கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இறுதியாய் ஒரு யுத்தம்... இறுதியாய் ஒரு யுத்தம் இனமானம் காக்க ஈனர்களை விரட்ட இழந்தவை யாவும் மீட்ட இனிவரும் பிள்ளைக்கு சுதந்திரத்தின் சுகம் காட்ட இறுதியாய் ஒரு யுத்தம். அடிமைகளாய் , அகதிகளாய் அவமான வாழ்வு போதும் ஏதிலியாய் எங்கேயோ அழுகிச் சாகும் நிலை போதும் அடியோடு வீழ்ந்தாலும் அன்னை பூமிக்கே, உரமாகும் மரணமேற்போம்... மாக்களுக்கு மனமஞ்சி மறைந்தொளியும் மானக்கேடு மண்ணோடு மண்ணாக்கி ஈழன்னை புகழ் தாங்கி புலிக்கொடியால் புயல் கிளப்பி புறப்படுவோம் பெரும் படையாய்.. நாய்கள் தான் வாழும் நரிகளுக்கு பயந்தொதுங்கி நாடாண்ட குடிகள் நாம் நடுக்கிடுவோம்.. படை நடத்தி. கோடிப்பேர் வரட்டுமே !! கூலிக்கு மாரடிக்கும் கூர்…
-
- 8 replies
- 1.4k views
-
-
என் இளவயதில் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் கனவுகள் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் ஆசைகள் எல்லேரையும் போலவே என் தேசத்தின் மீதான காதல் எல்லேரையும் போலவே எனக்குள்ளான மாற்றங்கள் எல்லேரையும் போலவே என்கைகளிலும் துப்பாக்கி எல்லேரையும் போலவே எனக்கும் நம்பிக்கை எல்லாமே சிதறிப்போன கணங்களில் எதுவுமே நடவாதது போல எல்லோரையும் போலவே நானும் வாழப் பழகிக் கொள்கிறேன்..
-
- 6 replies
- 1.4k views
-
-
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது. எழுச்சி கொள்க கவிஞர்களே! தாயகமூச்சு எமக்கில்லையா? ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன? உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக. நோயுண்ணும் உடல் நலித்தும், பேயுண்ணும் உணர்வொழித்தும், தாய் நிலத்தின் வேதனையை - எம் தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா? கூடாது... கூடவே கூடாது. முற்றத்து மணற்பரப்பில் முழுமதியின் எழிலொளியில், சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி, அடிவளவு மூலையிலே படர்ந்த முல்லைச் சொதி மணக்கும் கவளச் சோறெண்ணி, ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி, பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே.... விட்டுவிடுவோமா? தாய்நிலத்தி…
-
- 8 replies
- 1.4k views
-
-
நம் தலைவனின் கனவு நிஜமாக..... கவிதை - இளங்கவி..... அடிமை வாழ்வில் குப்பையாய் கிடந்தோம் கூட்டுவார் இன்றி காற்றுக்கும் பறந்தோம் ஏய் தமிழா...! உன் தேச மண்ணில் குப்பையாய் கிடக்கின்றாய் கூனிக் கிடந்து கூன் விழுந்திட்டாய் ; என்று இந்தக் குப்பை மேட்டிலே ஓர் பொறியாக விழுந்தாய் சிறுதணல் மூட்டினாய் சிறிதாகவும் புகைந்தாய்; ;பின் செந்தணல் ஆகி விடுதலை தீயை மூட்டினாய் இன்றோ கோடி தமிழனின் மனங்களில் கொழுந்து விட்டெரிந்து விடுதலைத் தீயாய் வீறுகொண்டு எரிகிறாய்......! வேதனை வாழ்விலும் வீரியம் தந்தவன்..... எங்களின் வாழ்வுக்காய் தன் வாழ்வையும் மறந்தவன்...... இருபதில் தொடங்கி இருபதினாயிரம் கண்டாய்...... இன்னமும் காண்பாய் இற…
