கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
பக்கத்து வீட்டு பரமசிவன் மாஸ்ரர் மகனை விட மார்க்கு கூட நீ எடுத்தா அடுத்த முறை படம் பார்க்க விடுவேன் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணினா பரிசா உனக்கு சைக்கிள் வேண்டி தருவன் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் பண்ணி டாக்டருக்கு எடு பட்டா கட்டாயம் காரோடு சீதனம் கேட்டு கலியாணம் பண்ணி வைப்பேன் இது ஒன்றும் நடக்காட்டி ஒரு மாடு வேண்டி மேய்க்க விடுவேன் தானாக சிந்திக்கும் பிள்ளையின் மூளையை வீணாக்கிய கதை போல் அப்பனுக்கும் பிள்ளைக்கும் அப்ப தொடக்கம் நடக்கும் சண்டை இது இப்பவும் இப்படித் தான் யாழ்ப்பாணத்தான் ஆனாலும் ஆயிரம் தான் குறை சொன்னாலும் அடித்து வீழ்த்தி எரித்து புதைத்தாலும் ஏதோ விதை …
-
- 3 replies
- 1.1k views
-
-
இலக்கிய நண்பர்களே, கவித்துவ ரசிகர்களே, தமிழ்கவிதையுலகம் ஓரு அடர் வனம். அதனூடே பயணிக்கும்கோது ஏற்படும் பரவசம் அற்புதமானது. 1970 ம் ஆண்டில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எழுதிய ஒரு சிறு கவிதை என் கவனத்தையீர்த்தது. இக்கவிதையை நான் எழுதியிருந்தால்... என ஒரு நப்பாசையும் உள்ளெழுந்தது. "அற்பங்கள்" எனும் தலைப்பையுடைய இக்கவிதையை மொழிபெயர்த்து என் பிரஞ்சு நண்பனிடம் கொடுத்தேன். வாசித்துவிட்டு அற்புதம் என்றான். ஆனந்தமாகவிருந்தது. வாசியுங்கள். வளமடைவோம். அன்புடன் வாசு. ----------------------------------------------------- அற்பங்கள். அற்ப நிகழ்வும் அர்த்தம் அற்றதும் என்னுடன் வருக. உதிரும் மணலும் உருவழியும் நீர்வரையும் எனது உவப்பு…
-
- 8 replies
- 2.1k views
-
-
இக்கவிதையை எழுதியவர் யார் என்பதை யாராவது அறிந்து கூறுங்கள் பார்க்கலாம் ? நட்புடன் வாசுதேவன். ---------------------------------------------------- கவிதை என்பது சுதந்திரம்: கவிதை என்பது சுதந்திரம் அப்போது தெரிந்தது நான் இன்று வரையிலும் எழுதியிருப்பவை கவிதைகள் அல்ல என்பது என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது கட்டுப்பாட்டின் அட்டகாசம் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது பூஜ்ஜியம் உளறல்கள் பேரர்த்தம் கவிதை என்பது ஊடுருவி உருக்குலைப்பது கவிதை என்பது பற்றுக்கோலின் கண்கள் கவிதை என்பது உடலுறவின் உச்சக்கட்டம் நான் எழுதியிருப்பவையல்ல கவிதைகள் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும். ****
-
- 5 replies
- 2.2k views
-
-
நான் லிங்கமாலா ஆனேன் ஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை. வெசாக்தின முழுநிலவு தலையில் கைவைத்து அழுகிறது அதன் மூக்குச் சளி சாரளம் வழியால் தெறிக்கின்றது அயல்…
-
- 12 replies
- 2.2k views
-
-
உன்னை என் ஞாபகப் பிரதேசத்தில் இருந்து அழிக்க முயற்சித்தவர்கள் அழிக்க முடியாமல் தோற்றுப் போய் விழிக்கிறார்கள் ஏனென்றால் நீ என் இதயத்தில் READ ONLY MEMORY யாக அல்லவா பதிவாகி இருக்கிறாய்! பவர்கட்! கொஞ்சம் சிரி...மெழுகுவர்த்தியை தேட வெளிச்சம் வேண்டும். என் இதயத்தை திருடிய குற்றத்திற்காக என் மனச் சிறையில் உன்னை ஆயுள் கைதியாக்க சம்மன் அனுப்புகிறேன் தயவு செய்து முன் ஜாமீன் கேட்டு விடாதே! எங்கேயோ,எப்பவோ படித்து சுவைத்தது...சகாறா அக்கா எழுதினது யார் எனக் கேட்டு அடிக்க வரக் கூடாது
-
- 4 replies
- 1.1k views
-
-
மாலை வேளை மூளை ஓய்வுக்காய்.. முகம் கழுவிக் குந்துகிறேன் முகநூலின் முன் பக்கம்..! முக்கி எழுகிறது முகநூல் "சாட்" யன்னல்... Hi ASL pls... முகமறியா ஒன்று கதை கேட்க.. நானும் ஏதோ பதில் போட தொடர்கிறது... Foto pls... பதிலுக்கு நான்.. L8R podi vesai.... திட்டிக் கொண்டே மறுமுனை யன்னல் மூடுகிறது..! யோசிச்சுப் பார்க்கிறேன்.. புரோபைலில் நடிகையின் முகம் காட்டும்.. என் முகவரிக்கே இக் கதி என்றால் உண்மையில்.. அவள் கணக்கிற்கு...???!
