Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த வருடத்தில் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ள கடற்படை இலங்கை கடற்படை கடந்த வருடத்தில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 6371 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது. எவன்கார்ட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்த கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடற்படைக்கு வழங்கப்பட்டது.அதன்படி இந்நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை இதுவரை ஈட்டியுள்ள வருமானம் 263 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்கு 7457 கப்பல் …

  2. விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு 100 Views விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்குமிடையில் போர் உக்கிரமாக இடம்பெற்ற 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவினால் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட 54 இக்லா வகை தரையில் இருந்து வானுக்கு செலுத்தும் ஏவுகணைகளின் ஆயுட்காலத்தை இந்திய அதிகாரிகள் பரிசோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு போர் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவு கொழும்பு கட்டுநாயக்கா மற்றும் பலாலி விமானத்தளங்கள் மீது வான்தாக்குதல்களை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர். சிறீலங்கா வான்படையினரால் விடுதலைப்பு…

  3. திறந்த பொருளாதாரக் கொள்கையே தமிழீழத்தின் நிலைப்பாடு! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையே தமிழீத்தின் நிலைப்பாடு என்பதனை தமிழீழத் தேசியத் தலைவர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் பொருளாதாரக் கொள்கை வகுப்பினை அடிப்படையாக கொண்ட சோசலிசம் என்பது தமிழீழ தேசத்தின் நிலைப்பாடாக இருக்கவில்லை என்பதனை இதன்வழி அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பங்கெடுத்திருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2002ஆம் ஆண்டு ஊடக மாநாட்டில் வெளிநாட்டு ஊடகர் ஒருவர் தமிழீழத்தின் பொருளாதார கொள்கை நிலைப்பாடு என்ன என்பது பற்றி கேள்வி எழுப்பிய போது ஒற்றைவரியில கூறினால், திறந்…

    • 1 reply
    • 513 views
  4. வடக்குத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் களமிறக்குவது ஜனநாயக விரோதம்! – ரவி ரட்ணாயக்கா 'வடமாகாண சபைத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் அரசு களமிறக்குவதானது நாட்டின் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்' இவ்வாறு ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார் கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஐ.தே.கவின் தொழிற்சங்கப் பணிமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அரசு தனது குறைகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டி வருகின்றது. ஆனால், இந்த நாட்டின் நாசகாரச் செயல்களுக்கு நாம் காரணமல்ல. தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய…

    • 1 reply
    • 406 views
  5. வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது. அதனை விட மற்றைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசனிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை நாளைய(20) வெள்ளோட்டம் விடப்படவுள்ள நிலையில் அந்த நிகழ்வு நடைபெற்வுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக யாழ் சென்றிருந்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த…

  6. ஒருவருடைய பின்னணி என்ன என்று முழுமையாகத் தெரியாமலேயே ஒருவர் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தலைவராக வளையவர முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தி. சோனியா காந்தியின் இயற்பெயர் என்ன என்பதே டில்லியில் பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜெயலலிதா அவருக்கு எதிராகப் பொரிந்து தள்ளியபோதுதான் பலருக்கும் தெரிந்தது. 1946 டிசம்பர் 9 ஆம் திகதி இத்தாலி நாட்டிலுள்ள லூசியானா என்ற ஊரில் ஸ்டிஃபானோபௌலா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த எட்விஜ் அன்டோனியா அல்பனா மைனோவின் பின்னணி பற்றி இந்திய மக்கள்தொகையில் பத்து சதவிகிதம் பேருக்குக்கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அது போகட்டும். காங்கிரஸ்காரர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்…

  7. இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கிறது. இதில் பட்டிகோலா பகுதியில் கட்டப்பட்ட 4 ஆயிரம் வீடுகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை மந்திரியுமான பசில் ராஜபக்சே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது. போருக்கு பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டி உள்ளது. இலங்கையில் இந்தியா தூதராக இருந்த அசோக் கந்தா இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார். இவ்வாறு அவர் …

  8. இந்தியாவின் தமிழகத்தில் PETA வின் உந்துதலால் ஜல்லிக்கட்டு எனப்படும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு இந்திய உயர் நீதிமன்றினால் தடைசெய்யப்பட்டது. அதிலிருந்து 'PETA’ எனப்படும் விலங்குகளின் நலன் தொடர்பான அமைப்பு தொடர்பில் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டிக்கு தடை விதித்தமையால் தமிழகம் எங்கும் பரபரப்பான சூழல் தற்போதும் ஏற்பட்டுள்ள நிலையில் அது இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்த பீட்டா அமைப்பு, ஒருதடவை இலங்கையையும் விட்டுவைக்கவில்லை அதாவது இலங்கை அரசுக்கும் எச்சரிக்கை ஒன்றினை விடுத்திருந்தது. 2011 ஆம் ஆண்டில் இலங்கை பிலிப்பைன்ஸிக்கு யானைக்குட்டியொன்றை பரிசளிக்க இருந்த வ…

