Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆண்ட இனம் அடிமைப்பட்டுக் கிடக்க அது அரசிழந்து ஆட்சி இழந்தது மட்டுமா குற்றம்..?! அது சக்தி இழந்து கிடப்பதும் குற்றமே..! எழுச்சி கொள் மாணவ இனமே குமுறும் இந்தக் குரல்களுக்கு.. சக்தி கொடு ஈழ தேசமதில் ஒரு விடுதலைப் பூப் பூத்திட...! அதிகார வர்க்கத்தின் பேசும் மொழி அடக்குமுறை.. காக்கிச் சட்டைகள் அதன் ஏவு இயந்திரம்.. அவை எதிர்த்து நில் அமைதி வழியில்..!! வரும் துயர் தாங்கி நில் சக்தி காட்டி நில்... மாணவர் ஒற்றுமையில்..! பொங்குவோம் நாம் தமிழராய் தரணியெங்கும் நீதி செப்பி மானுடம் போற்றும் தமிழினம் காக்கும் தமிழீழ தேசம் மீட்டிட...! போஸ்டர் மீளமைப்பு :- நெடுக்ஸ். இணைப்பு நன்றி:- முகநூல்.

  2. என்னவளுக்கு ! இன்று தொழிலாளர் /உழைப்பாளர் தினம் இன்றுதான் உன் பிறந்த தினமும் "எட்டு மணி நேர வேலை "என்று தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது என்னவளே ! எந்த புரட்சியும் இல்லாமல் இன்னும் இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய் ஒற்றையாய் ஒரு தசாப்தம் குடும்ப சுமை உன்மீது இரட்டையாய் ஒன்றானோம் புலம் பெயர்ந்து விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு எனக்கு எல்லாமே போனஸ் தான் நீயும் எனக்காய் மாறிப்போனாய் குழந்தைகளுக்காய் புதிய மண்ணில் மீண்டுமொரு போராடியவாழ்வு அத்திவாரத்திலிருந்து அலைகளில் அசைந்தவாழ்வு சுனாமியாய் அடித்து ஓய்ந்தது உயிரால் வரைந்த ஓவியம் உலகால் கலைந்த சீவியம் மனிதர்களுக்கு கடின வாழ்வு பச்சோ…

    • 2 replies
    • 774 views
  3. http://www.imeem.com/vaseeharan/music/PnPS...tamizhan_tamiz/ - பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும் பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே ச…

  4. வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்…

    • 0 replies
    • 774 views
  5. முப்பாட்டனின் பாடலும் அவனுக்கு முன்னான ஆதிமுந்தையோனின் பாடலும், எனக்கு கேட்கிறது. வேட்டையும் வேட்கையும் வேளாண்மையும் போதுமென, கூடில்லாத கூட்டமாக நகர்ந்த ஆதிமுந்தையோனின் நிலாப்பாடலில்... அடங்காத வீரமும் திடங்கொண்ட தோள்களின் தீரமும் முடங்கிக்கிடக்காத விவேகமும் தடங்குலையாத வேகமும் கேட்கிறது. சீரான காலடிகளும் குதிரைக் குளம்படி ஓசைகளும் காற்றை கிழிக்கும் வன்ம பிளிறல்களும் ஒளிபட்டு தெறிக்கும் வேல் முனைகளும் குருதி வழிந்து உயரும் வாள்களும் பொருதி முடித்த களத்தே முனகும் பேய்களும் நாய்களும் நரிகளும் தெரிகிறது அடுத்தவன் பாடலில், பாடல் கேட்கிறது மென்மையாக மெல்லியதாக சம நிலத்தின் பயணிக்கும் காற்றுப்போல..... பாடல் கேட்கிறது........ பாடல் கேட்கிறது ஒரே இர…

  6. தீபச்செல்வனின் அழகான கவிதை. தரப்பால்களின் கீழாய் கிடந்து அடங்குகிறது நமது எல்லா வழிகளும். துப்பாக்கியின் நுனியில் வடிகிற முகத்தில் எழுகிறது நமது எலும்புக்கூட்டின் நினைவுகள். எல்லாமே சட்டென தலைகீழாகிறது நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற துவக்கு சாம்பலை எதிராய் கிளம்புகிறது. சனங்களின் குருதி கடலில் குதித்து தப்பிச் செல்லுகிறது. வழியில் தற்கொலை செய்துகொள்ள துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு. ஒரு மாபெரும் அரசனின் ஒற்றை வாளில் முழுச் சுவரும் வெட்டுண்டுபோகிறது. பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின் கண்ணீரைத்தவிர குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை. மிகவும் கொடுமையான அனுபவங்களை வானத்திற்கு மேலால் கடல் நிரம்புகிறது. இப்பொழுது கடைச…

