கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
-
- 34 replies
- 2.7k views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
மனிதத்தை காக்க உங்களால் முடியலயோ....??? சோற்றுக்கு வழியின்றி திண்ணையிலே குந்தும் பிள்ளையை இன்று நான் எண்ணயிலே..... ஜயோ என் உடல் கூட இயங்கலயே என்னால் உதவிட இன்று முடியலயே.... பசியாலே அப்பிள்ளை அழுகையிலே பார்த்து நிக்க என்னால் முடியலயே.... கண்ணீரை கொட்டியவர் அழுகையிலே அதை கண்ஊhடு பார்க்கவே முடியலயே.... வறுமையவரை வாட்டையிலே உதவிட யாரும் வரவில்லையே.... சோர்ந்து அவரும் வீழ்கையிலே அவர் சோர்வுயகற்ற யாரும் முணையலயே.... மனிதத்தை உரைக்கின்ற மனிதர்களே இந்த மனிதரை காக்க உங்களால் முடியலயோ....??? - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 975 views
-
-
தொலைவே இல்லாத பின்னிரவொன்றில், விடிகாலைப் பொழுதினைத் தொலைத்துவிட்டு, நிரந்தரமாகிப்போன கும்மிருட்டில், சத்தமே இல்லாமல், சந்தம் பாடுகின்ற குயில்களின் குரல்வளைகளை அறுத்தெறிந்து, கோட்டான்களைக் கூப்பிடுவோம் வாருங்கள்! முகவரி இல்லாமலே பூபாளம் பாட! 10/dec2014
-
- 2 replies
- 705 views
-
-
அழுகை நிறுத்தியெழு.... ஈழத் தமிழா ஈழத் தமிழா- நீ இன்னும் அழுவதா...? இந்த இன்னல் தாங்கி தாங்கி இதயமமுடைவதா....?? அன்னை மண்ணை இழந்து நீயும் அகதியாவதா..?- அந்த அன்னியத்து சிங்களங்கள் ஆட்டம் இடுவதா...? இத்தனை நாள் நீயிருந்தா அடிமை உடையடா- அந்த சிங்களத்து கொட்டமதை நீயும் அடையடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை அழியடா- அந்த அன்னியத்து சிங்களத்தை ஓட கலையடா... பொங்கி நீயம் புலியணியில் புலியாய் இணையடா- அந்த போர்களமே ஏறி நீயும் பகையை விரட்டடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை தொலையடா அன்னை தமிழ் வீரமதை உலகில் காட்டடா....!
-
- 6 replies
- 1.3k views
-
-
எம் தேசியத்தை இறுதிவரை இழக்கப்போவதில்லை சுனாமிப் பேரலையில் அம்மாவை இழந்தேன் சுற்றிவளைப்பில் அப்பாவையும் இழந்தேன் கண்ணி வெடியில் அண்ணா காலை இழந்தான் கடத்தலிலே அக்கா கற்பை இழந்தாள் செல்வீச்சில் சொந்தங்களை இழந்தேன் குண்டு வீச்சில் குடியிருப்புக்களை இழந்தேன் இப்போது எஞ்சியிருப்பது என்னுயிர்தான் எதை இழந்தபோதிலும் எம்தேசியத்தை நாம் இறுதிவரை இழக்கப்போவில்லை . கனடாவில் இருந்து வெளிவரும் உலகத்தமிழர் பத்திரிகையில் பரமேஸ்வரி துரைசிங்கம் அவர்களினால் எழுதி சிறப்புப்பாராட்டு பெற்ற கவிதை இது.
