வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நான் ஒரு சாதாரண கூத்தாடி..எனக்கு நம்பர் - 2 பிஸினஸ் இல்லை - கருணாஸ் ராமநாதபுரம்: நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தான் ஒரு சாதாரண கூத்தாடி என்றும், தொகுதி மக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், பெட்ரோல் பங்குகளோ, மணல் குவாரிகளோ, தன்னிடம் இல்லை என்றும், 2-ம் நம்பர் பிஸினஸ் தனக்கு கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார். முக சுளிப்பு கருணாஸின் இத்தகைய கருத்து திருவாடானை தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நடிகர் கருணாஸ் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் கருணாஸ். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த அவர், இரட்டை இலைச் சின்…
-
- 1 reply
- 428 views
-
-
ஸ்ரேயாவை தமிழ் படங்களில் கண்டு நெடுநாள் ஆகிவிட்டது. கடைசியாக ஜீவாவுடன் ‘ரௌத்திரம்’ படத்தில் நடித்தார். 2011-ல் இப்படம் வந்தது. அதன் பிறகு விக்ரமுடன் ராஜபாட்டையில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு போனார். கன்னடத்தில் ஸ்ரேயா நடித்த ‘சந்திரா’ படம் சில மாதங்களுக்கு முன் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ரஜினி, விஜய், விக்ரம், விஷால், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வந்த அவர் தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இன்னொரு புறம் புதுமுக நடிகைகள் வரத்தும் ஸ்ரேயாவை ஓரம் கட்ட வைத்துள்ளது. இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது:- நான் சினிமாவுக்கு வந்து பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. சினி…
-
- 1 reply
- 425 views
-
-
பிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா. சிம்புவையாவது மன்னிக்கலாம்... ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மன்மதன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதால் அந்த காதல் முறிந்து போனது. பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. திருமண தேதி அறிவிக்கயிருந்த நேரத்தில் பிரபுதேவாவுடனான உறவையும் முறித்துக்கொண்டு வெளியேறினார் நயன்தாரா. சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் தொடங்கியுள்ள நயன்தாரா மீண்டும் பிஸியாக நடித்துக்கெணர்டிருக்கிறார். நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 1 reply
- 738 views
-
-
'இனம்' படத்திலிருந்து 5 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது - திரையிடத்தயாராகிறார் இயக்குநர் லிங்குசாமி! [saturday, 2014-03-29 14:18:09] ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் பற்றி படம் எடுத்திருக்கிறேன், என்று கூறிக்கொண்டு ஒட்டு மொத்த தமிழர்களின் காதுகளில் 'இனம்' படத்தின் மூலம் பூவைச்சுற்றிவிட்டார் இயக்குநர் சந்தோஷ் சிவன். தமிழர்களுக்கு எதிராக சித்தரிக்கப்பட்ட பல காட்சிகளைக் கொண்ட இப்படத்திற்கு பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை வெளியிடக் கூடாது என்று சிலர் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இந்த நிலையில், இனம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டதாக, படத்தை வாங்கி வெளியிட்ட இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்க…
-
- 1 reply
- 803 views
-
-
கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பியபோது 6-வது மாடியில் இருந்து விழுந்து நடிகர் மரணம். ஹைதராபாத்: கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது, 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் பால பிரசாந்த் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (வயது25). இவர் ஐதராபாத்தில் தங்கி இருந்து குறும் படங்களில் நடித்து வந்தார். இவர், 'இப்பட்லோ ராமுடிலா சீத்தலா எவர் உண்டா பாபு' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயனாக அறிமுகமாகி நடித்து வந்தார். படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. பால பிரசாந்துக்கும் ஹுக்கட் பள்ளி பவர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6-வது மாடியில் வசிக்கும் திருமணமா…
-
- 1 reply
- 503 views
-
-
[size=3][size=4]டெல்லி: சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.[/size][/size] [size=3][size=4]பாலிவுட் [/size][/size][size=3][size=4]நடிகர் [/size][/size][size=3][size=4]சல்மான் கானின்[/size][/size][size=3][size=4] ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை.[/size][/size] [size=3][size=4]இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று…
-
- 1 reply
- 518 views
-
-
மின்னஞ்சல் மூலம் ஆனந்த் ஷா அனுப்பியது : நண்பர்களுக்கு வணக்கம் சிங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான். சிங்கள சினிமாத் தயாரிப்பிலும், தென்னிந்திய சினிமா விநியோகத்திலும் தங்கள் நேரத்தை முடக்கி லாபம் சம்பாதித்த இலங்கைத் தமிழ் முதலாளிகள், தங்களுக் கென்று ஒரு தமிழ் சினிமாவை அதன் அடையாள முகவரிகளோடு வளர்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் வருத்தமான உண்மை. இலங்கையின் சிங்கள சினிமா கூட, சிறிதளவாகச் சர்வதேச தரத்தில் வைத்துப் பேசக் கூடிய நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஆனால், இலங்கை தமிழ் சினிமா…? மிகமிகப் பின்தங்கிப் போய், இன்றும் அரிச் சுவடிக் கட்டத்திலேயே இருக்கிறது. இந்திய சினிமாவின் குறிப்பாகத் தென்இந்திய சினிமாவின் ஆதிக்கமும், அந்த சினிமாவே …