  7. March 9, 2016 வற்றாப்பளையில் வாழ்கிறாளாம் கண்ணகி... ஆழிப் பெருந் தாண்டவம் அயலில் நடந்தேகிய போதும் ஊழிப் பெருந் தாண்டவம் உன் முற்றத்திலே நடந்த போதும் கண் திறந்து பாராமல் கண் மூடி கண்ணகியே! கண் துயின்று கிடந்தாயே? பார் ஆண்ட தமிழினம் பாழ்பட்டு அழிந்தொழிய பார்த்திருந்து நீயும் …

    • 0 replies
    • 773 views
  8. சாவிலும் சுதந்திரம் இல்லை

    • 0 replies
    • 772 views
  9. கதிரவன் கரங்கள் தீண்டக் கண்டால் சூரியகாந்தி நாணும்.. கார்முகில் வரவு கண்டால் மயில் தோகை கொண்டாடும் பனித்துளி ஒட்டக் கண்டால் புல்லும் கூசிக் கூனும் மழைத்துளி ஒளித்தொடுகை கண்டால் வானம் கோலங்கொள்ளும் தூறல்தன் முத்தம் கண்டால் நிலம் நிறம் மாறிப் பூரிக்கும் பூவிதழ் விரிதல் கண்டால் வண்டு போதை கொள்ளும் நீரோட்டம் தேடக் கண்டால் ஆறு சலசலத்து குதூகலிக்கும்.. தென்றல் தடவக் கண்டால் தென்னங்கீற்று தெம்மாங்கு பாடும் சோடியது கூடக் கண்டால் கானக்குயில் கவி பாடும்... சூரியனின் சூடு கண்டால் பனி உணர்ந்து உருகும்... வான் மழை புணரக் கண்டால் சிப்பி கர்ப்பம் தரிக்கும்.. பெண்ணே உனைப் புவி கண்டால் நயகரா உறையும்... நான் உன் அழகு கண்டால் சிலையாகிச் சரணடைவேன் உன்னிடம்..! இய…

  10. எழுதிட மறுக்குது மனக்கோல் எழுதிட எடுத்தேன் எழுதுகோல் இயங்கிட மறுத்தது மனக்கோல் எழுதி எழுதி என்ன பயன் எதற்கும் தீர்வு இல்லை எனின் நாளும் நாளும் தொடருது அவலம் தடுத்திட வழி காண எவருமில்லா துயரம் போதும் போதும் பேசி ஏமாற்றும் நாடகம் முடிந்தால் மக்களைக் காப்பாற்ற வழி வேண்டும் அல்லல்பட்டு அல்லபட்டு அழிவதுதான் தமிழர் தலைவிதியோ என்று எண்ணிடும் போது இதயம் துடிக்கிறது அதனால் எழுதிட மறுக்குது மனக்கோல் வெற்று ஆரவாரங்களோ எல்லாம் என வெதும்புகின்றது உள்ளம் சொத்துக்கள் சேர்ப்பவரும் அரச இருக்கைகள் காப்பவர்களும் தான் அதிகமாகிவிட்டனர் என்னும்போது அழுவதா? கொதிப்பதா? என தெரியவில்லை. மெல்ல அரங்கேறும் இனக்கொலைக்கு உடந்தையாளர்கள்தான் கூடுமான…

  11. “விடுதலை” செய்யுங்கள் புல்லோடும் புயலோடும் கல்லோடும் கடலோடும் பேச முடிந்த கவிஞர்களே! என்ன திடீர் மௌனம் உங்களுக்குள்ளே? புயலுக்கு முந்தியதா? பிந்தியதா? என உங்கள் மௌனங்களுக்கு உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா? நல்ல கதை. புயல்களை புதிது புதிதாய் பிறப்பிப்பதே நீங்கள்தானே. நீங்களே தூங்கினால் நாளைய பொழுதுகளின் நம்பிக்கையை யார் கொடுப்பது? நீண்ட இரவுகளின் இராச்சியத்திற்கு உங்கள் இமைகளை அனுமதிக்காதீர் கசியும் உங்கள் கண்களைத் துடையுங்கள் கடலலை மோதும் ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள் முள்ளிவாய்க்காலில் சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை சாட்சியுடன் எழுதுங்கள் காற்றில் தவழும் அத்தனை அலைகளுடனும் உரையா…

