Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை மிகப் பெரிய தவறு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை மிகப் பெரிய தவறு என சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சி அவர் வழங்கிய நேர்காணலின் போதே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் என சில பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அங்கு வாழும் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவம் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் அயல் நாடு என்ற வகையில் இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சிகளில் இந்தியா கூடுதலான பங்களிப்பபை ணர்வு பூர்வமாக வழங்க வேண்டும் என த…

  2. ஒஸ்ஸேத்திய போரின் பின்புலத்தின் இருக்கும் அரசியலை எல்லாம் தள்ளி வைத்து விடுவோம்..... ஜான் மெக்கெயினை ஜெயிக்க வைக்க நடக்கும் சூழ்ச்சி என்ற சொல்லாடலையும் தள்ளி வைத்து விடுவோம்... இந்தப்போர் மூலம் உலகிற்கு ரஷியா சொல்லவிரும்பும் சேதி என்ன என்ற ஆராய்ச்சியையும் கொஞ்சம் தள்ளி வைத்து விடுவோம்!!! இந்த சூழலையும் , நமது நாட்டிற்கும் , நமது தமிழினத்திற்குமான சூழலையும் தொடர்புபடுத்தி ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.......ஜார்ஜியாவை சிங்களமாகவும் , ஈழத்தை ஒஸ்ஸேத்தியாவகவும் , ருஷ்யாவை இந்தியாவாகவும் நாம் கற்பனை செய்து கொள்வோம்....... ஒஸ்ஸேத்திய பிரச்சினையும் , ஈழப்பிரச்சினையும் கால அளவில் வித்தியாசப்பட்டிருந்தாலும் , மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளின் தாக்கம் வே…

    • 3 replies
    • 1.9k views
  3. தங்கங்களே தமிழகச் சிங்கங்களே! உங்களால் செய்ய முடியும்! செய்து முடியுங்கள்! - வன்னித்தம்பி தங்கரத்தினம் - தமிழ் இனத்தோடு பிறந்தது தன்மான உணர்வு. அதற்குச் சமாதி கட்ட இனவெறிச் சிங்களம், இந்திய மத்திய அரசின் ஆதரவோடு உலக நாடுகளே உதவிகளையும் பெற்று தமிழனைப் பயங்கரவாதிகளாக்கி விட்டது. இன்று சிங்கள அரசு இந்திய மற்றும் பிற அரசுகளின் ஆயுத வளங்களைப் பெற்று ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| பெயருடன் ஈழத் தமிழின அழிப்பைச் செய்து வருகின்றது. வெளியே அமைதி வழிதான் தீர்வு என இரண்டு அரசுகளும் கூறிக்கொண்டே மறைமுகமாக போர் மூலம் தமிழின அழிப்பைச் செய்து வருகின்றன. இவையே இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளரின் செயற்பாடு என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் அம்பலப்படுத்தி உள்ளன. …

    • 4 replies
    • 1.9k views
  4. சுமந்திரனை வெல்ல வைப்பதற்காக என்னை புறந்தள்ளுகிறது கூட்டமைப்பு! வேட்பாளர் மதினி நெல்சன் Aug 03, 20150 பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். அத்தகைய சம்பவங்களின் பின்னணியினில் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருந்தால் கட்சி தலைமை தயவுதாட்சணமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் மதினி நெல்சன். யாழ்ப்பாணத்தில் களம் குதித்துள்ள அவர் இன்று யாழ்.நகரினில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்தார். பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு எதிராக நான் பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளேன். அவ்வகையினில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற…

    • 4 replies
    • 1.9k views
  5. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளரும் புதிய தலைவராகவும் செயற்பட்டு வந்த கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்ட 48 மணித்தியால காலப்பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு உதவிய தேசிய மற்றும் சர்வதேச ஆதரவாளர்கள் தொடர்பான தகவல்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்று அரச பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரச பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடைந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு தரப்பினரி…

    • 4 replies
    • 1.9k views
  6. கிளிநொச்சியில் பெண்களுக்கு இராணுவம் செய்த அதிரவைக்கும் அட்டூழியம் என்ன? December 12, 2012, 11:00 pm|views: 794 இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட யுவதிகள் நள்ளிரவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் இராணுவ மகளிர் பிரிவின் 6வது படையணியின் கீழ் வடக்கிலிருந்து 17.11.2012ந் திகதியன்று இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்த தமிழ் யுவதிகளில் 21 பேர் 11.12.2012 அன்று நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் 12.30 மணிக்குள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் விழிப்புலனிழந்தவர்களும் படுகாயங்களிற்குள்ளாகி அங்க இழப்புடன் இருந்த மாற்றுத் திறணாளிகளும் தங்க வைக்கப்ப…

