Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முள்ளிவாய்க்கால் காற்றிடை வாழும் உயிர் பேசியது.. உலோகத் துகள்களிடை உடல் துகள்களாகி சிதறி நிற்க காற்றுக் கூட அவதிப் பட்டது அகதியாகி சன்னங்களிடை தன் இடம் பிடிக்க. இட நெருக்கடியில் உயிர்கள் உரசிக் கொண்டன செல்லுமிடம் சொர்க்கமோ நரகமோ திசைகள் தெரியாமல் சன்னங்களில் அவை படுத்துறங்கின. ஊழியக் காலமோ கலி காலமோ அல்ல அல்ல.. தமிழர் அழிப்புக் காலமாய் அது நிகழ்ந்து கொண்டிருந்தது..! சாத்திரங்கள் பொய்த்து வீழ்ந்தன சதா மரண ஓலங்கள் உலகை ஆளும் அலைகளின் ஊளைகளை தாண்ட வழியின்றி களைத்தே மெளனித்தன. உலக மானுட மனச்சாட்சி கண்ணை மூடி மூச்சிழுத்துக் கிடந்தது...! மீண்டும்.. காற்றிடை வாழும் உயிர் பேசிக் கொண்டது.. அந்தக் கொடுமையின் தாண்டவம் கண்டு ஆண்டுகள் …

  2. காற்றின் காத்திருப்பு பிணவறையின் மருந்து நெடி நடுவே அந்த உடல் ஆண் என்பது தவிர வேறெதுவும் தெரியவில்லை முகத்தைத் தேடினேன் கைகளைத் தேடினேன் நெஞ்சுக் கூட்டுக்குள் நினைவெதுவும் மீந்திருந்தால் கொண்டுசெல்லக் குனிந்து தேடினேன் காட்சியின் கொடூரம் மூச்சை அடைத்தது கால்கள் நடுங்கிற்று முத்துக்குமார் அவன் பெயர் என்றார்கள். அவனைத் தின்ற நெருப்பு எங்கிருந்து வந்தது? கூராய்வுச் சோதனையில் கண்டறிய முடியாது. இப்போது அது எங்கே போனது? ஒற்றர்கள் முயன்றாலும் அதன் தடயம் தெரியாது. கண்ணீர் வரவில்லை கதறல் எழவில்லை சொல்லிப் புலம்ப ஒரு சொல்லும் கிடைக்கவில்லை வெளியே வந்தேன் கூடியிருந்தனர் இளைஞர் பலபேர் கண்களில் கோபம் கைகளில் நடு…

  3. [size=3][size=4]உலகின் எந்த ஒரு இனமும்[/size][/size] [size=3][size=4]கருணைக்காக இவ்வளவு காலமும் ஏங்கி இருக்காது . உலகின் எந்த ஒரு இனமும் சுதந்திரத்திற்காக இவ்வளவு வாதைகளை தாங்கியிருக்காது.[/size] [/size] [size=3]உலகின் எந்த ஒரு இனமும் வாழ்தலின் பொருட்டு இவ்வளவு இழப்புகளை எதிர்கொண்டிருக்காது. [size=4]உலகின் எந்த ஒரு இனமும் சர்வதேசத்தால் இவ்வளவு தூரம் புறக்கணிக்கப் பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் தன் இனத்துரோகிகளால் இவ்வளவு அபத்தமாக காட்டிக் கொடுக்கப்பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் இறையாண்மையின் பெயரால் இவ்வளவு கொடூரமாக கொன்றொழிக்கப் பட்டிருக்காது. . பக்கத்தை வெளியிடு உலகின் எந்த …

  4. நா பிளந்து உமிழ்நீர் வறண்டு செல்லரித்து மூச்சடங்கிபோன எங்கள் குரல்வளைகளில் ஆழ்துளைக் குழாய் பதிந்து எதை தேடுகிறீர்? விடுதலை ஒன்றையே நேசித்து கந்தக காற்றை சுவாசித்து நெடியேறி வெடிக்கத் துடிக்கும் நுரையிரலை கவனமாக கையாளுங்கள்... போரியல் நெறியும் வாழ்வியல் பண்பும் வகுத்த தலைவன் வழிவந்த இதயத்தை மாற்றியும் அறுவைசிகிச்சை செய்து விடாதீர் ஞானம் பிறந்துவிடும் புத்தருக்கு... இன்னும் கிடைக்கவில்லையா தேடும் பொருள்? காத்திருத்தலையும் உடனடி கீழ்படிதலையும் கற்பிக்கும் பசியை துறந்து காடுகளில் அலைந்து திரிந்து சிறுகுடலாய் போன பெருங்குடல் உங்கள் கறிக்கு உதவாது.... இன்னும் சில பாகங்கள் காத்திருக்கின்றன நகங்களில் கிழிபட... ஈழ…