-
- 43 replies
- 4k views
-
-
புலிகளை துரோகி என்றேன். அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள். ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன். பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள். பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது, நான் புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன். எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள். போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன். சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன். என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள். வெளிப்படையாக வரவா என்றேன். இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான் எங்களுக்கு வசதி என்றார்கள். இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன். அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வானாந்தரங்களிலும் வீ…
-
- 11 replies
- 1.7k views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா? வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா? வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது …
-
- 0 replies
- 1.9k views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை - கவிஞர் தீபச்செல்வன் வழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது.. பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல.. சோதனைச்சாவடிகளை கடக்க என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது.. ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும் அமெரிக்க அடையாள அட்டையைப்போல.. செலவு செய்ய என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன.. சிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும் பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல.. என்னுடைய மண்ணில் ஒரு தேசிய கீதம் ஒலிபரப்படுகிறது.. மணிப்பூரில் ஒலிக்கும் இந்திய கீதம்போல .. என்னுடைய தேசத்தில் ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.. திபெத்தில் பறக்கும் சீனக் கொடி போல.. என்னுடைய விரலில் நாடற்ற அகதிய…
-
- 0 replies
- 486 views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை பயங்கரவாதிகளென அழைக்கின்றனர் ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா? வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை பிரிவினைவாதிகளென அழைக்கின்றனர் ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா? வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது நாமொரு இனம் எமக்கொரு மொழி எமக்கென நிலம் அதிலொரு வாழ்வு வீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே! உறிஞ்சப்பட்ட குருதியும் மனிதப்படுகொலைகளும் அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை…
-
- 6 replies
- 1.1k views
-
-
வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றனசிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல என்னுடைய மண்ணில்ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறதுமணிப்பூரில் ஒலிக்கும்இந்திய கீதம்போல என்னுடைய மண்ணில்ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறதுதிபெத்தில் பறக்கும்சீனக் கொடி போல என்னுடைய விரலில்நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறதுமியன்மாரியரின் கையில்தீயால் இடப்பட்ட காயத்தைப்போலதீபச்செல்வன் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…
-
- 6 replies
- 3.7k views
-
-
உள்ளம் பேதலிக்க... எண்ணம் கொடு! என் வாழ்விலும்... வண்ணக் கோலமிடு! எல்லை மீறும்போது... என்னைத் தடு! "கொஞ்சக்" கனவிலேனும்... என்னை விடு!
