கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இருக்கும் இருத்தலை நேசிக்காத இருத்தல் முரண் _இருந்தும் இருந்துகொண்டிருக்கும் இருப்பை இழந்துவிடும் துணிவுமில்லை , இருப்பதால் நுகரப்படுவது இருப்பின் மீதான வெறுப்பாக இருந்துகொண்டேயிருக்க , இருக்கிறேன் என்றே இயல்பாக இயம்புதல் வழக்காயிற்று . இப்படி இருத்தல் இருத்தலுகாகாது என்று அன்பில் இருக்கும் எல்லோரும் சொல்லியும் இருத்தல் அப்படியே .................! இருக்கிறது இன்னும் இருந்துவிடலாம் என்ற அவா . என்ன, இவர்களைப்போல் எப்படியும் இருந்திட துணிந்திடில் இருந்திடலாம் _உள் இருந்தொரு குரல் யாருக்கும்கேளாமல் , யார்சொல்லியும் கேளாமல், இருந்து மிரட்டுகிறது _இந்த இருப்பெல்லாம் இருப்பா என்று ?
-
- 6 replies
- 1.5k views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (28.10.15) "பூம்பாவாய்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூம்பாவாய் பூம் பூம் மாடு வாசலில் நிற்கிறது. அதன் அலங்கார உடை கண்டு அறியாதார் அதிசயிப்பர். கொம்புகளின் கூர்மை குத்திக் கிழிக்குமோ என்று குழந்தைகள் அஞ்சும். பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால் செய்கிற வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள். நான் அந்த மாட்டுக்கு இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன் அவளிடம் கேட்டுக்கொண்டு! (நன்றி: ஆனந்தவிகடன் 28.10.15)
-
- 6 replies
- 1.8k views
-
-
வாழ்க மா. . . வீரர் மெழுகுவர்த்தி கண்டால் எனக்கு என்றும் உங்கள் ஞாபகமே உயிரை உருக்கி விடிவைத் தருவீர் எண்ணக் கண்ணில் நீர் வருமே நூறு வருடம் வாழவேண்டும் ஆசையுண்டு எங்களுக்கு மூன்றே நிமிடம் வாழ்ந்தால்க் கூட அர்த்தம் வேண்டும் உங்களுக்கு முருக்கை முள்ளு காலில் ஏற உயிரும் எங்கோ போய் வருமே நாளை நாங்கள் போறோம் என்று எப்படி ஐயா சிரிக்கின்றீர் ஈழப்போரைக் கருவறைக்குள்ளே கதையாய் கரைத்துக் குடித்தனீரோ மடிந்த பின்பும் மறுபடி எழுந்து தமிழ்த்தாய் வயிற்றில் பிறக்கிறீரோ மில்லர் முதற்கொண்டு இன்னாள் வரையிலே எத்தனை எத்தனை கரும்புலிகள் எண்ணிப் பார்க்கிறேன் கண்களின் ஓரமாய் சிறிதாய்த் துளிர்க்குது நீர்த்துளிகள் எங்கள் உறவுகள் உங்களை நினைக்க உடம்பு மெல்லச்…
-
- 6 replies
- 962 views
-
-
திருதக்க தேவர் சீவகசிந்தாமணியில் வடிவமைத்த அழகிய கதை. ஒரு செல்வன் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று பொருள் ஈட்டி தங்க உருண்டையாக மாற்றி இல்லத்தில் வைத்திருக்கிறான். அவனுடைய துணைவிக்கும் அது தெரியும். கணவன் செய்யப் போகும் அறத்திற்க்கு அவளும் சம்மதித்தாள். அடுத்த ஆண்டு செய்வோம், அடுத்த ஆண்டு செய்வோம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். ஒரு நாள் அவனுக்கு வாத நோய் வந்தது. கையும் காளும், நாவும் செயலற்று போயின. ஊர் பெரியவர்களை அழைத்து வருமாறு மனைவிக்கு சாடை காட்டினான். மரணத்தின் விளிம்பிற்க்குச் சென்று விட்டதை உணர்ந்து விட்டான். இனியும் ஒத்திப்போட முடியாது. ஊர் பெரியவர்கள் சூழ்ந்திருக்க மனைவியிடம் தங் உருண்டையை கொண்டு வா என்று சாடை காட்டினான். மனைவியை தவிர ம…
-
- 6 replies
- 1.8k views
-
-
