Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நான் அழுகிறேன் இன்று தோல்விகளின் முழு உருவமாய் பிறந்தேனே என்று...

    • 2 replies
    • 1.2k views
  2. Started by pakee,

    என் கவிதைகள் கண்மூடி சிந்தித்தவைகள் அல்ல இதயம் கதறிச் சிதறியவைகள்...

    • 0 replies
    • 3.6k views
  3. அண்ணா...! நானும் உன் சொந்தங்களும் நலம் என்று சொல்ல இங்கு தான் எமக்கு ஏதுமேயில்லையே??! தொலைந்து போன பொருட்கள் யாவும் கையில் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இன்றுவரை வாழ்கிறாள் உனது அம்மா...! தொலை தூரம் நீ இன்று சென்றிட்ட போதிலுமே நாளை எமை தேடி வருவாய்... எங்கள் நம்பிக்கைகள் இன்னும் தகர்த்தெறியப்படவில்லை! நீ சென்ற நாள் முதலாய் புதினங்கள் பலப்பல நடக்குது நாள் தோறும். பக்கத்துக்கு வீடுக்காரன் புதுசா ஒரு எல்லைபிரச்சனைய தொடங்கியிருக்கான் என் வீட்டுக் காணியும் உன் தோட்டம் துரவெல்லாம் அளவெடுத்துக்கொண்டு போயினம்... எங்களூர் சுடலையில் வெறிதாய் கிடந்த வெற்றுக்காணியில் அயலூர் வ…

    • 4 replies
    • 1.1k views
  4. அவள் மேடை ஏறி பேசியதில்லை.. ஆனால் பேச தொடங்கினால் ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்…!! அவள் தன்னைத்தான் “அழகில்லை” என்பாள்… ஆனால் “அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம் அவளை திரும்பி பார்ப்பார்கள்..!! அவளுக்கு “கவிதை” பிடிக்காது… ஆனால் எல்லா கவிதைக்கும் அவளை பிடிக்கும்..!! அவள் யாரையும் காதலிப்பதில்லை… ஆனால் ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது என்னோடு சேர்த்து..!! அவள் பெயரை…, என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்.. காத்திருங்கள்… அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்.. ஒரு “விருந்து உண்டு” எல்லாருக்கும்..!

    • 4 replies
    • 1.3k views
  5. கடல் வெள்ளம் போல் புகுந்து கனவுகளை வளர்த்தவளே காந்தப் பார்வையாலே கண்களுக்குள் இனித்தவளே தவறு நான் செய்யவில்லை தண்டனை நீ தருகின்றாய் சிறைக்குள் நான் துடிதுடிக்க சிரித்து நீ போகின்றாய் ஊமைக் குயிலடி நான் உள்ளுக்குள் அழுகின்றேன் ஓரிரு வார்த்தைளோ மெல்ல மெல்ல கொல்லுதடி என் உதிரத்தால் எழுதி வைக்கும் உண்மையடி பெண்ணே நீ போகுமிடமெங்கும் பாதி உயிரோடும் என் பயணம் தொடரும் புத்தகப் பையுக்குள்ளே பாவத்தை சுமப்பவளே இறந்து நான் போன பின்னே என் இதயத்தை அறுத்துப்பார் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் உன் பெயர் அப்போதாவது நீ என்னைக் காதலி...

    • 0 replies
    • 653 views
  6. Started by akootha,

    • 3 replies
    • 1.1k views
  7. வலசைப் பறவைகாள் (Immigrant birt) வலசைப் பறவைகாள் தென்திசை நோக்கி போர்விமான அணிவகுபெனெ நீர் குஞ்சுகளோடு எங்கு செல்கின்றீர்? வெள்ளிச் சுவர்க்கமான வடதுருவத்தில் எதிரிவந்தானா? மீண்டும் கிட்லரா எதற்கு இப்படிக் குடும்பம் குடும்பமாய் தெற்க்கு நோக்கிப் புலம்பெயர்கின்றீர். என்ன நிகழ்ந்தது வலசைப் பறவைகாள்? தரை இறங்குங்கள் அஞ்சவேண்டாம் வலசைப் பறவைகாள். இது கிட்லருக்கு தலைபணியாத கிளற்ச்சிக்காரரின் துரொண்கைம் நகரம்’ அதுவும் ஈழமண் காக்க களபலியான எங்கள் மாவீரரைப் போற்றும் திருநாள். வழிய உங்கள் மாவீரர்கள். உஙகளைப்போல நாம் அகதிகளல்ல. நாம் வலசைப் பறவைகள். வெண்பனி விழமுன் சூரியன் தேடி உங்கள் ஊரின் திசையில் பறக்கிறோம். உங்க உறவுகளிடம் நாம் எ…

