Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கை அகதிகளை பாதுகாப்பாக அழைத்து வர விஜயகாந்த் வலியுறுத்தல் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வரும் தமிழர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அனுராதபுரம் மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கிய பஸ் வெடித்து சிதறியதில் 64 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனைக்குரியது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளனர். எனினும் இலங்கை அரசு அதை நம்பவில்லை. உண்மைக் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் இலங்கை அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான்தோன்றித்தனமாக த…

  2. ஒரு கறுப்பனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்றும்படி கோஷம் .. கேள்வி – பதில் வடிவில் அமெரிக்கத் தேர்தல் விபரம் பாராக் ஓபாமா குடும்பம் மாக்ஸ்டிக் பின்னியைச் சேர்ந்தவர்கள், இவர் தீவிரத்துக்கு ஆதரவு தெரிவிப்பார், அமெரிக்காவே விழித்தெழு, விழித்தெழு, இந்த மனிதனிடம் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்று என ஒரு பெண்மணி வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று கூச்சல் போடுகின்றார், இவர் ஒரு கையில் அமெரிக்காவின் தேசிய கொடியையும் மறு கையில் இஸ்ரேல் கொடியுடன் வெள்ளை மாளிகைக்கு முன்னர் வலம் வருகின்றார். வருகின்ற செவ்வாய்க்கிழமை வரும் இடைத்தேர்தலில் மக்களே விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள் எனவும் இவ் பெண்மணி கோஷம் போடுகின்றார். கேள்வி : இது என்ன மீண்டும் அமெரிக்காவில் தேர்தலா? பதில்…

  3. வீட்டுச் சிறையிலிருந்து மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகியி விடுதலை சனிக்கிழமை, நவம்பர் 13, 2010, 17:57 யாங்கூன்: கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறை, சிறைவாசம் என தொடர்ந்து அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங்சான் சூகியி இன்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டுச் சிறையிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியில் வந்து மக்களைப் பார்த்து வணங்கி கையசைத்தார் ஆங் சான். அவரைக் காண பல்லாயிரக்கானோர் அங்கு கூடியிருந்தனர். புன்னகை பூத்தபடி காணப்பட்ட ஆங்சான், தனது வீட்டுச் சுவரின் கேட் வரை வந்து மக்களைப் பார்த்தார். ஆங்சானை பார்த்த சந்தோஷத்தில் அங்கு கூடியிருந்த மக்கள் மியான்மர் தேசிய கீதத்தைப் பாடினர். பின்னர் …

  4. செஞ்சோலை பயிற்சி முகாம் அல்ல-ஹென்ரிக்சன்! , 18 ஆகஸ்ட் 2006 (11:27 ஐளுகூ) சிறிலங்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி 61 பள்ளி மாணவிகளை கொன்ற செஞ்சோலை, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் என்று சிறிலங்க அரசு கூறிய குற்றச்சாற்றை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ஃப் ஹென்ரிக்சன் மறுத்துள்ளார்! கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹென்ரிக்சன், செஞ்சோலை மீது இலங்கை போர் விமானங்கள் 12 குண்டுகளை வீசியுள்ளன என்றும், அதில் வெடிக்காத ஒன்றை கண்காணிப்புக் குழுவினர் பார்த்ததாகவும், அது சிறிலங்கா விமானப் படையினர் பயன்படுத்தும் குண்டுதான் என்று கூறியுள்ளார். சிறிலங்க அரசு கூறுவது போல, செஞ்சோலையில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் எதுவும்…

    • 0 replies
    • 876 views
  5. பப்புவா நியூ கினியாவில் 7.1 ரிச்டரில் நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா தீவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரபவுல் நகரில் இருந்து சுமார் 135 கிலோ மீற்றர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலும் சுமார் 7.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் தஞ…

  6. அக்கறை காட்டாத அக்கரை இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர்ச் சூழல் உருவாகியதையடுத்து ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 12, 2006 தொடங்கி ஜூலை 7, 2006 வரை 1363 குடும்பங்களைச் சேர்ந்த 4343 பேர் இராமேஸ்வரத்தை ஒட்டிய கடற்கரைகளில் வந்திறங்கியுள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள விவரங்களின் படி 31.01.2005 ஆம் திகதியில் இங்குள்ள 103 முகாம்களில் 14,031 குடும்பங்களைச் சேர்ந்த 52, 332 பேர் வாழ்கின்றனர். (பார்க்க: வெப்சைட்) புதிதாக வந்து சேர்ந்துள்ள அகதிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் சுமார் 58,000 அகதிகளுக்கும் குறையாமல் இன்று தமிழகம் முழுவதில் இருக்கிற முகாம்களில் உள்ளனர். தொடர்ந்து சராசரியாக நாளொன்றுக்கு 50 அகதிகளேனும் வந்து…