புரியாத ஏக்கம்… என் கண்கள் அவனையே கூர்மையாக நோக்கின… வாட்ட சாட்டமான உடல் ஆடை அணியும் அழகாகத் தெரிந்தன. ஆனால்… அவனின் செயற்பாடு… அவன் போடும் சத்தம்… என்னைத் திடுக்கிட வைத்தது… இந்த வயதில்… இப்படியான தோற்றத்தில்… இப்படி ஒரு நிலையா! கடவுளே!!! ஊரில்… மருத்துவ வசதியிலாத இடத்தில்… பொருளாதர பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே… ஒரு சிலர்தான் இப்படியான நிலையில்… தனிமையிலே கதைப்பார்கள்… தனிமையிலே சிரிப்பார்கள்… தன்பாட்டிலேயே துள்ளிக் குதிப்பார்கள்.… ஆனால்… இங்கே …. எல்லா வசதிகளும் உள்ள மருத்துவ வசதி மிக்க நாட்டில்… அவர்களைப்போல்தான் இவர்களுமா?; ஒரு நேரத்தில் எத்தனை பேர்! சனத்தொகை வீதத்தில்… எ…
-
- 6 replies
- 1k views
-
-
சாக்கடையில் சந்தன மலர்கள்........ கவிதை - இளங்கவி....... வேலிப் பூவரசு வெண்மஞ்சல் பூப்பூத்து வாசலில் போவோரை வா வாவென்று வரவளைக்கும்..... முன்வைத்த காலை பின் வைய் என்று சொல்லி எங்கள் மொட்டைவால் நாய்க்குட்டி முன் வந்து குரைத்து நிற்கும்..... மொத்த அரசியலை ஒரு பத்திரிகையில் உள்வாங்கி எங்கள் பொக்குவாய் தாத்தா பொழுதுகள் போக்கிடுவார்.... ஆட்டிறைச்சிக் குழம்புவைக்க அயலட்டம் எல்லாம் மணக்க அந்த வாசக் குழம்புடனே வயிறாறச் சாப்பிட்ட நம் சந்தன மலர்களெல்லாம் இன்று சாக்கடைச் சகதிக்குள்....! அன்று திருவிழாக் காலத்திலே சிறிதாக வலம் வந்தோம்...... இன்றோ திண்ட மலம் கழிப்பதற்கும் நீண்டதாய் வரிசை நிற்போம்.... என்னையா கொடுமைகள்…
-
- 6 replies
- 1.1k views
-
-
பஸ்சில் போனாலும் - எனக்கு கப்பலில் போவது போலவே இருந்தது. அலைகள் இருக்கவில்லை - ஆனால் ஆட்டம் இருந்தது. குன்றும் குழியுமான அந்த வீதிகளில் மழை நீர் தேங்கி... ஓரத்து வாய்க்காலோடு ஒன்று சேர்ந்து குளக்கரையை...நோக்கி சலசலக்கிறது. லொறிகள் ஒன்றிரண்டு ஆங்காங்கே புரண்டு கவிண்டு கிடந்தன. இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த விளம்பரப்பலகைகளிலும்... சேறு படிந்து புது வர்ணம் பூசப்பட்டிருந்தது. இடையிடையே "நன்றி மீண்டும் வருக " என்பது மட்டும் மகுட வாக்கியமாக... பொறிக்கப்பட்டிருந்தது. குலுக்கிற குலுக்கலில் குடல் வெளியே வந்து.. விடும் போல் இருந்தது. சாளரம் ஊடாக சிலர் கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள். பலர் இருக்க முடியாமல் துள்ளித்துள்ளி…
-
- 6 replies
- 957 views
-
-
சாத்திரக்காரர்கள் தலைமறைவானார்கள். சனங்களின் பெரும்பிணி சாத்திரியின் பரிகாரங்களில் தீராதென்பதை சாவு சனங்களை நெருக்கிய மலந்தோய்ந்த கடற்கரையில் பிணங்கள் மிதந்த கடனீரேரிகளில் தம்மை நோக்கி இரண்டு பக்கங்களிலிருந்தும் குறிபார்த்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளை அஞ்சிய இரவில் சனங்கள் கண்டுகொண்டார்கள். சனங்களோடு சனங்களாய் தப்பியோடும் அவசரத்திலும் சாத்திரக்காரர்கள் பரிகாரப் புத்தகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு மறந்திருக்கவில்லை. போகுமிடம் எப்படியோ? சூரியன் மேற்கில்தான் உதிக்குமோ? நிலவு பகலில்க் காயுமோ? போன பின்னர் பார்க்கலாம். முக்காடிட்டபடி தமக்கு முன்னர் ஓடித் தப்பிய சாத்திரக்காரர்களைச் சபித்தபடி சனங்கள் உத்தரித்தனர். ஊழி முடிந்தபின்னர்…
-
- 6 replies
- 1k views
-
-