  8. பிழை நடக்குது என உணா்ந்தவன் துவக்கை எடுத்தான் களை பிடுங்க – அவன் எதிரிகள் தலையை எடுத்தான் சிலை போல் சிலா் நின்றது கண்டு விழி சிவந்து நின்றான் மலை மேல் விழினும் தலையால் மோதி உடைப்பாய் என்றான்! நிலை உயா்ந்து நின்ற சிலா் மண்ணை விலை பேசுதல் கண்டு கையிலைச் சிவன் போல் உக்கிரம் கொண்டான்! மண்ணை மீற்க மறவா் படை அமைத்தான் கழுத்தில் நஞ்சு கட்டி யமனின் வேலை குறைத்தான்! களம் பல ஆடி பகையோடு மோதி நகை பல செய்து நின்றான்! திகைத்து நின்றான் பகைவன் திசை பல ஆள் அனுப்பி சூழ்ந்து நின்று சூழ்ச்சி செய்தான்! எதிர்த்து நின்றான் தம்பிகளோடு அண்ணன் இறுதியில் வென்றது துரோகம்! வீரம் சுமந்து நெஞ்சில் ஈழம் சுமந்து நி…

  9. ஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும் அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்; வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும் தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்; பாசமற உள்ளம் சேரும் பாட்டில் பாடம் தேடும் காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று தலைமேல் வாழும்; யாரும் பாடும் ராகம் எங்கும் ஒளிரும் தீபம் வாழ்வின் நகரும் தருணம் நாளை தமிழில் வரலாறாகும்; பேசும் உலகம் பேசும் மறந்து மறைந்துப் பேசும் கூசும் நாக்கை அறுக்கா துணிவில் தலையை ஆட்டும்; துடைத்த இனத்தின் மீதம் துளியேனும் நிலைக்க எழுவோம் துடித்து அழுத வலியை இனி திருப்பித் திருப்பித் தருவோம்; தடுக்க இயலா வேகம் – தமிழர் மரபிலிருக்கு அறிவோம்; திரட்டி திரட்டி சேர்த்து – நம் ஒற்றுமை பலத்தை உ…

    • 0 replies
    • 671 views
  10. கூட்டினோம் பெருக்கினோம் கழித்தலையும் துடைத்திட்டோம் எட்டு மணி வேலை என்பதை எழுத்திலும் நாம் அறியோம் இரவு பகல் வந்ததாக சொல்கிறர்கள் அதை நாம் என்றுமே பார்த்ததில்லை சுமந்தோம் பெற்றோரை உடன் பிறந்தோரை அவரது பிள்ளைகளை உற்றார் உறவினரை தாயகத்தை......... வீட்டுக்கு கலோ என்றால் கிலோ எவரானாலும் அய்யோ என்றால் அஞ்சோ பத்தோ வயிற்றைக்கட்டினாலும் வட்டிக்கெடுத்தாலும் எம் நிலையை வாய்திறந்து சொல்லோம் களவெடுக்கவில்லை கையேந்தி வீதியிலும் நிற்கவில்லை சொல்லொணா துயரங்கள் துரத்தியபோதும் வாய்ச்சொல் தவறியதில்லை எவன் வயிற்றிலும் என்றுமே அடித்ததில்லை மூழ்கும் நிலைவந்தால் அடுத்தவேலை எடுப்பதுண்டு அதற்கு அடுத்தவேலையும் பார…

  11. எத்தனை கடவுளிடம் எனக்காக வேண்டியிருப்பாய்! எத்தனை மணித்துளிகள் எனக்காக காத்திருந்தாய்! எத்தனை இரவுகள் என் வரவுக்காக விழித்திருந்தாய்! எத்தனை ஆண்டுகள் இரவில் விழிக்காமல் நானிருக்க விழித்து கொண்டு நீ இருந்தாய்! * கருவறையில் இருக்கும் கல்லைவிட,கள்ளகபடமில்லாத, கருவறையில் சுமந்தவளே, கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்! * என் வலிக்காக நான் அழுதேன். வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை... காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்! * இதயத்தை உதைத்தவளுக்காக வலியால் நான் அழுதேன்... காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும் என்னுடன் நீ அழுதாய்! * அன்பு ஒன்றே உலகில் சிறந்தது என்பதை தெரியவைத்தாய்! அன்புதான் அழுகையாக வெளிப்படுகி…

    • 7 replies
    • 1.7k views
  12. Started by கவிதை,

    "நியாயம்" என்பது இன்னும்... கேள்விக்குறியாகவே... தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட, தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில்... சுடர்விட்டெரிந்து கரியாகி...சாம்பலாவது, "நியாயம்" என்பதும்தான்!!!!! மனச்சாட்சி உள்ளவர்கள் மட்டும்.... புரிந்து கொள்ளட்டும்!