-
- 6 replies
- 1.4k views
-
-
கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த நிழல் படிந்து மறையும், வெயில் பட்டு தேகம் சிலிக்கும், மெல்லிய கூதல் காற்றில் பரவும். மாலை சரிகையில் _அந்தரத்தில் மழைப்பூச்சிகள் உலாவும் பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். நீர் மோதும் வரப்புகளில், கொக்குகளும் நாரைகளும் நடைபோடும் இரை தேடி, சிலநேரம் இடம் மாறும். வத்தாக்கிணறு மேவிக்கிடக்கும் வெள்ளம் மிதப்பவற்றில் எல்லாம் எரியெறும்புகள் ஏறித்தவிக்கும். காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள் நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில் விதைக்காத சில நிலத்தில் அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். பச்சைபிடித்து, அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில் அடங்கி இருக…
-
- 16 replies
- 1.4k views
-
-
இப்போது கார்த்திகை மாதம்! கரு மேகம் சூழ்ந்து இடி இறக்கி எம் கண்ணீரில் வறண்டு போன தேசத்திற்கு மழை பொழிந்து காலப் பெரு வெளியில் தமிழர் தம் வாழ்விற்காய் கல்லறையுள் துயில் கொள்ளும் ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை நினைவு கூர்ந்து குளிர்விக்கும் நன் நாள் இது! அடிமைத்தளையுள் சிக்கி தமிழன் உணர்வை தொலைத்து வம்சம் தனை இழந்து வாழ்வை பறி கொடுத்து வந்தேறு குடி என சிங்களரால் வழங்கப்படும் நாமத்தை பெற்று வடக்கிலும் கிழக்கிலும் புதைந்து உலகறியா இனமாக ஈழத் தமிழன் உருமாறிச் சிதைந்திடுவான் என இறுமாப்போடு எமை அழிக்க வந்தோர்க்கு தமிழர் தம் வீரம் உணர்த்தி துயில் கொள்ளும் குழந்தைகளை நினைவு கூறும் நன் நாள் இது! பேசும் தெய்வங்களும் …
-
- 3 replies
- 1.4k views
-
-
கனவுகளின் தொலைவு எனும் வலைப்பதிவில் தாயகத்து அனுபவங்களை கதை, கவிதைகளாக படைத்துவரும் அகிலனின் வலைப்பதிவில் இணைக்கப்பட்ட ஒலிப்பதிவு கவிதையா? கதையா? அல்லது ஒலிசித்திரமா? எதுவாக இருந்தாலும் அவர் பேசும் பொருள், அவரது குரல்வளம்.... உங்களுடன் பகிரவேண்டும் போல் இருந்தது. பகிர்ந்துகொள்கிறேன். http://agiilankanavu.blogspot.com/2007/06/blog-post_28.html
-
- 3 replies
- 1.4k views
-
-
என் கண்கள் கெட்டுவிட்டது எங்கே சூரியன். இன்றுகாலை அம்மாவுடனான தெலைபேசி உரையாடல். அவர்சொன்ன புதினத்திலொன்று கல்வளை கொடியேறிட்டுது கதைத்து முடித்ததும் என் குரங்கு எண்பதுகளிற்கு தாவியது கல்வளைப்பிள்ளையாரின் காற்றோட்ட மண்டபம் எங்கள் நண்பர் கூட்டம் என் கையிலோர் கரித்துண்டு கீறத்தொடங்கினேளன் சிலாபத்தில் தொடங்கி காங்கேசன்துறையில் வழைந்து மட்டக்கிளப்பில் நிறுத்தினேன். பக்கத்திலிருந்தவன் சொன்னான் அம்பாறையும் எங்கடைதான் அது முஸ்லிம்களிற்கு இது இன்னொருவன். அவங்களும் தமிழர்தானே அம்பாறையும் எங்கடைதான் அம்பாறைவரை வரைந்தேன் கதிர்காமமும் எங்கடைதானாம்.. இழுத்தான் இன்னொருத்தன். இப்போதைக்கு இது போதும் பிறகுபாக்கலாம். பண்டத்தெருப…
