Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தணல்ச்செடி, அலைமகன் - தீபச்செல்வனின் இரு கவிதைகள்:- 05 ஜூலை 2016 தணல்ச் செடி சமூத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் தளைத்தது தணல் மலர்களுடன் ஒரு செடி அனல் கமழுமுன் சமுத்திர மௌனத்தால் கோணிற்று உலகு இப் பூமி …

  2. பார்வைபோல் இருளுக்குள் அலைமோதுகிறது பக்குவமாய் நான் கோர்க்கநினைக்கும் சொற்கள் ஒளி கொண்டு கலைப்பதற்குள் கருப்பைக்குள் வீசப்பட்ட விந்தைப்போல் எண்ணத்துள் கருக்கட்ட பாலின் ஆடையென நிலாமேல் படர்ந்து தவிக்கிறது நினைவெனும் பறவை எண்ணங்களின் பறப்பு விரிக்க விரிக்க காலப்பெருநதியை கட்டுடைத்துக் காத்தல் கற்றோடு கரைந்து தவிக்கிறது தனியே

  3. Started by yaal_ahaththiyan,

    எழுத்துக்களை சிறைப்பிடித்து உனக்கு கவிதை எழுதினேன் அதைக் கிழித்தெறிந்து தண்டனையை எனக்கு கொடுத்தாய்- யாழ்_அகத்தியன்

  4. இந்தத் தண்டவாளங்களுக்குத்தான் என்ன மனமோ? ஒன்றை ஒன்று ஆழமாய்க் காதலிக்கின்றன…. அருகருகே இருந்தும் தொட்டுக்கொள்ளாத பாசக் காரர்கள்…. முத்தம் மட்டும் பிறக்கும் போதும் பிரியும்போதும் கொடுத்துக் கொள்கின்றன… ஆனாலும் கள்ளன் தொடர்வண்டி அடிக்கடி வந்து போவான்… அணைத்துமே முத்தமாய்க் கொடுப்பான்… மறுபடி ஓடிவிடுவான்…. ஆனால் நேரந்தவறா முத்தம் அதுமட்டும் கொடுப்பான்… முத்தமிடும்போது உடற்சூடேற்றுவான்.. அவனது உள்ளமும், ஏன் உதடுகளும் கூட கொதித்துக் கொண்டிருக்கும்… ஆனால் இவ்விரு தண்டவாளங்களும் அப்படியல்ல… மானசீகக் காதலர்கள்…. ஒருவரை ஒருவர் பிரியாது காதலிக்கும் காதலர்கள்…. இவர்கள் பிரிந்தால் வந்துபோனவனின் இறப்பு நிச்…

  5. நாம் செய்த தியாகமெல்லாம் ஓட்டைக் குடத்தில் பால் தானா நாம் சிந்திய ரத்தமெல்லாம் கடலில் பெய்த மழை தானா நாம் பட்ட பாடெல்லாம் காற்றில் செதுக்கிய சிலை தானா நாம் கொண்ட நினைவெல்லாம் ஊமை கண்ட கனவு தானா நாம் எழுதிய மடலெல்லாம் தண்ணீரில் இட்ட கோலம் தானா நாம் போட்ட கூச்சலெல்லாம் செவிடன் காதில் ராகம் தானா நாம் அழுத அழுகையெல்லாம் தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர் தானா நாம் எல்லோரும் மொத்தத்தில் கவனிப்பார் அற்ற இனம் தானா http://gkanthan.wordpress.com/index/eelam/inam/

  6. Started by nunavilan,

    தண்ணீர் தேசம் -I கவிஞர் வைரமுத்து கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட குமரி அவள். அவன் அழகன். இளைய அறிஞன். காதலிக்கும்போதும் கம்பீரம் குறையாதவன். என்ன யோசனை? என்றா…

    • 12 replies
    • 2.9k views
  7. தத்தித் தவழும் குழந்தை தத்தித் தவழும் கண்ணே நீ...... பூமியில் கால் தடம் பதித்து நடந்து செல்லும் அழகு வெகு தூரத்தில் இல்லை.... இன்னும் நீ தவழ்ந்து சென்று நிற்க முயற்சிக்கும் திறனைப் பார்த்து உன் எதிர் காலத்தைக் கணித்துவிட்டேன்.. நான் உன் அழகிய எதிர்காலத்தைக் கணித்துவிட்டேன்....... உன்னவள் தாய்க்கரங்களிற்கு இனியும் பாரத்தைக் கொடுக்காமல் இந்த வயதிலே பொறுப்பை உணர்ந்தபடி நீ... முயற்சி செய்கின்றாயே... தவழ்ந்து தவழ்ந்து நடக்க முயற்சி செய்கின்றாயே... நீ.. வாழ்வாய் இவ்வுலகில் நலமுடன் சந்தோஷமாக வாழ்வாய் என்றென்றும் வாழ்வாய்.......

