Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. வடநாட்டுக்காரர். அப்பா மேற்குவங்காளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இன்றிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பான காலகட்டம் அது. இவர் தறுதலையாகச் சுற்றியிருக்கிறார். உள்ளூர் அரசியல்வாதி அதுவும் அதிகாரமிக்க அரசியல்வாதி என்றால் தம்மைச் சுற்றி நண்பர்கள் குழாம் சேரும் அல்லவா? அப்படிச் சேர்ந்திருக்கிறது. ஏழெட்டுப் பேர்கள். இந்தக் கதையைச் சொல்வதற்கு ட்வின் பீக்ஸ் என்ற இடத்துக்கு அடைத்துச் சென்றிருந்தார். அது என்ன Twin peaks என்று கேட்கக் கூடாது. அது ஒரு குடிக் கூடம். இத்தினியூண்டு துணியை அணிந்த பெண்கள் ஊற்றிக் கொடுப்பார்கள். Eat, Drink, Scenic views என்று எழுதி வைத்திருந்தார்கள். தின்பதும் குடிப்பதும் இரண்டாம்பட்சம். மூன்றாவது விஷயத்…

  2. குழந்தையும் தெய்வமும் ஒரு குட்டி குழந்தைக்கு, கடவுள் சொர்க்கத்துல மனிதர்களுக்கு ஆப்பிள் கொடுக்குற விஷயம் தெரியவருது. ஆப்பிள் வாங்கும் சந்தோஷத்துடன், சொர்க்கம் செல்கிறது. அங்கு, கடவுளிடம் ஆப்பிள் வாங்க, திருப்பதியில் லட்டு வாங்க நிற்பதை விட பெரிய க்யூ நிற்கிறது. குழந்தையும் வரிசையில் சேர்ந்து கொள்கிறது. நிற்கும்போது, குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி. கடவுள் கையால் ஆப்பிள் வாங்க போகிறோமே? என்று. குழந்தை கடவுள் அருகே நெருங்கிவிட்டது. கடவுள் பழத்தை குழந்தையின் கையில் கொடுக்கும்போது, குழந்தையின் பிஞ்சு கரங்களில் அப்பெரும் பழம் நிலைகொள்ளாமல், கீழே மண்ணில் விழுந்து விட்டது. அச்சச்சோ! குழந்தைக்கு வருத்தம். அங்கு இருக்கும் விதிமுறைப்படி, அந்த பழம் வேண்டுமானால், திரும்பவு…

    • 7 replies
    • 1.5k views
  3. குழந்தைகளுக்கான மனோவியல் ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. யதேச்சையான சந்திப்பு இல்லை. நண்பர் ஒருவர் ஆலோசகரைப் பற்றிச் சொல்லியிருந்தார். வெகு காலமாகவே இந்த சப்ஜெக்டில் எனக்கு குழப்பம்தான். அதுவும் இந்த ஃபேஸ்புக் வந்த பிறகு எக்கச்சக்கம். முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைகளுக்காக இந்தத் தலைமுறையினர் அளவுக்கு excite ஆகவில்லையென்றுதான் நினைக்கிறேன். ‘என் மகன் அதைச் செய்கிறான்; என் மகள் அறிவாளியாக இருக்கிறாள்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அடுத்தவர்களை பதற்றமடையச் செய்யவில்லை. அப்படியே அறிவாளியாகவும், திறமையாளனாகவும் இருந்தாலும் கூட அதை அப்பட்டமாக வெளியில் பேசியதில்லை. ஆனால் நம் தலைமுறை மாறிவிட்டது. தம் மகன் ஒன்றுக்கடிப்பதைக் கூட படம் எடுத்து போட்டுவிடுகிறார்கள்…

  4. கூச்சத்தை நீக்க சில வழிகள் பொதுவாக நம்மில் பலருக்கு முக்கியமான சந்திப்புகளின் போது புதிய நபர்களை அணுகுவதில் பிரச்னை எழுகிறது. இதனால் நல்ல வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக நேர்முகத்தேர்வின் போதும், வியாபார சந்திப்புகளின் போதும் கூச்சத்தால் நாம் பல வாய்ப்புகளை இழக்கிறோம். இதனால் நமது வளர்ச்சி தடைபடுகிறது. புதிய நபர்களை சந்திக்கும் போது ஏற்படும் கூச்சத்தால் அசௌகரியமாக உணர்கிறோம். கூச்சத்தை போக்குவதற்கான சில வழிகளை நாம் இங்கு காண்போம். உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள்: ஒரு செயலை தங்களால் செய்து முடிக்க முடியும், என உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள். இதன் மூலம் தங்களது அறிவு வளர்ச்சி பெற்று குணாதியங்கள் மாற வாய்ப்பிருக்கிற…

