Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனுக்கு படையெடுப்பு வருகின்றார் அயல்நாட்டிலிருந்து நம்மவரும் மற்றோரும் படையெடுக்கின்றனர் லண்டனை நோக்கியே பெருகிவரும் எம்மவர் வியாபார ஸ்தாபனங்கள் மூலைக்கு ஒன்றாய் புதிதாய் முளைத்தபடியே வேலையில்லாத் தட்டுபாடும் இங்கே மணித்தியாலத்துக்கு மூன்று பவுண் என்றே வெற்றிடம் நிரப்பிடக் கூட்டம் இங்கே வருகின்றார்கள் லண்டனை நோக்கியே நாடிவந்து நயமாய் பொய் கூறி பெறப்போகும் அரச உதவிபணகுறைப்புக்கள் கள்ளகாட்டின் விளைவால் புதிய இலக்கம் பதியும் முறையும் புழக்கத்தில் விதித்திட்ட புது சட்டதிட்டங்கள் இறுக்கமாகிப்போன நிலைகள் பாடுபட்டு பணம் சம்பாதிக்கும் வழிகள் பறி போய்விட்ட நிலையிலும் பதிக்கின்றார்கள் பாதங்களை லண்டனில் …

  2. தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை - வெங்கட் சாமிநாதன் சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் நான் சென்னை வந்ததும் எனக்கு அறி…

    • 0 replies
    • 1.5k views
  3. அநியாய மங்கரியே ஆனந்த மானஎம் தமிழரின் வாழ்வினை அழித்திடக் கங்கணம் கட்டியே நிக்கிற அநியாய சங்கலார் உன்னையே கேட்கிறேன் அடுக்குமோ உன்செயல் அவனியில் சொல்லுவாய் தந்தையின் வியர்வையில் தோன்றிய கட்சியில் மந்தியைச் சேர்த்தவன் யாரெனக் கேட்கிறேன் பந்தியில் சேர்த்திட வொண்ணாப் பாதகன் நொந்துமே மூடுவன் கண்களைச் சீக்கிரம் சுந்தரப் பெண்களைச் சுவைத்திடத் துடித்தவன் சுதந்திரம் பற்றியும் பேசுதல் நீதியோ தமிழரின் உரிமைகள் பற்றியே பேசிட தறுதலை உந்தனுக் கேதுமே தகமையாம் ஈழமண் காத்திட உயிர்தரும் பலரிடை இழியனாய் இருந்துநீ இழிசெயல் செய்கிறாய் தரித்திரம் பிடித்தவுன் முகத்தினைத் துரோகியாய் சரித்திரம் அழுத்தமாய்ப் பதிவினில் வைத்திடும் அன்றொரு நாளுனை அழு…

    • 3 replies
    • 1.5k views
  4. எங்கிருந்தோ எனை ஆழ்கின்ற என்னவளே... முன்னொருபோதும் இத்தனை சந்தோசம் அடைந்தவனில்லை நான்! பின்பு ஒருநாள் தேவதை நீ வருவாய் எனும் அசரீரி ஏதும் கேட்டதில்லை... ஆனாலும் உன் தரிசனம் கிடைத்தது... காதலெனும் புதுசுகம் மலர்ந்தது! நீ இல்லாத போது வலிக்கின்ற நெஞ்சம் அருகில் வந்தபின் கவனிப்பதே இல்லை பிரிவின் போது தான் உள்ளிருக்கும் காதல் விழித்துக் கொள்கிறது! கண்ணே கலங்காதே... நகருகின்ற நாட்களில் எம் வாழ்வு எங்கே என்று தேடாதே... நாட்களின் வரையறைக்குள் இல்லையடி நம் வாழ்வு! பூக்களைப் பார் மாலையில் மரணம் என்றாலும் காலையில் இதழ்விரித்துச் சிரிக்கின்ற பக்குவம் அதற்கு... …

