ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143568 topics in this forum
-
"நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது" “நீண்ட கால தமிழர் விடுதலை போராட்டம் ஆரம்ப காலத்தில் அஹிம்சை ரீதியில் முன்னெடுக்கப்பட்டு, தந்தை செல்வாவின் வழியில் வழி நடாத்தப்பட்டு, தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டமாக பரினமித்து தற்போது மீண்டும் அஹிம்சை ரீதியிலான ஒரு ஜனநாயக போராட்டத்தின் வழியில் வந்து நிற்கின்றோம் ” என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். சிவமோகன் தெரிவித்தார். மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தழிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரவித்தார். அவர் த…
-
- 8 replies
- 705 views
-
-
கொழும்பிற்கு வருகிறது ரஸ்யாவின் பாரிய ஏவுகணைப் போர்க் கப்பல் திகதி: 07.08.2010 ரஸ்யாவின் கருங்கடல் கப்பல் பிரிவின் பாரிய ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளது. மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக எதிர்வரும் 13ம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ள ரஸ்யப் போர்க்கப்பல் எதிர்வரும் 15ம் திகதி வரை இங்கு தரித்திருக்கும். ரஸ்யக் கடற்படையிடம் உள்ள மிகப்பெரிய ஏவுகணைப் போர்க்கப்பல்களில் ஒன்றான-'ஸ்லாவா' வகையைச் சேர்ந்த 'மொஸ்க்வா' என்ற போர்க்கப்பலே கொழும்பு வரவுள்ளது. இந்தக் கப்பல் 186.4 மீற்றர் நீளத்தைக் கொண்டது. இதில் 51 அதிகாரிகாரிகள் மற்றும் 464 கடற்படையினர் பணியாற்றுகின்றனர். இந்த பாரிய ஏவுகணைப் போர்க்கப்பல…
-
- 8 replies
- 1.6k views
-
-
நான்கு மாதங்களாக எந்தவொரு வைத்தியசாலைகளிலும் இன்சுலின் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இன்சுலின் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோயளர் ஒருவருக்கு வழங்கக்கூடிய சிகிச்சை என்ன என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது எனவும் இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என்றும் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். (a) Tamilmirror Online || இன்சுலின் இல்லை
-
- 8 replies
- 864 views
- 1 follower
-
-
தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ்! வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட வட மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விடயம் குறித்து, பிரதமரோடு கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வட மாகாணத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கும் போது தமிழ் மக்களுக…
-
- 8 replies
- 895 views
-
-
இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் - ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்…
-
- 8 replies
- 2.1k views
-
-
உயர்தர படை ஏவுனனான மகிந்த ஹத்திறுசிங்கா போராளிகளுக்கான மானிய கொடுப்பனவுகளை முடித்துக்கொண்டு உள்ளூர் பொதுமக்களை நோக்கி இந்த அறிவுறுத்தலை வெளிவிட்டார். புலிகள் தனி நாடு கேட்டுப் போரிட்டதால் எல்லா இனத்தவரும் கஸ்டப்பட்டார்கள் என்றார். பிரிவினைகளைத் தூண்டி தமது பணத்தை விரயமாக்கும் புலம் பெயர் தமிழ்க்கூட்டம் இங்கே வந்து இவர்களுக்கு உதவினால் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். புலிகளின் அதி உச்ச தலைவர்களை அழித்துத்தான் போராடத்தை முற்றுக்கொண்டு வந்ததாகவும் கூறினார். அரசாங்கம், புலம் பெயர் தமிழர், புலிகளை திரும்ப வளர்த்தெடுக்க காட்டும் முயற்சிகள் மீது ஒரு கண் வைத்திருப்பதாகவும் எச்சரித்திருக்கிறார். http://www.indianexp...e-wary/936754/0
-
- 8 replies
- 1.6k views
-
-
வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது adminJanuary 4, 2025 வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தென்பகுதியில் உள்ள தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட மாகாணத்தில் கூட்டுறவு துறையினூடாக உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட கூட்டுறவு சபை மற்றும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியும் இணைந்து தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள், விவ…
-
-
- 8 replies
- 591 views
-
-
இலங்கையில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்குச் சென்று வாழும் தேவ குமாரசிறி என்ற 40 வயது நபர் தான் பணியாற்றிய உபதபாலகத்துக்குவரும் வாடிக்கையாளர்களில் ஆங்கிலம் பேசத்தெரியாதவர்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியாதெனக் கூறி அவர்களைத் திருப்பியனுப்பியதன் விளைவாக தற்போது வேலையை இழந்து தவிக்கும் விசித்திரமான நிலைமை தொடர்பான செய்தியை வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம். மத்திய இங்கிலாந்தின் நொட்டிங்ஹொம் பகுதியில் உள்ள தபாலகத்துக்கு வந்த மக்களிடம் ஆங்கிலம் பேச வேண்டிய கட்டாயம் குறித்து குமாரசிறி வலியுறுத்தியதையடுத்து ஆட்சேபனைகள் கிளம்பின. தபாலகத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவர் வேறு ஒரு நகரத்துக்குச் சென்றார். அந்த நகரில் ப…
-
- 8 replies