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ் நிலம் 0 தீபச்செல்வன் ---------------------------------------- 01 குடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறது நிலம் அள்ள வரும் கைகள் யாழை இழுத்து பிய்த்துடைக்கின்றன இந்த யாழ் உடைந்து போகட்டும்! அல்லது எரிந்து சாம்பலாகட்டும்!! என்று அறிவிக்கப்படாத பிரகடனங்களுடன் யார் யாரோ வந்திறங்கி யாழெடுத்து எறிகிறார்கள் வானத்தை பிளந்து எட்டி முகங்களை மறைக்கும் விளம்பரப்பலகைகளின் நிழலில் அடுக்கிவிடப்படட குளிரூட்டும் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களின் கைகளிலுள்ள கிண்ணங்களில் யாழின் சாம்பலிருக்கின்றன யாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டு யாழோடு நிலத்தை யாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத் தின்று கொண்டிருக்கின்றனர் நகரெங்கும் நிலமெங்கும் …
-
- 0 replies
- 811 views
-
-
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....! வெடிகுண்டுகளைச் சுமந்து சுமந்து மலடாகிப் போன மரண தேசத்தில் மறத்தமிழச்சியொருத்தியின் தாய்மை பறைசாற்றப்பட்டது அன்று.. "அக்கினி குண்டங்கள் மழையாய்ப் பொழிந்து எம் மக்கள் கூட்டம் மாண்டு மடியும் யுத்தக்களத்தில் ரத்தம் சிந்த இதோ ஓர் போராளி உதித்துவிட்டான்...! எம் குலப் பெண்களின் பெண்மையைக் கொன்ற ஆயுதம் ஏந்திய நாய்களின் சத்ருவாய் இதோ ஒர் போராளி உதித்துவிட்டான்....! போர்க்களத்தில் புதையுண்ட எம் இனத்தையும், மொழியையும் தோண்டியெடுத்து மகுடாபிஷேகம் செய்ய இதோ ஓர் போராளி உதித்துவிட்டான்......!" என பெருமிதிங் கொண்டவளாய் உணர்ச்சிப் பெருக்கில் தன் அறுபட்ட…
-
- 0 replies
- 1.5k views
-
-
கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன். கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு! கால்கள் மூன்றாகி நடக்கையில், மனம் மட்டும், அங்கும் இங்குமாய், மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது! காலம் தான் எவ்வளவு குறுகியது! கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில், யாரோ பந்து விளையாடுகின்றார்கள்! களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள், காதுக்கு இனிமையாய் இருக்கின்றன! கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது! அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில், ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது! முதுமை என்பது, முந்திய அனுபவங்களின் இரை மீட்புக் காலம் போலும்! பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன! இழந்து போன சந்தர்ப்பங்கள், எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை! இமை வெட்டும் நேரத்தி…
-
- 34 replies
- 12.5k views
-
-
"இது இனப் படுகொலை ..... !!!" "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!" "விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!!" …
-
- 0 replies
- 223 views
-
-
முதற் காதல் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் பஸ் வரும் வீதியில் தடைக…
-
- 28 replies
- 5.8k views
-
-
ஈமத்தாழி - தீபச்செல்வன் ஈமத்தாழி மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறி…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
அன்பிற்கு புது பல அர்த்தங்கள் தேடி அகங்காரத்துடன் காதலையும் அலர்ச்சியம் செய்து தெரிந்தே நான் அவனுடன் புரிந்த சண்டைகள் தெளிவு தரும் என்று ஏதோ ஓர் நினைப்பில் வர்ணங்களில் வானவில்லை காண்பது போல் வாட்டும் ஏக்கங்களில் அன்புக்கு விளக்கங்கள் தந்தாலும் நெடுந்தூரத்தில் அவன் உருவம் என் விழிப்பார்வை கைது செய்தால் நெஞ்சில் சுமந்த சுமைகள் யாவும் நெகிழ்ச்சியில் உருகுதே கதிரவனின் வருகையில் மலரும் தாமரையாய் கண்களின் இரு கருமணிகள் விண்மீன்களானது ஏனோ ? சொற்களுக்கு எட்டாத உணர்வுகள் யாவும் உடனே விழித்துக்கொள்ளும் சொப்பனத்தில் கூட அழியா சுவடாய் மனதினுள் பதிந்து கொள்ளும் ஆன…
