ligaments) இழுபட்டு சிதைவடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உடற்பயிற்சிகளின் போது அல்லது விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் போது அதற்குத் தகுந்த சரியான தயாரிப்புள்ள மார்புக் கச்சுக்களை பெண்கள் அணியத் தவறின் இந்த விளைவு ஏற்படுவது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் பல வகை மார்புக் கச்சுகளும் நிலைக்குத்தான மார்பக அசைவுக்கு இடமளிப்பதில்லை. இதனால்…
-
- 43 replies
- 8k views
-
-
முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக மார்புக்கு கீழே செயலற்றிருந்த ஒருவர் மீண்டும் எழுந்து நடக்க முடிந்திருக்கும் செயலானது மருத்துவ உலகின் மிகப்பெரிய அதிசயமாக வர்ணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் நாசித்துவாரத்தில் இருக்கும் செல்களை எடுத்து அவரது பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவடப்பகுதியில் செலுத்தி சிகிச்சையளித்ததன் மூலம் அவரது முதுகுத்தண்டுவடம் மீண்டும் செயற்படத்துவங்கியிருக்கிறது. அதன் காரணமாக அவர் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு நாற்பது வயதான டெரிக் பிடிகா என்பவர் மீது மோசமான கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவரது முதுகுத்தண்டுவடத்தில் குறிபிட்ட ஒரு இடத்தில் இருந்த தண்டுவட நரம்புகள் பெருமளவு அறுந்துபோயின. அதன்…
-
- 10 replies
- 1.2k views
-
-
தலை சுற்றல் குணமாக: சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும். இருமல் குணமாக: ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும். சளிகட்டு நீங்க: தூதுவளை, …
-
- 0 replies
- 3.7k views
-
-
இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது. இதன் ஆயுள் சுமார் எழுபது ஆண்டுகள். ஆனால் இவ்வளவு நீண்ட ஆயுளைப் பெற அது சில கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது.நாற்பது வயதுக்கு மேலே இந்த கழுகு இனத்தின் இறகுகள் தமது மென்மைத் தன்மையை இழந்து விட வேகமாக பறப்பது என்பது கழுகிற்கு இயலாத செயலாகி விடுகிறது. கழுகின் அலகுகளும் விரல் நகங்களும் வலுவிழந்து விட தனக்கான இரையை வேட்டையாடுவது கடினமானதாகி விடுகிறது. இப்போது கழுகிற்கு உள்ள பிரச்சினையைத் தீர்க்க இரண்டு வழிகள் உண்டு. முதலாவது இரை கிடைக்காமல் வாழ முடியாமல் மடிந்து போவது. இரண்டாவது தனது வாழ்வைப் புதிப்பித்துக் கொள்ள 150 நாட்கள் கடும் முயற்சி செய்வது. இங்கே இரண்டாவத…
-
- 0 replies
- 585 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் முகக் கவசங்களை போட்டிபோட்டு வாங்கும் நிலையில், கண்கள் வழியாகக் கூட உடலுக்குள் நுழையக் கூடிய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருமல், தும்மல் இருந்தால் மட்டுமே மாஸ்க் அணியுங்கள், மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவும் பழக்கம் இரண்டையும் சேர்த்து பின்பற்றும்போதுதான் பயன் கிடைக்கும், ஆரோக்கியமான நபர்கள், கொரோனா தொற்று உள்ள நபரை கவனித்துக் கொள்வதாக இருந்தால் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மாஸ்க்குகள் பாதுகாப்பு கவசமாக செயல்படும் என்றே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன, ஆனால் மாஸ்க் அணிந்து ஊருக்குள் சுற்றிவருபோது அதனால் பெரிய பயன்கள் ஏதுமில்லை, அதாவது அறைகளில்…
-
- 0 replies
- 304 views
-
-
மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் 05 May 10 05:48 am (BST) மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் என பிரித்தானிய மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறைவாக உறங்குவோரும், அதிகமாக உறங்குவோரும் உயிராபத்தை எதிர்நோக்கிவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆறு மணித்தியாலங்களுக்கு குறைவாக உறங்குவோர் நோய்களினால் பீடிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் உயிரிழக்க நேரிடலாம் எனவும் பிரித்தானிய மற்றும் இத்தாலிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நபர் ஒருவர் சராசரியாக ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரையில் உறங்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்பது மணித்தியாலங்…
-
- 3 replies
- 990 views
-
-
போத்தல் தண்ணீர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக் கணக்கான ரூபாய்கள் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார் எனும் நபர். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். ''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவா்கள், செம்புப் பாத்திரத்துல தண்ணீரை வைத்து ஒரு ஆராய்ச்சி நடாத்தினார்கள். அதனது முடிவுப்படி, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது. இந்தத் தகவல் அறிய…
-
- 1 reply
- 412 views
-
-
மிளகின் மருத்துவ குணங்கள்!! [size=4]நறுமணப் பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக் கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.[/size] [size=4]மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது.[/size] [size=4]கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது.[/size] [size=4]இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். …
-
- 1 reply
- 855 views
-
-
மிளகிலே மருத்துவம். சுறு சுறுவென்னும் காரத்தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விசத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாக பயன்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள். முதலில் இங்குள்ள பழைய உறுப்பினர்களுக்கு இதைப்பற்றி எழுதவிடுகிறேன். அப்படி அவர்கள் எழுதமுடியாது என்று ஓரிரு நாட்களில் நான் உணர்ந்து கொண்ட பிறகு ஜமுனா நான் எழுதுகிறேன்.
-
- 3 replies
- 1.6k views
-
-
சுறுசுறுவெனும் காரத் தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள். 1. தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி குணமாகும். 2. மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது நெய்யில் கலந்து கொண்டு சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும். 3. சளி, தடுமன் (ஜலதோஷம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலேயே நல்ல குணம் காணலாம். 4. பசியில்லா…
-
- 0 replies
- 1.2k views
-