Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'டிக்டாக்' பிரபலங்களுக்கு என்னதான் பிரச்னை? - தொடர் சர்ச்சையின் உளவியல் பின்னணி ஆ.விஜயானந்த் படக்குறிப்பு, புதுக்கோட்டையைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள பலரும் அண்மைக்காலமாக சர்ச்சையில் சிக்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, `டிக்டாக்' செயலி மூலம் பிரபலமடைந்த சிலரின் செயல்பாடுகள் பொதுவெளியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவர்களது செயல்பாடுகளுக்கும் உளவியலுக்கும் தொடர்புள்ளதா? மதுரை கமிஷனருக்கு அதிர்ச்சி வீடியோ திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசித்து வரும் சூர்யா தேவி என்பவர், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், டிக்டாக் பிரபலங்கள் எ…

  2. சிறப்புக் கட்டுரை: சபரிமலையும் ஆண் மையவாதமும் ராஜன் குறை சபரிமலை வழிபாடு குறித்துச் சற்றே விரிவாக யோசித்தால்தான் பெண் விலக்கத்தின் கொடுமையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அறுபதுகளில் சூடுபிடித்த சபரிமலைக்கு மாலை போடும் கலாசாரம், எழுபதுகளில், எண்பதுகளில் பெருகி தொண்ணூறுகளில் மிகப் பரவலான சமூக இயக்கமாக மாறியது. முக்கியமாகத் தமிழகத்திலும், ஓரளவு ஆந்திராவிலும் பரவியது என்பது என் அனுமானம். கர்நாடகாவிலும் சிறிது நுழைந்திருக்கலாம். சபரிமலைக்குக் கூட்டாகப் பேருந்து அமர்த்திக்கொண்டு செல்வது, கோயிலுக்குச் சென்ற பிறகு ஊர் திரும்புகையில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா செல்வது, நாற்பத்தெட்டு நாள் (இது பல விதமாகச் சுருக்கப்படுவதும் உண்டு என நினைக்கிறேன்) விரத…

  3. நானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா?” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்? இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நா…

    • 0 replies
    • 1.2k views
  4. தறிகெட்டு அலையும் கார்கள் நடைமேடையில் ஏறும் நிகழ்வுகள், குழந்தை கடத்தல் சம்பவங்கள், அவசரத்திற்கு கழிவறையைக் கூட பயன்படுத்த முடியாத நிலை என இந்த மக்களின் ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத துயரங்கள் நிறைந்தவை. புயல், மழை வெள்ளம் என அனைத்திலும் இவர்களின் ஒரே துணை இந்த நடைமேடைதான். சென்னையின் நடைமேடைகளில் வாழும் இந்த மக்களைச் சந்தித்து வருவோமா!? வால்டாக்ஸ் சாலையோர நடைமேடையில் டி.வி ஓடிக்கொண்டிருக்க, உறங்குபவர்கள் போக மீதமுள்ளவர்கள் படம் பார்க்கிறார்கள். பகலில் பரபரப்பாக இருக்கும் என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆட்டோக்களை ஓரம் கட்டிவிட்டு களைப்புடன் தூங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் என்.எஸ்.சி. போஸ் சாலையை ஒட்டிய நடைமேடையில் கூட்டமாக ஏதோ விளையாடிக் கொ…

    • 0 replies
    • 1.2k views
  5. இது புதுசு: திருமணத்துக்கு முன் எதைப் பேசலாம்? யாழினி இன்று காலம் ஓரளவு மாறிவிட்டது. திருமணம் முடிந்த பிறகே கணவனை ஏறெடுத்துப் பார்க்கும் நிலை இன்று இல்லை. பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களில்கூட மணமக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் சில மாதங்களாவது நேரம் இருக்கிறது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறுவதற்குள் இருக்கும் இந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே ஒருவரையொருவர் எந்தளவுக்குப் புரிந்துகொள்கின்றனர் என்பது கேள்விக்குறிதான். அத்துடன், காதல் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களைவிட ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய சூழலில் அதிகரித…

