Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காதல் மலர்ந்து இன்பம் கனிந்து கவிதை தவழ்கின்ற இந்நேரம் என்னை சேரமுடியாமல் பிரிந்தாய் -நீ என்ன பாவம் செய்தாய்? நீ சுவாசித்த மந்திரத்தை தினம் கேட்க கோவிலுக்கு சென்றாய் இன்று பூசைகளில் நிம்மதியை நாடுகின்றாய் அப்படி நீ என்ன பாவம் செய்தாய்? இலவசமாக கூட குடிபூற மறக்கும் உன் உள்ளத்தில் தீபத்தை கையில் ஏந்தியபடி உன் வாசல் வந்தவளை- நீ இழந்ததேன்?? தாய்க்கு தாயாக தோழிக்கு தோழியாக காதலிக்கு காதலியாக அவள் மடியில் தவழ்ந்த உன் வாழ்க்கை இன்று கேள்விக் குறியானதேன்??! ஒலிவடிவில்....

  2. இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை .... பெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்! பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் என்று பறந்து கொட்டும் பனியில் கொட்டாவி விடக்கூட மறந்து அண்ணனுடன் அப்பா சேர்த்து அனுப்பும் பணம் கையில்லாச் சட்டை வாங்கவும் அங்கம் கொப்பளிக்கும் ஆடை வாங்கவும் உதட்டுக்குச் சாயம் அடிக்கவும் இன்னும் பலப்... பல... செய்யவும் வீணாகக் கரைகின்றது. இந்த 'மேக்கப்' பின் பின்னால் உள்ள உண்மை உருவம் அறியாது நீண்ட 'கியூ' வில் நிற்கின்றாரம்மா பாவம் எம் இளைஞர்! சி…

    • 18 replies
    • 2.6k views
  3. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவிதை இதோ! "உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே!" உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே! #coronavirusindia #CoronaVirusUpdate — வைரமுத்து (…

    • 16 replies
    • 2.6k views
  4. இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....? (11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை) பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப் பதுங்குளி வாசலிலும் பாதையோரச் சகதியிலும் உழன்ற பொழுதுகளில் உனக்கும் சாவுவரும் என்றெண்ணியிருப்பாயா ? நம்பிக்கையறுந்த வாழ்வு நாளையுனக்கு இல்லையென்று எப்போதாவது எண்ணியிருந்தாயா ? எங்களைப்போல உனது மகளும் மனைவியும் அம்மாவும் அக்காவும் மருமக்களும் பற்றித்தானே மனசுக்குள் அழுதிருப்பாய் ? சாவரும் நாளின் முன்னிரவு உனக்குச் சாவு நாளையென்று சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ? போரின் கொடிய வாய்க்குள் போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ? பாழும் பொஸ்பரஸ் குண்டுகள் உன்மேல் …

    • 12 replies
    • 2.5k views
  5. என் இதயக் கோயிலுள் தெய்வம் நீயே! என் இதயத்தை எடுத்துக் கொண்டவனும் நீயே! காதலுக்கு வரைவிலக்கணம் தந்தவனும் நீயே! காதலுக்கு வழிகாட்டியவனும் நீயே! என் வாழ்க்கையை உணர்ந்தவன் நீயே! என் வாழ்க்கைத் துணைவனும் நீயே! நான் காதலிக்கும் ஒருத்தனும் நீயே! எனக்காக பிறந்தவனும் நீயே! :P :P

    • 13 replies
    • 2.5k views
  6. கொஞ்சும் நிலவு கொஞ்சா நெருப்பு நன்றி வெண்ணிலா. கண்கள் கெஞ்சும் அழவே துடிக்கும் உதடுகள் சுளித்து சிரித்து நடிக்கும் நெஞ்சம் உந்தன் நினைவில் வலிக்கும் மஞ்சம் என்னைப் பார்த்தே நகைக்கும்.