- 1.6k views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸ் என்பவர் வேட்பாளர் பட்டியிலில் இடம்பெறாததையடுத்தே இந்த மறியல் போராட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் இளைஞர் ஒருவர் 'சிராஸ் அண்ணனை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளாவிட்டால் தீக்குளிப்பேன்' என்று சொல்லி அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த மண்னெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்ற முயற்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் தீக்கு…
-
- 8 replies
- 809 views
-
-
நான் தோற்றதைப் பற்றிக் கவலைப்படவில்லை இதனால் நாட்டுக்குத் தான் இழப்பு!!! வீ.ஆனந்தசங்கரி யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தோற்றுப்போன ' தமிழர் விடுதலைக் கூட்டணித்' தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறுகையில்; இது பெரிய மோசடியான தேர்தலாக நடந்தேறியிருக்கிறது. பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்து குடாநாட்டிற்கு வருகைதந்த அமைச்சர்கள் மக்களை ஏமாற்றினர். இதற்காக இங்கு வந்து சென்ற அமைச்சர்களும் அரசாங்கங்களும் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும். 18 வீத வாக்களிப்பே நடைபெற்றிருக்கின்றது. இதற்காக வரும் ஒரு உள்ளூராட்சித் தேர்தலுக்காக அரசு பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்திருக்கின்றது. மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தேர்தல். களியாட்டங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்டிருந்த கருத்து சரியாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சந்திரிக்கா பண்டாரநாயக் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ராஜபக்ஷ காலத்து இராணுவத்தினரின் பழக்கத்தின்படி சரணடைந்த அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் அவர்கள் அனைவரையும் கொன்றிருப்பார்களேயன்றி இவ்வளவு காலமும் தடுத்து வைத்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார். அவரின் கருத்துத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் த…
-
- 8 replies
- 724 views
-
-
தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருப்பதுடன் தமிழ் மக்களை பின்னடையச் செய்வதற்கான வழிவகைகளையும் அவர்கள் செய்கின்றனர்.ஜனாதிபதி மகிந்தவுக்கும், அரசாங்கத்திற்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே ஈ.பி.டி.பியினர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்று பி.ப 3மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தினால் மூளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரசாத் அரங்கில் 2014ஆம் ஆண்டிற்கான வாணிவிழா நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு,கிழக்கு போர்ச் சூழ்நிலையில் பின்தள்ளப்பட்டுள்ளது.இ…
-
- 8 replies
- 930 views
-
-
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சனல் 4 தொலைக்காட்சியின் கானொளி குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்பான சனல் 4 தொலைக்காட்சியின் கானொளி குறித்த அறிக்கை ஜெனிவாவில் நாளை (30.05.11) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான நீதிக்குப் புறம்பான வகையில் இடம்பெற்ற இப்படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே இந்தக் கானொளிப் பதிவு தொடர்பான விபரங்கள் உள்ளடக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடு…
-
- 8 replies
- 917 views
-
-
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, வேம்படி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார். அத்துடன், விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து, அதனூடாகவே கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இதேவேளை, மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழரசுக் கட்சி…
-
- 8 replies
- 928 views
-
-
மிஹின் எயார் வானூர்திகள் இரண்டு உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது மிஹின் எயார் வானூர்தி சேவையில் ஈடுபட்டிருந்த இரு வானூர்திகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஹின் எயார் வானூர்தி சேவை நட்டத்தில் செல்வதால் வானூர்திக்கான வாடகைகளை செலுத்த முடியாது போயுள்ளது. இதனை அடுத்து வானூர்தி வாடகை உரிமையாளர்களினால் வானூர்திகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது. -pathivu.com-
-
- 8 replies
- 2.5k views
-
-
-
பாலச்சந்திரன் கொலை தொடர்பாக இந்திய ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா ருடேயில் இடம்பெற்ற விவாதம்... காணொளியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6546:2013-02-22-13-00-45&catid=1:latest-news&Itemid=18
-
- 8 replies
- 854 views
-
-
