சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2254 topics in this forum
-
-
- 6 replies
- 1.4k views
-
-
இன்று தாயகத்தில் எவ்வளவு விதவைப்பெண்கள் உள்ளார்கள்? இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு? இதை ஆராய்ந்தால், யதார்த்த ரீதியாக கருத்துறவாடினால் பயனாக இருக்கும். எனது தகவல் படி எண்பதினாயிரம் ஆண்கள் / பெண்கள் விதவைகள் உள்ளார்கள். இது ஒரு சமுதாய, சமூக மற்றும் கலாச்சார பிரச்சனை. இதை இலகுவில் தீர்க்க முடியாது. ஒரு பரந்த திட்டமும் திறந்த சமூக நல நோக்கும் தேவை. 1. பிள்ளைகள் உள்ள பல விதவைகள், அவர்களுக்காகவே வாழ எண்ணுகிறார்கள். அவர்களின் வாழ்வு ஊடாக வாழ விரும்புகின்ர்ரர்கள். அதை எவ்வாறு வளம்படுத்த நாம் உதவலாம்? 2. பிள்ளைகள் இல்லாத விதவைகளுக்கு எவ்வாறு மறுவாழ்வுக்கு உதவலாம்? 3. பொருளாதார ரீதியாக எவ்வாறு இவர்கள் வாழ்வை வளப்படுத்தலாம் ? 4. வெளிநாட்டில் உள்ளவ…
-
- 6 replies
- 1.4k views
-
-
வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இன்டர்நெட் யுகத்தில், உடல்நலத்தைப் பாதுகாக்க தனியே நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது பலருக்கும். அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள, நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. `ஏ.சி ஜிம்... வருடத்துக்கு 9,999 மட்டுமே; ஆறு மாதங்களுக்கு 3,999 கட்டினால் போதும்' போன்ற விளம்பரங்கள் கண்களைச் சீண்டுகின்றன. இன்னொரு பக்கம், ``நம்ம ஜிம்ல மாசக் கட்டணம் 300 ரூபாய்தான்மா'' என்று சிரிக்கிறார், கொரட்டூரைச் சேர்ந்த ஶ்ரீனிவாசன். மேஸ்திரியான இவர், ஃபிட்னெஸ் மீது கொண்ட ஆர்வத்தால், தன் சுயமுயற்சியில் `மிஸ்டர் வேர்ல்டு' போட்டிவரை சென்றிருப்பவர். பூசப்படாத சுவர், செங்கல் ஜன்னல்கள் என்றிருக்கும் இவருடைய `ஏழை ஃப்ரெண்ட்லி' ஜிம், பல இளைஞர்களை விளைய…
-
- 0 replies
- 1.4k views
-
-
பொய்மையும் வாய்மையிடத்த - சுப. சோமசுந்தரம் "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இல்லாத சொலல்" ------(குறள் 291; அறத்துப்பால்; அதிகாரம் : வாய்மை) திருமணப் பத்திரிகைகளில் ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்த ஏதோ ஒரு பாடலுடன் தொடங்குவார்களே, அதுபோல் இக்கட்டுரைக்கு மேற்கண்ட குறளே நாம் போடும் பிள்ளையார் சுழி (!). இப்பீடிகையைப் பார்த்தாலே தெரிய வேண்டும் - இவன் சில பொய்களுக்குப் புடம் போட்டு, முடிந்தால் நமக்கு மூளைச்சலவை செய்து ஏதோ கருத்தியல் சார்ந்த சுழலில் தள்ளப் பார்க்கிறான் என்று. ஏமாற்ற நினைப்பது உண்மைதான். பின்னர் ஏன் இந்த முன்னறிவிப்பு ? ஏமாற விருப்பமில்லையெனில் ஆரம்பத்த…
-
- 1 reply
- 1.4k views
- 2 followers
-
-
நிர்வாணமே ஆயுதம் எட்டு ஆண்டுகளுக்கு முன் தினசரி செய்தித்தாளில் படித்தது. தோலாடைகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பியப் பெண்கள் பலர் நிர்வாணமாகக் கொட்டும் பனிமழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல், ஈராக் மீது போர்த்தொடுக்க அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியப் படைகளை அனுப்பாதே என்று ஆஸ்திரேலியா பெண்கள் பலர் ‘No War’ என்று நிர்வாணமாக புல்தரையில் படுத்துக்கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் துணிச்சல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த பூமி இன்று ஆணின் கையில் இருக்கிறது. யுத்தத்தின்போது, ஒருநாட்டின் படை, வேறொரு நாட்டிற்குள் நுழையும் போது அந்நாட்டின் ஆண்களை சித்திரவதைச் செய்து கொல்கிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட…
