கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கௌதம முனிவரின் மனைவியை ஏமாற்றி கெடுத்தவன் தேவன் ஆனான் கண்ட பெண்களிடம் எல்லாம் காதல் லீலை புரிந்தவன் கடவுள் ஆனான் பத்து இருவது என மனைவிகளை அடுக்கிவன் எல்லாம் அரசன் ஆனான் நேசித்து பழகிய ஒரே பெண்ணிற்காக அலையும் நான் மட்டும் பொறுக்கி ஆனேன் . - வை .நடராஜன்
-
- 9 replies
- 1.1k views
-
-
பாரெங்கும் எனது பெயர் மணக்கயிலே படிப்பிக்க ஆயிரம் பேர் இருக்கையிலே படிக்க மறுப்பது ஏன் குழந்தாய்? -எனை படிக்க மறப்பதுவும் ஏன் குழந்தாய்? வள்ளுவனுள் வாசகமாய் வளர்ந்தேனே.. ஔவை மடி ஔடதமாய் தவழ்ந்தேனே கம்பன் வழி காவியமாய் கரைந்தேனே பாரதியில் பாக்களாய் படிந்தேனே தித்திக்கும் என்றார்கள் ஒரு சிலபேர்.. தெவிட்டாது என்றார்கள் பற்பல பேர்.. எத்திக்கும் எனது பெயர் செழிக்குமென்றால் எதற்காக எனை படிக்க மறந்து நின்றாய்? சொக்கும் தமிழ் உனையாள வேண்டாமா? சொல்வளமும் சிறப்புற வேண்டாமா? பிறச்சொல்லை புகுத்தாதே எனக்குள்ளே பாழாகி போவேன் நான் தரணியிலே.. எனது வழி தமிழனாய் பிறந்தவனே எனது வம்ச வாரிசாய் வளர்ந்தவனே எனை வளர்க்க மறந்த மானிடனே எனை சுமக்க வெறுக்கும் வெறும்பயலே நான்படும் வேதனைக்கு …
-
- 3 replies
- 782 views
-
-
நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! ஒரு வழிப் போக்குவரத்து ----------------------------------------------- நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு. உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில் ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார். சிவப்பு விளக்கு கண்டல்ல, சீருடைக் காவலர் சீறுவாரென்றே விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம். அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும், கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும். …
-
- 2 replies
- 994 views
-
-
விழித்திடு பெண்ணே! விடியலைப் படைத்திடு சமுத்திரம் ஒன்றே இலக்கெனக்கொண்ட ஆறுகள் சோர்வது உண்டா? சரித்திரம் படைத்திட புறப்பட்ட பின்னால் தடைகளால் உடைந்திடல் நன்றா? வெளுத்தது எல்லாம் பாலென நம்பிய மனத்துக்கு இது ஒரு பாடம்! நீ குழந்தையல்ல குமரி ஆனாய் இனி விழித்திரு பெண்ணே எப்போதும்! இடையினில் தடை வரும் தடுக்கிடப் பார்த்திடும் தலைவலி உடன் வரும் கடு கடு சொல் வரும் களங்கமும் சேர்ந்திடும் நெருப்பென்று ஆனாய் பெண்ணே நெருப்பினை ஈக்கள் மொய்ப்பது இல்லை சளைக்காமல் நீ தொடு இலக்கினை! பொடி வைத்துப்பேசும் நாக்கு பொய் கூசாமல் சொல்வோர்க்கு விளக்கங்கள் கொடுத்திடல் நன்றோ?! சூரியன் மேற்கினில் உதிப்பது உண்டோ? தோல்விகள் வெற்றியின் படிகள் அன்றோ? இறைவனின் அருளொடு நல்லோர்கள…
-
- 0 replies
- 1.7k views
-
-
