கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இன்றைய நாள்: அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்" "விடுதலை வேண்டும் தமிழினமே விடுதலை சும்மா விளைவதில்லை" "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ" தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம் இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? அதை பிடித்து விட்டான் இதை பிடித்து விட்டான் என்று அங்கும் இங்கும் ஆர்ப்பரிக்காமல் ஆகவேண்டியதை பார்ப்போமா? இன்னும் பிந்தவில்லை இனியும் வெல்லலாம் ,இன்றே தொடங்குங்கள் அவன் செய்வான் இவன் செய்வான் என்று ஆறி இருக்காமல் நான் செய்வேன் என்று நகருங்கள் முன்னே நன்றி www.tamiloosai.com Source Li…
-
- 0 replies
- 936 views
-
-
தோசை - கவிதை கவிதை: சௌவி, ஓவியம் ஸ்யாம் அன்னபூர்ணாவில் மசால் தோசை ஆரிய பவனில் வீட்டு தோசை சரவண பவனில் ஆனியன் தோசை வசந்த பவனில் பொடி தோசை கௌரிகிருஷ்ணாவில் நெய் தோசை அஞ்சப்பரில் சிக்கன் தோசை ஹரி பவனில் காடை தோசை ஆனந்த பவனில் பூண்டு தோசை முருகன் இட்லிக் கடையில் காளான் தோசை முனியாண்டி விலாஸில் முட்டை தோசை ஆச்சி மெஸ்ஸில் பேப்பர் தோசை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்கை தோசை தள்ளுவண்டிக் கடையில் தட்டு தோசை இவை எதுவும் சின்னப் பலகையின் மேலமர்ந்து புகை சூழ விறகு தள்ளிவிட்டுக்கொண்டே அப்பாவின் கிழிந்த வேட்டியின் சிறுதுண்டை காய்ந்த மரக்குச்சியில் கட்டி கண்ணாடி பாட்டிலுக்குள் கீழிருக்கும் எண்ணெயைத் தொட்டுப் பூசி ஓரங்கள் கருக…
-
- 0 replies
- 4k views
-
-
தீயன தீய தீயும் தீயும் தூயன தூய தூய்மை தூயும் வேயன வேய வேயும் வேங்களம் பாயென புலி பாயும் பாரில் ஓயாத அலையாகி ஓங்காரமாய் ஒலிக்கும். திளைந்திருக்க தினவெடுக்கும் விளைந்திருக்க வினையெடுக்கும் முளைத்திருக்க மனமிருக்கும் உழைத்திருக்க உரமெடுக்கும். களைத்திருக்கும் பகையிருக்கும்.புலி நிலைத்திருக்க களம் விழைத்திருக்கும் வகை புலி இருக்க வாகை கிழக்கிருக்கும் நகை முகிழ்த்திருக்க நாமாய் நெகிழ்ந்திருப்போம். பிரபஞ்சம் பிரமித்து ஏற்ற பிரபாகரம் கொண்ட சாரம், பஞ்ச பூதம் வாழும் வரையும் தஞ்சமாக தரணியில் வாழும். ஏந்திய கொடி சிலிர்க்கும்,எல்லாள மண் துளிர்க்கும் சீந்திய குருதியெல்லாம் குவளயமாய் குதூகலிக்கும். தீயினை தீய்த்த தீரம்,தூய்வினை ஏற்றி ஏந…
-
- 2 replies
- 719 views
-
-
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் [ சு. பிரசாத் ] வியாழன், 26 மார்ச் 2009 19:10 மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே, எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார் …
-
- 1 reply
- 995 views
-
-
ஏணி ..........ஏன் இனி?? அழகாய் அரவணைத்தும் ஆக்ரோசத்தோடும் விருப்போடும் வெறுப்போடும் செருப்போடும் செருக்கோடும் எப்போதும் எனை நீ மிதிக்கலாம் என்னால் ஏற்றி விடவும் இறக்கவும் மட்டுமே முடியும் என்னால் என்னிடத்தை விட்டு ஏறவும் முடியாது ஏறி மிதிக்கவும் முடியாது ஏறி விட்ட ..நீ இறங்கும்வரை காத்திருக்கவே முடியும் ஏனெனில் நான் ஏணி.... அய்...எனக்கும் கவிதை எழுத வந்திட்டுது.