  9. யாழ்.நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் சீனாவுக்கு வழங்கப்போகும் காணிகளை அடையாளப்படுத்தியுள்ள மின்சாரசபை..! யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு நிலம் வழங்கப்படவுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை காணிகளை அடையாளப்படுத்தி தமது பெயர் பலகைளை நாட்டியுள்ளது. தீவகத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு காணி வழங்கப்படவுள்ளதாகவும், சீனாவுக்கு இல்லை இந்தியாவுக்கே காணி வழங்கப்படும் எனவும் இழுபறிநிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே திட்டமிட்டு காணிகளை அடையாளப்படுத்தி மின்சாரசபையினர் தமது பெயர் பலகைகளை நாட்டியிருக்கின்றமையினை காணக்கூடியதாகவுள்…

  10. இந்திய இராணுவ புலனாய்வுத்துறை பணிப்பாளர் யாழ் விஜயம் 2013-05-28 18:18:00 இந்திய இராணுவ புலனாய்வுத்துறை பணிப்பாளர் எஸ்.ஐ.என்.ஜி. சிங்ஹா தலைமையிலான நான்குபேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்யவுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவராச்சி தெரிவித்தார். இவர்கள், யாழ். பலாலி விமானத்தளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபியை பார்வையிடவுள்ளதுடன், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://newjaffna.com/fullview.php?id=MTU5OTA=

    • 2 replies
    • 799 views
  11. இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகளையோ சந்திக்க மாட்டார்கள் என இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=13916

    • 2 replies
    • 700 views
  12. போர்க்குற்ற விசாரணை தேவையற்றது-சந்திரிக்கா போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளி தழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ‘நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடு. இப்போது அவசியமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதும், காணாமல் போனோருக்கான பணியகமும் தான். இவை நடைமுறைக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களுக்கு தேவை இருக்காது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற ச…

  13. யுவதிகளை மோதிய பொலிஸ் வாகனம் ; மட்டு. நகரில் சம்பவம் (சி.சி.ரி.வி. காணொளி இணைப்பு) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செலுத்தி வந்த வாகனம் வீதியில் நடந்து வந்த இரு யுவதிகளின் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாகன சாரதியான பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மட்டக்களப்பு திருமலை வீதியில் பொலிஸ் தலைமையக விடுதிக்கு முன்னால் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த வீதியின் வலது பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த வவுணதீவைச் சேர்ந்த கந்தசாமி நிசாந்தினி (2…

  14. இது இன்று இறுதியாக வந்த செய்தி...Times online UK இல வந்துள்ளாது.... உண்மை பொய் தெரியாது...ஆயினும் அவசியம் கருதி பிரசுரிக்கின்றேன். விரும்பினால நிர்வாகம் இதனை தூக்கவும் நெஞ்சம் வெடிக்கும் கனதியுடன் இங்கு பிரசுரிக்கின்றேன் மூலம்: http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6301821.ece THE satellite call came in the early hours of yesterday. The Tamil Tiger leader was desperate. For the first time in their decades-long struggle against the Sri Lankan government, the rebels were offering to lay down their weapons in return for a guarantee of safety. “Don’t say surrender,” insisted the leader, speaking calmly, despite the obvious desperation o…

    • 47 replies
    • 8.6k views
  15. சிவனொளிப்பாத மலை உச்சிக்கு சென்றுகொண்டிருந்த மூன்று யாத்திரிகள் கடும் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(10) இரவு போயா தினத்தன்று இடம்பெற்றுள்ளது. தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 65 வயதுடை சிரியாவதி என்ற பெண்ணும், கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 64 வயதுடைய சந்திரசேன என்ற நபரும், மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய கித்சிறி பெர்னாண்டோ என்ற நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் இதயம் செயலிழந்து குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. http://www.virakesari.lk/article/16574

    • 0 replies
    • 448 views
  16. வீரகேசரி நாளேடு - மோதல் இடம்பெற்ற பிரதேசங்களிலும் பாதுகாப்பு வலயத்திலும் என்ன நடந்ததென்று சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் என்று தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக், சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வை முன்வைப்பதற்கான நல்லதொரு ஆரம்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். கொழும்பு,கோல்பேஸ் ஹோட்டலில் இன்று புதன்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இலங்கையில் கடமையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் ரொபட் ஓ பிளேக் இன்று இறுதி செய்தியாளர் மாநாட்டை நடாத்தினார். அங்கு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்ததாவது; இலங்கை முக்கியமான காலக்…

  17. ஜேர்மனின் ''வேக்கப் பவுண்டேசன்'' என்ற அமைப்பு தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக நடத்தவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கொழும்பிலிருந்து ஜேர்மனி பயணமாகியுள்ளனர். மேலதிக விபரங்களுக்கு http://tamilworldtoday.com/?p=18051

