கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
தினமும் என் இராப்பொழுதுகள் விட்டுச்செல்லும் கனவுகளில், ஒரு காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் அடிக்கடி கனவில் வரும்! நிஜமாய் இருந்த பொழுதுகளைவிட சுகமாய் இருந்தது... கனாக்காட்சிகள்! சில்லென உணர்ந்த குளிரும் காலையிலும் சுடுதேநீரின் இனிப்பான மாலையிலும் என்னருகில் ஒட்டிக்கொண்டிருந்தவளின் இதமான தேகச்சூடும், என் தோளில் பரவிநின்ற அழகான அவள் கூந்தலும், அதனினிய வாசமும், எம் புன்சிரிப்பும்... எம்முன்னே பூத்துச் சிரித்த பூக்களை பொறாமைப்பட வைத்திருக்கும்! உதட்டோடு சிரித்துக்கொண்டிருந்தவளை மனதோடு ரசித்துக்கொண்டிருந்த... என் இராப்பொழுதுகள் களித்த கனவுகள், கழிந்துபோன நாளிகைகளில்... விடிகின்ற அதிகாலைகள் ஏமாற்றாமல் உணர்த்துகின்றன... அனைத்தும் கனவ…
-
- 20 replies
- 1.4k views
-
-
1, பூனையார் பூனையார் எலி பிடிக்கும் பூனையார் பதுங்கிப்பதுங்கி எலி பிடிக்கும் பூனையார் எலிகள் எல்லாம் சேர்ந்தன திட்டம் ஒன்று போட்டன பூனையார் கழுத்தில் மணிகட்டினால் பூனை வரும் சத்தத்தில் ஓடி நாங்கள் தப்பலாம் திட்டம் நல்ல திட்டம் எலியாருக்கு கொண்டாட்டம் யார் பூனைக்கு மணிகட்டுவது? எலியாருக்குள் திண்டாட்டம் யார் பூனைக்கு மணிகட்டுவது? எலியாருக்குள் திண்டாட்டம் பூனையார் பூனையார் பதுங்கித்திரியும் பூனையார் எலியாரின் திட்டம் கேட்டு கொடுப்புக்குள் சிரித்துக்கொண்ட பூனையார் பகிடி பார்க்க மீயா மீயா சத்தம் போட்ட பூனையார் எலியாரின் கூட்டமும் போச்சு அவர் போட்ட திட்டமும் போச்சு ஓடி ஒளித்தனர் எலியார் …
-
- 9 replies
- 2.2k views
-
-
கண்ட நாள் முதல் இந்த நாள் வரை.... கவிதை..... உன்னுடன் சேரத்துடிக்கும் முன்னர்.....! மின்மினியாய் என் கண்ணில் வந்தாய்.... முல்லையாய் மணம் வீசிச் சென்றாய்.... காகிதப் பூவாய் எந்தன் மனம் கவர்ந்தாய்... குயில் இசைபோல் பாடிச் சென்றாய்..... உன்னுடன் சேரத் துடித்தபோது.... ! என் மனதின் எண்ணங்கள் ஆனாய்.... என் பசிக்கோ உணவும் ஆனாய்..... என் மனதில் வண்ணத்துப் பூச்சியாய் இறகும் அடித்தாய்.... தொட்டாச் சிணுங்கிபோல் சிணுங்கவும் செய்தாய்.... பின் நாளில் நாம் சேர்ந்த போது....! விடிவெள்ளியும் வானமும் ஆனோம்... மயக்கும் சூரியனும் மாலைப் பொழுதும் ஆனோம்... மயிலும் மழையும் ஆனோம…
-
- 0 replies
- 651 views
-
-
சோல்ஜர் @ சொறிநாய் சொறிநாயைப் பிடித்து “சோல்ஜர்” எனப் பெயர் வைத்து கறியோடு சோறும் வெறியேற அபினும் குழைத்துண்ணக் கொடுத்து வடக்கே போ என்றான் வேட்டைக்கு காவாலி சோல்ஜர் கடைசித் தெருதாண்டி முக்கி முணகி மோப்பம் பிடித்தபடி கால்தூக்கி எல்லை வரைகின்றான் என் வீட்டுச் சுவரில் அடித்து விரட்ட ஆளில்லா வீடொன்றில் நாநீட்ட தாகம் தணித்தவளின் கைநக்கி கோரைப்பல் தெரியச் சிரித்தான் வேட்டை நாயில்லா வீடொன்றாய்ப் பார்த்து கோழி இரண்டையும் -தென்னங் குலை நான்கையும் தேசியச் சொத்தாக்கினான் சிதறுண்ட கால்கொண்ட சிறுபுலியின் கதவுடைத்து பெண்மையை அரசுடைமையாக்கினான் காலம் பொறுமையாய் காத்திருக்கிறது காலம் வருவதற்காய் http://www.eelavayal.com/2012/12/blog-post.html