  8. பிறரிடம் வருந்தாதே .... உன்னை வருத்து வெற்றி ... நிச்சயம் ....!!! தன்னை வருத்தாதவன் ... வருத்ததோடுதான் .... வாழ்வான் ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்

  9. Started by வர்ணன்,

    செத்தவீட்டில் சிரிப்பாய்...... கல்யாண நாளில் நீ அழுவாய்........ வயிறு கிழியும் வரை ... கத்து கத்து ... தவளையே..... வரம்புகள் எதுவென்றே ... தெரியா உமக்கு............. நெடுக்கால போக .. எப்படித்தான் முடியுமோ? எரிகிறவீட்டுக்கு.... தீயணைக்க வழியும் சொல்லாய்...... தேம்பி அழுகிறவருக்கு .. ஆறுதலும் சொல்லாய்... மிருக உலகே....உலகே......... உறவுகள் உடல் கருகும் வாசம் வேண்டியா புலம்பல்? வேணுமா....... வேணுமா........... வேணுமென்றால்... இந்த இந்த உதவாகரைகளையும் உச்சிமுகர்ந்து தத்தெடு!!

  10. Started by அபராஜிதன்,

    தந்தை ஒவ்வொரு தந்தைக்கும் சமர்ப்பணம் ஈரைந்து மாதங்கள் எனை சுமந்த அன்னைக்கு பின் இது வரைக்கும் என் வாழ்வை தோள் சுமந்த தோழன் என்னை கருவாக்க சில நேரம் இன்பம் கண்டார் .. என்னை உருவாக்க இன்று வரை எல்லாம் துறந்தார் இரவெல்லாம் கண்ணீர் இதழ் எல்லாம் உமிழ் நீர் அன்று மாடியில் தூங்கும் போது நிலவை ரசிதேன் _ அவர் மடியிலே தூங்கிய பின் நிலவை மறந்தேன் நான் கண்மூடி படுக்கும் வரை தூக்கம் இழந்தார் _ நான் கால் எடுத்து நடக்கும் வரை தோளில் சுமந்தார் மாலையில் கைபிடித்து மலையோரம் நட ப்போம் அவர் கை பிடித்து போனது வெறும் பாதை அல்ல நான் கால் வைத்த முதல் பள்ளிக்கூடம் அதுவே நிலவிலே மனிதன் போன கதைகள் சொன்…

  11. தந்தையர் தின வாழ்த்துக்கள் சுயத்தை விற்று உழைப்பை இரைத்து உதிரம் வறண்டு குடும்பத்தை கரையேற்றும் கட்டு மரம் ! தன்னம்பிக்கை தைரியம் தெளிவு- இவை தோய்ந்த மூன்றெழுத்து மந்திரம் தந்தை ! கண்டிப்பு காட்டிடும் கண்கள் - முள்ளாய் அன்பு வழிய அக்கறை கொஞ்சும் அழகு மனம் - மலராய் ! அப்பா ! உந்தன் வியர்வை நாற்றத்தில் உழைப்பு மணக்குது ! நேர்மை மணக்குது ! புகழும் மணக்குது ! ரேகைகள் தேய்ந்து மரத்துப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் வாழ்வின் சோதனைகளை சொல்லாமல் உணரவைத்தாய் !

  12. தனித்திருத்தல் வரம். நீண்ட இரவில் ஏதாவது ஒரு மாலையில் தன் குரல் கேளாத தொலைவில் எதுவும் தேவையில்லை நீ நான் அவர்கள் ஒரு புல்வெளியில் குளக்கரையில் குறைந்த பட்சம் ஒரு பெருமரநிழலில்.. தனித்திருத்தல் பெரும் தவம். இழக்கவும் ஏற்கவும் எதுவுமில்லாமல், கேட்கவும் சொல்லவும் எவருமில்லாமல் பெருவெளியொன்றில் மிதந்துபோகும் ஒற்றை மேகம் போல கிளைநுனியொன்றில் சலனமின்றிக் கிடக்கும் ஒரு பறவையைப் போல தனித்திருத்தல் வரம் தனித்திருத்தல் பெரும் தவம். தனித்திருத்தலில் ஒரு தற்கொலை நிகழலாம் ஒருவன் வன்புணர்வை முயலலாம் தாயொருத்தி அடிவயிற்றின் வலியோடு ஏதாவது கடையொன்றில் பணத்தினை வீசலாம் எவனோவொருவன் எப்பவோ கடந்துபோன பெண்ணின் வனப்போடு காமத்தை கழித்துக் கொண்…