    • 1 reply
    • 614 views
  18. சிறிலங்கா தொடர்பான சிறப்பு விவாதங்களை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை மேற்கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணை ஆணைக் குழுவை அமைப்பதற்கும் இது நல்ல சந்தர்ப்பம் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய - பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சாரிபி தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா தொடர்பான சிறப்பு விவாதங்களை நடத்துவதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகள் சபை மேற்கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. சிறிலங்காவில் தற்போது மிகப்பெரும் அவலத்தில் உள்ள சில நூறாயிரம் மக்களின் நிலை தொடர்பாக உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மே…

    • 0 replies
    • 612 views
  19. காணிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்.! ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள நிலங்களை மீளத்தரக்கோரி பல்வேறு அமைப்புகள் இணைந்து யாழில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். பஸ் நிலையம் முன் ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்டம், பின்னர் மகஜர் ஒன்றை கையளிக்கும் பொருட்டு யாழ். மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு ப…

  20. இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் திட்டமிட்ட ஆயுதக் குழுக்கள் கடத்தல்கள் கப்பம் கோரல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகள் மீதான வன்முறைகள் அடிக்கடி இடம்பெறுவதில்லை என்ற போதிலும், சிறுவர் பாலியல் துஸ்பிரோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனியாகச் செல்லும் வெளிநாட்டுப் பெண்கள எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரஜைகளை இலக்கு வைத்து வன்முறைகள் இடம்பெறுவதில்லை என்ற போதிலும் இலங்…

  21. இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதா ? இல்லையா ? உறுப்பு நாடுகளின் முதலாவது முறைசாராக் கூட்டம் செவ்வாய்க்கிழமை லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கு­வதா? இல்­லையா? என்­பது தொடர்­பி­லான முத­லா­வது முறை­சாராக் கூட்டம் நாளை மறுநாள் செவ்­வாய்க்­கி­ழமை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்கு அமை­வான புதிய தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா மற்றும் பிரித்­தா­னியா ஆகிய நாடுகள் இணைந்து முன் வைக்கும் சாத்­தியம் காணப்­ப­டு­கின்ற நிலையில் வாக்­கெ­டுப்­பின்றி தீர்­மா­னத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக இலங்கை மீண்டும் இணை அனு­ச­ரணை வழங்க உள்­ளது. இந்தக் கூட்­டத்தில் இணை அனு­ச­ரணை நாடுகள், பேர­வையின் உறுப்பு நாடுகள…

  22. சில வருடங்களுக்கு முன், மறைந்த பத்திரிகையாளர், மாமனிதர் சிவராம் தாரகியினால், இதே தலையங்கத்துடன் ஒர் கட்டுரை எழுதப்பட்டது. அக்கட்டுரை, இங்கு என்னால் எழுதப்படும் விடயத்தை விட வித்தியசமான உள்ளடக்கத்தை கொண்டிருந்தது. அக் கட்டுரையில், சிவராம், இலங்கைதீவு 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்திலிருந்து, தெற்கின் சிங்கள அரசியல்வாதிகள் எப்படியாக, இலங்கைதீவில் வாழும் ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளை, பார்க்கிறார்கள், விளங்கிக்கொள்கிறார்கள், காலப்போக்கில் அவர்களது நிலைப்பாட்டை எப்படியாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை விளக்குவதற்காக எழுதப்பட்டது. தமிழில் எழுதப்பட்ட மிக பிரபலியமான சிவராமின் அக்கட்டுரை, காலப்போக்கில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. 1983ம் ஆண்டு ஆரம்பமான ஆயுதப் …

  23. அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு. கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை, வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததன் மூலம். அகிம்சை... அணி சேராக் கொள்கை... பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை... என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது. சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், ஈழ மக்களைக் ] கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அள்னக்கையாக இருந்து அதனை ஆதரித்ததன் மூலம் மொத்த தமிழ் இனத்தின் முகத்திலே கரியை அல்ல மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு. மாபெரும் மனிதப் பேரவலம் நடந்தேறியது கண…

  24. வாலியின் சொல்லும் செயலும் ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாகவே அமைந்திருந்தன - யாழ் தமிழ் மக்கள் பேரவை கண்ணீர் இரங்கல் ஈழத் தமிழ் மக்களின் அவலம் கண்டு பொங்கியெழுந்த தொப்புள்கொடி உறவான கவிஞர் வாலியின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாதது என்று தெரிவித்துள்ள யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை வாலிக்கு தமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பம், குடும்ப நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் அவரின் அபிமானிகள் ஆகியோரின் துயரத்தில் தாங்களும் பங்கெடுப்பதாகவும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. கவிஞர் வாலியின் மறைவு குறித்து யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை …

  25. சிறிலங்காவின் பத்திரிகை ஆசிரியர்கள் இருவர் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை பிரான்சை தலைமையகமாகக் கொண்டுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. இது ஊடக சுதந்திரத்தை மீறும் ஒரு செயற்பாடு எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றத

    • 0 replies
    • 358 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.