-
- 0 replies
- 635 views
-
-
01, ஒரே பத்திரிகையில் பிறந்த நாள் வாழ்த்தும் நினைவஞ்சலியும் வாழ்க்கை 02, வீடு எரிகிறது ஒளி கிடைக்கிறதாம் வடக்கில் வசந்தம் 03, நெற்றிக் குங்குமப்பொட்டுக்கள் அழிக்கப்படுகின்றன கிழக்கில் உதயம் 04, கள்ளர் நாடாளுமன்றில் நல்லவர் தெருவில் வீடும் நாயும் 05, தேர்தலில் ராஜ பக்சர்களின் நாகாஸ்திரம் கள்ள வாக்கு 06, புளியமரத்தடி முனியை கண்டதில்லை,பயமுமில்லை கண்டதும் பயமும் வெள்ளை வானுக்குத்தான் 07, நிலவு உறங்கும் இரவு ,நாய்கள் ஊளையிடும், கோழிகள் கூவாது ஏனெனில் களவாடப்பட்டிருக்கும் இந்திய அமைதிப்படைக்காலம் 08, என்னைப்போல்எப்படி நீ நடித்தாலும் என் உணர்வை உணராய் விம்பம் 09, அம்பு துப்பாக்கிரவை ஆயிற்று சேலையும் அப்படித்தான் உலக …
-
- 8 replies
- 21.2k views
-
-
ஒரு கூட்டு கிளிகளாக, கொட்டில் வகுப்பொன்றில், கூடிப்பழகிய இனிய கணமொன்று நொடிக்கனவாக மலர்ந்ததின்று. நட்பில் வஞ்சமில்லை.... பதற்றமில்லை நெஞ்சத்தில்... நொடிக்கனவை படம் பிடித்து, மனத்திடையே மாட்டி வைக்க, அழுத்தினேன் புகைப்பட கருவியை. பளிச்சென்று ஒரு வெளிச்சம்... மலரும் காலையின் சூரிய கீற்று கலைத்தது என் இனிய கனவை... மலர்ந்தன என் விழிகள் புலம்பெயர் வாழ்க்கையின் புழுங்கும் கணங்களை முழுநீளப்படமெடுக்க... (17/08/2010)
-
- 8 replies
- 875 views
-
-
காதலை பூ என்று நினைத்தேன் பெண்ணே நீ தொட்டவுடன் வெடித்துவிட மிதிவெடியா அல்லது சீறிவந்து உயிர் குடிக்கும் ஆட்லறியா கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் கதையை முடித்துவிடும் கண்ணி வெடியா சன்னமாய் போகின்றாய் மின்னலாய் ஒளி வீசுகின்றாய் பல்குழல் பீரங்கி போல படபடென்று பேசுகின்றாய் உன்னைப் பக்கத்தில் வந்து பார்க்க மனம் ஏவுதடி கால்கள்தான் ஏனோ தடை சொல்லுதடி
-
- 13 replies
- 2.5k views
-
-
நொடிப் பொழுதில் மடியக் குண்டு செய்யும் தொன் கணக்கில் அது கொட்டி.. மடிந்த பின் கட்டுப் போடும்..! மடியக் கொலைக்கருவி தரும் மடிந்த பின் ஒளித்து விட்ட அக்கருவி சாட்சியம் தேடும்..! மடியக் கொலைஞர்கள் ஏவி விடும் மடிந்த பின் ஏவியவர் யாரோ நீர்த்துவிட்ட நீதி தேடச் சொல்லும்...! மடியும் போது ஊடக வாய்கள் மெளனமாகும் மடிந்த பின் கூக்குரல்கள் அனுமதிக்கப்படும்..! மடியக் காரணம் யாரோ மடிந்த பின் மரண விசாரணை அவனிடமே பாடை தரும் ...! மடியும் போது ஒற்றைக் கரணம் மடிந்த பின் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கும்..! மடிய முன் பயங்கரவாதின்னு உச்சரிப்பு உச்சக்கட்டம்..! மடிந்த பின் தியாகின்னு உச்சரிப்பு முணு முணுப்பாய் மாறி நிற்கும். மடியும் போது …
-
- 7 replies
- 879 views
-
-