-
- 0 replies
- 832 views
-
-
[size=5]தமிழ் பெண்ணே நீ தாழ்ந்தது போதுமடி தலை நிமிர்ந்தே நீ வாழ்ந்திட வேண்டுமடி தாரத்தைத் தாயாய் எண்ணிய மண்ணில் தரையில் புழுவாய் நீ தவள்வதும் ஏனோ பெண்ணின் பெருமை பேசி அடிமை ஆக்கிட்டார் பேதைமை கொண்டே நாம் பேச்சற்றிருந்துவிட்டோம் பேரினவாதம் பேதைகளை பேச்சற்று மூச்சறுக்க பேடிகள் போல் இன்னும் பயந்து ஒளியலாமோ உன்னைத் தொடுபவனை உக்கிரமாய் எதிர்த்திடடி உடலைத் தொடுபவனை ஊசி கொண்டு கிழித்திடடி பின்வாசல் வருபவனை பிணமாய் அனுப்பிவிடு முன்வாசல் வருபவனை மூக்கறுத்து அனுப்பிவிடு மோகத்தில் வருபவனை மோதியே கொன்றுவிடு மூடர்கள் வந்தால் முட்டி நீயும் கொன்றுவிடு காமுகன் வந்தால் காதை நீ அறுத்துவிடு சேர்ந்து வருவோ…
-
- 15 replies
- 933 views
-
-
இறைவன் எங்குள்ளான் ? சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து, துதி பாடி, தோத்திரம் பாடி, கையால் ஜெபமாலை உருட்டி உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை நிறுத்தி விடு! கோயில் தனி மூலையில், கதவுகளை மூடி, கண்களை மூடிக் கொண்டு காரிருளில் நீ யாரைப் பூஜிக்கின்றாய்? கண்களைத் திறந்துபார், உன் இறைவன் முன்னில்லை என்பதை! மெய்வருந்தி இறுகிப் போன வயலை உழவன் எங்கே உழுது கொண்டு இருக்கிறானோ, வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன் எங்கே கல்லுடைத்து வருகிறானோ அங்கே உள்ளான் இறைவன்! வெட்ட வெயிலிலும் கொட்டும் மழையிலும் தூசி படிந்த ஆடையுடன், உழைப்பாளி உடன் குடியுள்ளான் இறைவன்! புனிதமான உன் காவி மேலங்கி உடையை எறிந்து விட்டு புழுதி நிரம்பிய பூமிக்கு இறங்…
-
- 1 reply
- 538 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேசமே! 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் தந்தாய் பத்து ஆண்டுகள் கூட தமிழனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை பேரினவாத சிங்களவனின் சுரண்டலுக்கு ஆளானோம் தமிழ்மண்ணில் சிங்களக் குடியேற்றம் செய்தான் பொறுத்தோம் எம் வளங்களைச் சுரண்டினான் பொறுத்தோம் எம் உயிரிலும் மேலான கல்வியைப் பறிக்க தரப்படுத்தல் சட்டம் அமுலாக்கினான் இனியும் பொறுக்க முடியாமல் அஹிம்சை வழியில் கேட்டோம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திக்கேட்டோம் பயங்கரவாதிகள் என்றா(றீர்)ன் இலட்சக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து விட்டு இன்றும் கேட்கிறோம் நீ தானே சொன்னாய் எந்த ஒரு சமூகமும் தனித்துவமான மொழி கலை,பண்பாடு கொண்ட இனம் தனது சுயநிர்ணய …
-
- 1 reply
- 913 views
-
-
நான் தான் அவன் ,ஆனால் இப்போ நீ என்னை அது என்று சொல்கிறாய். நான் இப்போ இந்த உலகிலில்லை இல்லை என்று சொல்கிறாய். ஆனால் என்னால் உன்னை காணமுடிகிறது .உன் ஒவ்வொரு நகர்வையும் அவதானிக்க முடிகிறது. நான் அன்று களத்தில் மாண்டதாக நீ பேசிக்கொள்வதை கேட்கிறேன்.ஆனால் நான் மாண்டதாய் எனக்கு நினைவில்லை . அன்று வெடியோசைக்குள்ளும்,நச்சுப்புகைக்குள்ளும் உறுதியாய் நகர்ந்தேன். இன்று உன் சதிவார்த்தைகளை கேட்டு ,நஞ்சுகலந்த செய்கைகளை பார்த்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அந்தரித்து நிற்கிறேன். உன்மேல் கொண்ட அக்கறையினால் ,தாய்மண்ணின் மேல் கொண்ட பாசத்தினால் தான் கையில் கருவி எடுத்தேன் .இன்று நீ கூறும் வார்த்தைகள் என்னைக்கொல்லாமல் கொல்கிறது .........…
-
- 13 replies
- 1.5k views
-
-
அகராதி நீ என் அகராதி ..... அகரம் முதல் அந்தம் வரை..... அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ..... அழகு தமிழ் வார்த்தைகளை...... அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!! அகோராத்திரமும் உன்னை நினைத்து..... அல்லோலகல்லோலப்படுகிறேன்...... அணைக்கவும் முடியவில்லை....... அகலவும் முடியவில்லை ........ அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......? அழகு தேவதையே அகத்தரசியே & அகராதி சொற்களில் கவிதை கவிப்புயல் இனியவன் மேலும் தொடரும்
-
- 2 replies
- 734 views
