Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம். பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள். சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும். அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும். "அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

  2. "அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும் [size=5]தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வாக்கில் ஊரில் இருந்த சமயம், சகதோழன் ஒருவன் தனது மாமாவின் உதவியோடு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தான். அந்த நேரம் "ஏன்ரா உனக்குப் போக வேற இடம் கிடைக்கேல்லையே, வாத்தியார் சொன்னது மாதிரி பின்னடிக்கு மாடு மேய்க்கப் போறாயோ" என்று கூட்டமாகக் கேலி செய்ததும், "வந்தாண்டா பால்காரன்" என்று அன்றைய அண்ணாமலை காலத்தில் அவன் எங்களுக்குப் பலிகடா ஆனான். அப்போதெல்லாம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்றால் பால்மாடுகளும், பண்ணையும் தான் என்ற நினைப்பு, எல்லாம் அங்கர் பால்மா விளம்பரம் செய்த சதி. ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் அவனை மேற்குலக நாடு ஒன்றுக்கும், கேலி செய்த நண்பர்களுள் …

  3. "இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்" இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தொழிற்கட்சிக்கு பெரும் வெற்றி ஏற்படும் என கருத்துக் கணிப்பில் எதிர்பார்க்கப் படுகிறது / Britons vote in poll expected to deliver Labour landslide. பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மொத்தம் 8 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி கூட . அவர்கள் எட்டு பெயரின் படங்களும் இணைக்கப் பட்டுள்ளது. It is also a happy news that a total of 8 Tamils are contesting in the British parliamentary elections this time. Their photos are also attached here. 14 கொந்தளிப்பான ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வ…

  4. "இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை" சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச் சந்திப்பு குறித்து …

  5. லண்டன் எட்வெயர் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட விஸ்வலிங்கம் சிவலிங்கம் என்ற ஆணுமற்ற பெண்ணுமற்ற குரலில் துரோகிகளின் வானொலியில் வலம்வரும், இந்தப் பன்னாடையே, கூலிகளின் லண்டனின் பிரதம பேச்சாளராம். தன்னை மாக்ஸீஸவாதியாக கூறும் இந்தக் கூலியே, லண்டனில் கூலிகளின் இணைப்பாளராகவும் இருப்பதாக அறிய முடிகிறது. அண்மைக்காலங்களாக சிங்கள இனவெறியர்கள் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைவெறிகளையே நியாயப்படுத்தும் அளவிற்கு மாக்ஸீஸ கொள்கைகளைக் கொண்ட இந்த அரைவேக்காட்டுக் கூலிக்கு, எங்கு மேடை கிடைத்தாலென்ன, ஒரு ஒலிவாங்கி கிடைத்தால் கூட இருக்கிற எல்லாவற்றையும், மனைவி பிள்ளைகள் உட்பட விற்கக் கூட தயங்க மாட்டாதாம். உண்டியலான் வன்னியிலிருந்து லண்டனுக்கு வந்து துண்டும் வேண்டாம், துணியும…

  6. "ஈழமே தாகம்" ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் - சுவிஸ் புதிய தகவல்கள் இணைக்கப்பட்ட செய்தி, அறிவித்தல், 16.05.2009 அவசர அறிவித்தல்!!! மே18 திங்கள் காலை 10:30 மணிக்கு "ஈழமே தாகம்" ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் எம் தாயக மண்ணில் சிறீலங்கா அரச படையின் எரிகுண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் பட்டினியாலும் வதைக்கப்படும் எம் உறவுகளை அழிவில் இருந்து மீட்போம். சர்வதேசமே! உடனடியாக போரை நிறுத்தி எமது மக்களைக் காப்பாற்ற உனக்கு நாம் விடும் இறுதி அறைகூவல். ஒட்டுமொத்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! வாருங்கள் ஐ.நா. வை நோக்கி;. தயக்கம் வேண்டாம் உங்கள் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு புறப்படுங்கள். எமது தாயகம் பறி போன பின்பு, எமது உறவுகள் அழிந்த பின்பு நாம் இங்கு கூட…

