Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டின் எதிர்காலத்திற்காக... அனைவரையும் ஒன்றிணைப்பதே, நோக்கம் – ஜனாதிபதி ரணில் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உலகில் ஏனைய நாடுகள் சாதனைகளுடன் நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்லும் போது... நாம், ஒன்றிணையாத காரணத்தினால் பின்னோக்கி செல்வதாக... ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வரலாற்று தவறை சரிசெய்து அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க…

  2. ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல் – 01 [ புதன்கிழமை, 05 சனவரி 2011, 00:03 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம் இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான போராட்டம் துளிர்விட்டது தொடக்கம் இன்றுவரை மிக முக்கியமான, நேரடியான அனைத்துலக தலையீடுகளை [international Intervention] குறைந்தது மூன்று சக்திகள் மேற்கொண்டிருக்கின்றன. 01. வேவ்வேறு காலகட்டங்களிலான இந்தியாவின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீடு. 02. நோர்வேயை மத்தியஸ்தராக முதன்மைப்படுத்தி பின்னிருந்து செயற்பட்ட மேற்குலகின் வகிபாகம். 03. நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இடம்பெறும் இலங்கைத் தீவுடன் …

    • 6 replies
    • 927 views
  3. இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தனது முழுநேர அங்கத்தவரொருவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் அவரின் மரணச் சடங்குக்கான செலவை வழங்கும் செயல் திட்டமொன்றை அண்மையில் சங்கத் தலைமையகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தபோது மரணித்த அங்கத்தவரின் மனைவிக்கு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை பொதுச் செயலாளர் கே. வேலாயுதத்தின் ஏற்பாட்டில் வழங்கப்படுவதை இங்கு காணலாம். இறந்த பின் 75000 கொடுப்பதனை விட இறக்கு முன் அவ் தொழிலாளிக்கும் அவரை சார்ந்தவருக்கும் அவரின் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பெற போராடினாலே போதும் அல்லது இரந்த பின் வழங்கும் பணத்தை பயன்படுத்தி கல்வி சமுக கலாச்சார பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவார்கலே ஆனால் இறந்தபின் 75000 கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து

  4. விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயத் தேவைகளுக்காக சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விடுத்தால் தென் மாகாணத்திற்கு 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி…

  5. மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புதிய கல்வி மாற்றத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கூட மாணவர்கள் வருகைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற வேண்டும். அதன்படி, எதிர்காலத்தில் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது அனைத்து தரங்களுக்கும் பொருந்தும் என்றார். 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரு மண்டபத்தில் கூட்டி சொற்பொழிவு செய்வதன் மூலம் கல்வி என்பது அடையக்கூடிய ஒன்று அல்ல என்றும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் உட்பட ஆரம்ப வகுப்புகளில் பயிலும் மாணவர…

  6. லெப். ஆழிசையின் வித்துடல் முழுப்படைய மதிப்புடன் விதைப்பு [புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 20:04 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27.08.07) சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். ஆழிசை என்ற மாவீரரின் வித்துடல் இன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக முழங்காவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தேசியப் பணிக்குழுச் செயலாளர் ராஜன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி நம்பி ஏற்றினார். ஈகச்சடரேற்றி மலர்மாலையை மாவீரரின் பெற்றோர் அணிவ…

    • 6 replies
    • 1.9k views
  7. சிறிலங்காவில் நாளை பாரிய வேலை நிறுத்தம்: தடுத்து நிறுத்துவதற்கு அரசு கங்கணம் [புதன்கிழமை, 09 யூலை 2008, 05:27 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவில் சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது போக்குவரத்துச் சேவைகளை முடிந்தால் முடக்கிப் பார்க்கப்பட்டும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சவால் விடுத்துள்ளார். போக்குவரத்துச் சேவைகளை நாளை நிறுத்திக் காட்டாவிடின் தனது தொழிற்சங்க தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவருமான லால் காந்த பதிலுக்கு சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் சிறிலங்காவில் பெரும் பூதாகார…