  5. காற்று திசை மாறும்-நம் கண்ணீர் மறைந்துவிடும் நீர் ஊற்றும் பிணங்கள் வீழ்ந்தழுகும் அழும் பெருஞ் சாலைகளும் எரிந்த தோப்புகளும் கூரையிழந்த சுவர்களும் சாம்பல் பூத்த திண்ணைகளும் தலைதுறந்த தென்னைகளும் பனைகளும் சிரிப்பொலி மறந்துபோன செந்நீர் காயாத வன்னி மண்ணும் பழையநிலை காணக் காலம் சேரும் காற்று திசை மாறும் ஆடும் மாடும் கோழியும் குஞ்சுமென வாழ்ந்து பழகிவிட்டு பதுங்குகுழிகளுக்குள்ளும் எல்லாம்மறந்து பதறிக்கிடந்து..கதறிக்கிடந்து உறவையும் உயிரையும் கொஞ்சம் கொஞசமாயும்.. கூட்டம்கூட்டமாயும்..சிங்கள இனவெறியருக்குப்பறி கொடுத்து வாழ்வை வெறுத்துப்போன.. உலகையும் உள்ளமெலாம்தொழும் இறைவனையும் சபித்துக்கொள்ளும்.. ஈழத்தமிழனுக்காய்..நல்ல இதயங்கொண…

  6. தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்…

  7. முப்பது வருஷங்களாய்த் தெரியும் அவளை, ஒரு வினாடிகூட எனைவிட்டுப் பிரியாதவள்! எங்கெல்லாமோ எனை இழுத்துச் சென்றவள்... இப்பொழுதும், ஒரு கேள்விக்குறியின்மேல் என்னை உட்கார வைத்திருக்கின்றாள்!? என் வாழ்க்கையைச் சுற்றவிட்டு முடிச்சவிழ்ப்பதில்.. அவளுக்குக் கொள்ளைப் பிரியம்! அவளுக்கென்ன... அவளது சுவாரஸ்யத்துக்காக சுவாசிப்பது நானல்லவா? சுமைகளைச் சுமப்பதும் நானல்லவா? அவளுக்கெங்கே தெரியப்போகிறது... அவளோடு கூடவே வாழ்வதின் கஷ்டம்! நான் சிறுகுழந்தையாய் இருந்தபோதில்... இனிமையாகத்தானே இருந்தாள்! எப்படி மாறினாள் என்று... எனக்கே தெரியவில்லை!? இன்றல்லாது... என்றாவது ஒருநாள், இவளது தொல்லை இல்லாமற் போகும்! அப்பொழுது என் சுவாசமும் அவள் கூடவே செல்லும் -பழகிய பாவத்திற்காக!

  8. இன்றென்ன..! ஆண்டு பல கடந்தும் அடியோடு மறந்திருந்தும்..? எப்படி எங்கிருந்து என்னறிவுக் கெட்டாமல் விரல் வழியாய்த் தாளில் விழுந்தாய்!, ஒரு வேளை நீ கூட என்னை நினைத் தாயோ? எதுவேனும்.. என் புலனுக்கறியாமல் தாள் மீது ஒரு கவியாய் விழுந்த உன் பெயர் வியப்பூற உயிர் பெற்று விம்பமாய் என் முன்னெழவும் உன் வாசம் நாசிதனில் ஏறிப் புரக்கடித்து கண்ணோரம் ஆசைக் கனவாக வழிகிறது வாழ் கனவே..! கால நதிக்கரையில் நாம் நடந்த காற் தடத்தை ஆண்டுகளின் ஆற்றோட்டம் அரித்தாலும் எஞ்சியுள்ள சுவட்டுக் கரைக் குருதிச் சுற்றோட்ட வெப்பமென்னில் இறக்கும் வரை வாழ்வாய் என் காலம் கடந்தவளே.. திரு.திருக்குமரன்