  7. யார் சொன்னது வழிந்தோடும் என் இளமைக்கால நினைவுகளை மேய்ந்தபடிபோகும் வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப் புரிய முடியாதென்று...? யார் சொன்னது நான் தொலைத்துவிட்ட சிறுவன் நடந்துதிரிந்த வீதிகளில் எஞ்சியிருக்கும் புறாக்களினதும் புலுனிகளினதும் கவலைப் பாட்டினை விளங்கமுடியாதென்று....? யார் சொன்னது வெட்டைக் காணிகளின் சம்புப் புற்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குந்தியிருக்கும் தும்பிகளின் இறக்கைகளில் இருந்துதொடங்கும் என் பால்யகாலக் கவிதைகளைப் படிக்க முடியாதென்று...? அவைகளின் மொழிகள் உனக்கெப்படித் தெரியுமென்ற வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்... அவைகளின் மொழிகளில்தான் மீட்டிக்கொள்கிறேன் கிழித்து வீசப்பட்டதால் பொருளை இழந்துப…

  8. எல்லாமே வீணாய்ப் போச்சு! இன்னும் என்ன இருக்கு? இதைச் சொல்லிச்சொல்லியே சமாதான புறாக்களாக பூரிப்போடு பறக்கின்றோம்! வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ; இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்! தேவையென்று எதைத் தேடினோமோ; அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்! என்னதான் தேவை எங்களுக்கு....? ஒன்றுமே தெரியவில்லையா உங்களுக்கு??? என்ன மனுஷரடா நீங்கள்??? அயல்நாடாம் தமிழ்நாட்டின் கொதிநிலை கூட, உங்கள் கண்ணீரில் இல்லையே! அச்சச்சோ... தவறாக சொல்லிவிட்டேனோ??? கண்ணீர் வந்தால்தானே...அதைப்பற்றி பேசமுடியும்! தமிழராய் இல்லாட்டியும் பரவாயில்லை... குறைஞ்சது, மனுஷராத்தன்னும் ஒருமுறை நினைச்சுப் பாருங்கோ! நடந்ததை எல்லாம்.... நடக்கின்றவை எல்லாம்... நடக்கப்…

  9. Started by nedukkalapoovan,

    வரிப் புலிகள் வாழ்ந்த காலம்.. விறகு வெட்டி கட்டி கண்டி வீதி வழி நடுச்சாமம் தாண்டியும் பெண்டிர் கூட மிதித்து வைக்க ஓடிய வண்டிகள்.. யாழ் நகர் வந்து சேர செம்மணிப் பேய்கள் கூட அமைதி காத்தன...! வானரப் படைகள் வாழும் காலம்.. விறகுவெட்டியும் தூக்கில் தொங்குகிறான் மாற்றான் மனையாளொடு கட்டியணைத்தபடி. பெண்டிர் மிதிக்கா வண்டிகள் பெற்றோலில் ஓட பெற்றோர் ஓடுகிறார் அவர் பின் பிள்ளை ஓடிப் போயிடுவாளோ என்றே பதறியடித்தபடி. செம்மணிப் பேய்களை விஞ்சி.. கோத்தாவின் ஏவல் பிசாசுகள்.. கிறீஸ் பூதங்களாய் மகளிரை மட்டும் குறிவைத்து கருவறுக்கும் நிலை..! தமிழினம் ஈழத்தில் வேரறும் நிலை...! புட்டுக்கு தேங்காய்ப் பூவாய் இருந்த ச…

  10. Up.. Down குவாக்சுகளின் கலவையில் குவா குவா என்றே பிறந்திட்ட இரட்டைப் பிறவிகள் புரோத்தனும்.. நியூற்றனும்..! அண்டை அயலில் அலைந்து திரிந்த... லெப்ரோன்கள் மீது கொண்ட காதலில் கலவி கொண்டே தந்தன.. அணுக் குழந்தைகள். காபனின் கறுப்பில் கவர்ந்திட்ட ஐதரசனும் காந்தர்வமாய் கலந்திட்ட ஒக்சிசனும்.. இடையில்.. நைசா நுழைந்திட்ட நைதரசனின் நாட்டமும் கூடவே.. பொஸ்பரஸின் கூட்டும் கூடிக் கண்ட விளைவே டீ என் ஏ...! டீ என் ஏ சுருளிச் சுற்றில் சிக்கிக் கொண்ட காதல் எஸ் எம் எஸ் ஸுக்கள் அமினோ அமிலங்களாய் வாசிக்கப்பட அங்கு பிறந்த கவர்ச்சிச் சண்டையில் நடந்த கலவியில்.. புரதங்கள் பிறப்பெடுக்க கருக்கொண்டது உயிரின் உருவம்..! அழகும் வர்ணமும் அறிவும் திறனும் கூட…

