Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பஸில் எங்கே? வெள்ளி, 17 டிசம்பர் 2010 14:38 பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான பஸில் மஹிந்த ராஜபக்ஸவைக் கடந்த 9 ஆம் திகதி முதல் காணக் கிடைக்கவில்லையென ஊடகத்துறையினர் அங்கலாயத்துள்ளனர். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புகளில் கூட அவரைக் காணக் கிடைக்கவில்லையென ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஒன்பதாம் திகதியின் பின்னர் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதங்களில் இவர் கலந்து கொள்ளாமை, வாக்களிப்பில் பங்கு பெறாமை தொடர்பில் தற்போது அமைச்சர்கள் மட்டத்திலேயே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்னர் அவர் அமெரிக்கா சென்றிருந்தார் எனவும் பின்னர் நாடு திர…

  2. மனிதாபிமானத் திட்டங்களின் கீழான ஆஸி. விஸா விண்ணப்பங்கள் பெறுவதற்கு வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவுங்கள்!ஐ.நா. அகதிகள் அமைப்பிடம் அங்குள்ள தமிழ் கலாசாரக் கழகம் வேண்டுகோள் கொழும்பு,ஒக்.16 வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்காக ஆஸ்திரேலிய அரசினால் வழங்கப்படும் மனிதாபிமான "விஸா' திட்டத்திற்கு வடக்கு கிழக்கு மக்கள் விண்ணப்பிக்கும் வகையில் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாரக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இக்கழகம், அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்திற்கு வழங்கியுள்ள மகஜரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்காக ஆஸ்திரேலிய அ…

  3. யாழில் வாக்குப் பெட்டிகள் தேர்தலிற்கு முன்பே மாயம்! Saturday, July 23, 2011, 9:07 சிறீலங்கா 1977ம் மற்றும் 1981ம் ஆண்டு தேர்தல் வன்முறைகளை ஒத்த தேர்தல் வன்முறைச் செயற்பாடுகள் தேர்தல் ஆரம்பிப்பப்பதற்கு 14 மணி நேரமே உள்ள நிலையில் தற்போது வடக்கில் மிக வேகமாகத் தொடங்கியுள்ளன. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி யாழ் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களிற்கு பொறுப்பான தேர்தல் உத்தியோகத்தர்களிற்கு விநியோகிப்பதற்காக பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகளில் சுமார் 4,000 வாக்குகளை உள்ளடக்கிய வாக்களிப்பு நிலையங்களிற்கான பெட்டிகளை காணவில்லை எனத் தெரியவருகிறது. இந்த வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணியில் பொலிசாரும் அதற்குப் பாதுக…

  4. தமிழரசுக் கட்சியையும் த.தே.கூட்டமைப்பையும் கலைத்து விடுமாறு ஆனந்தசங்கரி கோரிக்கை [ வியாழக்கிழமை, 02 யூலை 2015, 12:23.18 PM GMT ] எனது புனிதமான கடமையாகக் கருதி தமிழரசுக் கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலைத்து விடுமாறு கேட்டுக் கொள்கினறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- தமிழ் மக்கள் சார்ந்த சகல நடவடிக்கைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக உரிமை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே உண்டு. பிரபல சட்டமாமேதைகளான (இராணி அப்புக்காத்து) தந்தை செல்வநாயகம்மும் அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலமும் 1942 களில்…

    • 7 replies
    • 843 views
  5. Published By: VISHNU 04 JUN, 2024 | 03:03 AM யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட வேளை, காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள், 05 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்…

  6. May 20, 2019 யாழ் வடமராட்சி கிழக்கை சேர்ந்த, முன்னாள் போராளி ஒருவர் கடற்தொழிலுக்குச் சென்ற வேளையில் வலிப்பு ஏற்பட்டு, கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் அமைப்பில் இருந்த அம்பிக்கோ என்றழைக்கப்படும் கமலதாஸ் அமலதாஸ் (அப்பையா) என்ற 34 வயதான முன்னாள் போராளியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். போரில் கடுமையான காயங்களுக்கு உள்ளான இவரது உடலில் செல் துண்டுகள் காணப்படுவதாகவும…

    • 7 replies
    • 713 views
  7. இலங்கை இனப் பிரச்சினைக்கு “தனி ஈழம்' ஒன்று தான் நிரந்தர தீர்வாக அமைய முடியும். இதற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தெரிவித்து வரும் கருத்தை பா.ஜ.க. முற்றிலும் நிராகரிப்பதாகவும் இது போன்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கையில்தான் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் மற்றும் இலங்கையின் தமிழர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் வலியுறுத்தி வருவதை எனது தலைமையிலான குழுவால் இலங்கையில் காண முடிந்தது. எதிர்க்கட்சித்தலைவர்சுஷ்மாசுவராஜுடன்ஸ்ரீரங்காஎம்.பி. சந்திப்பு இலங்கை தமிழ் எம்.பி. ஸ்ரீரங்கா மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்ஜ…

