Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அண்டையில் இருக்கும் அசிங்கமே அநியாயமே 87 இல் ஈழத்தில் தமிழனைக் காப்பதாய் படைகள் கொண்டு வந்தாய் சிங்களத் துவக்கால் அடியும் வாங்கினாய் இருந்தும் அவன் வால்பிடித்து கரம் குலுக்கி அடித்தவனைக் காத்தாய்.. நண்பனெனும் வரமும் கொடுத்தாய்..! வரவேற்று.. பூமாலை போட்ட தமிழனை "பூமாலை" என்ற பெயரில் படைகள் ஏவிக் கொன்றாய் குவித்தாய் சொந்த இனத்தைச் சூறையாட கூலிகளை வளர்த்தாய் இறுதில் சுருட்டியதோடு கூட்டிக் கொண்டு ஓடினாய்..! நீண்ட தொல்லை இது துரத்தாமல் தீராது என்றே.. வீரப் புலிகள் விரட்டி அடிக்க ஓடிய நீ... மீண்டும்... கொல்லைப்புறந்தில் இருந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களத் துணையோடு வேட்டைகள் ஆடினாய்..! தமிழர் சாவினில் அரசியல் செய்தாய் காந்தியம…

  2. வருசாவருடம் பொங்கல் வருகிறது பொங்கலும் நடக்கிறது ஏதோ குறைவது போல்....... என்ன இல்லை புலத்தில் அரிசி சக்கரை கரும்பு அவல் பொங்கிட அவள்... எல்லாம் உண்டு... இருந்தாலும் இனிப்பில்லை .......... பொங்கலாம் புத்தாடை உடுத்தலாம் உற்றார் உறவினர் அயலவர் வீட்டுக்கும் போய்வரலாம் இருந்தாலும் ஒட்டுதில்லை............. என்ன குறை??? அந்த மண் இல்லை அது எங்களிடமில்லை அது வரும் நாளே மனம் பொங்கி பொங்கலிட்டு புதுப்பொலிவுடன் கம்பீரமாக தமிழன் தை நோக்கி நடக்கும் நாள்..............

  3. புலிகளை வாழ்த்துவோம் புத்தெழில் கொஞ்சும் தமிழீழத்தில் தித்திப் பளிக்கும் முஸ்லீம் சிறுவரின் முத்தம் வாங்கி முழங்கு போர்க் களத்தே இத்தமிழ் விடுதலைப் புலி எழுகின்றான்…. எங்கள் சிறிய பிள்ளைகள் எழுச்சி பொங்கிப் படைக்கும் புலிகள் தோளில் தொங்கி ஆடத் துடிக்கும் காலம்… மதங்கள் வேறுதான் மனங்கள் நூறு விதங்களா? இல்லை! தமிழினம் ஒன்றே! கற்றவர் மலிந்த கலையாழ் மண்ணும் அற்புத மீனிசை அமைந்த தேனாடும் நெற்கதிர் குலுங்கும் வன்னி நிலமும் நற்றமிழ் முதுபுகழ் மாந்தை நன்னாடும் உற்ற கோணமா மலையும் மக்கள் பற்றிவாழ் காத்தான் குடிப்பட்டணமும் கற்குடாக் கடலும் நாட்டுக் கவிதை முற்றிப் பழுத்த அக்கரைப் பற்றும் விற்பனை மடுவின் விரிந்த காடும் பற்றி…

  4. Started by மாறன்,

  5. விடை ஒன்று கொடுத்து புதியதை வரவேற்று விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளினர் ஒருபால் வித விதமாக, விழிகளை உயத்த வைத்த விலை கொண்ட ஆடையர் ஒருபால் கடிகார முள்ளை கன நேரமுற்று காத்திருந்து கையிலிருந்த வெடிதனை வெடித்தோர் ஒருபால் பெடிகளாய் நின்று கும்மி குத்தி பெண்கள் பக்கம் திரும்பி இளித்தவர் ஒருபால் கைகள் வலிக்க வலிக்க கஷ்டம் பார்க்காமல் கனகதியில் SMS அனுப்பினர் ஒருபால் லட்டு ஜிலேபி என்றி பட்சணங்கள் உண்டு பக்கத்துக்கு வீட்டுக்கு தந்து பறை சாற்றியோர் ஒருபால் பீர் ஒரு கையில் பிகர் ஒரு கையில் என்று பின்விளைவுகள் அறியாது சுத்தினர் ஒருபால். தேரடி வீதியிலும் திரும்பிய திசைகளிலும் சந்தோசம் கொப்பளிக்க இருந்தனர் இவர்கள் ஊரது…