  13. மாவீரர் ஒருவரைக் கண்டேன். மாவீரர் ஒருவரைக் கண்டேன். மனது திக்… திக்…என்றது. வணக்கம் மாவீரரே! என்றேன். மௌனமாக நின்றார். கையிலே மாலையும் இல்லை. காத்திகைப் பூவும் இல்லை தோளில் போர்க்கத் துண்டும் இல்லை என் செய்வேன் என்று இரு கைகூப்பி வணங்கினேன். அப்போதும் அவர் மௌனமாக நின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள் நீங்கள் மாலைக்கோ மணி மகுடத்துக்கோ மற்றெந்;தச் சலுகைகளையோ விரும்பாத சரித்திர நாயகர்கள். கதிகலங்கி நிற்கும் தமிழருக்கு கலங்கரை விளக்கங்கள்;; இதைப் புரியாத நான் உங்களை…. ……………….. நான் என்ன தவறு செய்தேன்? என்மேல் என்ன கோபம்? உங்கள் கனவைக் கலைத்தேனா? உங்கள் பெயரால் பணம் சேர்த்து என் மடியை நிறைத்தேனா? உதட்டளவில் விடுதலை என்…

  14. இணையத் தளத்தில் அறிமுக மானாய் நண்பன் என்றழைத்து நட்பை மட்டுமே பரிமாறினாய்... நாம் நம்மை பார்க்க வில்லை யென்றாலும் பாசமாய் அழைத்தாய் சட்டைப் பையின் கனத்தைப் பார்த்து பழகும் இவ்வுலகில் என் மனதின் கனத்தையும் பகிர்ந்துக் கொண்டாய்... என் துயரில் ஆறுதல் சொல்லும் ஓர் தோழியாய் என் தவறில் என்னை கண்டித்திடும் எந்தையாய் இருந்தாய்... தன் தேவைகளுக்கே இறைவனை நாடுவோர் மத்தியில் எனக்காய் ‍ என் தேவைக்காய் உபவாஷீத்து வேண்டுதல் செய்தாயே... நீ என்னுடன் பழகியது சில நாளென்றாலும் நீ என்றும் நான் மறவா எந்தன் பிரியமானத் தோழி தானடி… நான் என் வாழ்வின் சாதனையில் உயரத்தில் இருந்தாலும் நான் ஏறிய‌ படிக்கட்டுகளாய் என்றும…

    • 3 replies
    • 1.3k views
  15. என் ஊரில் முற்றத்து நிலவு என்னைத் தேடித் தவிக்க, ஊரைவிட்டு வந்த நான்... நிலவைத்தேடி, கண்கூசும் மின் விளக்குகளோடு அலைகின்றேன்... முகவரியில்லாத தேசமொன்றில்!!! அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்... அடிக்கடி அனுப்பும்... அன்பான அழைப்பிதழ்களையும், என் சூழ்நிலைக் காவலர்கள்... என் மன குப்பைக் குழியில், அப்போதே போட்டுப் புதைக்க... இருட்டு மட்டுமே துணையாக!! இன்னும் நிலவைத் தேடியபடி.... நான் முகவரி தெரியாத பயணத்தில்... பசியோடு!

  16. Started by சண்டமாருதன்,

    இனமாக எழுந்து இனமாக வீழ்ந்தார்கள் இனவிடுதலைப் போராட்டத்தில் வீழ்ந்த வித்துடல்களை ஒரு வயலில் விதைத்தார்கள் சமூக விடுதலைப்போராட்டத்தில் முளைக்கும் என்று விதைக்கப்பட்ட விதைகளை சாமியாக்கி சட்டைப்பையில் கொண்டுதிரிகின்றார்கள் இரண்டு விடுதலையினதும் எல்லைக்கு வெளியே சென்றவர்கள் இரட்டை ஒடுக்குமுறையில் இருந்தும் விடுபட முடியாத இறுக்கத்தில் வீழ்ந்தவர்களின் நினைவுநாள் திசைகாட்டி அறிவை இழந்து ஊனப்பட்ட இனத்துக்கு ஊன்றுகோல் ஊன்றி நடக்கவேண்டிய ஊன்றுகோலை தலையில் தூக்கி காவடி ஆடிவிட்டு அடுத்தது எப்போதென பழய பஞ்சாங்கத்தை புரட்டும் பூசாரிகள் ஒருபக்கம் உணர்ச்சிப்பெருக்கெடுத்து தேசம் நினைத்து தேகம் சிலிர்த்து காக்கிலோ அரிசிவாங்கக் கூட பெறுமதியி…

