Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் காதலி தமிழீழச்சி...... இளங்கவி -தமிழீழ காதல் காணாத இறைவனிடம் வரம் கேட்கும் பக்தன் போல் நீ காட்டா பார்வைக்காய் காத்திருந்தேன் சிலவருடம் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்....... பெண்களின் உதடை கொவ்வைப்பழமாக வர்ணிப்பார் உன் உதட்டின் நிறமோ கரு நாவல் பழம் போல இருந்தும் முத்தமிட மனமேங்கிடும் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்...... பெண்ணின் மார்பழகு மாங்கனிக்கு உவமைகொள்ள உந்தன் மார்பழகோ தென்னம் குரும்பட்டியாய் ஒழிந்துகொள்ள இருந்தாலும் ரசித்துக்கொள்வேன் காரணம் நீ தமிழீழச்சி என்பதால் நீ மறைந்திருக்கும் இதர அழகை வர்ணிக்க மனமேங்கிறது ஆனாலும் முடியவில்லை காரணம் நீ தமிழீழச்சி என்பதால் அதுதான் நம் தமிழீழத்தின் காதலின் சிற…

  2. Started by Manivasahan,

    பாரே உந்தன் இதயம் உள்ள பக்கம் கையை வைத்துப் பார் வீட்டை விதியை எண்ணித் தினமும் விழிகள் கலங்கும் எம்மைப் பார் தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத் தலையினில் கட்டியே விட்டவர் நீர் உரிமை இழந்த இனமாய் நாங்கள் உலகம் முழுதும் உழல்வதைப் பார் மழையில் பனியில் மாக்களைப் போல மருளும் தமிழர் நிலையைப் பார் மண்ணைப் பிடிக்கும் மனிதப் பேயாம் மஹிந்த செயலை அடக்கப் பார் ஆண்டாய் ஆண்டாய் வாழ்ந்த மண்ணை அராஜகர் பறித்த கொடுமையைப் பார் அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி அலைபவர் துயரைக் களையப் பார் காமுகர் வெறியால் ஆவியை இழந்து கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார் கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக் கருவியை எடுத்த காரணம் பார் பால்மணம் மாறாப் பாலகன் கூடப…

    • 4 replies
    • 1.4k views
  3. பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... "அப்பாவுக்கு முத்தம்" என நான் கெஞ்சும் தோரணையில் கேட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வைய…

    • 7 replies
    • 1.4k views
  4. சுட்டெரிக்கும் சூரியனையும் சுட்டெரித்துவிடும் எம் அடிவயிற்றுத் தீ புயற்காற்றையும் விடப் பெரியது உஷ்ணமான எம் பெருமூச்சு சமுத்திரங்களையும் சிறிதாக்கும் எம் கண்ணீரும் செந்நீரும் எம் நெஞ்சின் கொதிப்பு பூகம்பத்தின் நெருப்புக்குழம்பு கடவுளே கடவுளே என்ற எம் கதறல் மரண ஓலங்கள் நாம் விடும் சாபங்கள் இத்தனையும் காத்திருக்கு இனவெறி பிடித்தாடும் இலங்கை கொடுங்கோல் ஆட்சியாளரை தண்டிக்க; ஆனால்.......... அதற்கு எத்தனை காலமெடுக்குமோ கடவுள் நின்று கொல்லட்டும் நான் காத்திருக்கின்றேன் என் தலைவனின் பதிலுக்காய் உயிர்போன குழந்தைக்கு பாலூட்டும் ஒரு அன்னை உயிரற்ற குழந்தையை உயிருள்ள பிள்ளை போல் தோலில்போடும் ஒரு தந்தை உணவின்றி தூக்கமின்றி பதுங்குகுழிய…