    • 0 replies
    • 1.1k views
  5. நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?இதோ,கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள். 1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள். 2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவர்களுக்கு அவரவர் வேலைகள்.உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். 4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள். 5.மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்.அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். 6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண…

  6. கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா? ஒரு பிசினஸ் கூட்டம் அல்லது ஏதோ ஒரு கூட்டம் நடக்கிறது, அதில் பலர் கலந்து கொள்வார்கள், இதில் யார் அதிகாரம் மிக்கவர்கள் என கண்டுபிடிக்க வேண்டும். யார் என்ன பொசிஷன் என்று கூட்டத்தில் வெளிப்படையாக சொல்லாத நேரத்தில் யாரை தமது பேச்சால் திருப்தி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிகாரி அல்லது முடிவெடுப்பவர் வருவார், கூடவே சில அல்லக்கைகள் கூட வருவார்கள், கூட வருகின்ற கைகள் பல கேள்வி கேட்பார்கள், அதிகாரி அமைதியாக இருப்பார், அல்லது அதிகாரி நூறு கேள்வி கேட்பார் அல்லக்கைகள் அமைதியாக இருப்பார்கள். ஒரு கூட்டத்தில் ஒருவர் 100 கேள்வி கேட்பார், இன்னொருவர் ஒரே ஒரு கேள்வி கேட்டிருப்பார், நூறு கேள்விக்கு பதில் அளித்து…

    • 2 replies
    • 936 views
  7. நாம் இழந்துவரும் பண்பாடுகளில் மிக முக்கியமானது கூட்டுக்குடும்பமாகும். பலதரப்பட்ட உறவுகளோடு அவ்வப்போது ஏற்படும் பிணக்குகளை பிரச்சினைகளாக்காது அனைவரின் நலன் கருதி விட்டுக்கொடுத்துப் போகும் தன்மையை கூட்டுக்குடும்பங்களில் அன்று கண்டோம். பெரிய குடும்பமாக இருந்தாலும் குடும்ப வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எவ்வித பங்கமும் வந்திடாது பார்த்துக்கொண்டனர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும். ஆனால் இன்றோ, திருமணத்திற்கு முன்னர் தனிக்குடித்தனம் பற்றி பேசி முடிவெடுத்து விடுகின்றனர் இன்றைய நவ நாகரிக இளம் தலைமுறையினர். தெரியாத ஒன்றினைப் பற்றி புரியாமல் பேசுவதில் ஆச்சரியமில்லைதான். இருப்பினும் அவர்களின் குடும்பத்தினர் கூட்டுக்குடும்பத்தின் ஏற்றமிகு சிறப்புக்களை சொல்லித்தராது போவதும்…

    • 0 replies
    • 1.1k views
  8. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை பாகீரதி ரமேஷ் பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் எட்டாவது கட்டுரை இது. எப்படி உங்க வீட்ல உன்ன தனியா வெளியவிடறாங்கனு தொடங்கி உனக்கு பயமா இல்லையா? ஏதாவது தப்பா நடந்தா என்ன பண்ணுவ? கூட யாரையாவது கூட்டிட்டு போனா நல்லா இருக்குமே? கல்யாணம் பண்ணிட்டு புருஷனோட வெளிய சுத்த வேண்டியது தானே-னு ஏகப்பட்ட கேள்விகள்; இதுக்கெல்லாம் பதில் சொல்லி எனக்கு …

    • 1 reply
    • 1.1k views
  9. கூத்'தாடி' ரஜினியும் முழுத்தாடி துரோணாச்சாரியும்: ஆன்மீகஅரசியல் கோடைமழையில் தொப்பலாக நனைந்த நண்பர் ஓட்டமாக ஓடிக் குளித்துவிட்டு 'அப்பாடா' என்று அமர்ந்தார். 'ஏனப்பா! மழைலதான் நல்லா நனைஞ்சுட்டியே! தலைய தொவட்டினா போதாதா!" என்றேன் நான். 'அட நீ வேற கடுப்பக் கேளப்பாதே! நனைஞ்ச பனியன்லேர்ந்து டிடெர்ஜென்ட் சோப்புப் பவுடர் நொரவந்து ஒடம்பெல்லாம் ஒரே ஊறல்! ஒனக்கென்ன தெரியும்!' என்றார் கடுப்புடன். 'ஏம்பா! வாஷிங் மிசின்லதானே தொவைக்கிறே!', என்று கேட்டுவைத்தேன். 'பிரச்னையே வாஷிங் மிஷின்தாம்பா! ஏதோ 'Fuzzy Artificial Intelligence'னு பீத்தறேளே! அது பண்ற வேலதான் இம்புட்டும்! அந்த Intelligent கருமாந்தரம் கொறச்சலாத்தான் தண்ணி எடுக்குது. சோப்பு சரிய…

