கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் அன்னையை ....நினைக…
-
- 0 replies
- 4.3k views
-
-
எனக்கும் அவனுக்கும் வாழ்கையென்னும் விடுதலையில்லா சிறைச்சாலைக்குள் புரிந்துகொள்ளா முரண்பாடு விரக்தியான நாட்கள் கண்ணீர் சிந்தும் கோலங்கள் முகமூடியால் மறைத்துக் கொள்ளும் முரண்பாடு போலியான உறவிற்கள் மலர்ந்து நிற்கும் சின்ன மலர்கள் சிக்கித் தவிக்கின்றது பாசமென்னும் முரண்பாட்டுக்குள் யாரோடும் சொல்ல முடியாச் சோகங்கள் எம் முரண்பாட்டால் நாளைய முதியோர் இல்லத்திற்காய் தயார்ராகின்றது
-
- 16 replies
- 4.3k views
-
-
குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே அருமைக் குஞ்சு மூன்றையும் அதில் வளர்த்து வந்தது நித்தம் நித்தம் குருவியும் நீண்ட தூரம் சென்றிடும் கொத்தி வந்த இரைதனை குஞ்சு தின்னக் கொடுத்திடும் குருவி தந்த இரையினால் குஞ்சு மெல்ல வளர்ந்தன சின்ன இறகு இரண்டுமே சிறப்பாய் வளரத் தொடங்கின தனது குஞ்சு பறப்பதை தானும் பார்க்க ஆவலாய் தந்தை குருவி சொன்னது தனயன் பறக்க வேண்டுமாம் இப்ப என்ன அவசரம் இறக்கை நன்கு வளரட்டும் இயல்பாய் குஞ்சு பறப்பதை இரசிக்கும் காலம் வந்திடும் சின்ன இறகு வளர்ந்தபின் சிறப்பாய் பறக்க முடியுமே இன்றே பறக்க விரும்பினால் இறப்பில் முடியக் கூடுமே தாய்க் குருவி சொன்னதை தடுத்தே தந்தை சொன்னது எனக்குப் புத்த…
-
- 8 replies
- 4.3k views
-
-
*** வசம்பெனும் குருவி குசும்புகள் பலசெய்து வலையிலே குடும்பமாய் வாழ்ந்தபின் மெளனமாய் ஓய்ந்து போனதென்ன? ஓடிப் போனதென்ன? *** புதிதாய் நண்பர்களை சேர்ப்பதிலும் ஏலவே நட்புறவு கொண்டோரின் இதயத்தில் நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நோக்குடனே நீண்டதூரம் சென்றாயோ? *** நிச்சயம் இன்றென அநித்தியம் நாளையென அன்றெமக்கு அன்புடன் பகர்ந்த அறிவுரையை மெய்ப்பிக்க நினைத்தே நீ பொய்யாகிப் போனாயோ? *** தருக்கங்கள் நிறைந்த கருத்தாடல் தளத்தில் சுடுகின்ற சூரியனல்ல நான் குளிர்விக்கும் நிலவென்று எமக்கு உணர்த்தவே நீ அமரன் ஆகினாயோ? *** குரலறிந்து, முகமறிந்து, முக…
-
- 5 replies
- 4.3k views
-
-
என் .... கண்களில் உன்னை.... ஓவியமாய் சுமந்து செல்கிறேன் .... உதடுகளில் உன்னை ... மந்திரமாய் உச்சரிக்கிறேன்.... இதயத்தில் உன்னை .... தேவதையாய் வணங்குகிறேன் ....!!! என் ... ஆத்மாவில் மூலாதாரம் - நீ உயிரோட்டத்தின் மூச்சும் -நீ குருதி ஓட்டத்தின் குருதியும் -நீ சிந்தனைகளின் வடிவம் -நீ என் உடலும் நீயே..... என் உயிரும் நீயே அன்பே ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் உடலும் நீயே உயிரும் நீயே கவிதை தொடர் 01
-
- 4 replies
- 4.3k views
-
-
