Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் சஜித் மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நேற்று (01) வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதன்படி சாவகச்சேரி, யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தினார். https://newuthayan.com/யாழில்-தேர்தல்-பிரச்சாரத/

    • 8 replies
    • 862 views
  2. காலி, ஹிரும்புரை முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன. வீசப்பட்ட கற்கள் பள்ளியினுள் வீழ்ந்து சிதறிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாமதித்ததையடுத்து நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் காலி பிரதேச பிரதம பொலிஸ்மா அதிபர் நீல் தலுவத்தையுடன் தொடர்பு கொண்டு உடனடியாக புலன் விசாரணை நடாத்துமாறும், பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும், அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=…

    • 8 replies
    • 597 views
  3. பிலிப்பைன்ஸில் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வீசிய போபா எனும் சூறாவளியினால் அழிவுக்குட்பட்ட வீடுகளை திருத்துவதற்காக இலங்கை 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடை நிதிக்கான காசோலையை பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத்தூதுவர் பெனட் கூரே பிலிப்பைன்ஸ் குடியரசின் வெளிவிவகார செயலாளரிம் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மணிலாவிலுள்ள வெளிவிவகார திணைக்களத்தில் வைத்து கையளித்தார். இந்த சூறாவளியினால் பல்லாயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்க்கை மிக மோசமாக பாதிப்பட்டது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59816--25-.html

  4. புலிகளின் முக்கிய செய்தி நோர்வேக்கு அனுப்பி வைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செய்தி ஒன்று நோர்வே அனுசரணையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த செய்தியின் உள்ளடக்கத்தை நோர்வே அனுசரணையாளர்களே வெளிப்படுத்துவர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது இவ்வாறிருக்க சம்பூர் பகுதியை நோக்கி முன்னேறும் தமது நடவடிக்கை தொடர்வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

  5. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இராணுவத்தின் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 100,000 ஆக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இராணுவத்தை மீளாய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சுமார் ஒரு இலட்சமாக குறைத்து இராணுவத்தை தொழில்நுட்பமயபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அ…

  6. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சரணடைவதற்கு 24 மணித்தியாலங்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று பாதுகாப்பு வலையம் மீது சிறீலங்கா இராணுவத்தினர் பாரிய இராணுவ நடவடிக்கையினை நடத்தியதில் 1000ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் சிறீலங்கா இராணுவத்தினர் கடும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தரப்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/srilanka/colomb...2009-04-…

  7. // தமிழீழ விடுதலைப்புப் புலிப் பெண் போராளிகள்.// ஈழ விடுதலைப் போராட்ட காலம் தந்தை செல்வா காலத்துக்கு முன், பின் என்று பிரிக்கப்பட்டு நோக்கப்படுவது அவசியம். தந்தை செல்வா காலம் வரை அகிம்சைப் போராட்டங்களே (சத்தியாக்கிரகங்கள்.. பேரணிகள்.. பேச்சு வார்த்தைகள்.. ஒப்பந்தங்கள்) தமிழர்களின் அரசியல் உரிமைக்கான முக்கிய போராட்ட வடிவங்களாக இருந்தன. இருந்தாலும் அவற்றின் தோல்வியும்.. அவை சிங்கள அரசுகளின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கத் தவறியமையே ஈழத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சியுரிமையுள்ள தமிழீழத்திற்கான தேவையையும் ஆயுதப் போராட்டத்திற்கான தேவையையும் உருவாக்கியது. ஆனால்.. இன்று.. தமிழீழ விடுதலைப்புலிகளின் 33 ஆண்டு கால ஆயுதம் போராட்டத்தால் தான் தமிழீழம் என்பது கனவானது.. இத்தனை …

    • 8 replies
    • 1.5k views
  8. வடக்கில் சீனாவின் தலையீட்டை தடுத்து நிறுத்தியது இந்தியா:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலங்கையின் வடக்கில் சீனாவில் தலையீட்டில் மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் விசேட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு பயணம் செய்து, இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. இலங்கையின் வடபகுதிக்குள் சீனா பிரவேசிப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய சவாலாக அமையும் …

