ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
Published By: VISHNU 02 SEP, 2024 | 03:20 AM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர். சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். ரணில் எமது கொள்கைகளுடன் இணங்கவில்லை தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கத்தை சிறந்த நகர்வாக பார்க்கிறேன். நான் சஜித்தை சந்தித்து பேசவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. பொய் வாக்குறுதிகளை நான் வழங்கமாட்டேன். ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். செனட் சபை குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். வடக்கு இளைஞர் யுவதிகளுடனான எனது உறவு தனித்துவமானது. காணாமல் போனோர் விவகாரத்துக்கு பதில் அளிப்பேன். முஸ்லிம்களின் உடல் தகன விவகாரத்தில் மன்னிப்பு கோ…
-
-
- 53 replies
- 4k views
- 2 followers
-
-
யாழ்.சுங்கவரித் திணைக்களத்திடம் வெங்காய விதை வழக்கு ஒப்படைப்பு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குப் பெரிய வெங்காய விதைகளைக் கடத்தினர் என்ற குற்றச்சாட்டு வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் உள்ளதால் அது பற்றிய மேலதிக விசாரணைக்காக அந்த வழக்கை யாழ். சுங்கவரித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு மன்னார் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் 2 பேர் சேர்ந்து கடந்த வருடம் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகப் பெரிய வெங்காய விதைகளை மன்னார் ஊடாகக் கடத்தியிருந்தனர் என்று குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸாரால் மன்னார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு மன்னார் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராஜ…
-
- 0 replies
- 260 views
-
-
Published By: VISHNU 13 SEP, 2024 | 11:32 PM வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் வெள்ளிக்கிழமை (13) உத்தியோகப்பூர்வமாகப் பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் பெயரிடப்பட்டன . இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம அவர்களும், முதலீட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு கொண்டனர். இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. …
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும்: டி.எம்.ஜயரட்ண வீராப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும் என சிறிலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கின்றார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவிருப்பதை எதிர்த்து கம்பளை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். "அமெரிக்கா உட்பட சில மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளும் சூழ்ச்சியை தோற்கடிக்க அனைவரும் வீத…
-
- 5 replies
- 2k views
-
-
போதையில் சாரத்தியம்: ரூ. 112,500 அபராதம் மது போதையில் வாகனம் செலுத்திய 9 பேருக்கு 112,500 ரூபா அபராதம் விதித்துள்ளது சாவகச்சேரி நீதிமன்றம்.கடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக் கப்பட்டபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.மதுபோதையில், வாகனப் பதிவுப் புத்த கம், வாகன வரி, சாரதிய அனுமதிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரம் தலைக் கவசம் என்பன இன்றி மோட்டார் சைக் கிள் செலுத்தியவருக்கு 24 ஆயிரம் ரூபாவும், வாகனப் பதிவுப் புத்தகம், சாரதிய அனுமதிப் பத்திரம் காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப் புத்தகம் என் பன இன்றி வாகனம் செலுத்திய சார திக்கு 21 ஆயிரம் ரூபாவும், மது போதை யில், சாரதிய அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய ஐந்த…
-
- 3 replies
- 748 views
-
-
July 16, 2019 அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய, முஸ்லிம் அமைச்சர்கள், இந்த வாரம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கமாட்டார்கள் என பாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். அடுத்த வாரமே இவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்தவொரு அமைச்சரும் தொடர்பில்லாததால், அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதில் பிரச்சினைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/126638/
-
- 0 replies
- 452 views
-
-
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து செயலாற்றி இருந்தோம். ஆனாலும் எமது நம்பிக்கைகளுக்கு மாற்றாக இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையே தமத…
-
- 3 replies
- 409 views
-
-
எவராலும் என்னைக் கைது செய்ய முடியாது – கருணா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு எவரினாலும் தம்மைக் கைது செய்ய முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தம்மைக் கைது செய்யும் என்ற அச்சம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் அண்மையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் கிடையாது எனவும் கருணா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறி…
-
- 18 replies
- 2.9k views
-
-