  6. தம்பி ராஜாவும்... அண்ணன் டவாலியும்..! எதை பற்றி பேச வேண்டும் அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் வியாபாரம் என்ன என்று சொல்லுங்கள் இடம் வாங்க வேண்டுமா அதற்கும் எங்களிடம் நபர்கள் இருக்கிறார்கள் அணைத்து வியாபாரமும் இணைய தளம் மூலம் வைத்துக் கொள்வோம் கவிதை எழுத்து பதிவுகள் பிண்ணூட்டங்கள் இவை அனைத்தையும் எரித்து விடுவோம் அல்லது எறிந்து விடுவோம் பத்தாயிரம் அல்ல சில பத்தும்... பத்தும் போதுமானவை..? கியாரண்டி கொடுக்கப்பட்டு விட்டன..! மரணம் நிகழ்கிறது கொண்டு போய் எறிப்பீர்களா மண்ணுக்குள் செம்முவீர்களா..? ஆனாலும் ஏதோ ஒன்று மீன் முள் குத்தியதைப் போல நல்ல விருந்து உண்டு வாந்தி எடுத்ததைப் போல …

  7. Started by akootha,

    [size=4]பிட்சை வரங்கேட்டேன் தாயிடம்[/size] [size=3][size=4]இச்சையுடன் என்கனவில் வந்தாளே![/size][/size] [size=3][size=4]லச்சையுடன் அவள்முன் பணிந்து [/size][/size] [size=3][size=4]அச்சமுடன் வரமொன்றுக் கேட்டேனே![/size][/size] [size=3][size=4]நுட்பமுடன் என்மனக் கருத்தறிந்த [/size][/size] [size=3][size=4]தட்சன்மகள் தாட்சியாயினி முறுவலிக்க [/size][/size] [size=3][size=4]"குப்பைத் தொட்டி"யாய் நான்மாற[/size][/size] [size=3][size=4]சப்பை வரத்தில் சலிப்புற்றாளே! [/size][/size] [size=3][size=4]ஏனிந்த ஏமாறும் எள்ளினகைக்[/size][/size] [size=3][size=4]கனியும் வரமெனக் கேட்டாளே? [/size][/size] [size=3][size=4]நானிந்த உலகில் நாணிக் [/size][/size] [size=3][size…

    • 0 replies
    • 704 views
  8. யாழ் இணையத்தின் சமூக, இலக்கியப் பணி, தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணி போற்றுதலுக்குரியது. யாழ் இணையம் மேன்மேலும் வளர்க!

    • 2 replies
    • 704 views
  9. Started by அறிவிலி,

    இன்னொருமுறை உனக்கு பிறப்பு வாய்த்தால்....... எங்கள் இனத்தில்.. பிறக்காதே! எனக்கு அப்பா.. நீ தானென்று...... சத்தமிட்டு சொல்வேன்.... அதில் எந்த களங்கமும் என் ... அம்மாவுக்கும் வராது...! ஏன் என்றால்... என் அம்மாவின்.. தாத்தாவுக்கும்.. நீர்தானே அப்பா! உயிரின் தொடக்கம் என்பது... வெறும் பிறப்பு ... உறுப்புக்கள் காறி... துப்பும் சங்கமம் இல்லை..! மானம்....! பிறந்து ..தின்று.. உண்டு ..ஒய்யாரமா.. கதை-பேசி.. சத்தமெழுப்பி... நாளையபொழுதில் .. செத்துப்போனால்... காக்கை கூட... தன் இனத்துக்காய்..... அழும்! ஊருக்காவே...வாழ்ந்து.. போனியே உனக்கு ஏதாச்சும் தந்ததா.. இந்த சனம்? நம்பினவன.. சந்ததியை... …

  10. தொலைவே இல்லாத பின்னிரவொன்றில், விடிகாலைப் பொழுதினைத் தொலைத்துவிட்டு, நிரந்தரமாகிப்போன கும்மிருட்டில், சத்தமே இல்லாமல், சந்தம் பாடுகின்ற குயில்களின் குரல்வளைகளை அறுத்தெறிந்து, கோட்டான்களைக் கூப்பிடுவோம் வாருங்கள்! முகவரி இல்லாமலே பூபாளம் பாட! 10/dec2014

