ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143592 topics in this forum
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான நியமிக்கப்பட்டமைக்கு தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் குறித்து தமது கட்சி எதிர்ப்பு தெரிவிக்காத போதிலும் இதில் தமக்கு உடன்பாடில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத்திலிருந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டமை குறித்து கட்சி என்ற ரீதியில் திருப்தியடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 999 அப்பாவிப் பொதுமக்களை கொண்டதன் பின்னர் அங்குலி மாலா பௌத்த பிக்குவாக மாறியதனை அவர் இதன் போது நினைவூட்டினார். http://www.tamilskynews.com/index.php…
-
- 0 replies
- 1.6k views
-
-
சற்று நேரத்திற்கு முன் பாரளுமன்றத்தில் அரசுத்தரப்பிலிருந்து அநுரபண்டரநாயக்கா எதிர்த்தரப்பு ஆசனத்தில் வந்தமர்நததாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றில் ஜே.வி.பியின் விமல் வீரவன்ச அரசை எதிர்த்து கடுமையான பேசிக்கொண்டிருக்கும் போது அநுரா பண்டாரநாயக்கா எதிர்த்தரப்பு ஆசனத்தில் வந்தமர்ந்ததக அறியவருகின்றது. ஜானா
-
- 3 replies
- 1.6k views
-
-
பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020 ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் பொதுச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு, நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதானது பொது சேவையை தவறான கலாச்சாரத்திற்கு வழிநடத்துவதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படைத் தலைமையகம், ரெஜிமென்ட் மையங்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் 51 இராணுவ பயிற்சி நிரலையங்களில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ள…
-
- 8 replies
- 1.6k views
-
-
போராட்டத்திற்கு மக்கள் வழங்கிய சொத்துக்களை பதுக்கியவர்கள் வரலாற்றின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது மக்கள் பலமாக இருந்தால்தான் போராட்டம். மக்களை பலவீனமாக வைத்துக்கொண்டு எந்தப் போராட்டத்தையும் நடத்த முடியாது. எனவே மக்கள் போராட்டத்திற்கு வழங்கிய சொத்துக்களை பதுக்குவது திருட்டை விட மோசமானது என “ஈழம் இ நியூஸ்” (www.eelamenews.com) இற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர். கேள்வி : முள்ளிவாய்க்கால் படுகொலைக…
-
- 5 replies
- 1.6k views
-
-
வாக்களிப்பு பற்றிய செய்திகளையும் கணக்கெடுப்பு விபரங்களையும் அறிய இங்கே அழுத்துங்கள்
-
- 6 replies
- 1.6k views
-
-
பதினைந்தாவது „சார்க்“ மாநாட்டை சிறீலங்காவில் நடத்துவது பற்றிய செய்திகள்… சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பற்றிய செய்திகளையும் விட அல்லது அமெரிக்க இந்திய அரசியல் மாற்றங்களை விடவும் முக்கியமானதாக பேசப்படவேண்டும் என்ற தோரணையில், சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிங்களப் பேரினவாதிகள் உலக மகா நாடகமொன்றை அரங்கேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனை சரியாக அவதானித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் சாணக்கியம் பொதிந்த குண்டொன்றை (சமாதானக் குண்டு) மகிந்த ராஜபக்சவின் பக்கம் உருட்டி விட்டதும், அவர் உட்பட சிங்களப் பேரினவாதிகள் திக்குமுக்காடித்தான் போனார்கள். விபரம் http://www.swissmurasam.info/content/view/8056/31/
-
- 0 replies
- 1.6k views
-
-
தள்ளாடி படைத்தளம் மீது புலிகள் தாக்குதல்: படையினர் இருவர் படுகாயம் [Monday December 17 2007 01:57:29 PM GMT] [யாழ் வாணன்] மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் படையினர் இருவர் படுகாயமடைந்தனர். மன்னார் தள்ளாடி உள்ளிட்ட சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதிகள் மீது இன்று திங்கட்கிழமை காலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தள்ளாடி படைத்தளத்தில் பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் படையினர் இருவர் படுகாயமடைந்து மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மருத்துவமனையில் இன்று அதிகளவு சிறிலங்காப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். http://tamilwin.ne…