-
- 16 replies
- 8.1k views
-
-
கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- நகைச்சுவை --------------- ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே குதி இருக்குது உன் கால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர கண்டதையும்வைதிருந்தவளே கை இருக்குது உன்கைப்பை எங்கே ...? கண்டதையும் ........ பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... முகம் இருக்குது உன் அழகு எங்கே ..? ^^^ கவிப்புயல் இனியவன் கானா நகைச்சுவை கவிதை
-
- 9 replies
- 1.4k views
-
-
மேலும் ஒரு முயற்சி தமிழ் நிலவன் - கைக்கூ கவிதைகள் புத்தர் சிலைக்கு நடுக்கல் நடாதீர்கள் நாம் கீழே புதைந்து கிடக்கிறோம்.. -----முள்ளிவாய்க்கால் புதையுண்ட குழந்தைகள் ------------------------ மாவீரர் கல்லறைக்கென்று பெருமைப்பட்டோமே நாம் இன்று அங்கே ஆடுகள் உறங்க்குகிறதே...! ------கார்த்திகைப்பூ ----------------------- புதைந்த உடல்களுக்கருகில் எங்களால் உறங்கமுடியவில்லை எமை சிறைமீட்க வாருங்கள்....! ------துப்பாக்கிகள் தமிழ் நிலவன்....
-
- 0 replies
- 943 views
-
-
வயிற்றுப் பசியை வாலிபப் பசி வென்றது கையில் குழந்தையுடன் இன்னொரு ஏழ்மை சமுதாயம்
-
- 3 replies
- 1.5k views
-
-
புழுதியப்பிய தெருக்களின் முனைகளில் அழுதபடி குழந்தைகளும் அனாதைகளான அவர்களுமாக தெருக்கள் இப்போது துயரங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. எல்லோரையும் எல்லாவற்றையும் அழித்துச் சென்றவர்களின் முகங்களால் நிறைந்து கிடக்கிறது நிலம். நீதியின் சாட்சிகளாய் அலைகின்றவர்களின் முகங்களில் பயமும் வறுமையும் பதியமிடப்பட்டிருக்கிறது….. ஆணிவேருடன் ஒரு சந்ததியும் அதன் குருத்துக்களும் கனவுகளும் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட அடையாளங்களை அழிக்க யார்யாரோ வருகிறார்கள் அறிக்கைகள் எழுதுகிறார்கள் எல்லாம் வளமைபோல் அவர்கள் போய்விடுகிறார்கள்…. இரவுகளில் தனித்துறங்கும் பயத்தில் ஊரில் குடும்பங்கள் ஓரிடத்தில் கூட அச்சமுறு இரவுகளோடு குழந்தைகளையும…
-
- 3 replies
- 934 views
-
-
நிலவதனை தழுவிநின்ற முகிலவன் -ஏன் கண்ணீரைச் சொரிகின்றான்....? இன்று.... மதியதனைக் காணாது அவனும் -(நிம்)மதி இழந்து போனானா..
-
- 12 replies
- 2.7k views
-
-
காதல் என்பது இனிய சுவாசம் என்றாயே பெண்ணே உயிரும் உயிரும் கலப்பதுதான் காதல் என்று சொன்னாயே பெண்ணே நான் தான் உன்னுடய முதல் கவிதை என்றாயே பெண்ணே பொய்கள் உனக்கு பிடிக்காது என்று சொன்னாயே பெண்ணே என்னை வெறுப்பதாக ஏன் பொய் பேசுகின்றாய் பெண்ணே முற்களாக ஏன் என்னை குத்துகின்றாய் பெண்ணே உன் சொற்களாலே ஏன் என்னை கொல்கின்றாய் பெண்ணே உன் கண்களாலே ஏன் என்னை எரிக்கின்றாய் பெண்ணே நான் இங்கு மரித்து விடுகிறேன் உன் கைகளால் விசம் கொடு பெண்ணே
-
- 32 replies
- 4.3k views
-
-
நான் பூலோக கன்னியை பார்த்ததும் இல்லை தேவலோக தேவதையை கண்டதும் இல்லை இறம்பை ஊர்வசியை பார்த்ததும் இல்லை உன்னை பார்த்தேன் பெண்ணே நீதான் அந்த தேவதையோ? பிரம்மன் செதுக்கிய சிற்பமும் நீதானோ? விசுவாமித்திரனின் தவத்தை குலைத்தவளும் நீதானோ? இந்திரனை மயக்கிய மோகினியும் நீதானோ? மதுரை மீனாச்சி அம்மனும் நீதானோ? நெல்லை காந்திமதி தேவியும் நீதானோ? தஞ்சாவூர் சிற்பமும் நீதானோ பெண்ணே? என்னை நீயும் ஏன் நாடி வந்தாய்? என் இதயத்தை திருடவா நீயும் வாந்தாய்? வேண்டாம் பெண்ணே நீயும் என்னை விட்டுவிடு!!!