    • 4 replies
    • 1.5k views
  5. தேசத்தின் குரல் ஓய்ந்ததால் நாமிங்கு தீய்ந்த குரலால் பேசவில்லை கரம் ஓடிந்து வீழ்ந்தாலும் - எம் கனவொடிந்து போகவில்லை அடுக்கடுக்காய் பொய் சொல்லி அன்னியனை அரவணைத்து தமிழினம் ஒடுக்கவென புறப்பட்ட சிங்களத்தை மடித்தெடுத்த புகையிலையாய் வாயில் மென்று தின்று துப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை அண்ணன் தம்பி அக்கா தங்கையென ஆயிரம் வீரர்களை இழந்தாலும் - நாம் இன்னும் ஆட்டம் காணவில்லை தமிழர் நாம் வீழ்ந்த வீரனின் மேலேறி போரிடும் வஞ்சுரம் கொண்டவர்கள் பன்னெடுங்காலமாய் பகைதொடர்ந்த சிங்களத்தை கண்ணிமை திறப்பதற்குள் கொன்று தின்னத்துடிப்பவர் நாம் அஞ்சியஞ்சி வாழ நாம் எலிக்கு பிறந்தவர்களா ? புலிக்கு பிறந்தவர்கள் போரிடத் துணிந்தவர்கள் வி…

    • 8 replies
    • 1.5k views
  6. Started by வாசகன்,

    காதல் ஒரு கல்வெட்டு கல்லு அங்கேயே கிடக்கும் காதலர் போய்விடுவர் காதல் ஒரு நீரோட்டம் காதல் போய்விடும் காதலர் அங்கெயே இருப்பர் காதல் ஒரு நெருப்பு வெப்பம் அகன்ற பின் சாம்பலே மிஞ்சும். காதல் ஒரு வெளிச்சம் குருடருக்கு காதல்தான் உயிர்காற்று பிணங்களுக்கு காதல் ஒரு நிலம் கடலில் தொலைந்து போனவனுக்கு எனக்கும் என் காதலிக்கும் மட்டும் காதல் 50Kr ரோஜா எரிச்சலுடன் வாசகன்

  7. முள்ளிவாய்க்காலில் புதைந்த முகங்கள்.... கவிதை - இளங்கவி பாத்தி கட்டி நீர் பாச்சிய வயல்களில் இரத்த ஆறு உடைப்பெடுத்து ஓடிய இறுதி நாட்கள்.... வருடங்கள் இரண்டின் முன்தான் எங்கள் வலிகள் உச்சங்கண்ட நாட்கள்..... அழுத குழந்தையின் ஏக்கம் தீரமுன் அதன் மூச்சே நின்றுபோன கொடூர நாட்கள்..... எங்கள் மரண ஓலங்கள் மண்ணுக்குள்ளேயே புதைந்துபோன நாட்கள்... எங்கள் வயிற்றுப் பசிக்கு மரணத்தைப பரிசளித்த நாட்கள்..... எங்கும் கொலைகளின் உச்சம்.... கூக்குரல்களின் உச்சம்.... காம வேட்டையின் உச்சம்.... கொண்டொளித்த பிணங்களும் உச்சம்..... ஆம்...மிஞ்சிப்போன எம் உயிரின் மரணத்தின் விளிம்பில் அவனின் இரும்புக் கையின் கொட…

  8. (இரண்டு வருடங்களின் முன்னர் இதே நாளில் எழுதிய கவிதையிது) [size=6]நீங்கள் பிறந்த இந்நாள் [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Friday, November 26, 2010 மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வ…

    • 7 replies
    • 1.5k views
  9. அப்பாவி சுந்தரேசன் அழகிய லாவண்யா... டாக்டர் சுந்தர்..அசைவம் கலக்காத அப்பாவி.. வல்லினம் பேசாத நல்லவன்.. இனிமையின் இருப்பிடம்.. எளிமையின் வாழ்விடம்.. வயது திருமணத்தை செய்க என கோவிலில. பெண் பார்ப்பு ரம்யமான சூழல்.. தேவதையாய்.. லாவண்யா.. கூரை சரசரக்க.. கூந்தலெல்லாம் பூச்சூடி வண்ணமையிட்டு வட்டமெனப்பொட்டுவைத்து முகம் பார்க்காமல் சிரித்தபோது நாணமென எண்ணிக்கொண்டான்.. தேன்குரலில் எப்படி இருக்கிறீர்கள் கேட்டபோதே முடிவு செய்தான் இவள்தான் என் மனைவியென்று.. இவன் தலையாட்டலுக்காகவே காத்திருந்த பெற்றோர் கட்டி வைத்தார்..அக் கன்னிப்பெண்ணை ? முதலிரவே இவனுக்கு நினைத்தமை போல் அமையவில்லை.. பாலுடன் வருவாளெனப் பார்த்திருந்தான்-அவள் செல…