  17. கார்த்திகைப்பொழுதுகளில் ஆவியாகும் கண்ணீர்த்துளிகள்.... மெல்லக்கடந்து போகும் கார்த்திகைப்பொழுதுகளின் துடிப்பில் எழுந்து அடங்கிப்போகின்றன மாவீரர்களின் ஞாபகங்கள் சூரியத்துளிகளில் ஒளிரும் போராளித்தோழர்களின் நினைவுகளில் ஊறிப்போய் பாரமாய்க்கனக்கின்றன இந்த மாலைப்பொழுதுகள் இடிந்து தூர்ந்துபோய்க்கிடக்கும் கல்லறைகளின் நடுவே பூத்திருக்கும் புற்களின் இடையே பறந்து திரியும் வண்ணாத்திப்பூச்சிகளின் சிறகடிப்பில் சிலிர்த்துக்கொள்கின்றன கார்த்திகைமேகங்கள் வரலாற்றை எழுதிவிட்டு நிரையாகப்போய்விட்ட தோழர்தோழியரின் ஞாபகங்களில் தோய்ந்தொழுகும் கண்ணீர்த்துளிகளில் இருந்து ஆவியாகின்றன பல கதைகள் பறவைகளின் சிறகுகளில் இருந்து உதிர்ந்துவிழும் இறகுகள…

  18. காலை எழுந்தவுடன் email வாலைக் குமரியுடன் facebook சாலை முழுவதும் Mobile Talk மாலை முடியும் வரை Chit Chat மாலை முடிந்ததும் Work Hour Start பொய்யுரை எழுத Status Reports மெய்யுரை சொல்ல Company Reports பொய்யை மெய்யாக்க Status Call மெய்யை உறுதியாக்க Conference Call பொய்யும் மெய்யும் கலந்த Live Call டாகுமென்ட் எழுத Copy & Paste ப்ரோக்ராம் எழுத Cut & Paste மறந்ததைப் படிக்க E-Learning படிக்காமல் உறங்க Audio-Learning படித்ததை நினைவூட்ட Google Search கூடிப் பேச Conference Hall கூடாமல் பேச Coffee Break காதல் செய்ய Live Chat குறட்டை விட Training Session அரட்டை அடிக்க Lunch Break ஓசியில் திங்க Team Lunch தின்றதைச் செரிக்…

  19. அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு அன்னை வளர்த்தாலும்-பிள்ளை தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட எதிரி தடையாக. நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர்-புலி தமிழர் படையாகி களங்கள் திறந்தனர் சமரில் உயர்ந்தனர் உலகம் வியந்தாக. படையில் விழுவதும் எழுந்து நிமிர்வதும் புதிய விதியல்ல விழுந்த மாவீரர் விதையா யாயினர் எழுவார் என்றென்றும். படலை திறந்தொரு தெருவில் இறங்கிட பயந்து சிலரோட நடுத்தெருவில் பலர் கதை முடிந்து சாவொரு மலிந்த நிலையாக, களங்கள் திறந்து சுழன்று சமரிடை புலி நிமிர்ந்த மாவீரன் குருதி படிந்து புதைந்து கிடந்தமண் கோவில் லாகாதோ. சதிகள் குவிந் தொரு நிலையில் மனமது தளந்து போகாமல் விமானத் தளங்கள் அழிந்தன களங்கள் எரிந்தன தமிழர்…

  20. இன்றைய நாள், ஈழத் தமிழர்களின் வரலாற்று பாதையில் கால(க்) கடவுளர்களை நினைவு கூரும் கண்ணீர் கலந்த நாள்! எங்கே அவர்கள் என ஏன் தேடுகின்றீர்கள்? அட கல்லறைகள் எங்கே எனவுமா தேடுகின்றீர்கள்? எங்கள் உள்ள(க்) கோயிலினுள் உறவுகள் வாழ்வதற்காய் உயிர் கொடுத்த உத்தமர்கள் தூங்குவதை அறியாது தேடுவது மடமை அல்லவா? நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் அவர் தம் நினைவுகள் பறந்து வந்து மேனியில் ஒட்டி சிலிர்ப்பை தருகின்றதே! நீங்கள் உணரவில்லையா? உங்கள் கண்களை ஒரு கணம் மூடி மீண்டும் திறவுங்கள்! இதோ கல்லறைகள் சிகப்பு மஞ்சள் கொடி கொண்டு அலங்கரிக்கப்பட்டு கண்ணீரால் கழுவப்படுகின்ற காட்சியினை(க்) காண்பீர்களே! சற்று(த்) …