    • 1 reply
    • 1.4k views
  5. “தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய கருணாநிதி ஸ்ரீமச்சாசனம் ஊர்வச சிரோபபிஷசேகரி…” இச்செப்பேடு செப்புவது யாதெனில், “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!” என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு விடாது கடிதமெழுதியதோடு, அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட மணித்துளியில் அன்ன ஆகாரம் உண்ண மறுத்து, ஈழத்தமிழர் செத்த பின்பு போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன் கருணாநிதிச் சோழனின் மற்ற கைங்கர்யங்களாவன: சோழநாடு சோறுடைத்ததைப் பின்னுக்குத் தள்ளி ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்! பகை முடித்தார்! வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு, மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி, மகப்பேறு உதவித்தொகை… …

    • 2 replies
    • 1.4k views
  6. புத்தர் பிறந்த நாளுக்கு இரத்தக் கறைகளுடன் அது இலங்கைக்கு வருகிறது… குஜராத் முஸ்லிம்களின் குருதி பருகிய கொம்பேறி மூக்கன் அது… காஷ்மீரின் கண்ணீரில் கண்மூடிக் குளிக்கின்ற கட்டுவிரியன் அது… இஸ்லாமிய விழுமியங்களில் இயன்றவரை நஞ்சுமிழும் இனவாத சர்ப்பம் அது… ஆர். எஸ். எஸ். தேள்களை அரவணைத்துப் போஷிக்கும் ஆபத்தான அரவம் அது… மனிதர்க்கன்றி இப்பாம்பு மாடுகளுக்குத்தான் மரியாதை செலுத்தும்… மூத்திரம் குடிக்குமிந்த மூடப் பாம்புக்கு மூத்திரம் கழுவிச் சுத்தமாயிருக்கும் முஸ்லிம்களின் மீதுதான் ஆத்திரம் எல்லாம்… இந்தப் பொல்லாத பாம்பின் மூச்சிலும் விஷமிருக்கும்… ஆதலால் மூடி வையுங்கள் ஜன்னல்களை!AkuranaToday.com | Read more http://www.akuranatoday…

  7. கார் கூந்தல் "டை"களின் இரசாயனத்தில் விளைவு காட்டி செம்மை அடிக்க.. காற்றில் பறக்கும் ஒற்றை முடியும் ஸ்ரெயிட்னர் சூட்டில் நிமிர்ந்து கம்பியாகிக் குத்த நிற்க.. கயல்கள் கண்ட விழிகள் பென்சில் மைகளின் படையெடுப்பால் கரிக்கட்டைகளாகி பயங்காட்டி நிற்க.. அப்பிள் கன்னங்கள் அள்ளிப் பூசும் வர்ணப் பவுடர்களின் சூறாவளியில் சிக்கி சிதைந்து சிவந்து நிற்க.. கொவ்வை இதழில் சுரந்த அமிர்தமும் லிப்ஸ்டிக் கலந்து அமிலமாகி அரித்து வடிய.. சந்திர நகங்கள் மின்னல் இழந்து ஸ்ரிக்கர் ஒட்டி குட்டை கண்ட உடலாய் அலங்கோலம் காட்ட.. வெள்ளிக் கொலுசு சிணுங்கிய இடத்தில் சிறைச்சாலை "ரக்"காய் ஏதோ இரத்தம் கண்டக் கட்டி இருக்க.. பிறை நுதல் தன்னில் முட்டி விழும்…

  8. Started by Kavallur Kanmani,

    கேள்வி ? நீ எந்த ஊர் என்று கேட்டனர் ஊரைச் சொன்னாள் ஊரில் எத்தனையாம் வட்டாரம் என்று கேட்டனர் இடத்தைச் சொன்னாள் எந்த வீதி என்று கேட்டனர் வழியைச் சொன்னாள் யார் மகள் என்று கேட்டனர் பெற்றவர் பெயர் சொன்னாள் அதன் பின் 'ஓ' 'நீ அந்த வாத்தியார் மகளா' என்று வாய் நிறையச் சிரித்தனர் அவளோ மனதுக்குள் அழுதாள் இத்தனை கேள்வி கேட்டது அவள் குலப் பெருமை அறிவதற்கு என்று புரிந்து கொண்டபோது அவளோடு அவர்களும் புலம் பெயர்க்கப் பட்டனர்.