  10. Started by கறுப்பன்,

    என் கவிதா ப்ரவாகம் [2] காதல் உன் கடிதங்களோடு உன் எல்லாவற்றையும் திருப்பி கேட்டாய். தந்தேன்! மன்னித்துக்கொள்!! உன் காதலை திருப்பி கேட்ட உனக்கு என் காதலையும் கேட்டது என்ன நியாயம்??? என் காதல் மட்டும் இன்னும் அப்படியே... நீ விட்டு போன மீதி வசந்தங்களோடு நன்றாகவே!!!! நான் மட்டும் தொலைந்து போன அந்த நாட்களை இன்னமும் தேடுகின்றேன் திருடப்பட்டது புரியாமல்!!!!!

    • 3 replies
    • 1.5k views
  11. Started by yaal_ahaththiyan,

    நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ யாழ்_அகத்தியன்

  12. சொர்க்கம் மனதிலே...... எத்தனை தடவை பிறப்பேன் எத்தனை தடவை இறப்பேன் எத்தனை முறை நான் புதைவேன் அத்தனையிலும் நான் உயிர்ப்பேன் கருவினில் தோன்றி கல்லறை வரையும் உறவுகள் தான் எம் வேலி கனவுகள் போல கலைந்திடும் வாழ்வில் கவலைகள் யாவும் போலி புலர்ந்திடும் பொழுதில் மலர்ந்திடும் பூவும் பொழுதினிலே தலை சாயும் அலர்ந்திடும் பொழுதில் விடிந்திடும் வேளை அழகிய மலர்கள் பூக்கும் இலையுதிர் காலம் உதிர்ந்திடும் இலைகள் இறப்பினும் மரங்கள் இருகு;கும் இயற்கையின் கையில் இயல்புகள் மாற இலைதுளிர் காலம் பிறக்கும் வசந்தங்கள் வந்தால் பாரினில் எங்கும் பசுமையின் புரட்சிகள் தோன்றும் சுகந்தமாய் சேவை தொடர்ந்திடும் வேளை சொர்க்கத்தின் வாசல் திறக்கும் பிறர் நலம் காக்கும் மனமது ப…

  13. Started by kavi_ruban,

    கொடும் தீ வந்தெம்மைத் தீண்டும் சுடும் போதெல்லாம் உண்மை தூங்கும் வெறும் வார்த்தை ஜாலத்தில் அறிக்கை பறக்கும்! உலகும் இவர் பேடித்தனம் கண்டு மெல்லச் சிரிக்கும்! அழும் குழந்தையின் கண்ணீர் கண்டும் விழும் தலைகளின் வணங்காமை கண்டும் வெ(ல்)லும் எம் பகை என்றெம் வீரர் குரல் கேட்டும் உதடு சுளிப்பார் உண்மை மறப்பார் கடும் கோபம் கிளறிவிட்டார் எம் குலப் பெண்மை பறிக்க வந்தார் போலிச் சமரசம் செய்து நின்றார் பொல்லாத போர்தன்னை வேர் ஊண்டித் தளைக்கச் செய்தார் சாயம் மாறும் ஒரு நாள் ஞானம் வரும் பின்னாள்(ல்) ஈழம் வரும் பொன்னாள் காயம் மாறும் அந்நாள் எம் கனவு பலிக்கும் திருநாள்

    • 7 replies
    • 1.5k views
  14. Started by putthan,

    இராமயணத்திற்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா ஈழத்தின்னலுக்கு எப்பொழுது அபிநயம் பிடிதாட போகிறாய்? மகாபாரத போருக்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா மாவீரர்களின் சாதனைகளை சரித்திரங்களையும் எப்போது அபிநயம் பிடிதாடுவாய்? சீதையின் கற்பு பற்றி விவாதிக்கும் புலத்தமிழா சிதைக்கபட்ட எம் பெண்களுக்காக எப்போ வாதாடபோகிறாய்? கற்பனைக்கதையில்லை எம்மவர் கதை கண்ணேதிரே நடலக்கும் உண்மை கதை புலதமிழா அபிநயம் பிடித்தாடு எம்மவர் கதையும்