  9. காலம் உலர்த்த மறந்த நீர் விரல்களில் ஒட்டிக் கொண்டது தன்னிலை பகிராமல்.. வலிந்த வெப்ப இழப்பினை உருவாக்கி, திரட்டத் தொடங்கியது ஆதிச் சிதைவுகளை, ஈமத்தாழிகளையும் வண்டல் படுகைகளையும் கிளறி, சூரிய நட்சத்திரங்களுடனும் கனியாத கருமேகங்களுடனும் உறவாடி, காற்றில் நெருப்பில் உப்பு நீரில் நுகர்ந்தும் எரிந்தும் மூழ்கியும், இழந்துபோன ஈரலிப்பை தேடி அலைந்தது.. வழியெங்கும்.. வர்ணக் கலவைகளாலும் நறுமணப் பூச்சுகளாலும் தரவேற்றிக் கலையாடிக்கொண்டிருந்தன சில. அதீத மோகத்துடன் காலத்தை கலவி செய்து கொண்டிருந்தன சில. ஆதியின் அன்புப் போர்வைக்குள் சிக்கிப் பிணமாய் கிடந்தன சில. இன்னும் சில கௌரவ வெற்றிடங்களில் எதிரோலியோடு மோதிச் சாவடைந்து கிடந்தன. …

  10. தூல உடல் துறந்தோரின்.... ஆலயமழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். இது கார்த்திகை மாதம் பூவேந்தி எம் புதல்வரின் பொன்முகம் காணும் காலம் மண்மடியில் குடிபுகுந்த புனிதர்களைப் புதுக்குவித்து, எண்சாண் மெய்சிலிர்த்தெம் உயிர் உருகும் நேரம். காலப்பெருவெளியில் ஈழக்கதை எழுதிய இளவேணில்கள் - தம் உறவுகளைக் காணக்காத்திருக்கும் திருமாதம். தூல உடல் துறந்தோரின் ஆலயம் அழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். ஈனமா… இனத்திற்கா… இன்னுயிரை ஈந்தோமென தோழ ஆத்மாக்கள் தொய்தொடுங்கக்கூடாது. ஆழத்தாய்மடியின் அணைப்பிற்குள் இருக்கும் எங்கள் காலப்புதல்வர் கண்கலங்கக்கூடாது. ஞாலப் பரப்புகளில்……. உறவுகளே! காலச்சி…

    • 12 replies
    • 1.8k views
  11. காலங்கள் கடந்தன தான் எனினும் கடந்து வந்த பாதைகளின் கால்த்தடங்களின் வடுக்கள் இன்னும் மனதில் அடையாளமாய் எத்தனையோ எண்ணங்கள் சுமந்து எதிர்க்க முடியாத எதிர்பார்ப்புக்களுடன் இறுமாப்புக்களும் கடந்து கடத்த முடியாத நாட்களுடன் கனவுகளின் கட்டவிழ்ப்புக்களும் கரை காணா மொட்டவிழ்தல்களுமாய் முகைவெடித்து மணம் பரப்பி முற்றிலும் முடிவற்றதாய் வாழ்வு வானம் அளாவி வால்நட்சத்திரங்களாய் எதிர்காலத்தின் எண்ணிக்கையோடு ஏகாந்தத்தின் எல்லைகளற்று எப்போதும் எதிர்வு கூறல்களோடாய் எப்படியோ கடந்து வந்த காலத்தின் கருப்பும் வெள்ளையுமான பக்கங்கள் கண்ணில் அப்பப்போ தெரிகின்றது காட்சிப் பிழைகளின்றி கனவுகளில் எதிர்க்க முடியா ஏக்கங்கள் இன்னும் இருக்கின்றன என்னுடனே எப்போதாகில…

  12. எம் கண்ணுணர முடியாத கண்மணிப்பூக்களே! ஏனிந்த மௌனம்? இன்னும்…. கார்த்திகை மலரவில்லை காண்டாமணி ஒலிக்கவில்லை புன்னகை பூக்கவைக்கும் பேச்சொலியும் கேட்கவில்லை பார்த்தொருகால் வந்தெமக்கு….. பூத்தமுகம் காட்டுதற்கு புனிதர்கள் இன்னும் எழவில்லை. ஏனோ பெரு மௌனம்!!!!! காலதேவரே!....... இதுவென்ன கண்ணாமூஞ்சி விளையாட்டு கபாடக் கதவங்களின் தாழ் திறக்கும் ஓசைகூட மானசீகச் செவிகளின் மன்றம் வந்து சேரவில்லை ஐம்புலனை சிறிதடக்கில் - உம் அருவுருவின் சலசலப்பு ஆன்மாவுக்குக் கேட்கும் இப்போது, ஆயத்த ஆரவாரமும் அருவுருவில் உணரவில்லை சலசலப்புச் சத்தமும் செவிப்புலனுக்கெட்டவில்லை காலதேவர்களே உம் மூச்சின் வெம்மை இன்னும் என் காதோரம் பரவவ…