-
- 3 replies
- 1.4k views
-
-
காற்று அலையில் நெருப்பான இரும்பு மனிதர்கள் தாய் மண் மீது மிகுந்த தாகம் கொண்ட தன் நலம் அற்றவர்கள் தமது சுக துக்கங்களை தமிழனுக்காக இழந்தவர்கள் தானைத்தலைவரின் சிந்தனையின் தலையாய உயிர் ஊற்றுக்கள் முகம் அறியாத உன்னத உயிர் சிற்பங்கள் தமிழனின் வாழ்வுக்காக தம் உயிரையே தந்த மாபெரும் முத்துக்கள் உரிய இலக்கினை உடைத்து எறியும் உயிர் ஆயுதங்கள் பகைவனின் மன பலத்தை உடைத்து எறியும் எரிமலைகள் தமிழனின் முதுகு எலும்பை நிமிரவைத்த சிற்பிகள் நாலடி மண் கூட தமக்காக வேண்டாத சுயநலம் அற்றவர்கள்
-
- 8 replies
- 1.4k views
-
-
எங்கட ஊருக்கும் மின்சாரம்...!!!! எங்கட ஊருக்கும் மின்சாரம் - இனி அவுணில சுடலாம் பணியாரம் சும்மா குடுக்கிறாங்களாம் எல்.சி.டி இனி எல்லா வீட்டிலயும் சண் டி.வி படிப்பு தான்ரா எங்கட சொத்து வச்சான்ரா ஆமிக்காரன் அதுக்கு ஆப்பு ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்..!!! தூந்து போன துயிலும் இல்லங்கள் மறந்து போனாலும் மனச்சாட்சி கொல்லும் லாம்பு விளக்கில் மங்கிய இரவுகள் இனி ரியூப்பு பல்ப்பில் பளபளக்கும் கனவுகள்..! அன்றைய இரவில் நிலவும் நச்சத்திரங்களும் கூட இருந்தன மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய் நடந்தோம் இரவுகளின் நீளங்கள் தெரியாமல் வாழ்ந்தோம். இனி ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்...!!! எங்கட ஊருக்கும் மின்சாரம்-இனி அவுணில ச…
-
- 8 replies
- 1.4k views
-
-
காதலி வார்த்தைகளுக்கு வாள் வீசக் கற்றுக் கொடுத்தாய்! என் இதயச் சுவரில் எத்தனை கீறல்கள்... கீறல்கள் மேல் இதழ் தேடல்கள் நடத்து... என் வாலிப வானம் விடியட்டும்! குரலில் எதைக் குழைத்தாய்...? என் இதய நாளங்களில் குளுக்கோஸ் ஏறுகிறதே...! விழிகளில் சொருகிய வேல்களைக் கழற்று எத்தனை தடவை நான் இறப்பது?
-
- 5 replies
- 1.4k views
-
-
யாருக்காக இது யாருக்காக இந்த விசாரனை மனித உரிமை விசாரனை யாருக்காக பிள்ளையே நவீ பிள்ளையே போ போ புத்தனே தெய்யனே வா வா மரணம் என்னும் தூது வந்தது அது ஐக்கிய நாசபை வடிவில் வந்தது சொர்க்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது தமிழனைத் தானே நான் கொன்றது பலி ஏன் என்மீது வந்தது தமிழனுடன் உறவைத்தானே நான்நினைத்தது மாகாணசபை பிரிவு வந்து ஏன் என்னை பயம் காட்டுது எழுதுங்கள் என் நாட்டில் நான் ஆயுள்கால ஜனாதிபதி என்று ஒலமிடுங்கள் என் நாட்டில் ஐ.நாடுகள் சபை நுளம்பு சபை என்று ஐநாசபை அங்கத்துவம் என்பது எம்மை பித்தனாக்கி அலைய வைப்பது எங்கிருந்து அறிக்கை வந்தது இன்று எங்கிருந்து விசாரனை வந்தது இந்தியாவிலிருந்து தினம் ஆட்டுகின்றவன் ஆடுகின்ற நாடகம் இது
-
- 15 replies
- 1.4k views
-
-