-
- 2 replies
- 1.1k views
-
-
:roll: பொங்கி எழடா.... எழடா எழடா தமிழா எழடா எழந்தே தமிழீழம் தனை நீ அடையடா... அடிமை விலங்கதை அறிதே;தே எறியடா.... உடைத்தே தமிழீழம் தனை நீ அடையடா.... தலைகள் குனிந்தது போதும் நிறுத்தடா.... ஆண்டுகள் ஆயிரம் அடிமையாய் ஏனடா....?? சொந்தங்கள் பிரிந்த சோகம் ஏனடா...?? உன் மண்ணில் உனக்கின்று அவலம் ஏனடா....?? கண்ணீர் கவலைகள் கருணையாய் ஏனடா....?? கரிகாலன் தமிழா உனக்கின்று ஏனடா....?? பொறுத்தது போதும் இனி பொங்கியே எழடா......!!! -வன்னி மைந்தன்-
-
- 3 replies
- 1.2k views
-
-
'மகிந்தா ஆட்சி கலைய போகுது....'' ஜயா மகிந்தா ஆட்சியது குலைய போகுது..... அந்தோ பார் அலையதுவும் ஏறப் போகுது.... அவலம் தந்த படைகள் எல்லாம் சிதறப் போகுது.... சீற்றம் கொண்ட புலியணிகள் சீறப் போகுது.... சிங்களவன் படை நிலைகள் உடையப் போகுது.... அவன் சிந்தனைகள் கூட அங்கு சிதறப் போகுது.... ஓலத்தில பகை அணிகள் ஓட போகுது.... ''அந்த திருமலையும் இன்றுடனே விடியப் போகுது.....'' எங்கள் மண்ணும் எங்கள் வசம் ஆகப் போகுது.... அந்த ஆட்டத்திலே மகிந்தா ஆட்சி கலைய போகுது.... - வன்னி மைந்தன் - :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 1 reply
- 950 views
-
-
-
- 1 reply
- 758 views
-
-
வீர வணக்கம் அண்ணனே.... இடியென வந்துன் செய்தி விழுந்தது இதயம் உடைந்தது விழிகள் கதறுது மொத்த தமிழினம் எங்கணும் கதறுது உன்னை இழந்தெம் தேசமே அலறுது.... ஈழ வானின் உதயம் மறைந்தது எங்கள் வானில் காரிருள் படர்ந்தது தாயை இழந்த சேயினை போல உன்னையிழந்து தமிழினம் கதறுது.... எங்களின் உரிமை வென்றிட வேண்டி எத்தனை செய்தாய் நீயே ஓடி நோயுடல் உன்னை வாட்டையில் கூட ஓய்வின்றி உழைத்த உத்தம வீரா.... எங்களை விட்டு ஏனின்று பிரிந்தாய்....??? காலதேவன் ஏன் உன்னை கடுகதியில் அழைத்தான்....??? ஓடியே வந்த பகைகள் எல்லாம் நீ ஏறிய களமதில் ஒழிந்தே போகும்..... உன் மதியுரை கேட்டு அரக்கன் கூட ஆடியே போவான் …
-
- 5 replies
- 1.7k views
-
-
நீண்ட இரவின் முடிவில் காத்திருக்கின்றது நேற்றைய வாழ்வில் உதிர்ந்து போன ஒரு பூவின் இதழ் காட்டு வழிப் பயணத்தின் இறுதியில் கிடைக்கின்றது வற்றிப் போன நதியின் சுவடு தூரப் பயணம் ஒன்றின் கடைசித் தரிப்பிடத்தில் அழிந்து போனது ஆரம்பித்த இடமும் இறுதி புள்ளியும் எங்கு சென்று தேடுவேன் காணாமல் போன என் உயிர் தொங்கிய பெரு விருட்சத்தை அடர்ந்து பெரிதாக நின்றிருந்த பெரு விருட்சத்தின் கிளையில் தொங்கிய பறவைகள் அனைத்தையும் பெரும் பூதம் தின்றுகொழுத்த கதையையும் அந்த பூதத்தை என் தோழர்களே வளர்த்து பறவைகளை தின்னக் கொடுத்த கதையையும் எப்படிச் சொல்வேன் என் பிள்ளைக்கும் அவன் பேரனுக்கும் என் வரலாறு முழ…
-
- 13 replies
- 2.5k views
- 1 follower
-
-
ஆதி மனிதன் பேச மொழியற்று ஆடைகள் அற்று திரிந்த அந்நாளில் எல்லாம் இருந்தன அண்டவெளி அழகாக இருந்தன. பூமி ஆடை கட்டி பூரித்திருந்தது. பச்சை நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலாடை பூவாடை கட்டிய பூமி தாய், நீராடையும் கட்டி இருந்தாள். மரங்களை விறகுக்காக வெட்டாத கோடரி பாவனைக்கு வராத காலம் காடுகள் கற்பழிக்க படாது காயங்களின்றி கிடந்தன. குயில்களின் பாட்டை எல்லோரும் கேட்டனர் எவரும் கல்லெடுத்து அடிக்கவில்லை. கந்தக கலப்பில்லாத காற்றும், அமிலமற்ற ஆற்று நீரும் கிருமி நாசினியற்ற கிழங்கு வகையும் பேசா மனிதனை போசித்தன. இயற்கை மாசற்ற மனிதனை உருவாக்கியது. பேச மொழி அற்று இருந்த போதும் மனிதன் சிரித்தான். யானையை வாலில் பிடித்து தூக்கும் வல்லமை அவனுக்கிருந்தது. கூட்டமாக ந…
-
- 0 replies
- 572 views
-
-
உனை சுமப்பதையிட்டு கொண்ட பெருமிதத்தால்... உன் குதிரை கூட எனை நோக்கி... கடைக்கண்ணால்.... ஒரு நக்கல் பார்வை வீசிவிட்டு செல்கிறது....