  13. வேறு ஒரு இணையத்தளத்தில் வெளியான என் கவிதை ஒன்றை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன் . நன்றி http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/114942/

  14. சித்திரையில் கதிரோன் சிரித்திடுவான் நாளும் என எண் திசையும் விழி வைத்து எதிர் நோக்கிக் காத்திருந்தால் பெண்ணவள் நாளும் விழி உடைத்து பெய்திடும் கண்ணீர் போல் மூக்கை சிந்தி வான மகள் முகம் கறுத்துக் கிடக்கிறாள் புவி பூப்பெய்தும் காலமதில் - பனி பூத்து சொரியுது இங்கு காலம் தப்பி காலம் மாறி காலாகாலமா இருந்த கால நிலை மாறுவது காலத்தின் கோலமன்றோ... #ஈழத்துப்பித்தன் 26.04.2016

    • 3 replies
    • 743 views
  15. [size=4]காலன் கூடக் கண்ணீர் விட்ட நாள்![/size] [size=4]கனவுகள் தொலைந்து போன நாள்! கரம் தூக்கிய மனிதக் கூடுகளைக்,,. காந்தீயம்,கழுவிலேற்றிய கரி நாள்! நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம், நடு முதுகில் கத்தி ஏற்றிய நாள்! நம்பிக்கை ஊட்டியவர்கள் எல்லாம், நரிகளாக மாறிவிட்ட நாள்! உலகத் தமிழர்களின் இதயங்கள், ஊமைக் கண்ணீர் வடித்த நாள்! உலகத் தலைவர்களின் காலடிகளில், ஈழத் தமிழன் விழுந்து கெஞ்சிய நாள்! கையிழந்தும், காலிழந்தும், கட்டியணைத்த துணையிழந்தும், கருக் குழந்தைகளின் தொப்புள்கொடிகள், துண்டிக்கப் பட்டதொரு கரிநாள்! கரம் கூப்பி நான் தொழுத தெய்வங்களும், காவடியேந்தி நேர்த்தி வைத்த தேவதைகளும்…

  16. காலத்தை வென்ற கவிஞன் விடுதலை நெருப்பில் குரல் எழுப்பிய புலவன் மலர்ந்தநாள். சுதந்திர சிறகடிற்பிற்காய் இயந்திரமாய் எழுதிய கவிஞன் மண்ணைப்பாட பிறந்தநாள். இவன் விற்பனை கவிஞனும் அல்ல கற்பனை கவிஞனும் அல்ல காலநதியில் கரைந்து போன கவிஞனும் அல்ல கூவி வந்த கந்தக துகள்களுக்குள்ளும் சாவு விழுந்த வலிகளுக்குள்ளும் மூசி மூசி வீசிய புயல்காற்று. இவன் காலத்தை வென்ற கவிஞன் ஈழயாகத்தை தமிழால் வளர்த்த அறிஞன் யாருக்கும் கொள்கையை விற்கா வியாசகன் யாதுக்கள் நிகழ்த்திய யாதனைகளை பாடிய பாவலன் தேசியத்தலைவனின் அண்ணனாய் மணணை நேசித்த சந்திரிகை. எப்படி ஜயா உமை மறப்போம் நீ பாடித்திரிந்த திசையை தேடிப்பார்க்கிறோம். விடியவில்லை விடுதலைராகம் கேட்கவில்லை மாறக நாற்…