Published By: DIGITAL DESK 7 30 SEP, 2024 | 05:20 PM (இராஜதுரை ஹஷான்) எதிர்க்கட்சியில் இருக்கும் போது ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிரூபிக்க வேண்டும். போலியான குற்றச்சாட்டுக்களினால் அரசியலில் சற்று பின்னடைந்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கி…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நல்லாசி வேண்டி தமிழ்க் கிழவனாம் நல்லூர் முருகனிடம், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினர் நேற்றையதினம் வழிபாடு செய்துள்ளனர். யுத்தம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த பழி பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் மஹிந்தவின் நலனுக்காக தமிழ்க் கிழவன், தமிழர்களுக்கேயுரித்தான தனிப்பெருங்கடவுள் என்றெல்லாம் புகழப்படுகின்ற நல்லூர் முருகனிடம் அடிக்கடி சிங்களம் வழிபட்டு வருகிறது. முள்ளிவாய்க்காலில் குண்டுமாரி பொழிந்து மக்களின் உயிர்களைப் பறித்த உலங்கு வானூர்திகளைக் கொண்டு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது பூ மாரி பொழிந்தது சிறிலங்கா வான்படை. மஹ…
-
- 15 replies
- 1.6k views
-
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போ வதில்லை என்று தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியானது ஜனநாயக தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளார் என்று சிவசக்தி ஆனந்தன் அறிவ…
-
-
- 12 replies
- 854 views
-
-
இலங்கையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: இந்தியா வலியுறுத்தல் கொழும்பு, ஜன.27-: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதையே இந்தியா விரும்புகிறது என இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்தார். இலங்கை அரசு அண்மையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இது பிரச்சினையை தீர்க்க உதவாது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாத் இந்தியாவின் குடியரசு தினத்தையட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையின் ஒருமைப்பாடு, இறையாண்மை, எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தீர்மானமான நம்பி…
-
- 3 replies
- 1.5k views
-
-
சனல் 4 இன் விவரணம் குறித்து இலங்கை அரசு கருத்து வெளியிடுவதைத் தவிர்த்தது. பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற விவரணம் குறித்து இல்ஙகை அரசு இதுவரை அதிகாரபூர்வமாக கருத்து எதனையும் வெளியிடவில்லை. அது தொடர்பாக இன்று கொழும்பில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் தொலைபேசியில் இலங்கை அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு கருத்து அறிவதற்கு முற்பட்டபோதிலும், அமைச்சர்கள் எவரும் பதிலளிக்க விரும்பவில்லை. இறுதி யுத்தத்தின்போது வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் காண்;பிக்கப்பட்ட விவரணம் போலியானதென இலங்கை அரசு …
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழ்.பேருந்து நிலையத்தில் மோதல்: நடத்துனர் படுகாயம் – மூவர் கைது In இலங்கை August 3, 2019 10:00 am GMT 0 Comments 1144 by : vithushan யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து நிலையத்துக்குள் அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்பவர் சிலர் தமது வாகனத்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்ல முற்பட்டனர். அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுமதிக்கவில்லை. …
-
- 2 replies
- 661 views
-
-
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாராயத்தை விற்று எமக்கு வாய்க்கரிசி போடாதே, வீரியம் குறைப்பதும் சாராயம் காரியம் கெடுப்பதும் சாராயம், மதுவை ஒழிப்போம் மாண்பை காண்போம் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் ஏராளமான பொல…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
இலங்கையில் அமைதி குலைந்தால் தமிழகக் கடலோரப் பகுதிகளில் அது எதிரொலிக்கிறது. போர் நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டபிறகு இலங்கையில் மீண்டும் போர் வேகம் அதிகரித்திருக்கிறது. இரு தரப்பிலும் சேதங்கள்; உயிரிழப்புகள்; இதற்கிடையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். இந்த நிலையில் கடலோரக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, தமிழகத்திலிருந்து சர்வதேசக் கடல் எல்லையில் மீனவர்கள் மீது தாக்குதல்கள் நிகழ்கின்றன. நம்மவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்படுகின்றன. மீனவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கையில் தாக்குதல் முற்றினால் தமிழகக் கடலோரத்தில் அகதிகள் வந்திறங்குகிறார்கள். அண்டை நாட்டில் நடக்கும் போரின் சில பின்விளைவுகளை நாம் எதிர்கொள…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம். யாழ்ப்பாணம் – கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொற்பதி வீதியில் முதலாம் ஒழுங்கையில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்தியதுடன், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி தப்பிச் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்…
-
- 1 reply
- 570 views
-
-