    • 6 replies
    • 1.3k views
  8. 2008 மாசித் திங்களிற்கு முன்னர்.. யுத்த நிறுத்த ஒப்பந்தந்தை முறிக்கும் முன்னரே யுத்த நிறுத்த காலத்தில் படைநடவடிக்கை எடுத்து கிழக்கு மாகாணம் முழுவதையும் கைப்பற்றி புலிகளற்ற கிழக்கில் செயற்கைத் தனமான அறிக்கை விடியலை ஏற்படுத்தி.. கேக் வெட்டிக் கொண்டாடிய சிறீலங்காச் சிங்களப் பேரினவாத அரசும் அதன் அருவருடி ஆயுதக்கும்பல்களும் இன்று கிழக்கில் புலிகள் வளர்ந்துவிட்டனராம் என்று அறிக்கை சமர்ப்பித்திருப்பதோடு கடந்த இரண்டு மாதங்களில் கிழக்கில் - தெந்தமிழீழத்தில் துரோகக் கும்பல்கள் மற்றும் சிங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே இந்த நிலையை சமாளிக்க சிறீலங்கா சிங்களப் பேரினவாதப்படைகளுடன் இணைந்து தாம் செயற்பட இருப்…

  9. வவுனியாவில் வன்னித் தமிழ் மக்களை சிறை வைக்க அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளிச் சிறைகள். அப்போ வன்னி மக்களுக்கு வன்னியில் வாழ வழி இல்லைப் போல...! :mellow: படங்கள்: டெயிலிமிரர்.எல்கே

  10. தமிழீழ விடுதலைப் புலிகளுடன்... எந்தத் தொடர்பும், இல்லை – தலிபான்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது கடந்த 20 ஆண்டுகளாக தமது நாட்டின் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உலகின் மிக…

    • 6 replies
    • 765 views
  11. வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது. "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது தெரிவித்தது. இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத்…

    • 6 replies
    • 2.7k views
  12. ஆயிஷாவைக் கொலை செய்ததாக... சந்தேகநபர், வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது! பண்டாரகம – அதுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின்மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் மரணம் தொடர்பாக பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை விசாரணைகள் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன. இந்தப் பரிசோதனையில் சிறுமி பாலியல் பலா…

  13. வீரகேசரி இணையம் 8/11/2011 8:21:03 PM சீனா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு கௌரவ கலாநிதிப் பட்டமொன்றை வழங்கியுள்ளது. சீனாவின் வெளிநாட்டு மொழிக் கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகமே இந்தக் கௌரவத்தை வழங்கியுள்ளது. இதற்கென இன்று அங்கு ஒரு விழா எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33221

  14. SLMCயின் தலைவர் றவூவ் ஹக்கீம் மீண்டும் ஒரு முறை SORRY கேட்கப் போகிறார் 10 செப்டம்பர் 2012 UNPயிடம் அல்ல - தனது மதிப்பிற்குரிய நல்ல நண்பரான சம்பந்தனிடம் மட்டுமே - குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- கிழக்கு மாகாண சபை குறித்து சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் அதேவேளை தவிர்க்க முடியாதவாறு ஆதரவை வழங்கவேண்டிய இக்கட்டான நிலையை மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் உருவாக்குவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு அமைவாக மகிந்த சிந்தனையின் ராஜதந்திர காய் நகர்த்தல்களை ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டி…

  15. ஏப்ரல் 21 குண்டுதாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹசிமுடன் தற்கொலை குண்டு தாக்குதலுக்காக சத்தியபிரமாணம் மேற்கொண்டவர்களில் ஒருவர் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாகவும் அவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள செயற்பாட்டு பணியகத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் சுகத் அமரசிங்க வழங்கிய சாட்சியத்தின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவர், கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த பிரதான அதிகாரியாவார். குறித்த தாக்குதலின் பின்னர் முற்பகல் 10.45 மணியளவில் கட்டுவ…

  16. சட்டச் சிக்கல்களுடன் அரசுக்கு எதிராக மஹிந்த தலைமையில் பாதயாத்திரை LIVE BLOG 2016-07-28 09:33:01 ஒன்றிணைந்த எதிரணியினர் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒழுங்கு செய்துள்ள ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர். 2016-07-28 09:08:02 நீதிமன்றங்களின் உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார். …

  17.  புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை - எம்.றொசாந்த் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய்வாய்ப்படுவதாகவும், மர்மமான முறையில் மரணமடைவதாகவும், மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு, விட…

