ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று சந்தித்து கலந்து உரையாடியதுடன் தனது நோர்வேப் பயணம் குறித்தும் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
[size=5]நிலக் கபளீகரத்துக்கெதிராக அனைத்துலக ஆதரவினை வெல்வது எவ்வாறு?[/size] [size=4]தாயகத்திலும் புலத்திலும் சிங்களத்தின் நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக அனைத்துலகக் கவனத்தினை ஈர்ப்பதற்கான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. போராட்டங்கள் சிறிய அளவிலேயே நடைபெற்றாலும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நடைபெற்ற போராட்டங்கள் என்ற வகையிலும் மே 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாயகத்திலும் புலத்திலும் ஒரே நோக்கத்துக்காக ஒரே நேரத்தில் நடைபெற்ற போராட்டங்கள் என்ற வகையிலும் இப் போராட்டங்கள் கவனத்தினை ஈர்க்கின்றன.[/size] [size=4]ஈழத் தமிழ்த் தேசிய இனம் தற்போது எதிர்நோக்கும் மிகப் பெரும் ஆபத்தும் சவாலும் தமிழர் தாயகப் பகுதிகள் சிங்களத்தால் மிக வேகமாக கபளீகரம் செய்யப்படுவதனை…
-
- 6 replies
- 685 views
-
-
[size=4]லண்டனில் உண்ணாவிரதம் இருக்கும் சிவந்தன் தனது போராட்டத்தைக் கைவிடக் கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-[/size] [size=4]அடிப்படை வாழ்வுரிமைகளோ, அரசியல் உரிமைகளோ இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையை, உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, லண்டன் மாநகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நாளிலிருந்து, ஈழத் தமிழ் இளைஞர் சிவந்தன் கோபி காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் செய்தி, அனைவரது நெஞ்சங்களிலும் கலக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=4]ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், மறு வாழ்விற்காகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்…
-
- 6 replies
- 912 views
-
-
இந்தியாவின் இராணுவ உதவியில்லாமல் யுத்தம் முடிந்திருக்காது – மஹிந்த இந்தியாவின் உதவியில்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் ரைம்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் “இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் பாகிஸ்தான் அளித்தது. இந்தியாவும் கூட இலங்கைக்கு உதவி செய்தது. ஆனால் அதை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை. இந்தியாவின் உதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளுடனான யுத…
-
- 6 replies
- 1.2k views
-
-
’இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வை பெருமையுடன் அவதானித்தேன்’ இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்றபோது, ஓர் இளம் சிறுவனாக, நேரடியாக பிரசன்னமாயிருந்து மிகவும் பெருமையுடன் அவதானித்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று 03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரைநிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "இலங்கை சுதந்திரம் பெற்றபோது, நாங்கள் ஐக்க…
-
- 6 replies
- 528 views
-
-
பிரபாகரனே என் தலைவர் -டாக்டர் பி. இராமசாமி உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார். இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் உறுதுணையாக இருந்தவர்கள்.இந்திய அரசாங்கமுமஇ தமிழ்நாட்டு அரசாங்கமும் தான் இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று அவர் சொன்னார். இலங்கை நாட்டு அதிபர் இராஜபக்சே இந்தியாவிற்கு துணிச்சலாக வருவதற்கு இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் கொடுத்த ஆதரவினால் அந்த இன படுகொலையாளி இந்தியாவிற்க்கு துணிச்சலாக வருகிறார் இலங்கை தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்தியாவை குறை சொன்ன எனக்கு தடை விதித்தாலு…
-
- 6 replies
- 1.2k views
-
-