கார்த்திகையின் தீபங்கள்...... மாவீரர்களின் நினைவுக்காய்..... தமிழினத்தின் கண்ணீரை உங்கள் உதிரத்தால் கழுவிவிட்டு எங்கள் கண்களெல்லாம் மழையாக்கி கவலையற்று உறங்குகிறீர்... கார்த்திகையில் ஓர் நாள் ஆம்..! இருபத்தியேழாம் நாள் தமிழினத்தின் கவலை நீக்க உயிரையே அர்ப்பணித்த எம் மண்ணின் காவியங்கள் உங்களை நாம் வணங்கிடும் நாள்..... எம் மண்ணில் ஒளிகொடுக்க தம் உயிரையே மெழுகாக்கி உருகிவிட்ட ஈழத்தின் வேங்கைகளை எழுச்சியுடன் நினைத்திடும் நாள்.... மாவீரர் நீங்களெல்லாம் நம் மனமெல்லாம் நிறைந்திடுவீர்..... ஈழத்தின் நிலங்களிலே கார்த்திகைப் பூக்களாய் மலர்ந்திடுவீர்..... எதிரியின் படையெடுப்பை இயற்கையாய் நின்று எதிர்த்திடுவீர்..... ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
கண்கள் மேய விரல்கள் தடவ வெளிச்சத்தில் இது நடக்க.. அவள் வேண்டும். பக்கம் பக்கமாய் பாகம் பாகமாய் பிரித்துப் படிக்க.. காரியம் முடிக்க சித்தி பெற அவள் வேண்டும். சிந்தனைக்கு ஓர் புத்துணர்ச்சி இரத்த நாளங்களுக்கு ஓர் கிளர்ச்சி..! அவள் சேவை தேவை வாழ்க்கை எங்கும்..! சோம்பல் போக்க படுக்கையில் கூட எனக்கு அவள் வேண்டும். இன்றேல் பைத்தியம் தான் பிடிக்கும்..! இத்தோடு சிந்தனைக்கு சிறையிடுங்கள் அவள் வேறு யாருமல்ல.. நான் படிக்கும் பாடப் புத்தகம்..! Spoiler படுத்திருந்து புத்தகம் படிப்பதே எனக்கும் பிடிக்கும். இதில் பல இலாபம் அதில் ஒன்று.. அப்படியே நித்தாக்குப் போயிடலாம்.
-
- 21 replies
- 1.4k views
-
-
கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- நகைச்சுவை --------------- ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே குதி இருக்குது உன் கால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர கண்டதையும்வைதிருந்தவளே கை இருக்குது உன்கைப்பை எங்கே ...? கண்டதையும் ........ பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... முகம் இருக்குது உன் அழகு எங்கே ..? ^^^ கவிப்புயல் இனியவன் கானா நகைச்சுவை கவிதை
-
- 9 replies
- 1.4k views
-
-
எம் மண்ணின் அவலங்கள்......... கவிதை...... தினம் தோறும் காலைமுதல் மாலைவரை கால்தெறிக்க ஓடுகிறோம் அதனாலே நம் உடம்பு நூலாக இளைத்தும் விட்டோம்....... இனிமேலும் ஓட எங்களால் முடியவில்லை இதைக் கேட்டபின்னும் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய மாட்டீரா ? காலை எழுந்ததுமே கதறல் சத்தங்கள் அதன் பின்னால் நம் காதுகளில் கிஃபீரின் இரைச்சல்கள் இரைச்சல் சத்தங்களால் பதுங்கு குழிகள் நிரம்பிவிடும்.... பதுங்கு குழிகளிலே பச்சிளம் குழந்தை கூட பயந்த வண்ணம் பால் குடிக்கும்........ இதைக் கேட்ட பின்னும் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய மாட்டீரா ? பலகுழல் எறிகணைகள் எம்மை பலிகொள்ளும் அரக்கர்கள்.... வி…
-
- 6 replies
- 1.4k views
-
-