உனைச் சந்திச்சு பிரியும் ஒவ்வொரு நாளும் நான் நானாக வந்து நீயாக மாறுவதும் உன்கூட நடந்து சென்ற பாதைகள் எங்கும் தனியாய் நடந்து பழகுவதுமாய் மாறிப்போனேன் நான் இதுதான் காதலா...... இல்ல இதைத்தான் காதல் எங்கிறார்களா எதுவும் புரியாதவளாய் உன் மார்போடு தினம் தூங்கும் மரத்தடியில் நாளைய உனக்காய் இன்றைய என்னை செலவழித்தபடி காத்திருக்கும் இவள்
-
- 6 replies
- 1.5k views
-
-
ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நகரத்தின் புதிய தந்தை எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து நாற்காலியைக் கைப்பற்றிய நகரத்தின் புதிய தந்தைக்கு அவர் பராமரிக்கவேண்டிய பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது. சாதுவானவர்கள், அடங்காதவர்கள், ஊதாரிகள், அயோக்கியர்களென அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது. அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார். ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார். சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார். …
-
- 6 replies
- 2.4k views
-
-
வாழ்தல் - வ.ஐ.ச.ஜெயபாலன் தொடுவானில் கை அசைக்கும் மணக்கோலச் சூரியன். பின்னே படுக்கை அறை வாசலின் நீலத் திரை அசைந்தபடி. எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம் பறவைகளாக உதிர்ந்து ஆர்ப்பரித்துச் சிதறிய வானம் இனி வீதியோரப் பசுமரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முழைக்குமா நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா இந்த மாரி இரவு. கண் சிந்தும் பிரிவுகளில் நிறைகிறது வாழ்வு. ஒவ்வொரு தோழதோழியர் செல்கிறபோதும் காதலியர் வசைபாடி அகல்கையிலும் நாளை விடியாதென உடைந்தேன். இனி முடிந்ததென்கிற போதெல்லாம் பிழைத்துக் கொள்கிறது தாய் வீழ்ந்த அடியில் குட்டிவாழை பூக்கிற உலகு. ஒப்ப மறுக்கினும…
-
- 6 replies
- 1.7k views
-
-
2003 ம் ஆண்டு மாவீரர் நினைவாக வடித்த கண்ணீர் இன்றும் கார்த்திகை மாதத்து ஓளிக்கீற்றுக்கள் உலகெல்லாம் ஒரு தரம் எம் தேசம் நோக்கும் அற்புத நாள் தமிழீழ தீபம் அணையாமல் எரிந்திட தம்மை அழித்து அத்தீபத்தை ஏற்றிய உத்தம புருசர்களின் உன்னத நினைவுநாள் அடக்கி அடக்கியே சிங்களம் எம்மை அடிமைகளாக்கியபோது விலங்குடைத்து எம்மினத்தை விடுதலையாக்கிய வீரப்புருசர்களின் நினைவுநாள் சிங்களச் சீற்றர்களின் உறக்கம் கலைத்த உன்னத புருசர்களின் உத்தம நாள் புதியதோர் பரணி படைத்த புலித்தெய்வங்களின் நினைவு நாள் சுயத்தை தொலைத்து பொது நலத்தை நாடிய புண்ணிசீலர்கள் மக்களிற்காகவும் தாய் மண்ணிற்காகவும் விதையாகி எம்முள்ளே நினைவாகி நிலையான…
-
- 6 replies
- 1.3k views
-
-
"நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்?" கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன். மண்டியிட்டு அமர்ந்து மண்ணகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன். உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்! நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன செய்வாய்? ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன். உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன். மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மரிக்க வைப்பேன். நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்? காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும் பூலோகம் அழிவதில்லை. ஆயிரம் மின்னல் பிரிக்கின்றபோதும் வ…