அத்தை மகளோ... அம்மான் மகளோ.... எந்தத் தலைமுறை தாண்டிவந்த உறவோ....... நானறியேன்.....! சிந்தைக்குள் உன் நினைவிருக்கு சிதையாதே என் கனவிற்கு - என கதைகதையாய் பல சொல்லி உன் காலடியில் போட்டவளே..... மடியோடு எனைச் சாய்த்து தலைகோதி தாலாட்டி மனதோடு ஒன்றி போனவளே.... நான் கேட்டா உன் மடி தந்தாய்.... நீதானே என் பதியென்றாய் நீயாக நெருங்கிவந்து - எனை தீயாக்கி போகாதே... அணைத்து முத்தமிட்ட உன் இதழில் பதிக்க மறந்தேன் என் முத்திரை - அதுதான் தேடி அலைகிறேன் உன் முகவரி இன்று உணர்வுகள் தரும் உறவை விட உன் உறவுகள் சொல்லும் உரைகளோ சரி உனக்கு....? மனசுகள் பேசும் வாழ்வை விட உன் மாமன் மகன் மதனா பெரிது உனக்கு.....? காய்வெட்ட நி…
-
- 23 replies
- 4.3k views
-
-
பாவம்.. நயினை அம்மனும் புத்தரின் ஆக்கிரமிப்பில் ஆக்கினைகள் முத்த உயிர் தப்பவோ என்னவோ... ஓடி வந்து அசைலம் அடிக்க.. பாவத்துக்கு இரங்கி இங்கிலாந்தின் மகாராணியும் அளித்தா ஓரிடம்... அது தான் லண்டனில்... என்வீல்ட்...! நாளை அங்கும்... கருடனும் பாம்பும் கடல் கடந்து வந்ததாய் கதையளக்க எங்களில் பலர் உளர்..! இருந்தும் அசைலம் ரெக்கோட் சொல்லும் உண்மைகள் பல...! ஆண்டு தோறும் அங்கு நடக்குது கூச்சலும் கொண்டாட்டமும். அக்கம் பக்கம் எப்படித் தான் வாழுதோ யார் அறிவார்..??! மாலையானதும் பஜனை என்று சிங்காரக் குமரன்களும் குமரிகளும் கழுத்தை அறுக்கிறார்.. காலை ஆனதும் சோறை ஆக்கிப்போட்டு இரண்டு வேளைகள்.. குழையலாகவும் படையலாகவும…
-
- 45 replies
- 4.3k views
-
-
முதுமை இரவுகள் களைப்பின் முடிவில் அடைபட்ட பின்னாலும் காத்திருந்து கனவை துணைக்கழைத்து பதறி விழிக்க வைத்துப் பறந்து விடுகின்றது பாதி இரவுகள் திறந்த கூடைக்குள் மாலை வந்தடையும் கோழிகள் போல் இனி என்றுதான் வசப்படுமோ இந்த உறக்கம் உயிரினும் மேலான சுகதையல்லவா இந்த முதுமை எடுத்து கொள்கின்றது வேண்டியபடி செல்லும் உடல் கேளாத செவிகள் பாராத விழிகளும் உடன்வராத கால்களும் ஒலிகாணாத குரல்களும் ஒடுங்கி சுமையாகும் எனில் முதுமை சுமைதனே .
-
- 21 replies
- 4.3k views
-
-
வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கவிதையாகின்றது கேட்கின்றதா உங்களுக்கு வயல் வெளி தோறும் என் தலைவனின் காலடிச் சுவடு தேடி ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு கேட்கின்றதா உங்களுக்கு? தன் தலையை மண்ணில் மோதி அலறி அழுகின்றது அது முழுச் சிறகும் உதிர்த்து ஒற்றைக் காலில் தவம் இருக்கின்றது அதன் அலறல் கேட்கின்றதா உங்களுக்கு அதன் குரலில் இந்த யுகத்தின் அலறல் இருக்கின்றது குருவியின் தனிமையில் காலம் உறைகின்றது உறைந்த காலத்தில் நாம் சிதைவுற்றிருந்தோம் ஆட்காட்டி குருவி கூட காட்ட ஆளின்றி ஊர் முழுதும் சுற்றி வந்து அழுகின்றதாம் அது முன்னர் வீரர்களின் கல்லறையில் இருந்து பாடி தூங்க வைத்தது …
-
- 17 replies
- 4.3k views
-
-
காதலும் நட்பும் என் விரல் நகம் கூட என் காதலியின் உடல் மீது படாமல் எவ்வளவு கண்ணியமாகக் காதலிக்கிறேன் என்பதை என் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தேன் அவளது தோளில் சாய்ந்தபடி.