உதட்டில் ராக்கெட்டை வைக்கிறேன் அதன் புகை உள்ளே செல்லுதே நுரையீரலையும் தாக்குதே என் மூளைக்கு இது தெரிகிறது இதை வேண்டாம் என்கிறேன் ஆனால் மனம் ஏற்க மறக்குதே..... காற்றை கொண்டு அடைக்கப்ட்ட பையில் புகையை அடைகிறேன் காற்றை வெளியில் ஏற்றுகிறேன் கூடவே என் உயிரையும் ஏற்றுகிறேன் நீ மெதுவாய் கரைகிறாய் என்னையும் மெது மெதுவாய் கரைகிறாய் நீ முன்னாடி செல்கிறாய் என்னையும் பின்னாடி அலைகிறாய் ... நான் தீயால் உன்னை கொள்ளுகிறேன் நீ என்னை புகையால் கொள்ளுகிறாய் கடைசியில் நீயே வெல்லுகிறாய் ...... என் புகையில்லையே ............... எங்கள் உயிருக்கு இல்லை விலையே ...... மு.க.ஷாபி அக்தர்
-
- 0 replies
- 654 views
-
-
துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு நீண்ட நாட்களின் பின் நிலவு பூத்தது போல் இவ் இரவு சொல்ல முடியாத மகிழ்ச்சி வெள்ளம் சோகம் எல்லாம் மறைத்து நிற்க மத்தாப்பு பூத்து மனம் முழுக்க சிரித்து நிற்க எத்தனையோ நாட்களாய் ஏக்கத்தோடு உறங்காத கண்கள் சேதி அறிந்த கணம் முதல் சிலிர்த்து சொரிந்த கண்ணீரில் உப்பு உறைக்கவில்லை உதிரத்தில் கலந்த தமிழ்தான் இனித்தது துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு - என்று சொன்னவன் வழி வந்த பிஞ்சுகள் ஆடுகளத்தை அசர வைத்து போர்க்களமாடி உலகமுன்றலில் - எங்கள் கதை மீண்டும் கதையாகாமல் கவனப்படுத்திய காட்சி கண்டு உள்ளம் உவகை கொண்டு சிரிக்கின்றது உளமார வாழ்த்துகின்றேன் வீரரே!!! http://inuvaijurmayuran.blogspot.ch/20…
-
- 7 replies
- 1.2k views
-
-
சொல்வனம் படம்: கே.ராஜசேகரன் அன்பு எனும் நான் என் அன்பு ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம் மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல் கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும் தாய் யானைப் பிளிறல் சத்தம் கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா முதுகாவலாளியின் குட்டித் தூக…
-
- 41 replies
- 20.3k views
-
-
வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது.. வளைய முட்கம்பிகள் வற்றியொடுங்கிய உடலும் முகமும் வயதையும் வடிவையும் வைத்து விடிய விடிய நடக்கும் விசேட விசாரணைகள் நாளைய பொழுதாவது நன்றாய் விடியாதாவென நாட்களை எண்ணி புரளும் நள்ளிரவென்றில் மப்படித்த சிப்பாயின் கைகள் என்னை தட்டியிழத்துப்போகும் கைத்துவக்கின் அடி கவட்டுத்துவக்கின் இடி கசக்கப்படும் முலைகளில் கடி அடி...இடி...கடி.. அடுத்தடுத்து விசாரித்தில் அடிவயிற்றில்வலி மெல்லப்பெய்த மழையில் மகிழமரத்தில் …
-
- 60 replies
- 7.4k views
-
-
வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா? இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின் செவிப்பரைகளில் மோதி மோதி இந்து சமுத்திரத்தில், ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில் குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை உரைத்துரைத்து ஓய்ந்து போனது. கண் மறைந்து போன கால