  12. படுக்கையில் கிடந்தபடி பாதை கேட்காதே எழு….. உடல் முறித்து, பத்தடி நட. பாதை தெரியும். குப்புறக் கிடந்தால் சுவாசமே சுமைதான். திரும்பிப் பார். விடுதலைக்காக கடந்த தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும் பார்வையில் புலப்படும். தணற்காடுகளில் தீய்ந்தபோது நெஞ்சம் வேகியது சதுப்பு நிலங்களில் புதைந்தபோது சலனம் ஆடியது. மீள எழவில்லையா? களத்திலேயே மீண்டெழுந்த உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்? போராட்டக்களம் மாறியிருக்கிறது. இப்போது சூறாவளி அவ்வளவே. ஒட்டுமொத்த இன அழிப்பை உலகம் கணக்கெடுக்கிறது. துயர் கொல்லுதென்று நீ முடங்கிவிட்டால் இழப்புகள் கூட மௌனித்துப் போகும். அழுவதாகிலும்... அம்பலத்தில் நின்று அழு. இது உனக்கு மட்…

  13. காணும் காட்சியெல்லாம் கறைபடிந்த சிறைச்சுவர்கள் .கனவில் வருவதெல்லாம் அம்மா உன் கண்ணீர் கன்னங்கள். இதழால் ஈரம்செய்து நான் இனிக்கத் தந்த முத்தங்களை கண்ணீர் ஓடி ஓடி கரைத்தே விட்டதாம்மா? குழந்தைப் பருவத்தேநீ கொஞ்சி மகிழ்ந்த தெல்லாம்நினைவில் வந்துவந்துநிதமும் வதைக்குதாம்மா? பாசம் காட்டி என்னை - நடைபழக்கிய இடங்களெல்லாம் தீயாய் நினைவில் நின்றுமனதை கருக்குதாம்மா? கண்ணீராலும் கரையாதகவலைகள் கூடிக்கூடி - உன்நெஞ்சம் புண்ணாகநிதமும் வதைக்குதாம்மா? என்னம்மா நான் செய்ய? இரும்புக்கம்பிகளின் விலகாத பூட்டுகளால் என்னை விடுதலைசெய்துவிடமுடியாமல் இருக்கிறதே. பந்தம் பாசமெல்லாம் தூரத்தில் கிடந்தாலும் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு நீ சிறைக்கு வருவதால்தான்உறவுகள் …

  14. Started by vanni mainthan,

    எழுந்து வா..... எவர் வந்தால் எமெக்கென்ன எழுந்தோடி வா தமிழா எம் மண்ணை மீட்போம்.... அஞ்சாத தமிழினமே அஞ்சி நிற்பதுவோ....?? அறபோரில் நாம் வெல்ல அணிதிரளாயோ....??? அடிமை தான் வாழ்வென்று அடிமைக்குள் அடிமையாய் ஆண்டாண்டாய் கிடப்பதுவோ....??? அட தமிழா வெட்கமில்லையா எழுந்துவா.... மாற்றான் காலடியில் மறத்தழிழன் கிடப்பதுவோ...??? மானம் உண்டென்றால் மறத்தமிழா எழுந்து வா.... கூன் விழுந்தா வயதென்ன குமரா நீயென்ன யாராய் இருந்தாலென்ன நம் ஈழம் நாம் காண்போம் நம்பியே எழுந்து வா.... -வன்னி மைந்தன் -

  15. [size=5]ஆசைப்படும் பட்டாம் பூச்சி கையில் இருக்கும் போதே ரசிக்கணும் -[/size][size=1] [size=5]அது பறந்த பின்பு வெறுமை மட்டும் உன் கையில் இருக்கும் ...[/size][/size] [size=1] [size=5] ...::: ராஜீவ் :::...[/size][/size]

