Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு கோட்டைப்பூங்காபகுதியில் மாநகர சபையினால் மரங்கள் அழிப்பு 5 Views மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர். அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு இளைஞர்களினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் வருகைதந்…

    • 5 replies
    • 502 views
  2. தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு தெற்கு துறைமுக ஆரம்ப நிகழ்வுகளின் போது என்ன காரணத்திற்காக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டியது கட்டாயம் என்ற போதிலும்இ இந்த நிகழ்வின் போது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீன அழுத்தங்கள் காரணமாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிகழ்வின் போது இலங்கை தேசியக் கொடிகளை விடவும் அதிகளவில் சீனத்தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை…

  3. இலங்கையிலிருந்து வெளிவரும் 'திவயின' என்ற பத்திரிக்கை பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப்புலிகளை பழிவாங்குவதில் சோனியா காந்தி தீவிரம் காட்டினார் என்று கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியின் விவரம் வருமாறு: ‘‘முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். தனது கணவரான ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகளை பழி தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி விரும்பினார். எனவே, அவர்களை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என அவர் விரும்பினார். குறிப்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான…

    • 5 replies
    • 1.2k views
  4. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பார் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் இந்தியாவின் புதிய பிரதமர் பாதுகாப்பார் என்று இந்தியாவின் புதிய மாநில அமைச்சராக நியமனம் பெற்றுள்ள ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு கவலையடைகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/112014-2014-05-27-06-24-12.html

  5. கே.பி- கருணாவை விசாரிப்பதன் மூலம் அரசாங்கம் பொறுப்பு கூறலை தொடங்கலாம் – றணில் தலைமையிலான ஐதேகவின் பலே ஐடியா! இலங்கை அரசாங்கம்- கே.பி என்றளைக்கப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் மற்றும் கருணா எனப்படும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக் கூறலை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை கூறியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு பேரும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புபட்டவர்களர்கள் எனவும் ஐக்கியதேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …

  6. மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்நாட்டில் நாம் 1…

  7. இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு? வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து …

  8. இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை இந்தியா நீடித்துள்ளது! அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா மேலும் நீடித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு இந்தியாவால் சுமார் 4 பில்லியன் டொலர் அவசர உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த கடன் உதவியின் ஒரு பகுதியான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்திய அரசாங்கம் நீடித்துள்ளது. …

    • 5 replies
    • 349 views
  9. புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி! இனியபாரதி. யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீ…

  10. இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை! இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை (09) நடைபெறவுள்ளது. வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் நாளைய தினம் அவதானம் செலுத்தப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். https://www.hirunews.lk/tamil/399225/இலங்கை-தமிழரசு-கட்சியின்-மத்திய-க…

  11. [size=5]முஸ்லிம்கள் மீதான தமிழ் புத்திஜீவிகளின் பிழையான அரசியல் கண்ணோட்டம் களையப்பட வேண்டும்: மு.கா பிரதித் தலைவர்[/size] முஸ்லிம்களைப் பற்றிய ஒரேவிதமான வரலாற்றுப் பார்வை கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணப்போக்குகளில் புதிய மாற்றங்கள் வேண்டும். அறிவார்ந்த ஒரு சமூகமாக உலகம் பூராவும் புலம் பெயர் ஈழத் தமிழர்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிடம், இலங்கைவாழ் முஸ்லிம்கள் பற்றி இதுகாறும் இருந்து வரும் பழமைவாத கருத்துப் பார்வைகளிலிருந்து, நவீனத்துவப் பார்வை கொண்ட அணுகுமுறை அவசியம்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் நசீர் அஹமட் தெரிவித்தார். இலங்கைவாழ் சிறுபான்மைச் சமூகங்கள் என்ற வகையில் சிறந்த இணக்கப்பாடான நல்லுறவைப் பேணுவதற்கும், பெரும்பான்மைச் சமூக ஆ…

    • 5 replies
    • 842 views
  12. சர்வதேச விசாரணைக்கு எந்த வசதியையும் செய்து கொடுக்க முடியாது! - மஹிந்த சமரசிங்க திட்டவட்டமாகத் தெரிவிப்பு. [saturday, 2014-03-29 07:51:51] ஜெனிவா தீர்மானத்தை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும் செய்து கொடுக்கப் போவதில்லை என்றும் மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 2012 மற்றும் 2013 தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது தீர்மானத்தை முன்வைத்த தரப்பினருக்கு பெரும்பான்மை வாக்கு கிட்டவில்லை. இம்முறை முடிவுகளை நோக்குகையில் அவ்வாறே தீர்மானத்தை கொண்டு வந்தவர்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.47 வாக்குகளில் 23 வாக்குகளே கிடைத்…

    • 5 replies
    • 452 views
  13. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் இஸ்ரேலிய நாட்டினதும் யூதர்களினதும் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஏறாவூர் நகரில் பிரசாரம் செய்யப்படுகின்றது. ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரத்தின் ஓரங்கமாக நகரெங்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 'யூதப் பயங்கரவாதிகளின் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிப்போம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அன்பார்ந்த நெஞ்சங்களே! இஸ்லாமிய பெருமக்களே! பாலஸ்தீனத்தில் இஸ்ரவேலர்களின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் சஹீதாக்கப்பட்ட மற்றும் காயமடைந்து போதிய வைத்திய வசதியின்றி அவதியுறும் எமது உறவுகளுக்காக தொடர்ந்தும் ந…