  11. திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டிருக்கும் நிலையில், இது குறித்து கவிஞர் பழநிபாரதி தன் வலிமையான வார்த்தைகளால் அவரது மரணத்திற்கு கவிதை எழுதியிருக்கிறார். உருக்கமான அந்த கவிதை இங்கே.... உண்மை கண்ணாடியின் முன் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது... கண்கள் ஆழ்ந்த இருளில் இரண்டு விளக்குகளைப் போல பிரகாசித்தன விலை பேச முடியாத அழகு அதன் கர்வமாக இருந்தது யாருடைய கைகளோ கண்ணாடிக்குப் பின்னிருந்து பாதரசத்தை உரிக்கத் துடித்தன முடியாத ஓர் இறுக்கத்தில் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது உடைந்த சில்லுகளில் உண்மையின் ஒரு முகம் பத்து நூறு ஆயிரம் லட்சமென விரியத் தொடங்கின - பழநிபாரதி

  12. ‎30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்... அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து வகுத்துண‌ரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே கவிஞ‌னெனில் …

  13. Started by nochchi,

    நன்றும் தீதும் - 17-Nov-2014 11:11:06 AM ஊருச் சோற்றுக்கு நாக்கை நீட்டாதே ஊழல் செய்தே பொருளை ஈட்டாதே காரி உமிழ்வான் இனிவரும் பிள்ளை கவின்நிறை முகத்தை ‘தொட்டி’ ஆக்காதே ! பதவிப் பசிக்கு ஆடுகள் சாகலாம் கதவின் இடுக்கில் கண்ணகி ஏங்கலாம் உயர்வுக்கு உழைத்தவர் பாதியில் ஏகலாம் ஊர்ப்பணி செய்பவர் உறங்கிட ஏலுமோ? சாதியும் மதமும் சமத்துவம் நல்கா தீதிலா வாழ்க்கை திசைமாறிப் போகா பாடாற்ற வேண்டின் பண்பாட்டு அமைப்பில் பாடமும் பாதையும் ‘நாமாதல்’ வேண்டும் காலச் சூழ்நிலை கறையைப் பூசும் கண்ணியம் காப்போர் உள்ளம் கூசும் குற்றம் களைந்து சுற்றம் பேணடா குருடன்கைத் தடியாய் மாறிடப் பழகடா ! நன்றும் தீதும் பணியைப் பொறுத்ததே பண்பிலாச் செயலால் …

  14. எல்லோரும் புறப்படுவார்கள் ஆயத்தங்கள் மிக மிக இலாவகமாகவே நடக்கின்றது நேற்று ஒருவன் புறப்படிருந்தான் இன்று ஒருவன் புறப்பட்டுவிட்டான் நாளை ஒருவன் புறப்படுவான் சிலர் அடம் பிடிக்கின்றார்கள் நிச்சயமானவர் தாங்கள் என்று அவர்களை அதட்ட முடியவில்லை அது அறியாமையின் முதற்புள்ளி வலுக்கட்டாயமாக இழுக்கவும் முடியவில்லை அழுத்தங்கள் கொடுப்பது அறிவுடையவன் செயலன்று இப்போது என்ன செய்வோம் இந்த பயணத்தை நினைத்து உறக்க அழுவோமா? இல்லை இருக்கும் காலத்தை இனிமையாக்குவோமா? யாரெல்லாம் ஆசைப்படுகிறார் கோவப்படுகிறார் கொஞ்சித்திரிகிறார் கொள்கை பரப்புகிறார் வாருங்கள் உரக்கத்சொல்வோம் எங்கள் பயணத்தை எங்கலோடு விட்டு விடுங்கள். கட்டாயம் திணிக்காதீர்கள் அத…

