கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
நான் உச்சரித்த முதன்முதற் கவிதை... ஒரேயொரு வார்த்தையில் " அம்மா " என்பதுதான்! இன்னும் எத்தனை கவிதை எழுதினாலும்... அத்தனை அழகு இதில் மட்டுந்தான்!
-
- 4 replies
- 1.3k views
-
-
இளமைக்கால நட்பு நீயும், நானும் கரகமாடிய அந்த ஒற்றை விளக்கு அரசமரத்தடி... தோல் கிழிந்து இரவெல்லாம் சிராய்ப்பு வலி கொடுத்த நாய்க்கர் வீட்டு வேப்பமரம்... மட்டைகளை தோளில் சுமந்து மைல்கணக்கில் நடந்து கிரிக்கெட் ஆடிய சொசொரப்பு மைதானங்கள்... எதிரியின் பம்பரங்களை சில்லு சில்லாக உடைத்த பிரேமா வீட்டு முன்வாசல்... பசியெடுக்காத நிலாவுக்கு கும்மி தட்டி சோறு£ட்டிய தாவணி சிட்டுக்களை காண அமர்ந்த திண்ணைகள்... குமாரிடம் மூக்குடைபட்டு இரத்தம் சிந்திய நெருஞ்சி முட்புதர்... இப்படி ஒவ்வொன்றாய் பதினைந்து ஆண்டுகளில் எல்லவற்றையும் மிதித்தழித்துவிட்ட கால அரக்கன்.. மிஞ்சியிருக்கும் நினைவுகள் மட்டும் சுவடுகளாய்…
-
- 0 replies
- 919 views
-
-
அந்திமந்தாரை திரைப்படத்தில் வரும் உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல்: சகியே நீதான் துணையே! விழிமேல் அமர்ந்த இமையே" அந்த மெட்டுக்கு என் வரிகளில் ஒரு புது முயற்சி : உயிரே நீதான் உறவே என் உணர்வுக்குள் பூத்த காதலின் தாயே உயிரே நீதான் உறவே! (2) கனவுகளில் நீ காட்சிகளில் நீ காண்பது எங்கணும் நீதான் உறவே(2) வலிகளை தாங்கி சுகங்களைக் கொடுத்தாய் என் இதயத்தில் நீதான் என்றுமே துடிப்பாய்! இடர்களைக் களைந்து இனிமைகள் தந்தாய் உறவே உயர்வாய் எனக்குள்ளே நின்றாய்! (உயிரே நீதான் 2) கரைகளைத் தொடுகின்ற அலைகளைப்போலே உன் நினைவுகள் என்னை அணைப்பதினாலே உயிருக்குள் ஊறும் புது சுகம் கண்டேன் உன்னால் அன்பே காதலைக் கண்டேன் வேருக்கு வார்த்திடும் வான்முகில் போலே என் வாழ்வின் வளமாய் நீ வந்தாய…
-
- 10 replies
- 2.4k views
-
-
26.12.2004 அன்று ஆழிப்பேரலையில் நாம் இழந்த எம் உறவுகளுக்காகவும், உலகெங்கிலும் இந்தப் பூமி இழந்த அற்புத மனிதர்களுக்காகவும் இப் பாடல் காணிக்கை: பாடல்: http://www.imeem.com/vaseeharan/music/kyEb..._kanneeril_kul/ பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்…
-
- 4 replies
- 1.4k views
-
-
பின் தங்கிய சிறுமியிடமிருந்து ..... மேசைமீது உருண்டோடும் பென்சிலை "ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து தோற்கிறேன் நான், பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே! ஆசிரியரே.. உங்கள் உயர்மட்ட அறிவு நிலைகளிலிருந்து கீழிறங்கி வந்து எனது இருக்கைதனில் அமருங்கள் தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை தூர எறிந்துவிட்டுத் திக்கித் திணறுகின்ற குரலொன்றினை வழிகூட்டிச் செல்லுங்கள் வளராப் பிள்ளை நான் வகுப்பறையினுள் வந்து விழுந்த நட்சத்திரங்கள் உங்களைச் சூ…
-
- 4 replies
- 787 views
-
-
இடைத்தங்கல் முகாங்கள்...... கவிதை..... இடைத்தங்கல் முகாங்களில் எங்கள் துன்பங்களும் தெரியாமல் தம் வாழ்வு அங்கே ஏனென்றும் புரியாமல் தீராத பசியினிலும் மணல்வீடு கட்டும் ; நம் மழலைகளின் முகம் பார்த்தேன்...! அனைத்து உணர்வுகளும் அடங்கும் நிலை மரணம்....! அங்கேயும் அதே நிலைதான் அதைப் பார்ப்போர்க்கும் அதே நிலைதான்..... உயிர்காக்க ஓடிவந்து உயிர்மட்டும் காத்துவிட்டு உணர்வெல்லாம் செத்து உறவெல்லாம் பறிகொடுத்து உறக்கம் ஏதுமின்றி ஒவ்வோர் மூலையிலும் ஒதுங்கிவிட்ட நம் உறவு கண்டேன்...! கோத்தபாய வாசகமாய் தமிழீழ குமரிகளின் பருவத்தின் அழகுதனை பார்த்து அனுபவித்து படுகொலை செய்வதற்கு பத்திரமாய் முகாமொன்று அதன் பெயரோ விச…