    • 1 reply
    • 1.3k views
  10. நேற்றுக் காலமை கடையைத் திறந்து இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன் என்று முதலாளி நம்பிக்கொண்டு இருக்க முகநூலையும் யாழ் இணையத்தையும் ஓடிஓடிப் பாத்துக்கொண்டு வாறவர்களையும் கவனிச்சுக்கொண்டு இன்னும் ஆறு மணித்தியாலம் இருக்கே என்று மனதுள் நொந்துகொண்டு வேலை செய்துகொண்டிருக்க, கடைக் கதவைத் தள்ளிக்கொண்டு ஒரு பெண். பார்க்கப் புதிதாக இருக்கிறாரே எண்டு எண்ணிக்கொண்டே வணக்கம் எண்டன். ஆளிட்டையிருந்து பதில் வணக்கம் வராமல் ஒரு முறைப்புத்தான் வந்திது. சரி ஆரோ ஒரு பழக்க வழக்கம் தெரியாத மூதேவி இது என்று மனதுள் எண்ணிக்கொண்டு என்ன வேணும் என்று நைசாத்தான் கேட்டன். "அண்ணை இல்லையோ" என்றார். இந்தப் பெரிய ஆள் முன்னுக்கு நிக்கிறன். உனக்கு அண்ணையைத்தான் கேக்குதோ எண்டு மனதில் எண்ணிக்கொண்டே அண்ணை பின்னேரம்…

    • 8 replies
    • 1.4k views
  11. ஆமீக சிந்தனை - நெல் மணி -----------------------------------------ஒருவனின் வாழ்க்கை " நெல் " மணிகள் போல் இருக்கவேண்டும் . இறந்தபின்னும் "சோறு " என்னும் பொருளாய் பிறருக்கு உதவுகிறது . உயிரோடிருந்தால் மீண்டும் தளிர்த்து பல நெல் மணியாக உலகிற்கு உதவுகிறது . மனித வாழ்க்கை அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது.ஒரு நெற்குவியலில் உள்ள (சப்பி நெல்) பயனற்ற நெல் பார்ப்பதற்ற்கு அழகாக இருந்தாலும் .அதோ சோறாகவோ மீண்டும் தளிர் விடவோ முடியாத பொருளாய் தூக்கி வீசப்படுகிறது . ஒழுக்கமற்ற மனிதர்கள் எப்போதே இறந்து விட்டார்கள் . முதலாவது ஒழுக்கமற்ற செயலை செய்யும்போதே அவன் இறந்துவிட்டான் . அவர் உயிரோடு உலாவுவது .பயனற்ற நெல்லுக்கு சமனானவன்.+சிந்தனை உருவாக்கம் கே இனியவன் வாழ்க வளமுடன்

  12. ஒற்றுமைக்கு ஒரு உதாரணம் -------------------------------------------- நடைமுறையில் ஒற்றுமை என்றால் என்ன என்பதை உதாரண ங்கள் மூலமாகவே வெளிப்படுத்தி வருகின்றோம். சேர்ந்து வாழுதல், ஒன்று சேர்ந்து செயற்படுதல், ஒருவொருக்கு ஒருவர் பாதுகாப்பளித்தல் , பகிர்ந்துண்ணல் என சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு ஒற்றுமைக்கு உதாரணங்களைக் கொடுக்கிறோம். ஒற்றுமைக்கு சிறந்த உதாரணம் ஒன்றை முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம். ஒன்றுகூடி வாழுதல் அல்லது சேர்ந்து வாழுதல் ஒற்றுமை எனப் பெரும்பாலானவர்கள் கருதிக்கொள்கிரார்கள். சேர்ந்து வாழுதல் அல்லது கூடி வாழுதல் ஒற்றுமை அல்ல. நாம் எல்லோருமே சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சேர்ந்து வாழ்தலானது குடும்பம், சமூகம், சமுதாயம், நாடு என…