வன்னியில் இருந்து ஒரு மடல் அன்புள்ள அப்பாவுக்கு உங்கள் பாசத்துக்குரிய பத்து வயது மகளின் கண்ணீர் கடிதம் இது… கனடாவில் இப்ப என்ன நேரமெண்டு எனக்குதெரியாதப்பா ஆனால் எங்களுக்கு இப்ப கெட்ட நேரந்தானப்பா… இடிமுழக்கம் கேட்டதுண்டு இப்படி வெடிமுழக்கம் கேட்டதில்லையப்பா… குண்டுச் சத்தம் காதைப் பிழக்கிறது அப்பா… சமாதான காலத்தில் உங்கள் பசுமையான நினைவுகளைத் தந்தீர்கள் அப்பா இனி நீங்கள் வரும்போது நாங்கள்… எங்கே… எப்படி..இருப்போமா... அல்லது… நெஞ்சு கனக்கிறது அப்பா… பள்ளிக்கூடமெல்லாம் சனத்திரளால் நிரம்பி வழிகிறது. காலைக்கடன் கழிக்கக்கூட இடமில்லையப்பா… நடந்து நடந்து என் பிஞ்சுக்கால்கள் ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
கொள்ளிடம் கதி கலங்கும்! ஊற்றுவாய் பிளந்து பொங்கிப் பரவும் காட்டாறுகள். கூற்றுவனோடு கை குலுக்கி கலகலக்கும் ஞானிகள். ஈழம் காக்கும் கந்தகப் புயல்கள். எதிரியை ஒடுக்கும் எரிமலைகள். போரின் வெற்றியை நிர்ணயிக்கும் கூரிய முனைகள். பாரியைப் புறம் தள்ளி - ஈழத் தாயவள் வலிமைக்காய் தம்... உயிர்,மெய் உவந்து ஊட்டி - அவள் வீரியத் திசுக்களின் வேதியப் பொருளிவர். பற்றுகள் அற்றவரா?.... பற்றுகள் உற்றவர்! தமிழ் ஈழம் கசக்கும் வேற்றுவர் அகற்ற இகத்தைத் துறந்த இளைய துறவிகள். இறுதிப் பயணம் இன்றி உறுதி புூண்ட உன்னத வேங்கையர். உயிரைக் குடைந்து, உருக்கிப் பிழிந்து, உதிரத் துளியும் காற்றில் கரைய காவியம் படைக்கும் வீரியத் திரிகள…
-
- 6 replies
- 1.4k views
-
-
தியாக தீபம் திலீபன் அண்ணாவுக்கான நினைவுக்கவிதை கவிதை - இளங்கவி பாரதத்துக்கு அகிம்சை கற்பித்த பன்னிரு நாள் வேள்வி...... தீயிலல்ல தீயினும் கொடிய பட்டினி வேள்வி...... புலியொன்று பசி கிடந்து பாரதத்துக்கு அகிம்சையை சொல்லித்தந்த வேள்வி...... பசியதை மறந்தான் பன்னிரு நாளும் நீர்த்துளியதை மறந்தான்...... பத்திரமான தன் உயிரினைக் கூட பஞ்சு பஞ்சாய்ப் பிய்த்து எறிந்தான்..... பார்க்க வந்தோருக்கும் தன் புன்னகைப் பூவினைக் கொடுத்தான்.... பார்க்க மறந்தது பாரதம் அவன் கோரிக்கையை கேட்க மறுத்தது பாரதம்...... நாத்தம் பிடித்த சாக்கடைச் சகதியில் காந்தியின் அகிம்சையைப் புதைத்தது பாரதம்..... கோரிக்கைய…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06 சில வேளைகளில்.... சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட காதல் தொற்றிக்கொள்கிறது! அதன் இனிய நினைவுகளால்... மனம் கொஞ்சம்... தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது!! காத்திருப்புக்களும் சந்திப்புகளும் கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்.... அந்த தேநீர்விடுதி! வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும் அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...! காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில் அதற்கும் கொள்ளைப் பிரியம்...!! அங்குள்ள பணியாளரைப்போலவே இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!! அவளுக்காகக் காத்திருந்த பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....…
-
- 11 replies
- 1.4k views
-
-
-