  6. கவிஞர் வைரமுத்துவும் தமிழாண்ட ஆண்டாள் நாச்சியாரும் - சங்கே முழங்கு! பேரா.ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் கோதை ஆண்டாள் என்றும் தமிழை ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் நாச்சியார் ஒருவரே பெண் ஆழ்வார். "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை; தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.", என்று ஆறாம்-ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் பெருமான் பாடிய அகத்துறைத் தேவாரப்பாடலுக்கும் "உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்ற…

  7. கருத்தரிக்க பொருத்தமான காலத்தை அறிய உதவும் மென்பொருள்; பெண்களை கவர்ந்த தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றெடுக்க திட்டமிட்டு கேத்தி பியாமன்ட் முயற்சிகள் மேற்கொண்டபோது, கருத்தரிப்பதற்கு மிக சிறந்த காலம் எது என்பதை அறிய, சந்தையில் கிடைத்த பல கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்களை(செயலிகளை) நாடினார். படத்தின் காப்புரிமைKATHY BEAUMONT Image captionகேத்தி பியாமன்ட் அவருடைய கணவர் கிரிஸ் கருத்தரிப்பு காலக்கணிப்பை வழங்கும் மென்பொருளை பயன்படுத்த தீர்மானித்தனர். அவருடைய உடல் வெப்பத்தை ஒவ்வொரு நாளும் அளவிட்டு "ஃபெர்ட்டிலிட்டி ஆப்" என்ற மென்பொருளில் சேர்த்து வைத்தார். ஆனால். சீக்கிரமாகவ…

  8. எம்பரசிங் பாடீஸ் (Embarrassing Bodies) சானல் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடலில் ஏற்படும் பல்வேறு தர்மசங்கடமான உபாதைகளைப் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சைகள் பற்றியும் விளக்கும் சுவாரசியமான மருத்துவத் தொடர். தொடரின் இறுதியில், ´´ ... ஒருசிலரை ஒப்புநோக்கையில் நாம் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் தான் ´´ என எண்ணும் அளவிற்கு, சராசரி வாழ்வோடு போராடும் ஒருவரை தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமாக முன்னிருத்துவர். இந்த வார உதாரணம், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியைப் பற்றியது. அவர் தனது பருவ வயதை எட்டியிருந்த பொழுது அவரது உடலின் எதிர்ப்புசக்தியே அவரது இரு சிறுநீரகங்களையும் (கிட்னி) தாக்கி அழித்துவிட்டது. உடலில் சேரும் கழிவுகள் நச்சுக்களை உதிரத்தில் இருந்து ப…

    • 4 replies
    • 1.2k views
  9. ( எங்கோ படித்தது ) * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம் * நவீன காரில் நெடுஞ்ச…

  10. கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன…? 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். …

  11. ஆடி மாதம் மொய் விருந்து மாதம். சின்ன வயதில் மொய் விருந்துக்குச் சென்றது உண்டு. எனினும், அதன் சமகாலப் பொருத்தப்பாடு என்னவென்பதை அங்கு தங்கிப் பார்த்து எழுத வேண்டும் என்று ஓர் எண்ணம் உண்டு. ஒருவித கேலி தொனிக்க வெளிவரும் இது தொடர்பிலான ஊடகச் செய்திகள், இந்த எண்ணத்தைச் சமீபகாலமாகவே அதிகரித்துவந்தன. முன்திட்டம் ஏதும் இல்லாமல் ஆலங்குடி புறப்பட்டேன். புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை இடையேயுள்ள சின்ன ஊர் ஆலங்குடி. வண்டி புதுக்கோட்டையைத் தாண்டியதுமே சாலையோரங்களில் மொய் விருந்துப் பதாகைகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. எல்லாம் பத்துப் பதினைந்து அடி நீளப் பதாகைகள். கருணாநிதி கும்பிடு போட்டு அழைக்கிறார். ஜெயலலிதா இரு விரல் காட்டிச் சிரிக்கிறார். ராகுல், பிரியங்கா சூழ சோனியா குடும்பத்…

