வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
-
- 0 replies
- 558 views
-
-
பிரித்தானியாவில்... வருடாந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்! வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில் இடம்பெற்றது. Tamils for Labour என்ற அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானிய நேரப்படி நேற்று பிற்பகல் 6:30 ற்கு இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழ் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சி உதவி கொறடா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1282186
-
- 0 replies
- 352 views
-
-
தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம்- இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம் என குயின்லாந்தின் பயோலா சென்றடைந்த பின்னர் பிரியா நடேசலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம்,எனது பிள்ளைகள் உடல்உளரீதீயாக பாதிக்கப்பட்டனர்,எனது இளையமகள் தனது பல்லை இழந்தார் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் மிகவும் அவலம் நிறைந்த வாழ்வை வாழ்ந்தோம் எவருக்கும் அந்த நிலையேற்படக்கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் ஆட்சி மாற்றம் நாங்கள் இங்கு வரும் நிலையை ஏற்படுத்தியது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்திற்கு அரசாங…
-
- 0 replies
- 414 views
-
-
கடந்த மே மாதமளவில் இலண்டனில் வசிக்கும் சில தமிழ் முதியவர்கள் ( 6-8 பேர் வரை) சைவத் திருத்தலங்களை தரிசித்து திரும்ப தமிழ்நாடு சென்றதாகவும் பயணத்தின் இடைநடுவில் இவர்கள் அனைவரும் சாலை விபத்தொன்றில் சிக்கி மரணமானதாகவும் ஒரு மேலோட்டமான செய்தி கிடைத்துள்ளது. மேற்படி செய்தி உண்மையா என்பதையும் எத்தனை பேர் இந்த ஜாத்திரையில் கலந்துகொண்டார்கள், இது போன்ற ஒரு சிக்கலான விடயம் இறுதியில் எப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, பயணம் தனிப்பட்ட முறையிலா அல்லது ஏதாவது அமைப்புகள் ஊடாகவா ஒழுங்கு செய்யப்பட்டது என்பது போன்ற முக்கிய தரவுகள் எமக்கு தேவைப்படுகின்றது. நான் வாழும் புலம்பெயர் நாட்டிலும் சில அன்பர்கள் இணைந்து இதுபோன்ற தல யாத்திரைகளை முதியவர்களுக்கு ஒழுங்குசெய்து கொடுக்க முயற்சிகள…
-
- 1 reply
- 1k views
-
-
கார் வாங்கலாம் வாங்கோ மேற்குலகில் வாழும் நாங்கள் பொதுவாகப் போக்குவரத்திற்காக எப்போதுமே ஒரு வாகனத்தை வைத்திருப்போம்.கார் வசதி இல்லாத சிலர் தங்கள் தூரப் பயணத்திற்கு புகையிரதமோ அல்லது பேருந்தோ அல்லது விமானமோ எனப் பல வேறு வழிகளில் பண விரயத்துடன் தங்கள் பிரயாணத்தைச் செய்யவேண்டியிருக்கும். சோ பொதுவாக நீங்கள் பாவனைக்கு வைத்திருக்கும் காரை வாங்கும்போது பல விடயங்களை அலசி ஆராய்ந்து தான் அந்தக்காரை வாங்கியிருப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரும் வாகனத்தை வாங்குவதை இரும்புவதில்லை. பலர் முதலில் யோசிப்பது பதிய காரா? அல்லது ஏற்கனவே பாவிப்பில் இருந்த காரா? எந்தக் கொம்பனிக் கார் வாங்கலாம் அந்தக்காரின் அமைப்பு, வேகம் எப்படி இருக்கும் என்றுதான் என நான் நினைக்கின்றேன். அடுத…
-
- 39 replies
- 9.8k views
- 1 follower
-
-
கனடா அண்ணளவாக தமிழரை ஒத்த யூத சனத்தொகை கொண்ட நாடு. இவர்களின் அரசியல் ஆதிக்கம் தமது பொருளாதார பலத்தை காட்டுவதன் மூலம் கனடாவை ஒரு இஸ்ரேலின் இறுக்கமான நண்பனாக வைத்துள்ளது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக வந்ததை பெரிதாக விரும்பாத யூத சமூகம் கனடாவை தற்போது பாவித்து 1967 ஆம் ஆண்டு எல்லைகளுக்கு அமைய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற பிரேரணையை முறியடித்துள்ளது. இந்த பிரேரணைக்கு அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து என கனடாவின் நண்பர்கள் ஆதரவு தந்தும் கனடா எதிர்த்துள்ளது. இது கனடா அந்த நாடுகளின் ஆலோசனையுடன் ஆடிய நாடகமாயும் இருக்கலாம். எப்படியாயினும் யூதர்களின் அரசியல் / பொருளாதர பலம் புலம்பெயர் தமிழர்களுக்கு தாமும் அந்த நிலைக்கு வர வேண்டும் என்ற ஊக்குவி…