வவுனியா நகரசபையை கூட்டமைப்பு இழந்தையடுத்து கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து குழப்பம்! வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டனி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள் என அங்கு வந்திருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்ப…
-
- 6 replies
- 703 views
-
-
பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதன் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும்: சரத் பொன்சேகா பிரிவினைவாதத்துக்கான பொது எதிரியை அழித்தொழிப்பதிலும் எமது தாய்நாட்டின் ஒருங்கிணைப்பைக் கட்டிகாப்பதிலும் நாங்கள் ஒன்று சேர்ந்து முன்வந்துள்ளோம் என்று சிறிலங்கா இராணுவத்தினருக்கான புத்தாண்டுச் செய்தியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இந்த நாட்டைப் பிரிக்கும் நோக்கில் பல பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறுகின்றன காட்டுமிராண்டித்தனமான பிரிவினை சக்திகளால் முடிவற்ற குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன வருகின்றன என்று கூறிய அவர் இந்நிலையில் கட்டுப்பாடுடனும் ஒழுங்கோடும் மனித உரிமையைக் காக்கும் வகையில் செயற்படும் தமது இராணுவத்தினரை அவர் பாராட்டினார். நாட்டின் அனைத்துக் குடிமக்க…
-
- 6 replies
- 1.7k views
-
-
'' புலிகளின் வான் தாக்குதலால் உடைந்த இராணுவ சமநிலை'' விடுதலைப் புலிகளிடம் வான் கலங்கள் உள்ளதென்பதை அறிந்த அரச படைகள் தமது விமான தளங்களில் அதி உச்ச பாதுகாப்பு நிலையில் வைத்திருந்தார்கள். அதனை அடுத்து பல நாடுகளிடம் கையேந்தி விமான எதிர்;ப்பு ஏவுகணைகளை வாங்கி குவித்து தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த அந்த வான் தளத்தில் எப்படி புலிகளின் கலங்கள் வந்து தாக்குதலை நடாத்தி தப்பிச் சென்றதென்பது. அரச மட்டத்திலும் படையினர் மத்தியிலும் பலத்த கேள்வியையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது இதனை அடுத்து வடக்கில் உள்ள படையினரின் இருப்புக்கு அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது. அதற்க்கு மேலாக படைகளினுடைய மனோ நிலையிலும் பாரிய உளவியல் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. பலிகளுனுடைய…
-
- 6 replies
- 4.8k views
-
-
எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒரு போதும் அச்சுறுத்தல் இல்லை: சு.ப. தமிழ்ச்செல்வன் [வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 09:42 ஈழம்] [புதினம் நிருபர்] எமது வான்படையில் இந்தியாவுக்கு ஒரு போதும்அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப. தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்: ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்கு, ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் …
-
- 6 replies
- 1.7k views
-
-
உள்ளுர் படையதிகாரிகளுடன் யாழ்மாவட்ட கட்டளையதிகாரி இரகசியச் சந்திப்பு. யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள அச்சநிலை காரணமாக உள்ளுர்மட்ட அரிகாரிகளுடனான சந்திப்பொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரகசியமாக பலாலி படைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ் குடாநாட்டில் சிறிலங்காப் படையினர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மனரீதியான பாதிப்புக்கள் மற்றும் படையதிகாரிகளின் கட்டுப்பாடுகளை படையினர் ஏற்கமறுப்பதுடன் சில இடங்களில் படையினருக்கும் அதிகாரிகளுக்கிடையேயும் முரண்பாடுகள் தோன்றி துப்பாக்கிசூட்டில் முடிந்திருப்பதால் ஏற்பட்டுள்ள படைப்பிளவை அடுத்து உள்ளுர்மட்டஅதிகாரிகளை யாழ்மாவட்ட கட்டளை அதிகாரி சந்திரசிறி சந்தித்து படை…
-
- 6 replies
- 2.2k views
-
-