-
- 0 replies
- 1.6k views
-
-
June 17, 2019 கிழக்கு மாகாணம் திருகோணமலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த புத்தர் சிலை சிறுபான்மை மத மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத இன ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை நகரமும் மாவட்டமும் தனது அடையாளங்களை இழந்து வருகின்றது. 2005ஆம் ஆண்டு சமாதான காலத்தில் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை தொடர்ந்து அங்கு பல முரண்பாடுகள் ஏற்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. திருகோணமலை நகர சபையின் அனுமதியின்றி, அமைதிக்கு பங்கம் விளை…
-
- 5 replies
- 1.6k views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 4, 2010 குருநாகல் மாவட்டத்தில் 48 மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்டுக்கொண்டிருந்தபோது பொலிசாரால் முற்றுகையிடப்பட்டனர். குருனாகல் மாவட்டத்தில் 54 அறைகொண்ட ஹோட்டல் ஒன்றில் மாணவிகளை அழைத்து வெளினாட்டில் வருபவர்களுக்குவிலைபேசி விபச்சாரம் செய்தல் நடைபெற்றுவந்துள்ளது. ஓர் அரசியல்வாதியின் அனுசரணையில் இந்த ஹோட்டல் இயங்கிவந்துள்ளது. உள்ளூர்வாசிகளின் தகவலை அடுத்து இந்த ஹோட்டல் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டபோது 48 மாணவிகள் அங்கு இருந்தனர். இவர்கள் தம் பெற்றோர்களிடம் டியூசன் கிளாஸ் போகின்றோம் என சொல்லிவிட்டு வந்ததாகவும் பொலிசார் கூறினர். ஆனால் குறித்த ஓர் வசதி படைத்த திருமணமான ஆணும் பெண்ணும் குறித்த ஹோட்டலை வாடகைக்கு அமர்த்தி அங்கு விசேட வகு…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவர். இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்க்கோசி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர…
-
- 7 replies
- 1.6k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமும், படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
வரலாற்றின் வழிகாட்டுதலில் "கிளைமோர் முறியடிப்பு" வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளைமோர்த் தாக்குதல்கள் என இப்போது தினசரி செய்திகள் வெளிவருகின்றன. சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரே இவ்வாறு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள். இதற்கு துணை இராணுவக் குழுக்களின் உதவியும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த போதிலும், அண்மையில் ஆழ ஊடுருவும் படையணிகளைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகள் விரித்த வலையில் அகப்பட்டுள்ளார்கள். இதில் படையினர் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த முறியடிப்பானது பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆழ ஊடுருவும் படையைப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை முன்னாள் சட்ட மா அதிபரும், அரசியல் சாசன சட்ட வல்லுனருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார். அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்த குழுவில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவில் வதியும் சிவா பசுபதி, கடந்த வாரம் தனிப்பட்ட ரீதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். தொலைபேசி மூலம் விக்னேஸ்வரன் இந்த அழைப்பினை விடுத்திருந்தார் எனவும், தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்றியம் அவசியம் கிடையாது என சிவா பசுபதி தெரிவ…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தினையும் மாவீரர்களையும் தமிழ்நாட்டுத்தமிழர்களின் தமிழுணர்வையும் இழிவுபடுத்தி இன்று(அக்டோபர் 14) கட்டுரை வெளியிட்ட பாசிச "THE HINDU" பத்திரிக்கையினை கண்டித்து கோயம்பத்தூரில் ஆதித்தமிழர் பேரவையின் வழக்கறிஞர் தோழர் வெண்மணி தலைமையில் 15 க்கும் மேற்பட்ட தமிழின வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு இந்து நாளிதழின் அலுவகம் முன்பு இன்று மதியம் இந்து நாளிதழை தீக்கிரையாக்கி இந்து நாளிதழின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து முழக்கமிட்டு கைதானார்கள். இணைப்பு - 2 இந்து நாளிதழிழை எரித்த தமிழக தோழர்கள் மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்து நாளிதழிழை எரித்த