  9. மன்னிப்பு என்பது .. ஏரோது மன்னன் தேடிய இயேசுவே எங்கே போகின்றீர் ? பாரிலே வாழ்ந்தவர் பாவிகள் தானய்யா தேவனே ஏகி நின்றீர் ! நீரோடை போலே நீர் சொன்ன வேதங்கள் நீர்க் குமிழ் ஆனதுவோ ? வேரோடு மானிடர் வீழ்ந்திட்டார் .. பாவத்தில் வேதனை தானதுவோ ? அன்புடன் நேசித்த அப்போஸ்தலன் இராயப்பன் அறியேன் .. என்றுரைத்தான் முப்பது வெள்ளிக் காசுகள் வேண்டி யூதாசும் முத்தமிட்டான் அன்றாடம் உம் நிழலில் அலைந்த இச் சீடர்கள் வென்றார்களா விதியை ? இறைவா .. எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்மை புரிந்து கொண்டேன் எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்ம…

    • 2 replies
    • 1.4k views
  10. தலையிடிக்கிறது இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக , தூக்கமாத்திரை இல்லாத இரவுகள் இனி இல்லாமல் போகுமோ ? பயமாய் இருக்கிறது ........ வாசிப்புக்காய் தலையணை அருகிருக்கும் புத்தகத்தை தொட்டால் , அறையெங்கும் ஓலமிடுகிறது _என்னால் கோர்க்க இயலாமல் போன சொற்கள் ௬ட்டம் ௬ட்டமாக , காதடைக்கும் ஒலி கடந்து ஒளியனைத்து விழி மூடினால் , ஏதேதோ படர்வுகள் இருளுள்ளே உதறவும் முடியாமல் உணரவும் முடியாமல் ........ அறுந்தறுந்து வரும்_அந்த நினைவுநிழல்கள் அனுங்கிக்கொண்டு தற்கொலை செய்கின்றன ..... எங்கும் சகிக்க முடியாத மயான எரிதலின் வாசம் பரவ கைகளால் இறுக்கிக்கொள்கிறேன் தலையை , நிலவும் நீள் நிசப்தத்தில் அந்தரங்கமாய் அழுதுமுடிகையில் அநாதரவாய் அந்தரத்…

  11. Started by அஞ்சரன்,

    கானகம் வயல் வெளி நடந்து காரிருளில் கந்தகம் சுமந்து இளமை துறந்து கல்வி துறந்து வாழ்வின் வசந்தங்கள் தூக்கி தூரபோட்டு என் மண் என் மக்கள் என சுவாசித்து என் தலைவனை உயிரிலும் மேலாய் விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு தோழர்களுடன் சேர்ந்து பயணித்து மீண்டு வரும்போது அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து வலி சுமந்து இளைப்பாறும் போது விடுதலை தீக்கு ஒரு சுள்ளி ஏனும் முறித்து போடாதவர் எம்மை நிக்க வைத்து கேள்வி கேட்கிறார் நீ யார் எதுக்கு சாகவில்லை எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா முன்னமே வந்ததால் போராளிகள் நாங்கள் முட்டாள் தனமா கடைசியா வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள் தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க …

  12. ஈழத்தின் போர்க்கோலம் வண்டியில் பூட்டிய மாடுகள் முதுகு நிமிர்த்தி நம்பிக்கையோடுதான் நடக்கிறது அகப்பட்டதை ஏற்றிய கைகளும் கால்களும் வலிகளோடுதான் மிதக்கிறது குண்டு சுமந்து வரும் வானூர்தி நெஞ்சைக் கிழிக்கிறது நெடுநாள் எரியும் நெருப்பில் பிஞ்சைப் புதைக்கிறது பதினைந்தைக் கடக்காத பருவத்தின் கனவுகள் பறித்து வன்னிக் காட்டின் நடுவிலே வான் குண்டு குருதிக் கோலம் போடும் ஆசை ஆசையாய்க் கட்டிய வீடுகள் எல்லாம் முகமிழந்து... முகவரியிழந்து... அழிந்து போய்க் கிடக்க ஆச்சியின் புலம்பல் கேட்கும் பாடசாலைக்குப் போன பிள்ளை பாதி வழியிலே... தாய்மண்ணை அணைத்தபடி இரத்தச் சகதிக்குள் விழிகள் திறந்தபடி இழவு வீட்டின் குரல்கள்கூட இல…

  13. யாழில் செய்தி பார்த்தேன் பியர் உடலுக்கு நல்லது பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4 தற்பால்சேர்க்கை சாத்திரியின் கொலைவெறி அடுத்த பிறவியில் பூனையாகப்பிறப்போம் காணாமல் போகின்றோம் 2012 இல் காணாமல்தான் போவோம்.