இந்திய அரசே! இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடில்லியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரசாலினி தன் புன்னைகை இழந்து போனது ஏனோ – குளோபல் தமிழ் செய்திகள் 25 மார்ச் 2012 பிரசாலினி 9 வயது நிறைந்த சின்னஞ் சிறு குழந்தை.க்கு பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று காலையும் வழமையான விடியல்கள் போலவே இனிமையாக மலர்ந்திருந்தது. அன்றுதான் தனது முடிவுக்கு பிள்ளையார் சுழி இடப்போகிறது என்பதை அந்தப் பாலகி அறிந்திருக்க மாட்டாள். அன்று காலை நித்திரை விட்டெழுந்த பிரசாலினி வயிறு நோவினால் முடியாமல் இருப்பதாக கூறினாள். இந்த வயிறு நோ அவளுக்கு கடந்த 6 மாதமாக இடையிடையே சாதாரணமான நோவுடன் இருந்து வந்தது. ஏற்கனவே இரு நாட்களாக காய்ச்சலும் சில சமயம் வாந்தியும் இருந்தது. கூடவே வயிறு நோவும் இருந்து வந்ததால் பெற்றோர் அவளை கொழும்பின் பிரபல வைத்தியசாலையி…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் ஏரிப் பகுதியில் அரியாலை தனங்கிளப்புப் பகுதிகளை நோக்கி புலிகள் ஆட்லறித்தாக்குதல் நடத்தியுள்ளதுடன் புலிகளின் படகுகளின் நடமாட்டமும் அவதானிக்கப்பட்டுள்ளதை அடுத்து இராணுவமும் பதிலுக்கு ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இராணுவத்தின் தாக்குதல் அகோரம் புலிகள் நடத்திய பதில் தாக்குதலை அடுத்து 10 நிமிடத்துள் சமாளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நெட் கூறுகிறது. இதற்கிடையே மிகச் சமீபத்தில் தனங்கிளப்புப் பகுதியில் தரையிறங்கிய புலிகளின் அணி ஒன்று இராணுவக் காவலரண்கள் இரண்டை தகர்த்து இராணுவத்தின் ஒரு படகையும் கைப்பெற்றி மீண்டும் தளந்திருப்பியதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன..! LTTE, SLA exchange artillery fire across Jaffna lagoon. …
-
- 6 replies
- 3.3k views
-
-
மூன்றாம் தரப்பின்றி பேசிப் பயனில்லை அரசின் இழுத்தடிப்பு தொடருமேயன்றி வேறெதுவும் கிடையாது என்கிறார் சுரேஷ் மூன்றாம் தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அல்லது அனுசரணை இல்லாமல் இலங்கை அரசுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுக்களில் ஈடுபடுவது பயன்தராது. அவ்வாறான பேச்சுக்கள் மூலம் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றே கூட்டமைப்பு கருதுகிறது. இதுவரை காலமும் நடைபெற்ற பேச்சுக்கள் எமக்கு இதனையே வெளிப்படுத்தியுள்ளன. எனவே மூன்றாம் தரப்பின் உதவியுடன் பேச்சுக்களைத் தொடர்வதற்கு அரசு முன் வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். ஜெனிவா இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள …
-
- 1 reply
- 850 views
-
-
பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை எமது ஆட்களே அழித்து விட்டார்கள்: ரியாஸ் சாலி [ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2015, 03:03.54 AM GMT ] பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, படையினரின் உதவியுடன் எமது ஆட்களே அழித்து விட்டதாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் வேலை முகாமையாளர் ரியாஸ் சாலி விசனம் வெளியிட்டுள்ளார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்கள் உள்ளிட்ட 1000 மில்லியன் ரூபா சொத்துக்களை அழிப்பதற்கு அனுமதித்ததற்கு இலங்கை இராணுவமே பொறுப்பேற்க வேண்டும். பிரபாகரன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, பாதுகாத்த அதேவேளை, எமது எமது ஆட்களே, ஜனாதிபதி மாளிகையை கட்டும் எண்ணத்துடன் அதனை அழித்து விட்டனர். கா…
-
- 0 replies
- 517 views
-
-
எழுக தமிழ் பரப்புரை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது. இந்தநிலையிலேயே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் இன்று காலை பரப்புரைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வில் ஈபீஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://thinakkural.lk/article/33088
-
- 4 replies
- 803 views
-
-
மட்டக்களப்பில் பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு. 19.02.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு பகுதியில் சிறிலங்காப் பொலிசார் மீது இன்று ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் பொலிசார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலின் பின்னர் அவ்விடத்தில் சிறிலங்காப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 1.4k views
-
-
13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: கொழும்பும் அப்பட்டியலில் சேரும் அறிகுறி [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 04:03.09 AM GMT ] நாட்டின் 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவிவருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்திலும் இந்த மண்சரிவு அபாயம் விரைவில் தோன்றக்கூடிய அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு அபாய வலயங்கள் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா, பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் மொனராகலை ஆகிய 13 மாவட்டங்களும் ஏற்கனவே மண்சரிவு அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும்…
-
- 0 replies
- 570 views
-