  11. பிரிய சிநேகிதி, மன்னிப்பாய்...! மெளனத் தவம் கலைத்துச் சகுனம் பார்க்காது காதலென்னும் மாய வார்த்தை சொன்னேன்! உள்ளம் மூடி வைக்காது... பள்ளம் விழுந்ததடி உன் பார்வை பட்டென்றேன் நீயும் பட்டென பதில் சொன்னாய் என்னைச் சட்டென வெட்டி விட்டாய் சட்டென தேறிவிட்டேன் வெளியில் சிரித்தவாறு ஆனால் உள்ளம் இன்னும் வலியில் அழுதவாறு வெள்ளமென உவகை தோன்றுதடி உன்னோடு இருக்கும்போது! இதற்குப் பெயர் காதலென்று அர்த்தம் செய்தேன்! கடைசிவரை குற்றம் செய்தேன்! உன் கனவுக் கட்டிட வாசலில் கூட நிற்கத் தகுதியிருக்குமா எனக்கு? நீ நுழைவுத் தேர்வு நடத்தவில்லையே சிநேகிதி... ஆனாலு…

  12. கனவும்...கவியும்... நல்ல கவிதை வரி ஒன்று கனவில் வந்தது! எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில் குறிப்பெழுதி வைத்து உறங்கிப் போனேன்! காலையில் தாள் காணமல் போயிருந்தது! அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி! இந்த முறை நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்! அதனால் எழுந்து ஓட முடியாது என்ற தைரியத்தில்! காலையில் நாட்குறிப்பு இருந்தது! வரிகள் இல்லை! - அடடா பேனாவில் மையில்லை! அதற்கு அடுத்த நாளும் அதே கனவு அதே வரி குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை கண்ணாடிப் போட்டு உறுதிப்படுத்தியப் பின் உறங்கிப் போனேன்! மறுநாள் காலையில் என் கையெழுத்து எனக்கே புரியவில்லை! இன்றைக்கு அந்த வரிகளை கனவில் கண்டவுடன் எழுந்து அமர்ந்து …

    • 12 replies
    • 2.5k views
  13. Started by இலக்கியன்,

    நான் பிறந்த மண்ணை தொட்டுப்பார்க்க ஆசை வேப்பமரத்து நிழலில் படுத்து உறங்க ஆசை பலாமரத்து கனியை பறித்து திண்ண ஆசை பனை மரத்துக்கள்ளை களவாகுடித்துப் பார்க்க ஆசை ஒடியல் மா புட்டு சாப்பிடத்தான் ஆசை தேக்க மரத்துக்கிளியை பிடித்து வளர்க்க ஆசை தமிழ் வாத்தியாரிடம் குட்டு வாங்க ஆசை கோவில் மணியை ஒருக்கா அடித்துப்பார்க்க ஆசை புளியமரத்து பழத்தை சூப்பித்திண்ண ஆசை மாமரத்துக் காயை குத்திதிண்ண ஆசை கிணத்து தண்ணிரில் அள்ளி குளிக்க ஆசை கொடிகாமத்து தேங்காய் கொறித்து திண்ண ஆசை கீரி மலைக் கேணியில் நீச்சல் அடிக்கத்…

  14. மகிந்தவுக்கு ஏழரை ஆரம்பம். புலிகளினி அழிந்தாரென்ற கிழவன் செத்தும் புலிதன் வீரம் மாறாமல் வீச்சோடு மீண்டு எழ மீளவும் புலிகளொடு போராட புத்த புதல்வர்கள். போராடிப் போராடி புலிகளிடம் தோற்றவர்கள் ஈடாடி இயங்க முடியாமல் ஊரெல்லாம் ஒப்பாரி வைச்சு பாரெல்லாம் பழுதென்று பதுக்கின ஆயுதங்கள் தாவென்று வாங்கி தம் பலம் இழந்தவர்கள். கிளிநொச்சி வீழ்ந்திடுமாம் கொடியேற்றிக் குத்தியனை முதலமைச்சராக்கும் கனவோடு மகிந்த மாத்தையா உதயநாணயக்கார கனவுகளில் மண். மாவீரர் மாதம் நெருங்கும் ஐப்பசியில் மகிந்தவுக்கு அட்டமத்தில சனி. சனி பிடிச்சா ஏழாண்டு உலைச்சல் இது சாத்திரம் சொல்லும் விதி. மகிந்தவுக்கும் ஏழரை மாத்த முடியா விதி. ம…

