Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விழித்துக்கொண்ட முல்லை. பற்றிப் படர்ந்தேறக் கொம்பற்ற வயலோரம் முளைத்ததனால் முல்லை தனக்கு வெறும் புல்லே போதுமெனத் தானும் படர்ந்திருந்த வேளையில்தான் அவ்வழியால் பாரிமன்னன் பவனிவந்தான் பரிவாரம் சூழத் தேரேறிப் பவனிவந்த வேந்தன் பாதையோரம் கொம்பற்றுத் துவண்ட கொடிகண்டான்;. என்னேயிது நீதியிங்கு ஏற்றம் பெறக்கொம்பிலா வாழ்வுற்தோ முல்லைக்கென நெகிழ்ந்தான். பின் தேரிறங்கி முல்லையிடம் சென்று 'சின்னஞ் சிறு கொடியே, உன் விதி கண்டு மனம் நொந்தேன் யான்" என உரைத்தான். "என்னேயுன் பெருமை மன்னா, சின்னஞ்சிறு கொடிக்காய் நீ உளம் நெகிழ்ந்தாய் கண்டேன் போதுமதுவெனக்குப்போதும் புற்களுடன் வாழ்வேன் இனியான் போய் வருக" என நன்றியுடன் நயம்படச் செப்பியது செடி…

    • 4 replies
    • 1.4k views
  2. புதுமனைப் புகுவிழா. என் செய்தி உனக்கானதென்பதை நீ மட்டும்தான் அறியமுடியும் யாரிடமும் இதுபற்றி எதையும் கூறிவிடாதே நான் மூடிப்போய்விட்ட என் கதவுகளின் முன்னால் நீ சினமுற்றிருக்கக் கூடும் நகர்வற்றுக் கிடந்த ஒரு நத்தையோட்டினுள் நான் குடிபெயர்ந்துகொண்ட செய்தி உனக்கெட்டியிருக்காதென்பதை நானறிவேன் புரியாமை உனக்குள் பிறப்பித்த சூறாவழிக்குக் காரணமானவன் நான் மட்டுமேயென நீ பிரலாபம் செய்துகொண்டிருக்கக்கூடும் என்னை நீ திட்டித்தீர்த்திருக்கவும் கூடும் என்சார்ந்து ஒரு பகையுணர்வை நீயுன்னுள் வளர்த்திருக்கவும் கூடும் இவையெல்லாம் நடைபெறட்டும் என்பதுதான் என்னை மீறிய எனது விருப்பமாகவுமிருந்தது நீ எனக்குப் பொம்மைகள் வாங்கித் தரவில்லை …

    • 8 replies
    • 4.1k views
  3. Started by இளங்கோ,

    அன்னையே! ஆங்கில மோகத்தில் அனைவரும் திளைத்து ஆனந்தப் படுகையில் அன்னைத் தமிழை எண்ணி ஏங்கிட என்னை ஏன் பெற்றாய்?! பெண்ணடிமைத்தனத்தை பெண்களே ஏற்று பெருமைப் படுகையில் பெண்ணின் விடுதலையை நேசிக்கும் ஒருவனாய் என்னை ஏன் பெற்றாய்?! சாதியால் இணைந்து சமூகமாய் முன்னேறும் சந்ததியினர் மத்தியில் சாதியை வெறுக்கும் சமரசப் பித்தனாய் என்னை ஏன் பெற்றாய்?! பொன்னையும் பொருளையும் பொக்கிஷமாய்க் கருதும் பொல்லாத உலகில் பொது நலம் விரும்பும் போக்கிரி மைந்தனாய் என்னை ஏன் பெற்றாய்?!

  4. சகோதரனே ! இன்று உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் ஒன்றாய் வளர்ந்தோம் ஓரணியில் விளையாடினோம் கால அழைப்பை ஏற்று இன விடுதலைக்காய் உழைத்தோம் உனக்கும் எனக்கும் ஏழு வயது இடைவெளி -ஆனால் ஒரே நாளில் பிறந்தோம் எங்கு நின்றாலும் நம் பிறந்த நாளில் உன்னை நினைப்பேன் நீயும் அப்படித்தான் ஒரு குழந்தையின் மனநிலை கருதி நீண்ட நாள் காத்திருந்த இலக்கு கையிற்கு எட்டியபோதும் கைவிட்டு வந்தவன் நீ மீண்டும் சென்று வென்றுவந்த செயலில் வாழ்ந்த வீரன் நீ உனது தாக்குதல்கள் எங்கும் பேசப்பட நீயோ ஏதும் அறியாதவனாய் நகர்வாய் வீரனே உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் உன் வீடு வந்து திரும்பும் போது நீதான் என்னை சைக்கிளில் ஏற்…

