கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தலையின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தளபதியின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் உலக நாயகனின் படம் வந்தது ஆனால் எதிர் பார்த்தது கிடைக்கவில்லை எதிர் பார்த்திருந்தேன் சூப்பர் ஸ்ராரை அவர் வருவாரா ? வரமாட்டாரா தெரியாது ஆனால் எதிர் பார்த்த ஒன்று வந்தது ஜ.நா சபை அறிக்கை வழைமைபோல். கண்டிக்கிறோம். எதிர்பார்ப்புக்கள் தொடரும்.....
-
- 8 replies
- 1.1k views
-
-
கவிஞர் கலாப்ரியா பதில்கள்… தமிழ் ஹைக்கூ கவிதைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? – தூய்ஷன், மலேசியா. முதலில் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஹைகுவின் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழில் பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’ என்று எழுதுகிறார். ஹைகு அல்லது ஹொக்கு முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப்பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்துவைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று கனடாவில் குடும்ப தினம் நன்றி தர்சினி.(CMR)
-
- 1 reply
- 1.1k views
-
-
அவர்கள் மன்னம்பேரியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை உயிருடன் புதைத்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது. பின்னர் அவர்கள் ககவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல. நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் நுரிவத்தவில் வாழவில்லை. பின்னர் அவர்கள் வடக்கின் மகளீரிடம் வந்தார்கள் நான் பேசவில்லை கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா இவர்கள் என் சகோதரிகளல்ல. பின்னர் அவர்கள் வேறு தோல் நிறம்கொண்ட பெண்ணிடம் வந்தார்கள் கூட்டாய் எட்டுப்பேர் விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் அவள் வெளிநாட்டவள் என்பதால். அந்தக கோரக் கும…
-
- 0 replies
- 1.1k views
-
-
கண்ணீர் நொடிகள் - என்.சுரேஷ். சென்னை கல்யாணி கவரிங் கல்யாணி கவரிங் என்ற விளம்பரம் கேட்டு கவரிங் நகை வாங்கச் செல்லும் ஏழை கல்யாணி நிஜ நகைகளுக்காக ஏங்கிக் கலங்கும் நொடிகள்! விதவையாகிப்போன அந்த பூக்காரி அக்காவின் நினைவுகளும் கனவுகளும் மனதை குத்தும் நொடிகள்! காதலனும் காதலியும் பிரிந்த பின் சந்திக்க அவர்தம் கணவனுக்கும் மனைவிக்கும் முன் ஒருவருக்கொருவர் அறியாதவர்கள் போல் நடித்துத் துடித்த தவிப்பின் நொடிகள்! சொந்த இனத்தின் அழிவக் கண்டும் சட்டத்தால் வாய்ப்பூட்டிடப்பட்டும் அமைதியின் வேடத்தில் தவமிருக்கும் வீரத்தின் எழுச்சி எரிமலை கண்ணீரால் துடிக்கும் நொடிகள்! பட்டியலிட்டால் அடங்கா எத்தனை எத்தனை கண்ணீர…
-
- 4 replies
- 1.1k views
-
-
என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம் மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம் மரணித்த மங்கையர் மீது சத்தியம் வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம் பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம் மானம் காத்த மறவர் மீது சத்தியம் சகோதரி சகொதரன் மீது சத்தியம் என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அதுவும் தானைத் தலைவன் காலத்திலே என் இனமே என் சனமே பூக்கள் பூத்துக் குலுங்கும் தேனீக்கள் இசை பாடும் நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து முற்றத்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