நீட்சியில் கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும், கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல் நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது. வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை, வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று. தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று. நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள் …
-
- 4 replies
- 916 views
-
-
உப்புக் கண்ணீர் ஈரத்தில்.. குருதிக் காயாத கறையோடு முள்ளிவாய்க்காலில் மூடப்பட்ட.. எம் உறவின் எலும்புக் கூடுகளின் வழியாய்.. எழும்புகிறது எம் மாவீரர்களைப் போலவே காந்தள் பூ! இன அழிப்பில் இறந்த காந்தள் மாவீரர் நாளில் முட்டி முளைத்து நிமிர்கிறது.. விடுதலை திறப்பின் அடையாளமாய்! கார்த்திகைப் பனிச்சாரலிலும் முற்றத்து ஓரங்களிலும் முன்னிலும் பெரிதாய் சுடர் விடுகிறது தமிழீழம் நோக்கிய காந்தள்! உலகில் வாசனை பரப்பவே பூத்த பிற பூவெல்லாம் தலைகுனிந்தது… தன் மண்ணை வணங்க தலை நிமிரும் காந்தள் பூவைக் கண்டு “மாவீரர் நாளில்!” கார்த்திகைக் காந்தள் - கவிபாஸ்கர்
-
- 4 replies
- 1.2k views
-
-
1 எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்ததா?- எங்கள் தேசத்தின் குரல் ஓய்வெடுத்து ஆண்டுகள் ஏழானதா? அன்பே மூலதானமாக அடக்கமே ஆளுமையாக அறிவே ஆயுதமாக தமிழினத்தின் குரலை தரணிக்கு எடுத்துக் கூறிய எங்கள் அன்பு பாலா அண்ணா உலகத்தைவிட்டு பறந்தோடி ஆண்டுகள் ஏழு ஆனதோ? உண்மையுள் உண்மையாய் உண்மையே உணர;வாய் உண்மையே இவராய் உண்மையாய் வாழ்ந்த உயரிய மகன்-இன்று எம்மைவிட்டு சென்றதை இன்னும் நம்ப மனம் மறுக்கின்றது உலகின் பார;வையில் இவரின் உறக்கம் மரணம் எனப் பெயர;பெறும் ஆனால், உலகத்தமிழர; உளங்களில்- இவர; என்றும் சீவித்திருக்கும் மனிதன். தமிழின விடிவுக்காகவே இறுதிவரை உழைத்த உறுதியான போராளி இவர;. பாழும் நோய் வந்து பாடையேறும் நாளை இரக்கமின்றி தெரிவித்தபோது பதட்டமின…
-
- 3 replies
- 671 views
-
-
இழவுச் சங்கம் ! ஆர்.மணிகண்டன் ஆலமுண்ட சிவன் சூலத்தால் குத்திக் கொண்டு செத்துப் போனான் போதி மரத்தில் மேலங்கி சுற்றித் தூக்கிட்டுக் கொண்டான் சித்தார்த்தன் சிலுவையில் தொங்கிய தேவகுமாரனும் எழுந்திருக்கவில்லை உள்ளுக்குள் அழுததாய் ஊருக்காய்ப் பிதற்றியவனின் ஆசனவாய் ஆபத்து நீங்கிய இரண்டொரு பகலில் நான்காம் முறையாக இழவுச் சங்கம் இசைத்தார்கள் முத்துக்குமரனின் ஆவி அறிவு தப்பி அரற்றும் தென்வனத்தில் வலைப் பூக்களில் நெளியும் விரல்புழுக்களுக்கு இரையாகிறது எம் இரத்தம். 1/28/2010 5:04:57 PM நன்றி - பொங்குதமிழ் இணையம்
-
- 0 replies
- 806 views
-
-