முள்ளிவாய்க்காலுடன் முடிந்தது ஆண்டுகள் நான்கு மனிதம் தொலைந்து மானுடத்தின் மரணவீடானது. கொத்தணிக் குண்டுகள் கொட்டிய மழையில் கொத்துக் கொத்தாய் உடல்கள் மட்டுமா வீழ்ந்தது ? முற்று முழுதாய்த் தமிழினம் முகம் தொலைத்த நாளது மூடர்கள் மூட்டிய தீயினில் முழுவதும் எரிந்து போனது மொத்தமும் இழந்து மூளிகளாக்கி முழுதும் அழித்து மீண்டது சொத்து சுகங்கள் சொந்தம் எல்லாம் எதிரிக்கென்றானது ஊர் இழந்து உறவுகள் இழந்து உடைமைகளும் தானிழந்து ஒப்பாரி ஒன்றே ஊர்முழுதும் கேட்கும் ஒலியானது சிங்களன் மூட்டிய சிதையின் நடுவே சித்தம் கலங்க சிதைந்து அன்றோ போனது சீருடன் வாழ்ந்த வாழ்வு வீடிழந்து வீதி இழந்து வேர்களுடன் விழுதுகள் இழந்து ஓடிவிளையாடிய ஊரிழந்து கூடிக் களித்த உறவுகள் இழந்து கொட்டும் …
-
- 3 replies
- 614 views
-
-
புத்தர் பிறந்த நாளுக்கு இரத்தக் கறைகளுடன் அது இலங்கைக்கு வருகிறது… குஜராத் முஸ்லிம்களின் குருதி பருகிய கொம்பேறி மூக்கன் அது… காஷ்மீரின் கண்ணீரில் கண்மூடிக் குளிக்கின்ற கட்டுவிரியன் அது… இஸ்லாமிய விழுமியங்களில் இயன்றவரை நஞ்சுமிழும் இனவாத சர்ப்பம் அது… ஆர். எஸ். எஸ். தேள்களை அரவணைத்துப் போஷிக்கும் ஆபத்தான அரவம் அது… மனிதர்க்கன்றி இப்பாம்பு மாடுகளுக்குத்தான் மரியாதை செலுத்தும்… மூத்திரம் குடிக்குமிந்த மூடப் பாம்புக்கு மூத்திரம் கழுவிச் சுத்தமாயிருக்கும் முஸ்லிம்களின் மீதுதான் ஆத்திரம் எல்லாம்… இந்தப் பொல்லாத பாம்பின் மூச்சிலும் விஷமிருக்கும்… ஆதலால் மூடி வையுங்கள் ஜன்னல்களை!AkuranaToday.com | Read more http://www.akuranatoday…
-
- 1 reply
- 1.4k views
-
-
கடனில் முளைத்த பூ - கவிதை கவிதை: நிலாகண்ணன், படம்: அருண் டைட்டன் சில்லறை மீன் வியாபாரி விபத்துக்குள்ளாகிக் கிடக்கின்றான் கூடையிலிருந்து சிதறிய மீன்கள் அவன் குருதியில் நீந்திக்களிக்கின்றது. பாவம் வியாபாரிதான் காற்று குடித்து மூர்ச்சையானான்... தவிர வண்ணமீன்கள் சுற்றும் தட்டைப்பேழைக்குள் நான் என் சைக்கிள் பெல்லை அடித்தபடி கவனமாய் நீந்திவந்தேன் என் வீட்டிற்கு. *** தையல் எந்திரத்திற்காக வாங்கிய கடனால் உறவில் ஒரு கிழிசல் நேர்ந்துவிடுகிறது. நல்லவேளை துணைவி கத்தரி நிறத்தில் அதன்மேல் ஒரு பூ வரைந்துவிடுகிறாள். ஒரு தாவரத்தைப்போல் படருகின்ற கடனால் மறைந்துகொள்ள ஒரு காடும் கிடைத்துவிடுகிறது. என்னைத்தேடி வனம்புகும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
அம்மா இருந்த உணவை பகிர்ந்து எம் வயிறு நிரப்பி நீரை மட்டும் நீ குடித்து சிரித்தபடி எமை வளர்த்தாய் வளர்ந்தால் உன்னை பார்ப்பார் என்றோ படித்து பெரியவர் ஆவார் என்றோ நீ கனவு கண்டிருப்பாய் எதுவும் நடக்கவில்லை யாருக்கும் உதவும் உன்மனம் பிள்ளைகளோடு பிறந்ததால் பிள்ளைகள் உன்னோடு இல்லை ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய் உன் இறுதிசடங்கில் கூட உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று அம்மா நீ விரும்புவாயோ இல்லையோ அடுத்த பிறப்பிலும் நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்