-
- 19 replies
- 4.3k views
-
-
கொஞ்சி விளையாட..!!! புலர்ந்தது பொழுது மலர்ந்தது என் வதனம் எழுந்தேன் படுக்கைவிட்டு தொழுதேன் உன்கால்களை ஏன் என்று நீ கேட்கிறாயா? எப்போதேனும் உன் கால்களை வார நான் குனியும் போது உனக்கு ஐயம் வராதல்லவா? சரியன்பே கொஞ்சம் சிரி உன்னிதழ்விரித்து... குளிர்த்து நீராடிவிட்டு குளிர்போக சுடுநீரில் அன்பைக் கலந்து அணங்கு நான் தேநீர் தயாரிக்க போகணும் அன்பே... சிரி ஒருமுறை சிரி குவி உன்னிதழைக் குவி கவி நீயானாலும் பல கவி நான் எழுதுவேன் உன்னிதழ் மேல்..! மங்கை நான் அருகிருக்க அங்கை அள்ளத் துடிக்கையில் அன்பே... கொங்கைகள் ஏங்குமடா! சங்குக் கழுத்தும் உன்னிதழ் முத்தத்திற்காக காத்திருக்குதடா! பொங்குகின்ற இன்பம் கோடி மங…
-
- 24 replies
- 4.3k views
-
-
காதல் என்பது இனிய சுவாசம் என்றாயே பெண்ணே உயிரும் உயிரும் கலப்பதுதான் காதல் என்று சொன்னாயே பெண்ணே நான் தான் உன்னுடய முதல் கவிதை என்றாயே பெண்ணே பொய்கள் உனக்கு பிடிக்காது என்று சொன்னாயே பெண்ணே என்னை வெறுப்பதாக ஏன் பொய் பேசுகின்றாய் பெண்ணே முற்களாக ஏன் என்னை குத்துகின்றாய் பெண்ணே உன் சொற்களாலே ஏன் என்னை கொல்கின்றாய் பெண்ணே உன் கண்களாலே ஏன் என்னை எரிக்கின்றாய் பெண்ணே நான் இங்கு மரித்து விடுகிறேன் உன் கைகளால் விசம் கொடு பெண்ணே
-
- 32 replies
- 4.3k views
-
-
என் ஐயராத்து அம்மணி கவிதை - இளங்கவி... என் ஐயராத்து அம்மணி நீ அழகான என் கண்மணி.... உன் ஒற்றை மூக்குத்தியால் என்னை கொழுவி இழுத்தவள் நீ.... உன் தெத்திப் பல் சிரிப்பில் என்னை சிக்கவைத்தாய் நீயடி... உன் ஆளுயரக் கூந்தலில் என்னை அசரவைத்தாய் நீயடி.... உன்னை வீதியெங்க்கும் துரத்தி நம் வீதியெல்லாம் உடைஞ்சு போச்சு.... அதனாலே நம் வீ.சி க்கு அதைத் திருத்துவதே வேலையாச்சு.... உன் கன்னக்குளி பார்க்க 'சுண்டுக்குளி' வரை வருவேன்; அதனால் தெருவில் இருந்த குளி விழுந்து என் காலெலும்பபு உடைஞ்சிருந்தேன்... வீட்டில் மீன் பொரியல் விடலைக் கோழிக்கறி விரும்பிய நேரம் உண்ண பூநகரி மொட்டைகறுப்பன் சோறு... அத்தனையும் சமைத்துவைத்து அம்மா …
-
- 34 replies
- 4.2k views
-
-
பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே இறக்க வைக்காதே பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே இவனைப்போல் பாவிகளை இனியேனும் படைத்து வைக்காதே வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு மூலம் வர வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ கோடி வகை நோய் கொடய்யா சாகும் வரை அழ விடய்யா இப்பிறவி முடிவதற்குள் இவன் கணக்கை முடித்திடய்யா உச்சி மரக்கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் இவன் பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி பாழ் நெருப்பில் எறிந்தவன் இவன் பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே ! முகநூல்
-
- 4 replies
- 4.2k views
-
-
அணு அணுவாய் காதல் கவிதை காதல் என்பது இருபால் ... கவர்ச்சியல்ல - உயிரின் உன்னத உணர்வு ....!!! @@@ காதல் இல்லாத இதயம் ... துடித்தால் என்ன ...? துடிக்காமல் விட்டால் என்ன ..? @@@ திருமணமாகாமல் இறந்து விடலாம் ... காதல் செய்யாமல் இறந்து விடாதீர்கள் .....!!! @@@ எனக்கு காதலே பிடிக்காது என்பவர்கள் ... காதலை பயத்தோடு பார்ப்பவர்கள் ....!!! @@@ எந்த நேரமும் இன்பமாய் ஆசைப்பட்டால் எந்த நேரமும் காதல் செய் ...!!!