    • 8 replies
    • 1k views
  9. அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கொழும்பும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கண்டனம் "ஆனால் காரணங்கள் வெவ்வேறு' ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர் மட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு கலந்துரையாடல்களின் பின்னரே மிகக் கவனமான முறையில் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும் விதத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வாஷிங்டன் கூறியுள்ளது. இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் புலம் பெயர்ந்த தமிழர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கண்டித்துள்ளனர். இந்தத் தீர்மானமானது தலையீடு செய்யும் நடவடிக்கையெனவும் நல்லிணக்கத்துக்கு உதவப் போவதில்லையெனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை பி…

  10. நீதித்துறையில் கசையடி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்! இலங்கையின் நீதித்துறையில் கசையடி அறிமுகப்படுத்தப்பட்டு,சிறு குற்றங்களை செய்தவர்களுக்கு 5 கசையடிகளும் பெருங்குற்றங்களை செய்தவர்களுக்கு 25 கசையடிகளும் வழங்கும் வகையில் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டார். இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு, இரண்டாவது நாளாக இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பொதுமகன் ஒருவரே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், தற்போது, நாட்டில்…

    • 8 replies
    • 859 views
  11. தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகளை சிறை வத்திருக்கும் வெலிகந்த முகாமில் இன்று கைகலப்பும் கலவரங்களும் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறை வைக்கப்பட்ட போராளிகளுக்கு இடைலேயே இரு குழுக்களாக இந்த மோதல் இடம்பெற்றதாக சிறைச்சாலைக்கு பொறுப்பான அபையகோன் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு குழுவில் இருந்த உறுப்பினர் மற்ற குழுவில் இருந்தவருக்கு கல்லால் எறிந்ததாகவும் அதனை தொடர்ந்தே இந்த கை கலப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலதிக விபரங்களை தெரிவிக்க சிறைசாலை அலுவலர் மறுத்து விட்டார்.

  12. சதி…சதி தினமணி தலையங்கம். அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை. விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. சனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில், அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது…

    • 8 replies
    • 1.9k views
  13. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் இளமைக்காலப் படங்களை நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வர்களான நாமலையும் யோஷிதவையும் தூக்கி வைத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் சிராந்தி ராஜபக்சவுடன் சிறுவனான நாமல் ராஜபக்ச இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=120349&category=TamilNews&language=tamil

  14. நாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை! இலங்கையில் தற்போது இருக்கும் அரசியல் நெருக்கடி நிலையை தீர்த்து ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த நாட்களாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமை தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சூனியிங் இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “இலங்கையின் பாரம்பரிய அயல் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் நிகழும் விடயங்களை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. நாங்கள் இலங்கையால் ஸ்திரத்தன்மையை நிலை நாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavan…

    • 8 replies
    • 1k views
  15. வடக்கு – கிழக்கில் சீனாவின் முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது : செல்வம் அடைக்கலநாதன்! தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். “இலங்கையிலே அபிவிருத்தி என்ற போர்வையிலே சீனாவினால் வீதிகள் போடப்பட்டன. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய லாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது. அதேபோல் போர்ட் சிட்டியும் …

    • 8 replies
    • 465 views
  16. ஹரிஹரன் இசை நிகழ்ச்சி - குழப்பம் - குற்றச்சாட்டு - விளக்கம் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு யார் காரணமென விளக்கமளித்துள்ள நொதேர்ண் யுனியின் (NORTHERN UNI) தலைவர் இந்திரகுமார் பத்மநாதன், பணம் செலுத்தி இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் விரும்பினால் பணத்தை மீளப்பெற முடியும் என்று அறிவித்துள்ளார். https://newuthayan.com/article/ஹரிஹரன்_இசை_நிகழ்ச்சி_-_குழப்பம்_-_குற்றச்சாட்டு_-_விளக்கம்