-
- 4 replies
- 811 views
-
-
இழப்புக்கள் பிறந்தது அவைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றது காலத்தால் தேற்றமுடியாத காயங்களில் குருதி வழிந்துகொண்டே இருக்கின்றது அன்றும் அசுரர்களை அழிக்க கடவுள்தான் வேண்டும் இன்றும் எம்மை அழிப்பவனை யாரோ ஒருவன் அழிக்கவேண்டும் அப்படி நடந்தால் கொண்டாடுவோம் எமது பெருவிருப்பங்களுக்காக சிலுவை சுமந்தவர்கள் கல்வாரிக்குள் இருந்து எழவே இல்லை இலக்கை அடையமுடியாதவர்களின் மோட்சத்தை நாமே பிரகடனப்படுத்திவிட்டு இலக்கை நோக்கி போரை மீண்டும் தொடர்கின்றோம் போரின் முடிவு இம்முறை நிறைவாக இருக்கவேண்டும் சூரனின் வயிற்றுக்குள் சேவலை மட்டுமே விடுவது வழக்கம் இம்முறை மயில்க்குஞ்சையும் சேர்த்து விடவேண்டும் கடசியாக முருகன் வேலெறிந்து சூரன் பாட்ட…
-
- 20 replies
- 2.3k views
-
-
என்னை அழித்து விடுவாயா? முதல் வார்த்தையில் என் இதயத்தை துடி துடிக்க வைத்தாய்!!! ஒவ்வரு நாளும் உன் பேச்சால் என்னை சாகடித்தாய்!!!! தென்றல் காற்றாக என் மனதுக்குள் நுழைந்து விட்டாய்!!!!! உன் சுவாசமே என் மூச்சுக் காற்றில் கலந்துள்ளது!!! உன்னில் ஒன்றாக நான் கலந்துவிட்டேன்!!! நீ தொலைது}ரம் இருந்தாலும் என் பக்கத்தில் இருப்பதாகவே உணர்கின்றேன்...!!! உன்னுடன் பேசிய ஒரு நொடி போதும் எனக்கு.. கேட்கும் ஓசையெல்லாம் உன் குரலாகவே கேட்கின்றது!!! பிரியமானவளே.........!!!! என்னை ஏற்றுக் கொள்வாயா? இல்லை என்னை அழித்து விடுவாயா? >>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்…
-
- 10 replies
- 2.4k views
-
-
.......'கலையாத கனவுகள்' கண்ணீரில் பிறந்தேனோ? மின்னல் போல் உதித்தாய் பின்...... திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய் காலம் கடந்தும் ......... --மீண்டும் மேகம் வடிவாய் பூத்தாய்....... உன்னை வாசலில் வந்து பார்த்தேன்....... ஆனால் மூச்சு காத்து தான் ....... அடித்தது ஏன் பனி வீசி பாளத்தை உடைத்து தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......? விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 4 replies
- 1.8k views
-
-
கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? காதல் வந்தும் சொல்லாமல்........ அந்தப்பெண் தனியாக அமர்ந்து இந்த கேள்விகளுக்கெல்லாம் காரணமான விழிகளை அணைத்து, பாதங்கள் மட்டும் ஒருவராக .. நடந்துகொண்டு இருக்கிறாள்......... ஈர நினைவில்....... வானை நோக்கி........!! விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 1 reply
- 1.2k views
-
-
-
<span style='font-size:30pt;line-height:100%'><span style='color:green'>நடந்து போவதென்ன...</span> நடந்து போவதென்ன... நந்தவனமா-நீ நதிகள் நீந்தி வந்த தங்கரதமா.. விழிகள் இரண்டுமே.... வேலினமா-இடை தேடிப்பார்த்தேன் நான் நூலினமா... இடியோடு சுூறாவளி.. இதயத்திலே உன்னாலடி... புூங்கொடியோடு பொன்மாங்கனி(கள்) கொண்டாட வருவாயோ... நீ கூந்தல் கருமேகம்.. நீண்டு அலை பாயும் நிம்மதி பறிபோகும் கால்கள் மடல் வாழை மூடும் வண்ணச்சேலை.. காதல் கவி பாடும்.. இரண்டு விழிகள் கொண்ட பளிங்கு ரதமொன்று நடந்து வருகின்றது... இந்தப் பாலைவனம் தாண்டி ஈரப்புூங்பாற்று எங்கு போகின்றது.. தேகம் செவ்வானம் வதனம் மதி போலும்.…