-
- 8 replies
- 4.2k views
-
-
பகுத்தறிவு ------------------- கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் ! அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.! மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் ! பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் ! பசி பசியென்றழுதிருக்கமாட்டோம் ! பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் ! விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்! வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்! கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் ! காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் ! பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே.......... நிமிடத்துக்க…
-
- 8 replies
- 4.2k views
-
-
கடலேறி பொருள்கொண்டு கரையேற சென்றாய்-புரியாத கரியாரால் கைதாகி நின்றாய்.... உடலினுள் நோய்வந்து வாட்டையில் கூட துவளாது அவையேறி நோன்பது இருந்தாய்... பகை வந்து தமிழ் உயிரை பலியது கொள்ள பார்த்தே தான் நின்றதே பாரத தேசம்.. சதியோடு விளையாடி சதியாணை புரிந்தார் அரியணை காத்திட அவரைதான் தடுத்தார்... எதிரென்ன வரிகினும் எழுந்தேதான் நடந்தார் ஆவிதான் துறக்கினும் அவைகாக்க துணிந்தார்... இவரது ஆற்றலை இதயமா மறக்கும்...?? தமிழீழ தேசமே தலையிலே தூக்கும்... அண்ணனே உனக்காக அணியாக திரள்வோம் தூங்காது உன்னரு தூணாகி நிற்போம்... கலங்காதே அண்ணனே கண்ணீர் துடை உண்ணாமல் நீ வேண்டாம் உடல்தேறி நீ வேண்டும்....
-
- 13 replies
- 4.2k views
-
-
ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... ஒரு கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....!!! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி என் மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....!!! # என் இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும் இதயத்துக்கு ... புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......!!! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் …
-
- 0 replies
- 4.2k views
-
-
யாழிலை எவ்வளவோபேர் வவந்து கவிதைகள் எழுதி தள்ளினம் அதை பாத்த எனக்கும் ஒரு ஆசை கவிதைதஒண்டு எழுதவேண்டும் என்று அதுவும் காதல் கவிதை கண்ணைமுடிஎன்ரை முனியம்மாவை நினைச்சன் கவிதையா வந்து கொட்டிச்சுது அதிலை நீங்களும் நனைந்து கருத்தை சொல்லுங்கோ அப்பதான் அடுத்த கவிதைஎழுதுவன்* கோதுமை மா நீ கொதி தண்ணி நான் இருவரும் சேர்ந்தால் ஆசையயாய் சாப்பிடும் தோசையாகலாம் உள்ளி நீ மல்லி நான் இருவரும் சேர்தால் இரசம் ஆகலாம் மிதுவான தேங்காய்் பூ நீ மிளகாய் செத்தல் நான் சேர்த்தரைத்்தால் சம்பல் ஆகலலாம் வழிப்பான புளி நீ வாடல் மரக்கறி நான் வா சேர்ந்து சாம்பாறு ஆகலாம்
-
- 26 replies
- 4.2k views
-
-
யுத்த நிறுத்தம்????????! யுத்தம் நின்றது என்று யரோ சொன்னார் அப்போ சத்தமில்லாமலே எங்கள் சந்ததி அழிகிறதே எப்படி?? சதைகளை ஓநாய்கள் தின்னுதே.. எங்கள் சரித்திரம் மெதுவாய் கண் மூடுதே.. சாவோடு என்னடி தோழி போர் நிறுத்தம்? தாயும் பிள்ளையும் அழியும் நாளில்.. தாலாட்டு இனி வாழுமா? பூவோடு காம்பும் சேர்ந்து எரியுதே.. செடி இனி வாழும் என்று சொன்னால்.. உலகம் சிரிக்காதா? நிறுத்து நிறுத்து என்று உலகம் சொல்லட்டுமே.. எங்கள் நிம்மதி தினமும் குண்டு.. அதிர்வில் குலைந்து போனதே-அறியுமா? யார் என்ன சொன்னால் என்ன? தாயை கட்டியணைக்க ஒரு சாத்திரம் தேவையா? சர்வதேசமே!!!!!! போர் நிறுத்து என்று நீ சொன்னாலும்... ஊர் நிறுத்தம் இருக்காது…