-
- 1 reply
- 534 views
-
-
நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பாடகரான டி.எஸ் ராகவேந்திரா தனது 75வது அகவையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (Jan 30) காலமானார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக அறிமுகமான இவர், சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்குது மனசு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் நினைவாக மகள் கல்பனாவுடன் அவர் பாடும் இனிமையான மனது மறக்காத பாடல் இணைக்கப்பட்டுள்ளது. பாடுவதற்கு சிரமமான ஒரு பாடலை எவ்வளவு அழகாக இருவரும் பாடுகின்றனர்!! (Paris நகரில் 1994ல் இடம்பெற்ற கலையமுதம் நிகழ்வு) Video share credit : Ragenthan Kanakaraja…
-
- 1 reply
- 473 views
-
-
பொய்களின் புதையலே பொன்னியின் செல்வன்! -சாவித்திரி கண்ணன் சோழ மண்ணின் வரலாற்று அடையாளங்களே இல்லாத காட்சிப்படுத்தல்கள்!, சத்தியம் செய்து சொன்னாலும் கூட தமிழச்சிகள் என நம்ப முடியாத நடிகைகள்! நாளும், பொழுதும் போர்களோடும், சூழ்ச்சிகளோடுமாக மன்னர்கள் வாழ்ந்ததாக காட்டும் அறியாமை! பிரம்மாண்டம் காட்டிடும் பித்தலாட்டச் சினிமா! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் படம் பற்றி எழுதுவதையே தவிர்த்து விடலாம் என்று தான் படம் பார்த்து முடித்ததும் தோன்றியது! அந்த அளவுக்கு படத்தில் வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், வன்முறைகள், ரத்தம் போன்றவை தூக்கலாக இருந்தது ஒரு காரணம்! ‘பண்டைய மன்னராட்சி காலம் என்றாலே அன்று இயல்பாக மனிதர்கள் இருந்திருக்க மாட்டார்களோ..…
-
- 1 reply
- 722 views
- 1 follower
-
-
60 வயது மாநிறம் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலைமையில் தான் சில வருடங்களாக விக்ரம் பிரபுவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படமே 60 வயது மாநிறம், இவர்கள் இருவருக்கும் அந்த வெற்றி கிடைத்ததா? பார்ப்போம். கதைக்களம் விக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது. அதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது த…
-
- 1 reply
- 1.4k views
-
-
ரஜினியால் 'உயிர் பிழைத்த' தனுஷ்! 3 படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறப்பது போன்று படமாக்கப்பட்டதை ஐஸ்வர்யா மாற்றியமைத்துள்ளாராம். ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தான் எடுக்கும் முதல் படத்தில் கணவர் தனுஷை ஹீரோவாக போட்டு, ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது. இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் இறந்துபோவது போல் ஐஸ்வர்யா காட்சியமைத்திருந்தார். படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். அதேசமயம், படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதை மாற்றி சந்தோஷமாக முடிவது போல் எ…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் நாட்டில் அரசியல் மாற்றத்தினால் சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு திரும்ப ரீஎன்ட்ரி கொடுக்க போகிறார். அதாவது, சிம்புதேவன் டைரக்ஷன்ல “இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2′-க்கான கதை டிஸ்கஷன் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின் ஆபிஸில் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான, வேலைகள் நடந்து முடிந்துள்ளது. ஃபர்ஸ்ட் பார்ட்டை விட, இந்த செகண்ட் பார்ட்டில், காமெடி கொஞ்சம் தூக்கலாக, இருக்கணும் என சொல்லி அதன்படி கதையை, எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு. ஆரம்ப காலத்திலிருந்து தனக்கு காமெடி டிராக் எழுதிய, சிலரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம் வடிவேலு. சில அரசியல் மாற்றங்கள் காரணமாக, கடந்த 2012ம் ஆண்டு முழுவதுமே வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த வடிவேலுக்கு இத…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐஸ்வர்யா - அபிஷேக் 2007 பிப்ரவரியில் திருமணம்? பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிகிறது. தமது திருமணம் பற்றிய அறிவிப்பை ஐஸ்வர்யா ராய் பிறந்தநாளான நவம்பர் 1ம் தேதி அறிவிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் - ஐஸ்வர்யா இருவரும் மணிரத்னம் இயக்கும் குரு படத்தின் ஷூட்டிங்கின் போதுஇ அமிதாப் பச்சனின் குடும்ப ஜோசியரான சந்திர சேகர சுவாமிஜியைச் சந்தித்து ஆலோசனை பெற்றதாக கர்நாடகாவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுவாமிஜி தெரிவித்துள்ளார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொ. திருமாவளவன் நடித்த முதல் படமான அன்புத் தோழியில் விடுதலை வேட்கை கொண்ட இளைஞராகவும் நடித்திருந்தார். முழுவதும் முடிந்த நிலையில் இப்படம் தணிப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் இந்த படம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று இருப்பதாக கருதினார்கள். படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்க இயலாது என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து அன்புத்தோழி மேன்முறையீட்டுக்காக டெல்லி சென்றுள்ளது. அன்கேயும் தடை விதிக்கப்பட்டால் நீதிமன்றத்தில்தான் முறையிடவேண்டும்.