-
- 16 replies
- 2.1k views
-
-
எங்கு போய் சொல்ல....??? கண்டம் விட்டு கண்டம் வந்து கண்டதெல்லாம் கற்றோமென்று வந்தொரு தமிழ் கூட்டம் வஞ்சனைகள் செய்கிறது...... நெஞ்சமதில் ஏறி வந்து நெஞ்சதிர குத்துறது... முந்தி வந்த மூத்தறிஞர் முத்தமிழை நாமறிவோம்... ஏடுகளில் ஏறிவந்த எம்தனையே நாடறியும்... பா...வதுவை பாடிநிற்கும் பாவலர் கூட்டமென்று... காகம் போல் வந்திங்கு கத்தியடித்து கரைகிறது...... பாரெங்கும் பா முழங்கி தங்க தகடுகளை தமதாக்கி வந்தோமென்று தம்பட்டமடிக்கின்றது.... கடனுக்கு மூளை வேண்டி கவிதைகள் புனைந்தாரென்று கதைகள் வேறு விடுகிறது..... பகட்டுக்காய் வந்தொரு... பாரட்டை சொல்லிவிட்டு கரியார் போல் வந்…
-
- 5 replies
- 1.1k views
-
-
இரதை வாழையில் இடிவிழும் போது குறுக்க வெட்டி தங்கம் எடுக்க இலவுகாத்த கிளிகளாக காத்து இருந்தோம் இடி தலையில் விழுந்து முகம் உருக்குலைந்துபோனது வேலியில் சற்று சரிந்து நிற்கும் கருகிய கம்பிக் கட்டையாய் பற்றைகள் வளர்ந்த வயல்க் கரைகளில் எஞ்சியவர்கள் நிற்கின்றார்கள் புரட்டாதிச் சனி விரதம் பிடிப்பவர்கள் காகத்துக்கு சோறுவைக்க இன்னும் கம்பிக்கட்டைகளில் குந்தியிருக்கும் காகங்களை கூப்பிடுகின்றார்கள் நலமடித்த நாம்பன்கள் போல் வேரறுந்த மரங்கள் போல் கப்பாத்து பண்ணப்பட்ட நாய்கள் போல் பரிதவிக்கும் இந்த வாழ்க்கையின் வேதனைக்கு விரதமிருந்து காகத்துக்கு சோறுவைத்து விடிவுகள் தேடும் அவல வாழ்வு எமக்கு மட்டும் எல்லாப் பிரச்சனைகளும் எமக்கு வெ…
-
- 8 replies
- 1.6k views
-
-
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!! அகம் முழுதும் நிறைந்தவளே ..... அகமதியால் காதலை இழந்தவளே.... அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ...... அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் .... அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!! அச்சப்படாதேயடா என்னவனே ..... அச்சுதனடா என்றும் நீ எனக்கு ..... அகந்தையும் அகமதியுமில்லை .... அடர்த்தி கொண்டதடா நம் காதல் ...... அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!! அடைமழை போல் இன்பம் தந்தவளே .... அந்தகாரத்தில் வந்த முழுநிலவே ..... அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி .... அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் .... அகத்திலே நீ அத்திவார…
-
- 3 replies
- 1.7k views
-
-