-
- 4 replies
- 1.4k views
-
-
http://youtu.be/oUU-IxqLF9o
-
- 2 replies
- 1.4k views
-
-
பொள்ளாச்சி: அக்கறையின் பெயரால் நடக்கும் அத்துமீறல்கள்! பாலியல் விழைவை வெளிப்படுத்துபவர்கள் எல்லோரும் பாலியல் குற்றவாளிகள் அல்ல! கவின்மலர் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூரங்களை அடுத்து உருவாகியுள்ள சூழல் மிகவும் அபாயகரமானது. பெண்களுக்கு அறிவுரைகள் சொல்லும் வாட்ஸ் அப் செய்திகள், முகநூலில் பகிரப்படும் பெண்கள் மீதான அக்கறைப் பதிவுகள் என்கிற பெயரிலான அறிவுரைகள், சில சமயங்களில் வசவுகள் எனப் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சொல்லும் கனவான்கள் நிரம்பிய சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. பெண்களும் சக பெண்களுக்கு அறிவுரைகளைச் சொல்கிறார்கள். பெண்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற அவர்களின் அக்கறையின் மேல் எனக்கு எந்த சந்தேகமும். இல்லை. ஆனால், அந்த அக்கறை கட…
-
- 0 replies
- 1.4k views
-
-
யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூகசேவகி சுனிதா கிருஷ்ணன். யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ? விஜயவாடா நகரத்தில் வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தில் மாலினி என்ற 15 வயது பெண். வேலை பார்த்து குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் குடும்ப உறவினர் ஒருவர் அப் பெண் என்று சொல்வதை விட குழந்தை என்றே சொல்ல வேண்டும். அப்பெண் குழந்தையை கூட்டிச் சென்று, ரூ.1.5 லட்சத்திற்கு , ஒரு விபசார விடுதியில் விற்று விட்டார்கள். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல்! கேட்கவே மனம் பதற…
-
- 3 replies
- 1.4k views
-
-
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பாலியல் பிரச்சினை காலையில் பத்திரிகைகளை புரட்டினால் வன்முறைகள்,கொலைகள்,பாலியல் வல்லுறவுகள் சிறுவர்துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை அதிகம் காணலாம் சாதரண குடிமகன் தொடக்கம் ,அரசியல் வாதிகள்,கல்லூரி அதிபர்கள் ஆசிரியர்கள் ,அலுவலகர்கள் ,மதகுருமார்கள் இவற்றில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் பெண்கள் ,சிறுவர்கள் , ,முதியவர்கள் என இப்பிரச்சினை பாதித்து கொண்டே வருகிறது. காரணம் பாலியல் பற்றிய அறிவு இல்லாததும், தொழிநுட்ப வளர்ச்சியும். தொழிநுட்ப வளர்ச்சி என்னும் போது படிக்கும் மாணவர்கள் கைகளில் இன்று புதிய புதிய கைதொலைபேசிகள் ,மடிக்கணணிகள்,இருப்பதனால் இதனை பயன் படுத்தி சில பாலியல் சார்ந்த இணையத்தளங்களுக்கு சென்று பலானா பலானா படங்களை பார்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
படித்ததில் பிடித்தது கடைசி வரிகளில் கண்கலங்காமல் இந்தக் கதையைப் படிக்கவும் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு ‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான். "நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான். "முப்பது டாலரிலிருந்து ஐம்பது டாலர் வரை" - கடைக்காரர் பதில் சொன்னார். அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான். "எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான். கடை உரிமையாளர் புன்னகைத்து…
-
- 6 replies
- 1.4k views
-
-