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப்படும் என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கனடாவின் முன்னணி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் ஒன்றாக கனேடிய தமிழ் காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதாக பிரித்தானியாவின் க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் குறிப்பாக தமிழர்கள் அனைவரும் வாக்கு உரிமையை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸ், ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ள…
-
- 6 replies
- 650 views
-
-
டெய்லி மிறர் இக்பால் அத்தாஸின் கருத்துப்படி 100 மேல் பலியாகியுள்ளதை இராணுவமே ஒப்புக்கொண்டுள்ளது. இது புலிகளால் கைப்பற்றபட்ட சடலங்களையோ அல்லது போர்களத்தில் பரவிக்கிடக்கும் சடலங்களை உள்ளடக்கவில்லை. இராணுவத்தால் மீட்கப்பட்ட சடலங்களே 100. எல்லாவற்iறையும் கூட்டிப்பார்த்தால் 200 தாண்டும் போல கிடக்கு! இக்பால் அத்தாஸ் சீ. என். என் இற்கு கொடுத்த தகவலை முழமையாக படிக்க.. Tigers feint kills 100 Sri Lanka troops -From Iqbal Athas
-
- 6 replies
- 3.3k views
-
-
ஜெனீவா போரியல் விதிகளின் கீழ் பொதுமக்களுக்கும் அவர்களின் வாழிடங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணாத வகையில்.. அல்லது அதைத் தவிர்க்கும் வகையில் இராணுவம் நடந்து கொள்ள வேண்டும் என்பது நியமம். ஆனால் தனது இராணுவத் தேவைகளுக்காக மக்கள் சொந்த இடங்களில் இருந்தே விரட்டி வரும் சிறீலங்கா அரச பயங்கரவாதப்படைகளின் கோரிக்கையை ஏற்று ஐநா சபை உட்பட சர்வதேச தொண்டு அமைப்புக்கள் வன்னியை விட்டு வெளியேற உள்ள இந்த நேரத்தில்.. ஓர் ஆறுதல் தரும் விடயமாக.. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் எக்கட்டத்திலும் தான் வன்னியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. இதனால் சிறீலங்கா அரசுடன் முரண்படும் நிலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சென்றுள்ளது. இருப்பினும் வன்னி மக்கள் மீதான அதன் மனிதாபிம…
-
- 6 replies
- 2.3k views
-
-
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது. ஆனால் இந்த கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தின் பயங்கர தாக்குதலில் அங்குள்ள தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. போரை நிறுத்தி, அமைதி பேச்சு வார்த்தை நடத்த அந்நாட்டுக்கு மத்திய அரசு கூற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இலங்கை பிரச்சைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும…
-
- 6 replies
- 2.4k views
-
-
'போர்க்குற்ற படங்கள் என போலியான புகைப்படங்களை வெளியிட்டு செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையை விலை பேசுகின்றது' என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டினார். 'யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் காணிகளை அபகரிப்பதாக மக்களை பயப்படுத்தி போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அமைதி இருக்க வேண்டுமானால் அரச நிறுவனங்கள் முழுமையாக செயற்பட வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'படைகளின் செயற்பாடு மக்களின் அமைதியை மேம்படுத்துவதற்கு பயன்படுகிறது. அதற்காக எமது படையினர் பாடுபடுகின்றனர். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதாக கூறி மக்களை போராட்டத்திற்கு அழைத்து பூச்சாண்டி காட்டுகின்றார். அத்…
-
- 6 replies
- 928 views
-
-
594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம் - ஐநா வுக்கான இலங்கையின் நிரந்தர செயலாளர். வழக்கு தொடர்ந்து, சிறையில் அடைக்காமல், 594 புலி சிறுவர்களை புனர்வாழ்வு அளித்து வெளியே விட்டோம் என்று அறிக்கை விட்டார் ஐநா வுக்கான இலங்கையின் நிரந்தர செயலாளர், முன்னாள் சட்ட ரீதி இல்லாத நாட்டின் பிரதம நீதியரசர், ராஜபக்சே சொம்பு மோகன் பீரிஸ். அதுவல்ல பிரச்சனை. ஒரு பத்து வயசு சின்னப்பொடியன் விசுக்கோத்து தின்ன கொடுத்து, கொலை செய்யப்பட்டான். காசுக்காக படங்களை வித்து விட்டார்கள். அதுதான் உங்கள் ராஜபக்சேகளின் தலைவலி.