-
- 6 replies
- 2.6k views
-
-
நாற்றோடு காற்றுவந்து மோதும் - - கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- - பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- - பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து வாயிலை அலங்கரி! இராவென்ன பகல் என்ன சொல்லு? நீ இரவுக்குள் பகலாகி நில்லு! மழையென்ன வெய்யில் என்ன -சீ போ! வாழ்வென்ன பலமுறை வருமா? உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி அதை உனக்கு திருப்பி தருமா? வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி? வானம் குடைபிடிக்கிறது பார்-பார்! அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- - வாழ்ந்து பார்ப்போமே?- வா வா! வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்? உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்? புன்னகைக்க…
-
- 6 replies
- 2.3k views
-
-
உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை...! மரணங்கள் மலிந்தமண்ணில் உடலங்கள் எரிந்துபோக அவலங்கள் நிறைந்தவாழ்வாய் தினம்தினம்... தொடர்கிறது கறுப்பு யூலை புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல... துயரங்கள் சுமந்துகொண்டு தொடரும் காயங்களுக்கு நடுவில் நாளைய பொழுதின் விடிவுக்காக ஏங்கும் ஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்...! நீதி என்றைக்கோ செத்துப்போனது மனிதனேயம் எப்போதோ தொலைந்துபோனது அன்றில் இருந்து... நியாயத்தின் அர்த்தம் என்னவென்றே தெரியாத ஆட்சியில் இன்றுவரை... தொடர்கிறது கறுப்பு யூலை தொப்புள்கொடி உறவுகளின் தலைகள் அறுபட்டு உடல்வேறு தலைவேறாய் தூக்கி எறியப்படும் பிஞ்சுகளின் உடலங்களில் தோட்டாக்களால்... துளைகள் இட…
-
- 6 replies
- 1.5k views
-
-
பருத்தித்துறை யூராம் பவளக்கொடி பேராம் பாவைதனை யொப்பாள் பாலெடுத்து விற்பாள் அங்கவட்கோர் நாளில் அடுத்ததுயர் கேளிர்! பாற்குடஞ் சுமந்து பையப்பைய நடந்து சந்தைக்குப் போம்போது தான்நினைந்தாள் மாது: "பாலையின்று விற்பேன் காசைப்பையில் வைப்பேன்" முருகரப்பா வீட்டில் முட்டைவிற்பாள் பாட்டி கோழிமுட்டை வாங்கிக் குஞ்சுக்குவைப் பேனே புள்ளிக்கோழிக் குஞ்சு பொரிக்குமிரண் டைஞ்சு குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து விரந்துவளர்ந் திடுமே வெள்ளைமுட்டை யிடுமே முட்டைவிற்ற காசை முழுதுமெடுத் தாசை வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூத் தொப்பி வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு வெள்ளைப்பட் டுடுத்து மினுங்குதொப்பி தொடுத்துக் கையிரண்டும் வீசிக் கதைகள்பல பேசிச் சுந்தரிபோல் நானே கடைக்குப்போ வேனே …
-
- 6 replies
- 3.2k views
-
-
ஆதவன் தேரிலே அரியணை ஏறியே அகிலம் ஒளிரவே அக்கினி சுரந்தனன் பகலவன் செங்கதிர் பங்கயம் தீண்டவே பனிபட்ட இதழது பகலாய் முகிழ்ந்தது களிறின் பிளிறல் சங்காக முழங்கிட செவிகள் இரண்டும் சாமரரை வீசவே துதிக்கையால் துதித்தது தூயவன் ஞாயிறை இளம் குளிர் காற்று இதயத்தை நனைக்க இன்பம் பொங்கிட இனிமையாய் புலர்ந்தது காக்கையின் கரைதலும் குயிலின் பாடலும் மஞ்ஞையின் அகவலும் காதில் ஒலித்திட கரைந்தது இருள் மலர்ந்தது பகல்
-
- 6 replies
- 2.9k views
-
-