-
-
பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது... ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து... வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது... பயங்கரவாதம்..! இருந்தும்... மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே.... மனிதனை இயந்திரம் கொன்றால் "Just war"..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம் இது..! ஏவி விட்டு தூர இருந்து கொன்று விட்டால் இல்லை இல்லை.. ஊரையே அழித்திட்டால் சாட்சியும் இல்லை குற்றவாளியும் இல்லை அழுவதற்க…
-
- 0 replies
- 618 views
-
-
புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து இளங்கவி- கவிதை கவலைகளை நீ நீக்கு உன் கடமைகளை நீ நோக்கு தமிழினத்தை கரை சேர்க்க துடுப்புகளை நீ தூக்கு... தோல்விகளா நீ பெற்றாய் நம் தலைவனிடம் எதை கற்றாய்..? தணலிலே எரிந்தால் தான் ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்... துவண்டுவிட நீ வாழை மரமா...? இல்லை.! இரும்பு தெறிக்கும் வீர மரம்..! உன் நிலத்தில் வாழ்வில்லையென்றால் என் நிலத்தில் உன் வாழ்விருக்கும்.... கலங்கரை விளக்கத்தால் உனக்கு வழிகாட்டத்தான் முடியும்... அந்தவழி தொடராவிட்டால் இருள்தானே உன் வாழ்வில் மிஞ்சும்... எடுத்த உன் ஆயுதத்தால் உன் வீரம் சொல்லி நின்றாய்... இப்போது உன் கடமை அகிம்சையில் உரிமை வென்றிடுவாய்.... இதை விட…
-
- 12 replies
- 2.6k views
-
-
'கொற்றவை' வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் தாக்கத்தில், நந்தன் இணைத்த 'ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ஐயா' பதிவையும் வாசித்தபோது இதைப் பதியத் தோன்றியது: -- பிரக்ஞை தொடர்வதென்று பேச்சுண்டு. ஆழத்தின் அதிர்வுகள் பண்டையனவென்று கருத்துண்டு, நிறுவல் அசாத்தியம். ஆனால் உள்ளிற்குள் கரவொலி. பறவைகள் பரிசோதிக்கப்படுகின்றன. பொரித்த முட்டைகளிற்குள்ளால், உணரப்படாத, கடத்தப்பட்ட அனுபவங்கள் தேடப்படுகின்றன. பேசப்படும் மொழி எதுவும் சட்டென்று தோன்றிற்றிலை. சரித்திரம், பணம் பண்ணமுடியாப் பாடந்தான், இருப்பினும், இருப்பின் தடம் அதற்குள்தான். அகத்தியன் செய்த அற்புத பாடல்கள், மதுரை தாழ்கையில் சேர்ந்து தாழ்ந்தனவாம், பின்னொரு பொழுதில், தென்னவன் ஒருவன், சன்னதங் கொண்டு கக்கித்துப்பியதை, அதிகம் கற்றவன் அல்…
-
- 8 replies
- 755 views
-
-
இது சித்திரக் கவிகளில் நான்கரைச் சக்கரம் வகையைச் சேர்ந்தது. எனது முதல் முயற்சி... வேதியன் மகவே வேய்தோள் உருவே வேல்விழி கனிவே வேரிப்பூ நறவே வேட்டம் புகவே வேகுதடி நினைவே வேரில்லா வாழ்வே வேண்டும் விடிவே வேதியன் - வேதம் ஓதுபவன்; மகவே - மகளே; வேய்தோள் - மூங்கில் தோள்; வேரிப்பூ - மதுரை மகளிர் கற்காலத்தில் சூடும் ஒரு மலர் நறவே - நறு மணம்; வேட்டம் - வேட்கை; விளக்கம் : வேதியன் மகளே!! மூங்கில்போல் தோள் கொண்டவளே!! வேல் விழிகளில் கனிவைக் கொண்டவளே!! வேரிப்பூ நறுமணம் கொண்டவளே !! உன்னை நினைக்கவே என் மனதில் காதல் வேட்கை புகுகிறது. அந்த வேட்கையால் உடல் வேகிறது. வேரில்லாமல் இருக்கும் மரம்போல் உயிரில்லாமல் உள்ளதடி வாழ்க்கை. இதற்கு விடிவே கிடையாதா!!
-
- 13 replies
- 1.2k views
-
-
ஒற்றைப் பேச்சில் ஒடிந்தே போனான்..! இனத்துக்காய் வீழ்ந்தோரை தூற்ற நீ யார்..??! கேள்விகள் கேட்க யாருமற்ற நேரத்தில் அவனுக்குள் ஆயிரம் கேள்விகள்..! அகோரமாய் தேசத்தில் நடந்ததை தரிசித்தவனுக்கு... ஊமையாகித் துணை நின்று அழித்தவனின் செயல் பாராட்டி சாகடித்துப் பின்... மனித உயிர்க்கான உரிமைகள் தேடும் "உண்மையை"க் கண்டறிவோரின் வேடங்கள் அவனுக்குப் புரியவில்லை..! வெகுண்டு எழுந்தவன் வேதனையில் துடித்தான்...! தன்னின மக்களுக்காய் குண்டு சுமந்த மண்டேலாவுக்கு ஒரு நீதி..!!! "உலக அமைதிக்கென்று" பசப்பி உலகை அடிமையாக்க.. ஊரூராய் குண்டு போடும் ஒபாமாவுக்கு நோபல் பரிசு..! சொந்த மண்ணில் இன அழிப்பை தடுத்து நின்றவனுக்கு "பயங்கரவாதிப்" பட்டம்...! அந்தப் பட்டம் அவ…
-
- 5 replies
- 725 views
-