  13. நம்பிக்கைகளும் கிராமிய வாழ்க்கையும்: ஒரு பார்வை ஆய்வுக் குறிப்பின் நோக்கம்: இந்த ஆவணம், வழங்கப்பட்ட தமிழ் மூலத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய கருப்பொருள்கள், யோசனைகள் மற்றும் உண்மைகளை விரிவாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராமிய வாழ்க்கையில் நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளின் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. முக்கிய கருப்பொருள்கள்: பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள்: கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கையை நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் எந்த அளவிற்கு பாதிக்கின்றன என்பது முக்கிய கருப்பொருளாகும். லியோன் யுரிஸின் 'றினிற்றி' நாவலில் அயர்லாந்து கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள், மூலத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் கிராமப்புற மக்களின் நம்பிக்கைகளுடன் ஒப்பிடப்படுகின்…

  14. கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி - அ.ஞா. பேரறிவாளன் - மரண தண்டனைச் சிறைவாசி - த.சி.எண். 13906 - நடுவண் சிறை, வேலூர் - 2 அன்புக்குரியீர், வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன். எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநில…

  15. புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் அகராதியில், `பெண்’ மற்றும் `ஆண்’ என்பதற்கான விளக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒருவரை அவரது உடலியல் ரீதியான பால் அடையாளமாக (Biological Sex) அல்லாது, பாலினத்தின் (Gender) அடிப்படையில் ஆண், பெண் என்று வகைப்படுத்துகிறது இது. புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் அகராதியில், `பெண்’ மற்றும் `ஆண்’ என்பதற்கான விளக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இருந்த வரையறைகள் போல் இல்லாமல், இந்த வரையறைகளின் மூலம் ஒருவரை அவரது உடலியல் ரீதியான பால் அடையாளமாக (Biological Sex) அல்லாது, பாலினத்தின் (Gender) அடிப்படையில் ஆண், பெண் என்று வகைப்படுத்துகிறது. கேம்பிரிட்ஜ் அகராதிய…

  16. கேரளத்து பெண்கள் என்றாலே நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் இவைகள் தான் ஞாபகத்துக்கு வரும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்புதான் காரணம். அந்த மாநிலம் இயற்கை வளங்களால் சூழப்பட்டதும் இப்பெண்களின் அழகுக்கு காரணம் ஆகும். தேங்காய் எண்ணெய் கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடிபட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது. மஞ்சள் சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். கற்…

  17. கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும். குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவ…

  18. கோபம் இல்லாத, மனைவி தேவையா? - இதோ... சில தகவல்கள்! குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர். மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்: 1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள். 2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது. …

  19. நம் சமூகத்தில் எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டிருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் சதவீதமும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. கருவறையில் தொடங்கும் பாதுகாப்பின்மை பெண்களுக்குக் கல்லறைவரை தொடரவே செய்கிறது. பிணமான பிறகும் வல்லுறவுக் குள்ளாகும் பெண்களைப் பற்றிய செய்திகள் இந்தச் சமூகத்தில் பெண்கள் வெறும் உடல்களாக மட்டுமே பார்க்கப் படுகிறார்கள் என்பதற்கு சாட்சி. இந்தியாவின் தேசிய குற்றப் பதிவு அமைச்சரவை சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளியீட்டுத் தகவல் நம்மை திடுக்கிட வைக்கிறது. ‘இந்தியாவில் ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறாள். 34 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். மேலும் ஒவ்வொரு 43 நிமிடங்களுக்க…

    • 0 replies
    • 744 views
  20. கைகளால் உணவருந்துவதற்கான, நல்ல காரணங்கள்!!! ஏன் கைகளால் உண்ணுவதை விரும்புகிறார்கள் என என்றாவது எண்ணியுள்ளீர்களா? அதற்கு காரணம் வெறும் கைகளால் உணவுகளை உண்ணும் போது உணவின் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளையும் கைகளாலேயே உண்ணுவதற்கு பழக்கப்படுத்துகின்றனர். இதனால் உணவருந்தும் மேஜையில் சிந்தி சிதறமால் உண்ணுவார்கள் அல்லவா? கைகளால் உண்ணும் போது, அவை உணவின் அமைப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு அளிக்கும். ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி உண்ணும் போது இந்த அமைப்பை நம்மால் உணர முடிவதில்லை. பல இந்தியர்களுக்கு தங்கள் உள்ளங்கையால் உருளைக்கிழங்கை அல்லது இட்லியை சாம்பார் மற்றும் சட்னியுடன் பிசைந்து சாப்பிட மிகவும் விரும்புவார்கள். வெறும் கைகளால் உணவருந்தினால் மட்ட…