    • 5 replies
    • 1.4k views
  14. பெண் என்னும் பூகம்பம் துணிவிருந்தால் துயர் அகலும். எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும். ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால் சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை. போராளியான பெண் ஆணுக்கு நிகராக அனைத்திலும் மிளிர்கிறாள்;. அல்லாதவள்... அன்றாட அல்லல் மீள அல்லும்,பகலும் அவதியுறுகிறாள். புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள் பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம் சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும் புதையுண்டு கிடக்கிறோமே..... வேண்டாமென்று சொல்லவில்லை வீறு கொண்டெழுந்து..... வேகும் விதியோடு வாழ்விற்கேங்கும் எங்கள் சோதரிகள் கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே. அன்னையமும் அதை மே…

  15. [size=5]ஒரு கோப்பை தேநீர்... [/size] மண்புழுவினும் அதிகமாக மண்ணில் நாங்கள் உழன்றதால் எங்கள் சதைப் பிண்டங்கள் நீங்கள் வளர்க்கும் தேயிலைக்கு உரமானது. செழித்து வளர்ந்ததால் சந்தோசமாயிருந்தீர்கள்... அட்டை உறிஞ்சியது போக மிச்சமுள்ள எங்கள் குருதியேறி செம்மண் இன்னும் சிவப்பானது. மண்ணின் நிறமும் அதனால் தேயிலையின் தரமும் சேர்ந்து உயர்ந்ததையெண்ணி கர்வமடைந்தீர்கள்... உடல்சோர்வு நீங்க நீங்கள் பருகும் தேநீர் எங்கள் வியர்வையில் குளித்து வளர்ந்ததால் கொஞ்சம் உவர்ப்பாயிருந்தது. பருகுவது எங்கள் குருதியில் வளர்ந்த வியர்வையாதலால் புதுசுவையென இன்னும் இன்னும் அதிகம் பருகுனீர்கள்... அப்படியே உங்கள் பதிவேட்டில் எங்கள் எல்லோரது ப…

  16. பெயரிடப்படாதது இதோபார் நாம் இப்போ கீழொதிங்கி நிற்கும் இம்மரத்தின் பெயரை நானறியேன் இலைகளிலிருந்து வழிந்தோடும் மழைத்துளிகள் மட்டுமே எனக்குப் பரிச்சயமானவை மழைத்துளிகளுக்குப் பெயரிடாமலே மனம் அவற்றுடன் பரிச்சயமடையவில்லையா வசந்தகாலப் பசுமையைத் தாங்கும் மரங்களின் பெயர்களை அறிந்திருந்த ஒரு காலமமிருந்தது கலவிக்கழைக்கப் பாட்டிசைக்கும் பறவைகளின் நாமங்களும் பரிச்சயமாகவிருந்தன இலையசையும் திசைகொண்டு காற்றிற்கு நாமமிடும் திறனிருந்தது அப்போ பூமி உருண்டையானதென அறிந்திருந்தபோதும் தட்டையான ஒரு நிலத்துண்டம் மாத்திரமே உணர்திறனுக்குள் அகப்பட்:டுக்கிடந்தது தட்டையான உலகம் அர்த்தமுள்ளதாக இருந்தது இதோபார் பின்னர் வலங்கள் பலவற்றைக் கடந்த…

