ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
அமெரிக்காவை அடுத்து பிரித்தானியாவும், சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வோர், வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்குப் பொறுப்பான ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயுதக்குழுக்கள் சிறிலங்காவில் செயற்படுவதை மனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் அரிதாகவே இடம்பெறுகின்ற போதிலும், அங்கு சிறார்கள் உள்ளிட்டவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே குறிப்பாக பெண்கள், தனியாகவோ சிறிய குழுவாகவோ பயணம் செய்யும் போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற…
-
- 2 replies
- 1.5k views
-
-
கணவன், மனைவி பிரிவது போல் தமிழ், சிங்கள மக்கள் பிரிய முடியாது! - அமைச்சர் டலஸ் அழகப்பெரும இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் சதோதரர்கள் போல வாழ்வதால் கணவன், மனைவி பிரிந்து விடுவது போல் அவர்கள் பிரிந்து விட முடியாது என சிறிலங்காவின் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று (06.06.11) புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'தமிழ்,சிங்கள மக்கள் ஏன் பிரிந்து வாழமுடியாது என அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார். க…
-
- 3 replies
- 1.5k views
-
-
உதவி வழங்கும் நாடுகளை பகைத்துக் கொள்ளக் கூடாது [20 - May - 2007 இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் உறவைப்பகைத்துக் கொள்ளும் விதத்திலேயே இலங்கை அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் காணப்படுகின்றன. இந்தச் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாகத் தென்பட வில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்தானது இலங்கையைப் பொறுத்த மட்டில் ஒரு சஞ்சலமான நிலையைத் தோற்றுவித்திருப்பதையே காணமுடிகின்றது. இனப்பிரச்சினை எமது உள்நாட்டு விவகாரம். அதனை நாங்களே பேசித்தீர்த்துக்கொள்வோம். இதில் வெளியார் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறுவதானது காலம் கடந்து போன கதையாகும். 25,30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைப்பாட்டை இன்று கைக்கொள்வது கேலிக்கூத்தான தொன்றாகவே நோக்க முடியும்…
-
- 2 replies
- 1.5k views
-
-
15 வயதுடைய சிறுவயது பிக்கு ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18339
-
- 17 replies
- 1.5k views
-
-
காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி! நீந்தி வந்து கரையேறிய அதிசயம்!! ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந் நிலையில் இவர்கள் இருவரும் இரகசியத் திருமணம் செய்வதற்காக நெடுந்தீவுப் பகுதிக்குச் செல்லத் தீர்மானித்திருந்தனர். இதன்படி அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பிளாஸ்ரிக் படகு மூலம் நெடுந்தீவுக்கான பயணத்தை ஆரம்பித்தனர். இதனிடையே தனது காதலனுடன் இரகசியத் திருமணம் செய்ய நெடுந்தீவுக்குப் புறப்படுவதற்கு முன் குறித்த பெண் தனது வீட்டில் இருந்த 75 ஆயிரம் ரூபாய்களையும், 25 பவுண் நகைகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். எனவே இதனை அபகரிக்கும் திட்டத்துடன் காதலனும், பிளாஸ்ரிக் படக…
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை adminSeptember 5, 2024 யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையதம்பி ஜெயக்குமார் எனும் முதியவரே அவ்வாறு கோரியுள்ளார். குறித்த முதியவர் ஒரு காலை இழந்து, நோய்வாய்ப்பட்டு ஆதரவற்ற நிலையில் மானிப்பாய் உதயதாரகை சன சமூக நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தஞ்சமடைந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்க முயற்சிகளை எடுத்தனர். முதியோர் இல்லங்…
-
-
- 17 replies
- 1.5k views
- 2 followers
-
-
இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியும் சீனாவின் அமோக வெற்றியும்! சீனாவின் இராஜதந்திரம் மெல்ல மெல்ல மேற்காக நகர்ந்து தென்னாசியாவில் இந்தியாவின் குரல்வளையை ஏறத்தாழ பிடித்துவிட்டது. மேற்கண்ட கருத்தை அமெரிக்கா முன் வைத்துள்ளது. முதலாவது இந்திய பார்ப்பனிய இராஜதந்திரம் அடிப்படை துவேஷம் கொண்டது என்பதால் அது தனக்கு அயலில் உள்ள அத்தனை தென்னாசிய நாடுகளையும் ஆண்டான் அடிமை நிலையில் பார்த்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு தென்னாசியாவில் உள்ள அத்தனை நாடுகளின் இரகசியமான முதல் எதிரியாக இந்தியா மாறியது. எல்லா நாடுகளும் இந்தியா நமது தொப்புள் கொடி உறவு, இந்தியாவை பகைத்து எதுவுமே செய்ய முடியாது என்று பேசியபடியே இரகசியமாக சீனாவுடன் கை கோர்த்துவிட்டன. இந்தியாவுக்கு ஆதரவாக இ…
-
- 7 replies
- 1.5k views
-
-
நயினாதீவுக்கு - நாகதீபவுக்கு வேண்டும் ஒரு "ம்" [ Wednesday, 16 December 2015 ,04:56:47 ] இலங்கையின் அரசியல் நிலவரங்கள் பிராந்திய, மற்றும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப் போர்களின் சங்கூது தரவையாக காணப்படுகின்றன. இவற்றில் இந்தியா, சீனா, அமெரிக்கா என களத்தில் அடையாளம் காட்டும் பெரிய நாடுகளும் சிறிய கேந்திர நாடுகளும் கபடியாடிக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு அரசியலில் பேரினவாதம் சாயம் வெளுக்காமல் சால்வைகள் மட்டும் மாறிக் காணப்படுகின்றன. ஏதோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாற்றம் விரும்பிய எங்கள் மக்களுக்கும் விதிப்பயன் இயங்கத் தொடங்கிவிட்டது. எங்கள் அரசியல் வழிநடத்துநர்கள் ஒத்தூதிகளாக - நல்லபிள்ளைகளாக - எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டியும் உள்ளுக்குள்ளே கலம்பம…
-
- 19 replies
- 1.5k views
-
-
யாழில் ரிச்சர்ட் பௌச்சர் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்தார். யாழ். பலாலி வான்படைத் தளத்துக்கு இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் சிறப்பு வானூர்தி மூலம் ரிச்சர்ட் பௌச்சர் சென்றடைந்தார். அதன் பின்னர் முற்பகல் 11.15 மணியளவில் பலாலி சிறிலங்கா படைத் தலைமையகத்தில் சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுடன் ரிச்சர்ட் பௌச்சர் ஆலோசனை நடத்தினார். யாழ். அரச செயலகத்துக்குச் சென்று அரச அதிபர் கணேசையும் ரிச்சர்ட் பௌச்சர் சந்தித்துப் பேசினார். யாழ். மாவட்ட நிலைமைகள் குறித்து ஆராயப்பட்ட இச்சந்திப்பில் அரசாங்க உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். யாழ். நிலைமைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்கப் …
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கான உல்லாசப் பயணிகளைத் தடுக்க எந்த நாட்டுக்கும் அதிகாரம் இல்லை: சரத் என் சில்வா [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 19:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] அனைத்துலக நாடுகளுடன் ஒப்பந்தங்களை சிறிலங்கா மேற்கொண்டுள்ள நிலையில் சில நாடுகள் தமது நாட்டவர்களை சிறிலங்காவுக்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவிக்க அதிகாரம் ஏதும் இல்லை என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். உலக மயமாக்கல் குறித்து கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் அவர் பேசியதாவது: உலக மயமாக்கலின் கீழ் சிறிலங்கா அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கும் உடன்படிக்கைகளுக்கு அமைய இந்நாட்டு உல்லாசப் பயண சேவையைப் பெற விரும்பும் வெளிநாட்டு பயணிக்கு தடைகளை ஏற்படுத்த எந்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
[size=5]இலங்கையின் மகர சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, பலியான தமிழ்க் கைதி ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.[/size] [size=4]இறந்தவரின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றால், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று பொலிசார் தெரிவித்த கருத்துக்கள் ஒரு நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.[/size] [size=3] [size=4]பலியான கணேசன் நிமலரூபன் உடலை ராகமப் பகுதியிலேயே அடக்கம் செய்யும்படி நீதிபதி தெரிவித்துள்ளதை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்களில் ஒருவரான குகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.[/size][/size] [size=4]மகர சிறைச்சாலையில், நிமலரூபன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையிலேயே ம…
