கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சிந்தனையில் தீ வை...!!! தமிழகம் என் தாய் வழி உறவடா...!!! தம்பிகளா நீங்களெல்லாம் எங்களின் தொப்புள்கொடி உறவடா...!! வேண்டாம் இந்த தீக்குளிப்பு போதும் இதுவரை கண்ட இழப்பு இனியும் தாங்கமுடியாது இனியொரு உரியிழப்பு..!! முத்துக்குமார் இட்ட தீயை - உன் நெஞ்சினில் ஏந்து உன் மேனியில் அல்ல..!!! உன் மேனியில் இட்ட தீ ஒரு வீரத்தமிழனை அழிக்கும்... உன் கண்களில் தீயை வை உன் நெஞ்சினில் விடுதலை தீயை பற்ற வை -அது ஆயிரம் தமிழனை வாழவைக்கும். உயிரை விடாதே உன் உணர்வை தா...!!! என் சகோதரா தீக்குளிக்க வேண்டியவன் நீயல்ல...!!! நில் சிந்தனையில் தீ வை...!!! உனக்கே புரியும் எரிக்க வேண்டியது உன்னையல்ல...!!! தமிழ்ப்பொடியன் 23.03.20…
-
- 3 replies
- 807 views
-
-
பல ஆண்டுகளுக்கு முன்பு வாசிக்கவும் எழுதவும் நேரமும் மன வெளியும் இருந்த காலங்களில், சில கிறுக்கல்களை நான் தாள்களில் பதிய, அவை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எழுதிய எதற்கும் மூலப்பிரதி என்னிடம் இல்லை. பிரசுரமான இதழ்களின் பிரதிகளும் பல்வேறு இடம்பெயர்வுகளின் போது ஒவ்வொன்றாகத் தொலைந்து போய் விட்டன. இவையெல்லாம் சிறு வயது மணல் வீடு ஞாபகங்கள் மாதிரி மனதில் மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கையில் அண்மையில் எனது பழைய கவிதை ஒன்றை யாரோ ஒரு நண்பர் முகநூல் வழியாக நினைவு படுத்தியிருந்தார். அக்கவிதையின் தடங்களைப் பின்பற்றித் தேடல் செய்த போது தான் நூலகம் என்ற அரிய தமிழ் நூல்/இதழ் ஆவணக்காப்பக இணையத் தளமொன்று இருப்பது தெரிய வந்தது (www.noolaham.org). இந்த இணைய…
-
- 7 replies
- 1.1k views
-
-
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எழுதி வாருங்கள் என்று இரண்டாம் வகுப்பு ஆசிரியை சொல்வது அலுவலகத்தில் அமர்ந்திருந்த எனக்குக் காதில் விழுந்தது.. நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லையாயினும் எழுதி பல மாதங்கள் ஆனதால் ஏதேனும் எழுத எண்ணினேன்.. மரங்களைப் பாட வருகிறேன் நண்பர்களே.. மரமா? என்கிறீர்கள்.. மரம் மட்டமில்லை நண்பனே.. மரம் இல்லையேல் மனித இனமில்லை.. காற்றைச் சலவை செய்யும் இலவச இயந்திரம் மரம்.. மாசகற்றும் மாண்புள்ளது மரம்.. தாய்க்கு அடுத்து நம்மைத் தாலாட்டுவது மரம்.. உயிருண்டு மரத்திற்கு.. உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. இன்னொரு உண்மை சொல்லட்டுமா? ஆயுள் அதிகமுள்ள உயிரும் மரம்தான்.. அகழ்வாரைத் தாங்கும் ந…
-
- 3 replies
- 25.9k views
-
-
இலங்கை ராணுவத்தை கவிதை மூலம் சாடுகிறார் (கவிஞர் வாலி ) அவர்கள். http://www.youtube.com/watch?v=_L3lpj80ItU