-
- 2 replies
- 881 views
-
-
கனடாவில் தாயகமக்களின் இன்னல் துடைக்க ரொரன்ரோ பெருநிலத்தில் ரொரன்ரோ மத்தி கலைபண்பாட்டுக்கழகம், ஸ்காபுரோ கலைபண்பாட்டுக் கழகம், பீல் கலை பண்பாட்டுக் கழகம், மார்க்கம் கலைபண்பாட்டுக் கழகம் ஆகிய நான்கு கலை பண்பாட்டுக் கழகங்களும் இணைந்து வழங்கிய “சிறங்கை” எனும் 27 மணித்தியாலத் தொடர் நிகழ்வில் களத்துமேடு எனும் கவியரங்கில் ஆற்றப்பட்ட கவியுரை இங்கு யாழ்க்கள நண்பர்களுக்காக பதிவிடுகிறேன். நாமுள்ளோம் அஞ்சற்க. என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக. முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை, மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த…
-
- 2 replies
- 1k views
-
-
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..! நக்கலும் நளினமுமல்ல நாள் நடப்புச்சொல்கின்றேன் நாமெல்லாம் நல்ல மனிதர்களே..! முட்கம்பி வேலிகளில் ஊஞ்சலிடும் முல்லைகள் ரிப்பன்களோடு சேர்ந்து நெய்துவிட்ட தாவணியோடு சில்வண்டு இரையும் இசையில் மூன்று நாள் உணவை இரைமீட்கும் கட்டுண்ட கால்நடைகளாய் கனவுகள் தொலைத்து... தலைப்பிள்ளை தொலைத்து தாரமும் தொலைத்து தலையணை தொலைத்து உறக்கமும் தொலைத்து உண்ணாதுறங்கும் உயிரற்ற உயிர்நாடிகள்.. ஆறு பேருக்கு அரைக்கொத்து அவியல் அதில்தான் மூன்று வேளை பங்கு மிஞ்சினால் அடுத்தநாள் பழங்கஞ்சி பழகிப்போச்சு இது ரொம்ப நாளா.. தொழில் இன்று தொழில் தேடல் கனவின்று கனவுகாண உறக்கம் நனவின்று உசிராச்சும் நிலைச்சிடுச்சே உணவின்…
-
- 5 replies
- 713 views
-
-
ஓடுமீன் ஓடுமோ....... உறுமீன் வருமோ.......... வாடி நிற்குமாம் கொக்கு.......... வயிறு காய காய! கூரிய முள்ளு தொண்டை............... கிழித்தால் - கொக்கும் செத்துபோகும்! ஏர் கொண்டு உழுத நிலமல்ல......... எலும்புகூடுகளின்மேல் எழுகின்ற பூமி... அத்திவாரத்தின் கீழிருந்து..... அவசரமாய் நீர் அதிர்ந்தால்....... அழிந்து போவது........... யாருமல்ல- நாமேதான்!! (இது மட்டுறுத்தினர் - யாழ்பிரியாவுக்கு)
-
- 1 reply
- 968 views
-
-
நாம் என்ன ஊமையா? இந்த நிமிடம் இதே வருசம்.. இமைகளின் மீது....... இரும்பு பறவைகள் .... எரிதிராவகம் வீசி போன நாள்! இந்த நாள்..! சிலுவை சுமந்த ஜீவனின் மடியில்..... சிதைகளாய் எம்மை - ஆக்கிவிட்டுபோன பேரினவாதத்தின் ...... தமிழன் குடல் வெளி எடுத்து.. கும்மி அடித்த நாள்! விலா எலும்பு நோக பெற்றவள் வயிறும் வைரம் என்றும் அவள் கருதிய மகனும் ஒன்றாய் குடல் கிழிந்து செத்தாரே.. உலகமே உனக்கு அது தெரியுமா? நாம் என்ன செய்தோம் இறைவா? நாம் என்ன உனக்கு தீராத பகையா? நெஞ்சு மீது மூட்டிய தீ இன்னும் ஈரம் பாயாமல் ஊரெல்லாம் இருக்கிறதே கொல்லுங்களேன்- எம்மை தொலைந்தோம் நாம் என்று.. யாருக்கும் சொல்லியும் விடுங்களேன்! இருக்கும் ப…
-
- 27 replies
- 3.6k views
-
-
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்: மனுஷ்ய புத்திரன் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் சதா முணுமுணுத்துக்கொண்டு எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு எதையாவது சுத்தம் செய்துகொண்டு யாரையாவது சபித்துக்கொண்டு எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு …
-
- 4 replies
- 3.5k views
-
-
நாம் தான் தமிழ் மக்களின் அரசியல் வாரிசுகள்! தொடக்கி வைத்தவர் கொள்கை மறந்தார் இடையிலே கைவிட்டு எதிரிதம் வால் பிடித்தார் பயங்கரமாய் சட்டங்கள் ஆட்சியாளர் கைவர வாழாதிருந்தார்! அண்டையில் இருந்தவன் சொந்த நலனுக்காய் காய் நகர்த்த புரிந்தும் புரியாததுமாய் சொகுசு கண்டார்! தமிழன் கண்ணீர் கண்டு போலியாய் இரங்கி ஆளவந்தவனை ஆழக்கால்பதித்து வலுவாக உட்காரவைத்து கதிரைக்காய் சண்டையிட்டார்! வட்டம் என்றும் சதுரம் என்றும் மேசையில் உட்கார்ந்து வருடம் கடத்தினார் பயன் தான் ஏதுமில்லை! எதிரியோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வலுவாகி கொன்று குவித்தான் நாங்களோ தலை நகரிலே பஜ்றோவில் பவனிவந்தோம்! தமிழ் மக்களின் பிரதிநிதிகளாய்! அம்மாதான் விடிவின் விடிவெள்ளி என்று …
-
- 1 reply
- 740 views
-
-
நாம் நாமாகவில்லை எமது கைகள் மட்டும் தான் முதலில் கட்டப்பட்டது இப்போ எமது காலும் கட்டப்பட்டுவிட்டது இனி எம்மால் எழுந்து நடக்க முடியாது எழுதமுடியாது பேசமுடியாது நாம் இனி மேல் நாமாகவே இல்லை எம் விடுதலையும் வெகு துரமாகிவிட்டது நாம் இப்போ எம் அடையாளத்தை தொலைத்த ஓர் அடிமை மனிதர்.
-
- 5 replies
- 1.1k views
-
-
ஞாபகம் வந்த நாள்முதலாய் உன்னை எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது ஏனென்றும் எதகேன்றும் தெரியவில்லை எங்கள் நெஞ்சில் இந்தவலி எங்களின் வலி ஈழத்திற்கும் தெரியாது இவர்களின் காதலுக்கு எல்லையில்லை உன்கரம் புடிக்க இழந்தவை பல தரையில் தரைப்புலியாயை கடலில் கடற்புலியாயை வானில் வான்புலியாயை வருணிக்க வார்த்தையில்லை கரும்புலியாயை மண்ட மாவீரரும் மரணித்த மக்களும் போதும் போதும் ஈழமே எத்தனை எத்தனை வலிகள் எமக்குள் நாம் நேசித்த ஈழமே எம்மை நேசிக்க மறந்தாயோ
-
- 0 replies
- 816 views
-
-
காதலைப்பிழிந்து பிழிந்து கவிதை வடிப்போம்..! மென்மனசுக்காரர் நாமெனப் பீற்றித் திரிவோம்..! எம்மைக் கடிக்கும் எறும்பையும் தடவிக்கொடுக்கும் வள்ளலார் ஆவோம்! மிருகவதைக்கு எதிரானவர் என்று கோஷமிடுவோம்..! ஏட்டில் எல்லாமே எழுதி வைப்போம்! சொல்லில் வாள் வீச்சு நடத்துவதே நம் செயலாக்கி மகிழ்வோம்! துடித்து அழும் என் இனம்.. உயிர் வதையில் வலி கொள்ளும்.. என் உதரம்.. முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள எம் உறவுகள்.. ம்ஹீம்.. அவர் விழிநீர் துடைக்க கூட விரல் கொடுக்கமாடோம்.. ஏனெனில் நாம் மனிதாபிமானிகள்..! - அஞ்சனா மூலம்: கரும்பு வலைப்பூ
-
- 7 replies
- 1k views
-
-
பட்டினியில் ஓர் உலகம் பகட்டினில் இன்னோர் உலகம். இரண்டிலும்.. மனிதர்களே ஆட்சி. இப்பிரபஞ்சத்தில் இப் பஞ்சத்தை வேறு எங்கினும் காண முடியுமோ..??! தெரியவில்லை..!! சட்டங்களில் எழுத்துக்களில் கோட்டு சூட்டுப் போட்ட மனிதர்கள் எழுதி வைச்ச மனித உரிமைகள் பத்திரமாக... மனித உயிர்களோ.. இப்படிக் கேவலமாக..!