  7. இன்று மாலை 3.30 மணியளவில், கனடா ரொரன்டரோவில், உறை பனியினால் படர்ந்திருந்த, நீர்த்தேக்கம் ஒன்றின் மீது நடந்து சென்று கொண்டிருந்த இரு தமிழ் சிறுவர்கள், உறை பனி உடைந்ததால் உள்ளே விழுந்ததால் மரணமடைந்துள்ளனர். சம்பம் நடை பெற்றதை அடுத்து, ரொரன்ரோ அவசர சேவை நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் வந்து ஒருவரை மீட்டெடுத்தனர். பின்னர் தொடர்ந்தும் மற்றையவரை தேடி கிட்டத்தட்ட 2 மணி நேரத்தின் பின்னே கண்டு பிடித்ததாக, சம்பவத்தை நேரடிய அறிந்தவர்கள் கூறினர். இரு சிறுவர்களும், 15, 11 வயதை உடையவர்கள் என அறியப்படுகின்றது. ரொன்ரோ காவல் துறையினர் இதுவரை பெயர்களை வெளியிடாததால் அவற்றை எம்மால் வெளியிட முடியவில்லை. இவர்களின் மீட்பு பணியில் ஈடுபட்ட …

  8. யார் பெரியவர்?.. சாய்பாபாவா, சங்கராச்சாரியாரா... உ.பியில் சாதுக்கள் கூடி விவாதிக்கிறார்கள்! சம்பல், உ.பி: ஷீரடி சாய்பாபா மற்றும் துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஆகிய இருவரில் யார் பெரியவர்கள், யார் சரி என்பது குறித்து விவாதிக்க உ.பி. மாநிலம் சம்பல் பகுதியில் நவம்பர் மாதம் சாதுக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சாய்பாபா பக்தர்களுக்கும், சங்கராச்சாரியா பக்தர்களுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வலுத்து வருகிறது. 19வது நூற்றாண்டைச் சேர்ந்த ஷீரடி சாய்பாபாவை கடவுளாக வழிபடக் கூடாது, அவர் கடவுள் அல்ல என்று சங்கராச்சாரியார் கூறியதால் சாய் பக்தர்கள் கொந்தளிப்படைந்தனர். கோவில்களில் வழிபாடு கூடாது. இதுகுறித்து சங்கராச்சாரியார் ஒரு பேட்டியின்போது கூறுகையி…

  9. ல்லாயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆண்டர்சன் மரணம் அடைந்தார். அமெரிக்காவில், ஹூஸ்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை, மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இயங்கி வந்தது. கடந்த 1984–ம் ஆண்டு, டிசம்பர் 3–ந் தேதி, இந்த ஆலையில் மீத்தேல் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 787 பேர் பலியானதாக மத்திய பிரதேச மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறின. இந்த சம்பவம் நடந்து, 30 ஆண்டுகளாகியும் இன்னும் மக்கள் மனங்களில் இருந்து மறையவில்லை. …

  10. உயரப் பறந்த அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா! அலாஸ்காவில் உயரப் பறந்த அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை, அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த பொருளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று (வெள்ளிக்கிழமை) போர் விமானத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, ‘ஆளில்லாப் பொருள் ஒரு சிறிய காரின் அளவு மற்றும் சிவிலியன் விமானப் போக்குவரத்துக்கு நியாயமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக இல்லை தென் கரோலினா கடற்கரையில் கடந்த சனிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனை விட வெள்ளியன்று சுட்டு வீழ்த்தப்பட்ட ப…

  11. சுவிசில இப்ப செத்தாலும் கொண்டாட்டம் பிறந்தாலும் கொண்டாட்டம். அழிஞ்சு கொண்டிருந்தாலும் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு வருசமும் புதுவருடமன்டு ஒரு கழியாட்ட நிகழ்வு நடக்கும். பெயர் தான் வருசத்துக்கு வருசம் மாறுதே தவிற நிகழ்ச்சியும் அதை ஏற்பாடு செய்யிறவையும் மாறேலை. போன திங்கட்கிழமையும் இப்படி ஒன்டு நடந்த. இப்ப இங்க இருக்கிற "புலித்தோல் போர்த்தியவையள்" நிகழ்ச்சி நடத்தினா தான் அடிதடி கத்திக்குத்து எல்லாம் நடக்கும் என்டு தெரிஞ்சு நான் போகேலை. அங்க வந்திருந்த ஒருத்தர் ஏற்கனவே இந்த புலித்தோல் காறரோட பிரச்சனையாம். வேற நிகழ்ச்சி ஒன்டிலையும் அவர் பிரச்சனையாம். அப்ப இவையள் தாங்கள் அதிகமா இருக்கிற ஒரு நிகழ்ச்சியா பாத்து போன திங்கட்கிழமை அவருக்கு செம அடியாம் சனத்துக்கு முன்னால வச…