  14. "கீத்ரோ' விமான நிலையத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டிருந்ததுடன் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை நான் என் காதால் கேட் டேன். அதில் பல பின்னணி இருக்கி ன்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அச்சு றுத்தல் இருக்கின்றது என்று வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தால் ஜனாதி பதியினால் எந்தவொரு வெளி நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆனால் ஜனாதிபதி அஞ்சாதவர் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று நடை பெற்ற வெளி விவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதியின் பயணத்தை தடுப்பதற்கும் பெரிய பிரித்தானியாவில் அவரை கைது செய்வதற்கு…

  15. சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே நோக்கம் – சுமந்திரன் சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே புதிய அரசியலமைப்பின் நோக்கம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும், இதுவரை நாம் 3 அரசியலமைப்பைக் கொண்டிருந்த போதிலும், ஒரு சமூக ஒப்பந்தத்தைக் கூட கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தெற்கைச் சேர்ந்த 6 முதலமைச்சர்களால் பரிந்துரைக்கப்பட்ட அதிக…

    • 5 replies
    • 756 views
  16. சம்பந்தன், அமிர்தலிங்கம்,மாவை போன்றவர்கள் தமது பிள்ளைகளை ஆயுத போராட்டத்திற்கு அனுப்பவில்லை. வெளிநாடுகளுக்கு கல்விகற்கவே அனுப்பினார்கள் வடக்கு, கிழக்கை இணைக்கக் கோருவது தமிழீழக் கோரிக்கைக்கு ஒப்பானது [Tuesday, 2011-07-12 08:22:45] வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோருவது தமிbழக் கோரிக்கைக்கு ஒப்பானது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கடந்தகாலத்தில் தமிழ்த் தலைவர்கள் எடுத்த பிழையான முடிவுகளே தமிழ் மக்களின் கணிசமானவர்கள் அழிவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் கூறினார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ் சேனையில் 25 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப் படவுள்ள பொதுச் சந்தைக்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பிரதம அதிதி…

  17. கனடாவிற்கு எதிர்வரும் சனிக்கிழமை (15.03.08) செல்லவுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ~தமிழ் மக்கள் பேரவை| என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல, எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ அல்லது போட்டியானதோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டபோதிலும், அந்த அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உறுப்பினர்கள், அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவை அந்த அமைப்பின் நோக்கம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. இந்தப் பேரவையின் கூட்டுத் தலைவர்களில் ஒருவராகச் செயற்படும் மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிற்றம்பலம் உட்பட பெரும்பாலானோர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் கூட்டமைப்பு பிளவுபட்டுவிடுமோ என்ற கவலை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. …

  19. சென்னை:"இலங்கை தமிழர்களை, வெறுப்பேற்றும் வகையில், சிங்கள அரசு செயல்படுகிறது. இந்திய அரசும் இதை, கண்டுகொள்ளாமல் உள்ளது' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவின் உதவிகளைப் பெறும், இலங்கை அரசு, சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவையும் பெற்று வருகிறது. தமிழர்களை கொன்று குவித்த இடங்களில், போர் நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகத்தை அமைத்து, தமிழர்களை வெறுப்பேற்றும் வகையில் சிங்கள அரசு செயல்படுகிறது. இந்தியாவில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில் தான், இலங்கை வீரர்கள் பயிற்சி பெறுவார்கள். தமிழக கட்சிகள் என்ன செய்யும் ப…

    • 5 replies
    • 1.2k views
  20. சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் பொருட்டு அந்நாட்டின் அனுமதிக்காக காத்திருப்பதாக நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மக்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்ததாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்திருந்தார். கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அனுமதியளித்துள்ள நிலையிலேயே வர்த்தமானி இன்று இரவு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய …

    • 5 replies
    • 553 views
  22. இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கத்துடனான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருவதாகவும், தமிழ்க் கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் இதற்காகப் பெறப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அதேவேளையில், இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட முக்கிய இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார்கள். இந்தியத் தலைவர்களின் ஆதரவை இதற்காகப் பெற்றுக்கொள்வதன் மூலம், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழ…

    • 5 replies
    • 838 views
  23. நேற்று GTV இல் கேட்டது ஒரு தொலைபேசிநேயரின் எதிர்பார்ப்பு இன்றைய முக்கிய நேரம் கருதி இதை இங்கே பதிகின்றேன் சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் 10 அம்சங்களை நிறைவேற்றுவதாக ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதை சரத் ஐனாதிபதியாக வந்து நிறைவேற்றுகிறோரோ இல்லையோ.... இன்றைய ஐனாதிபதி இதில் பலவற்றை தேர்தலுக்குமுன் நிறைவேற்றிவிட்hல்.... என்று நிறுத்தியிருந்தார். நாம் எல்லோரும் சரி பிழை என்று பிய்த்துப்பிடிங்கிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில் இந்த வித்தியாசமான பார்வை..... என்னை சிந்திக்க வைத்தது தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன் இதுவும் இல் இருந்து வந்தது என்பதால் ஊர்ப்புதினம் பகுதியில் பதிகின்றேன்…

  24. பிக்குகளின் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் ஸ்ரீலங்காவுக்கு அடைக்கலம்கோரி வந்த ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடுகடத்துமாறு கோரி கொழும்பில் பௌத்த கடும்போக்குவாத பிக்குகள் செயற்பட்ட விதத்தை ஸ்ரீலங்க அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பிக்குகளின் இந்த செயற்பாட்டின் ஊடாக ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கும் அவமானம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. புகலிடம்கோரிவந்த 30 ரோஹிங்கியா முஸ்லிம்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.