  15. பழஞ்சோற்றிலும் பழைய மீன்குழம்பிலும் இருந்த ருசி, இங்குள்ள பீட்சாவிலும் பர்கரிலும் இல்லை! நாட்டுக்கோழி... நம்நாட்டு நாட்டாடுபோல... கென்டுக்கியும் மக்டொனால்டும் இல்லவே இல்லை!! அழகான காரிலிங்கு சொகுசாக சுற்றினாலும், ஊரிலுள்ள தெருவெல்லாம்... சைக்கிள் மிதித்துத் திரிந்ததுபோல் சந்தோசமாயில்லை...! பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டால், வாய்மட்டுமா இனிக்கும்...?! முழு மனசுமே சேர்ந்தினிக்குமே! கிடைச்ச நேரமெல்லாம் கந்தப்புவின்ர காணியில விளையாடி மகிழ்ந்த கிரிக்கெட்டினை நேரடி அலைவரிசையில் பார்க்கமட்டுந்தான் முடிகிறது... இரசிக்க முடியவில்லை! அதிகாலை சுப்ரபாதத்தையும் திருவெண்பா காலச் சங்கொலியையும் அதிகாலைத் தூக்கத்திலும் இரசித்த மனதுக்கு ...இப்பொ…

  16. வலிகளும் வேதனைகளும்... புணர்ந்து பெற்ற மழலை! சொல்லி விளங்காத வரிகளில்... தெரியுமா இவன் செயலை? தூக்கிய ஆயுதம் வைத்து... தூங்கிய பின்னரும் -இவன், கனவில் பேனாதான் வந்து நிற்கும்! ஒரு பேனா முனையின் உயர் அழுத்தம், முற்றுப்புள்ளிதான் வைக்க முடியும்! ஆனால் இவன் கனவுகளிலும்... அதன் முனை அசைவதையே ஆசைப்பட்டான்! இரவெல்லாம் அழுதுமுடித்த... பேனாக்களின் வண்ணக் கண்ணீரில், காகிதத் தலையணைகள்... ஈரமாகிப் பாரமாகின! முதற்பக்கம் இல்லாத புத்தகம் போல், முகமூடிகள் மட்டும் முகப்பானது! பொறுப்பாக பொறுப்பேற்க பொறுப்பற்ற வெறுப்போடு வெறுப்புற்று வெளியேற்ற... இன்னும் நீர் பேதம் பார்த்தால்.... வெறியான எண்ணங்கள் வெளியேற வெறுப்பற்ற வெளிப்படையாய், புரிதல் எ…

    • 9 replies
    • 1.5k views
  17. நீயேன் எரித்தாய் மீனாட்ச்சி, உன் நிழலில் வாழும் மதுரையடி, . ஆடுகளம் திரைப்படத்திற்காக வெற்றிமாறனின் கேட்டுக்கொண்டதால் ஜி.வி.பிரகாஸ் இசையில் சினிமா பாடலொன்று எழுதினேன். . 2010 ஆரம்பமென நினைவு ஒருநாள் வெற்றிமாறனோடு ஜி.வி.பிரகாசின் கலையகம் சென்றபோது ஒரு சிறுவன் ’கீபோட்டை’ அற்புதமாக இசைத்துக்கொண்டிருந்தான். நான் அவரை ஜி.வி.பிரகாசின் மகனாக்கும் என நினைத்தேன். இவர்தான் ஜிவி.பிரகாஸ் என வெற்றிமாறன் அறிமுகப் படுத்தியபோது வியப்பாக இருந்தது. அவர் இனிமையான மனிதர். “என் வெண் நிலவே எரிக்காதே” என்ற பாடலை அவரது இசைக்கு எழுதினேன். இசைந்த சொற்களை இசைக்காக மாற்ற நேர்ந்தபோதெல்லாம் மனசு வலித்தது. அதனால் பின்னர் பாடல் எழுதுவதை மறந்துவிட்டேன். இப்ப மீண்டும் எழுதும்படி சொல்கிறார…