தூத்துக்குடியில் ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தை கிழித்துத் தொங்கவிட்ட வீரத்தமிழன் சந்தோஷ்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் 'ரஜினிகாந்த் தூத்துக்குடிக்குச் செல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை', என்றார் நண்பர். 'நான் எதிர்பார்த்தேன்!' என்றேன் நான். வியப்புடன் உற்றுப்பார்த்த நண்பன், 'எப்படி?' என்றார் ஒற்றை வார்த்தையில். 'ஒன்றுமில்லை, காலாவுக்கு கன்னடத்தில் திரையரங்குகளில் தடைவிதித்து ஆப்படித்துவிட்டார்கள்! இளிச்சவாயன் தமிழன்களும் வரலேன்னா அம்போன்னு போயிருமேன்னு கவலைப்பட்டுப் போயிருப்பார்' என்று விரித்…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிகை அலங்கார தொழிலாளியாக இருந்து , இன்று பல ஆடம்பர வாகனங்களின் உரிமயாளராகி கோடீஸ்வர தொழிலதிபர் தனது அனுபவங்களை பகிர்கிறார்.
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு பத்திரிகைக் குறிப்பு பின்வருமாறு சொல்கின்றது, " மனிதனின் இனப் பெருக்கத்தை குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள் எப்படி கட்டுப் படுத்துகிறதோ அதேபோல் புறாக்களின் இனப் பெருக்கத்தையும் கட்டுப் படுத்த ஒஸ்திரிய நகரான ஃடிணத் இல் அந்த நகர சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறர்கள். இதற்கு ஏதுவாக 2001 ஆம் ஆண்டிலிருந்து இந் நகர மத்தியில் புறாக்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு குளிசைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. புறாக்களுக்கு பாதிப்பில்லாமல் ஆக்கமான முறையில் புறாக்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த இக் குளிசைகள் பாவிக்கப்படுவதாகவும் இதனால் நாய் போன்ற ஏனைய மிருகங்கட்கு பாதிப்பு எதுவுமில்லை எனவும் ஃடிணத் நகர சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். இக் குளி…
-
- 12 replies
- 1.4k views
-
-
ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயம்: அமுதா சுரேஷ் அமுதா சுரேஷ் அமுதா சுரேஷ் நான் அறிந்தப் பெண்மணியொருவர் கணவர் விடாது கொடுமைப்படுத்துகிறார் என்றும், எத்தனை முறை காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தம் பெண்குழந்தைகளுக்காக மறைந்து வாழ தலைப்பட்டதைப் பகிர்ந்துக்கொண்டார், அதுவும் காவல்துறையில் ஒருவர் “யார்தான் குடிக்கல, அடிக்கல, புருஷன் இல்லாம வாழ்ந்துடுவியா நீ?, வேற யாராச்சையும் பார்த்துகிட்டியா?” என்று கேவலப்படுத்தியதால் மனம் நொந்தததையும் பகிர்ந்துக்கொண்டார்! நேற்று ஒரு பெண், வாட்ஸ் அப்பில் தன் கணவர் தன்னையும் தன் ஆறு வயது மகனையும் கொடுமைப்படுத்துவதை பகிர்ந்துக்கொண்டு தற்கொலையும் செய்துக்கொண்டார் என்ற செய்தியையும், இன்று அந்தக் காணொளியையும் காண…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
``என் 57 வயசு வரை பெண்ணாகத்தான் வாழ்ந்தேன்'' என வியக்கவைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த திருநங்கை மோகனா அம்மா. தற்போது 75 வயது. திருநங்கைகள் தங்களுடைய உரிமைகளைப் பெறுவதற்கு எவ்வளவு போராடவேண்டியிருக்கிறது என்பது நாம் அறிந்ததே. இப்போதே இப்படி என்றால், அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும்? ``என் சொந்த ஊர் ஆர்.எஸ்.மாத்தூர். அப்பா, அம்மா கூலிக்காரங்க. எனக்கு 4 அண்ணன், 3 அக்கா. 8 வது மகனாப் பிறந்தேன். 