  21. ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது. உயிர் முட்டி எழுகிறது உணர்வு. காதுமடலை உராயும் காற்றின் வழியே உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது. அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்... உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள் உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள். உமக்கான மொழியெடுத்து உம்மோடு பேச முடியாது, ஊமையாகி தலை குனிந்தே உங்கள் முன் குற்றக் கூண்டேறி நிற்கிறோம். வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை பொய் கலந்தென் புனைவிருப்பின் சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது. கார்த்திகை 27, 1982 முதல் மாவீரன் மண்ணில் சரிந்து இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது. காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக…

  22. மாவீரர்கள் இவர்கள் மரணித்தவர்கள் அல்லர் மரணத்தை மரணிக்க வைத்தவர்கள் தெய்வங்களுக்கும் தெய்வங்கள் இவர்கள் இவர்கள் வீரம் சாகாது, தியாகம் மறையாது தமிழீழம் மலரும் வரை இவர் விதைகுழிகளும் உலராது. இவர்கள் சுவாசித்த மூச்சுக்காற்றைத் தமிழீழம் வெல்லும் வரை இவர்களுக்காக நாம் சுவாசிப்போமென்று இந்நாளில் உறுதி பூணுவோம் இதுவே இவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் 2008ல் அண்ணன் இட்ட ஆணையை இவர்கள் மேல் நாம் இடும் ஆணையாக்கி முன்னகர்வோம் உலகத் தமிழா எழுந்து வா!!!....

  23. Started by அறிவிலி,

    இன்னொருமுறை உனக்கு பிறப்பு வாய்த்தால்....... எங்கள் இனத்தில்.. பிறக்காதே! எனக்கு அப்பா.. நீ தானென்று...... சத்தமிட்டு சொல்வேன்.... அதில் எந்த களங்கமும் என் ... அம்மாவுக்கும் வராது...! ஏன் என்றால்... என் அம்மாவின்.. தாத்தாவுக்கும்.. நீர்தானே அப்பா! உயிரின் தொடக்கம் என்பது... வெறும் பிறப்பு ... உறுப்புக்கள் காறி... துப்பும் சங்கமம் இல்லை..! மானம்....! பிறந்து ..தின்று.. உண்டு ..ஒய்யாரமா.. கதை-பேசி.. சத்தமெழுப்பி... நாளையபொழுதில் .. செத்துப்போனால்... காக்கை கூட... தன் இனத்துக்காய்..... அழும்! ஊருக்காவே...வாழ்ந்து.. போனியே உனக்கு ஏதாச்சும் தந்ததா.. இந்த சனம்? நம்பினவன.. சந்ததியை... …

  24. கண்ணிமைக் கதவுகளில் கண்ணீர்த்துளிகள்.... இளங்கவி - மாவிரர் நினைவுக்காய்... உணர்வுகள் முகைவெடித்து கண்ணீராய் உருவெடுத்து கண்ணிமைக் கதவுகளில் காத்திருக்கும் கார்த்திகை இருபத்தியேழுக்காய்...... இது ஒரு நாளில் உருவெடுத்த உணர்வுப் பிரவாகமல்ல...... ஒவ்வொரு வருடமும் சேர்த்துவைத்துக் கத்தும் எங்கள் உயிர்மூச்சின் சத்தம்..... எங்கள் மண்ணுடன் கலந்து நிலமாகிப் போனீர்..... எங்கள் கடலுடன் கலந்து நீராகிப் போனீர்..... எங்கள் வானிலே கலந்து வான்வெளியாகியும் போனீர்.... ஆதலால் தமிழர் மனங்களில் கலந்து அவர் நினைவாகிப் போனீர்..... உங்கள் சரித்திரம் சொல்லா எங்கள் சரித்திரத்தில் பக்கமில்லை.... உங்கள் சாவுகளை எண்ணா எங்கள் போரிலும் வ…

  25. தியாகத்தின் திரு விளக்குகளே தமிழீழத்தின் குல விளக்குகளே நியாய தேவைதையின் நீதியரசர்களே நீர் எமக்காய் மரணித்த முத்துக்களே தாயின் கை விலங் குடைக்கத் தானைத் தலைவ னொடிணைந்தவரே வாழும் வரை நாமுமை நினைந்து உம் கனவு பலித்திட கருமம் செய்வோம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.