  8. இலங்கையில் பள்ளி ஒன்றில் இருந்த இயேசு கிறிஸ்து சிலையை இடித்து சிங்கள குண்டர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் வட மத்தியப் பகுதியில் உள்ள மின்னெரியா என்ற இடத்தில் உள்ள கான்வென்ட் பள்ளியில் இயேசு கிறிஸ்து சிலை ஒன்று இருந்தது. இந்நிலையில், அந்த சிலையை சிங்கள் புத்த பிக்கு வெறியர்கள் சிலர் அடித்து உடைத்து, இடித்து தள்ளிவிட்டனர்.அந்த சிலை இருந்த இடம் தற்போது முண்டமாக காட்சியளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ள தேசிய கத்தோலிக்க சபை, இலங்கையில் சிறுபான்மையினர்களே கிடையாது அனைவரும் இலங்கை குடிமக்களே என்று அதிபர் ராஜபக்சே அறிவித்த சில நாட்களுக்குள்ளாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அறிக்கை ஒன்றில் குறிப்பி…

    • 7 replies
    • 1.8k views
  9. இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் நாமல் ராஜபக்ச பெருமிதம் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தின் விவசாயப் பண்ணைகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பணிகளில் ஈடுபடுவது பெருமை அளிக்கிறது என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான பதிவொன்றை நாமல் ராஜபக்ச தனது கீச்சகத்திலும் பதிவிட்டுள்ளார். சுயவிருப்புடன் இராணுவத்தில் இணைக்கப்பட்டு…

  10. (எம்.மனோசித்ரா) இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பட்ட வளி மாசடைவின் தாக்கம் கடந்த சில தினங்களாக இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (12) திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, ஞாயிற்றுக்கிழமையுடன் ஒப்பிடும் போது சில மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை பாரியளவில் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் , சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவோர் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் , மேலும் ஓரிரு நாட்களுக்கு இந்நிலைமை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமைய காற்று தரக்குறியீடான…

  11. யாழ். கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகளின் மர்மம் என்ன 14 அக்டோபர் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- யாழ்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகள் தொடர்பினில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. சுமார் 350 ஏக்கர் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டு வரும் இப்பண்ணைகள் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கவும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவுமேயென கூறப்பட்டு வருகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது நேரடி வழி நடத்தலின் கீழேயே இந்த இறால் பண்ணைகள் உருவாகி வருகின்றன. …

  12. எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு [ சனிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2015, 05:28.03 PM GMT ] சித்தாண்டியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. சித்தாண்டி பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இப் பரப்புரை கூட்டத்தில் மாவை.சேனாதிராஜா உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர். மாவட்டம் தோறும் நடைபெறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டம்…

  13. சிங்கள அரசின் நாடாளுமன்ற அமைச்சர் கலாநிதி மேவின் சில்வா தனது அமைச்சர் பதவியுடன் நாடளுமன்ற அங்கத்தவர் பதவியையும் இராஜீனாமச் செய்ய உத்தேசித்துள்ளதாக தற்போது ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இவர் தனது பேச்சினாலும் செயல்களினாலும் பயங்கரவாதத்தை அப்பாவிகளின் மேல் கட்டவிழ்த்து விட்டதனால் கடந்த சில மாதங்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அடிபட்டவர். தனது குண்டர்படையுடன் பல ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாகினி தொலைக்காட்சியகத்துள் நுழைந்து செய்திப்பணிப்பளரைத் தாக்கி காயப்படுத்தியதுடன் அங்கு பணிபுரிந்தவர்களால் நையப்புடைக்கபட்டு பொலிஸாரின் துணையுடன் தப்பி வந்தது யாவரும் அறிந்ததே. இவரது செயல்கள் பல ஊடக தனிப்பட்ட அமைப்புக்கள் கண்டித்திருந்தன. அரசி…

    • 7 replies
    • 1.9k views
  14. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]இந்தியாவிலேயே அதிக வயது கூடிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் ஒரு இலங்கைத் தமிழர் என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கைத் தமிழரான சரவணபவன் என்பவர் தம்மீதான அவதானிப்பு சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அவருக்கு தற்போது 50 வயதாகிறது.[/size][/size] [size=3][size=4]சென்னை பல்கலைக்கழகத்தின் 170 வருட கால வரலாற்றில், 50 வயது மாணவர் ஒருவர் கல்வி பயிலும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=3][size=4]அவர் இரண்டாம் வகுப்பு பரீட்சையை மாத்திரம் 16 வருடங்களாக எழுதியிருப்பத…

    • 7 replies
    • 1.6k views
  15. யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி! பலரிடம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்க…

  16. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27916 இந்த உறவுகள் செய்த பாவம் என்ன.. சிங்கள இனவெறியின் குண்டுக்குப் பயந்து இடம்பெயர்வதும் குற்றமா..???! சிங்கள தேசத்தின் மீது ஒரு அணுகுண்டு போட்டாலும்.. இதற்கு ஈடாகாது..! சிங்கள இனத்தையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற உணர்வுதான் எழுகிறது..!