    • 4 replies
    • 1.4k views
  17. தேன் சிந்துதே வானம்........... இரவல் ஒளியெடுத்து இரவில் ஒளிஉமிழும் அழகில் மயங்க வைக்கும் ஒற்றைத் திங்கள் வளையில் ஒளித்திருந்து வாகாய் படம் பிடித்து வளைய வரும் எட்டுக் காலில் நண்டு காற்றடிக்கும் திசைகளெங்கும் காலாற நடைபயின்று பூப்பந்தாய் உருண்டு வரும் இராவணனின் மீசை வெள்ளி நிலா விளக்கேற்ற வீச்சுவலை இழுத்து வரும் கடலோரக் கவிதைகளாய் கட்டுமரம் சோளகத்தில் மோதிவரும் சுழற்காற்றில் தலையாட்டி தாளலயம் தப்பாத தென்னம்பிள்ளை வானக் குடைபிடிக்க வண்ணமலர் சிரிக்க சோலையிலே இசைபாடும் கானக் குயில் வாடைக் காற்றுரச வயல்களிலே கதிருரச பூமணத்தை சுமந்து வரும் காலைத் தென்றல் காலைப் பனித் துளியில் மேனி தனைத் துவட்டி தளுக்காகச் சிரிக்கின்ற செம்பருத்தி ஆத வன் எழும்பு முன்பு அடிவானம் சிவக்கு முன்பு ம…

  18. சின்ன சின்ன கவி சொல்ல வந்தேன் வெண்ணிலாவே உன் வெண்னையினால் என் உயிர் சிதைந்தது வெண்ணிலாவே நட்ச்சத்திரங்கள் உன்னைப்பார்த்து கண்சிமிட்டுது வெண்ணிலாவே அந்த கண்சிமிட்டை எப்படித்தான் தாங்குறாயோ வெண்ணிலாவே பொறாமை கொண்ட கருமுகில்கள் உன்னை மறைக்கிறது வெண்ணிலாவே கருமுகில்கள் மறைக்கும்போதுதான் உன் உடையை மாத்துகிறாயா சொல்லு வெண்ணிலாவே வாணில் உள்ள வால் வெள்ளிகள்தான் வெண்ணிலாவே உனக்கு காதல் தூது செய்கின்றதா சொல்லு வெண்ணிலாவே உயிரோடு உயிர் சேர்ந்தால்த்தான் காதல் வெண்ணிலாவே காதலிலே தோல்வியுற்றால் மரணம் தானா பதில் சொல்லு வெண்ணிலாவே

  19. ஊர்கள் இழந்து உறவுகள் மறந்து உயிர்கள் சுமந்த உடல்கள் முகங்கள் அழிந்து தமிழை மறந்து கால்கள் போன தேசம் கண்கள் கலங்கி நெஞ்சம் உருகி வெடிக்குது ஈர இதயம் பந்தம் அறுந்து சொந்தம் விலகி கிளைகள் விழ்ந்த விருட்சம் இறக்கைகளின்றி பறக்க துடிக்கும் பாசம் என்னும் வேகம் உள்ளம் உருகி வெள்ளம் பெருகி ஓடட்டும் ஊற்றாய் நினைவுகள் யாவும் நிழலாய்த் தொடரும் நீங்கிடது உங்கள் உறவு

  20. அடங்காநா வாய்பேசில் இவர்சொல்கொடு வாளெனெவே வீசும்புலவர் தொடங்காப்பா போற்பொய் யாகும்வீணே நீபார் வந்தபயன் பொருள்: உனது நாவை அடக்கமுடியவில்லை எனில் பேசற்க, இல்லையேல் நீ கூறும் சொற்கள் கொடிய வாள் வீச்சுக்கே ஒப்பானது. ஆதலால் நீ இந்த பூமியில் வந்து பிறந்ததன் பயன் ஒரு புலவனின் இயற்றப்படாத பாடல் போன்று பொய்யாகிப்போகும்.