  17. நாமொன்று நினைக்க தெய்வம் தானொன்று நினைக்கிறது !! எமக்கும், தமிழ் இனத்துக்கும் தலைவனாக தாயாக நண்பனாக சிறந்த வழிகாட்டியாக இருந்த உத்தமனே உலகத்தமிழரின் சூரியப்புதல்வனே எமை விட்டு எங்கு சென்றாய் ? உனக்கு நிகர் இவ்வுலகில் யாருமே இல்லார் என்று எண்ணியோ உலகமே திரண்டு உன்னை கொன்றோளித்ததொவோ ! மாவீரர் அழிவதில்லை, அவர்கள் காலத்தால் அழியாதவர்கள் என்று எமக்கு கற்று தந்தவன் நீ வருடந்தோறும் நவம்பர் 27 இல் அவர்களுக்கு நீ சுடர் ஏற்றிய பின்பே நாமும் எமது அக வணக்கத்தை செலுத்தினோம் இன்று எமை விட்டு பெரும் பயணம் ஏன் தொடர்ந்தாய்? நீ இன்னமும் எம்முடன் வாழ்வதனாலோ நீ சாகா வரம் பெற்றவன் ஆம் நீ ஒவ்வொருவரினதும் உள்ளத்திலும் அவரவர் இல்லத்தி…

    • 4 replies
    • 1.1k views
  18. காலநதியின் வேகமென்ன? பனிக்காலக் காலைப்பொழுது பகலவன் இல்லாமலேயே விடிந்தது வழக்கம்போல, இறக்கைகளற்ற கடிகாரப்பறவை சிறகடித்துப் பறக்க காலக் கண்ணாடியில் என் முகம் பார்க்க முயன்றேன் கண்ணுக்குள் கலைந்திட்ட பல நூறு கனவுகள் நினைவுத் திரையில் நிழற்படமாய் காட்சிகள் மணித்துளிக்குள் கூவின எத்தனையோ மனக்குயில்கள் அருகே'அம்மா"என்ற அழைப்பொலி பக்கத்தே பள்ளிச் சீருடையில் என் பருவ மகள் என் நினைவப் புத்தகத்தின் பக்கங்கள் படபடக்க பள்ளிச் சீருடையில் துள்ளும் இளமையுடன் நான் அந்த மின்சாரக் கனவை மெல்ல உதறிவிட்டு பக்கத்தில் நிற்கும் பதினாறு வயதுப் பருவப் பெண்ணை நோக்கினேன் ஓ....நாளை இவளும் என்னைப் போல..... வீதிக் கடவையில் விசிலடிக்கும் மின்ச…

  19. அப்பிக்கிடக்கும் அந்தகாரம் துடைத்து கசியும் நிலவொளி துருவேறிய கம்பிகளை கடந்து கரடுமுரடான பழுப்பேறிய சுவர்களில் திட்டுதிட்டாய் விழுகிறது காய்ந்த உதிரச் சிதறல்கள் உயிர்வற்றிய ஓவியங்களாய் பயமுறுத்துகிறது. இரவின் நிசப்தம் உடைகிறது கூட்டத்தைப் பிரிந்து தனியனாகிப்போன குட்டியானையொன்றின் பிளிறலைப்போல் அருகிலோர் அறையில் அலறி அடங்கிப்போகிறது அந்தரித்த ஒரு தமிழ்க்குரல் அடிவயிற்றைப் பிழிகிறது பயம் அடுத்தது நானாகவும் இருக்கலாம் கடந்த விசாரணையின் காயங்களே காயவில்லை உதிரம் கலந்து ஒழுகிறது சலம் பிளாஸ்ரிக்குழாய் செருகப்பட்ட மலவாயிலில் மரணவேதனை நகம் பிடுங்கப்பட்ட விரல்களில் இலையான்கள் இருக்க எத்தனிக்கிறது. இன்னமும் நான் இருக்கி…

  20. காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....! ஆளரவம் தொலைத்த அடர் வனங்கள் அன்றைக்கு மௌனித்து மயானம் பூண்டு ஆட்களற்றுப் போனது. ஆழகான புற்தரைகளின் பச்சையம் ஆட்களற்றுத் தனித்த பனித்துளியின் ஈரம் குருதித் துளியாகிக் காயத் தொடங்கியது. நீங்களும் வெடியாகி இடியாகி வெளியில் வராத ஒளியாகிப் போனீரென்றுதான் காலமழுதது. எனினும் போரின் கறைகள் காயாமல் கண்ணீரின் ஈரம் தோயாமல் நீங்களெல்லாம் வனமளப்பதான வதந்திகளையெல்லாம் மௌனங்கள் காடேற்றிக் கடந்தது காலநதி. உங்கள் நிழலைக் கூடத் தொட்டறியாத பேயெல்லாம் உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது அங்கென்றும் இங்கென்றும் அறிக்கைகள் கொடுத்தது. சொல்லியழ முடியாத் துயர் கண்ணில் நிறைந்தாலும் வ…