என் தாயே மனையாண்ட என் மணிமகுடத்தாயே உனை வாழ்த்த எனக்கு அருள் தாரே கருவில் எனைத் தாங்கி கண்மணி போல் காத்தவளே உருவில் உனைப் போல் வந்த என்னை- உன் குருதி கொடுத்து வளர்த்தவளே- நான் ஒரு நூறு பிழை செய்தாலும் உன் உயிர் போல் எனைக் காத்தவளே கள்ளிப் பாலூற்றிக் கருவழிக்கும் மா நிலத்தில் பிள்ளைப் பாலூட்ட மறுதலிக்கும் மானிடத்தில் துள்ளி வரும் குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டித் தாலாட்டி வெள்ளிப் பால் நிலவை அள்ளித் தருவேன் என்று அமுதூட்டி பெண்குழந்தையென்றாலும் பொன்குழந்தை எனப் பாராட்டி கண்ணின் இமை போல் காலமும் நீராட்டி மண்ணின் பெருமையை மனத்தினில் இசையாக்கி பண்பின் சிகரமாய் எனைப் பாரினிலே வேராக்கி விண்ணில் நின்றும் இன்றும் எனைச் சீராக்கும் எ…
-
- 3 replies
- 691 views
-
-
ஐரோப்பியத் தடை தூக்கம் கலைக்க கூவிய சேவல் தடை ஹைக்கூ ஒன்று முயன்றிருக்கிறேன். கன்னி முயற்சியென்பதால் கட்டாயம் உங்கள் விமர்சனங்கள் தேவை. (இல்லாட்டிக் கோவம் போட்டிடுவன்) அன்புடன் மணிவாசகன்
-
- 10 replies
- 3.2k views
-
-
அகப்பை ஆக்கவும் காய்ச்சவும் அள்ளி பரிமாறவும் நாங்கள் தேவை. இவற்றை செய்வதற்கு பானையில் இருக்க வேண்டும் பானையில் இருப்பதையே நாங்கள் எடுப்போம் நாங்கள்; பானை பிடிக்கும் பாக்கிய சாலிகள் தொண்டுழியர்கள் அப்போதெல்லாம் மங்கையர் கைகளில் மட்டுமே இருந்தோம் இப்போதெல்லாம் மணவாளன் கையிலும் இருக்கிறோம். அநேக சந்தர்ப்பங்களில் செங்கோலாகவும் [ஆண்களுக்கெதிராக] பயன் படுகிறோம். செங்கோல் எனும் சொல்லும் போது பல ஆண்கள் அடி வேண்டியிருப்பார்கள் போல உது பற்றி உங்கள் கருத்துக்கள்
-
- 10 replies
- 4.9k views
-
-
களத்திற்கு வரும் பொது கவிதையுடன் வருவதென முடிவெடுத்து மாவீரர் கனவுகளை நினைவாக்க கருத்தியலால் கவிதை வடிக்க நடுங்கியது இரு கரமும் சொல்லுண்டா மாவீரர் தியாகத்தை கவிதையாக்க நிகருண்டா அவர்கள் தியாகத்திற்கு வெதும்பியது மனம் கல்லாக்கி மனத்தைக் கருங்கல்லாக்கி வித்தாகிப்போன மாவீரர் கவிதை எழுத சொல்லுண்டா என் மனம் துடித்தது மல்லுக்குக் கவிதைஎழுதி மாவீரர் வில்லுக்கு வினை சேர்ப்பதா நான் எல்லைக்கும் செல்லாதவன் எல்லை கடந்தவரை எழுதிப் பழி சேர்ப்பதா சூரியதேவன் குழந்தைகளின் கூரிய இலக்கினை ஆரியன் அடக்கினான் எனப் பேருக்குப் பொய் எழுதுவதா பாரினிலே ஈழம் பிறந்திட மாரினிலே தழும்புடன் பகைவன் பாசறை புக…
-
- 0 replies
- 914 views
-
-
கூலிப் படையே உனக்கு இரக்கம் இல்;லையா....??? பகை முகாம்கள் காலடியில் எம் சிறார்கள் பிச்சைகேட்டு.... பட்டினியால் தவிக்கையிலே பாவம் அவர் கையேந்தி.... நீ உண்டெறிந்த மிச்சம் கேட்டு உந்தன் முன்னால் நிரையடுக்கில்.... ''பிஞ்சு வந்து கேட்கையிலே எட்டி எட்டி உதையிறியே....'' ஈவ் இரக்கம் இன்றியவரை எள்ளி நடை ஆடுறியே..... முட்டி விழியில் நீர் கொட்ட முண்டியடித்து நிக்கையிலே.... திட்டி திட்டி வந்தவரை எட்டி எட்டி உதையிறியே.... அவர் விட்ட கண்ணீர் கூட உந்தன் இதயமதை கரைக்கலயா....??? ''வறுமை என்று தானே வந்து படையில் நீயும் இணைந்தாயே...'' அட உந்தன் மனம் கூட கொஞ…
-
- 1 reply
- 974 views
-
-