கரைகளே... நெருப்பாய் இருந்தால் நதிக்கொன்றும் நஷ்டம் இல்லை... நண்பர் உனக்கு நம்பிக்கை இருந்தால் தடைகளொன்றும் கஷ்டம் இல்லை B)
-
- 3 replies
- 1.1k views
-
-
என் வீடும் அயலும் என் நினைவில் வந்து போனது பக்கத்து வீட்டு பாட்டியும் பாட்டனும் பொக்குவாய் கொண்டு சிரிக்கும் சிரிப்பும் பாக்கு வெற்றிலை இடிக்கும் சத்தமும் பழைய நினைவாய் வந்து போனது எதிர் வீட்டு அக்காள் எமக்குத் தெரியாமல் எம்வீட்டுப் பூக்களை பறித்து வந்ததும் எதுவும் கூறாமல் கொடுப்புள் சிரித்து எதிரி வேறென எமக்கே சொன்னதும் இன்று நினைப்பினும் சிரிப்பு வருகுது எங்கள் துலாவில் ஏக்கங்கள் அற்று எவ்வளவு தண்ணியும் அள்ள முடித்ததும் வாக்கால் வழிந்தோட கால்கள் நனைத்து வரம்புடைந்து வளவு நனைந்ததும் வீட்டுக்காரரின் வசைகள் கடந்து வசந்தமாய் சிரித்ததும் நினைவில் நிக்குது கிட்டிப் புள்ளும் கிளித்தட்டும் கீரைக் கறியும் கிழங்குகளும் பக்கத்து வீட்டில் பறித்த மாங்காய் பருவம் …
-
- 12 replies
- 1.1k views
-
-
வெட்டடா வெட்டடா பகைவனே வெட்டடா பதுங்கிட நீயின்று பங்கரை வெட்டடா... நின்மதி தொலைத்து நித்திரை முழியடா- உன் கோட்டைகள் மீதிலே குண்டுகள் விழுமடா... ஆகயம் அதனையே அண்ணாந்து பாரடா புலியது பறவைகள் புயலென வருமடா... எண்ணெய் குதங்கள் எங்கினும் எரியுமே கடற் படை தளங்களும் கடுகதி சரியுமே... சட்டங்கள் போட்டா சாகவே அடித்தாய் வட்டீயும் முதலுமாய் வலிந்தே தருகிறோம்.... எத்தனை இன்னலை எமக்கது அழித்தாய் இந்தோ தருகிறோம் இன்னலை ஏரடா.... வல்ல அரசென்று வாயது அடித்தவா பிடரியில் கால் படா எங்கட ஓடினாய்...??? - வன்னி மைந்தன்
-
- 1 reply
- 1.1k views
-
-
சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கவிதைக்குள் செல்லுங்கள். ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை 'சமர்' தானம் செய்யப்படுவது தான் 'சமாதானம்' என்று! சடைத்த பனைகளின் தலைகோதிச் சிக்கெடுத்து விரல் இரத்தம் கசியப் புன்னகைத்த காற்றைப் போல நாங்களும்...! சிக்கெடுக்கும் முயற்சியில் வெளியாரும்...! சிங்காரக் கொண்டைக்காரி, தலை அவிழ்த்து உதறி ஈரோடு பேன் விரட்டு மட்டும் விடிவில்லை! காரோடு, கண்ணாடி மாளிகை கண்ணசைப்பில் காரியமாற்ற 'குண்டர்களின்' தோழமை! வேரோடு அறுப்பதாகப் பேச்சு! வெற்றுத் தோட்டா நமக்கா கூற்று? யாரோடு நமக்கென்ன பேச்சு...? தம்பி, போரா…
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார் சோக்கான கதை எல்லாம் சொன்னாராம் சேர்ந்து பல பேருடன் நின்று செல்பியும் எடுத்தாராம் நல்லவன் போல நடிப்பார் நாம் நினைப்பது போல அவர் இருக்கார் அது தருவன் இது தருவன் என்றாராம் அவர் அருகோட நின்று தலை ஆட்டிப் பொம்மைகள் தாளங்கள் போட்டாராம் அவர் சொன்னதை செய்வார் என்றும் சொன்னாராம் போன சுதந்திரத்துக்கு முன் ஏதோ தருவன் என்றாராம் இந்த சுதந்திரத்தோட என்னதான் தருவாராம் எல்லாமே மறந்தாராம் எதுகுமே பேசாராம் நம்புங்கள் ரணிலை நல்லது நடக்கும் என்றாராம் சேர்ந்து தாளம் போடும் சில சில்லறை மனிதர் தந்திரக்கார ரணிலார் தான் ஒரு சமாதான காரன் போல் காட்டியும் நடிப்பார் …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஓஓ..... என் பழையவளே வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா?? இது மீள் பிரசுரம் என்னுடைய பழைய வலைப்பக்கத்தை நோண்டிபொழுது அகப்பட்டது