வெளிநாட்டுக்கு விமானம் ஏற இருந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை வாலிபர் ஒருவர் திடீரென பறித்துச் சென்றது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிய மனமில்லாத காதலர்கள் நடத்திய நாடகம் என பின்னர் தெரியவந்தது. இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் xxxxx சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர். மனைவி xxxx (45), மகன் xxx (23), மகள் xxx (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியையாக விஜிதா பணியாற்றுகிறார். பிள்ளைகளுடன் xxxx ஒரு மாதம் முன்பு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். சென்னை போரூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியில் வசிப்பவர் xxxx (24). சென்னையில் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரும் யாழ்ப்பாணத்தை சேர…
-
- 8 replies
- 2.3k views
-
-
அகரவேல், சென்னை 04/11/2009, 19:25 சகோதரனைக் காப்பாற்றுமாறு மகிந்தா இந்தியாவிடம் உதவி!! உதவக்கூடாது என்கிறார் நெடுமாறன் கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது. சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவைத் தலையிட்டு தனது சகோ…
-
- 8 replies
- 1.3k views
-
-
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் நான்காவது பகுதி வெள்ளி (19.10.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இலங்கைத் தேர்தலும் எதிர்காலமும் என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் திரு.காதர் அவர்களுடன் கலந்துரையாடல் இடம் பெறும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த ஆய்வும், எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்த மதிப்பீடும், ஆய்வும் இடம்பெறும். இந்த நிகழ்வில் பங்காற்ற விரும்புவோர் நேரடியாக சன்றைஸ் வானொலியூடாகவோ அன்றி குரல்வெப் (kuralweb.com) இணையத் தளத்தினூடாகவோ தம்மை இணைத்துக் கொள்ளலாம். குரல்வெப் மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினா…
-
- 8 replies
- 725 views
-
-
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினரின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கியதேசியக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கியநாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால், தாருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய குழுநியமிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அறிக்கை வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் ஐக்கியதேசியக் கட்சி தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடவில்லை. குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் சிரேஸ்டஅரசாங்க உத்தியோகத்தரும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சி செய்த காலத்தில்அவரின் செயலாளராக கடமைய…
-
- 8 replies
- 749 views
-
-
மருதானை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு காலம் நிர்ணயிக்கப்பட்ட வீசா வழங்கும் நடைமுறையை அப்பிரதேச பொலிஸார் அமுல்படுத்தியுள்ளனர். இதற்கென வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு அமைய மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் தங்களது அனைத்து விபரங்களையும் இந்த விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தமிழ் பிரஜை தங்கியிருக்கக் கூடிய காலம் பொலிஸாரினால் நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்த கால எல்லையை குறிப்பிடும் புறம்பான பகுதியொன்றும் இந்த விண்ணப்பப்படிவத்தில் காணப்படுகிறது. இதேவேளை, முகத்துவார பிரதேச பொலிஸார் இதற்கு சற்று வித்தியாசமான விண்ணப்பபடிவத்தை தமிழ் மக்களுக்கு …
-
- 8 replies
- 2.3k views
-
-
[size=5]இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் - எதிர்கொள்ளும் தயாரிப்பில் சிறிலங்கா[/size] [size=4]இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்தியாவிற்கு அமெரிக்காவால் வழங்கப்படும் ஒத்துழைப்பானது சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். [/size] [size=4]இவ்வாறு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார் Dr Kamal Wickremasinghe. சிறிலங்காவை தளமாகக்கொண்ட Lakbimanews ஊடகத்தில் வெளிவந்த அந்த ஆய்வை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மார்ச் 2012ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்…
-
- 8 replies
- 1.4k views
-
-
வாடகை வாகனத்தில் செல்லும் அளவிற்கு 15ஆவது சார்க் மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எமக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். சார்க் மாநாட்டின் பாதுகாப்பு, ஆசன ஒதுக்கீடுகள் மற்றும் செலவுகள் தொடர்பில் சபையில் இன்று எழுந்த சர்ச்சையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச மாநாடுகளை நடத்துகின்ற போது சிறு சிறு தவறுகள் இடம்பெறும். எனினும், 15 ஆவது சார்க் மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாரா…
-
- 8 replies
- 1.9k views
-
-
பொலிஸார் மீது வாள்வெட்டு – சந்தேகநபர்களுக்கு மறியல் யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அதன்போதே இந்த உத்தரவு விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டது. http://uthayandaily.com/story/15836.html
-
- 8 replies
- 606 views
-