Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவிதை இதோ! "உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே!" உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே! #coronavirusindia #CoronaVirusUpdate — வைரமுத்து (…

    • 16 replies
    • 2.5k views
  2. uary 8, 2020 - Editor · இலக்கியம் / கவிதை பாய் பெஸ்டி என்பவன் கனவுகளால் ஆனவனல்ல கண்ணீரால் ஆனவன் ஒரு பாய் பெஸ்டி பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் வாழ்பவனல்ல; அவன் வாழ்வது பாதிக் கணவனாக பாதிக் காதலனாக ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண் உடுக்கை இழக்கும் ஒரு கணத்திற்காக இடுக்கண் களைய அவள் அருகிலேயே காத்திருக்கிறான் ஒரு நிழலாக அதுகூட அல்ல ஒரு நிழலின் நிழலாக ஒரு பாய் பெஸ்டிக்கு ஒரு பெண்ணின் கணவனின் முன் எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் அதே …

  3. இனி எம் கல்லறைகளுடன் பேசுக"

  4. கவிதைகள் சொல்லவா ??

    • 1 reply
    • 703 views
  5. முள்ளிவாய்க்கால் பரணி! கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமென்றனர் …

  6. ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம் வரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் புன்னகைக்க முடியும் எல்லோருடைய துயரையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் ஒளிமுகத்துடன் செல்ல முடியும் கழுத்தில் சைனைட் குப்பி தோளின் குறுக்கே சன்னங்களின் மாலை துப்பாக்கியை கையளித்து மாண்டுபோன தோழியின் நினைவில் மறந்தாள் களம் செல்லத் தடுக்கும் தாயின் குரலை துப்பாக்கியை ஏந்திக் கையசைக்கும் விழிகளில் தேசத்தி…

  7. ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர் சூழச்சிகளால் மறைக்க முடியாத என் நெடு வரலாறோ நதிகளைப் போல நீண்டது எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர் தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும் எனது உறுதியான அடையாளங்களோ தீயைப் போலப் பிரகாசமானது கண்ணுக்குப் புலப்படாமலெனை மிக மிக எளிதாக அழிக்க…

    • 1 reply
    • 1.2k views
  8. குர்து மலைகள்பெண் கொரில்லாக்கள்ஏந்தியிருக்கும் கொடியில்புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலிவ் மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல தலைமுறை தோறும் விடுதலை கனவை சுமந்து சுதந்திரத்தை வென்ற உம் இருதயங்களில் பூத்திருக்கும் பிரிட்டில்லா மலர்களின் வாசனையை நான் நுகர்கிறேன். குருதி ஊறிய குர்து மலைகளே உமது தேசம் போல் எமது தேசமும் ஒர்நாள் விடியும் எமது கைகளிலும் கொடி அசையும் கோணமலையிலிருந்து உமக்குக் கே…

    • 2 replies
    • 1.2k views
  9. பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... "அப்பாவுக்கு முத்தம்" என நான் கெஞ்சும் தோரணையில் கேட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வைய…

    • 7 replies
    • 1.4k views
  10. கவிதை ஜெயபாலன் விமர்சனமும்.- Na Ve Arul . . மா கவிதை ***************** ஒரு கவிதை நமக்குள் என்ன செய்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது வாசகர்களாக இருக்கிற மிக முக்கியமான வரையறை, எது கலை என்கிற கேள்விக்கு கலை என்கிற தனது புத்தகத்தில் சொல்வார்… “ஒரு மனிதன் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதுதான் கலை. அது ஒருவனின் உண்மையான பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கிறது. ஒருவனின் மௌனச் செய்தியை மற்றவனுக்குத் தெரிவிக்கிறது. ஒருவனுடைய சுய துக்கங்களின் அனுபவத்தை இன்னொருவன் பெறும்படி செய்கிறது. ஒருவனுக்குரிய செல்வத்தை மற்றவனும் அனுபவிக்க உதவுகிறது.” இது கவிதைக்கு…

    • 0 replies
    • 930 views
  11. தமிழ்க் குரலில் வாரவாரம் வரும் பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது 02.08.2019 வெள்ளிப்பொழு 'கல்' எனும் தலைப்பில் சொற்களின் திருவிழா... பொன்.காந்தனுடன் தமிழகத்தில் இருந்து ஈழக்கவிஞர் சிவ.திவாகர் மற்றும் கவிஞர் செல்வா. 'மை' 16-08-2019 அன்று தமிழ்க் குரலில் ஒலிபரப்பாகிய பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது

  12. கடவுளின்_கைபேசி_எண்..? ஐந்துவேளை தொழும் முல்லாக்களே உங்கள் அல்லாவின் கைபேசி எண்ணைத் தாருங்களேன் என்னிடம் சில கேள்விகளுண்டு.. புனித இஸ்லாத்தின் பெயரில் பூவுலகெங்கும் நடக்கும் பயங்கரவாதங்களில் பொசுங்கிக் கருகும் பிஞ்சுக் குழந்தைகள் பெண்களின் கதறல்கள் உங்கள் காதுகளில் ஒருபோதும் விழுவதேயில்லையா..? அரை நூற்றாண்டு காலமாக ஒரு அந்திப் பொழுதுகூட அமைதியாகக் கண்ணுறங்க முடியாத காஷ்மீரத்து மக்களின் கண்ணீரைத் துடைக்க கருணையின் வடிவான உங்கள் கரங்கள் ஏன் ஒருபோதும் நீளவேயில்லை..? ஆறுகால பூஜை செய்யும் அம்பாளின் அர்ச்சகரே அம்பாளின் கைபேசி எண்ணைத் தாருங்களேன் அம்பாளிடம் ஒரு கேள்வி... ஆசிஃபா எனும் அப்பாவிக் குழந்தையை ஆறு …

    • 8 replies
    • 1.5k views
  13. காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள் காமக் கவிதைகளை எழுதி இந்த திரியை சற்றே பற்றவைப்போம் .... இது காமத்தீயால் பற்றி எரியட்டும்!! இறை துதி பாடல் தொடங்கி, இன்றைய கடை நிலை சினிமா பாடல்கள் வரை ஆங்காங்கே காதல், விரசம், காமம் போன்ற உணர்வுகள் அழகாக, அப்பட்டமாக படைக்கப்பட்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் சொல்லப்பட்ட காதல், காம விரச உணர்வுகளுக்கும் இப்போது வெளிவரும் ஹிப்பாப் தமிழா வகையறாக்களுக்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமை தான் என்ன? இப்போதும் மானே... தேனே... மரகத குயிலே , பூவே வண்டே, தேன் சொட்டும் இதழே, வாழை தண்டே, மாங்கனியே இப்படித்தான் ட்ரெண்டு இன்னும் இருக்கிறதா? இல்லை காலத்துக்கேட்ப தமிழ் கவிதை நயமும், சொற்களும் கூட மாறிவிட்டனவா என்பன போன்ற…

  14. "தட்டி வான்" ------------------- 'தட்டி வான்' எங்கள் ஊர் எல்லைகளை தொட்டுச் செல்லும் 'சிற்றி' வான் அச்சுவேலி தொடங்கி ஆவரங்கால் ஊடறுத்து 'குரும்பசிட்டி'க்கு கூடச் சென்று சில்லாலை, பண்டத்தரிப்பில் சிலிர்த்து நிற்கும் 'கொத்தியாலடி' ஆசுப்பத்திரிக்கும் 'கூத்தஞ்சிமா' சந்தைக்கும் அத்தனாசியாரின் 'சித்த' வைத்தியசாலைக்கும் சிறப்பான சேவை செய்யும் காலைப் பொழுது 'தெல்லிப்பளை'யில் 'கரிக்கோச்சி' இரயிலின் வருகைக்காய் 'படலை' ஓரம் பார்த்து நிற்கும் விவசாயிகளின் விளைச்சல்களை சலிக்காமல் சுமந்து செல்லும் இரயிலடி அம்மனையும் 'தவளக்கிரி'முத்துமாரியை…

    • 4 replies
    • 1.8k views
  15. Started by uthayakumar,

    • 0 replies
    • 729 views
  16. வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய தனித்தலைபவனின் காலடிகளைத் தொடரும் நாரைகளும் மௌனம் கலைத்தேதும் பேசவில்லை 02 …