  12. குட்டை பாவாடையும் உகாண்டாவின் ஒழுக்க விதிகளும்! படத்தின் காப்புரிமைAFP/GETTY உகாண்டாவில் அரசு ஊழியர்கள் எந்தவிதமான உடையை அணியலாம் என்று கொண்டுவரப்பட்டுள்ள வரைமுறைகள், ஆடைகள், பெண்கள் உரிமை மற்றும் நெறி சார்ந்த கடுமையான விவாதத்தை பற்றவைத்துள்ளது. ஒழுங்காக ஆடை அணிவதற்கான புதிய வரைமுறைகளை இந்த புதிய உத்தரவு விளக்குகிறது. பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டவை : முழங்காலுக்கு மேலாக இருக்கும் பாவாடை அல்லது ஆடை அணிவது ஸ்லீவ்லெஸ், வெளிப்படையாக அல்லது ஊடுருவக்கூடிய மேலாடைகள் மார்பு, தொடை, முழங்கால் மற்றும் பின்புறம் தெரிவது போன்ற உடைகள் பிரகாசமாக சாயமேற்றப்பட்ட முடி …

  13. பயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட் சில நாட்களுக்கு முன் சிலி நாட்டிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரை சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. பெயர் வலேரியா. இவர் ஒரு நாடக கலைஞர். அண்மையில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று அங்கு பயில்கின்ற மாணவர்களையும் சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள இவர் இரு பெண் குழந்தைகளின் தாய்;. கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இந்தியாவில் வசித்து வருகின்றார். அவருடன் இப்போது கொழும்பில் வசித்து வருகின்றவரான அமெரிக்க பெண்ணான இவோன் என்பரும் என்னை சந்தித்தித்தார். இவோன் ஒரு எழுத்தாளர். தற்போதும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார். இவருக்கு பிடித்த துறை பொர…

  14. சிறப்புக் கட்டுரை: ஆண்மையும் இறையாண்மையும்! மின்னம்பலம் ராஜன் குறை ஆங்கிலத்தில் மாஸ்குலினிடி (Masculinity) என்ற சொல்லுக்கும் சாவரீன்டி (Sovereignty) என்ற சொல்லுக்கும் தன்னளவில் தொடர்பு இல்லை. ஆனால், தமிழில் ஆண்மை, இறையாண்மை இரண்டுமே ஆண்மை என்ற பதத்தால் இணைந்துள்ளது, சில முக்கியமான அர்த்தங்களை உருவாக்குகிறது எனலாம். ஆண்மை என்ற கற்பிதம் ஓர் ஆணின் வீரம், செயல்படும் திறன், துணிவு, பாலுறவில் வல்லமை, சூலுற வைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. பெண்ணிடம் கருப்பையும், சூல்கொள்ளத் தேவையான முட்டையை உருவாக்கும் ஆற்றலும் இருந்தாலும் ஆணிடமே விந்து இருப்பதால் ஆணே முக்கியமானவன் என்ற கலாச்சார கட்டுமானம் உருவாகிறது. அதனால்தான் அதிகாரத் தரகரான ஆடிட்டர் குருமூர்த்தி, பெண் த…

    • 2 replies
    • 1.2k views
  15. வணக்கம், கீழ இருக்கிற உதட்டு குவியல் – உதுதான் இப்ப முகநூலில பிரபலம் ஆனது. A typical Tamil teen age பொண்ணுங்களிண்ட படங்களை பார்த்தீங்கள் எண்டால் உந்த உதட்டு குவியல் அபிநயத்தை தாராளமாய் காணலாம். நான் ஒரு பிள்ளையை கேட்டன். அழகான முகத்தை ஏன் உப்பிடி செய்து படத்துக்கு pose குடுக்கவேணும், அப்பிடி செய்ய அரியண்டமாய் இருக்கிதே எண்டு. இல்லையாம், இப்பிடி உதட்டை குவிச்சு வச்சுக்கொண்டு pose குடுக்கிறதுதானாம் அழகாம். தாங்கள் exicitedஆய், funஆய், happyஆய் இருக்கிற நேரங்களில உந்த அபிநயம் தானாகவே இயற்கையாய் வந்திடுதாம், அந்த நேரங்களில தங்களை யாராச்சும் படம் எடுத்தால் என்ன செய்கிறதாம். சரி ஏதோ ரீன் ஏஜ் சின்னனுகள். அவைக்கு விருப்பமானமாதிரி எப்பிடியாவது முகத்தை வச்சு சந்தோச…