-
- 15 replies
- 1.5k views
-
-
தரணியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - அறம் தருமத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு ஞாலத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெய் ஞானத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு அவனியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெத்த அறிவினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு உலகினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - விருந்து உபசாரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு வையத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உண்மை வீரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு புவியினிற் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - கவிப் புலமையில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு பாரினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உயர் பண்பிலே சிறந்த நாடு எம் தமிழீழ நாடு http://gkanthan.wordpress.com/i…
-
- 3 replies
- 976 views
-
-
-
2006ல் என்னுடைய கவிதை அம்மா விடுதலைப் புலிகளின் வெளிச்சம் உள்சுற்று சஞ்சிகையில் வெளியாகிப் பாராட்டைப் பெற்றது.ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் குறுங்காவியத்துக்கு அடுத்து தோழன் புதுவை இரத்தினதுரைக்கு பிடித்த என் கவிதைகளுள் அந்தக் கவிதையும் ஒன்று. . அதே காலக்கட்டத்தில் தோழன் ஜெயராஜ் ஆசிரியராக இருந்த விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ பத்திரிகையான ஈழநாதத்தில் ஊடகத்துறையைக் கண்காணிப்பாலராக புலனாய்வு துறையில் பணிபுரிந்த எழுத்தாளர் தான…
-
- 1 reply
- 1.1k views
-
-
அடகு கடையில் ஆச்சியின் காத்திருப்பு. சொந்த மகளின் தாலி தொடங்கி பேத்தியின் கம்மல் வரை ஆச்சியின் மடிப்பெட்டிக்குள் கூப்பன் மட்டையோடு கசங்கிக் கிடந்தன. வட்டியில் வயிறு வளர்க்கும் அடகுகடை ஆறுமுகத்திடம் சரணடையக் காத்திருந்தன. ஆச்சியோ ஓரமாய் குந்தி இருந்து.. கற்பனை வளர்க்கிறாள். இந்தப் போகம் மேடை பார்த்து நல்ல போயிலை மண்டைதீவு போய் வாங்கி வந்து.. கோப்பை போட்டு உழுத நிலத்தில் நட்டு அதை குழந்தை போல தொட்டுத் தடவி வளர்த்து சொந்த வயிற்றுக்கு பாணும் சம்பலும் தந்து.. புகையிலைக்கு பெருத்த செலவில் எருவும் உரமும் நேரம் காலம் பார்த்துப் போட்டு தீனியாக்கி.. வாடகைக்கு மிசின் பிடிச்சு பாத்தி கட்டி வாய்க்கால் வழி தண்ணீர் பாய்ச்சி.. ஊற்றெடுக்கும் அந…
-
- 17 replies
- 3.7k views
-
-
என் அன்பே! !! முழு நிலவான உன்னை பற்றி ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன். என் மேசை எங்கும் வார்த்தைகள் நட்சத்திரங்களாய் கொட்டி க்கிடக்கின்றன. என் அன்பே! என் வெளிச்சம். உன் காதல் எனக்கு காவல். உன் பேச்சு. .... எனக்கு இன்பம் உன் குரல். .. என் தேடல். உன் நலம் என் நிம்மதி. உன் நிம்மதி என்சந்தோசம். உன் உயிர் அது என் உயிர். என் அன்பே. ........