முள்ளிவாய்க்காலில் புதைந்த முகங்கள்.... கவிதை - இளங்கவி பாத்தி கட்டி நீர் பாச்சிய வயல்களில் இரத்த ஆறு உடைப்பெடுத்து ஓடிய இறுதி நாட்கள்.... வருடங்கள் இரண்டின் முன்தான் எங்கள் வலிகள் உச்சங்கண்ட நாட்கள்..... அழுத குழந்தையின் ஏக்கம் தீரமுன் அதன் மூச்சே நின்றுபோன கொடூர நாட்கள்..... எங்கள் மரண ஓலங்கள் மண்ணுக்குள்ளேயே புதைந்துபோன நாட்கள்... எங்கள் வயிற்றுப் பசிக்கு மரணத்தைப பரிசளித்த நாட்கள்..... எங்கும் கொலைகளின் உச்சம்.... கூக்குரல்களின் உச்சம்.... காம வேட்டையின் உச்சம்.... கொண்டொளித்த பிணங்களும் உச்சம்..... ஆம்...மிஞ்சிப்போன எம் உயிரின் மரணத்தின் விளிம்பில் அவனின் இரும்புக் கையின் கொட…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
வாழ்க்கை .................. தம்பிக்குக் கிரிக்கெட்மீது பைத்தியம் தனக்குப்பிடித்த நாடகத்தை தியாகம் செய்வாள் அக்கா ................. மகள் முள்ளை எடுக்கச் சிரமப்படுவாள் தலையை தான் எடுத்துவிட்டு வால் பகுதியை மகளுக்கு விட்டு வைப்பார் அப்பா ................... வளருகிற பெடியனுக்குச் சத்துத் தேவை கறியில் இருக்கும் தனக்குப்பிடித்த மீன் சினைகளை மகனுக்கு தெரிந்து எடுத்துக்கொடுப்பாள் அம்மா ........................... தங்கைக்குக் கல்யாணம் முடியட்டும் தன் காதலை கட்டுப்படுத்திக்கொள்வான் அண்ணன் .......................... அக்கா சொகுசாய் வாழவேண்டும் கடன்காரனாகிப்போவான் தம்பி ........................ அவள் நீண்டநாள…
-
- 6 replies
- 1.9k views
-
-
கதையைக் கேட்டியேடி கமலா மாமி கந்தையற்ற பொடியன் கணக்கில பெயிலாம் பொன்னையா வாத்தியின் கடைசிப் பொட்டை பொடியனைப் பிடிச்செண்டு ஓடிற்றாளாம் யாருக்குத் தெரியும் இவ்வளவு காசு எப்படி வந்ததெண்று இந்தப் பெரிய வீடு கட்டுகினம் மல்லிகா டீச்சரின் மகள் இத்தினை வயசாப் போச்சு இன்னும் இருக்கிற கட்டாமல் ஏழிலை செவ்வாயாம் என்னமோ நடக்குது ஒன்றும் சொல்லுகினம் இல்லை கன பேர் வந்து போகினம் அவளுக்கு வாய் கூட விட்டிட்டு இருக்கிறாளாம் வெளியில தெரியாமல் ஏதோ பெரிசா கதைக்கினம் எப்ப வந்தது இவைக்கு எல்லாம் இவை எந்த ஊர் எந்தப் பேர் வழி என்று எங்க போய் விழுந்தவை எங்களுக்கு தெரியாதா அடுத்த வீட்டு அம்பிகா …
-
- 6 replies
- 873 views
-
-
கிழக்கு வெளிப்பது எதற்காக? இரவின் யாத்திரை உரைப்பதற்கா? - பனிக் கதவின் கண்கள் திறப்பதற்கா? - ஒரு கனவின் மையல் முடிப்பதற்கா? - பல விழிகள் ஒளியைப் பெறுவதற்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? உடுக்கள் ஓய்வு எடுப்பதற்கா? உதயன் கரங்கள் விரிப்பதற்கா? துடுப்பு ஊர்தி ஓய்வதற்கா? துறைகள் மௌனம் கலைப்பதற்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? பாடும் பறவைகள் இசைப்பதற்கா? பாரும் அதனை இரசிப்பதற்கா? வாடும் உயிர்கள் புசிப்பதற்கா? - பல வர்ணம் உலகை வசைப்பதற்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? உரிமை நிறைந்த போருக்கா? - கலி உக்கிரம் தணிக்கும் பேருக்கா? வறுமை அகற்றும் தீர்வுக்கா? - நீல வண்ணம் தீட்டும் வானுக்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? கலைஞர…
-
- 6 replies
- 1.9k views
-
-
நான் குறும்பன் குரல் கொடுத்த பழைய கவிதைகளை கேட்க விரும்பி சொடுக்கிய போது Not Authorised என வருகிறது. என்ன செய்யலாம்.