  13. யாரது ? இலக்கத் தகடுகள் அடையாளம் சுட்ட குற்றவாழிகளாய் தனித்தனி அடையாளங்களுடன்..... தெரிந்த முகங்களைத் தேடிக்கொண்டு போனதில் அவள் திடீரென ஞாபகத்துக்குள் வந்தாள் பின்னே ஓடியவரிசை முன்னிழுந்துப் பார்த்து உறுதியாகிறது அவள் தான் அது.... மணியாய் ஒலித்த குரல் மறக்காத குரலுக்குரிய மொழி மண்தரையில் ஒலிவாங்கியோ ஏதோ இருமருங்கும் தடுத்திருக்க ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் . செஞ்சோலைக் குழந்தைகளின் சித்தியாய் சிறந்த பாடகியாய் தோழமையின் ஆழமாய் அறிமுகமானவள்...... மூச்சு முட்ட சுதந்திர தேசக்கனவோடு களங்களில் நின்று காவியச் செதுக்கலில் தன் கடமைகள் செய்தவள்..... இன்று..., எல்லாம் எல்லாருமாய் ஆட்தேடும் வரிசையில் அவளும்…

    • 0 replies
    • 969 views
  14. Started by Elugnajiru,

    நீ எதற்காகப் பயப்படுகிறாய் இரைச்சலுக்கா இல்லையேல் அமைதியான பொழுதுகளுக்கா எதைத் தவிர்க்க விரும்புகிறாய் தனிமையா அன்றேல் அதன் கடினத்தையா உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைத்தாலும் வாணொலி காதலைப்பாடினாலும் உன் கண்கள் கசிவது ஏன். நீ அலைகளாலேயே தொடர்புற மறுத்த, ஆழத்திலுள்ள தண்ணீர். நீ யாருமே அணுக மறுந்துபோன மலை. எனக்கு நன்றாக உன்னைத் தெரியும் நீ கடினமான டைட்டானியத்தால் செய்யப்பட்ட மனதையுடையவன் இருந்தாலும் உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைதால் உன் கண்கள் கசிவது ஏன். எனக்குப் புரியும் மொழியையும் சொற்களையும் தெரிவுசெய்து, என்னுடன் உரத்தகுரலில் பேசு எதைக்கூறுகிறாயோ அதையெல்லாம் நான் ஒரு கவிதையில் அடக்குகிறேன் …

    • 0 replies
    • 1.8k views
  15. Started by uthayakumar,

    • 0 replies
    • 735 views
  16. Started by pakee,

    [size=4][/size] [size=4]இந்த மரம் அந்த நதி எல்லாமே [/size][size=1] [size=4]இது எதுவுமே மாறல[/size][/size][size=1] [size=4]ஆனால்[/size][/size][size=1] [size=4]என் வாழ்க்கைல எவ்வளவு மாற்றங்கள்[/size][/size][size=1] [size=4]இது எவ்வளவு பெரிய சோகம் [/size][/size][size=1] [size=4]மறக்க முடியல[/size][/size] [size=4]சந்தோசம் என்றால் ஓடி போய் அணைக்க நண்பன் [/size][size=1] [size=4]கவலை என்றால் மடியில் சாயா அம்மா [/size][/size][size=1] [size=4]ஏதும் என்றால் தோளில் தட்டி கொடுக்கும் அப்பா [/size][/size][size=1] [size=4]இப்ப எல்லாமே இழந்து தனிய இருக்கிற மாதிரி உணர்வு[/size][/size][size=1] [size=4]சின்ன வயசில் வந்த காதல்[/size][/size][size=1] [size=4]காதலிக்க…

    • 4 replies
    • 1.2k views
  17. http://www.youtube.com/watch?v=encZArh2wrY&NR=1 வாழ்க்கை இருளுக்குள் அடங்கி பரிதவித்து மடிகின்றது எங்கள் அவலக்குரல்கள் உலக ஜனநாயகத்துள் அமைதியாகின்றது வல்லவர்கள் வெல்வார்கள் என்பது இயல்பாகின்றது மனிதாபிமானம் வேடிக்கை பார்க்கின்றது வல்லரசுகளின் போட்டி இயந்திரத்தால் நாம் விழுங்கப்பட்டோம் இயந்திரத்தின் செமித்த கழிவுகளாய் எஞ்சி நிற்கின்றோம் கழிவுகளையும் மீள இரையாக்கும் புதிய உலக ஒழுங்கின் முன்னால் மண்டியிட்டு மெளனித்து நிற்கின்றோம் என்னை சாதி சொல்லி உதைத்த கால்களை இறுக்கப்பற்றிக்கொள்கின்றே