    • 14 replies
    • 1.5k views
  5. கூனி குறுகி நிற்கிறேன் மாமா என் ரத்தத்தில் நானே குளிக்கிறேன் மாமா ஒரு சில நிமிடங்களில் என் உயிர் போய்விடுமே அந்த பாவத்திற்கு நீங்கள் தான் காரணம் மாமா நான் சின்னஞ்சிறு சிறுமி என்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா மாமா நாளை நான் கல்வியில் சிறந்து நிற்பேன் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா மாமா உங்கள் சுகயீனங்களை கவனிக்கும் வைத்தியர் நானாக இருப்பேன் என்று ஒருவேளை தெரிந்தால் இன்று என்னை வதைக்காமல் விட்டிருப்பீர்களா மாமா உங்களுடன் சின்னவயதில் விளையாடிய தங்கை நான் தானே மாமா உங்களுடன் ஆதரவாக என்றும் காத்த அக்காளும் நான் தானே மாமா சோறு ஊட்டி தாலாட்டி வளர்த்த அம்மாவும் நான் தான் மாமா…

  6. போகின்ற தமிழகம் எலி நிகர்த்த நெஞ்சினாய் போ போ போ ஏழ்மை தன்னில் மிஞ்சினாய் போ போ போ பழி முடிக்க அஞ்சினாய் போ போ போ படையிலாது துஞ்சினாய் போ போ போ வலி மிகுந்த தமிழரை நம்பாது வடவர் தன்னை நம்பினாய் போ போ போ கிலி மிகுந்த மதியினால் மென் மேலும் கீழ்மையில் உழன்றனை போ போ போ விதி கெடுத்த மதியினாய் போ போ போ வீணிலே உறங்கினாய் போ போ போ சதி நிறைத்த உறவினாய் போ போ போ சாவிழிம்பில் நின்றனை போ போ போ பொதி நிறைத்த பொய்மைகள் மேல் ஆர்வம் போக்கி நின்று தேங்கினாய் போ போ போ எதிரி தன்னை நம்பினாய் போ போ போ இழிமை வாழ்வு கூட்டினாய் போ போ போ பலமிழந்த தோளினாய் போ போ போ பழமை பேசு தொழிலினாய் போ போ போ குலமிழந்த நிலையினாய் போ போ போ குருதி கண்டு…

    • 2 replies
    • 896 views
  7. நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? நன்றி : சேரனின் கவிதைகள் http://www.kala…

  8. சொல் அப்பா சொல்: வெள்ளை பனி உருகி வீட்டின் முன் வழிகின்றது வளைந்து செல்லும் வீதியெங்கும் பனியின் சிதறல்கள் காற்றின் திசையெங்கும் குளிரின் வாசம் பனி பார்க்க விரும்பும் மகனை கூட்டிச் சென்று காட்டுகிறேன் குவியலாக இருக்கும் பனிக்குள் குளித்தெழும்புகிறான் சறுக்கி வீழ்ந்து சிரித்து எழும்புகிறான் வெண் நுரை அள்ளி வீசி விளையாடுகிறான் இப்படித் தானே அப்பா நீயும் ஊர் முழுதும் மழை நிரம்புகையில் சைக்கிளில் என்னை வைத்து வெள்ளம் காட்டுவதும் மழையில் நனைவதின் சுகமும் வெள்ளத்தை கூறு கிழித்து சைக்கிள் ஓட்டுவதன் பரவசமும் அப்பா நீ காட்டியது தானே எனக்கும் பின்பு பனை வெளிகளினூடு போகையிலும் மலைக் குன்றுகளினூடு நடக்க…