  18. வீரகேசரி இணையம் "வடக்கில் அண்மைக் காலமாக பல பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கொழும்பு துறைமுகத்தினூடாகவே பெறப்பட்டு அங்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்தும் எவ்வாறு விடுதலைப்புலிகளைச் சென்றடைந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என கெஹெலிய ரம்புக்வெல இன்று தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : "இடம்பெயந்து வரும் மக்கள் மனிக்பாம் போன்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் சிலர் கல்வி இழந்துள்ளனர். அவர்களின் நலன்கருதி சிறிய அளவில் கல்வி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நலன்புரி முகாம்களுக்குச் சென்று …

  19. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் போராளிகள் படையினரால் கொல்லப்பட்டது தொடர்பில் விஜய் நம்பியாரைக் பாதுகாக்கும் முயற்சிகள் ரகசியமாக நடந்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெள்ளைக் கொடியுடன் விடுதலைப் புலிகள் இயக்க மூத்த தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைய வந்தபோது அவர்கள் அனைவரும் கோத்தபயா ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது விஜய் நம்பியார் கொழும்பில் இருந்ததாக கூறப்படுகிறது. விஜய் நம்பியார் கொடுத்த உறுதிமொழியை நம்பித்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் சரணடையச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விவகாரத்தில் நம்பியாரின் தொடர்புகளும் தற்போது வலுவாக ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால் நம்பிய…

    • 6 replies
    • 2.7k views
  20. கொழும்பு: வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வீட்டை இலங்கை ராணுவத்தினர் முற்றாக அழித்துள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, பிரபாகரன் வீட்டைப் பார்க்க திரண்டு வரும் சுற்றுலாப் பயணிகளையும் ராணுவத்தினர் தடுத்து அனுப்புகிறார்கள். வடமராட்சியில் வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. போரில் புலிகள் தோல்விக்குப் பிறகு, இந்தப் பகுதியை ஏராளமான தமிழ் மற்றும் சிங்களர்கள் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் முதலில் விரும்பிப் பார்க்கும் இடம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித் துறை வீட்டைத்தான். இந்த நிலையில், வன்னி உள்ளிட்ட வடக்குப் பகுதியில் புலிகளின் ஆளுகையின்போது…

  21. ஜி எஸ் பியை மேலும் நீடிக்க நிபந்தனை இலங்கை அரசாங்கம் தெளிவாக வரையறுக்கப்பட்ட மனித உரிமை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் தரும் பட்சத்தில் அந்த நாட்டுக்கான ஜி எஸ் பி ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் அண்மைக் காலங்களில் வெளியான தகவல்கள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றிய வணிக ஆணையத்தின் சார்பிலான பேச்சாளர் ஜோண் கிளன்ஸி அவர்கள், ''ஜி எஸ் பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை ரத்துச் செய்யாமல் மேலும் ஒரு மட்டுப்படுத்…

  22. 11 AUG, 2023 | 01:35 PM வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் மன்றத்தினர் கூறுகையில், ஒவ்வொரு சைவ ஆதாரங்களையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நினைப்பதும், அதற்கான கண்டனங்கள் வெளிநாடுகள் வரை சென்று எதிரொலிக்கும்போது தமது செயற்பாடுகளிலிருந்து திணைக்களம் தற்காலிகமாக பின்வாங்குவதும் என்று சைவ மக்கள் தமது அடையாளங்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்துவரும் துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் செல்வது மிகவும் க…

  23. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை நிர்மூலமாக்கும் பணிகள் சற்று நேரத்துக்கு முன்னர் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்துக்குத் தெரிவித்தார். தேசியத் தலைவரின் வீட்டை முழுமையாக நிர்மூலமாக்குவதற்காகப் பாரிய இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு இடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார் http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9…

  24. யாழ். புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம் ; 6 பேர் கைது ; மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை Published By: VISHNU 20 DEC, 2023 | 02:53 PM யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே வேளை அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு, அவர்களை பொலிஸார் கடுமையாக எச்சரித்ததுடன், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை வழங்கி பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸா…

  25. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்கான நோக்கங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை என அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் ஹனீபா மதானி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு, ஹனீபா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இணைந்து கொண்ட போதிலும் முஸ்லிம் மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களோ அல்லது அபிவிருத்தி திட்டங்களில் பங்களிப்போ வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2011ம் ஆண்டு முதல் அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வாக்களித்த மக்களுக்கு நன்மைகளை வழங்கத் தவற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.