-
- 14 replies
- 1.1k views
-
-
மனசு போல வாழலாம் கலகலன்னு சிரிக்கலாம் காலமெல்லாம் சிறக்கலாம் நிலவிலேறிக் குதிக்கலாம் நிம்மதியாய் இருக்கலாம் வழ வழன்னு கதைக்கலாம் வண்டு போலப் பறக்கலாம் மலையிலேறி இறங்கலாம் மழையிலேயும் நனையலாம் மழலையாகப் பேசலாம் மரங்கள் மீது ஏறலாம் பனித்துளிகள் சேர்க்கலாம் பறவையோடு பாடலாம் கலைகளிலே திளைக்கலாம் தென்றலோடு நடக்கலாம் மலர்களிலே உறங்கலாம் மனசு போல வாழலாம் http://www.lankasripoems.com/?conp=poem&pidp=214612
-
- 1 reply
- 1.1k views
-
-
நீர் தேங்கி நீண்டு கிடக்கிறது வயல்வெளி, தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில் தூக்கணாங்குருவிக்கூடுகள் நிறைந்துபோய் கிடக்கின்றன சிதைந்த வயல்வரம்புகளில் வெண்கொக்குகளும் காகங்களும் இறகுகோதி உலாத்துகின்றன, கலப்பைகீறாத எங்கள் நிலமதில் அல்லியும் நீர்முள்ளியும். மண்டிக்கிடக்கிறது, உடலங்களை உண்ட மதமதப்பில். நெல்லுத்தூத்தல்களும் அறுவடைக்கால கூச்சல்களும் இல்லாத வெளிபார்த்து சலித்துக்கடக்கிறது பருவக்காற்று, நார்கடகங்களும் சாக்குகளும் மக்கி மண்னேறிப்போகிறது வண்டில் சில்லுகளில் வலைபின்னி சிலந்தி கிடக்கிறது. அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில் கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய், விலைகென்று வளர்த்த கிடாயும் விழியுயர்த்தி மிரள்கிறது. …
-
- 18 replies
- 1.1k views
-
-
போலி முகங்கள் பொய் என்று தெரிந்தும் சந்தர்ப்பத்தில் சத்தியம் செய்து அகமொன்று வைத்துப் புறமொன்று பேசி வேசத்தில் வாழும் மனிதர்கள் பலர் இன்று... உள்ளத்தில் வஞ்சகம் மறைந்திருக்கும் முகத்திலே புன்னகை மலர்ந்திருக்கும் மானிடர்க்கு பல வேடங்கள்... போலி முகங்களே இன்று பல...
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
காந்தீயம் (அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்காக.) இமயத்தின் முன் ஓர் சிறுவனாய் அண்ணாந்து நிற்கிறேன் பிரமாண்டம்! அது ஒன்றுதான் புரிகின்றது. கலப்பு, பிறப்பு, இளமை, ஒழுக்கம், கல்வி, குடும்பம், வாழ்வில் எளிமை சமூகம், பண்பு, சமயம். சேவை, தர்மம், சத்தியம,பக்தி அகிம்சை அரசியல், தொழிலில் அறம் எனப் பலவாய் பாறைகள் அடுக்கிப் பார்க்கவே எட்டா உச்சமாய்த் திகழும் தியாகப் பாறை எட்டிப் பிடிக்க முடியாத் தெலைவில் எங்கோ முடியாய் இருக்க நானோ பிரமாண்டத்தின் வைர மலைகளை யானையைப் பார்த்த குருடனைப்போல ஒன்றொன்றாகத் தொட்டுத்தடவி... ... கூழாங்கற்களாய் உணர்ந்து மயங்கும் முட்டாள்தனத்தில் மூழ்க முடியுமா? ஏனோ எனக்கு எதுவும் புரியவி;லை கலப்புப் பற்றி காந்தீயம் சொல்கிறது: இயற்கை உனக்குக் காமக் கிளர…
-
- 4 replies
- 1.1k views
-
-
1957ல் களபலியான திருமலை நடராசனில் இருந்து விடுதலைகாக உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் என் அஞ்சலிகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1957ல் ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்துத் தியாகிகளுக்கும் அஞ்சலி மரியாதை செய்யவேண்டும் என்கிற கருத்தை கால்நூற்றாண்டுகளுக்கும் முன்னிருந்தே நான் கேட்டு வருகிறேன். வன்னியிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ”திருமலை தியாகராசன் முதல் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் கழபலியான அனைத்து அமைப்பு தியாகிகளுக்கும் அஞ்சலி” செலுத்தியே ஆரம்பித்திருக்கிறேன். எங்கும் எனக்கு எதிர்க்குரல் எழுந்ததில்லை. . இந்த கருத்தியலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பலர் வாயிலாக நான் கேட்டிருக்கிறே…