    • 5 replies
    • 1.4k views
  21. வறுமை எல்லோருக்கும் பொதுமை ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனு…

  22. கிழிந்தது முகத்திரை குனிந்தது பாரதம் ! முதுகினிலே குத்துகின்றாள் பாரதத்தாய் வெட்கித்துக் குனிகிறது எம் தலையும் வேடமிட்டு ஆடுவது போதும் போதும் வெட்கமற்ற பாரதமாய் போனதும் ஏனோ ! பக்கத்தில் இருந்தபடி எமை அழிக்க படைக் கருவி முதலோடு ஆளணியும் கொடுத்தல்லோ கொல்கின்றாய் எம்மை நீயும் தடுப்பதற்கு விண்ணப்பம் உன்னிடமா ! கொலைக் கருவி பணமென்று கொடுத்தவாறு எமைக் கொல்வதற்காய் உன் படைகளையும் அனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் பாரதத்தின் வஞ்கமே உருவான நரியின் அழகே அழகு ! வார்த்தையிலே நஞ்சமர்ந்த வடிவம் கொண்டே பேச்சிலேதான் தீர்வென்று ஏனோ நீயும் பசப்புவதேன் பாரதத்தின் ஆட்சியரே கிழிந்ததுன் முகத்திரையும் குனிந்தாய் நீயே ! பெருமைகொள் பாரதத்தின் பெருமை …

  23. சின்ன வயசு எனக்கு அதைவிட சின்ன வயசு உனக்கு மீசை எனக்கும் ஆசை உனக்கும் வராத காலம் அதுவும் பசுமையான காலம் புத்தகங்களை சுமக்க இயலாத வயதில் உன்னை மட்டும் சுமந்ததில் சுகம் எனக்கு நாம் கை பிடித்து பொடி நடை போடுவதற்காகவே நம் பள்ளி வரவை அதிகரித்தோம் ஒரே விட்டில் வாழ்ந்தாலும் ஒரு வார்த்தை பேசிய‌தில்லை ப‌ய‌த்தால் நானும் வெக்கத்தால் நீயும் ஊமையாய் ஊன‌மாய் வாழ்ந்தோம் இதில்தான் உண்டான‌து என‌க்கும் உன‌க்குமான‌ உற‌வு உன்னில் விழிக்க‌ வேண்டும் என்றே தின‌மும் தூங்க‌ போவேன் நான் அத‌ற்காக‌ நீ அதிகாலை என‌க்கு முன் விழிப்பாய் உன்னில் விழிக்காமல் என்றாவது என் தூக்கம் கலைந்ததுண்டா பள்ளியில் விழுந்த‌ எறிக‌ணை என் உயிரை ப‌றித்…

  24. நாய் நாய் என்று பலர் ஏசியும் வெக்கம் கெட்டு உங்கள் வாயிலோரம் அலைகிறேன் என்று கீழ் தரமாய் எண்ணாதீர்.. நான் உங்களைப் போல் நன்றி மறப்பவனில்லை... இப்படிக்கு.. நன்றியுடன்... நாய்

    • 6 replies
    • 1.4k views
  25. விழித்துக்கொண்ட முல்லை. பற்றிப் படர்ந்தேறக் கொம்பற்ற வயலோரம் முளைத்ததனால் முல்லை தனக்கு வெறும் புல்லே போதுமெனத் தானும் படர்ந்திருந்த வேளையில்தான் அவ்வழியால் பாரிமன்னன் பவனிவந்தான் பரிவாரம் சூழத் தேரேறிப் பவனிவந்த வேந்தன் பாதையோரம் கொம்பற்றுத் துவண்ட கொடிகண்டான்;. என்னேயிது நீதியிங்கு ஏற்றம் பெறக்கொம்பிலா வாழ்வுற்தோ முல்லைக்கென நெகிழ்ந்தான். பின் தேரிறங்கி முல்லையிடம் சென்று 'சின்னஞ் சிறு கொடியே, உன் விதி கண்டு மனம் நொந்தேன் யான்" என உரைத்தான். "என்னேயுன் பெருமை மன்னா, சின்னஞ்சிறு கொடிக்காய் நீ உளம் நெகிழ்ந்தாய் கண்டேன் போதுமதுவெனக்குப்போதும் புற்களுடன் வாழ்வேன் இனியான் போய் வருக" என நன்றியுடன் நயம்படச் செப்பியது செடி…

    • 4 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.