-
- 0 replies
- 610 views
-
-
ஒரு நாட்டிய அரங்கேற்றத்தில் பங்கு கொள்ளச் சென்றிருந்தோம். வழமைபோலவே நம்மவர்களுக்குள் ஒரு கலந்துரையாடல். தம் பிள்ளையின் ஓட்டுநர் காப்பீட்டுக்கு நான்காயிரம் வெள்ளிகள் வரையிலும் செலவு ஆவதாக ஒருவர். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். இஃகிஃகி, பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நாம் சிரித்துக் கொண்டே, இதெல்லாம் தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டியது என்றேன். நம்மை நன்கறிந்த நண்பர் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார். அமெரிக்க வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும் தளமாகத் தமிழ் அமைப்புகள் விளங்க வேண்டுமென்பதைத்தான் நாம் இடையறாது சொல்லி வருகின்றோம். மாறாக, ஊர்ப்பழக்கங்களைப் பேசிப் பெருமை கொள்வதிலேயே ஊறித்திளைப்பது பின்னடைவேயென்பது நம் த…
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
Canadian House Sub-committee on International Human Rights of the Standing Committee on Foreign Affairs and International Development had hearings on Sri Lankan Human Rights Situation in November 2011. On November 1st this sub committee heard evidence from Human Rights Watch (Deputy Director, Asia Division: Ms Elaine Pearson) It is important Tamil Canadians follow some of the statements made committee members (MP's) at these hearings about Sri Lanka and Tamil Canadians. ------------------------------------------------------------------------------------------------------------- Subcommittee on International Human Rights of the Standing Committee on Fore…
-
- 0 replies
- 733 views
-
-
Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்! March 7, 20250 Share0 Markham நகர இல்லம் ஒன்றில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண்ணும், வளர்ப்பு நாயும் பலியாகினர். இதில் மற்றொரு ஆண் படுகாயமடைந்தார். வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு 48 – Castlemore வீதிகளுக்கு அருகில் உள்ள Solace வீதியில் உள்ள இல்லம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் 20 வயதான நிலட்சி ரகுதாஸ் என்ற தமிழ் பெண் பலியானார். 26 வயது ஆண் கடுமையான, ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தத் தாக்குதலின் போது German Shepherd நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக York பிராந்திய காவல்துறையின…
-
-
- 10 replies
- 1.1k views
-
-
“இத்தாலி பலெர்மோவில் தைப்பொங்கல் புத்துணர்வும் வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்எழுச்யின் புதுநிமிர்வும்” [Thursday 2016-01-28 19:00] இத்தாலி பலேர்மோ மாநகரில் 24/01/2016 ஞாயிறு மாலை 4:00 மணியளவில் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வாக மண்டபத்திற்கு வெளியே மிகச் சிறப்பாக தமிழ்க்கலாச்சார முறைப்படி தைப்பொங்கல் இடம்பெற்றது. பின்னர் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் தமிழீழ தேசியக்கொடியே ற்றலோடு அருட்தந்தை மற்றும் ஆலய பூசகர்கள்,தமிழ்த் தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள்,தமிழ்ச்சோலை,கலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பாடல்கள்,நடனங்கள்,கவிதைகள் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன .இந்நிகழ்வில் பெருந்த…
-
- 0 replies
- 542 views
-
-
கனடாவில் தமிழ் இளைஞன் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞனவே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கனடாவில்-தமிழ்-இளைஞன்-மா/
-
- 0 replies
- 499 views
-
-