-
- 0 replies
- 1.1k views
-
-
எங்களுக்கும் காதலிக்கு கவிதை எழுத வருமல்ல அமேரிக்கன் ஜீண்ஸ் போட்டு பொட்டு வைக்காமல் கியூட் பிகர் போல பூனை நடையில் நீ வரவேண்டும் அந்த அழகை அடுத்த தெரு பிகரும் பெற வேண்டும் பசுபிக் கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம் அங்கு செய்யாத செயல் எல்லாம் செய்வோம் சென்ட் பூசுவோம் கிங்கிலிஸ் பேசுவோம் ஜாலியா யோக்கிங் போவோம் நாம் ஜாலியா ஆடுவோம்
-
- 15 replies
- 1.1k views
-
-
காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே... பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான்…
-
- 4 replies
- 1.1k views
-
-
வ.ஐ.ச.ஜெயபாலன் பாடல்கள் நா.கண்ணன் [தமிழ் மரபு அறக்கட்டளை Tamil Heritage Foundation <http://www.tamilheritage.org/> தங்கள் மினிதழில் வெளியிட்ட விமர்சனமும் பேட்டியும் இணைத்துள்ளேன்.] ஈழத்து முன்னணிக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எப்போதும் அறிமுகமானவையே. ஆயினும் நோர்வே நாட்டிற்குப் புலம் பெயர்ந்த பின் இக்கவிஞர் தன் கவிதைகளை, தனது கவிதா விசிறியும், வாழ்க்கைத் துணைவியும், இனிய பாடகியுமான வாசுகியுடன் சேர்ந்து இசைப் பாடல்களாக உருவாக்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் 'மெல்லிசை மன்னன்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் தொழில் புரிந்த கலைஞர் உ.தியாகராஜன் அவர்கள் ஜெயபாலன் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்கள். "பாலை" எனும் இவ்விசைத்தகடு வாசுகி ஜெயபாலனும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
-
வேருக்கு வீறுதரும் விழுதுகளே! விழித்தெழுக!! தேசத்தின் திசையெங்கும் தீ மூண்டு எரிகிறதே! மனிதத்தின் உயிர்ப்பெல்லாம் மண்மூடிக் கிடக்கிறதே! இனவாதம் தினவெடுத்து இரத்தம் கேட்டு அலைகிறதே! ஆதிக்க அசுர பலம் ஆன்ம…..பலம் ஒடுக்க விளைகிறதே! வேருக்கு வீறுதர விழுதுகளே! விழித்தெழுக!! கந்தகம் குதறும் கார்காலப் பொழுதினிலே… காரணம் பல கூறி கண் வளர்தல் ஆகாது. ஊர், உறவு கூர் முனையில் உருக்குலையும் நிலை போதும், உழு ஒடுக்கும் உலகமுகம் உடைத்தெறிந்து வாரும்! வேட்டுக்கள் மாள்வளித்தால் விதியென்று நோவது ஏன்? வீணே வெளிப்புலத்தில் விலகி நின்று வாடுவதேன்? நேர் கொண்டு போர் நின்று நிமிர்வெய்தும் நேரமிது! கார்மேகம் கலைத்தெறியக் கரம் கொட…
-
- 4 replies
- 1.1k views
-
-
நிலா முஸ்லீம் பெண்ணா? முகில் பர்தாவுக்குள் அடிக்கடி முகம் மறைக்கிறதே!
-
- 2 replies
- 1.1k views
-
-
எங்கு போய் சொல்ல....??? கண்டம் விட்டு கண்டம் வந்து கண்டதெல்லாம் கற்றோமென்று வந்தொரு தமிழ் கூட்டம் வஞ்சனைகள் செய்கிறது...... நெஞ்சமதில் ஏறி வந்து நெஞ்சதிர குத்துறது... முந்தி வந்த மூத்தறிஞர் முத்தமிழை நாமறிவோம்... ஏடுகளில் ஏறிவந்த எம்தனையே நாடறியும்... பா...வதுவை பாடிநிற்கும் பாவலர் கூட்டமென்று... காகம் போல் வந்திங்கு கத்தியடித்து கரைகிறது...... பாரெங்கும் பா முழங்கி தங்க தகடுகளை தமதாக்கி வந்தோமென்று தம்பட்டமடிக்கின்றது.... கடனுக்கு மூளை வேண்டி கவிதைகள் புனைந்தாரென்று கதைகள் வேறு விடுகிறது..... பகட்டுக்காய் வந்தொரு... பாரட்டை சொல்லிவிட்டு கரியார் போல் வந்…
-
- 5 replies
- 1.1k views
-