-
- 4 replies
- 1.1k views
-
-
-
மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும் விடுதலை பெருந்தீயில் பேரியக்கமாய் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் சுடர் விட்டு எரிந்த தியாக விளக்குகளே பற்றி எரியும் பெரு நெருப்பை நெஞ்சின் அறைகளில் தாங்கி உயிரையே எண்ணையாக கொடுத்த பெரு மக்களே உங்கள் காலடித்தடங்களை எமக்குள் இறக்கி கைகூப்பி மண்டியிட்டு தொழுது வணங்குகின்றோம் வீர வணக்கங்கள் !! : யாழ் இணையம் மே, 2012
-
- 53 replies
- 9.2k views
- 1 follower
-
-
அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை ^^^ அம்மாவுக்கு குரங்கு அவனுக்கு தெய்வம் அவன் காதலி ^^^ இருந்தால் மனிதன் இறந்தால் பேய் உயிர் ^^^ உறவினருக்கு தேனீர் இடைக்கிடையே பேச்சு விளம்பர இடைவேளை ^^^ சந்தோசமாக இருப்பது எப்படி ..? தம்பதிக்கு கற்று கொடுக்கிறது தொலைக்காட்சி ^^^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ
-
- 11 replies
- 1.1k views
-
-
தை - திருமகளே வருக வருக .... தைரியம் துணிவு சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை
-
- 6 replies
- 22.5k views
-
-
மறக்க முடியுமா..................? நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த நாற்புறமும் கடல் சூழ்ந்த ஞானியர் ஐவர் உதித்த நல்லதோர் ஊராம் எம் காவலூர் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட ஊர் - அதில் அழகிய கடற்கோட்டையையும் கொண்டது எம்மூர் கலை வளர்ந்து தலை சிறந்து தனித்துவமாய் இருந்தது எம்மூர் மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம் மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன் எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை பறித்தது - பல உயிர்களை அழித்தது - உடமைகளை இழந்தோம் - நண்பர்களை பிரிந்தோம் - சொந்தங்களை அகதியானோம் -அந்நிய தேசத்தில் சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ பசுமை…
-
- 37 replies
- 4.7k views
-
-
நாட்கள் பத்தும் நம்மைத் தாண்டியது [size=4]நாடி நரம்புகளும் ஓயத் தொடங்கியது[/size] [size=4]நாதியின்றி இதயம் மட்டும் இயங்கியது[/size] [size=4]துளித்துளியாய் உன் இரத்தம் அடங்கியது[/size] [size=4]நல்லூர் கந்தன் பவனி வந்த வீதியிலே [/size] [size=4]அலையாய் வந்த மக்கள் வெள்ளத்திலே[/size] [size=4]சிலையாகி நின்றேன் _ நான்[/size] [size=4]உனைப் பார்க்கையிலே [/size] [size=4]சிந்தியது கண்ணீர் வெள்ளம் [/size] [size=4]உருகியது உன்னருகில் மக்கள் வெள்ளம்[/size] [size=4]ஒலித்தது ஈழப்பாடல் ஒன்று[/size] [size=4]மரணித்த வீரா உன் ஆயுதத்தை எனக்கு தா[/size] [size=4]உன் ஆடையையும் எனக்கு தாவென்று[/size] [size=4]இன்றும் ஒலிக்கின்றது [/size] [size=4]உடல்[/size]…
-
- 4 replies
- 594 views
-