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை சந்தித்துள்ளனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் முன்பதிவு செய்து கொண்டவர்களும் மாத்திரம் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய கீதம் என்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதலில் லேபர் கட்சியின் வேட்பாளர் ஸ்டெப்னி உரையாற்றுகையில், தனது குடும்பமும் கிறீஸ் நாட்டிலிருந்து இங்கு அகதியாக வந்த குடும்பம் தான். இப்போது இருக்கும் ஆட்சியில் மாற்றம் வேண்டும். அதற்கு லேபர் கட்சியே ஒரு வழி என்றும…
-
- 6 replies
- 1.3k views
-
-
Lebaraவின் புதிய தொழில் கைகொடுக்கும் திட்டம் - இளைய தலைமுறை மகிழ்ச்சி *********************************************** புலம்பெயர்ந்துவாழும் ஈழத்தமிழ் மக்களின் இளைய தலைமுறையினரை வர்த்தகத்தில்ஊக்குவிக்கும் மிக அரிய திட்டம்ஒன்றை லெபாரா (Lebara) நிறுவனம் ஆரம்பித்து வைத்துள்ளது. புதிய சுயதொழில் (Entrepreneurial)ஆரம்பிக்கும் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின்தொடக்க நிகழ்வு 07-11-2012 மாலைலண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தின் அங்கமானCASS Business School இல்நடைபெற்றது. இதில் வர்த்தக ரீதியாக பலசாதனைகளைப் புரிந்து முன்னோடியாகத் திகழும் லெபாரா நிறுவனத்தின்நிறுவனர்களில் ஒருவரும், தலைவருமான ரதீசன் யோகநாதன் மற்றும்பிரித்தானியாவில் நட்சத்திர விடுதி சுயதொழில் ஆரம்பித்து…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதியளித்தார் ட்ரம்ப் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற புதிய சிகிச்சை முறையான பிளாஸ்மா சிகிச்சைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னர் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அரசு நிபுணர்களை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த பிளாஸ்மா சிகிச்சை (convalescent plasma) என்ற சிகிச்சை முறைக்கு அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி…
-
- 0 replies
- 467 views
-
-
யேர்மனியிலும் நாடாளுமன்ற முன்றலில் உண்ணாநிலைப் போராட்டம் ! தமிழகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் தமிழினம், சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் தமது உறவுகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், உடனடியாகப் போர்நிறுத்தமொன்றைக் கொண்டு வருவதோடு அரசியல் ரீதியாக தமிழினத்தினது இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணப்பட வேண்டுமென வலியுறுத்தியும், தமிழரது தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தென்துருவம் முதல் வடதுருவம் வரை வரலாற்றுப் பயணமாக, வரலாற்றுப் பணியாக தமிழினத்தின் விடுதலை வேட்கையும் உரிமைக்குரலும் ஓங்கிவரும் வேளையில், அதன் தொடர் எழுச்சியாக, யேர்மனியிலும் டுசுல்டோவ், ஸ்ருட்காட், விஸ்பாடன், சாபுறுக்கன், எனத் தொடராகப் பல நகரங்களில் முன்ன…
-
- 1 reply
- 959 views
-
-
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கட்சிப் பிரமுகர்கள் அறிவிப்பு - ஜேர்மனிய உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது திகதி: 22.04.2009 // தமிழீழம் // [பாண்டியன் ] டுசல்டோவ் மாநில நாடளுமன்றத்தின் முன்பாகக் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த கவனயீர்ப்பு உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் நேற்று மாலை யேர்னியின் முக்கிய கட்சிப் பிரமுகர்கள் நடத்திய பேச்சுகளை அடுத்து உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசியற் கட்சியினர் வாக்குறுதியை அளித்ததுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை அடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்தனர். இவ் உண்ணாவிரதப் போராட்…
-
- 0 replies
- 420 views
-
-
பிரான்சில், "அடங்காப்பற்று மாபெரும் பேரணி" http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 660 views