-
- 1 reply
- 1.3k views
-
-
வரலாற்றுப்பழி ஏற்காதீர் இரா. செம்பியன் மகேந்திரன் எட்டப்பராசன் எழுதியது சற்றெண்ணிப் பாருங்கள் தமிழ்ச்சான் றோரே! சரிதானா கோவையிலே மாநா டின்று? வெற்றிடமா யாக்கிவிட்டே ஈழ நாட்டை வெற்றிவிழாக்கொண்டாடப் போகின் றீரா? வெற்றார வாரத்தில் மிதப்போ ரெல்லாம் விலைகொடுத்து வாங்குகின்றபொருளா நீங்கள்? மற்றவர்க்கு வழிகாட்டும் மாண்புள் ளோரே வரலாற்றுப் பழி ஏற்றுக் கொள்ளா தீர்கள்! குன்றனைய குறையுடலார் முள்வே லிக்குள் கொட்டிவைத்துக் கிடக்கின்றார் தமிழீ ழத்தில் சென்றங்கே கண்டவர்கள் இங்கு வந்து சிறப்பாக நடத்துவதாய்ச்செப்பு கின்றார்! என்னையடா கொடுமையிது! சொல்லக் கூசும் இழிநிலையில் நடத்துவதை மறைக்கு மிந்…
-
- 0 replies
- 924 views
-
-
தமிழர் தலைவனுக்கு அகவை 63! தூங்கிக் கிடந்த தமிழர்களை ! துயிலெழுப்பிய குயிலே! துடிக்கக் துடிக்க அழித்த பகைவரை! துரத்தி அடித்த புலியே! கூறுபட்டுக் கிடந்த தமிழரை! வீறுகொண்டு எழுப்பிய வீரனே! விடுதலை! விடுதலை!! விடுதலை!!!-அதற்கு! கொடு! தலை என்றே!குமுறிய வேங்கையே! காலம் கடந்து போகும்-நம்காலம் நமக்காய் மாறும்!புலிக்கொடி! உலகில் மீண்டும்' ஏறும்!!நீ மூட்டிய விடுதலைத் தீ! என்றும் அணையாது!! நீறு பூத்த நெருப்பாய் ! எம் நெஞ்சில் !என்றும் ! கனலாய் தகிக்கும்!! வலரற்றை படைத்த தலைவா! வாழ்த்துகிறோம் !!கன்னித்தமிழ்போல்…
-
- 3 replies
- 1.4k views
- 2 followers
-
-
கை பிடித்த போது..... என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது கன்னியவனை கண்ணுற்ற போது என் இலக்கிய உலகம் இனிய கதவு திறந்தது இனியவன் இமை திறந்த போது மண்ணில் விண்ணுலகம் பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது தாய் மொழியைத் தலைக்கேற்றியது தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது என்னவனைக் கை பிடித்த போது! நன்றி
-
- 8 replies
- 2.3k views
-
-
அநியாய மங்கரியே ஆனந்த மானஎம் தமிழரின் வாழ்வினை அழித்திடக் கங்கணம் கட்டியே நிக்கிற அநியாய சங்கலார் உன்னையே கேட்கிறேன் அடுக்குமோ உன்செயல் அவனியில் சொல்லுவாய் தந்தையின் வியர்வையில் தோன்றிய கட்சியில் மந்தியைச் சேர்த்தவன் யாரெனக் கேட்கிறேன் பந்தியில் சேர்த்திட வொண்ணாப் பாதகன் நொந்துமே மூடுவன் கண்களைச் சீக்கிரம் சுந்தரப் பெண்களைச் சுவைத்திடத் துடித்தவன் சுதந்திரம் பற்றியும் பேசுதல் நீதியோ தமிழரின் உரிமைகள் பற்றியே பேசிட தறுதலை உந்தனுக் கேதுமே தகமையாம் ஈழமண் காத்திட உயிர்தரும் பலரிடை இழியனாய் இருந்துநீ இழிசெயல் செய்கிறாய் தரித்திரம் பிடித்தவுன் முகத்தினைத் துரோகியாய் சரித்திரம் அழுத்தமாய்ப் பதிவினில் வைத்திடும் அன்றொரு நாளுனை அழு…