    • 7 replies
    • 1.3k views
  17. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர். இதற்கமைய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உள்ளவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான இக்குழுவினர் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசீர் வாதம் பெற்றுள்ளனர். யாழ் ஆயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற இச் சந்திப்பில் ஆயரிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட முன்னணியினர் சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர். இதேவேளை நேற்றையதினம் நல்லை ஆதீனத்திற்குச் சென்ற மேற்படி முன்னணியின் குழுவினர் நல்லை ஆதீனக் குரு முதல்வரைச் சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதுடன் சமகால நிலைமைகள் தொடர்பிலும் கலந்துர…

  18. த ஐலன்ட் எனும் சிங்களவர்களது தளத்துக்கு கனடாவில் இருக்கும் ஒருவர் எழுதிய குறிப்பை தமிழ் மக்கள் படிக்க வேண்டும் என்ற தேவை என்னால் உணரப்படுவதால் இங்கே இணைக்கின்றேன். Palitha Kohona, Please take note! Since the defeat of the LTTE by the Sri Lankan military, Sri Lankans should be aware that the propaganda war of the LTTE, run very efficiently for the past 30 years from outside the country, has redoubled their efforts to attack Sri Lanka. The most visible attempt to save the LTTE was the thousands demonstrating in capitals throughout the world. In Canada they are still on the streets! LTTE supporters in Canada have taken on the government of Sri Lanka by demanding tha…

  19. ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் சிறிலங்கா அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், "தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் பொருளாதார அபிவிருத்தியின் பங்கு" என்ற தலைப்பில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார். ஆனால் திடீரென இறுதி நேரத்தல் அவ…

  20. இலங்கையில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று உத்தரவாதம் இல்லை சத்தாதிஸ்ஸ தேரர் பரப்புரை நாட்டில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, படைக்குறைப்புச் செய்யும் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் மேலும் தெரிவித்ததாவது: தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு பெண்களே பெரும் பங்களிப்பு வழங்கினர். வீடு வீடாக சென்று அந்தக் கட்சியின் பெண்கள் பொய்யுரைத்தனர். எனவே, அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு எமது அணியிலுள்ள பெண்களுக்கு உள்ளது. மக்கள் மனம் அறிந்து சேவையாற்றுவதே சிறந்தது. நுகேகொடையில் இருந்து கொழும்புவரை …

  21. சிறிலங்காவில் தொடர்ந்தும் மனிதஉரிமைகள் மீறப்படுவதாகவும், பொறுப்புக்கூறுவதற்கோ, அரசியல்தீர்வுக்கோ உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் கனேடிய குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜாசன் கென்னி. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று காலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசியல் ரீதியிலான நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மனிதஉரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இது தொடர்பாக கனடா அக்கறை செலுத்தி வருகிறது. சிறிலங்கா அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது இது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளேன். போரின்போது இரு தரப்பினராலும் இழைக்கப…

    • 7 replies
    • 779 views
  22. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை 25 ஜனவரி 2013 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பண்டாரநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்திஷூடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புது டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றதன் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்திஷ் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், திடீரென இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திரிக்கா ஏன் சந்தித்த…

  23. என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது:ஈழத்தமிழருக்காக கவிஞர் வைரமுத்து ஆவேசம் கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார். வைரமுத்து பேசும்போது, ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது. உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை. உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன்…

  24. எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் : திடுக்கிடும் தகவல் on 05-09-2009 18:54 சமீபத்தில் வெளியான இலங்கை இராணுவத்தின் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகளை, இலங்கைக்கான ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு சேனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்டிருந்தது. அது தொடர்பாக உடனே விசனம் தெரிவித்த நோர்வே அமைச்சரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம், தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அது பொய்யான வீடியோ எனக் கூறியுள்ளார். இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன்தான் பேச இருப்பதாகவும், இது ஒரு போர்க்குற்றம் எனவும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவந்த எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கை அரசின் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு முறை தமிழர்கள…

  25. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய மிளகாய் விநியோகஸ்தர்களுக்கான பணம் செலுத்தப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய இறக்குமதியாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், கடந்த சில மாதங்களாக இந்திய மிளகாய் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்திய மதிப்பில் 250-300 கோடிக்கு மேல் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடனை செலுத்தாதது குறித்து இதுவரை முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அவ்வாறு முறைப்பாடு தெரிவித்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடலாம் எனவும் விநியோகஸ்தர்கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.