-
- 1 reply
- 1.3k views
-
-
உலகளவில் விரும்பப்படும் பெண்களின் பட்டியலில் ஐஸ்வர்யாராய்க்கும் இடம் 2/6/2008 9:49:15 PM வீரகேசரி இணையம் - உலக அளவில் எல்லோராலும் அதிகமாக விரும்பப்படும் 99 பெண்களின் பெயர்ப்பட்டியலில் முன்னாள் உலக அழகியும் இந்திய நடிகையுமான ஐஸ்வர்யாராய் 27 அவது இடத்தைப் பிடித்துள்ளார். உலக அளவில் அதிகம் விரும்பப்படும் பெண்கள் 99 பேர் பற்றிய ஆஸ்க்மென் டொட்காம் என்ற இணையத்தளம் கருத்து கணிப்பு நடத்தியது. அனைத்து நாடுகளில் உள்ளவர்களும் இதில் பங்கேற்று வாக்களித்தனர். இசை விளையாட்டு பொழுதுபோக்கு பேஷன் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் என்ற அடிப்படையில் இப்போட்டி நடத்தப்பட்டது. திறமை சிரிப்பு புத்திகூர்மை உள்ளிட்ட பல்வேறு குணாதிசயங்களின் படி அழகான பெண…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெளியானது “கோமாளி கிங்ஸ்” தென்னிந்திய சினிமாவிற்கு இணையாக மிக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழு நீளப்படமான “கோமாளி கிங்ஸ்” படத்தின் டெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. “கோமாளி கிங்ஸ்” திரைப்படம் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்பாணம் மற்றும் மலையக பிரதேசங்களில் ,அப்பிரதேச மொழிநடைகளே உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைபடத்தின் கதைக்கரு நகைச்சுவை,அதிரடி,காதல் மற்றும் திகில் ஆகிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது. “கோமாளி கிங்ஸ்” திரைப்படத்தை இலங்கையின் பிரபல இயக்குனர் கிங் ரட்ணம் எழுதி, நடத்தும் மற்றும் இயக்கியும் உள்ளார். …
-
- 1 reply
- 531 views
-
-
'சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை. சென்னை: சூர்யா நடிக்கும் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு, சர்ச்சைக்குரிய காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை ஓய்வதற்குள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் 'சிங்கம்-…
-
- 1 reply
- 774 views
-
-
மடிசார் மாமி படத்தை திரையிட உயர் நீதிமன்றம் தடை விதித்து, சென்சார் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளது.தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மடிசார் மாமி மதன மாமா என்ற சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். படத்தின் தலைப்பு பிராமண பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் கூறியிருப்பதாவது:பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்…
-
- 1 reply
- 872 views
-
-
போகன் விமர்சனம். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை மையமாக வைத்து 90களில் சின்ன வாத்தியார் என்று ஒரு படம் வந்தது. அதற்கடுத்து வந்துள்ள படம் போகன். ஜெயம் ரவி ஒரு டெர்ரர் போலீஸ் ஆபீசர். அவர் அப்பா நரேன் வங்கி மேனேஜர். அதே ஊரில் செம ஜாலி வாழ்க்கை வாழ்கிறார் அரவிந்த்சாமி. வசிய சக்தி கைவரப் பெற்றவர். ஒரு நகைக் கடை வாசலில் காரை நிறுத்தி உற்றுப் பார்க்கிறார்... கடை சிப்பந்தி மொத்தப் பணத்தையும் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் போகிறார். அப்படி ஒரு சக்தி. ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. முன் பின் தெரியாத ரவியை எப்படி திருமணம் செய்வது என யோசிக்கிறார் ஹன்சிகா. ஆனால் ரவியின் நல்ல குணம் புரிந்து மணக்க சம்மதிக்கிறார். அந்த சூழலில் அரவிந்த்சாமி, ஜெயம் ரவிய…
-
- 1 reply
- 533 views
-
-