5 வயசுலேயே அப்பா இறந்துட்டாங்க. என் அம்மாதான் எல்லாமுமா இருந்தாங்க. சின்ன வயசிலிருந்தே பொம்பளை புள்ளைக விளையாட்டுன்னா ஆர்வம் அதிகம். பொம்பளை புள்ளை மாதிரிதான் நடந்துப்பேன். அதுக்குப் பெயர் `திருநங்கை'ன் எல்லாம் தெரியாது. 10 வயசுல வீட்டைவிட்டு வெளியேறினேன். லோக்கல்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்! -கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed - திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஒருவருடைய வாழ்வில் மிக இனிமையானதும் மங்களகரமானதும் மறக்க முடியாததுமான விடயம் தான் திருமணம். திருமணத்தின் போது ஒருமை ஓரங்கட்டப்பட்டு பன்மை பதவிக்கு வருகிறது. ஈருயிர் ஓருயிராகிறது. மூன்றாவது உயிர் பிறக்கிறது. சட்ட ரீதியான முறையிலும் சமயம் மற்றும் குடும்ப சமூக அங்கீகாரத்துடன் ஆண் பெண் ஜோடி இணைந்து வாழ்வதற்கு திருமணம் புரிவது அவசியமாகிறது. மேலும் பல காரணங்களும் உள்ளன. திருமணம் புனிதமானதும் மனித தேவ…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? ஆர். அபிலாஷ் ஒரு நண்பர் தனக்கு உரையாட தோழிகளே இல்லை. நெருங்கிப் பழக நினைக்கும் பெண்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுகிறார்கள். ஏன் அப்படி என கேட்டிருந்தார். அவருக்கான என் பதில் கீழ் வருவது: அன்புள்ள நண்பருக்கு ஒரு ஆண் தன் சமவயது பெண்ணுடன் தோழியாய் இருப்பது சிரமமான காரியமே. எந்த வகை நட்பிலும் ஒரு பாலியல் கோணம் இருந்தே தீரும். அதனால் தான் ஏற்கனவே காதலன் உள்ள பெண்கள் ஒரு புது ஆணின் நட்பு கோரலை ஏற்க தயங்குவார்கள். உங்களை விட வயது அதிகமான பெண்களிடம் இது சாத்தியமாகலாம். இன்றைய அலுவலகங்களில் ஆண் பெண் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் காஷுவல் நட்புறவுகள் இரு சாராருக்கும் இடையே…
-
- 6 replies
- 1.4k views
-
-
'வேலைக்காரி'... இது சசிகலாவைப் பற்றிய கட்டுரை அல்ல! #MustRead முதல் நாள் வேலைக்காரி காய் நறுக்கியபோது, விரலில் வெட்டிக்கொண்டார் செல்வி அக்கா. ஆழமான காயம். மறுநாள் பாத்திரம் துலக்குகையில், அந்த ஸ்டீல் ஸ்கிரப்பர், வெட்டிய காயத்துக்குள் அவ்வப்போது இறங்கிக் குத்த, தாங்கவே முடியாத அந்த சுரீர் வலியைத் தவிர்க்கக்கூடிய வாழ்க்கை அவருக்கு வாய்க்கவில்லை. இரண்டு கூடை பாத்திரங்களையும் துலக்கிவைத்த பின்னர் காயத்தை ஈரம் வற்றத் துடைத்துக்கொண்டார். வீட்டுக்காரப் பெண்மணி மூன்று இட்லிகளைக் கொடுக்க, 'டப்பாவுல எடுத்துக்கிறேம்மா' என்று, மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் பகிர்ந்துகொடுப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டு, பட்டினி வயிற்றுடன் அடுத்த வீட்டுக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
பெரியாரை உலக மயமாக்குவோம் கி. வீரமணி பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா). திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார். இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டா…
-
- 1 reply
- 1.4k views
-
-
குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் செய்யக் கூடாதது என்னென்ன? கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, ”உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே” என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, ”அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்” என்று சொல்ல நேரிடலாம். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை …
-
- 0 replies