தற்போது களத்தில் காதல் வாசம் வீச்தொடங்கியுள்ளது. ஜம்முவிற்கும் காதல் வந்திடுச்சு அதனால் எனது பழைய கவிதைகளை இங்கு தூசு தட்டி ஜம்முவை வரவேற்கின்றேன் 01 தேய்ந்து போகின்றேன் நீ நடந்த பாதையெங்கும் விழி வினா வீசி காத்திருக்கின்றேன் தாண்டிச்சென்ற பூங்காற்றே மீண்டும் வருவாயா ? காத்திருப்பதில் எத்தனை ஆணந்தம் பூமி காத்திருருக்கின்றது மழையின் வருடலிற்காய் பூக்கள் காத்திருக்கின்றன வண்டின் தீண்டலிற்காய் வானம் காத்திருக்கின்றது நிலவின் நெருக்கத்திற்காய் அன்பே நான் காத்திருக்கின்றேன் உன்தன் உறவிற்காய் பத்துமாதம் அன்னை காத்திருந்தாள் இப் ப+மிமீது உன்னை பூப்பறிக்க வைக்க பல வருடம் நான் காத்திருக்கின்றேன் என் பள்ளியற…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஏன் படைத்தாய்? என்னை ஏன் படைத்தாய்? பெண்ணாக ஏன் படைத்தாய் இறைவா? பெண்ணாக ஏன் படைத்தாய் என்னை பெண்ணாக ஏன் படைத்தாய் பூமியிலே? பெரும் துயரம் தாங்குவேன் என்று எண்ணியா என்னை பெண்ணாக நீ படைத்தாய்! என்னால் முடியவில்லை இன்று-இறைவா என்னால் முடியவில்லை இன்று என்னுள் இருக்கின்ற சோகங்கள் என்னை விட்டு நீங்கமாட்டாதா? ஏமாற்ற என்று எத்தனையோ உயிர்கள் இருக்கும் போது ஏமாற என்று எனை ஏன் படைத்தாய் ? அரக்கர்கள் மத்தியில் இரக்கதோடு எனை ஏன் படைத்தாய்? எல்லொரும் நல்லாயிருக்கனும் என்றென்னும் எண்ணதை ஏன் கொடுதாய்? ஏனக்கு என்று நினைக்காத மனம் ஏன் எனக்கு கொடுதாய்? அன்பாக பேச ஏன் வைத்தாய்? அடுத்தவரையும் நேசிக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
உயிர் .... தந்து உயிர் காத்து ... எந்த உயிருக்கும் ... அவதாரம் கொடுக்கும் ... அவதார பிறப்பே தாய் ....! அவதரிக்க அவதாரம் ... எடுத்து உலாவிவரும் ... உயிராய் இருப்பாதால் ... தாயே உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! பெற்ற பிள்ளை படும்பாடு .... பார்க்கமுடியாமல் தன்னை ... வருத்தி பாலூட்டி உணவூட்டி .... இரக்கத்தோடு அரவணைத்து ... இரத்தத்தோடு இரக்கத்தையும் .... வளர்க்கும் ஆன்மீக உறவே ... "அம்மா" உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! தன் பிள்ளையை போல் ... பிறர் பிள்ளையையும்.... அரவணைக்கும் ஒரே ஒரு .... பிறப்பாய் சேவைசெய்யும் .... உனந்த உள்ளம் கொண்ட ... உலக சேவகியாய் உம்மை .... பார்கிறேன் தன் பிள்ளைக்கு .. மட்டுமல்ல பிற பிள்ள…
-
- 0 replies
- 1.4k views
-
-
கல் நெஞ்சும் கசிந்துருக, இன்று கையேந்தும் நிலை வந்தும் சொல் பொறுக்காச் சோர்விலராய் கைகட்டி நிற்காத ஏர் பிடித்த நல் மனிதர் வல் வினையால் வாழ்விழந்து வாழாவெட்டி ஆகி நின்று நெல் மணிக்கும் வரிசை கட்டி கையேந்தும் நிலை கொடிது. பார் போற்ற வாழ்ந்திருந்து பசி விலக்கி வாழ்ந்தவர்கள் ஏர் பிடித்த கையாலே அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள்- வந்தாரை வரவேற்று ஊர் மெச்ச உபசரித்தோர் நாதியற்று நடுத் தெருவில் அகதியாய் அலைகிறாரே போர் ஓய்ந்த பின்னாலும் ஊர் ஏக முடியாத கொடுமையினை யாருணர்வார்
-
- 6 replies
- 1.4k views
-