  16. அது ஒரு - நிலக் கீழ் இரயில் பயணம்.. கண்கள் அழகிய விளம்பரங்களோடு - தான் பேச.. மனம் - பல கணக்குப் போட்டு களைத்துப் போக.. கழுத்துத் தசைநார்கள் - ஓய்வுக்காக இழகித் தொங்க.. எதிரே.... வெள்ளை வான்வெளியில் நீல நிலவாய் உருண்டோடும்.. அவள் கண்கள்..! நின்று நிலைத்து - நிலை நிறுத்த வைத்து... பார்வைகள் சந்தித்து கணங்கள் கூட ஆகவில்லை.. விழியோ நட்பின்.. மொழி பேசுகிறது..! என் விழி... நியுற்றினோவின் வேகம் தாண்டி.. நிறப் பேதம் வென்று... செய்த சாதனையது..! "நியூட்டனின்" நிறப்பிரிக்கை கூட - அங்கு இல்லை..! அவள் தான் - அப்பொழுது என் தனிமை போக்கும் நண்பி..! விழிகளின் - மொழிப் புரிதலில் அவளும் இணங்க.. தொட்டிழுத்து …

  17. யூன் 06ம் நாளினிலே...! ------------------------ சிங்களத்தை எதிர்த்தெழுந்த சிறுத்தையொன்று நஞ்சுண்டு தனைத்தந்த நாளே யூன் 6! தீப்பொறியாய் வீழ்ந்தவனோ தீமூட்டி வைத்தபின்னால் திடங்கொண்ட இளைஞர்படை தீவெங்கும் மேலெழுந்து தம்பங்கை மீட்பதற்காய் செங்களத்தில் நின்றாரே! நின்றவரும் வித்தானார் நினைவெங்கும் முத்தானார் நிலம் மீட்கும் கனவோடு நிலத்துக்குள் புதைந்தோரை நினைத்தவிட்டு போகின்றோம் மனதுக்குள் வாழ்கின்ற எங்களது தேசமதை எப்போது மீட்டெழுவோம் என்றதிசை புரியவில்லை! எங்களுக்குள் பிரிவுநிலை எதிரிக்கு ஏற்றநிலை ஏற்படுத்திக் கொடுப்பதனை எப்போது மறப்போமடா! இவன் நாமம் சொல்வதற்கு எந்தனுக்கும் தகுதியில்லை இவன் நாமம் நினைப்பதற்காய் எடுத்துவந்தேன் சிலவரிகள் நஞ்சுண்டு எழவை…

  18. Started by prasaanth,

    sorry

  19. பூக்கள் அழகானவை ..... கற்பனயில் பூக்கும் -நீ பூக்களின் ராணியாக .... அழகாய் இருக்கிறாய் ....!!! உன் உடலின் வியர்வைகள் ... பனித்துளிபோல் அழகாய் .... உன் மூச்சு காற்று எங்கும் ... வாசமாய் மனம் கவர்கிறாய் .... நீ உதிர்ந்து விழுந்தாலும் ..... உன்னை தாங்கும் காம்பு யான் ... மீண்டும் பூப்பாய் என்று ... காத்திருக்கிறேன் ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன்

  20. A POEM WRITTEN IN கடற்புறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . 1979ல் எனது யாழ்பாணம் பலகலைக்கழக நாட்களில் எழுதிய கவிதை. முதலில் பல்கலைகழக மாணவர் சங்க அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டது. பின்னர் பெருந்தோழர் டோமினிக் ஜீவா அவர்கள் தனது மல்லிகை சஞ்சிகையில் பிரசுரித்தார். அதன்பின் பலதடவை மீழ் பிரசுரம் செய்யப்பட்டது. மலையகத்தைச் சேர்ந்த தோழி ஞானாம்பிகை ( gnana chitraranjan ) இலங்கை உயர்கல்வித் துறையில் பணியாற்றியபோது பாடபுத்தகத்தில் இக்கவிதை சேர்க்கபட்டதால் இலங்கை தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களிடையே பிரபலமானது. . இக்கவிதையை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமனியன் ஆங்கிலத்தில் மொழி பெயர்திருக்கிறார் யாரிடமாவது பிரதி இருந்தால் அனுப்பி உதவுமாறு கேட்…