  7. குஞ்சுபரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா படையினர் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  8. ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன? அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் அமுல்படுத்துவதற்கு இணங்கியதை தொடர்ந்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் முதல் சுற்றை விடுதலைப் புலிகள் வென்றனர். நோர்வே அனுசரணையாளர்களால் தயாரிக்கப்பட்ட கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்ட ஒரு சொல் குறித்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் வாதாடிய பின்னர் இறுதியில் அரசாங்கம் விட்டுக் கொடுத்ததுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சட்ட பூர்வ தன்மையையும் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் வன்னிக்கு இன்னுமொரு வெற்றியை கையளித்தது. அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு பெருமளவு பிரதிநிதிகள், ஆலேசகர்கள், விசுவாசமான ஊடகவியலாளர்கள், மேலும் அரசாங்க ஆதரவாளர்…

  9. கோட்டபாய ராஜபக்ஸவின் பயணத்தால் கடைகளினுள் வைத்து பூட்டப்பட்ட பொதுமக்கள். கொழும்பு ஆமர்வீதியில் இன்று காலை 10.00 மணிக்கு பயணித்தவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்க சென்றவர்கள் கடைக்காரர்கள், பல்வேறு வேலைகளுக்காக அப்பகுதியால் சென்றவர்கள் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் எனப்பலருக்கும் வித்தியாசமான அனுபவம் ஒன்று காத்திருந்தது. ஆமர்வீதியில் திரும்பும் இடத்தில் இருந்து அந்த வீதியின் இரு மருங்கிலும் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினரால் அவசர அவசரமாக வீதிகளில் நின்றவர்கள், சென்றவர்கள், என அனைவரும் மறிக்கப்பட்டனர், வாகங்களின் போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தது. மறிக்கப்பட்டவர்கள் அவசரமாக கடைகளுக்குள்ளும், கட்டடங்களுக்குள்ளும் கட்டாயப்படுத்தி கொண்டு செல்லப்பட்டு ந…

  10. எதிர்க்கட்சித் தலைவராக சஜித் 9 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/எதரககடசத-தலவரக-சஜத/175-254539

    • 15 replies
    • 1.9k views
  11. இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல இணப்பிரச்சினை தற்போது இதனை முறியடிப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன . ஆயுத மோதல்களில் தமிழர்களோ சிங்களர்களோ ஈடுபடவில்லை எனவே இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிலவுகின்றது என்பது தவறான கருத்தாகும் எனவே இப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலம் முடிவு காண எத்தனிக்கின்றது . எனவே அரசாங்கம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண எத்தனிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச தெரிவித்துள்ளார் . தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்திய விஜயம் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்த்தார். இ…

  12. இவர்களை என்ன செய்யலாம்???? இந்தியாவில் வெளியாகும் தினமலர் பத்திரிகையின் இணையப்பதிப்பில் டவுட் தனபால் என்னும் பகுதியில் இப்படியொரு கருத்து.

    • 3 replies
    • 1.9k views
  13. திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு (படங்கள் இணைப்பு) திருக்கோணமலை நகரப்பகுதியிலுள்ள அமரர் ஜே.வி.செல்வநாயகத்தின் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் புரத்திலுள்ள சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள இச் சிலை நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது. சிலையின் தலைப்பகுதி உடற் பகுதியிலிருந்து உடைக்கப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தலைப் பகுதி சிலையின் கீழ் போடப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை தற்போது மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. http://www.vanakkamnet.com/selva/

  14. விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் அறிவித்தல் இன்று வெளிவரலாம்? சிறீலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பில் பல விவாதங்கள், தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இன்று சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தடைதொடர்பான அறிவித்தல் வெளிவரலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் கொழும்பில் பங்குசந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை தலைமை அதிகாரி றெஷான் குருகுலசூரிய, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பான செய்தியே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை சிறீலங்கா அரசாங்கம் தடைச…

    • 11 replies
    • 1.9k views
  15. பெப்ரவரி 7, 2007 வரையிலான சட்டவிரோத கொலைகள், கடத்தல்கள், காணமற்போனமை தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழு விடுத்த இறுதி அறிக்கை 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 49 பேர் கடத்தப்பட்டு காணமற் போயுள்ளனர், 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் (வடக்குக் கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகள் தவிர்ந்து) இடம் பெற்ற சம்பவங்கள் Latest Report of Disappearances, Abductions, Killings in South (LeN-2007Feb12,3.45pm) Civil Monitoring Ccmmission had release the latest report of Extra Judicial Killings, Abductions and Disappearances in South. This list is up dated last February 07th, 2007. 12 Killed, 49 Abducted-Disappeared, 14…

  16. இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்? இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. https://athavannews.com/2022/1301691