    • 1 reply
    • 1.1k views
  17. முள்ளிவாய்க்கால் பாடல் – தீபச்செல்வன்… May 18, 2019 நிலத்தைக் கிளர்ந்து உருவியெடுத்த நிறம் வெளுத்த ஆடையினை உடுத்தி உக்கிக் கரையாத எலும்புக்கூடுகளுடன் பேசுமொரு தாயின் உடைந்த விரல்களில் பட்டன தடித்துறைந்த இறுதிச் சொற்கள் சொற்களை அடுக்கினாள் மலைபோல் கையசைத்து விடைபெற்றுக் களம் புகு நாளில் வெகுதூரம் சென்றுவிட்ட பிறகும் படலையிற் கிடந்து பார்த்திருந்தது போல் பறவைகளின் சிறகுகள் அஞ்சலி மலராய் சிதறிய மணல்வெளியிற்தான் இன்னமும் புரண்டு கிடக்கிறாள் இதே கரையிருந்தே சீருடைகளை களைந்து, கடல் வெளியில் போட்டான் கடலில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் அதை அணிந்து கீழே செல்ல வாயிற்குளிரு…

  18. எஞ்சியுள்ள நாட்களுக்குள் எங்கள் போராட்டமும் வாழ்வும் பற்றி எழுத உட்க்கார்ந்தால் துக்க தினமாகும். உள்ளமும் உயிரும் சோர்ந்து போகிறது. 2009 மே 19ல் இருந்து முயன்று ஆறு மாதங்களாக எழுத முயன்று இறுதியில் 2009 டிசம்பரில்தான் என்னால் “தோற்றுப் போனவர்களின் பாடல்” அஞ்சலியை எழுத முடிந்தது. மே 19 என்னைபோலவே பல லட்சம் மக்களை ஆழுமைகளை உடைத்து நிரந்தர விரக்தியுள் முடக்கிய கரிநாளாகும். இருக்கிற கொஞ்ச நாட்களில் நான் சில விடயங்களை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும் என நினைக்கும்போதெல்லாம் விரக்தியில் மனசு நொருங்கிப்போகிறது. வெளியில் இருந்து பார்கிறவர்கள் நினைக்கிறதுபோல வன்னியில் விவாதங்களேயற்ற சொல்வதைச் செய் என்கிற சூழல் எல்லா மட்டங்களிலும் நிலவியது என்பது உண்மையில்லை. முஸ்லிம்கள்…

    • 0 replies
    • 771 views
  19. வாழ்க்கை .................. தம்பிக்குக் கிரிக்கெட்மீது பைத்தியம் தனக்குப்பிடித்த நாடகத்தை தியாகம் செய்வாள் அக்கா ................. மகள் முள்ளை எடுக்கச் சிரமப்படுவாள் தலையை தான் எடுத்துவிட்டு வால் பகுதியை மகளுக்கு விட்டு வைப்பார் அப்பா ................... வளருகிற பெடியனுக்குச் சத்துத் தேவை கறியில் இருக்கும் தனக்குப்பிடித்த மீன் சினைகளை மகனுக்கு தெரிந்து எடுத்துக்கொடுப்பாள் அம்மா ........................... தங்கைக்குக் கல்யாணம் முடியட்டும் தன் காதலை கட்டுப்படுத்திக்கொள்வான் அண்ணன் .......................... அக்கா சொகுசாய் வாழவேண்டும் கடன்காரனாகிப்போவான் தம்பி ........................ அவள் நீண்டநாள…

    • 6 replies
    • 1.9k views
  20. Tribute to the profound personality who created Ariviyalnagar University Complex - தமிழை ஏந்திய திருமகனார் - தடங்களை வரிக்கும் பெருங்கவிதை! ******-*****-******-******-******-*****-****** தாயகத்துப் பயணத்திலே வழித்துணையாய் வாழ்ந்தவன் தலைமகனுக்கோர் அண்ணனாகி தனித்துவனாய் நின்றவன்!. கருத்தினிலே கண்ணியத்தை குருத்தினிலே கண்டதனால் உருத்துடனே உத்தமனின் உறவுமாகிக் கொண்டவன்! பெருத்தவோர் வங்கியை அழுத்தமாய் ஆண்டதால் பொருத்தமாய்ப் பொறுப்பினை விருத்தமாய்ப் பெற்றவன்! நிதித்துறை என்றவோர் நிகருயர் அலகினை மதிப்புடன் ஆண்டிடும் பொறுப்பினைப் பெற்றவன்!. இரண்டு பவுண் தங்கத்தினால் திரண்டு வந்த பங்களிப்பால் இருண்ட எங்கள் கிழக்கினுக்கோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.