    • 1 reply
    • 1.7k views
  7. வெகுவிரைவில் ஐரோப்பா எங்கும் வண்ணப்பக்கங்களுடன், இரு மொழிகளிலும், 50000 இலவச பிரதிகளாக வெளிவர இருக்கின்றது "உண்டியலான்"! திங்கட்கிழமை, 12 யூன் 2006 கடந்த எட்டு வருடங்களாக லண்டன் வெம்பிளி ஈலிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயம், "உண்டியலான்" ஜெயதேவன் தலைமையிலான குடும்பக்கும்பலினால் கொள்ளையடிக்கப்பட்டும், சமூக விரோத செயல்களுக்கு பாவிக்கப்பட்டும் வருகிறது. இச்சமூக விரோத செயல்களை தட்டிக் கேட்பவர்களை மிரட்டியும், அவற்றை மறைப்பதற்காக அரசியல்வாதி வேடமிட்டும் நாடகமாடிவரும் உண்டியலானின் முகமூடியை கிளிப்பதற்கு தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டங்களில் ஒரு வடிவமாக ஐரோப்பிய ரீதியில் முதல் முறையாக 50000 பிரதிகளைக் கொண்ட இலவசப் பத்திரிகையாக, வண்ணப்பக்கங்களில், இ…

  8. "உலக தமிழ் அழகி" மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு GOTO (Global Organization of Tamil Origin) அனைத்துலக தமிழ் பெண்களுக்கான அழகி போட்டி “உலக தமிழ் அழகி” 2018 ஜனவரி மாதம் 5ம் திகதி சென்னையில் 5 நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அவ் நிகழ்விற்கான அறிமுக விழா நேற்று மாலை பேலஸ் ஆப் தி கோல்டன் ஹார்சஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அவ்விழாவில் பேரா மாநில சட்டமன்ற சபா நாயகர் தங்கேஸ்வரி மிஸ் தமிழ் யூனிவெர்ஸ் லோகோவை வெளியிட கபாலி பட வில்லன் டத்தோ ரோஸியம் நோர் பெற்று கொண்டார். இவ் நிகழ்வின் நோக்கம் பற்றி உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எடிசன் விருது நிறுவனமாகிய செல்வகுமார் கூறியத…

    • 1 reply
    • 1.1k views
  9. d http://by154w.bay154...2UvanBlZw_3d_3d Annet Henneman (Italy ) அவர்களின் ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில் நேரடியாக அனுபவித்த சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட நாடகம் . குரல் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மனிதர்களின் உண்மைக் கதைகளை உலகத்திற்கு கொண்டுசெல்வது இவ் நாடகத்தின் நோக்கம் ஆகும் . அத்தோடு புலம்பெயர்ந்து அகதிகளாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் பல்வேறு சமூகத்தின் உண்மைக் கதைகளும் இவ் நாடகத்தில் இணைக்கப்பட்டுள்ளது . இலவச அனுமதி . அன்புடன் அனைவரையும் வரவேற்கின்றோம் - Tamilisches Tanz - und Kunstforum e.V. Friday 10th Feb 2012 18:00 - 19:30 Tamilisches Tanz - und Kunstforum…

  10. இலங்கைத்தீவின் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் மே 8-14 வரையான காலப்பகுதியை "ஒற்றுமை வாரம்" ஆகக் கனடியத் தமிழ் அமைப்புபுக்கள் அறிவித்துள்ளன. கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது. இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறத…