தோழர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டார்கள். மேலும் மதியம் வழக்கறிஞர்கள் கைது செய்ய…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பமாகிய பொங்குதமிழ் உரிமை முழக்க பேரணி கடும் மழையின் மத்தியிலும் தொடர்ந்தவண்ணமுள்ளதாக ஜெனிவாவில் உள்ள ஈழதேசத்தின் சிறப்பு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் பொங்குதமிழ் உரிமைமுழக்க பேரணி ஜெனிவாவில் உள்ள முருகதாசன் திடலை சென்றடைந்துவிடும் என்று மேலும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார். பேரணியில் நாற்புறங்களும் அதிரும் வண்ணம் பறை முழங்க ஆங்கிலத்திலும் சுவிஸ் மொழியிலும் கோஷங்கள் முழங்க பேரணி தொடர்வதாகவும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதியின் போது புலத்தில் உணரப்பட்ட அதி உச்ச உணர்வலைகள் உணரப்படுவதோடு இதை பார்க்கும் போது தமிழீழ தனிநாட்டை மீட்டெடுப்பதற்கான வீச்சு இன்னும் பலம…
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ்க் குடாநாட்டின் வான் பரப்பில் தனியார் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குடாநாட்டில் பட்டங்கள் பறப்பதற்கும் படையினர் தடை விதித்துள்ளனர். யாழ்க் குடாநாட்டில் தற்போதைய பருவ காலநிலையில் பட்டங்கள் பறக்க விடுவது என்பது வழமையான விடயமாகும். இந்த நிலையில் படையினரால் பட்டங்கள் பறக்க விடப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 6 replies
- 1.6k views
-
-
சம்மாந்துறை கோரக்கர் கோயில் கிராமத்திலுள்ள அகோரமாரியம்மன் ஆலயமும் அதேவளாகத்திலுள்ள பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ஆலயத்தில் சுற்றியிருந்த பரிவாரமூர்த்தி ஆலயங்களில் உள்ள சுவாமிகள் சுருவங்களை இனம் தெரியாத விசமிகளால் உடைத்து தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர். வழமைபோல இன்று வெள்ளிக்கிழமை ஆலயத்தின் பூஜைக்காக கதவைத்திறந்து உள்ளே சென்றபோது ஆலயத்தைச் சுற்றியுள்ள 9 பரிவாரமூர்த்தி ஆலயங்களில் 7 ஆலயங்கள் உடைக்கப்பட்டு இங்கு உள்ளிருந்த லிங்கங்கள், தகர்தெடுக்கப்பட்டு வெளியில் மணலில் தலைகீழாக புதைக்கப்பட்டுள்ளன அதேவேளை அங்கிருந்த சாமிபடங்கள் வெளியே எடுக்கப்பட்டு மணலினுள் புதைக்கப்படட்டு ம…
-
- 10 replies
- 1.6k views
-
-
(ஆர்.யசி) பட்டிக்கலோ கம்பஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு தயாரித்திருந்த அறிக்கையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும், மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கும் அனுப்பிவைக்க துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்துள்ளது. கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று பாராளுமன்ற குழு அறையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்துள்ளது. அதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பட்டிக்கலோ கம்பஸ் (பிரைவட்) லிமிடட் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக்குழு 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை அப்போதைய அரசாங்க…
-
- 11 replies
- 1.6k views
-
-
சித்திரைப் புத்தாண்டையொட்டி புதிய ஆடை களை விற்பதாகக் கூறி பழைய ஆடைகளையும் கிழிந்த பழுதடைந்த உடைகளையுமே வியாபாரிகள் விற்பனை செய்துள்ளதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். மலிவு விற்பனை என்ற பெயரில் வீதியோரங்களில் உடுப்புக்களைப் பரப்பி விற்பனை செய்த வியாபாரிகளே இவ்வாறு மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சித்திரைப்புத்தாண்டையொட்டி நூற்றுக்கணக்கான தென்பகுதி வியாபாரிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்குச் சென்று வீதியோரங்களில் உடு புடவைகளைக் குவித்து வைத்து விற்பனை செய்துள்ளனர். இவ்வாறான விற்பனையிலேயே மோசடி இடம்பெற்றிருப்பதாக தெவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் புத்தாண்டையொட்டி விற்பனை செய்யப்படுகின்ற பிஸ்கட்டுகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் மோசடி இடம் பெற…
-
- 0 replies
- 1.6k views
-
-
களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்திலோ கண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார் - இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்று இடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றன கண் கலங்கிடக் கண்டனங்கள் பொழிகின்றன அய்.நா. சபையும் அப்படியொரு முடிவெடுத்து அறிவிக்க ஆயத்தமான போது; கம்யூனிஸ்ட் சீனா மட்டும் கண்டிப்பு காட்டி அதனைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டு தீவிரவாதிகளைத் தீர்த்துக்கட்டத் தான் வேண்டுமென்று திடமாய் உரைத்ததாம் - அய்யோ; கம்யூனிஸ்டுகளே - இங்கே இலங்கையில் போர் நிறுத்தம் என்று இரட்டை வேடம் போடுகின்றீர்களே; இது நியாயந்தானா? நன்றி : நக்கீர…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ் மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களால் காரைநகரில் அறுக்கப்பட்டு நாசம் 2011-02-14 05:52:16 நேற்றைய தினமும் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டிருப்பதாக அப்பிரதேச மீன்பிடி சமாஜம் அறிவித்துள்ளது. மீனவர் பிரச்சினை குறித்து இரு தரப்பு மீனவர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைமூலம் தீர்வொன்றை எட்டுவது குறித்த கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகப் பிரதான அதிகாரி மகாலிங்கத்திற்கும், யாழ் மீனவர் கூட்டுறவுச் சங்கங்க ளின் சமாஜப் பிரதிநிதிகளுக்குமிடையில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றிருந்தது. இந்தியத் துணைத்தூதரக அதிகாரியின் அழைப்பின் பேரிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக யாழ். மீனவர் கூட்டுறவு…
-
- 8 replies
- 1.6k views
-
-
Joint New Year Message from World-wide Tamil Organizations and Entities: A Solemn Pledge to Work for Justice, Protection, and Freedom of the Tamil People January 01, 2015 On this New Year’s Day, January 1, 2015, Tamil organizations and entities around the world pledge our renewed commitment to bring dignity, freedom, justice, and peace to our Tamil brethren living in the occupied NorthEast region constituting the Tamil Nation in the island of Sri Lanka. We are united in our quest for freedom for our people who have been oppressed by successive Sri Lankan regimes. We thank the International Community for leading and supporting the Resolution at the March 2014 Sessi…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரபாகரன் உருவான காரணத்தை நியாயப்படுத்தினார் மைத்திரி! நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரி, தான் பெற்ற அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், ”ரயில் பயணம் தொடர்பில் எனக்கு அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு 7, 8 மணித்தியாலங்கள் பயணிக்கும் தபால் ரயில் சேவை உள்ளது. அந்த ரயில் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும். எனது பெற்றோர், அப்போது…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவுத்தளமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரி தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அரச துறை துணை உதவிச் செயலாளரான டொனால்ட் கேம்ப் இந்தச் செய்தியை கொழும்பில் விட்டிருக்கின்றார். இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சக்திகள் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றன. ஏற்கனவே இந்தியா விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்தது. இந்தியா தடை செய்த போது கொழும்பு அரசியல் விமர்சகர்கள் இனி விடுதலைப்புலிகளால் தலைநிமிர முடியாது எனக் கூறி வந்தனர். ஆனால் இந்தியாவின…
-
- 2 replies
- 1.6k views
-
-
தேயிலைத் தோட்டங்களுக்கு சீனா வியட்நாமில் இருந்து பௌத்த மத யுவதிகளை அழைத்துவருவோம் - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு மீண்டும் பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்பட்டிருக்குமாயின், அந்த தீவை மீண்டும் இந்தியாவுக்கு கொடுக்குமாறும், அத்துடன் ஒரு நிபந்தனையை மாத்திரம் இந்தியாவுக்கு முன்வைக்குமாறும் லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசாங்கம் இதற்கு விருப்பம் தெரிவித்தால், தாமதமின்றி, அந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள்…
-
- 2 replies
- 1.6k views
-