-
- 3 replies
- 904 views
-
-
நாய்கள் கடி படுது தமிழுக்கு...நல்ல காலம் பிறக்குது.....!!! கூட்டணிகள் போட்டு வைச்சு கூட்டினைஞ்சாங்க... இப்போ குத்து வெட்டு என்றதுமோ தாம் பிரிஞ்சாங்க...??? ஆதி அந்த காலம் எண்ணா அவங்க நினைச்சாங்க...??? அதை எண்ணி புட்டா புலியழிக்க இவங்க முனைச்சாங்க...?? சங்க காலம் தொட்டிவிங்க சதிகள் செய்தாங்க... எம் தமிழை அழித்தவங்க பழிகள் ஏற்றாங்க... அவங்கள் இட்ட சாபமதால் இன்றழிந்தாங்க... தேடி ஓடி எம் தமிழை தேடி அழித்தாங்க... தெரு நாய்கள் போல தெருவில் சுட்டெறிந்தாங்க.... புலிகள் என்று முத்திரைகள் வேறு பதித்தாங்க..... கொலைகள் எண்ணு கொள்ளை எண்ணு எத்தனை தாங்க.... …
-
- 7 replies
- 1.9k views
-
-
இலக்கிய உலகில் நாயை அடிப்படையாக வைத்து பலர் கவிதை எழுதியிருக்கிறார்கள். இந்த நாய்க் கவிதைகள் பல சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கின்றன. ஞானக் கூத்தன் எழுதிய ஒரு நாய்க் கவிதை அடிதடிவரை கொண்டு போய் விட்டது. ஈழத்தில் என்னுடைய ஊரில் இருந்த ஒரு நாய் பற்றி நானும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் நாய்க் கவிதை அது ஒரு அழகிய கிராமம் அங்கே மனிதர்களோடு ஒரு நாயும் இருந்தது நன்றியுள்ளவை என்ற அடைமொழிக்குள் தன்னையும் அடைத்துக்கொண்ட அந்த நாய் ஒரு விசர் நாய் என்பது பின்புதான் புரிந்தது அந்த நாய் வருவோரையும் கடித்தது போவோரையும் கடித்தது - உணவு தருவோரையும் கடித்தது ஊர்மக்கள் பொறுப்பானவர்களிடம் முறையிட்டார்கள் பொறுப…
-
- 40 replies
- 17k views
-
-
http://www.youtube.com/watch?v=t71oJeY1OVQ ஆடுவோம் கண்ணா எழும்பிவாட இருவரும் விளையாடுவோம் இன்று பகல் முழுதும் ஆசையாய் கேட்டால் ஆர்வமில்லை ஏனோ ஆரும் இல்லை எனக்கு சேர விளையாட கால்கள் நான்குண்டு குத்திக்க எமக்கு கனிந்த பெரு மனம் உண்டு களிக்க, குலவ.. .. ஆடுவோம் காலத்தை போக்காதே கவலையில் துள்ளி எழுந்தால் தோகை விரித்தால் நம் தனிமை துயரம் பறக்கும் ஒரு நொடியில் தூரம் போய் நாம் தேசம் பல பார்த்து, நாட்டை சுத்தி நுனி மூக்கால் நீண்டமோப்பம் நெடுநேரம் போட்டு, துடுக்கு பல செய்து துயரத்தை போக்கி.. ..ஆடுவோம்.. ஒட்டிக்கொள்ளாதே சுவரோடு தோழா உன்னைபோல் ஒழிவதற்கா இந்த உலகம் என்கரத்தை தட்டினால் எவர் உண்டு எமக்கு கள்ளத்தில் படுக்காதே கவலைதான் மிஞ்சும், காலம் இளம் காலையும…
-
- 2 replies
- 750 views
-