  11. வார இறுதி நாட்களில் இவைகள் வழமையான நிகழ்வுகளாகி விட்டன. எதைக் கூறுகிறேன், எல்லோரும் அறிந்ததே! புலத்தில் ஏற்படும் எம்மவர்களின் மத்தியில் குடும்ப/பொருளாதார வாழ்வியல்களில் ஏற்படும் பிரட்சனைகளை பயன்படுத்தி "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க" முற்படும் சமயப் பித்தலாடிகளைத்தான் குறிப்பிடுகிறேன். சம்பவம் 1: சில மாதங்களுக்கு முன்னம் நானிருக்கும் லண்டன் புறநகர் பகுதியிலிருக்கும் சொப்பிங் சென்ரருக்கு சென்றிருந்தேன். வாயிலில் ஒரு தமிழ் இளைஜன் கையில் துண்டுப் பிரசுரக்கட்டுக்களுடன் நின்றிருந்தான். அவன் தமிழ் முகங்களைத் தேடுவது புரிந்தது. "அண்ணா, தமிழ்தானே" .."ஓம்" என்றேன். எனது கையில் ஒரு துண்டு பிரசுரத்தை திணித்துக் கொண்டு "உங்களை இறைவன் ஆசீர்வதிக்கப்போகிறார், என்னை தூதுவராக…

  12. "கறுப்பு யூலை 83 " நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள் நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வெகுசிறப்பாக ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 " நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர் . சிறப்பாக Land…

    • 0 replies
    • 566 views
  13. "காதல் சடுகுடு" யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், ஆலமரங்களுக்கு அடியிலும், போரிலாலான இடிபாடுகளுக்கு மத்தியிலும், தாரிணி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அழகு தேவதையாக இருண்ட நாட்களை ஒளிரச் செய்யக்கூடிய ஒரு பிரகாசமான புன்னகையையும் மற்றும் அவளுடைய தாய்நாட்டின் அமைதியான குளங்கள் போல பிரகாசிக்கும் கண்ககளையும் கொண்டிருந்தாள். "பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே- தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!" இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக் கண், பூவிற்கு நிகரான கண், மருட்சியில் சுழலும்…

  14. கிளி போனதால் கிலி கொள்வதா?!! ஒன்றாகி களம் நின்றாடும் எம்மவர் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எவ்வளவு தூரம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதைக்காட்டி நிற்பதுதான் இந்தச் சின்னச்சறுக்கல்".. ம்ஹீம் சறுக்கல் என்று கூட இதைச்சொல்லிவிடச்சம்மதமில்ல??. எம் தலைமையின் தந்திரோபாயமான பின் வாங்கல். இரண்டாம் திகதி கேட்ட செய்திக்குப்பின்னர் பார்க்கும் இடமெங்கும் இதைப்பற்றிய பேச்சும் ஆராய்ச்சியும் தான் செய்துகொண்டிருக்கின்றோம் அன்றி நாம் என்ன செய்தோம்?!! இல்லை என்ன செய்யப்போகின்றோம்?! 'இன்னும் நமக்குள் பேதங்கள் காட்டி புலம் பெயர் நம்மவரிடையே பிரிவினைகளை உண்டாக்கும் வீண் பேச்சுக்களும் வாதங்களும் 'நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரப்போகின்றதா?! 'இரு வாரங்களுக்கு முன்னரே 'ப…

  15. "குட்பாய்" லண்டன் கலை மா(மா)மணியின் பேட்டி நாங்கள் இன்று பேட்டி காண இருப்பது குட்பாய் லண்டன் நிகழ்சியின் ஒருங்கணைப்பாளர் கலைமா(மா)மணி, கலைக்குயில் கலைக்காக்கா கலைக்கோழி கலைக்குருவி ஸ்நேக் பாபு அவர்களை புலம் பெயர்ந்த மண்ணில் நீங்கள் செய்து வரும் கலைச்சேவைக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பேட்டிக்குள் செல்வோம். வணக்கம் க............ முதலாவதாக உங்களிடம் ஒரு கேள்வி ஸ்நேக் பாபு என்பது உங்கள் சொந்தப் பெயரா?? அல்லது வடைகைக்கு வாங்கிய பெயரா? அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?? பதில். சொந்தப் பெயர்தான். அந்தப் பெயரை நான் பிறந்ததுமே எனக்கு நானே வைத்த பெயர். காரணம் மனிதன் கமறாவை கண்டு பிடித்து படம் எடுப்பதற்கு முன்னரேயே பாம்பு படம் எடுக்கத் தொட…