  17. புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமய வழிபாடுகள் நடைபெற்ற இடத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை மிலேச்சத்தனமானதென குறிப்பிட்ட பௌசி, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பௌசி வலியுறுத்தியுள்ளார். http://athavannews.com/புலிகள்-காலத்தில்கூட-இவ்/

    • 8 replies
    • 1.4k views
  18. ஜே.வி.பியின் பரப்புரை செயலாளரர் விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜே.வி.பியில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறிய விமல் வீரவங்சவிற்கும் அவருடைய சகாக்களுக்கும் ஜே.வி.பியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இதனை அடுத்தே விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்; இதேவேளை விமல் வீரவங்சவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதுடன் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது pathivu.com

    • 8 replies
    • 1.7k views
  19. தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழத்து விட்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, லண்டனில் வாழும் தமிழ் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  20. இந்தியா போரை பின்னால் இருந்து இயக்குகிறது - சீமான், அமீருடனான சந்திப்பின் பின்னர் வைகோ தெரிவிப்பு திகதி: 09.11.2008 // தமிழீழம் // [சோழன்] ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவர்களை மதுரையில் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளனர். சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: சிறீலங்கா அரசுக்கு ஆயுதம், ராடார், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து, போரை பின்னால் இருந்து இந்தியா இயக்குகிறது. பலாலி விமான தளத்தை புதுப்பித்து கொடுத்துள்ளது. இராணுவத்துக்கு ஆயுத உதவி செய்துள்ளது. இலங்கை தமிழர் கொல்லப்படுவதற்கு மன்மோகன் சிங் அரசுதான் காரணம். அந்த அரசில் இடம் ப…

    • 8 replies
    • 2.9k views
  21. இன்று காலை தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல் காண்பித்தல் ஆகியவை 1967ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப…

  22. நடைபெறவுள்ள நாடாளமன்றத் தேர்தலை முன்னிட்டு குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக பல தரப்பினர்களையும் நேர்காணல் செய்து வநதோம். அந்த வகையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் இருவரை நேர்காணல் செய்ய முற்பட்ட வேளை அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திட்டனர். அதில் எமக்கு நேர்காணல் தருவதாக கூறிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் குறித்த கேள்விகளை பார்த்துவிட்டு அவற்றுக்கு பதில் அளிக்க மறுத்திருக்கிறார். அதேவேளை குறித்த சம்பவத்தின் பின்னர் கேள்விகளை பார்க்காமலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நேர்ககாணல் செய்ய மறுப்பு தெரிவித்திருந்தார். குறித்த கேள்விகளை வாகசர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிற…

    • 8 replies
    • 1.4k views
  23. 3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் மூன்று நாட்களாக மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் தரித்து நின்ற- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ் -225 விமானம் நேற்று மாலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. மலேசியாவில் இருந்து 24 விமானப் பணியாளர்களுடன் வந்த இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் கடந்த 18ஆம் நாள் காலை 6.35 மணியளவில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் தரையிறக்கப்பட்ட இந்த விமானம் நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் மத்தலவில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் நோக்கிச் சென்றது. இந்த விமானம் மத்தல விமான நிலை…

  24. பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பைச் சேர்ந்த மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பைச் சேர்ந்த மதுஷிகன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் அடுத்த வாரம் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைக்கவுள்ளார். இதற்காக இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடையவுள்ளார். இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30கிலோ மீற்றர் தூரமுடைய நீரிணையை சுமார் 10 மணித்தியாலங்களில் நீந்திக் கரை சேருவதற்கு எதிர்பார்க்கிறார். ம…

  25. தற்போதைய மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் மிக விரைவில் கவிழும் அறிகுறி தென்படுவதாக சிறீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் கருத்து வெளியிட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் எதிர்ப்புக்களினால் தத்தமது தேர்தல் தொகுதிகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் அந்த அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். ராஜபக்‌ஷ குடும்ப சகிதம் மேற்கொண்டுவரும் பாரியளவிலான ஊழல், மோசடிகளைக் குறைந்தபட்சமாக குறைத்துக் கொண்டாலும், எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். http://www.eeladhesa...ndex.php?opti…

    • 8 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.