ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
செந்தூரனை மருத்துவமனைக்கு எடுத்த செல்ல நோயாளி அவசர ஊர்தி வந்துள்ளது. செந்தூரனின் நிலையை பார்த்தும் அலட்சியம் காட்டும் காவல் துறையை பாருங்கள். சக முகாம் வாசிகள் அவரை தூக்கிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். from facebook தற்போது செந்தூரனின் நிலை மிகவும் மோசம் அடைத்துள்ளது. கடுமையான வயிற்று வழியால் அவர் பாதிக்கப்பட்டு ஆசன வாயிலில் ரத்தமும் வெளியேறி வருகிறது. இன்று மாலை திடீரென்று செந்தூரன் மயக்கம் அடைந்தார் . அவரை உடனே முகாமில் உள்ள காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் கொண்டு சேர்த்தனர் சக முகாம் வாசிகள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் வழமை போல அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. இனிமேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் விட்டால் அவர் உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது
-
- 22 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வுக்கு எதிராக புலிகள் முறியடிப்புத் தாக்குதல் [திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2008, 07:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னேரிக்குளத்துக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இம் முறியடிப்புத் தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியின் மேற்குப்பகுதி களத்தில் வன்னேரிக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் முன்நகர்வுத் தாக்குதலை ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
வவுனியா மேற்குப் பகுதியில் உள்ள கிடாச்சூரிப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் புதிதாக உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழக மீனவர்களின் படகுகளை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை [ Tuesday,12 January 2016, 05:26:45 ] ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கி உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க மீன்பிடித்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை காரைநகர் மற்றும் காங்கேசன் துறை பகுதிக்குச் சென்று இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை பார்வையிட்டார். இதன் பின்னர் மீனவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் அரசு உடமையாக்கப்படும் இந்த…
-
- 39 replies
- 1.7k views
-
-
தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர்தான் எனினும் பயங்கரவாதிகள் அனைவரும் தமிழர்களே என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும், பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.7k views
-
-
புதிய... செயலியினை, உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டிலிருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். மிகத்துல்லியமான முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் த…
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு.. ராஜபக்ஷேவின் நாடகமா?! 'நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் காரைக்காலில் இருந்து, 18 படகுகளில் 112 மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். 'எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள்!’ என்று 15-ம் தேதி மதியம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் பிடிக்கப்பட்டு, 16-ம் தேதி மாலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்!’ என்று செய்தி வெளியானது. அடுத்து, 'நாகை மீனவர்களை, ஈழத்து மீனவர்கள்தான் சுற்றிவளைத்துப் பிடித்து, உள்ளூர் போலீஸிடம் ஒப்படைத்தார்கள்..!’ என்று இலங்கைத் தரப்பில் செய்தி வந்தது. எப்போதும் இல்லாதவகையில், 'நாகை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கைத் …
-
- 8 replies
- 1.7k views
-
-
திறந்த வெளிக்கள்முனைக்கு செல்லும் மன்னார் யுத்தம்-தினக்குரல் விதுரன் வன்னியில் திறந்தவெளிக்களமுனை ஒன்றுக்குள் படையினர் நுழையப் போகின்றனர். மன்னாரில் நடைபெறும் கடும் சமரானது இவ்வாறானதொரு புதிய களமுனையைக் காணப்போகிறது. கரையோரப் பகுதியை இலக்கு வைத்து நகரும் படையினர் அந்தப் பகுதிக்குள் செல்வதற்குள் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கப் போகின்றனர். ஆனாலும், இந்தக் களமுனையில் இதுவரையான சாதக நிலைமையை இனியும் பயன்படுத்த முடியுமெனப் படைத்தரப்பு கருதுகிறது. வடக்கே நான்கு முனைகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. வன்னிக்குள் மூன்று களமுனைகளும் யாழ்.குடாவில் ஒரு முனையும் திறக்கப்பட்டுள்ளன. வன்னியில், மன்னார் களமுனையே தற்போதைய நிலையில் தங்களுக்குச் சாதகமாயிருப்பதாக படைத்தர…
-
- 0 replies
- 1.7k views
-
-
அழுத்துக (firbox ல் மட்டும்) http://puspaviji.net/page134.html
-
- 0 replies
- 1.7k views
-
-
முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாகியமை. அதைப்போலவே வடக்குகிழக்கில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்பதாகும். மக…
-
-
- 19 replies
- 1.7k views
-
-
The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த நிகழ்ச்சியில் இப்படிக் கூறுகிறார். இலங்கையின் வேடுவர் பற்றி இது வரை இப்படி விரிவான ஒரு நூல் வந்ததில்லை. மார்ட்டின் விக்கிரமசிங்க போன்றோர் மிகவும் போற்றிய நூல் இது. செலிக்மன் அன்று இந்த ஆய்வை செய்யாது போயிருந்தால் நாம் வேடுவர் பற்றிய எஞ்சிய விபரங்களைக் கூட பெறாது போயிருப்போம். சிங்கள மொழியில் நூற்றுக்கணக்கான நூல்களைக் காண முடிகின்றன. ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் காண முடிகிறது. தமிழில் கட்டுரைகளாகக் காண்பது கூட அரிது. கடல் வேடுவரை “வெர்தாஸ்” (Ve…
-
- 0 replies
- 1.7k views
-
-
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதிகள் 110 பேர்… August 31, 2020 வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், அண்மையில் இந்த விபரத்தை ஐநா வெளியிட்டிருந்தது. அத்துடன் மே மாதம் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக்கொண்டபோதும் “வெள்ளைக் கொடி” சம்பவத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்றும் இந்த உண்மை மறுக்க முடியாதது என அண்மையில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் .. ஆதவா ( செயற்…
-
- 18 replies
- 1.7k views
-
-
மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: ஒரு போராளி உட்பட இருவர் உயிரிழந்தனர்! மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளி ஜெயானந்தன் மற்றும் வினோத் என்ற பொதுமகன் உயிரிழந்துள்ளனர் என்று தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் முள்ளிக்குளம் பகுதி வழையங்காட்டுப் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். உயிரிழந்த போராளி ஜெயானந்தன்இ ஏற்கனவே தனது ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலி…
-
- 1 reply
- 1.7k views
-
-
இன்னொரு 'விக்கிலீக்ஸ்' ஆக மாறியுள்ள ஸ்ரீரங்கா எம்.பி:ஜனாதிபதி மஹிந்தவின் இரகசியங்களை அம்பலப்படுத்தப் போகிறாராம் [Tuesday, 2011-03-22 12:04:08] ஜனாதிபதி என் முதுகில் குத்தி விட்டார் என்று விசனப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா, ஜனாதிபதியைப் பற்றி தனக்குத் தெரிந்த ரகசியங்களை வெளியிடவுள்ளதாக சபதம் செய்துள்ளார். முல்லைத்தீவின் உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் ஸ்ரீ ரங்காவின் கட்சியின் சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் கண்ட படுதோல்வியே பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா அவ்வாறு சபதம் செய்யக் காரணமாக அமைந்துள்ளது. முல்லைத்தீவில் ஆளுங்கட்சியின் சார்பில் தனது குழுவைத் தவிர வேறு யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என்று ஜனாதிபதியும், பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோ…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ் தீவகத்தில் சிறிலங்கா இராணுவத்தால் 6 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள வேலணை முடிப்பிள்ளையார் கோயிலடியில் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று அப்பாவி பொதுமக்கள் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேலணை முடிப்பிள்ளையார் கோயில் தேர்முட்டியில் இருந்த 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். அதன் பின்னர் கோயிலின் பூசகரை சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. -Puthinam-
-
- 4 replies
- 1.7k views
-
-
கனடியத் தமிழர்களே புறக்கணிப்போம் கொன்று ஆட்டம் போடும் சிங்கள இன வெறி அரசின் கொண்டாட்டத்தை புறக்கணிப்போம் எதிர்வரும் செப்ரம்பர் 20-21 திகதிகளில் காபர்புறன் சென்ரில் கனடிய சிங்கள அரசின் ஆதரவில் இவ் கொன்று ஆட்டம் நடைபெற இருக்கிறது கனடியத் தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழருக்கெதிரான கொன்று ஆட்டம் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் தொலைபேசி அழைப்பினூடாக உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள் Sri Lankan Festival September 20-21, 2008 HABOUR FRONT CENTER தொலைபேசி இலக்கம் 416-973-4000 மின்னஞ்சல் info@harbourfrontcentre.com http://tamilthesiyam.blogspot.com/2008/09/blog-post_15.html
-
- 0 replies
- 1.7k views
-
-
எத்தனை ஆண்டுகள் போனாலும் போர்க்குற்றம், மானிடப் பெரும் படுகொலைகள் போன்ற குற்றச் செயல்களை செய்த நாடுகள் அதிலிருந்து தப்பிவிட முடியாது என்பதற்கான இன்னொரு அழுத்தமான சம்பவம் நேற்று பிரான்சிய செனட்சபையில் நடைபெற்றுள்ளது. 1956 ம் ஆண்டில் இருந்து 2009 ம் ஆண்டுவரை இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் படுகொலைக்கான குற்றத்தை சிங்கள அரசு என்றாவது ஒரு நாள் ஏற்றேயாக வேண்டும் என்ற புதிய நம்பிக்கையை இந்த விவகாரம் தந்துள்ளது. கடந்த 1915 – 1916ம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்களை துருக்கி கொன்றொழித்தது. இது உகாண்டா, சிறீலங்காவில் நடைபெற்றது போன்ற மானிடப் படுகொலைகளை ஒத்ததாக இருக்கிறது. ஆண், பெண், குழந்தைகள், முதியோர் என்ற பேதம் பார்க்காமல் மக்களை கொன்றால் அத மானிட…