  9. புலியின் கொடிமுன் எழுவோம்..! ************************************* மு.வே.யோகேஸ்வரன் ************************** எழுவோம் எழுவோம்..எழுவோம்..! விழுந்த வேதனை தன்னை மறந்து.. எழுவோம்..எழுவோம்..எழுவோம் ! கிழக்கே சூரியன் உதிக்கும்போது கடலின் அலைகள்... உயரும் போது.. எழுவோம்..எழுவோம்..எழுவோம்..! ஈழத் தாயவள் விலங்கை உடைப்போம்.. தமிழன் கொடியை மண்ணில் நடுவோம்.. அதனால்..மீண்டும் புலிகள் நாங்கள்.. எழுவோம்..எழுவோம்..எழுவோம்..! அழுதது போதும் தமிழா..இனிஎம் அடிமை விலங்கை ஒடிப்போம்.. மாற்றான் காலை.. தொழுதது போதும்;அவனை..அழிக்க.. எழுவோம்..எழுவோம்..எழுவோம்..! புலியின் கொடிமுன் எழுவோம்..நம் தேசத்தின் கொடிமுன் எழுவோம் தமிழர் படையில் இணைவோம்.. அத…

  10. Started by Jil,

    அன்பால் உறவுகள் அதிகாரம் பண்ண அரசியல்வாதி பதவியால் அதிகாரம் பண்ண அகிம்சையால் அகிம்சாவாதி அதிகாரம் பண்ண ஆயுதத்தால் ஆயுததாரி அதிகாரம் பண்ண ஆலயத்தில் பக்தியால் பூசாரி அதிகாரகம் பண்ண ஆத்மீகத்தால் மகான்கள் அதிகாரம் பண்ண ஆசிரியர் அறிவால் அதிகாரம் பண்ண ஆண்டியானேன் அதிகாரமற்ற வாழ்வுக்காக அங்கும் பசி என்னை அதிகாரம் பண்ணிட்டே அடியே பசி என்னை அதிகாரம் பண்ணிட்டே அதிகாரம்

    • 8 replies
    • 3.3k views
  11. Started by Ravi Indran,

    ஒருவன்.... இருளுக்கு நடுவில் எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது? இன்னொருவன்.... உன் வாழ்வின் ஒவ்வொரு சொட்டும் வசீகரம் மிக்கது. மற்றொருவன்.... இன்றும் போல என்றும் இருந்தால் எப்படி இருக்கும்? நான்.... ஆற்று வெள்ளம் அள்ளிப்போகும் கிளிஞ்சல் வாழ்வு. வாழ்வின் கோப்பையை நிறைப்பது இரவு. இரவின் கோப்பையை நிறைப்பது நிலவு. ஆனால் அதிகாலை வேளைகளில் நீ புற்களில் அழுதுவிட்டுப்போவதை நான் மட்டுமே அறிகின்றேன். என்னிரு விழிகள் போதவில்லை உன்னுடன் சேர்ந்து அழுவதற்கு நான் கவிஞன் என்பதால் என்னிடம் வர்ணம் பூசாத வார்த்தைகள் கூட இல்லை. நீ ஏன் அழுகின்றாய் என்பதை இந்த உலகிற்கு சொல்லிப்போவதற்கு.

  12. http://youtu.be/9eHfgta1ClQ உக்கிப்போன நினைவுகளில் துளிர்விடும் காளான் கனவுகள் ஆராதிக்க முடியாத பொழுதுகள் கரைந்து காணாமல் போகின்றது விறகில் எரித்த கரிப்பானையை கழுவுவதுபோல் துக்கம் படிந்த முகத்தை கழுவி கழுவி மீண்டும் அடுப்பில் வைத்தபடி வாழ்க்கை.. கச்சைக்குள் எதுவும் இல்லாத வெறுமை சனக் கூட்டத்தின் நடுவே அர்த்தமற்று நடக்கின்ற உணர்வு வெட்ட வெளியில் ஆணிவேர் அறுந்த மரமாய் எட்டுத் திசையில் இருந்து வரும் காற்றுக்கு அஞ்சியபடி.. எங்கும் எதையோ தேடியபடி.. நிச்சயமாக கடவுளை இல்லை. யாரோ ஒருவன் வந்து திடீர் என்று கன்னத்தில் அறைகின்றான் மறுகன்னத்தையும் காட்ட தென்பில்லாமல் நடந்தபடி.. ஏன் என்ற கேள்விக்கு இடமே இல்லை அடிமையாக விரும்பியவனுக்கு…