  17. இன்னர் சிற்றி பிரஸிடம் தடுமாறிய இலங்கை இராஜதந்திரிகள்! Friday, September 9, 2011, 0:13 பாதுகாப்பு அமைச்சு தயாரித்த ஆவணப் படம் ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் நேற்று முன்தினம் காட்சிப்படுத்தப்பட்ட போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அரசாங்கத்தின் இராஜதந்தரிகள் திண்டாடியுள்ளனர். சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்திற்குப் போட்டியாக இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹனவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் பதிலளித்துள்ளனர். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது…

    • 3 replies
    • 1.9k views
  18. தமிழில் தேசிய கீதம் பாடி­ய­தன்­மூலம் தமிழீழ கீதம் பாடப்­ப­டு­வதை நிறுத்­தி­யுள்ளோம். இது அர­சாங்­கத்­துக்கு கிடைத்த பெரு வெற்­றி­யாகும் என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்சி தலைமைக் காரி­யா­லயமான சிறி­கொ­த்தாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில், நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. இது­தொ­டர்பில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். இவர்கள் இதன் மூலம் மீண்டும் நாட்டில் இன­வா­த…

  19. “தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.” இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும், “பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https:/…

    • 24 replies
    • 1.9k views
  20. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் 63 வயதான மூதாட்டி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் 15 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:– வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைப் பகுதியில் மீன் விற்றுவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மூதாட்டியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்து குறித்த சிறுவன் தனது சைக்கிளில் ஏற்றியுள்ளான். அதன் பின்னர் பொன்னாலை காட்டுப் பகுதிக்குள் குறித்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளான். மூதாட்டி சிறுவனின் கைகளைக் கடித்துவிட்டு கூக்குர…

  21. இலங்கை நிலவரம்.. நமது நிருபரிடமிருந்து... என்.வி. இந்தியா மீது செமக் கடுப்பில் இருக்கின்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே என்கின்றன கொழும்பில் அதிபர் மாளிகை வட்டாரங்கள். யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற சுருக்குக் கயிறு ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் மீது மெல்ல விழத் தொடங்கியிருக்கின்றது. இந்தச் சுருக்குக் கயிற்றின் பின்னால் செயற்படும் பிரதான சூத்திரதாரிகள் ஜப்பானும் இந்தியாவுமே எனத் தமக்கு நெருக்கமான தரப்புகளிடம் திட்டித் தீர்த்திருக்கின்றார் ராஜபக்ஷே. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் அடக்கும் கொழும்பு அரசின் கொடூர ராணுவ நடவடிக்கைத் திட்டத்தின் உச்சக் கட்டம் கடந்த ஆண்டு முற்பகுதியில் உக்கிரமடைந்தபோது, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் வ…

    • 7 replies
    • 1.9k views
  22. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரனுடன் ஒரு சந்திப்பு… டென்மார்க்கில் வாழ்ந்து வரும் திரு. வேலுப்பிள்ளை மனோகரனை அலைகள் காரியாலயத்தில் சந்தித்துப் பேசினோம். அவர் தந்திருக்கும் நீண்ட அனுபவங்களை அலைகள் வாசகர்களுக்கு சுவைபட தருவதில் பெருமையடைகிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மூத்தவர் வேலுப்பிள்ளை மனோகரனாகும். தனது தம்பி ஓர் இனத்தின் தேசியத் தலைவராகவும், சகல அதிகாரங்களுடனும் வாழ்ந்தால் அண்ணனாக இருப்பவர் எத்தகைய அதிகாரமுடையவராக இருப்பார் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. ராஜபக்ஷ அதிபராக இருக்க அவருடைய சகோதரரும் மகனும் அரசியலில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணிக் கொண்டு அவர்களோடு வேலுப்பிள்ளை மன…

  23. இலங்கையும் சீனாவும் தங்களின் நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் ஆராய்வதற்கு இணங்கியுள்ளன. சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராயப்பட்டதாகவும்,இரு தரப்பும் இது குறித்து கருத்துபரிமாற்றத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இணங்கியத…

    • 24 replies
    • 1.9k views
  24. முதன்மையானது என்றால் என்ன? கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவது தான். சோபாக்க எனும் பிக்குவிடம் ஒரு முறை 'முதன்மையானது என்றால் என்ன?' எனப் புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் 'எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும் என்றாராம். இந்தக் கதையையே இலங்கையோடு ஒப்பிட்டு நோக்கினால், கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவது தான். விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளானது அந்த இனப்பிரச்சினையின் நோய் அறிகுறியொன்றென்பதைப் புரிந்து கொள்ளாதோர் இருந்தனரெனின் அவர்கள் தீவிர இனவாதிகளும் தற்சார்புவாதிகளும் மட்டும் தான். பண்டாரநா…

    • 0 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.