-
- 3 replies
- 1.7k views
-
-
பிரபாகரனின் அடியும் மஹிந்தவின் முடியும் பன்முகப்பட்ட ஜனநாயகம் ஏகத்துவம் மாற்றுக்கருத்து சுதந்திரம் ஒரு பார்வை: ராஜா பரமேஸ்வரி: 2009 ஆம் ஆண்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறந்து விட்டது. இந்தப் புத்தாண்டு நீலமாக பிறந்து விட்டதா என எண்ணத் தோன்றும் அளவிற்கு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி எடுத்து ஒடுகின்ற இரத்தத்தின் ஊடாக இலங்கை நீலநிறமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏறத்தாள இரண்டு தசாப்தங்களின் பின் முதன் முறையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெருநிலப்பரப்புக்கள் அரச படைகளிடம் வீழ்ந்த நிலையில் இந்தப் புத்தாண்டை மக்கள் எதிர்கொள்கின்றனர். கடும்போக்குவாத, அடிப்படைவாத, சிங்களவர்கள் மட்டும் அல்ல முற்போக்குவாத, புத்திஜீவித்தனமான சிங…
-
- 3 replies
- 1.7k views
-
-
05.02.12 ஹாட் டாபிக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், ஈழத்தமிழர்கள் விஷயமாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது, அந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியே சொல்லக்கூடாது என பிரதமர் அலுவலகத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது! தா.பாண்டியனுக்கு அப்படி என்னதான் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது என விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்... “இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த 2009-ம் ஆண்டு மே மாதம், மத்திய அரசை அதில் தலையிட வலியுறுத்தி டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் பிரதமரைச் சந்தித்தது. பெயரளவில் அது அனைத்துக் க…
-
- 3 replies
- 1.7k views
-
-
தென்செய்தியில் வெளிவந்த '' இராசபக்சே - பொன்சேகா மோதல்! இலங்கையில் இராணுவப் புரட்சி வெடிக்குமா? இலங்கைத் தரைப்படையின் முன்னாள் தலைமைத் தளபதியும் இப்போதைய கூட்டுப்படை தலைமைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை அதிபர் இராசபக்சே மெல்ல மெல்ல ஓரங்கட்டி வருகிறார். இருவருக்குமிடையே மோதல் வலுத்து வருகிறது. இலங்கைத் தரைப்படையின் தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா போர் வெற்றிக்குப் பிறகு - அவரைப் பாராட்டும் வகையில் - ஜெனரல் என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்டார். அதைப் போல கடற்படை, விமானப்படைத் தளபதிகளுக்கும் தகுதி உயர்த்தப்பட்டது. ஆனால் திடீரென பொன்சேகாவை தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் கூட்டுத் தலைமைத் தளபதியாக இராசபக்சே நியமித்தார். வெளிப்படையாகப் பார்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 14-02-2007 அன்று ஒளிபரப்பாகிய காலக்கணிப்பு www.tamils.info/index.php?subaction=showfull&id=1171482638&archive=&start_from=&ucat=&
-
- 1 reply
- 1.7k views
-
-
13 போராளிகள் - 1 தமிழீழ தேசிய துணைப் படை வீரரின் வீரச்சாவு அறிவித்தல்கள். தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 13 போராளிகளினதும் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது கப்டன் சோழன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் சோழன் என்று அழைக்கப்படும் மன்னா…
-
- 3 replies
- 1.7k views
-
-
கொழும்பு நாளேடு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 09:10 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வன்முறைகளைப் பூரணமாகக் கைவிடுவதாக தமிழீழத் தேசியத் தலைவர் உத்தரவாதக் கடிதம் தந்தாலே தவிர பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசு கலந்து கொள்ள மாட்டாது என முன்நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருடன் சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நிமால் சிறிபாலா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலர் எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார ஆகியோர் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகத் மேற்படி நாளேடு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதன் பின்பு, விடுதலைப் புலிகளால் ஒ…
-
- 5 replies
- 1.7k views
-
-
மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன 105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல் மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது. இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது. எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து …
-
- 6 replies
- 1.7k views
-