    • 2 replies
    • 725 views
  21. காலம் கரைந்ததோடுகின்றது இன்னமும் வாழ்க்கை தடுமாறுகின்றது நாலுபேர் தூக்கிச் செல்லும் பாடையும் தள்ளாடியே சுடுகாடு செல்லும் இருந்தும் ஆட்கள் இல்லா ஊர்களில் அழுகிய பிணங்களாக நிறைய நேற்றய மனிதர்கள் இருந்தார்கள் மயானத்தை அடைய முடியாத ஆயிரமாயிரம் சவங்கள் குறித்து பின்னொரு நாளிலும் யாரும் ஒப்பாரி வைப்பதில்லை எட்டுச்செலவும் அந்திரட்டியும் அறியாத பாவப்பட்ட பிரேதங்களுக்கு படையல் செய்ய தப்பிய தாய்களும் எஞ்சிய பிள்ளைகளுக்காகவும் ஒரு நாளைக் கூட காலம் தரவில்லை இன்னும் பல நுறு கோயில்களும் சாமிகளும் படையல் இன்றி பட்டிணியாகத்தான் கிடக்கின்றது பொங்கிப் படைக்கவும் அல்லது மூன்று பழத்தை வெத்திலையில் வைக்கவும் ஊர் திரும்பும் எசமானர்கள் வருகைக்காக …

  22. *** பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - அந்தக் காலம் பாலுக்காய் பாலகனே கால் கடுக்க பாதையில் நிற்பது - இந்தக் காலம் *** மங்கைக்கு மாலையிட சுயம்வரம் நடப்பது - அந்தக் காலம் மங்கைக்கு மாலையிட பணவரம் கொடுப்பது - இந்தக் காலம்

    • 4 replies
    • 1.4k views
  23. கதிரவன் கதிர்களைத் தூரிகையாக்கி வானில் வண்ணம் தீட்டுகிறான் சித்திரமாய் வானம் சிவப்பின்றி வசந்த காலத்தை விரட்டியபடி சோர்வுடன் சொல்லிழந்து நிற்கின்றது புள்ளினங்கள் கூடப் புதர்களில் மறந்துவிட புரிந்துகொள்ள முடியாக் கோடுகள் பார்க்குமிடமெங்கும் பரவிக்கிடக்கிறது பகட்டாய்க் கிளை பரப்பி நின்ற பாதையோரத்து மரங்கள் கூடச் பச்சை தொலைத்த இலைகளுடன் செருக்கிழந்து நிற்கின்றன பாதை நிறைத்துக் கிடக்கும் பழுத்துப் பழுப்பான இலைகள் பரிதவித்து நிலை மறந்து பக்கம் பக்கம் கிடக்கின்றன குளிர் கலந்து வீசும் காற்று என் குதூகலம் கொஞ்சம் கலைத்து கூதல் கொள்ளும் உடலசைத்து குளிர் உதற முனைகிறது கண்மூடி ஒருகணம் காலக் கணக்கை வியந்தபடி கனக்கும் மனம் சுமந்து கால்வீசி நடக்கின்றேன்

  24. சுதந்திரம் வரும் ஒருநாள் நம் கௌரவமும் அன்று வரும் தமிழீழம் புதிய சூரியனாய் உலகுக்கு உதயம் தரும் அந்த நாள் காண நான் இருப்பேனா ஏங்குகிறேன் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை பிறப்பாராம் வீரத் தலைவர்கள் தமிழீழத் தலைவன் அவன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என்ன விநோதம்! காலம் ஏன் இப்படி கடுகதியில் ஓடுகின்றது தம்பி என்று அழைத்தவர் இன்று அருகி உன்னை பலர் அண்ணன் என்று அழைப்பது எனக்கு அதிசயம் ஆம், அதுவும் பாசம் தான் ஆனால் எனக்கு நெஞ்சம் துடிக்கிறது மேலும் விரைந்து நடக்கிறேன் செய்ய முடிந்ததை நான் செய்தபின் தான் மடிவேன் மேலும் வேண்டும் உத்வேகம் புத்துணர்வு வாசலில் நிற்கும் புதிய சமுதாயம் அதன் கையில் பொறுப்புகளை அர்ப்பணித்துச் செல்வோமா பூமி அது காத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.