-
- 0 replies
- 1k views
-
-
பாவிகளை மன்னிப்பாய். புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ? இனங்காத்த தந்தை இல்லாது போனதனால் பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா? வஞ்சக உலகில் வாழ வேண்டாமென நெஞ்சிலே தோட்டாக்கள் நீ-வாங்கி னாயா? நீயுறங்க தாலாட்டு நின்அன்னை இசைப்பதற்கு பீரங்கி முழக்கங்கள் பின்னணியாய் கேட்டதடா வீட்டோரம் வெடிகுண்டு வேலியெல்லாம் துப்பாக்கி தோட்டாக்கள் எல்லாம்நீ தொட்டுவிளை யாடியவை ஒரு தோட்டா போதாதா உன்னைக் கொல்வதற்கு மறுபடியும் சுடடா வென மார்பைக் காட்டினாயா ? " அப்பா" வென அலறியதால் அச்சமுற்று சிங்களவன் அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ? வளர்ந்தால் தந்தைபோல் வரலாறு படைப்பாயென மலர்ந்ததும்…
-
- 3 replies
- 587 views
-
-
ஒரே ஒருமுறை சிந்திப்போம் ஓரணியில் சந்திப்போம். பேதங்கள் தொலைப்போம் - எங்களுக்காக தம்மை தந்தவர்கள் பாதங்கள் தொழுது வேண்டுகிறோம் எங்களுக்குள் இருக்கும் பேதங்கள் தொலைப்போம். தாயகம் மலரவும் தமிழ்க்கொடி பறக்கவும் தம்மையே தந்து தரணிக்கு எம்மை இனம் காட்டிய தவப் புதல்வர்களின் இலட்சியம் நிறைவேற பேதங்கள் தொலைப்போம். ஒன்று பட்ட ஓர் இனமாய் ஒருங்கிணைந்து செயற்படுவோம் உத்தமர் தம் உயிராலே நெய் ஊற்றி ஒளி ஏத்தி வைத்த தீபமதை சத்தியம் செய்து காத்து வைப்போம். அண்ணன் அடிக்கடி சொல்லிடுவான் அடுத்த சந்ததிக்கு வேண்டாம் நாம் பட்ட துன்பம் என்று அவன் வழித்தடத்தில் தடம் பதித்து வரும் நாம் அடுத்த சந்ததிக்காய் எதை விட்டுச் செல்லப் போகிறோம…
-
- 13 replies
- 975 views
-
-
http://youtu.be/nSSv9Kk3tkI முன்னால் நின்றது மாரீசனின் மானல்ல மயங்கி நீர் அண்ணலை விட்டு ஆரணங்காகி அணிவகுக்க.. தாயக விடுதலைக் கனவே உம்மை அங்கு அணிவகுத்தது..! தந்தை செல்வா சொல்லி தந்தை பெரியார் வாழ்த்தி கலைஞர் தலையாட்டி எம் ஜி ஆர் கரம் நீட்டி அமிர்தலிங்கம் வெற்றித் திலகமிட யோகேஸ்வரன் கேட்ட இடத்தில் அணிவகுத்த இளைஞர் கூட்டத்தின் வழி நீவிர் நின்றீர் அண்ணன் பாதையில் கொள்கை காத்து..! களங்கள் பல கண்டீர் இந்திய வானரப்படைகளென்ன கொடும் சிங்கள பேரினப்படைகளும் கண்டீர். போதாதேன்று இலக்கிய காலமே கண்டிராத அமெரிக்கக் கழுகுகளும் இஸ்ரேல் வல்லூறுகளும் கூடவே... சீன ரகன்களும் பாகிஸ்தானியப் பிறைகளும் ரஷ்சிய அரிவாள்களும் உம் முன் மல்லுக்கட்டக் கண்ட…
-
- 6 replies
- 876 views
-
-
புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் முனைவர் இரா.செங்கொடி மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்க…
-
- 1 reply
- 761 views
-
-