  12. சீனா: ராணுவத்துடன் பட்ஜெட் செலவினத்தை விவாதிக்கும் அரசு - அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் எச்சரிக்கை ஜார்ஜ் ரைட் பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES இந்த ஆண்டு ராணுவ செலவினம் ஏழு சதவீதமாக அதிகரிக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் "அதிகரிக்கும்" அச்சுறுத்தல்கள் குறித்தும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. சீனாவில் அதன் நாடாளுமன்றம் தேசிய மக்கள் காங்கிரஸ்(என்பிசி) என அழைக்கப்படுகிறது. அது ஆளும் அரசின் திட்டங்களுக்கு ஒப்…

  13. ஊபர், லிப்ட் நிறுவனங்களின் சாரதிகள் ஒப்பந்தக்காரர்களே: கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு Published By: SETHU 14 MAR, 2023 | 10:26 AM ஊபர், லிப்ட் மற்றும் ஏனையை செயலிகள் அடிப்படையிலான நிறுவனங்கள், தமது சாரதிகளை ஊழியர்களாக அல்லாமல், சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக நடத்தலாம் என அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளி;ததுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் ஊபர், லிப்ட் (Uber, Lyft) போன்ற நிறுவனங்கள் சாரதிகளை சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக நடத்துவதற்னு அனுமதி வழங்கும் திட்டத்துக்கு 2020 நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால் இந்நிறுவனங்கள் ஊழியர்களு…

  14. காண்பிக்கப்பட்ட இராணுவபலமும் காணாமல் போன அரசியல் புள்ளிகளும். [திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2007, 02:21 ஈழம்] [அ.அருணாசலம்] நேற்று காலிமுகத்திடலில் நடைபெற்ற சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களின் போது சிறீலங்கா அரச படைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படைபல விளம்பரங்களுக்கு மத்தியில் சிறீலங்காவின் அரச தலைவர் பங்குபற்றிய விழாவில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டது அரசு தனது நெருக்கடிகளை இராணுவ அணிவகுப்புக்குள் மறைத்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற விழாவானது அரசு தனது இராணுவ பலத்தை காட்டும் ஒரு நிகழ்ச்சியாகவே காணப்பட்டது. மேஜர் அலுவிகரே தலைமையில் கஜபா படைப்பிரிவை சே…

  15. பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர் பலி Published By: Sethu 31 Mar, 2023 | 10:15 AM பிலிப்பைன்ஸில் கப்பல் ஒன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'லேடி மேரி ஜோய் 3' எனும் இப்பயணிகள் கப்பல், மிண்டானோவா தீவிலுள்ளஸம்போங்கா நகரிலிருந்து சுலு மாகாணத்திலுள்ள ஜோலோ தீவை நோக்கி நேற்றுமுன்தினம் சென்கொண்டிருந்தது. அப்போது கப்பலில் தீ பரவியதால் பயணிகள் பலர் கடலில் குதித்தனர் என அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கரையோர காவல்படையினர் மற்றும் மீனவர்களால் 195 பயணிகளும் 35 ஊழியர்களுமாக 230 பேர் …

  16. Germany’s Balkan Coup By Gareth Fraser (May 2001) Unrest in Macedonia is the final piece of the puzzle. Here’s how German-led Europe conquered the Balkans in just a decade. “It is our inflexible purpose to destroy German militarism and Nazism and to ensure Germany will never again be able to disturb the peace of the world,” wrote Winston Churchill in a signed document with Franklin Roosevelt after World War ii (emphasis mine here and throughout). The past decade of Balkan destabilization sadly proves this noble three-pronged goal an abject failure. Why? First: German militarism is being encouraged by the involvement of German combat forces in the Balk…

  17. எஸ்பல்காம்ப்: ஜெர்மனியில் உள்ள எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டது. இதை அறிந்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக்களின் இந்த எதிர்ப்புக்கு கிறிஸ்தவர்களும் யூதர்களும் புத்த மதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, நவேதாவில் உள்ள ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்சின் பாஸ்டர் மறைதிரு. ரிச்சர்டு எல்.ஸ்மித் இது குறித்து கூறுகையில், சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம் பொறிக்கப்பட்டது தங்கள் மத உணர்வை பாதிப்பதாக உள்ளதென இந்துக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு நான் ஆதரவளிக்கிறேன். இவ்வாறு இந்து கடவுளின் பெயரையோ படத்தையோ சூதாட்டத்தில் பயன்படுத்துவது பொருத்தமற்ற செயல். எனவே, இந்த சூதாட்ட விடுதியின…