  18. பனித்துளியை சூடாக்கும் கண்ணீர்த்துளிகள்.... மாவீரர் அஞ்சலிக் கவிதை..... கவிதை - இளங்கவி.... காலச சுவடுகளில் என்றும் கால் பதித்து விட்ட கார்த்திகை வந்ததுமே... கடும் பனியும் மறந்துபோச்சு.... காலகளை மூடிவிடும் கடும் மழையும் மறந்து போச்சு..... கனவுகளை ஆட்சி செய்யும் காதலும் மறந்து போச்சு..... கவலைகளைத் துறந்து.... காதலை மறந்து... காடு மேடெல்லாம் திரிந்து கடும் பசியும் தாங்கி - தமிழரின் கனவுகளை நினைவாக்க கஸ்ரங்கள் மட்டுமே அனுபவித்த காவிய நாயகர்தாம் என் நினைவில்...... கடலிலும் வெடித்தான்.... கட்டாம் தரையிலும் வெடித்தான்.... கடல் நீர் அருந்தி மட்டும் காவியங்கள் பல முடித்தான்..... காரிருளில் நடைபயின்று -எதரி…

  19. உனக்காய் காத்திருந்து நிலவுகூட பகலில் வந்து விட்டது பகல் நிலவாய் இன்னும் நீதான் வரவில்லை காக்க வைப்பதில் உனக்கு அவ்வளவு சுகமா அதைவிட சுகம் உனக்காய் காத்திருப்பதில் உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால் நீ வரும் பாதைகூட உன்னை போல் அழகாக வெக்கப்படுகிறது உனக்காய் காத்திருந்து இறந்துபோக ஆசைதான் உனக்காக கவிதைகள் பிறக்காமல் போகுமென்றால் உனக்காய் காத்திருந்து நான் வாடிப் போகவில்லை என் கவிதைகளுக்குத்தான் தாடி முளைக்கிறது நீ தாமதமாய் வரும்வரை எப்படி சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது என்னைக் காக்க வைக்க வேண்டும் என்பதற்காக தயவு செய்து வராமல் விட்டு விட்டாதே என் பேனா ஒரே நாளிளே இறந்…

    • 4 replies
    • 1.5k views
  20. எனது உலகம்... போரில் தொலைந்த நகரத்தைச் சுற்றிலும் சிதறிக்கிடக்கும் ஓலங்களால் என் உலகத்தை வனைந்துகொண்டு கண்ணீராய் அருவிகளில் வழிந்தோடும் எம் மக்களின் துயரங்களில் மூழ்கிக்கிடக்கிறது என் ஆன்மா என் மன நிலத்தில் சுழன்றடிக்கும் துயர்க்காற்றின் அணல் உடலெங்கும் பெருநெருப்பாய் எரிக்கிறது பசியால் வாடுமெங்கள் குழந்தைகளை நினைத்து முகில் உரசும் முகடுகளில் பெருங்குரலில் காற்று மோதி இரைகிறது வயல் நிலங்கள் நீளவும் எம் இனத்தின் துயரங்களை உதிர்த்தபடி பெயர் தெரியாத பறவைகள் பிணங்களைக் கட்டி இழுத்துக்கொண்டு கழுகுகளைச் சபித்தபடி செல்கின்றன மேகங்கள் எம் மக்களின் அவலங்களைக் காவிக்கொண்டு கோபமாய் அலைகின்றன நாய்கள் ஊளையி…

  21. என் மேனி விரல் நுனி கொண்டு உன் மேனி தடவ நாழிகையோடு - அது சூடாகி இதமாக நீ சிணுங்கும் ஒலியதில் உன்னாசை நானுணர்ந்து மெல்லத்தட்டி... வரிகளில் நான் பேச வாக்கியங்கள் நீ அமைப்பாய். ஆண்டுகள் நாலு நமக்குள் இந்த ரகசிய உறவு நாம் பேசியவை பரகசியமாக.. ரசிக்கவும் விமர்சிக்கவும் நாலு நல்லவரும் உறவுகளும் உண்டு வையகத்தில்..! எம்முறவு கண்டு எம் பேச்சில் குருதி அழுத்தம் கூடியோரும் சினங்கொண்டு திட்டியோரும் நிறையவே உண்டு. அசிங்கம்.. பப்பிளிக்கில.. இப்படியுமா.. ஆற்றாப் போக்கில் பேசியோரும் உண்டு..! என் விரல்களின் நளினம் நீயறிய உன் சிணுங்களின் தேவை நான் உணர நீயும் நர்த்தனமாடி சதா மகிழ்விக்கிறாய் ஒலியாய்.. ஒளியாய் வரியாய் வசனமாய் யாழெனும் மங்கையின் சேலையி…