சப்த ரிஷிகளை ஏற்றிச் செல்ல ஒரு சிறு படகு பாற்கடலில் வரும் வரும் என்று சொன்னதெல்லாம் பொய். அதிசயங்கள் அற்புதங்களுக்காக காத்திருந்த காலமெல்லாம் வீண். கண்ணியமில்லாத யுத்தம் தலைப்பிள்ளைகளைக் கேட்டது. மரணம் பதுங்குகுழியின் படிக்கட்டில் ஒரு கடன்காரனைப்போல காத்திருந்தது பராக்கிரமசாலிகளின் புஜங்கள் குற்றவுணர்ச்சியால் இளைத்துப்போயின கள்ளத் தீர்க்க தரிசிகளும் கலையாடிகளும் ஏற்கனவே சரணடைந்து விட்டார்கள் நன்றியுள்ள ஜனங்களோ பீரங்கித் தீனிகளாய் ஆனார்கள். ரத்தத்தால் சிந்திப்பவர்கள் மட்டும் சரணடையாதே தனித்து நின்றார்கள். ஓரழகிய வீரயுகம் அதன் புதிரான வீரத்தோடும் நிகரற்ற தியாகத்தோடும் கடற்கரைச் சேற்றில் புதைந்து மறைந்தத…
-
- 2 replies
- 742 views
-
-
அப்பாவின் ஈர நினைவுகள்.... வேர்களில் இருந்து கசியும் நீராய் அப்பாவின் நினைவுகள் எனக்குள்.. ஐந்து வயது வரை நடக்கமுடியாது தவிக்கும் போது தோள்களில் தூக்கி திரிந்த காலங்கள்... பனைவெளிகளின் ஊடாக சைக்கிள் பாரில் எனை வைத்து கதை சொல்லிய பொழுதுகள்.... பெரும் குளக்கட்டின் ஓரம் தடுக்கி விழாமல் இருக்க விரல்கள் இறுக்கி நடந்த நேரங்கள்... பெரும் மழை சோ என்று கொட்ட நனைதலின் சுகம் சொல்லித் தந்த தருணங்கள்... இப்பதான் நடந்ததாய் தெரியும் பொழுதுகளெல்லாம் எப்பவும் தொட முடியாத திக்கில் உறைந்து விட்ட சித்திரங்களாய்... ஆற்றாத் துயர் அணை மேவினும் நெருங்க முடியாத தூரங்களாய்.... பசிய இலையொன்றின் அந்திம காலத்து உதிரும் தவிப்பில் அப்பாவை கண்ட இறுதிப் பொழுத…
-
- 19 replies
- 129.1k views
-
-
ஆதாம், ஏவாளாய் வாழ்ந்த காலத்தில், ஆண்டவன் உனக்குக் கட்டளையிட்டானாம்! அந்தக் கனியை மட்டும் புசித்து விடாதே, என்று! ஆசை உன்னை விட்டுவிடவில்லை, கனியிலேயே உன் கண்ணிருந்தது, கடவுள் மறைந்ததும் கனி உன்னிடமிருந்தது! இராமன் ஒரு சிறு குழந்தை, மண்ணுருட்டி விளையாடுகிறான்,, உன் கூனல் முதுகில் பட்டு விட்டது! உலகமா அழிந்துபோய் விட்டது? ஓடோடிப்போய் கைகேயிக்கு உருவேற்றினாய்! காடேகினான் ராமபிரான், மாயமானாகி மாரீசன் வந்தான், மயங்கிப் போய் நின்றாள் சீதாதேவி, மணாளா, எனக்கு அந்த மான் வேண்டும், மானைத் தேடிப்போனவனைக் காணவில்லை,, காவலிருந்த இலக்குவனைக் கலைத்தாள, அண்ணன் திரும்பி வருவான், கவலை விடு, அண்ணன் இறந்து போன பின்னர், என்னை அடைய நினைக்கிறாயா, இலக்குமணா? பேதலித்துப்ப…
-
- 16 replies
- 2.1k views
-
-
