ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143598 topics in this forum
-
அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எமக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்துடன் கிழக்கில் முஸ்லிம் - தமிழ் தரப்பினருக்கும் எழுந்துள்ள பிரச்சினைகளில் எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க நாளை பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் இன்று பிற்பகல் கட்சி தலைமையகமான தாருஸமாலில் கூடியது. கட்சியில் தலைவர் ரவூப் ஹக்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
விடுதலை புலிகளை இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிபடவேண்டும் மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . இந்தியா ருடே பத்திரிகையின் ஆசிரியருடனான நேர்காணல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழான செய்தி வெளியிட்டுள்ளது இதன் போது அவர் மேலும் தெரிவித்தாவது. விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீதான குற்றச்சாட்டுகள் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை போன்ற குற்றங்களிற்கான தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் . அதே வேளை விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வைத்து சமாதான பேச்சுகளில் ஈடுபடதயாரயின் அரசாங்கமும் விடுதலை புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் . விடுதலை புலிகள் ஆயுதங்கள் கீழே வைக்காவிடின் அரசாங்கமும் வ…
-
- 6 replies
- 3k views
-
-
2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, வடகிழக்கில் வேட்பாளர்களை தீர்மானித்தது விடுதலைப் புலிகள் தான் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்ற கருத்தை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார். இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'தலைவர் இரா.சம்பந்தன் எதற்காக இக்கருத்தினை தெரிவித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. அக்கருத்தினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்…
-
- 6 replies
- 1k views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
யாழில்.பந்தல் சேதம்,கழிவு ஊற்றி நாசம், உண்ணாவிரதமும் ஆரம்பம் வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012 08:29 (சுமித்தி) கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையை இனந்தெரியாதோர் நேற்றிரவு சேதப்படுத்தியதுடன் பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர். அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண…
-
- 6 replies
- 1.1k views
-
-
தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம். தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினரிடமிருந்த 500 ஏக்கர் காணிகளை தாம் விடுவிக்குமாறு கோரியதற்கிணங்கவே இராணுவத்தினர் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மக்களின் மீள்குடி…
-
- 6 replies
- 546 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அழிந்து விட்டதால் யுத்தம் முடிவுற்றதாக எண்ணக்கூடாது. இன்னும் சர்வதேச மட்டத்தில் 15 இலட்சத்திற்கு மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரிவித்த மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மலையகத்திலும் பயங்கரவாதம் நீறுபூத்த நெருப்புப் போல உள்ளதெனவும் தெரிவித்தார். மாத்தளை, குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கடற்படை மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கிய எட்டுப்பேரைக் கொண்ட கொள்ளை கோஷ்டியைக் கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் சுனில் ஏக்கநாயக்க தலைமையிலான எட்டுப் பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை புதிய பொலிஸ் நிலையக் கட்டிட கேட்போர் …
-
- 6 replies
- 2k views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன் அமர்வுகளில் பங்கேற்பதனை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியா அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 7ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குர்ஷித் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை எட்டும் நோக்கிலான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்…
-
- 6 replies
- 685 views
-
-
பாஸ்போர்ட் எடுப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இளைஞர் ஒருவர் யாழ்தேவி புகையிரத நிலையத்தில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியைச் சோந்த 21 வயதான செல்வகுமார் சத்தியசீலன் எனும் இளைஞனே காணாமல் போயிருக்கின்றார். கடந்த 14ம் திகதி ஏ9 வ|Pதியூடாக வவுனியா பயணித்த இவர் பின்னர் அங்கிருந்து யாழ்தேவி மூலம் கொழும்பு சென்றுள்ளார். இந்த நிலையில் இவர் கொழும்பை சென்றடையவில்லை என குடும்பத்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவற்துறையினருக்கு குடும்பத்தவர்கள் முறைப்பாடு செய்திருக்pன்றார்கள். மீண்டும் கொழும்பில் யாழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகின்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
-
- 5 replies
- 762 views
-
-
எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலக்கு – அகில இலங்கையில் முதல் இடம் பிடித்த யாழ் மாணவன் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடத்தை பிடித்த தமிழ்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார். மேலும் அம்மா, அப்பா மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் ஊக்கமே தனது வெற்றிக்கு காரணம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் க…
-
- 5 replies
- 404 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை அழித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் அது முழு நாட்டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், ஜெனீவா அழுத்தங்களையும் நாட்டில் பிரிவினை வாதத்தினையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே ஏற்படுத்துகின்றது. சர்வதேச பிரச்சினைகள…
-
- 5 replies
- 607 views
-
-
-
- 5 replies
- 781 views
-
-
தெல்லிப்பளையில் ஆயுதங்களுடன் மூவர் கைது தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்குப் பிரதேசத்தில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு(10) 7.05 மணியளவில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த வேளையிலேயே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள்…
-
- 5 replies
- 716 views
-
-
“கே.பியை கைது செய்தோம், சர்வதேச வலையமைப்பை அழித்தோம்” February 12, 2019 கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு அழிக்கப்பட்ட விதம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரி நிமல் லெவ்கே இன்று கருத்துத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிங்கள, தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு காணப்பட்டமையினாலேயே அந்த அமைப்பு வலிமைப்படுத்தப்பட்டதாகவும் எனினும், அப்போதிருந்த ஆட்சியாளர்களால் யுத்தத்தின் இறுதிப்பாதியில் சர்வதேச ஒத்துழைப்பு இலங்கை்கு கிடைத்து என்றும் அவர் கூறியு…
-
- 5 replies
- 1k views
-
-
சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுவந்த எந்தஒரு தலைவரும் இனப்பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை! Published on March 28, 2012-5:56 pm · சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுவந்த எந்தவொரு ஆட்சியாளருமே இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தணிப்பதற்கோ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான குறைந்தபட்ச அக்கறையைத்தானும் காட்டுவதற்கோ முயற்சித்ததில்லை என கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் தெரிவித்தார். மன்று அரசசார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகரும், மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம், தினக்கதிர் பத்திரிகைகளின் நிறுவனருமான மனோ இராசசிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நினைவு தினக் கூட்டத்தில் ‘இலங்கை நெருக்…
-
- 5 replies
- 888 views
-
-
மடுதேவாலயம் முன்னர் பௌத்த விகாரையாகவும பின்னர் இந்து ஆலயமாகவும இருந்தது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலேயே இங்கு மாதா சொரூபம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாந்தை பகுதி மக்கள் கத்தோலிக்கர்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர் என எல்லாவெல மோனந்த தேரோ தெரிவித்தார். மடு திருச் சொரூபத்தினை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயர் நிபந்தனை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. என்றும் அவர் கூறினார். மடு தேவாலயத்தையும் அண்டிய பகுதியையும் புலிகள் தாக்குதல் மத்திய நிலையமாகவே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலே முப்படையினர் மடுதேவாலயத்தை மீட்டெடுத்தனர். ஆனால் மடுமாத திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயா தலைமையிலான 30 மதகுருமார்கள் குழு நிபந்தனையை முன்வைத்துள்ளது. இதன…
-
- 5 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் (Batticalao Campus (PVT) Ltd) தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தயாரித்திருந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. அத்துடன் மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கும் அனுப்பிவைப்பதற்கு துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்துள்ளது. கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற குழு அறையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்த போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்து துறைசார் மேற்பார்வைக்குழு 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை …
-
- 5 replies
- 695 views
-
-
அமெரிக்காவின் தடையை மீறி ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் - கொள்வனவு செய்ய சென்ற இலங்கையின் கப்பல்கள் தடுத்து வைப்பு! [ஸுன்டய், 2012௰௨8 08:16:42] ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமெரிக்கா பச்சை விளக்கை காட்டும் வரை இலங்கையால் ஈரானிடம் இருந்து எவ்வித மசகு எண்ணெய் கொள்வனவையும் மேற்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தமது ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. எனினும் அமெரி…