-
- 28 replies
- 4.2k views
-
-
உன் கல்லூரி நண்பி மனிதக் கூடுகளைச் சுமந்தலையும் உயிர்களுக்கு மத்தியில் ‘மனிதம்’ காட்டி என்னை மயங்க வைத்த தோழனே ! உன்னைப் பிரிவதற்கு என் மனம் ஒப்பவில்லை நண்பா. வார்த்தையில் வர்ணஜாலங்களை வாரி இறைத்த என் கல்லூரிக் கலைஞனே என் உயிரை அழுத்திப் பெருவலியெடுக்க, உன்னைப் பிரிவதை எண்ணி நான் துடித்துப் போகிறேன். காயமற்ற இடங்களில் கூட உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா ! உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட சிறு தீவின் குமுறலாய் துயரெடுத்துப் புலம்புகிறது என் இதயம். என் உயிர் நண்பனே ! உன் கைப்பேசியில் என் எண்ணை அழுத்தி அடிக்கொரு ஒரு ‘குறுஞ் செய்தி’ அனுப்…
-
- 7 replies
- 4.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு கவியரங்கம் செய்யலாம் என்று நினைத்து இந்தக்கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் எழுதிய உங்கள் புதிய, பழைய காதல் கவிதைகளை இங்கே இணையுங்கள். உடனடியாக கவிதை எழுதும் நிலமையில் இருப்பவர்கள் உங்கள் கவிதைகளையும் எழுதி இங்கு இணைத்துவிடுங்கள்.. நான் முன்பு சிலகாலம் முன்னம் எழுதிய கவிதை மாதிரி ஒன்றை இணைத்து கவியரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன். இதுவும் கவிதையோ எண்டு எல்லாம் கேட்கக்கூடாது. ஏதோ எங்களால முடியுமானதை தானே நாங்கள் செய்யலாம். தொடந்து புதிதாக ஏதும் எழுதக்கூடியதாக இருந்தால் அவற்றையும் இங்கு இணைக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!
-
- 22 replies
- 4.2k views
-
-
நான் பட்ட -அவமானம் எனக்கு அதுதான் -வருமானம் உறுதியாக எடு -தீர்மானம் வெற்றி என்பது -அனுமானம் வாழ்க்கை என்பது -பிரமானம் உன் முடிவில் வாழ்வது -தன்மானம்
-
- 3 replies
- 4.2k views
-
-
இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே... ஏன் இந்த வலி உதிரியானது? சுமையை தாங்க முடியாமலா? அல்ல இதயம் உடைந்ததாலா? பூக் காதல் தீயில் குளிக்குதே வீசிய பூ மேகத்தில் பாவ வாழ்க்கை தொலைக்கவா? சொல் ஏன்? நிஜம் எங்கே.....? மீண்டும் மீண்டும் திரைக்குள் செல்கிறதே ஓசையின் துளி தெறிக்கவா ? அல்லது பூட்டிய அன்பு வாசிக்கவா? சாப அலை வந்து வீசுதே அது அடித்து செல்கிறதே இன்று உடைத்து பார்த்து விட்டதால் பெருகிற கண்ணீர் கவிதை இந்த கண்கள் எழுதுதே நீர்க் குளத்தில் கண்ணீர் பொங்கிப்பொங்கி ... நிலவின் ஒளியில் அருவி வழியில் வடியிது உயிர் இழந்தும் பாடாமல் துடிக்கிறது ......போராடுமா? இலையும் கிளையும் ! இக்கண்ணீர் கவிதையால்..காதல்......சேரும…
-
- 6 replies
- 4.2k views
-
-
கருணாநிதிக்கு பல்வேறு தலைப்புகளில் பாராட்டு விழா நடத்தியாகி விட்டது. சமீப காலமாக பாராட்டு விழா நடத்தி நீண்ட நாட்கள் வேறு ஆகி விட்டன. அதனால் என்ன செய்யலாமென்று, திமுகவினர் யோசித்த போது அவர்களுக்கு வந்த திடீர் யோசனைதான், “ஊழல் மன்னன்“ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கலாம் என்ற யோசனை. இதையொட்டி, நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு நம்ப தமிழ்நாடு சினிமா ராஜ்ஜியத்தின் ஆஸ்தான கவிஞர்கள் வைரமுத்துவும் வாலியும் கவிதை வாசித்தால் எப்பிடி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை....இதை நீங்கள் யாரவது கண்டினியூ பண்ணவும்... வைரமுத்து… அன்று சர்க்காரியா சொன்னார். நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று. ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய். வானில் உள்ள தேவர்களின் எ…
-
- 16 replies
- 4.2k views
-