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு... "லிப் டூ லிப் கொடுத்த நடிகை": கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார். கதவை சாத்திக் கொண்டு கத்ரீனா கைஃப் அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்ததை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பார்த்து பாராட்டியுள்ளார். 2003ம் ஆண்டு வெளியான பூம் படம் மூலம் நடிகையானவர் கத்ரீனா கைஃப். அந்த படத்தில் அவர் தனது அப்பா வயது இருக்கும் குல்ஷன் குரோவருடன் நெருக்கமாக நடிக்கும் காட்சி இருந்தது. மேலும் கத்ரீனாவும் குரோவரும் லிப் டூ லிப் வேறு கொடுக்க வேண்டும். லிப் டூ லிப் காட்சியில் நடிக்க குல்ஷன் குரோவர் பதட்டமாக இருந்தாராம். இதையடுத்து அவரும், கத்ரீனாவும் ஒரு அறைக்கு சென்று கதவை சாத்திவிட்டு லிப் டூ லிப் கொடுத்து பயிற்சி எடுத்துள்ளனர். அது…
-
- 1 reply
- 2k views
-
-
பண்டோரா எனும் கிரகத்தில் வித்தியாசமான உருவத்தையும், நிறத்தையும் கொண்ட நவி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் பகுதியில் உள்ள இயற்கை கனிமவளங்களை சூறையாட நினைக்கும் ராணுவத்தினர், அந்த மக்கள் மீது போர் தொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடையும். அதன் நீட்சியாக தொடங்கும் தற்போதைய இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Avatar: The Way of Water) படத்தில் ராணுவத்தால் பண்டோராவுக்கு அனுப்பப்பட்ட ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) தனது மனைவி நெய்த்ரி (ஜோய் சால்டனா) மற்றும் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். துரோகம் இழைத்த ஜேக் சல்லியை பழிவாங்க மிகப்பெரிய படையைத் திரட்டி வரும் கர்னல் குவாரிச் (ஸ்டீபன் லேங்) பழிதீர்த்தாரா? இல்லையா? பண்டோரா கிரகம் என்னவானது? - இதுதான் திரைக…
-
- 1 reply
- 386 views
- 1 follower
-
-
இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் ரஜினியின் 'சிவாஜி' படத்தில் சந்தியாவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி படத்தில் லைட்மேன் வேலைசெய்வது கூட பெருமையான விஷயம்தான். அந்த வகையில் கடைசிநேரத்தில் சந்தியாவும் 'சிவாஜி'யில் முக்கிய பங்காற்றுகிறார். கதாநாயகி ஸ்ரேயா இருக்கும்போது சந்தியாவுக்கு என்ன வேலை.... என்று நீங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதற்குள் 'சிவாஜி'யில் சந்தியாவின் ரோல் என்ன என்பதை நாங்களே சொல்லிவிடுகிறோம். கடந்த வாரம் இயக்குனர் ஷங்கரிடமிருந்து வந்த போன், சந்தியாவின் மொபைலை எழுப்பியது. போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த நொடியே சந்தியாவின் முகமுழுவதும் பூரிப்பு பூத்தது. படத்தில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுக்க யார்யாரையோ தேர்வு செய்து பார்த்தும் ஒருவரும் தேரவில்ல…
-
- 1 reply
- 959 views
-
-
எதேச்சையாகப் பார்த்த பாடல். நன்றாக இருக்கிறது. நீங்களும் பாருங்களேன் !
-
- 1 reply
- 836 views
-
-
இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி. டெல்லி: பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தனது குழுவினருடன் மணிரத்னம் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில்,மணிரத்னத்திற்கு லேசான நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஓய்வி…
-
- 1 reply
- 515 views
-
-
தமிழ் சினிமாவை கலக்கிய "காதல் மன்னன்" ஜெமினி கணேசன் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காலமானபோது எழுத வேண்டும் என்று நினைத்து தவறிப்போன பதிவு இது! மிஸ்ஸியம்மா முதல் அவ்வை சண்முகி வரை தனக்கென வளர்த்துக் கொண்ட ஒரு பாணியை வைத்து, ஜெமினி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் ஏற்று நடித்த மென்மையான (காதல்!) வேடங்களுக்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் மெருகேற்றி தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத் தடங்களைப் பதித்தவர் "காதல் மன்னன்" என்றால் அது மிகையில்லை! பேசும்படம் என்ற சினிமா இதழ் தான், ஜெமினி கணேசனுக்கு 'காதல் மன்னன்' என்ற பட்டம் வழங்கியது! அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பிலிம்·பேர் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது மும்பையில் வழங்கியபோது, அவையினர் அ…
-
- 1 reply
- 1.2k views
-