  15. மருத்துவரின் மனச்சாட்சி...... இளங்கவி - கவிதை குண்டு மழையில் நின்று..... குருதி ஆறு பாயக்கண்டு..... தம் தூக்கம் தனை கலைத்து பல உயிர் காத்தவர்கள்...... இன்று அவர் பின்னால்...... தலையை குறிபார்க்கும் துப்பாக்கி..... நீயும் புலியா?.... எனும் கேள்விக்கணை..... இப்படிச் சொல்லெனும் பயமுறுத்தல்...... இல்லையேல் கொலையின் அச்சுறுத்தல்...... இப்படி அனைத்தும் நிற்க,..... அதிகாரமோ மிரட்டி நிற்க..... அவர் எப்படி உண்மை சொல்வார்...! தம் உறவுகளின் உயிரைகொல்வார்...! இறுதிவரை தமிழுக்காய் சேவைசெய்த அற்புதர்கள்...... இன்று எதிரியின் கைகளிலே சிக்குண்ட நம் காப்பரண்கள்..... இன்னும் பல உயிர்காக்கும் சேவைகொண்ட மருத்துவர்கள்..... …

  16. முதன்முதலாய் அம்மாவுக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை இணைக்கிறேன் ஆயிரம்தான் கவிசொன்னேன் அழகழகாய்ப் பொய்சொன்னேன் பெத்தவளே உன்பெருமை ஒத்தைவரி சொல்லலையே காத்தெல்லாம் அவன்பாட்டு காகிதத்தில் அவனெழுத்து ஊரெல்லாம் அவன்பேச்சு உன்கீர்த்தி எழுதலையே எழுதவோ படிக்கவோ இயலாத தாய்பற்றி எழுதியென்ன லாபமென்று எழுதாமல் விட்டேனோ பொன்னையாதேவன் பெற்ற பொன்னே குலமகளே என்னைப் புறந்தள்ள இடுப்புவலி பொறுத்தவளே வயிரமுத்து பிறப்பான்னு வயிற்றில்நீ சுமந்ததில்லை வயிற்றில்நீ சுமந்தஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு கண்ணுகாது மூக்கோடை கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கிடக்கையிலை என்னென்ன நினைச்சிருப்ப கத்தி எடுப்பவனோ களவாடப் பிறந்தவனோ …

  17. பூநகரியில் புலிதேடும் படலம்..... ஆமிக்காரனும் சட்டம்பியாரும் கேள்வியாயும் பதிலாயும் ஒரு கவிதை ஜயா....ஜயா ... நில்லு..நில்லு.! சந்தியிலே புலி நிக்கா சொல்லு.. சொல்லு ! அந்த வழில புலி கண்டிய... ...? ஒமோம்.. தம்பி... ஒமோம். அந்த வழியிலே புளி நிக்கு கனக்க கனக்க காச்சு கிடக்கு..! இல்ல இல்ல மாத்தய ..! கொட்டியா... கொட்டியா கண்டியா..! ஒமோம்..ஒமோம் கொட்டயோட தான் நான் கண்டேன் இனி கோதுடச்சு ... கொட்டயெடுத்து... கொழும்புக்கு அனுப்பலாம் நீங்கள்... டேய்..ஜயா.. உனக்கு காது கேட்காத..? மாத்தய..நீ போடா போட..! நான் அந்த ஜயாட்ட கேக்கிறன்... தம்பிகளா.. நான் மனதுக்குள்ள சொல்லுறன் புலி தேடவந்த பொன்சேகவின் தம்பிகளே …

  18. காதல் பரம்பரை சொத்துமல்ல பரம்பரை கடத்தியுமல்ல ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை நாம் காதலாய் இருக்க வேண்டும் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்