-
- 5 replies
- 800 views
-
-
வவுனியாவைச் சேர்ந்த தமிழ ரான இளம் கண்டுபிடிப்பாளர் என். ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப் பம் கோரி மூவர் கடும் தொனியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உலகமே என்னைப் பாராட்டும் நிலையில் இனந்தெரியாத மூவர் மட்டும் என்னை அச்சுறுத்துவதுடன் என்னைப் பற்றி தவறான வதந்திகளை ஏற்படுத்தி பணம் கேட்டு அச்சுறுத்துகின்றனர். எனது கண்டுபிடிப்புக்கு கிடைத்த (200 கோடி ரூபாய்) பணத்தில் சரிபாதி பங்கு தருமாறு கப்பம் கோருகின்றனர் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். இளம் கண்டுபிடிப்பாளரான ஜாக்சன் இந்தச் சம்பவம் தொடர்பாக வலம்புரிக்கு மேலும் தெரிவிக்கையில், என்னிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரியவர்கள் தொடர் பாக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளேன். இவ்வாறு கப்பம் கோரி மக்கள் விரோத நடவடிக்…
-
- 5 replies
- 772 views
-
-
எழுக தமிழ் நிகழ்வு 28.01.2017 இற்கு மாற்றம் ! கிழக்கில் பெரும் எழிர்ச்சியுடன் இடம்பெறவிருந்த எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் 28.01.2017 இற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்கழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 18.01.2017 இல் திட்டமிடப்பட்டிருந்த எழுக தமிழின் வலுவை குறைக்கும் நோக்குடன் அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக சம்பந்தர் தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட மாட்டுப்பொங்கல் பேரணியும் அதனை தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் திருகோணமலைமாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான தண்டாயுதபாணி அவர்களால் எழுக தமிழ் நிகழ்வான அதே தினத்தில் பாடசாலைகள் அனைத்தும் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட அறிவிப்பு காரண…
-
- 5 replies
- 1.4k views
-
-
கடலில் குதித்து ஆராச்சி செய்த 3 பாராளுமன்ற உறுப்பினர்கள்! கற்பிட்டி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை கொண்டு மீன் பிடிப்பதால் கடல்வளங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். புத்தளம் கற்பிட்டி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பாவித்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக மீன்பிடித்துறை அமைச்சு இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையிலேயே எமது கடற் பகுயை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கற்பிட்டி கடற்பகுதிக்கு சென்று பார்வையிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்…
-
- 5 replies
- 517 views
-
-
சண்டேலீடர் பத்திரிகைக்கு ஜெனரல் சரத் பொன்சேக்கா வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்து திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டமை சம்பந்தமாக 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அவர் சண்டேலீடர் ஆசிரியர் பெட்ரிக்கா ஜயன்ஸக்கு தனது சட்டத்தரணி ஊடாக நேற்று அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளார். தான் தெரிவித்த கருத்துக்களைத் திரிபுபடுத்தியமை தொடர்பாக சட்டத்தரணி அறிவித்தலை அனுப்பியுள்ள சரத் பொன்சேக்கா 38 வருடகாலமாக இராணுவத்தில் பணியாற்றி ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை 14 நாட்களுக்குள் சரிசெய்யுமாறும் அப்படியில்லை எனில் தமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக சண்டேலீடர் பத்திரிகை 500 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார். …
-
- 5 replies
- 658 views
-
-
புலமைப் பரிசில் பரீட்சையில்.. மட்டக்களப்பு கல்வி வலயம், இலங்கையில் இரண்டாம் இடம்!. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விபணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் அதனைத் தொடர்ந்து …
-
- 5 replies
- 506 views
-
-
தான் பணி புரியும் வீட்டுக்கு இலங்கைப் பெண்ணொருவர் தீவைத்த சம்பவம் ஒன்று சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளதாக சவூதி அரேபிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது எஜமானர்கள் வீட்டில் இல்லாத போதே இந்தப் பெண் அந்த வீட்டுக்குத் தீ வைத்துள்ளார். குறித்த வீட்டுக்குத் தீ வைக்கப் போவதாக இலங்கைப் பணிப் பெண் முன்னர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார் என வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தப் பெண் சவூதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் வீட்டின் உரிமையாளரின்; தவறான நடத்தையைக் கண்டித்து அதற்குப் பழிவாங்கும் வகையில் இலங்கைப் பணிப் பெண் தீ வைத்திருக்கலாமென சந்தேகிப்பதாக சவுதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். - See more at: http://…
-
- 5 replies
- 734 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். இவரின் அறிக்கை வருமாறு:- காலி ஹிந்தோட்டையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு காடையர்கள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்ததுடன் வாகனங்களுக்கும் தீ மூட்டி சென்று உள்ளனர். இதனால் ஏற்பட…
-
- 5 replies
- 789 views
-