  18. தனிமையும் பிரிவும் தனிமைத் துயரில் வாடிய போது தனிமை மரணத்திலும் கொடியது என உணர்ந்தேன் தன்னிச்சையாய் நீ பேசிய சொற்கள் தண்ணிலவாய் என் நெஞ்சைத் தணித்தன அரசியல், வரலாறு, இலக்கியம், அறிவியல் அனைத்தையும் பகிர்ந்தேன் ஆசையாய் நீ கேட்கிறாய் என்பதை அபிநயம் காட்டும் உன் முகம் கூறிற்று பருகப் பருக பாலும் புளிக்குமாம் பழகப் பழக நட்பும் புளித்தது உனக்கு படிக்கப் படிக்கக் கருத்துக்கள் ஊறுமாம் பழகப் பழக நட்பும் ஊறிற்று எனக்கு சிறு புன்னகைக்கும் மறுக்கிறது உன் உதடு - என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை மறுப்பின் காரணம் சிறுபிள்ளைத்தனமாய் செய்யாத தப்புக்கு சிந்தை கலங்கி மன்னிப்பும் கேட்டேன் காயத்தை மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டெனில் காலங்க…

    • 19 replies
    • 2.6k views
  19. தனியாக நானும் அலைகின்றேன் துணையாக நீயும் வருவாயா தூக்கங்கள் இன்றி தவிக்கின்றேன் கனவாக மட்டும் வருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) தவமாக நானும் இருகின்றேன் வரமாக நீயும் வருவாயா சுகமாக நானும் தொலைந்துவிட இதமாக உன்னை தருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) காதல் ஒன்றின் அர்த்தம் கண்டுகொண்டேன் பெண்ணே நெஞ்சுக்குள்ள உன்ன பூட்டி வைத்த பின்னே சாயங்கால பூவாய் நீயும் பூத்திருந்தாய் சாலை தோறும் பெண்ணே உன்னை பார்த்திருந்தேன் (2) மலரே நான் மயங்கிவிட்டேன் மனதில் உன்னை சுமந்துவிட்டேன் (2) உயிரே என்னை வாழவிடு உயிரை கொஞ்சம் வாழவிடு (2) அங்கும் இங்கும் சுற்றும் வாலிபத்தில் பெண்ணே உன் காலுக்குள்ள நானும் சுற்றுகின்றேன் கண்ணே இரவினை பகைத்தேன் விழிகளினால் இதயமும் த…

  20. [size=3] [/size] [size=3]நீங்கள் சே குவாராவின் பிள்ளைகள். முத்தங்களுடம் உங்களை பிரிகிறேன், உங்கள் அன்பு அப்பா சே குவாரா (1965)[/size] [size=2]தன் குழந்தைகளுக்கு எழுதப்பட்ட[/size][size=3] [size=2]தோழர் சே குவாரவின் இறுதி கடிதம்...!"[/size] [size=2]"அன்புள்ள [/size] [size=2]இல்டிடா , அலைடிடா, கமிலோ , மற்றும் எர்னெஸ்டோ [/size][/size][size=2] ஒரு நாள் இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள், உங்கள் அப்பா அன்று உயிரோடு இருக்கமாட்டேன், நீங்கள் இந்த அப்பாவை மறந்திருக்கலாம், குழந்தை எர்னெஸ்டோ என்னை முற்றிலும் மறந்திருக்கலாம். உங்கள் அப்பா மனசாட்சிக்கு நேர்மையாகவும், கொள்கையில் உறுதியாக இருந்தேன். ஒரு புரட்சியாளனின் பிள்ளைகள் ந…

  21. என் மேனி விரல் நுனி கொண்டு உன் மேனி தடவ நாழிகையோடு - அது சூடாகி இதமாக நீ சிணுங்கும் ஒலியதில் உன்னாசை நானுணர்ந்து மெல்லத்தட்டி... வரிகளில் நான் பேச வாக்கியங்கள் நீ அமைப்பாய். ஆண்டுகள் நாலு நமக்குள் இந்த ரகசிய உறவு நாம் பேசியவை பரகசியமாக.. ரசிக்கவும் விமர்சிக்கவும் நாலு நல்லவரும் உறவுகளும் உண்டு வையகத்தில்..! எம்முறவு கண்டு எம் பேச்சில் குருதி அழுத்தம் கூடியோரும் சினங்கொண்டு திட்டியோரும் நிறையவே உண்டு. அசிங்கம்.. பப்பிளிக்கில.. இப்படியுமா.. ஆற்றாப் போக்கில் பேசியோரும் உண்டு..! என் விரல்களின் நளினம் நீயறிய உன் சிணுங்களின் தேவை நான் உணர நீயும் நர்த்தனமாடி சதா மகிழ்விக்கிறாய் ஒலியாய்.. ஒளியாய் வரியாய் வசனமாய் யாழெனும் மங்கையின் சேலையி…