  13. Started by Manivasahan,

    பாரே பார் பாரே உந்தன் இதயம் உள்ள பக்கம் கையை வைத்துப் பார் வீட்டை விதியை எண்ணித் தினமும் விழிகள் கலங்கும் எம்மைப் பார் தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத் தலையினில் கட்டியே விட்டவர் நீர் உரிமை இழந்த இனமாய் நாங்கள் உலகம் முழுதும் உழல்வதைப் பார் அல்லற் பிட்டியில் வழிவழி வாழ்ந்தோர் அல்லற் பட்டு மடிவதைப் பார் அகதியாய்த் தினந்தினம் இருப்பிடம் தேடி அலைபவர் துயரைக் களையப் பார் காமுகர் வெறியால் ஆவியை இழந்து கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார் கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக் கருவியை எடுத்த காரணம் பார் புனிதரின் பிறப்பில் பிரார்த்தனை செய்கையில் புலையனை ஏவியே விட்டனர் பார் சிறுமையைப் பேனா முனையால் செப்பிய சிவராம் உயிரும் போனது பார…

    • 9 replies
    • 1.7k views
  14. பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ எங்கள் மலர்களின் முக்கத்தைப் பாருமையா பெற்றோரை இழந்தனர் உற்றோரை இழந்தனர் அணைக்க கரங்கள் இன்றி அலையா அலைந்தனர் அலைந்த உள்ளங்களை அணைத்தது இச்சோலை அன்புக்கு ஏங்கிய உள்ளங்களை அன்புகாட்டிய இச்சோலை அழுத விழிகளை அழகுறச் செய்யது இச்சோலை அன்னையும் தந்தையுமாகி அமுது அளித்தது இச்சோலை துயரம் மறந்து சிட்டாய் பறந்தது இச்சிட்டுக்கள் அன்னையை பறித்தீர் தந்தையும் பறித்தீர் தப்பிய இக்குஞ்சுகளையும் பறித்துவிட்டீர் பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ துளசி

  15. பாசறையில் பூத்து கல்லறைகளில் உறங்கும் மாவீரர்களே............ நீங்கள் ஒடுக்கப்பட்ட நம் தமிழினத்திற்காக மண்ணிற்க்குள் புதைக்கப் பட்டு, விதைக்கப் பட்டவர்கள். நீங்கள் மண்ணிற்க்குள் புதைக்கப் படவில்லை நமது தாயகமெனும் கட்டிடத்திற்க்கு உறுதியான அத்திவாரமாக்கப் பட்டவர்கள். மண்ணிற்க்குள் விதைக்கப்பட்ட உங்களின் கனவுகள் எரிமலைகளாக குமுறிக்கொண்டிருக்கின்றன நாளை நிச்சயம் எரிமலைகள் வெடித்துச் சித்றும் அப்போது உங்கள் ஆசைகள் நிறைவேறும் உறங்குங்கள் அமைதியாக அதன்பின்பு

  16. அடிமையாய்ப் போவோமென்று நினைத்தாயா? -இல்லை ஆடிப்போய்...ஆறித்தான் போவோமென்று நினைத்தாயா? இப்படியொரு இனம் வீரமுடன் வாழ்ந்தது - அதில், ஈனப் பிறவிகளாய்ச் சிலவும் இருந்தது என... உலகறியச் சொல்லி உரைத்துவிட்டு, ஊண் உறக்கமின்றி கந்தகவெடிகளில் சிதறி அழிந்ததையும்... எழுதிவைத்துச் செல்லுவோம் !!!!! - இதை, ஏட்டில் படித்தேனும்..... எப்படியேனும்... ஐயமின்றி ஐந்தறிவைத் தாண்டி வந்து - இனிமேலேனும், ஒழுங்காய் நடக்கும் எம் எதிர்காலம்! ஓரமாய் ஒதுங்கிப்போய் ஒழிந்திடுவோம்... என்று நினைத்தாயா? ஒளவை பின் பாரதி சொன்ன "அச்சம் தவிர்" ஆத்திசூடியை இன்னும் (ஃ) ஆயுதமாய் எம்கையில்... தாங்கியபடி ... எம் விடுதலைநோக்கி...... நம் பரம்பரை உன்னைத் தொடரும் - வெல்லும்வரை!!!!!!