-
- 6 replies
- 768 views
- 1 follower
-
-
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் குறிப்பிட்டுள்ளது போன்று அடுத்த வருடம் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அது இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாடாக இலங்கை பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நெருக்கடி உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் பல பல நெருக்கடிகளை இலங்கையும் சந்திக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படலாம். உணவு பிரச்சினை ஏற்படலாம். ஏற்கனவே மிக பெரிய அ…
-
- 6 replies
- 282 views
-
-
Monday, January 3rd, 2011 | Posted by நிலா தமிழில் உரையாடிய இ.போ.ச. ஊழியர்கள் மீது தாக்குதல் கதிர்காமத்திற்கு வவுனியா இ.போ.ச.டிப்போ பேருந்தில் பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியதுடன், அந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுமுள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது: வவுனியா டிப்போவில் புதிதாக திருத்தப்பட்ட இ.போ.ச.பஸ்ஸை கதிர்காமத்தில் ஆசீர்வதிப்பதற்காக அந்த டிப்போவின் 29 ஊழியர்கள் அங்கு சென்றிருந்தனர். டிசம்பர் 31 ஆம் திகதி இவர்கள் வவுனியாவுக்கு வரும்போது புத்தள பகுதியில் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்தி, உணவுக் கடையில் தேநீர் அருந்தச் சென்றனர். இவர்கள் தமிழில் …
-
- 6 replies
- 1.5k views
-
-
வடபோர்முனையில் புலிகளின் வெற்றி அவர்களின் படைவலு சமநிலயை நிருபித்துள்ளது -பி பி சி வடபோர்முனையில் விடுதலைப்புலிகள் ஈட்டிய வெற்றி அவர்களின் படைவலுச்சமநிலையை அவர்களிற்கு சாதகமாக திருப்பியுள்ளதாக உலக பி பி சி செய்தி தேவை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இரத்தத்தில் தோய்த சிறீலங்கா படையினரின் உடைபட்ட மூக்கு என்ற தலைப்பிலான ஆய்விலேயே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் படைவலுவை சரியான முறையில் எடைபோடத்தவறியதன் காரணமாக வடபோர்முனையில் சிறீலங்கா படைகள் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டிற்கு பின்பு ஒரேநாளில் சிறீலங்கா படைகள் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.இச் சமரில் 200 படையினர் கொல்லப்பட்ட…
-
- 6 replies
- 2.1k views
-
-
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கப்பல் இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததும் நாளை காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்…
-
- 6 replies
- 446 views
- 1 follower
-
-
சீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 176,100 கோடி ரூபாய் இலகு கடனை வழங்கும் உடன்படிக்கையில் சீனாவும், இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. நிதி அமைச்சில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில், அமைச்சின் செயலாளர் சமரதுங்கவும், சீன எக்சிம் வங்கி சார்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவானும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டமான, கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்கு 1.164 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கியின் மூலம் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. …
-
- 6 replies
- 827 views
-
-
'ஐ.நா. நிபுணர்குழு பரிந்துரைக்கு அமைய சர்வதேச விசாரணை பொறிமுறை தேவை' இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்துவது தொடர்பிலோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது குறித்தோ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழு எந்தவித வழிகாட்டுதல்களையும் முன்வைக்க தவறியுள்ளது. இதனால், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்வைத்த அறிக்கையின் பரிந்துரைக்கு அமைவாக சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் தேவை உணரப்பட்டுள்ளது என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/32803-q-q.h…
-
- 6 replies
- 5.4k views
-
-
வரும் பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என தமிழகத்தில் இருந்து உணர்ச்சி பாவலர் - காசி ஆனந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். http://www.pathivu.com/news/42250/57//d,article_full.aspx
-
- 6 replies
- 826 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் விடுத்த ஒற்றுமை அழைப்பின் பின்னாலிருந்த திருகுதாளங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடக செயலாளர் க.அருந்தவபாலன். இதுவரை மக்கள் ஒற்றுமையாக தந்த ஆணையை பயன்படுத்தி, அரசின் சுகபோகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒற்றுமை பற்றி பேச என்ன அருகதையுள்ளது?, புதிய அரசியலமைப்பு வெற்றிபெறாவிட்டால் பதவியை துறப்பதாக சொன்ன சுமந்திரன் அதையெல்லாம் மறந்து விட்டாரா என கேள்வியெழுப்பியுள்ளார் அருந்தவபாலன். நேற்று (28) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒற்றுமையை கோரி நிற்கும் அவர்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். இது…
-
- 6 replies
- 1.5k views
-