  16. அவமானத்துக்கே அஞ்சாத இந்த உலகில் மனிதாபிமானம்தான் முக்கியம் என்று ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.இந்த மனிதாபிமானத்தின் விலை ஒரு கோடி ரூபாய். அவருக்கு கோவிலே கட்டி கும்பாபிஷேகமே நடத்தலாம் என்று தோன்றுகிறதல்லவா? அதையும் செய்திருக்கிறார் நம்ம ஊர் மனிதநேய நடிகர் பார்த்திபன். கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிக்கிறார் அய்யப்பன். அடிப்படையில் கூலித்தொழிலாளியான இவர் கடனுக்கு ஐந்து லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பணம...் கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த சீட்டுகளை வியாபாரி சுரேஷிடமே ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டார். என்ன ஆச்சர்யம்? இதில் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி பிரைஸ் விழுந்தது. நினைத்தால் சீட்டை மாற்றியிருக்கலாம். அல்லது பதுக்கியிருக்கலாம். அல்லது பணம் தராத சீட்ட…

    • 3 replies
    • 1.2k views
  17. நீ அறிவாளியா? வா. மணிகண்டன் சென்ற வாரத்தில் ஓசூரில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தேனிக்காரர். என்னைவிட இருமடங்கு வயதாவது இருக்கும். ஓசூரில் ஒரு நிறுவனம் நடத்துகிறார். ஆரம்பத்தில் எந்தப் பின்னணியும் இல்லை. பம்பாயிலும், பெங்களூரிலும் சில பட்டறைகளில் வேலை பார்த்திருக்கிறார். தொழில் பழகிய பிறகு பத்தாயிரம் ரூபாயில் தனது நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்பொழுது அது சாம்ராஜ்யம். ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் நியுஸிலாந்திலும் இருக்கும் நிறுவனங்களோடெல்லாம் டை-அப். பறந்து கொண்டிருக்கிறார். பல கோடி ரூபாய் புரள்கிறது. இத்தகைய மனிதர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போது என்ன பேசுவது என்ற குழப்பம் வந்துவிடும். எல்லோரும் தங்களின் தொழில் பற்றி பேசுவதில் விருப்பம் காட்டமாட்டார்கள். …

  18. தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மற…

    • 0 replies
    • 1.2k views
  19. சிறப்புக் கட்டுரை: சைவம் புனித உணவா? மின்னம்பலம் அ.முத்துக்கிருஷ்ணன் இந்தியர்களின் பெரும்பான்மையானவர்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் என்கிற தொழில்முறை வதந்தி தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது உண்மை அல்ல என்பதையும் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஒரு பயணம் செய்தால் நகரங்களின் தெருக்களில் மனத்தை மயக்கும் உணவின் மனம் இந்த தேசத்தின் உணவுப் பழக்கத்தை சொல்லிவிடும். இந்தியா சைவ உணவு நாடா? இருப்பினும் நீங்கள் எல்லோருமே அசைவம் சாப்பிட்டாலும் இந்த தேசம் சைவ உணவுப்பழக்கம் என்கிற கட்டுக்கதையை நாங்கள் பரப்புவோம். ஏனெனில், நாங்கள் சைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், இந்த தேசத்தில் பெரும்பான்மையானவர்கள் எங்களைப் …