-
- 3 replies
- 1.5k views
-
-
யார் அநாதைகள்???? அந்நிய நாட்டில் வாழும் அனைத்து தமிழரும் அநாதைகள் அன்புக்காக ஏங்கும் அனைத்து உள்ளங்களும் உலகில் அநாதைகள் படிப்பில் ஊக்குவிக்க படாதோர் அநாதைகள் பண்பில் வளராதோர் என்றும் அநாதைகள் பழக்க வழக்கங்கள் தெரியாதோர் அநாதைகள் பகுதறிவு அற்றோர் நம்முள்; அநாதைகள் அன்புவாழும் உள்ளங்கள் அநாதைகள் இல்லை அன்னை தந்தையில்லாதவர் அநாதைகள் இல்லை
-
- 4 replies
- 1.7k views
-
-
அடயாளத்தேடலுக்காக நிதானத்தை சாகடிக்கும் வித்தை தெரிந்தவர்கள் வித்துவான்கள் முடுக்கிக் கொண்டுவரும் மூத்திரம்போல் எதோ ஒரு திசையை சுட்டிக்காட்டுகின்றார்கள் சுட்டிக்காட்டுதலே இங்கு அனைத்திலும் பிரதானம் காட்டும் திசையில் பயணிக்கப் பாதைகள் இல்லையென்பதை சுட்டிக்காட்டினால் அது துரோகம். சிறுபோகமோ பொரும்போகமோ எதுவும் இங்கு சாத்தியமில்லை தற்போதைக்கு சாவை மட்டுமே யதார்த்தம் உணர்த்துகின்றது இருந்தும் பாடைகட்ட கொஞ்சப்பேர் பாடைக்கு குஞ்சம் கட்ட கொஞ்சப்பேர் தெளிவுதண்ணி கொடுப்பது குறித்துப்பேசினால் அது துரோகம் கேள்விக்குறிகளில் ஊஞ்சல்கட்டி ஆடிக்கொண்டிருப்பதில் எப்போதும் பெருமை செய்திகளும் புத்தகங்களும் தரும் அரசியலை விட போர் தந…
-
- 11 replies
- 1.5k views
-
-
கிழிக்கப்பட்ட தாள்களில் வரையப்பட்ட ஓவியமாய் உடைந்த சிதைவுகளில் செதுக்கப்பட்ட சிற்பமாய் அதிகாலை கனவில் அவளின் அருகாமை வீணாய் போனது விடியலின் பொழுது விரிக்காத படுக்கை மடிக்காத உடைகள் வேண்டாத உணவு தீண்டாத தேநீர் காலையை தின்று மதியம் கொன்றது மங்கையின் நினைவு மரண வலியாய் தனிமை பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிலும் தடுக்கி விழுந்து மீண்டும் தொடர்ந்து கற்பனைகளில் சுழன்ற சுந்தர வதனம் கூரிய வாள்முனை குரல்வளை அறுப்பதாய் வேதனை தந்தது அந்தி சாய்ந்து ஆதவன் அணைகையில் மெல்லத் தவழ்ந்து கள்ளம் கலந்து கொல்லத் துடித்த கொள்ளை அழகில் உருகி…
-
- 7 replies
- 1k views
-
-
-
"என்று - நான் உன்னைக் காண்பேன்??" "ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? எந்தை அவள் - தன் ஒளி அணைத்துவிட்டாள் முந்தை நாளில் - கொஞ்சி கூடி குலாவினாள் பந்தை அடித்து - சேயுடன் ஆனந்தக் கூத்தாடினாள்" "சிந்தை ஓடவில்லை? - என் மனம் ஆறவில்லை? எந்தை அவள் - கண் மூடி உறங்கிவிட்டாள் நிந்தை பேசாள் - நினைவிலும் கெடுதல் செய்யாள் விந்தை புரிந்தாள் - எந்நாளும் உள்ளம் கவர்ந்தாள்" "மந்தை கூட்டம் போல் நாம் இருந்தோம்! தந்தை தாயாக சேர்ந்து நாம் இருந்தோம்! இந்தை பிள்ளை இன்னும் கண்ணீர் துளியில் கந்தை கொண்டு கண் துடைக்க வாரயோ?" "குந்தை அண்டி அவள் ஒய்யாரமாய் இருப்பாள் விந்தை காட்டி சேயுடன் ஒன்றி இருப்பாள் சிந்தை குளிரும் அ…