-
- 6 replies
- 1.5k views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமை அறிமுகம்: www.globaltamilnews.com கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்க ஏற்படக் கூடிய சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக விமான நிலைய முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.5k views
-
-
-வை எல் எஸ் ஹமீட்- அண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய ராஜ்ய” என்பது ‘ஒற்றையாட்சி’ அல்ல; என்று நூறு தடவைகள் விளங்கப்படுத்திவிட்டதாகவும் ஆனால் தமிழ் ஊடகங்கள் அது ‘ ஒற்றையாட்சி’ என்றே இன்னும் எழுதுவதாகவும் குறைபட்டிருக்கின்றார். பிரதமர் தமிழில் ‘ ஒற்றையாட்சி ‘ என்றா மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருப்பார்? சிங்களத்தில் “ ஏக்கிய ராஜ்ய” என்றுதான் கூறியிருப்பார். ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியில்லை; என்றும் அவர் கூறியிருக்கின்றார். தற்போதைய யாப்பு ஒற்றையாட்சியாகும்; என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை சிங்களத்தி…
-
- 11 replies
- 1.5k views
-
-
[Friday March 30 2007 05:55:36 AM GMT] [uthayan.com] விடுதலைப் புலிகளின் "வான் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் தோன்றி உள்ள ஸ்திரமற்ற நிலை குறித்து இந்தியாவின் பாதுகாப்புச் சபையில் நேற்று நீண்ட நேரம் மிக விரிவாக ஆராயப்பட்டது. இந்தியா அமைச்சரவையின் பாதுகாப்புக் குழுவின் (CCS) மேற்படி கூட்டம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையில் நடைபெற்றது. வான் புலிகளின் தாக்குதலால் இலங்கை யின் பாதுகாப்புக்கு முன்னெடுக்கப்படக்கூடிய மாற்றங்கள் அதேவேளை, இந்தியாவின் தமிழகத்தின் பாதுகாப்பு நிலைவரத்தில் உண்டாகக் கூடிய மாற்றங்கள் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கலாம் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது விடயத்தில் இ…
-
- 3 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/files/110726_kp_part2.mp3
-
- 14 replies
- 1.5k views
-
-
Oct 3, 2010 / பகுதி: செய்தி / யாழில் வெளிவருகின்றது – துணைஇராணுவக்குழுவின் பத்திரிகை சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் தினமுரசு என்ற வாரஏட்டை வெளியிட்டுவரும் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி கட்சி அதனை யாழில் தினசரியாக வெளியிடத் தீர்மானித்துள்ளது. அதன் முதல் பிரதியை துணை இராணுவக்குழுவின் தலைவரும், சிறீலங்கா அரசின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் யாழில் வெளியிட்டு வைத்துள்ளார். யாழில் இருந்து உதயன், வலம்புரி, யாழ் தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் தற்போது வெளிவருகின்றன. இதனிடையே, முன்னர் வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையின் பணியாளர்களை பயமுறுத்தி தனது தினசரியில் பணிபுரிய தேவானந்தா நிர்ப்பந்தித்துள்ளதாகவும் யாழ் தக…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் [ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 11:14.02 AM GMT +05:30 ] தமிழ் தேசியக்கூட்டமைப்பை பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கான திகதி எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 6.30க்கு இடம்பெறும் என தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சந்திப்பில் பங்கேற்பது தொடர்பாக தாம் எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்த…
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கை - இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா - லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 14 replies
- 1.5k views
-
-