  20. அவர் போனபின்.............? இந்தப்பகுதிக்கு நான் குடிவந்து 15 வருடமாகிறது. அயல் அட்டைகளுடன் பெரிதாக பழக்கமில்லை. அதிகம் பேசாதவன் என்கின்ற பெயருண்டு. ஆனால் சின்ன வயசிலிருந்தே அயலுக்குள் எதுவும் செய்வதில்லை என்ற கொள்கையில் வளர்ந்ததால் இன்றுவரை பெயர் சேதமில்லாமல் ஓடுகிறது............. ஆனால் ஒரு வெள்ளைக்கிழவி மட்டும் நான் வேறு பாதையால் சென்றாலும் ஓடி வந்து வணக்கம் சொல்வார் என் பிள்ளைகள் பற்றி கேட்பார். அவர்களது படிப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி உயர்வாகப்பேசுவார்..... அதற்கு எனதும் மனைவியினதும் வளர்ப்பே காரணம் என்பார்.... இதனால் அந்த ஏரியாவை கணக்கு போட்டு வைத்திருக்கும் எனது துணைவியாரிடம் அவரைப்பற்றிக்கேட்டேன். அவர் சொன்னது மிக ஆச்சரியமாக…

  21. Started by கிருபன்,

    ஐ லவ் யூ ஐ லவ் யூ . இந்த ஆங்கில வாக்கியம் அறிமுகமான பின்புதான் 20-ம் நூற்றாண்டு தமிழர்கள் தங்கள் காதலை ‘வாயால்’ நேரிடையாக சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னால் எல்லாம் ஜாடை மாடை , கண்களால் சிக்னல் கொடுப்பது என ஓட்டிக்கொண்டிருந்து, எப்போதேனும் மறைவிடத்தில் வாய்ப்பு கிடைத்தால் கட்டியணைத்து முத்தமிடுவது அல்லது மேட்டரையே முடித்து விடுவது என ஓடிக்கொண்டு இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேட்டர் முடிவதற்கு முன் இருவரும் ஒரு வார்த்தை பேசியிருக்க மாட்டார்கள். ஐ லவ் யூ அறிமுகமானதும் உற்சாகமான நம் ஆட்கள், கொள்ளுத்தாத்தா எள்ளுத்தாத்தா முதற்கொண்டு தன் பரம்பரையில் எல்லோரும் சொல்ல முடியாமல் விட்ட காதலை எல்லாம் சேர்த்து வை…

  22. திருமணத்திற்கு முன்பு காதலித்துவிட்டு திருமணத்திற்கு பின் வேலை, படிப்பு என பிசியாகிவிடுவாதாலேயே பல்வேறு காதல் திருமணங்கள் தோற்றுப் போகின்றன. ஆயிரம் முறை ஐ லவ் யூ சொன்ன உதடுகள் வெறுப்பு உமிழும் போது மனதெல்லாம் ரணமாகிப் போகும். இதன் காரணமாகவே திருமண வாழ்க்கையே திசை மாறிப் போக வாய்ப்புள்ளது. எனவே திருமணத்திற்குப் பின்னரும் தம்பதியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மணவாழ்க்கையில் வசந்தம் வீச அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தை திருமணத்திற்குப் பின்னர் காணாமல் போய்விடக்கூடாது. வார்த்தையால் கூறுவதை விட உண்மையான அன்பை செயல்கள் மூலம் புரியவைக்க வேண்டும…

    • 10 replies
    • 1.2k views
  23. -சுப்புன்டயஸ் மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் தனது கணவன் செய்த கொடுமையை தாங்க முடியாத நிலையில் அவரது மனைவி அவரை அடித்துக் கொன்றுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரே தனது கணவனை இவ்வாறு அடித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் நிவித்திகல, வத்துப்பிட்டிவல எனுமிடத்தில் ஞாயிறு இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபரான குறித்த பெண்ணை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். 38 வயதான கெ.மஹிந்த அபேரத்ன என்பவரே தனது மனைவியால் அடித்துக் கொல்லப்பட்டவர் ஆவார். கொல்லப்பட்ட தினத்தில் சந்தேகநபரின் கணவன் அவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார் என்று அந்த பெண் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். பிள்ளைகள் முன்னிலையில் அவரது கொடுமையை தாங்க முடியாத நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.