  19. மழை எப்போது எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பது காற்று எதிரியே நீ எதுவரை வரவேண்டும் எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் விடுதலைப் புலிகள் புலிகள் முன் நகராது இருக்கும் வரைதான் வெற்றிக்களிப்பில் கர்ஜனை செய்வீர்கள் பொன்சேகா படைகளே ஒன்றன் பின் ஒன்றாய் ஏவுங்கள் எறிகணைகளை பறந்து வந்து போடுங்கள் குண்டுகளை பொறுத்துக் கொள்கின்றோம் எமது தேசத்தின் அமைதி குலைத்த சிங்களமே… எங்கள் தலைவனின் மௌனம் கலையும்போது வதைபடுவாய் பொறுத்துக்கொள்… எதிரியே உன் தளத்தில் வந்து நின்றவாறு புலிகள் ஏவும் உனது எறிகணைகள் உன் தலையில் வீழ்ந்து வெடிக்கும் என்பதைக் கருத்தில்க்1கொள் குதித்து வ…

  20. பொய்மையும் கயமையும் கொட்டமடிக்கும் வேளையில் வாய்மையும் நீதியும் நடைபயிலவேண்டும் நாணிக் குறுகி நிற்கும் என் இனம் வீறு நடைபோடவேண்டும் அடிமைச் சங்கிலியை உடைத்த தமிழச்சிகள் தரணியில் வாழவேண்டும் கறையான் புற்றில் குடியிருக்கும் பாம்புகள் குளறியோடவேண்டும் தகரக் கொட்டகை வாழ்வு உக்கியே போகவேண்டும் உழுத்த எம்வாழ்வு உயரவே வேண்டும் எங்கள் நண்டுக்குணம் மாறி திமிறித் திரண்டால் நடக்கும் இவை நடக்குமா ??????????

  21. Started by sathiri,

    விஞ்ஞானம் விதவிதமாய் விந்தையாய் விதைக்கிறான் விதையில்லா விருட்சம் விதையில்லா விரும்பழம் விதையில்லா விரும்காய் விதையில்லா விரும்கறி விதையுள்ள மனிதன்

  22. கடற்புறம் காலமகள் மணலெடுத்து கோலமிட்ட கடற்புறத்தில் ஏழை மகள் ஒருத்தி. முன்னே கடல் விரியும் முது கடலின் பின்னாடி விண்ணோ தொடரும் விண்ணுக்கும் அப்பாலே விழி தொடர நிற்கின்றாள். தாழை மர வேலி, தள்ளி ஒரு சிறு குடிசை; சிறுகுடிசைக்குள்ளே தூங்கும் சிறு குழந்தை ஆழ்க்கடலில் ஆடுகின்ற தோணியிலே தாழம்பூ வாசம் தரைக் காற்று சுமந்து வரும். காற்று பெருங்காற்று காற்றோடு கும்மிருட்டு. கும்மிருட்டே குலைநடுங்கி கோசமிட்ட கடல் பெருக்கு. கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகூப்பி வரம் இரந்த அந்த இரவு அதற்குள் மறக்காது. திரை கடலை வென்று வந்தும் திரவியங்கள் கொண்டு வந்தும் இந்த சிறு குடிசை, இரண்டு பிடி சோறு, தோணி உடையான் தரும்பிச்சை என்கி…

    • 14 replies
    • 2.5k views
  23. ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன் மேதினிதழைக்க வேர்வை சிந்தி- ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட - வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள- பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு! சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி- சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை! இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை! நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்! நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்! ஊர்மனையாவிலும் பால் …

  24. கட்டுப்பாடில்லா என்கவி கேட்பின், குளிர்நிலா வானில் ஓவியம் கீறும்.

  25. Started by Sayani,

    அன்பு பெருக்கும் கனிவு வேண்டும், துன்பம் உதிர்க்கும் உறவு வேண்டும், ஊக்கம் கொடுக்கும் உளம் வேண்டும், ஏக்கம் தணிக்கும் பரிவு வேண்டும், வீழ்வு தடுக்கும் உறுதி வேண்டும், தாழ்வு போக்கும் விரிவு வேண்டும், சஞ்சலம் நீக்கும் தெளிவு வேண்டும், அஞ்சாமன மாக்கும் பக்தி வேண்டும், வேற்றுமை விலக்கும் வலிவு வேண்டும், ஒற்றுமை படைக்கும் புத்தி வேண்டும், வாழ்வு பெருக்கும் சக்தி வேண்டும், ஈழம் அமைக்கும் பலம் வேண்டும்! தமிழ் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்!! - சயனி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.