பெரும் வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி "சார்க்' திரு விழா கொழும்பில் நடந்து முடிந்துவிட்டது. பாதுகாப்பு என்ற பெயரில் ஏகக் கெடுபிடி, நெருக்கடி களைத் தலைநகரத்து மக்கள் சார்க்கின் பெயரால் அனுப விக்க வேண்டியதாயிற்று. சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையை சுளையாக விழுங்கி, ஏப்பம் விட்டதோடு ஒருவாரகால "சார்க்' ஆரவாரம் முடிவுக்கு வந்திருக்கின்றது. "சார்க்' ஏற்பாடுகள் மற்றும் தடல்புடல் ஒழுங்குகளைப் பார்க்கும்போது உண்மைச் செலவினம் மேற்படி உத்தேசச் செலவினத்தைத் தாண்டி மேலும் பல கோடி ரூபாவை எட்டலாம் என்று கருதப்படுகின்றது. "சார்க்'கின் பெயரால் வாரி இறைக்கப்பட்டு, வீண் விரயம் செய்யப்பட்ட நாட்டின் நிதி மற்றும் பொருளாதார வளம் என்னவென்பது இனித்தான் மெல்ல மெல்ல அறிய தெரிய …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையின் உண்மையான வரலாறு புரியாது பிதற்றிக்கொண்டிருக்கிறது ஜாதிக ஹெலஉறுமய' இலங்கையின் உண்மையான வரலாறு தெரியாது பிதற்றுகின்றார் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கண்டியிலிருந்து ஆட்சி புரிந்த தமிழகம் இருந்து வந்த தமிழர்கள் யார் என்பது சம்பிக்க ரணவக்க அறியாதது ஏன்? ஹெல உறுமய இந்நாடு பௌத்தர்களுக்குரிய நாடாக மட்டும் இருக்கக்கூடியதாக இருக்கவேண்டும் எனப்பகற்கனவு காண்கின்றது. வடக்கு கிழக்கு இந்நாட்டு தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியென்பது வரலாற்று சான்று கொண்டது போல மேலகம் வாழ் தமிழர்களுக்கும் இங்கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழக அனைத்து கட்சிக்கூட்டத் தீர்மானம் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கருத்து [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 07:00 பி.ப ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து புதுடில்லியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் மன்மோகன்சிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மன்மோகன்சிங் அளித்துள்ள பதில்: இலங்கை சம்பவங்கள் வேதனையளிக்கிறது. டில்லியில் உள்ள சிறிலங்கா தூதர அதிகாரியை அழைத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் நிலவரங்களைக் கேட்டறிந்தார். இலங்கைத் த…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை “நமது நோக்கு” என்ற ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது. சிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத…
-
- 0 replies
- 1.5k views
-
-
அறிவு, சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் - எழுவரையும் விடுதலை செய்க! - தியாகு இராசீவ் காந்தி கொலை வழக்கு பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) படி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது என்பதும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் தெரிந்த செய்தியே, தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால் மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது என்பதும் கூட தெரிந்த செய்தியே. எஞ்சிய எழுவரில் நால்வருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது; மூவருக்குக் குற்றத் தீர்ப்பு உறுதி ச…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 12:24 PM தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். “வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று திங்கட்கிழமை (26) கொழும்பில் வெள…
-
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் தமிழின அழிப்புக்கு இந்திய இராணுவம் ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. அந்த ஆயதங்களை தாய்தமிழகம் வழியாக அனுப்பிவைக்கப்படுகிறது. இதை கண்டித்து தஞ்சையில் உள்ள அரசுக்கு சொந்தமான இராணுவ விமான தளத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தஞ்சை.மணியரசன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழுணர்வாளர்கள் விமான தளத்தை நோக்கி ஊர்வலம் போனார்கள். விமான நிலையத்திற்கு முன்பாக அவர்களை மறித்த தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார், டி.எஸ்.பி இளம்பரிதி ஆகியோர் தலைமையிலான 100 போலிஸார் போராட்ட குழுவை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுப்பு வைத்து தடுத்தனர். தடையை மீறி விமான நிலையத்தை நோக்கி …
-
- 9 replies
- 1.5k views
-