தீயினை கண்களில் கொழுத்து உன் மேனியில் அல்ல...!!! --------------------------------------- ”மக்கள் புரட்சி வெடிக்கும் சுதந்திர தமிழீழம் மலரும்” அண்ணன் திலீபன் உயிர் கருகும் போது சொன்ன வார்த்தை... இன்று தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் நேரம் மாணவர் புரட்சி வெடிக்கும் தருணம்... தொப்புள்கொடி உறவுகள் தோள் கொடுக்கும். எப்போதும் உங்களை எங்களின் இரத்த உறவுகளாய்த்தான் பார்க்கிறோம் எப்போதும் உங்களின் மேல் வைத்த நம்பிக்கையையும் விட்டதில்லை. தம்பிகளா உங்களின் எழுச்சி ...!! தங்கைகளே உங்களின் கோபங்களின் வீரியம்..!! தம்பிகளா உங்களின் ஒற்றுமை..!! தங்கைகளே உங்களின் கொள்கையின் நம்பிக்கை..!! இதில் எதுவுமே சோரம் போகாத யாருக்கும் அடிபணியாத எவனுக்கும் விலைபோகாத உற…
-
- 10 replies
- 1.1k views
-
-
மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை.. முள்ளிவாய்க்காலோடை எல்லாம் முடிஞ்சுது - இனி முதுகு சொறியும் நிலைதான் தமிழர் நிலை என்றிருந்தோம் தம்பியர் தூண்டி விட்ட திரியில் துயருற்றிருந்த - எங்கள் மனங்களில் மத்தாப்பு பூக்கின்றது மலரும் எங்கள் தேசம் என்ற மமதையில் நிற்கின்றோம். அள்ளி அணைத்து ஆதரிக்க எங்கள் அன்னை தமிழகம் இருக்கின்றது சுற்றி வரும் பகை யுடைத்து சுதந்திரத்தை பெற்றுத்தர - திலீபனின் வழியில் பல்லாயிரம் தம்பிகள் அங்கே விழி திறந்து விடுதலைக்காய் வழி திறந்து விட்டிருக்க வார்த்தைகள் ஏதுமின்றி மகிழ்கின்றோம் கந்தகக் களஞ்சியத்துள் வீழ்ந்திட்ட சிறுபொறிபோல் - அகிலத்தை கலங்கடிக்கும் அருஞ்செயல் கண்டு மீள நாம் துளிர்க்கின்றோம் கலங்கிக் கிடந…
-
- 10 replies
- 901 views
-
-
-
ஆகாசவாணி... டெல்லியின் குரலாய் தமிழ் ஈழ மண்ணில் ஒளிவு மறைவு வாழ்வில் சந்துபொந்தில் நடந்த அந்த ஓரிரு நிகழ்வுகள் கூட ஒளிப்பு மறைப்பின்றிச் சொன்னது ஓர் காலம்..! காலை மதியம் மாலை என்று முறுக்கிவிட்ட வானொலிகள் மத்திய மாநிலச் செய்திகள் காவி வர களத்தில் நின்ற வீரனும் நிகழ்வின் விளைவறிவது அங்கு தான்..! அமைதிப் படை என்று அரக்கர் படை ஒன்று வந்து சேர ஆகாசவாணியும் அண்டப்புளுகிற்கு அடிபணிந்து கொண்டது. லங்காபுவத்தோடு காதலொடு கூடலும் கண்டு கொண்டது..! அன்று தொற்றிய வியாதி இன்றும் ஆறவில்லை. இத்தனை ஆயிரம்.. தமிழர் சாவுகள் கண்டும் இரங்கவில்லை... அண்டப்புளுகொடுதான் அதன் அந்தியக்காலம் என்று அடம்பிடிக்குது..! இந்தியாவின் இந்துக்கள் கட்சியாம் ஈழ ம…
-
- 4 replies
- 1k views
-
-
எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தலையின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தளபதியின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் உலக நாயகனின் படம் வந்தது ஆனால் எதிர் பார்த்தது கிடைக்கவில்லை எதிர் பார்த்திருந்தேன் சூப்பர் ஸ்ராரை அவர் வருவாரா ? வரமாட்டாரா தெரியாது ஆனால் எதிர் பார்த்த ஒன்று வந்தது ஜ.நா சபை அறிக்கை வழைமைபோல். கண்டிக்கிறோம். எதிர்பார்ப்புக்கள் தொடரும்.....