  18. மதமாற்றம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7–ந் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மதமாற்ற சம்பவம் பாராளுமன்றத்தில் தொடர்ந்து புயலை கிளப்பி வருகிறது. இதுதொடர்பாக டெல்லி மேல்–சபையில், விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை 5 நாட்களாக தொடர்ந்து முடங்கியது. இன்றும் மதமாற்றம் பிரச்சனை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன…

  19. பாக்கு நீரிணையில் இலங்கை கடற்படைக்கும் சோதனை பாகு நீரிணையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா கடற்படை கப்பல்களும், படகுகளும் இந்திய கடற்படையால் சோதனைக்கு உட்படுத்தப்படும் இதற்கான சகல அதிகாரங்களும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாம் என தமிழக முதல்வர் கருணாநிதி எனும் நபர் அறிவித்துள்ளாராம் என PTI செய்தி ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி இலங்கை சூரியன் வானொலி அறிவித்துள்ளது. ஆதாரம்: இலங்கை சூரியன் FM

  20. கடந்தமுறை மைனாரிட்டி அரசாக இருந்த தி.மு.க. இந்த முறை மைனாரிட்டி கட்சியாக மாறிவிட்டது. எதிர்க்கட்சி நாற்காலியையும் விஜயகாந்த் பறித்துக் கொண்டதால், அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க., சட்டமன்றத்தில் தன்னுடைய கட்சி அந்தஸ்தையும் இழந்து குழுவாக மட்டுமே செயல்பட முடியும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. 119 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவை விதிமுறையை மீறிய செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை விதி எண் 2-ன் படி, மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்களில் பத்து சதவிகிதம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு மட்டுமே சட்டசபையில் க…

  21. சென்னை: போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இலங்கைப் பிரச்சினையில் அவர் எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றினார். தமிழினப் பாதுகாவலர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது "உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது' என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார். சட்டசபையில் நேற்று இலங்கை மீது பொருளாதரத் தடை விதிக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஜெயலலிதா. பின்னர் அதன் மீது விவாதம் நடந்தது. அதைத் தொடர்நது முதல்வர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்தினார்.அப்போது இ…

    • 0 replies
    • 506 views
  22. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப்படைகளால் இந்திய பாதுகாப்பு அமைச்சிடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பிரான்ஸில் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய இந்திய பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதேபோல், இந்திய கப்பல் படைக்கு ஸ்கோபின் வகையைச் சேர்ந…

  23. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்குள் நுழைய ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கின்றனர். எல்லை நகரமான சுயோடாட் இடால்கோவிலிருந்து வடக்கு நோக்கி அந்த மக்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். எங்கும் வறுமை, வன்முறை முன்னதாக இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ, குவாட்டமாலா இடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக படகுகள் மூலம் தப்பித்து தங்கள் ஊர்வலத்தை முன்னெடுத்தனர். படத்தின் காப்புரிமை Reuters இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள். ஏன் அவர்கள் அமெரிக்காவுக்குள் செல்ல முயல்கிறார்கள்? வறுமை, வன்முறை காரணமாக, அவற்ற…

  24. இதுவும் ஒரு கண்டுபிடிப்பு!! இதுவும் ஒரு கண்டுபிடிப்பு!! அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானியொருவர் தனது பெண்ணுறுப்பிலிருந்து எடுக்கப்பட்ட பக்ரீறியா மூலம் யோகர்ட் தயாரித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். விஸ்கொன்சின் பல்லைக்கழகத்தில் டாக்டர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிசிலியா வெஸ்ட்புரூக் எனும் பெண்ணே இந்த விநோத ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வுக்காக மேற்படி யோகர்ட்டை அவர் உட்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மனித உடலுக்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறவும் பெண்ணுறுப்பு கொண்டுள்ள வலிமையை ஆராய்வதற்கும் தான் விரும்பியதாக சிசிலியா வெஸ்ட்புரூக் தெரிவித்துள்ளார். "பெண்களின் உடல் குறித்து அசௌகரியப்படும் கலாசாரத்தில், ஒருவர் தனது சொந்த உடல் குறித…

  25. வீரகேசரி இணையம் 7/27/2011 7:21:59 PM லிபியாவில் கடாபி அரசுக்கெதிரான கிளர்ச்சிக் குழுவை சட்டரீதியான அரசாங்கமாக தாம் ஏற்பதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எனவே தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள லிபிய அரசாங்கத்தின் சொத்துக்களை விடுவிக்கவுள்ளதாகவும் அவற்றின் மூலம் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளதாகவும் ஹோக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரித்தானியாவிலுள்ள லிபியாவின் தூதரக அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை லிபிய தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய கடாபி ஆதரவு ஊர்வலமொன்றில் லொக்கர் பீ விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி மொஹமட் அல் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.