- 1.4k views
-
-
உண்மயில் திருமண முறைகள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட ஜாதிகளுக்கு ஏற்றவாறு பல உண்டு.நான் அறிந்த வரையில் ஈழத் தமிழர்களின் திருமண முறையில் மணமகள் மணமகன் காலில் விழுந்து வணங்குவதென்பது அவர்களின் வழக்கத்தில் இல்லாத ஒன்று.ஆனால் வேறு ஜாதிகளில் இருக்கலாம்.மலையகம்,இந்தியாவி ல் மொட்டை வெள்ளாளர் என்ற ஜாதியினர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு 40க்கு மேற்பட்ட கோத்திரமும் உண்டு இவர்களின் திருமணத்தில் ஐயருக்கு பெரிதாக வேலையில்லை.அவர்களுடைய அரசாணிப்பூசாரி என்பவரே முக்கால்வாசித் திருமணத்தையும் முடித்து விடுவார்.இவர்களின் திருமணத்திலே நெல் அளக்கும் முறையும்,வந்திருக்கும் பங்காளிமுறை உறவினர்களும் மணமகள் மணமகனுக்கு மாலை போடுவதிலேயே நேரம் போய்விடும்.அடுத்தது ஆசாரியாக்கள்(விஸ்வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாராவது புள்ளி விபரவியலில் masters செய்துள்ளீர்களா.அதுவும் இலங்கையில்.இலங்கையில் நல்ல வேலையில் இருந்து விட்டு self sponsorல் கனடா வந்துள்ளார் குடும்பமாக.பாக்கியசோதி சரவணமுத்து அவ்ர்களுடன் வேலை செய்தவர்.சின்ன பெண்பிள்ளை ஒன்றும் உண்டு. கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகிறது கனடா வந்து. எனக்கு அவரை ஓரளவு தெரியும்.ஆனால் எனது உறவினர்களின் நெருங்கிய நண்பர்.அவர் எப்படியான வேலைகள் தேடலாம் அல்லது தொடர்ந்து Phd வரை போக வேண்டுமா என கேட்கிறார். யாராவது இச்சகோதரருக்கு உதவுங்கள். தற்போது ஒரு வேலை இவர் படித்த field ல் தொடங்குவது தான் நல்லது போல் தோன்றுகிறது.என்னென்ன வேலைகளை இவர் கனடாவில் தேடலாம் என எனக்கு தெரியவில்லை.அதற்கு பின்னர் தான் மேலும் இவர் படிப்பை தொடரலாம் என நினைக்கிறேன். ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
படித்து சுவைத்தவை.......நன்றி வார்த்தை சித்திரங்கள் ( வலைத்தளம் ) திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' அப்படிங்கற தலைப்பைப் பார்த்த உடனே, ஆஹா! நமக்குத் தேவையானதாச்சேனு படிச்சேன். படிச்சதும் இதைக் கண்டிப்பா, ப்ளாக்ல எழுதணும்னு தோணுச்சு. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'..இனி படித்ததிலிருந்து... "அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ' பேகோ அண்டர்கில் ' என்பவர், ' திருமணமான பெண்கள் விரும்புவது என்ன? ' என்ற கேள்விக்கு, " பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர். இதற்கு வெறும் 25 விஷயங்களைச் செய்துவிட்டால் போதும் அ…
-
- 9 replies
- 1.4k views
-
-
முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதேவேளை யாரும் என்னை முட்டாளாக்கக் கூடாது என்று மகா மகா விழிப்புடன் இருப்போம். தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், உழைப்பாளிகள் தினம் என்று இந்த உலகின் மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கென்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் மற்றைய விசேட தினங்களில் தமக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்கின்ற மனிதர்களில் எத்தனை பேர் இந்த முட்டாள்கள் தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாக சொல்லிக் கொள்ள முன்வருவார்கள் என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தம்மை அடையாளப்படுத்திக் காட்டாமல் பிறரை மட்டும் முட்டாளாக அடையாளப்படுத்திக்…
-
- 0 replies
- 1.4k views
-