சருகானவர்கள்..... எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி ஒளித்தொகுப்பை நடத்திவிட்டு காலங்கள் தொலைந்ததனால் காய்ந்து சருகாவதற்காய் வேர்களை நோக்கி உதிர்ந்துவிழும் இலைகள் நினைவு படுத்துகின்றன பனிமர தேசத்தில் பிடுங்கி நடப்பட்ட ஈழத்துத் தமிழர்களை.... அந்நியன்.... பைன்மரத்தை தீண்டிவரும் மாலைநேரக் குளிர்காற்றில் மனதைப் பறிகொடுத்து மயங்கி நின்றபோது ஓடி வழிந்தோடி ஒருகால்ப் பாதணியை ஊடுருவி உள்ளங்காலூடு புகுந்து உச்சி மண்டையில் சுள்ளென்று உறைக்கும்படி-குளிரில் சில்லென்று குத்திய மழைத்துளி சொல்லியது நான் அந்நியன் என்று.... சுதந்திரம்.... நிமிர்வற்கும் குனிவற்கும் நீட்டிநிமிர்ந்து படுப்பதற்கும் வீட்டில் மூச்சுவிடவும் …
-
- 7 replies
- 1.6k views
-
-
அங்கோர் கூட்டம் தன்னில் அன்றொருநாள் பேசுகையில் ‘ஹல்துமுல்லை’ என்றாலும் ‘அழுத மலை’ இது என்றேன்.. ‘’கூனியடிச்ச மலை கோப்பிக் கன்னு போட்ட மலை அண்ணனை தோத்த மலை அந்தா தெரியுது பார்…’’ என்று அழுதமலை இதுவென்றேன். இன்று அழுதழுதே எழுதுகின்றேன்…. இன்னல் செய்ய பலருண்டு இன்செய்ய யாருமில்லை வன் செயல்கள் பல கண்டு நாம் வாடிய நாள் பலவுண்டு செயற் கைதானே எங்களை சீண்டி வந்தது இயற்கையே நீயுமா இன்று ஏம்மீது விழுந்தது.. வன்முறைகளலால் தானே பன்முறைகள் காவுகொண்டோம் இம்முறை இயற்கையும் கூட எங்களை விட்டுவைக்கவில்லையே.. ஏனிந்த விந்தை எதனால் இந்த சோதனை மலையே…! உன்னை உரமாக்கி, உரமாக்கி உயர்த்திய அண்ணனை.. உன்மீது வலம் வந்தே நிறம் மாறிய எங்கள் அன்னையை.. அள்ளிக் கொண்டு போக அத்தனை …
-
- 0 replies
- 1.2k views
-
-
இணையத் தளத்தில் அறிமுக மானாய் நண்பன் என்றழைத்து நட்பை மட்டுமே பரிமாறினாய்... நாம் நம்மை பார்க்க வில்லை யென்றாலும் பாசமாய் அழைத்தாய் சட்டைப் பையின் கனத்தைப் பார்த்து பழகும் இவ்வுலகில் என் மனதின் கனத்தையும் பகிர்ந்துக் கொண்டாய்... என் துயரில் ஆறுதல் சொல்லும் ஓர் தோழியாய் என் தவறில் என்னை கண்டித்திடும் எந்தையாய் இருந்தாய்... தன் தேவைகளுக்கே இறைவனை நாடுவோர் மத்தியில் எனக்காய் என் தேவைக்காய் உபவாஷீத்து வேண்டுதல் செய்தாயே... நீ என்னுடன் பழகியது சில நாளென்றாலும் நீ என்றும் நான் மறவா எந்தன் பிரியமானத் தோழி தானடி… நான் என் வாழ்வின் சாதனையில் உயரத்தில் இருந்தாலும் நான் ஏறிய படிக்கட்டுகளாய் என்றும…
-
- 3 replies
- 1.3k views
-
-
____________________$$$$___$$$ $ __________________$$$$$$$_$$$$ $$ _________$$$$$$$$$$$$$$$$$__$$ $$ _____$$$$$$$$$$$$$$$$$$$$$$__$ $$$ ____$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$ ___$$$_$$_$$$$$$$$$$$$$$$$_$$$ $$ __$$$$$_$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ __$$$_$$_$$$$$$$$$$$$$$$$$$$$$ __$$$_$$_$$$$$$$$___________$$ $$ _$$$$$_$$$$$$$$$$$___________$ $$ _$$$_$$_$$$$$$$$$$ _$$$_$$_$$$$$$$$$$ _$$$_$$_$$$$$$$$$$$ $_$$$$$$__$$$$$$$$$ $_$$$$$$___$$$$$$$$ _$$$$$$$$$__$$$$$$$ $_$$$$$$$$___$$$$$$ $$_$$$$$$$$___$$$$$ $$$_$$$$$$$$__$$$$$$ _$$$_$$$$$$$$$_$$$$$ $$$$$ __$$$$$$$$_$$$$ $$$$$$$ __$$$$$$$$$__$ $_$_$$$$$__$$$$$$$$$_$$$$ $$$__$$$$$__$$_$$$$$$$_$$$…
-