-
- 0 replies
- 267 views
-
-
"ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுது" "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும் பூவையரின் அழகை ஆண்கள் அறிவர் பூரிப்பு கொண்டு மயங்கித் திரிவர்!" "பூமி முழுவது கூட்டி திரிந்து பூசி மெழுகி காதல் பேசி பூசை செய்து மயக்குவதை பார்த்து பூதங்கள் ஐந்தும் தம்முள் சிரிக்கும்!" "ஆண்டாள் மாலை மகளுக்கு சூடி ஆண்டவன் அருளுக்கு தாய் வேண்ட ஆடவன் நடிப்பை காதலாய்ச் சூடி ஆகாய கோட்டையில் கனவு காண்கிறாள்!" "தையல் திருமணம் வேண்டி நோன்பிருந்து தையில் முன்பனி நீராடி தவமிருந்தவள் தைரியம் இழந்து ஆண்டுகள் போக தைவரல் இன்ப…
-
- 0 replies
- 252 views
-
-
நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... நண்பனென்ற அடையாளத்தில் நீயும் அட்டகாசம் செய்கையில் .. அவ்வப்போது சிறகடிக்கும் உன் விழிகளில் அடிக்கடி காதல் அரங்கேறுவதை எட்டி நின்று ரசிக்கத்தான் எத்தனை ஆசை எனக்கு .. உன்விழிகளில் நான் கண்ட காதலை நீ,... என் மொழிகளில் கேட்க வேண்டுமென அடம்பிடித்தது இன்றும் என்னில் அழியாமல் இருக்கிறதே .... வசந்தங்களில் மட்டுமே .. பூக்கள் பூக்குமாம்.. ஆனால்.. நீ மட்டும் எப்படி பெண்ணே .. வேனலில் கூட கவிச்சோலையாய் ... எப்பொழுதும் என்னில் ?.... கேட்டதும் நீ தானே .. அன்று ஆற்றோ…
-
- 10 replies
- 2.3k views
-
-
உனது துணைவி உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் ஆனால் உன் அன்னையோ கடவுளால் உனக்களிக்கப்பட்ட அரிய தொரு பரிசாகும் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்காக பொக்கிஷமான தாயைத் தொலைத்து விடாதே...
-
- 8 replies
- 1.2k views
-
-
-
-
- 5 replies
- 680 views
-
-
சந்தர்ப்பம்………………! எப்போதும் அரசியல்வாதிகள் தமக்கான சந்தர்ப்பம் குறித்தே கூவுவதேன்! மக்களுக்கான தேவைகளைச் சந்தர்ப்பாதவாதம் விழுங்கிவிடுமதேன்(?) குரல்வளை நெரிபட்டு குற்றுயிராய் கிடந்த தமிழினமோ நம்பிக்கை மைந்தன் கை காட்டிய திசையில் நல்லது நடக்குமென்று நம்பியதன் விளைவாக அரச சபைகளில் புதிதாய் புதிய பிதாமகர்கள்(?) தமது சட்டவலு மூளையைக்கசக்கி சலவையைத் தொடங்கினர்.. சிங்கத்தை வீழ்த்தவல்ல தமிழைத் தாழ்த்த தட்டிக் கேட்போரை… மக்களை மகுடியாக்கி ஒரு மந்தைக் கூட்டத்தை உருவாக்கத் துடிக்கிறது! உருவேறி உருவேற்றி நிற்கிறது ஒரு கூட்டம் இல்லாத புலிபற்றி எப்போதும் சிலாகிப்பு பொல்லாத புலியாம்! புலியுறுமல் ஓய்ந்து பல்லாண…
-
- 0 replies
- 697 views
-