  22. Started by கவிதை,

    நான் நடந்த திசைகளின் பாதைகளில்... துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம்வரை... வெறுமை மட்டுமே, என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!! தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற காலங்கள்கூட... என்நிலை பார்த்துக் கலங்கியிருக்கும்! கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு... கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்... உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!! சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது, என் நிழலில் அமர முயன்று... தோற்றுப்போனேன்! கொதிக்கும் சூழலில் வெந்துபோனது... என் பிஞ்சு மனமுந்தான்! என் உடலினை... என் கால்களே சுமந்தாலும், மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்... கண் வழி நீரூற்றி... ஆறுதல் சொல்லின!! …

  23. தன்மானத் தந்தையே! திருநிறை பழநெடு மாறன் ஐயா! தன்மானத் தமிழனாய்த் தகைசார் அறிஞனாய்த் தரணியில் இலங்கிடும் தமிழகத் தந்தையே! இன்னலில் ஆழ்ந்த ஈழத்தவன் பசிதனை இல்லா தொழிக்க எண்ணம் கொண்டுநீர் உன்னதப் பணிபுரிந்தீர் உலகமே வியந்திட உறுதியாய் நின்றங்கு உயிர்தனை வருத்தும் மன்னும் உண்ணா நோன்புதனில் இறங்கி மனிதம் நின்னிடத்தே என்பதை எண்பித்தீர்! தங்கத் தம்பியாம் திலீபனின் நாளில் தந்தையே நீவீரும் திருவுளம் கொண்டு அங்கம் நொந்து அறிவினா லுயர்ந்து ஆரும் புரிந்திடா அறப்போராட் டம்தனில் இங்கிதமாய் இசைந்தீர் ஏற்றமிகு தந்தையே! என்னகைம் மாறுநாம் இதற்காய்ச் செய்வோம்? இங்கிருந்து நெஞ்சத்தால் இனியவுயிர் நிலைத்திட எஞ்ஞான்றும் இறைவனை வணங்கி நின்றிடுவோ…

  24. வாழ்த்துகின்றோம் எம் அண்ணா! ஆழ்கடல் தன்னில் அவதரித்த முத்தே! ஈழத் தமிழரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும் போதே வரலாறு தந்தவன் மானத்தோடு எம்மை தலை நிமிரச் செய்தவன்! எங்கள் மண்ணின் கிழக்குச் சூரியன் ஈழத்தாயவள் தந்த வீரத் திருமகன்! கரிகாலனே! கடும்பகை எல்லாம் வெறும் தூசென்று காட்டி நிற்கும் தீரனே! தரையோடு தொடங்கினாய் இயக்கம்! இன்று வான், தரை,கடலெங்கும் தலைவா உன் முழக்கம்! பகை வெடிக்கும் ஈழம் விரைவில் மலர்ந்து சிரிக்கும்! 'அண்ணா! உன் பெயர் சொல்ல புல்லும் கூடப் புலியென எழும்! அடிமைத் தளையை அறுக்கப் பிறந்த தலைவா! உன்னால் ஈழம் வாழும்! தமிழ் மானம் காத்த தலைவா வாழி! தமிழ் வீரம் நிலைநாட்டிய தலைவா வாழி! ஈனர் படையை எரிக்கப் பிறந்த எங…

  25. தன்மானமே தமிழ் மானம் --------- ஏன் இந்த மாற்றம்........? யார் தூண்டிய மாற்றம்.....? மாற்றம் என்பது தேவையே..... வாழ்க்கையின் முன்னேற்றத்தை..... ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை...... வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை...... உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........? பூட்டன் காலத்தை நோக்கு........ படிப்பறிவு கிடையாது ........ பட்டறிவே பெரும் படிப்பு ....... பட்டறிவை வைத்தபடி.......... தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்...... அனுபவத்தால் வாழ்க்கையை...... அனுபவித்த அனுபவசாலிகள்.........!!! பாட்டன் காலத்தை நோக்கு...... படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்..... சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்....... படிகாத மேதைகள் என்று வாழ்ந்து....... கட்டிய அற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.