  21. எச்.எம்.எம்.பர்ஸான் வெளியில் சென்று வந்த கணவன், வீட்டுக்குள் வரும் போது கைகளைக் கழுவிவிட்டு உள்ளே வரும்படி கூறிய மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை பகுதியிலுள்ள நபரொருவர், வெளியில் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி, நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும் கைகளைக் கழுவுமாறும் அறிவுறுத்துதல்கள் வழங்கியுள்ளார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மனைவி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு…

    • 0 replies
    • 726 views
  22. அழகான கைகள் யாருடைய கைகள்? சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன். அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இ…

  23. கைத்தடி உதவியுடன் திருமணச் சந்தைக்கு வரும் அரேபிய ஷேக்குகள் #child-marriage ரெஹானாவுக்கு 14 வயதே ஆகியிருந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள். 2004-ம் ஆண்டு வளைகுடாவைச் சேர்ந்த 55 வயது ஷேக் ஒருவருக்கு சட்டவிரோதத் திருமணம் செய்துகொடுத்தனர். மும்பையில் வைத்துத் திருமணம் நடந்தது. பெற்றோர் ரெஹானாவைக் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர். ஒரு மாத காலம்தான் ஆகியிருக்கும். மும்பை ரயில் நிலையத்தில் அனதாரவாகக் கிடந்தார் ரெஹானா. வயிற்றில் கரு உருவாகியிருந்தது. வீட்டுக்கு வந்த, ரெஹானாவின் கருவைப் பெற்றோர் கலைத்தனர். மீண்டும் விற்பனைக்குத் தயாரானார் ரெஹானா. கத்தாரைச் சேர்ந்த 70 வயது ஷேக், இந்த முறை ரெஹானாவை வாங்கினார். கத்த…

  24. சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் அவளுக்கு வேலை. மிகப் பெரிய தொகை சம்பளம். சென்னையைச் சுற்றியுள்ள பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் உண்டு. நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் அவளால் கார், பங்களா என்று வாழ்க்கையை அனுபவித்ததால், அவளாக சொன்னால் திருமணம் பற்றி யோசிக் கலாம் என்றுவிட்டு விட்டனர். அம்மா வற்புறுத்தும்வரை சுதந்திரமாக இருக்கலாம் என்று அவளும் கருதியதால் திருமண சிந்தனையே எழவில்லை. இந்த நிலையில் 28 வயதில் அவளிடம் காதல் எட்டிப்பார்த்தது. மகளின் காதலுக்கு பெற்றோரும் பச்சைக் கொடி காட்டினர். காதலரும் வசதியான பார்ட்டிதான். இரண்டு குடும்பத்திலும் பரஸ்பரம் பேச்சு வார்த்தை களோடு... `ஒப்பந்த தட்டு`களும் பரிமாறப்பட்டன. ஆடம்பரத்துக்கு பஞ்சமின்றி... அன…

    • 9 replies
    • 4.2k views
  25. Started by akootha,

    [size=4]என்னதான் அமிஞ்சிக்கரையிலும் ஆண்டிபட்டியிலும் இணைய வசதிகள், அலைபேசித் தொழில்நுட்பம், வெளிநாட்டு நாகரிகம் என்பவை இறக்குமதி ஆக்கப்பட்டு இருந்தாலும் கூட, கயமைவாதம் என்பது ஒழிக்கப்படவுமில்லை; குறைக்கப்படவுமில்லை; மாறாக முழு வீச்சில் இறக்கை கட்டிப் பறக்கவே செய்கின்றன என்பதற்கு அண்மையில் நான் அறியப்பெற்ற கீழ்க்கண்ட நிகழ்வுகளே சான்றாகும்.[/size] [size=4]1. ஊரிலிருந்து வந்திருக்கும் ஓர் விதவைத்தாய் ஒருவர், அமெரிக்காவில் பிணைக்கைதியாய் இருக்கிறார். 24 X 7, கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு வேலை செய்ய வேண்டும். மற்றவரோடு பேச அனுமதிக்கப் படுவதில்லை. மகன் எனப்படுபவர், திங்-வியாழன் வெளியூர் வேலை. மருமகளுக்கும் வேலை. மருமகள் என்பவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.