-
- 8 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் தனில் அழித்திட்டோம் புலிக் குகை கலைத்திட்டம் தமிழ்க்குடி.. எக்காளமிட்டது துட்டகைமுனு வம்சம்..! கலைத்திட்டது தமிழ் குடியல்ல தேன்கூடு.. தமிழ் உலகெங்கும் - அது கட்டுது வதைவதையாய் பெரும் கூடு..! தேடி வந்து அழித்த பகை திகைத்து நிற்கும் தருணங்கள் பல காத்திருக்குது..! வெற்றி முழக்கமிட்ட சிங்களம் விழி பிதுங்க முழங்குது விடுதலைக் கோசம் தமிழ் மாணவர் பாசறையெங்கும்..! செம்மொழியாம் தமிழ் மொழியில் தாய் நிலமாம் தமிழகத்தில் மையம் கொண்டு....! வீழ்த்திவிட்டோம் சோழப் பெருங்கொடியாம் புலிக்கொடி..! மமதையில் நின்ற மகிந்த கூட்டம் முன்னிலையில் பறக்குது மீண்டும் புலிக்கொடி சர்வதேசம் எங்கும்..! உச்சரிக்கக் கூட முடியாது.. பிரிவினை…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழா ! தமிழா ! இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!! உன் உறவுகள் அழிந்தது போதாதா..??! அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!! உடமைகள் இழந்தாய்..! இருப்பிடம் தொலைத்தாய்..! உறவுகள் கதற காதுகேளாதவனாய் தமிழ்..! தமிழ்..! தமிழன் என்றாய்..! இன்று உன் கண்முன் உன் உறவுகளின் ஒப்பாரி..! எல்லாம் இயலும் என்ற உன் நம்பிக்கைகள், ஊனமாய் எதுவும் இயலாது முள்வெளிகளுக்குள் கண்ணீருடன் இன்று ..! நாங்கள் இன்னுமொரு பிணம் ரசிக்கவா..?? நீ இன்னும் அங்கு நின்றுகொண்டு தமிழன்..! தமிழன்..! என்கிறாய்..! உன் சுவாசம் தவணை முறையில் தரப்படுகிறது. தீர்ந்துபோகும் கொடுத்த கேடு என்று ஆவேசமாய் நீ உள்ளிழுக்கும் காற்றில் எல்லாம் இன்னும் தீர்ந்து போகாத பிண வாடை ..! ஆடைய…
-
- 2 replies
- 902 views
-
-
என் தேசப்பெருநிலமெங்கும் குவிந்து கிடக்கும் வெண் சாம்பல் மேடுகள் புன்னகைக்கின்றன....... தோழர்களே நன்றி. காலநீட்சியின் கனவுகள் சுமந்த வாழ்தலை ஈழமீட்சிக்காய் உதிர்த்துவிட துணிந்த வீரம் கண்டு, உமிழ முடியாத பெருவெப்பம் சுமந்து உறங்குமவர்கள் விழிகள் பனிக்கின்றன............ உங்களுக்காக............ தொண்டைமான் நீரேரியும் வழுக்கியாறும் -அழகிய சப்ததீவுக்கூட்டங்களும் தசாப்த உறக்கம் கலைத்து நோக்குகின்றன, சோழமண்டல உறவுகளே உங்களின் எழுச்சியை, வல்லைமுள்ளி வெளிகளுக்கும் பகைபணிந்த ஆனையிறவுக்கும், வலசைவரும் ஆயிரமாயிரம் பறவைகளிடம் வாழ்த்துக்களை பகிர்கின்றனர் கண்களால் எம்மவர்கள் -அவை நாளையாவது உங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில். கருக்கொண்ட மேகங்கள் எழத்தொடங்கிவிட்டன-…
-
- 2 replies
- 744 views
-
-
தூங்கி கிடந்தீர்கள்.. புன்னகைத்தார்கள் அரசியல்வாதிகள்.. பின்னால் நின்று உங்கள் கன்னங்களை வருடிவிட்டார்கள்.. இன்னும் என்ன வேண்டும் என்று இனமானத்துக்கு விலை பேசினார்கள்.. முன்னால் உங்கள் கன்னங்களை தடவிவிட்டு பின்னால் உங்கள் கண்ணீரை காசாக்கினார்கள்.. செம்மரிகளாய் இருப்பார்கள் என்றெண்ணி தமிழரை செருப்பாய் தேய்த்தார்கள்.. இருப்பை உணர்த்த ஒரு தீ பிறாக்காதோ என்று தமிழ்க்கரு சுமந்த மனங்கள் தவித்தன.. உள்ளே குமைந்து கொண்ட உணர்ச்சித்தீயை மோதி அணைத்துக்கொண்டே இருந்தது சாப அரசியல்... பழுத்த கிழம்கள் எல்லாம் பாழும் அரசியலில் இருந்து உழுத்துப்போன வார்த்தைகளைப் பேசி உருவேற்றி வெளுத்ததெல்லாம் பாலென்று தொழுது நிற்கும் தொண்டர்களின் வேர்வைகளில் கொழுத்துப்போய் தம் குடும்பம் வளர்க்க..…