-
- 6 replies
- 1.7k views
-
-
பதில் சொல்... காரணம் சொல்ல முடியவில்லையா உன்னால் என்ன இது புது புதிர் போடுகின்றாய்... வேணும் என்று நினைத்த உன் மனம் வேணாம் என்று நினைத்த உன் மனம் நாம் இனி நண்பர்களாய் இருப்போம் என்று நினைத்த உன் மனம் இதேல்லாம் செய்ததும் உன் மனம் ஆனால் இப்போது எதோ சிறுபிள்ளை போல் உனக்கு காரணம் தெரியவில்லை என்று சொல்கிறாயே இது நியாயமா??? உன்னை சொல்லடா என்று அதட்டவில்லை சொல்லாட்டி கதைக்க மாட்டன் என்று சாவால் விடவும் இல்லை சந்திப்புகள் தற்செயலானவை பிரிவுகள் தவிர்க்க முடியாதவை இவை எல்லாம் என் வாழ்வில் நான் அனுபவிக்கும் துன்பங்கள் இதை நான் அனுபவிக்கும் முதல் கட்டதையும் நெருங்கிவிட்டேன் இருந்தும் உன்னிடம் பிரியும் முன் வேண்டுகோள் …
-
- 6 replies
- 1.4k views
-
-
கைவிடப்பட்ட மந்தைகளும், கரணம் போடும் மேய்ப்பர்களும்.... -பிடுங்கி - கோடைஇடியிடித்து வானம் மின்னியது. பூமி நடுங்கியது. கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!! நரிகள் பிலாக்கணமிட்டழுதன! மந்தைக் கூட்டம் சிதறியது....... எது திசை??? எது போகுமிடம்??? தெரியாது திகைத்தன மந்தைகள். மேய்ப்பர்களின் கையசைவிற்காய் ஏங்கித் தவித்தன அவை. மேய்ப்பர்களைக் காணவில்லை கைவிட மாட்டார்கள். நம்பிக்கையோடு, மேய்ப்பர்களைத்தேடத் தொடங்கின மந்தைகள்!!! வனாந்தரங்களில்..... கட்டாந்தரைகளில்.... முகாம்களில்.... காடுகளில்..... சுடலை வெளிகளில்..... தெருவோரங்களில்...... எங்கு மேய்ப்பர்கள்???,எங்கு மேய்ப்பர்கள்???…
-
- 6 replies
- 1.6k views
-
-
என்?????? புலம்பெயர் நாட்டினிலே தமிழர்கள் ஒன்றினைந்து கேட்கும் உரிமைக்குரல்.... நமக்காக நம் இனத்திற்ககாக நம் ஈழத்தமிழர்களுக்காக.. செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கும் இவர்களெல்லாம் தமிழர்களை பயங்கரவாதிகளாம் என்னடா உலகம் இது?????? நாடு விட்டு நாடு போய் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் ஆனால் தொடருவதோ.... நம் இனங்களின் அவல நிலைகள் தான் சமாதானத்தை தரும்படி உங்களிடம் கேட்டால் நீங்கள் ஆயுதக்கருவிகளையல்லவா தர முயல்கிறீர்கள் நம் ஈழத்தை நமக்கே திருப்பித்தர என் இந்த சுணக்கம்???? எங்களது இழப்பில் நீர் என்ன சுகம் கண்டீர்????? எதிர்பார்கிறோம் …
-
- 6 replies
- 1.3k views
-