  15. மனதை நெருடிய கவிதை. கடவுள்......? கலைமகள்: பாலுமினி பாகும் பருப்புடனே தேனீந்து காலம் முழுதுமுனைக் கைதொழுதோம் - சீலமுடன் சங்கத் தமிழ்வீரம் சாற்றும் மறத்தமிழைச் சிங்கம் சிதைக்கவிட்ட தேன் வெள்ளைக் கொடிபிடித்து வெள்ளை மனமெடுத்து வெள்ளம் எனும்மக்கள் வாழ்வதனை - அள்ளி கோரக் கொலைசெய்வோர் கேடு நிறுத்தவர வாரி உடல்சிதைத்த தேன் மலைமகள்: தேருங் கலை,கல்வி திறைபொன்னும் பின்வைத்துப் பேரும் புகழ்வீரம் பெரிதென்றோம் - சேருமனம் உன்னை முதல்வைத்தே உள்ளம் தொழுதவரை அன்னைநீ மாளவிட்ட தேன் கல்விபணம் காப்பதெனில் காணும் சுதந்திரமே இல்லையொரு வேற்றுவழி என்றெண்ணி - வல்லவராய் வாழ்வின் விடுதலைக்கு வாளெடுத்த நல்லவரை வீழ்ந்திடவென் றாக்கியது மேன் கலைமகள…

  16. ஊரை உறங்க செய்து நாய்களுக்கு தெரியாமல் நடந்து வெள்ளி பார்த்து திசை பிடித்து அவன் எல்லையை தொடும்போது ஆந்தைகள் முழித்து இருக்கும் அவன் மட்டும் விடிகாலை பொழுதில் குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க அவன் கால் அருகில் அரவம்போல் நகர்ந்து அவனை கடந்து போகும்போது உள்ளம் மகிழ்ந்து இருக்கும் உள்ளுக்குள் உள்ளே வந்துவிட்டோம் என இறுமாந்து நிமிர்ந்து நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும் யாரு நீ எங்க போறா .....பதில் யோசிக்க முன் சுடும் விசை கீழ் நோக்கி போகும் அதன் டிக் ஒலி அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும் ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும் சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு வலம் இடமா பாய்ந்து வேட்டுக்களை தீர்த்து எம்மை காப்பற்ற…

  17. [size=3]அவன் கொடுத்த ரோஜாவை திருப்பி எறிந்ததால்[/size] [size=3]ரோஜாக்கொத்துக்கள் அவன்காலடியில்[/size] [size=3]கல்லறையில் அவன்.[/size]

  18. இனியேனும் நாமிங்கு ஒன்றாகுவோமே ! -------------------------------------------------------------------- காலத் துயர் வலி தாக்கிடும் வேளையில் கைகளைக் கோர்த்தொரு உறுதியெடுப்போம் வீணிற் பொழுதுகள் போனது வேயென்று காணற் பேச் சொலி காதிற் கேட்குது போனது போனது விடுதலை போனதாம் ! எங்கே போனது விடுதலை என்று நாம் சற்றே சிந்தனை கொள்வதே நல்லது எப்போ விடுதலை வந்தது என்றே சற்றே சிந்தனை கொள்வதும் நல்லது ! நித்திரை போலவே நடித்தவர் சிலர் நித்திரை விட்டெழுந்தவர் போல் சிலர் நின்று பேசியே நிமிர்ந்து பார்க்கிறார் போனது போனது விடுதலை போனதாம் ! நேற்று வரைக்கும் தூங்கி யிருந்ததும் காற்று வாங்கக் கடற்கரை போனதும் கதவை மூடிக் கதைகள் சொன்னதும் காலத்துயரின்…

    • 0 replies
    • 702 views
  19. அசோகன் பேசுகிறான் மீண்டும்..... வரலாறுகள் மாற்றி எழுத முடியாதவை ....கடந்த சில காலங்களில் பல ரணங்களை எமக்குள்ளே விட்டு சென்ற எமது தேசத்தின் அழிவுகளும் கூட..இறந்து கொண்டு இருக்கிறோம் என்பதை தவிர எதையுமே அறிந்திராமல் இறந்து போனது எத்தனை பேர்.... அதன் வலிகள் என்னை இன்றுவரை சுகமாக தூங்க விட்டதில்லை.... புத்தம் இந்த உலகிற்கு பரவியது அசோகனின் மூலமே...... அன்பு ஒன்றை தவிர ஏதும் இல்லை இவ்வுலகில் பெரிதாக என்ற வார்த்தை எல்லாம் பொய்த்து போனது எம் மண்ணில்... தமிழனை கொள்வோம்.... தமிழனை கொள்வோம்.... தாரக மந்திரம் இதுவென சொல்வோம் என்று கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய வில்லை தமிழனுக்காக சிங்கள அரசு... எல்லாம் முடிந்தது தடையங்களும் அழிந்தது ... இன்று சில அசோக மனங்கள் மட்டும் உ…