- 2 replies
- 933 views
-
-
காலை வந்தது காபி வந்தது நா இனிக்கவில்லை! சேதி கேட்டதும் உள்ளம் உடைந்தது யாருக்கும் புரியவில்லை! ஆதி முதல் தலைவன் கூட இருந்த ஒருவன் பாதி வழியில் போவான் என்று யார் அறிவான்? பாவி ஒருவன் செய்த செயல் ஆவி துடிக்க வைத்ததம்மா! சிரிக்கின்ற ஒரு புலி எரிகின்ற தீயில் வேகுதம்மா! தெரிகின்ற ஈழத்துவாசல் பார்க்குமுன் விரிகின்ற சிரிப்படக்கி பறந்தாயே செல்வா...! முதலில் ஒரு சிங்கம் போனது இப்போது ஒரு புலியும் போகுது வலியும் வஞ்சகமும் எம் ஈழப்பாதை எங்கும் விரிந்தே கிடக்குது! தமிழ்ச் செல்வா... வலிக்குது நெஞ்சம்... கோபத்தின் கொந்தளிப்பில் எரியுது உள்ளம்... ஏய்! பகையே அடாது செய்தாய் விடா…
-
- 0 replies
- 1k views
-
-
யோசி....நேசி....![/ அந்திசாயும் இதமான நேரம் மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ் உன் தோளில் என் தலைசாய்த்து பன்னாட்டு கதை பல பேசி.... இனிமையான அப்பொழுதில் இணைந்த நம் இதழ்களோடு நாசிகள் உரசியவேளையில் நங்கையிவள் சட்டென கூசி... இன்னும் எத்தனையோ சில்மிசங்கள் இவையனைத்தயும் ஒருநொடியில் மறந்ததுமேனோ மன்னவனே மனம் திறந்து நீ யோசி.... என் உடல் உருக உருக உன்னையே தினமும் சுற்றி சுற்றி கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த வெண்ணிலாவை ஒருகணம் யாசி... பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள் விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து தன்னந் தனிமையில் அல்லாடும் கன்னியவளை வா வந்து நேசி...
-
- 23 replies
- 3.8k views
-
-
ஊருக்கு ஏற்றார்ப்போல் பேசி... உறவுகளுக்காக நடித்து...... வேலைக்கு ஏற்றார்ப்போல் ஆடி... வேண்டிய மட்டும் பொய் வார்த்தைகள் கூறி... நாட்களை நகர்த்துகிறேன் நான்.... என்னுடைய சுயத்தை இழந்தபடி.... http://www.ilankathir.com/?p=2622
-
- 1 reply
- 728 views
-
-
கவிதை ஜெயபாலன் விமர்சனமும்.- Na Ve Arul . . மா கவிதை ***************** ஒரு கவிதை நமக்குள் என்ன செய்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது வாசகர்களாக இருக்கிற மிக முக்கியமான வரையறை, எது கலை என்கிற கேள்விக்கு கலை என்கிற தனது புத்தகத்தில் சொல்வார்… “ஒரு மனிதன் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதுதான் கலை. அது ஒருவனின் உண்மையான பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கிறது. ஒருவனின் மௌனச் செய்தியை மற்றவனுக்குத் தெரிவிக்கிறது. ஒருவனுடைய சுய துக்கங்களின் அனுபவத்தை இன்னொருவன் பெறும்படி செய்கிறது. ஒருவனுக்குரிய செல்வத்தை மற்றவனும் அனுபவிக்க உதவுகிறது.” இது கவிதைக்கு…
-
- 0 replies
- 973 views
-