    • 11 replies
    • 2.1k views
  16. "சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்" என்ற தலைப்பில் கணவனின் இறுதி நிகழ்வில் மனைவியின் தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தோம். இந்தச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்திருந்தது. ஆனால் பலருக்கு இது ஒரு சாதரண விடயமாகத்தான் பட்டது. அது மட்டும் அல்ல. தாலி அறுப்புச் சடங்கை ஆதரிக்கவும் செய்தார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட பெண்ணின் கதறலை நையாண்டி செய்து நகைச்சுவைப் பதிவுகளையும் எழுதினார்கள். இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களை ஆதரித்து, கட்டிக் காப்பாற்றுவதற்கு எமது தமிழ் சமூகம் முனைவதற்கு என்ன காரணம்? கணவனை இழந்து கதறுகின்ற பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்யும் சடங்குகளை விடமாட்டோம் என்ற…

    • 117 replies
    • 15.6k views
  17. ... இன்று ஐரோப்பாவில் என்று கூறுவதிலும் ஈழத்தமிழர்கள் புகுந்த புலம்பெயர் தேசமெங்கும் .. * சீரளிக்கிறாங்கள்! * நாறடிக்கிறாங்கள்! * இருக்கிற கொஞ்சத்தையும் முடிக்கப் போகிறாங்கள்! * தெருத்தெருவாக அடிபடுகிறார்கள்! * வெட்டுப்படுகிறாங்கள்! * பதவி/பணத்திற்காக மண்ணுக்குள் போனவர்களை விற்க நிற்கிறார்கள்! * .. ......... இவ்வார்த்தைகள் கேட்காத/பேசாத அவர்கள் வீடுகளே இல்லை எனலாம்! ஏன்??? ... பதில் தெரியாதவர்கள் எவரும் இலர்! ... எல்லாம் வரும் வாரங்களில் புலம்பெயர் தேசமெங்கும் நடைபெற இருக்கும், எமக்காக மண்ணோடு மண்ணாக போனவர்களின் நினைவு தாங்கிய நாளாம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒட்டியே!! இரண்டு குழுக்களின் மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் புலமெங்கும்! எதற்கு போவது???…

  18. "சர்வதேசம் எங்கும் பேசப்படும் கனடா “ஈழம் சாவடி” [Friday 2015-07-10 19:00] உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் பெருமக்களுக்கு பெருமை தேடித்தரும் ‘ஈழம் சாவடி’ மீண்டும் மூன்றாவது முறையாக கனடாவில் களம் காண்கிறது. கனடா-ஒன்ராரியோவில் மிக வேகமான பொருண்மிய வளர்ச்சி கண்டு வரும் பிரம்டன் நகரில் வருடாவருடம் இடம்பெறும் ‘கர-பிறாம்’ என்றழைக்கப்படும் பல்லின பல்கலாச்சார பன்னாட்டுத் திருவிழா இம்மாதம் 10ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. பல்வகைச் சாவடிகளும் மக்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு அந்தந்த நாட்டினரின் பாரம்பரியம் வரலாறு கலை பண்பாடு மற்றும் விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் முத்தமிழ் நிகழ்வுகளும் உணவு உடை உட்பட மலிவு விலையில் ஏராளம் வர்த்தகச் சாவடிகளுமெ…

    • 0 replies
    • 743 views
  19. அண்மைக் காலங்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களை நோக்கி புறக்கணி சிறீலங்கா என்பதன் கீழ் சிறீலங்காவில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து அதன் மூலம் சிறீலங்கா அரசு பெறும் பொருளாதார வருவாயைக் கட்டுப்படுத்தி தமிழர்களின் பணம் போருக்கு உபயோகமாவதைத் தடுக்க குரல் எழுப்புகின்றனர். அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அழைத்து இந்தப் புறக்கணிப்புப் பற்றி கருத்துப் பகரப்பட்டதுடன் இவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தவும் கேட்கப்பட்டனர். ஆனால்.. லண்டனில் இருந்து வெளிவரும் வர்த்தக விளம்பரங்களை நம்பிப்பிழைக்கும் "ஓசிப்" பத்திரிகைகள் உட்பட பத்திரிகைகள் தற்போதும் சிறீலங்கா எயார…