-
-
மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம் 188 Views இனப் படுகொலை புரிந்த சிறீலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி அம்பிகை செல்வகுமாரினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்றுடன் 6ம் நாளை எட்டியுள்ளது. பிரித்தானியாவிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதியாக அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்…
-
- 18 replies
- 1.6k views
-
-
போன புதன்கிழமை மாலை சுமார் 4 மணி இருக்கும். நான் வேலை செய்து கொண்டு இருக்கும் building இல் இன்னமும் வேலை போகாமல் மிச்சமாக இருக்கும் 4 பேரும் மெல்ல மெல்ல வேலையை இடை நடுவில் விட்டு விட்டு வெளியேறுகின்றனர். அலுவலக நேரம் 8:30 இல் இருந்து 04:30 வரைக்கும். ஆனால் இவர்கள் ஏன் இப்படி 4 மணிக்கே போகினம் என்று எனக்கு சிறு குழப்பம் வருகின்றது. எனக்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்த IT Administrator மெல்ல எனக்கு Bye see you later என்று வழக்கமாக சொல்லும் சம்பிரதாய விடைபெறுதல் வார்த்தகளைக் கூட சொல்லாமல் வெளியேறுகின்றார். எனக்கு பின்னால் இருக்கும் AS400 இனை நாளொன்றுக்கு காலையில் 2 தரம் (சாப்பாட்டுக்கு முன்), மாலையில் 3 தரம் (சாப்பாட்டுக்கு பின்) என்று கரைச்சுக் கு…
-
- 41 replies
- 3.4k views
-
-
ஆஸ்திரேலியா அகதிகளை ஏற்க வேண்டும் - வாக்களியுங்கள் கீழ் உள்ள இணைப்பில் சென்று வலது பக்கம் உள்ள இரண்டு வினாக்களுக்கும் ஆம் என்று பதிலளியுங்கள். http://www.2ue.com.au/
-
- 3 replies
- 2.7k views
-
-
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்களின் வாணிவிழா யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்கள் வாணிவிழாவை இவ்வருடமும் வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளன. தமிழாலய பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலாச்சார உடை அணிந்து கலந்துகொண்ட அவ்விழாக்களில் சிறப்பு வாணி பூசை மற்றும் மழலையருக்கு ஏடுதொடக்கல் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலைவிழாக்களும் கலாச்சார நிகழ்வுகளும் விழா அரங்குகளை அலங்கரித்திருந்தன. நன்றி - பதிவிணையம்
-
- 0 replies
- 546 views
-
-
அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ. http://www.kanapraba.blogspot.com -கானா பிரபா-
-
- 5 replies
- 1.7k views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. சுமார் மூன்று லட்சம் கனேடியத் தமிழர்கள் ஒன்ராறியோவைத் தமது வாழிடமாகக் கொண்டு வசிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் மூன்று பிரதான கட்சிகளுள் இரண்டான ஒன்ரோறியோ முன்னேற்ற கொன்சர்வேட்டிவ் கட்சி, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் கனேடியத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ் வம்சாவளியினரான மூவர் இத்தேர்தலில் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்காபுறோ - றோக் றிவர் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் நீதன் சண் போட்டியிடுகின்றார். மற்றைய கட்சியின் சார்பில் ஸ்காபுறோ - கில்ட்வூட் தொகுதியில் கென் கிருபாவும் மார்க்கம் - யூனியன்வில்லி த…
-
- 9 replies
- 1k views
-
-
இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி! அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்ததுடன், இன்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களிலும் 13 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், 6 பேர் லேசான காயமடைந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 496 views
-
-
கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்.. கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். . கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
-
- 15 replies
- 2.4k views
-