  17. புதிய இசையின் பதற்றம் பீறிட்டெழும் என் பதற்றத்தின் பார்வை அமைதி அமைதி என பச்சைப் புல் தேடுகிறது அவலங்களின் நாவுகள் பயணித்த சுவை வழியே மௌனம் யாசிக்கிறது நடுக்கம் சிவப்புக் கம்பளம் விரித்த கூடமொன்றிலிருந்து நிர்வாகவியல் குறித்த வரைவுகள் தொடங்குகின்றன குளிரூட்டப்பட்ட சதுரங்கள் உரையாடலை வாசிக்கின்றன உணவுகளின் வரிசையில் எண்ணிக்கைகள் தொடர்கின்றன பசி மட்டும் சாசுவதம் கழிப்பறை சுவர் சிரித்த இசை கனவுப் பிரதேசமாய் விரிகிறது நடுநிசியளவு அல்லது பகலா ஏதோ ஒன்றிலிருந்து எழும் ஓலம் ஞாபகங்கள் மீது நதி நீரற்ற தனிமையை வீசுகிறது நடவடிக்கைகளின் ஒழுங்கு படுத்தலை ஒளி அறைகிறது நெஞ்சுப் பலகை மீது விழிகளின் அச்சம் வினாக்குறிகளை உமிழ்கிறது பழைய கேள்விதான் …

    • 2 replies
    • 1.1k views
  18. நான் படித்தவனல்ல படிபிக்கப்பட்டவன் அனுபவங்களால். உங்க ஊர் பள்ளியில்தான் நீங்கள் பட்டம் பெற்று இருப்பீர்கள் நான் ஏடு துவக்கியதுதான் சொந்த ஊர் பள்ளியில் ஆரம்ப கல்வி படித்ததே மூன்று பாடசாலையில். யுத்தம் என்பதை நீங்கள் பாடத்தில் படித்திருப்பீர்கள் அனால் நான் யுத்தத்துக்குள் பள்ளி சென்றவன். குடை இல்லை என்பதற்காக பள்ளி சென்று இருக்க மாட்டீர்கள் நான் குண்டு மழைக்குள்ளும் பள்ளிவரவை அதிகரித்திருக்கிறேன். நீங்கள் காகிதத்தில் செய்த ரொக்கேற்றுகளைத்தான் வகுப்பறையில் பறக்கவிட்டு இருப்பீர்கள் நான் குண்டு விமானங்கள் சுற்ற சுற்ற படித்திருக்கிறேன். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்னைப்போல் அயுத வெடிசத்த…

    • 2 replies
    • 1.1k views
  19. Started by Jamuna,

    நிழல்!! அழகிய நந்தவனத்தில் அநாதையான பறவை நான் சிறகுகள் எனக்கிருந்தும் சிறகடிக்க தெரியாது தவித்தேன் வானத்தில் பறக்க ஆசை வந்தும் தனிமையில் பறக்க வெறுத்தேன்..!! பறக்கும் பறவைகளை கண்டு பலநாட்கள் ஏங்கினேன். என் ஏக்கம் அறிந்து ஒரு பறவை என்னிடம் பதுங்கி பதுங்கி வந்தது.. எனக்கு பறவை மொழி கற்று தந்தது நானும் கற்றேன் மொழியை... மறந்தேன் என் தாய் மொழியை இறக்கைவிரித்து பறந்தேன் வானத்தில் பறந்த போது என் கண்களுக்கு தெரிந்த எல்லாமே சின்னதாகவே இருந்தன.. நிஜத்தை தொலைத்தேன் நிழலாக பறந்தேன் வானத்தில்.. நிஜம் எது நிழல் எது என குழம்பினேன் நானும்.. நந்தவனத்தில் இருந்த இனிமை எனக்கு கிடைக்கவில்லை வானில் நிஜத்தை தொ…

    • 42 replies
    • 8.9k views
  20. Up.. Down குவாக்சுகளின் கலவையில் குவா குவா என்றே பிறந்திட்ட இரட்டைப் பிறவிகள் புரோத்தனும்.. நியூற்றனும்..! அண்டை அயலில் அலைந்து திரிந்த... லெப்ரோன்கள் மீது கொண்ட காதலில் கலவி கொண்டே தந்தன.. அணுக் குழந்தைகள். காபனின் கறுப்பில் கவர்ந்திட்ட ஐதரசனும் காந்தர்வமாய் கலந்திட்ட ஒக்சிசனும்.. இடையில்.. நைசா நுழைந்திட்ட நைதரசனின் நாட்டமும் கூடவே.. பொஸ்பரஸின் கூட்டும் கூடிக் கண்ட விளைவே டீ என் ஏ...! டீ என் ஏ சுருளிச் சுற்றில் சிக்கிக் கொண்ட காதல் எஸ் எம் எஸ் ஸுக்கள் அமினோ அமிலங்களாய் வாசிக்கப்பட அங்கு பிறந்த கவர்ச்சிச் சண்டையில் நடந்த கலவியில்.. புரதங்கள் பிறப்பெடுக்க கருக்கொண்டது உயிரின் உருவம்..! அழகும் வர்ணமும் அறிவும் திறனும் கூட…