    • 16 replies
    • 3.6k views
  20. ஜெயதேவனுக்கு; தாங்கள் அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றில் கூட்டப்பட்ட கூட்டம் சம்பந்தமாகவும், தங்களால் தொடங்கப்பட்ட புது கட்சி தொடர்பாகவும், தாங்கள் விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்டதற்காகத்தான் தற்போது எதிராக செயற்படுவதாகவும், ... பலபல நாடகங்களை அரங்கேற்றி வருகிறீர்கள்!! இவை சம்பந்தமாக பிரித்தானிய தமிழ் பிரஜை ஒருவருக்கு ஏற்படும் கேள்விகள், விடைகளை தங்களோடு பகிர விரும்புகிறேன்!! இதற்கான பதில்கள் தங்களிடமிருந்து வரமாட்டாது என்று தெரிந்தும் எழுத முற்படுகிறேன்!! தாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் வன்னி சென்றபோது, விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகத்தான் நீங்கள் இன்றைய கோலம் கொண்டுள்ளதாக கூறுகிறீர்கள்!! ம…

    • 10 replies
    • 2.5k views
  21. "தேவன் வரப் போகின்றார், "தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", ";இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்று தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ் நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும் உலகின் தமிழ் இணையத் தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகி விட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம். சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி ச…

    • 217 replies
    • 23.4k views
  22. "சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்! இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி ரஜனி, கமல் உட்பட அனைத்து திரையுலகினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதே போன்ற ஒரு அழைப்பை இயக்குனர் தங்கர்பச்சானும் விடுத்திருந்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய செவ்வியில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்த செவ்வியின் பொழுது தங்கர்பச்சான் சில காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பி…

    • 12 replies
    • 2.6k views
  23. "சென்றிடும் திசை வென்றிட முடியும்" "சென்றிடும் திசை வென்றிட முடியும் அன்பு வழியில் உன்னை நிறுத்தினால்! ஒன்று பட்டு நின்று உழைத்தால் நன்மை பல கண்டு வளர்வாய் துன்பம் போக்கி இன்பம் காண்பாய்!" "பள்ளிக்கூடம் தினம் போகும் குழந்தைகளே படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்! பயம்பு வைத்து யானை பிடிப்பர் பயம் தந்து சாதனை தடுப்பர் பந்தயம் வெல்ல பாதை தெரிந்தெடுங்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பயம்பு = பள்ளம், யானை படுகுழி

  24. "செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும் - பொறுப்புக்கூறல் திட்ட அறிக்கையில் புதைகுழிகள் குறித்த விபரங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம் Published By: RAJEEBAN 25 JUN, 2025 | 10:37 AM செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தில் குறிப்பிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனேடிய தமிழ் காங்கிரஸ் இதனை தெரிவித்துள்ளது. கனேடிய தமிழ் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ள…

  25. இங்கு புலம் பெயர் நாடுகளில் நாம் பல்வேறு நாட்டவர்களுடன் வாழ்கின்றோம். மற்றய நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஈழத்தமிழர்கள் நாம் சற்று செலவாளிகள் என்பது எனது அனுபவம். நாம் சற்றுத் திட்டமிட்டால் பல வகைகளில் பணத்தை மிச்சப் படுத்த முடியும் என்பது எனது கருத்து (அனுபவம்), எமக்கு சில சேமிப்பு வழிமுறைகள் தெரிந்திருக்கும் அவற்றில் சில நாம் வாழும் நாடுகளுக்கு மட்டுமே உரியவை, சில எல்லோருக்கும் பொதுவானவை இவற்றை நாம் எம்மிடையே பகிர்ந்து கொள்வோம் . எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது கூட ஒருவகை தானம் தானே. இங்கு சுவிஸ் பத்திரிகைகளில் பல டிப்ஸ் கள் வருகின்றன அவை பெரும்பாலும் சக்தி சேமிப்பு தொடர்பாக இருக்கும். அவை மிகவும் பயணுள்ளதாக இருக்கும் முடிந்தவரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.