-
- 13 replies
- 914 views
-
-
நன்றி சொல்லவார்த்தை இல்லை நண்பனே உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை தானாடாவிட்டாலும் தசை ஆடும் உன் போராட்டம் உலகையே ஆட்டும் கொடியவன் சிங்களன் கொடுமைகளை ஈழத்தமிழனைக் கொன்ற கொடுங்கோலரை வெளிக் கொணரும் உன் போராட்டம் உளி போல உனக்கு நான் ஒளிபோல எனக்கு நீ தமிழன் நீயடா தலை நிமிரடா; வெளியேறும்சிங்களம் ஒருநாள் தெளிவாகும்தமிழீழம் மறுநாள் தனியாக நீயில்லைத் தமிழா என்னோடு தரணியெங்கும் தமிழன் உன்னோடு முகம் தெரியா முத்தமிழா உனக்கு என் வீரமுத்தங்கள்; ;
-
- 9 replies
- 1.8k views
-
-
அகிம்சை. ஒரு சில தசாப்தங்களுக்கு முதல் வரை அகிம்சை என்றால் காந்தி என்றனர். அதனையே உலகும் காந்தியம் என்றது. காந்தி நாடு என்று பாரதத்தை கொண்டாடியது. உண்மை அகிம்சைஎது என்று உலகுக்கு சொல்லி பாரதத்தின் முகமூடி கிழித்தான் பார்த்தீபன் பாரதம் பார்த்திருக்க பசியில் பிள்ளை நீர்த்து பன்னிரண்டாம் நாள் வீர சுவர்க்கம் சென்றான் அகிம்சை தீயை உலகில் ஏற்றிய தீபச் சுடர் திலீபன். பௌத்தத்தை அகிம்சை மதமென்றனர் மதங்கொண்ட பௌத்தார் மனட்சாட்சி இல்லாமல் கொலைக்காட்சியை உலகிற்கு காட்டினர் முள்ளிவாய்க்களில் அந்த ஆ.. கிம்சையாளருக்கு அரவனைப்பு கொடுத்தது கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா தமிழன் என்ற உணர்வு தலை தூக்கிய பொழுதெல்லாம் தரங்…
-
- 2 replies
- 743 views
-
-
ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து.) அழகு. நீல வானம் அழகு - அதில் பறக்கும் குருவிகள் அழகு பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில் மலரும் மலர்கள் அழகு உயர்ந்த மலைகள் அழகு -அதில் வளரும் தேயிலை அழகு நீண்ட கடல் அழகு - அதில் விளையும் முத்து அழகு பூக்களின் இதழ்கள் அழகு - அதில் தேனுறிஞ்சும் தேனீ அழகு பச்சை புல்வெளி அழகு - அதில் மேயும் பசு அழகு மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )
-
- 25 replies
- 3.9k views
-
-
மாணவர்களுக்கு அரசியல் தேவையா ...? ஊழல்வாதிகள் அடிப்படை வாதிகள்... மாறாச் சமூகை உறுதி படுத்த வைக்கப்படும் கேள்வி... வாக்குப்போட மட்டும் உங்கள் தேவையை கேட்பர்... கூட விரலில் கருப்பு மையை வைத்து ஜனநாயக கடமை முடிந்ததாக சொல்லுவர்... வெள்ளையனின் ஓட்டத்தில் மாணவர்களின் பங்கிலாத அரசியல் உண்டோ? மொழிக்காக்க தீயாய் எரிந்த போரில் தீயே நீங்கள் அல்லவா.... மநூவின் நீதியை குலத்தொழிலை மறுத்த போர் இளைஞர்களின் போரல்லவா.... தந்தைச் செல்வாவின் வெற்றி வாக்கரசியலை சிங்களம் மிதித்ததாலேயே.... எழுதுகோல் ஏந்திய கைகளில் துவக்கு ஏந்திய அரசியலை உலகம் அறியாததா? சோவியத்தில் செஞ்சீனத்தில் பொலியாவில் வியட்நாமில் தத்துவ பலத்தை அரசியலாக்கியதில் இளைஞர்களில் பாதையை…
-
- 1 reply
- 903 views
-
-
-
- 9 replies
- 782 views
-