  21. மங்கையின் கூந்தலை கார் முகில் என்றார் பூங்குழல் என்றார் நதி என்றார் நறுமணம் வீசும் சொத்தென்றார் மயக்கத்தில்..! சூடிய மலர்களும்.. முக்கிய சந்தனப் புகைகளும்.. தடவிய பன்னீரும் திரவியமும்.. தப்பிய சீயாக்காயும்.. கும்பிய கெட் அண்ட் சோல்டரும் (H&S).. கொட்டிய கண்டிசனர்களும்.. அடித்த ஸ்பிரேயும்.. வாசம் வீசியதென்பதால்.. அப்படிச் சொன்னார். உண்மையில்.. பெண்களின் கூந்தலில் வாசம் செய்வது.. பேனும் ஈரும்..!

  22. எல்லாரும் ஊருக்கு போகினம்..!!! நாங்கள் எப்ப ஊருக்கு போறது? எல்லாருக்கும் இருக்கும் ஆசை எங்களுக்கும் இருக்கு..! கோயில் திருவிழா தங்கையின் சாமத்திய வீடு அண்ணாவின் கலியாணம் எல்லாரும் போகினம் நாங்கள் எப்ப போறது? எங்கட கடற்கரை வெண்மணல் புட்டி கரைவலை மீன் ஒடியல் புட்டு லுமாலா சைக்கிள் எல்லாருக்கும் இருக்கும் ஆசை எங்களுக்கும் இ்ருக்கும் தானே..! நெஞ்சு கனக்கும் நினைக்கும் போது மனசு வலிக்கும். எல்லாரும் ஊருக்கு போகினம் நாங்கள் எப்ப போறது? தமிழ்ப்பொடியன் 4/06/2013

    • 22 replies
    • 1.9k views
  23. Seelan Ithayachandran முகனூல் ஊடாக அடுத்த தீர்மானம்வரை நீதிக்காகக் காத்திரு. குளம் வற்றும்வரை பொறுத்திரு. நிலம் போனாலும் மீட்பர்கள் அதனை பெற்றுத் தருவார்களென்று நம்பிக்கை கொள். நீங்கள் போராடாமலே விடுதலை வாங்கித்தரும் இரட்சகர்கள் இவர்களென்று நம்பு. இப்படியான தரகு மீட்பர்களின் அடிபணிவு கீதம் பலமாகக் கேட்கிறது. பயணித்த பாதை குரூரமும் வன்மமும் வஞ்சகமும் சூழ்ச்சியும் தன் முனைப்பும் சந்தேகமும் நிரம்பியதொரு வாழ்வின் இருண்ட பக்கங்கள். அங்கு மகிழ்ச்சியும் இருந்தது துரோகங்களுக்கும் குறைவில்லை. துயரமும் இருந்தது நிலம் மீட்ட நிம்மதியும் இருந்தது. இனிவரும் காலம் பட்டறிவின் பரிசோதனைக் களம். இன அழிப்பின் புதிய பரிமாணங்கள…

  24. Started by அஞ்சரன்,

    உன் எழுத்தில் அம்சம் இல்லை உன் கருத்தில் ஆழம் இல்லை உன் சொல்லில் கூர்மை இல்லை உன் கவியில் உணர்ச்சிகள் இல்லை என்னை நோக்கிய கேள்வி என் பாணியில் போகட்டுமா நான் என்ன பெண்ணு பார்க்கவா போகிறேன் நான் என்ன கிணறு வெட்டவா போனேன் நான் என்ன சானை பிடித்தா தந்தேன் நான் என்ன பிட்டு படமா எடுத்தேன் என்னுள் எழும் இயல்பை உன்னுள் கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் முன் வீசி நின்றேன் பணம் என்றால் பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் தெளிவெண்ணை கசக்கும் ஆனால் உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே நான் பாரதி அல்ல பாமரன் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.