  20. விதைகளை தின்னும் தேசத்தில் முகிழ்த்தவளே, கனவுகளை கருவறுக்கும் கொலைவாள்களிடையே எழுந்தவளே.. இழப்பின் வலிகளை மொழிகளால் இறக்க முனைந்தவளே இழிகாலதில் இறங்கிய ஊழியின் மகளே.. குருதி குடிக்கும் பேரினத்தின் குரல்வளையில் விலங்கு பூட்டவா நீ எழுந்தாய் ... இல்லையே.. அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே நீ அமர்ந்தாய் வீதியில்... விபூசிகா... வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே உன் குரலணுக்களின் தீண்டலால் தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் கருகி நைந்துபோன திடல்களிலும் ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன.. வேரீரமிழந்து இலையுருத்திக் கிளைசிதைந்து போன பெருமரத்தில் கூடுகள் அழுகின்றன. உடல்சுமந்த குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்.. எட்டப்பர்கள் நாங்க…

    • 6 replies
    • 701 views
  21. உய்தல் தேவஅபிரா மரணத்தைக் காலமும் கடலும் மட்டுமே எழுது மென்றிருந்தோம். எம் வாழ்க்கையின் மரணத்தை அரசர்களே எழுதினார்கள். மரணம் பெருநிலமானது… வாழ்வோ சிறுதுளியானது…. கரைத்துவிட அஸ்தி இல்லை.. கண்ணிர் விடச் சமாதியில்லை… காணாமல் போகவும் காத்திருக்கவும் கையறவும் நேராத போரொன்று சொல்.. இருப்பவரை ஏறிமிதிப்பவர்க்கு இறந்தவர்களை ஏறிமிதிப்பது கடினமா என்ன? உனதும் எனதும் பெறுமதி இருத்தலில் இருந்ததா? இறப்பில் இருந்ததா? இறக்கப் பழக்கிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் இருக்க விரும்பிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் கலந்து விசும்பில் அலைகின்றன. போரின் சதிரில் ஆடிவிட்டு பேயலையும் பெருநிலத்தில் …

  22. கவிதை: அகல் விளக்கு சேரன் கடவுளர்க்கு நிழல் உண்டா? இருந்தாலும் யார் கண்டார்? எம் நெருப்புக்கும் கண்ணீருக்கும் இல்லை. சுக்கிலத்தாலும் குருதியாலும் வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக நாம் அனுப்பும் கணை எதுவெனத் தேடிக் காட்டுக்குள் போக முடியாது. காடும் எரிகிறது. ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது இருப்பதே ஒரு கால் உருவற்ற கவிதையின் உயிரை தேடாதே தீ பெருகும் என்றாள் பெருகுவது எல்லாம் நன்மைக்கே எனத் தொடர்ந்து நடந்தேன் கடலோரம் வழி விடா நீர் வழி தரும் மொழி குருதிப்பணம் திரட்டி பொய்யில் நினைவேந்தல் செய்தால் கண்ணீர் நிறையாது மழை பெய்து தீபத்தை இருளாக்கும் அலைகளிலா ஒலியில் ஓலம் எழுந்து புலம்பெயர் உலகின் காற…

  23. கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் ஆழிப்பேரலை நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆவணப்பதிவு. Documentary -Tsunami 2004 video by TYO Canada

  24. பொதிகை மலை திமிர்த்த சிறு முனி அகத்திய மாமுனி எழுதிய தமிழ் குமரி தொடு தமிழ் மண் குளிர் தென்றல் சுமந்த மூவேந்தர் வளர் தென் பெண்ணை பாலாறு தொடு நதி பெருகும் வைகைப் பெரு நதி தமிழ் மணக்கும் காவிரிப் பூம் புனல் அத்தனை சிறப்பும் பெற்று அகமகிழ்நதிருந்த தமிழணங்கு இடிமிசை அரன்று இனி தமிழ் அகன்று போகும் இழி நிலை அரங்கேறும் இது நிலையாகுமோ வெனும் அறி நிலையறியா உயிர் நிலை துடிக்கும் இது நிலையோ பொதி நிலை சுமக்கும்தமிழா இதுவொரு நிலையோ -இது விடை கீழ் நிலையெது வரினும் ஏற்பது எம் நிலையே :unsure:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.