இது எங்கள் தாயகத்தைவிட்டு வெளிநாடு செல்ல ஏஐன்சிக்காரரிடம் காத்திருந்து, பின் ஏமாந்து போனவர்களுக்காகவும், இன்னும் வெளிநாடு வரமுடியாது. இலங்கை முழுவதும் அலைந்து, மனம் உடைந்து திரியும் உறவுகளுக்காக... என்ன? யாழ்கள உறவுகளே உங்களில்கூட எத்தனை பேர் இப்படிக் கஸ்டப்பட்டு வெளிநாடு வந்திருப்பீர்கள். அந்தக் காலத்தை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் கண்களில் கண்ணீர் வழியலாம்.. உங்கள் மனதை தலாட்ட இப்பாடல் காதல் மொழி இறுவட்டில் இருந்து வரும் ஐந்தாவது பாடல்...கேட்டு மகிழுங்கள். http://vaseeharan.blogspot.com/ -please click here to listen... கருத்தைச் சொல்லுங்கள். பல்லவி ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான்- என் கதிர்காம முருகன் காப்பாத்திட்டான் அப்பாவின் காசு காற்றோடு போச்சு …
-
- 24 replies
- 3.5k views
-
-
ஈழத் தமிழ்க் குலமே! எழுக!!!!! புத்தனா,நீ? போய்விடு! போதி மரத்தைத்தான் எத்தனை நாளாக நம்பி யிருப்பது? அகிம்சை போதிக்கும் அண்ணலும் வேண்டாம்! பகையை வளர்க்கும் பாலமும் வேண்டாம்! பிஞ்சுக் கொடியை மொட்டு மலரை நஞ்சுக் கொடியை நசுக்கிய பாவியைக் காணவா, கண்கள்? இருக்கும் உயிரைப் பேணுதல் வேண்டோம்! களத்தில்நில்! நம்முள் இருப்பதும் ஓருயிர்! என்பதை,எண்! செங்களத்தில், அரும்புகளைக் கொன்ற அகந்தை அழிப்போம்! சிங்கள நாயின் சிரந்தனைக் கொய்துநமைப் பங்கப் படுத்தும் படையை ஒழிப்போம்! புலிகளை வெல்லுமோ பசுக்களின் கூட்டம்! அலிகளுக்கா ஆண்மை பணியும்? தமிழா, இறுதிக் களமிது, போராடு! நெஞ்சில் உறுதிகொள்! உள்ளத்துள் ஈழம் தனைநினை! …
-
- 3 replies
- 1.1k views
-
-
காதல் அழுகிறது ... என்னை காதலித்த என் உயிர் ... தேவதாஸை காணவில்லையே ....? அவன் காதலியை விரும்பியதை .... காட்டிலும் என்னையே (காதல் ).... காதலித்தான் .......!!! கையிலே ஒரு காதலி ..... கைபேசியில் ஒரு காதலி .... கைவிட்டு காதல் போனால் .... கைகுலுக்கும் காதலர்கள் ..... இதை காதல் என்று சொல்லும் .... காதலர்களே - தேவதாஸை கேவல படுத்தாதீர் .....!!! காதலில் தோற்றால் ... நாங்கள் தேவதாஸ் இல்லை .... காலத்துக்கு ஏற்றால் போல் காதல் ... செய்கிறோம் என்று கூறும் .... காதலர்களே ..... காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை .... காமத்தை காதலாக கருதாதீர் .... காதல் என்றும் காதல் தான் ....!!!
-
- 0 replies
- 676 views
-
-
ஓடிடுவீர்..... மூவொரு நாளத முடிந்ததுவே மூடர்கள் பகுப்பு முடியலயே இதுபோலும் இதுபோலும் இவரறிவு....? இவரா உரைத்தனர் பகுத்தறிவு....?? இடியப்ப சிக்கலை கலைவாரோ இன்றதை இவரத குலைப்பாரோ...?? மதியுகியத மதியியுரையோ இவரது சிந்தையின் மதியிதுவோ...??? சேற்றில் விழுந்த வெண்ணாடை சேறாகி வராமல் என் செய்யும்...? காழ்புணர்வு தாங்கிய நெஞ்சில் கடுப்பது பொங்காமல் என் செய்யும்... எடு புத்தி மீதினில் இவர் சென்றால் எங்கனும் தானே போய் முடிவார்.... நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டமே- நானிலம் உம்மை உமிழட்டுமே அதுவரை நீரும் ஆடிடவீர் அட்டம் கலைந்ததம் ஓடிடுவீர்....! எழுத்து பிழைகளை திருத்தி படிக்கவும்...
-
- 9 replies
- 1.5k views
-