    • 1 reply
    • 769 views
  21. செஞ்சோலை சொந்தங்களே ! என்சோலை பந்தங்களே !!! யார் கொடுத்தார் சாபம் எமை பிரிந்தீரே ஏன் கொடுத்தார் சோகம் புரியவில்லை நஞ்சாகி நீங்கள் எமை பிரிந்தீரே நெஞ்சோடு நீங்கள் தொடர்ந்தீரே பிஞ்சான நீங்கள் பினமாகிநீரே பிணமாலை கண்டு நீர் அழுதீரோ? மகிந்தாவின் சதியில் மாண்டு மடிந்தீரே மண்ணோடு மண்ணாகி எம்மை மறந்தீரே அந்நாளில் அநியாய சாவை அடைந்தீரே அப்பாவி உயிராக வாழ்வை துறந்தீரே கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே. வித்தான நீங்கள் மீண்டும் வளர்வீரே எம்மோடு ஒன்றாகி வாழ்வை பெறுவீரே எந்நாளும் உம்மை எண்ணி விழிநீரே எம் கண்கள் நீர் வந்து துடைப்பீரோ? கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே.

  22. Started by அஞ்சரன்,

    நீர் பகைஅருகில் போகும்போது பாம்புகளும் நடுங்கும் பாதைதனை விடும் .. கம்பி பட்டு முள்வேலிகள் பூமாலையாய் தெரியும் .. எதிரியின் மண்ணரன் சிறு புற்றாய் இருக்கும் . கந்தகப்பொதி புத்தக்பைபோல இருக்கும் சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும் கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நிங்கள் அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ... மச்சான் நீ எனக்கு பூசிவிட்ட கரி போகவில்லை நாளை உனக்கு பூசுறன் கரி எண்ணை கலந்து கழுவினாலும் போகாது காய்ந்தாலும் போகாது பருவாயில்லை மச்சான் வெடிவிளுந்தா போயிடும் ... டேய் நான் பக்கத்தில் உள்ளவரை ஒரு ரவை .. உன்னை நெருங்கா வேங்கையா கொக்கா .. என்று நீ கட்டி என்னை அணைத்த கணம் நினைவில் ... கண்கள் கண்ணீரை தூவுதடா உன் மேல் என் பாசக்கார தோழா..

  23. இந்தியப் படைகளின் பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சி. இதே போன்ற காட்சிகள் ஈழத்தில் வன்னியில்.. சிங்களப் படைகளினால். அவர்களின் வழிகாட்டிகள் யார் என்பதற்கு இந்தப் படம் சாட்சி... [ http://southasiaspeaks.wordpress.com/2009/11/23/hr-collective-in-india-calls-for-total-repeal-of-armed-forces-special-powers-act/ ] வானலையில் குயிலாய் ஒலித்தவள் இதய நோயாளி.. வன்னி ஆக்கிரமிப்பில் பல்லாயிரம் தோழிகளோடு பிணமாய்..! தமிழ் பெண்களை புணர்ந்திழுத்தே கொன்ற சிங்கள இன வெறிநாய்களின் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களின் கொடூரத்தின் முன்னே.. மக்களின் கண்ணீர் காய்வதற்கிடையில்.. நாலே வயது நடக்கக் கூட தெரியாத பிஞ்சு – அதை காம வெறியில் பிரிச்சு மேஞ்சு மோச்சரியில் போடுகிற ஆக…

  24. காலை, தாமரை பூக்கும் நேரம் அல்ல, இரவு, அல்லி மலரும் நேரம் அல்ல. ஈழத்தில், நாள்களை சிங்களக்குருவிகளின் அலகுகள் திறக்கின்றன, மூடுகின்றன. அவற்றின் இறுக்கமான இரும்பு நகப்பிடிகள் நேரங்களை நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு கறுப்புக் கனவுகளின் பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நனவுகளின் மார்பிலிருந்து இரத்தம் பவுத்த நெடியோடு பாய்கிறது குறுக்கும் நெடுக்குமாய் ஈழத்தில். தமிழ்மொழி பதைக்கிறது தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம் எல்லாமே- போராடும் தமிழன் கைகளில் ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன. இங்கோ தமிழனின் பதைப்பும் தவிப்பும். வேவு பார்க்கப்படுகின்றன விசாரணைக்குக்குள்ளாகின்றன. அர்த்தங்கள் மாற்றி வைக்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.