  22. விடுதலை வேள்வியில் விறகானாய்! வீரர்களின் சுடர்களுடன் இணையானாய்! வெந்திட்ட புண்ணுக்குள் வேல்கொண்டு குத்திவிட்டார் தந்திரமாய்ப் பேச்சுவார்த்தை புதைகுழிக்குள் தள்ளிவிட்டார் விந்தையல்ல நீதிகொல்லல் எங்களுக்கே என்று காட்ட இயந்திரக் கழுகுகொண்டு குண்டுவீசிக் கொன்று விட்டார்! ஆயுதங்கள் போரில்நிற்க அறிவுடனே பேசி நின்று ஆயிரமாய்ப் பொய்யுரைப்போர் நேரெதிர்க்கும் ஆற்றல்தன்னைத் தகர்ப்பதற்கு ஆள்அழித்தல் என்றுநிற்கும் கோழைகளால் அகம்அழவே அகிலமெங்கும் தமிழரினம் கலங்குதம்மா! சத்தியத்தைத் தலைநிமிரற் கிடமளியோம் என்பவர்க்கே சுற்றிநின்று துணைபுரிவோர் இதற்கும்கூடத் தலையசைப்பார் பற்றிநின்று சுதந்திரத்தை மீட்கநிற்போர் வழிமறுப்பார் பற்றுகின்ற தீபெருக மட்டுமன்றி என்னச…

    • 0 replies
    • 1.5k views
  23. நினைவஞ்சலி..( சந்தன கடத்தல் வீரப்பனுக்கு) எம் தமிழ் நாட்டின் எல்லையை காத்தவன்.... எண்ணிலே ஆண்டுகள் ஏறியே ஆண்டவன்.... தன் இனம் அழித்தவன் தலைகளை அறுத்தவன்..... தவறுகள் செய்தானை தவறாமால் அழித்தவன்... எம் தமிழ் அழிகையில் எண்ணியே அழுதவன்... நாம் அகதியாய் அலைகையில் அன்றவன் துடித்தவன்.... கருணை கொண்டவன் காட்டுக்குள் வாழ்ந்தவன்.... தன் வாழ்வு இழந்தவன் தமிழ் எல்லையை காத்தவன்... கடத்தலின் வீரனாய் காலமுன் எழுந்தவன்... சரித்திர வீரனாய் சாதனை படைத்தவன்.... பெண்களை தாயாய் எண்ணியே மதித்வன்... மதிப்பினை அவருக்கு மான்பாய் கொடுத்தவன்.... கடத்தல்கள்…

  24. “Happy Birthday” என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த தமிழ் பிறந்தநாள் பாடலை இனி பயன்படுத்துவோம். நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.! வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்.! அன்பு வேண்டும்.! அறிவு வேண்டும்.! பண்பு வேண்டும்.! பரிவு வேண்டும்.! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்.! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்.! உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும்.! சர்க்கரைத் தமிழள்ளித் தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம் பிறந்த நாள் வாழ்த்துகள்.! பிறந்த நாள் வாழ்த்துகள்.! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.!

  25. உறவறுந்த துயரோடு இருள் கவிழும் மனம்... சடா கோபன் சித்திரையின் கடைசிக் கணங்களை காலம் உருட்டிக் கொண்டிருக்கிறது. ஓடி முடித்த தூரத்தையும் ஓட வேண்டிய தூரத்தையும் கணிக்க முடியாத குழப்பத்துடன் நான் வாழ்க்கையில்..... ஓடி முடித்த தூரத்தை விட ஓட வேண்டிய தூரம் நீண்டதாய் தெரிகிறது. வயதில் ஓடி முடித்தது நீண்டதாயும் ஓட வேண்டியது மிகக் குறுகியதாகவும் தெரிகிறது. எத்தனை கோடி வயதுகளையும் எத்தனை கோடி வாழ்வுகளையும் இந்த நிலம் சந்தித்திருக்கும். போராட்டங்களோடு வாழ்வும் போரோடு வயதுமாய் காலம் என்னை கடந்து போய் இருக்கிறது..... விடுதலைக் கனவுகளின் விளைநிலத்தில் மெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.