Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரியாலை படுகொலை – STF புலனாய்வாளர்கள் இருவர் கைது!! FacebookTwitterPinterestEmailGmailViber யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்தன. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://newuthayan.…

    • 5 replies
    • 769 views
  2. கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல – சி.விக்கு அறிவித்தார் ரணில்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அதில், அரசாங்கத் தரப்பில், பிரதமர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன், சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக, அடு…

  3. தெல்தெனிய - மொரகோல்ல பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பாகிஸ்தானியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மோட்டார் வாகனம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்வது போல் வந்த இவர்கள், வர்த்தக நிலையத்தில் இருந்த, 40,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர். இது குறித்து தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களுல் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=827963600802313337

  4. 20 AUG, 2023 | 02:22 PM உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்தவேளை மயங்கி விழுந்துள்ளார். கடையில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/162767

  5. சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னாரில் உள்ள பிரதான படைத்தளமான தள்ளாடி முகாம் மீது இன்று 6 மணி நேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று புதன்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறனர். இத்தாக்குதல்கள் இன்று இரவு 10 மணிக்கும் மேலாக தொடர்கின்றன. சிறிலங்காப் படைத்தளத்துக்குள் பலத்த அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்புகள் உறுதி செய்கின்றன. இத்தாக்குதல்கள் தொடங்கிய நேரம் தொடக்கம் தள்ளாடி படைத்தளத்தில் இருந்தும் அதனை அண்மித்த சிறிலங்கா இராணுவப் படைத்தளங்களில் இருந்தும் படையினரும் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர் நன்றி புதினம். …

  6. உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களை எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் நன்றி : முகநூல்

  7. வடக்கு முதல்வர் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தியில் இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகர், சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், கடந்த நொவம்பர் மாதம் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வாலும், இது குறித்து அவருடன் பே…

  8. யாழ். குடாநாட்டில் தினமும் கஞ்சா கைப்பற்றப்படுவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சாக்களை கைப்பற்றுவது என்பதற்கப்பால், கைப்பற்றப்படாத கஞ்சாக்கள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது நியாயமே. என்றும் இல்லாதவாறு கஞ்சா யாழ். குடா நாட்டிற்குள் ஊடுவருவதற்கான காரணம் என்ன? இதன் பின்னணி யாது? என்ற கேள்விக்கான விடை கண்டறியப்பட வேண்டும். இல்லையேல் கஞ்சாவால் எங்கள் தமிழ் இனத்தின் எதிர்காலம் பாழாகும் என்பது நிறுத்திட்டமான உண்மை. பொதுவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கக் கூடிய மக்கள் ஒருவரை ஒருவர் இனங்காணக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். எனினும் சமகால சூழ்நிலையில் குடாநாட்டிற்கு வெளியில் இருக்கக் கூடியவர்கள் வந்து போகக் கூடிய சந்தர்ப்பங்கள் ந…

  9. இலங்கை அரசின் தடைகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி புரிய முடியவில்லை - ஐ.நா.சபை இலங்கைப் படையினது தடைகள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில்இ அவர்களுக்கான உதவிகள் புரிவதற்குத் தம்மிடம் தேவையான பொருட்கள் இல்லை என ஐ.நா.சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுஇ குடிநீர் சுகாதார உபகரங்கள் தற்காலிக குடில்கள் எரிபொருள் என்பன தமது கையிருப்பில் மிகவும் குறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். இவற்றை விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களுக்குள் கொண…

    • 5 replies
    • 1k views
  10. வீரகேசரி இணையம் - கலாநிதி மற்றும் தேசபந்து போன்ற கௌரவப் பட்டங்களை தகுதியற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் எதிர்காலத்தில் வழங்குவதனைத் தடை செய்வதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் மட்டுமே கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்க முடியும. அதே போன்று தேசபந்து, தேசமான்ய போன்ற பட்டங்களை ஜனாதிபதி மட்டுமே வழங்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களும் தனியார்களும் தேசிய ரீதியிலான கௌரவப் பட்டங்களுக்கு நிகரான பட்டங்களை தகுதியற்றவர்களுக்கு வழங்கி வருவது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  11. சிறிலங்காவானது தனது ஆடை ஏற்றுமதிக்கான சந்தையை சீனாவில் விரிவுபடுத்திய போதிலும் கூட தொடர்ந்தும் சிறிலங்கா ஆடை ஏற்றுமதியானது வீழ்ச்சியடைந்துள்ளதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "சிறிலங்காவின் இவ்வாண்டு ஆடை ஏற்றுமதியானது கடந்த ஆண்டை விட வீழ்ச்சியடைந்துள்ளது" என சிறிலங்கா ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் திரு.யோகன் லோறன்ஸ் தெரிவித்துள்ளார். "சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியானது நவம்பர் 2012 வரை ஏழு சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன" எனவும் யோகன் லோறன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இவரிடம் வினவியபோது "ஆடை ஏற்றுமதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய சந்தை வாய்ப்புக்களை…

    • 5 replies
    • 946 views
  12. புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது டாங்கி ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் கவசப் போர் ஊர்திகள் சகிதம் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டு நகர்வும் முறியக்கப்பட்டது. இதில் படையினரின் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறு சிறு தாக்குதல்களில் மட்டும் 108 படையினர்…

    • 5 replies
    • 2.5k views
  13. கொழும்பு துறைமுக நகரத்துக்கு மேலாக ஜனாதிபதி கூட உலங்கு வானூர்தியில் பறக்க முடியாத சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், பாதகமான முறையில் கொழும்பு துறைமுக நகர உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இருப்பினும், இவ்வாறு எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சீனா மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்…

  14. பிரபாகரன் குறித்த செய்திகள்: காலம் தான் சொல்ல வேண்டும்- ருத்திரகுமாரன் புதன்கிழமை, பிப்ரவரி 24, 2010, 17:04[iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] இயக்கத் தலைவர் பிரபாகரன் [^] குறித்த செய்திகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன். இதுகுறித்து இலங்கைத் தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ள செய்தி.. பெண்ணிய உளவியல் ஆய்வாளரான பரணி கிருஷ்ணரஜனி தலைமையிலான ஐவர் குழு ருத்திரகுமாரனுடன் சிறப்பு நேர்காணலை நடத்தியது. அப்போது, பிரபாகரனின் மரணம் குறித்த கேள்விக்கு ருத்திரகுமாரன் பதிலளிக்கையில், சில விவகாரங்களில் எது உண்மை என்பது சர்சைக்கு உள்ளாகும்போது அதற்குரிய பதிலை காலம் தா…

  15. பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது. ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது. உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நா…

  16. நான்காம் கட்ட ஈழப்போர் ஒரு கசப்பான அனுபவத்தோடு நிறைவடைந்திருக்கிறது. இது ஈழ ...விடுதலையை பின்னுக்கு தள்ளியதாகவோ அல்லது போராட்டமே நிறைவடைந்ததாகவோ நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. ஈழ விடுதலைப் போரின் எதிர்காலம் குறித்து ஏராளமான வினாக்கள் நம்முன் விரிந்திருக்கிறது. தற்போதைய நிலையில் இன ஒடுக்குமுறையின் தனிபெரும் தலைவராக திகழ்ந்த ராஜபக்சே மீண்டும் இலங்கையின் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகள் தமக்கான பதவிகாலம் இருந்தபோதும் கூட இன ஒடுக்கு முறையின் அடையாளமாக அதன் வெற்றி நாயகனாக தம்மை முழுமைப்படுத்திக்கொண்டு தேர்தல் களத்திற்கு வந்தார். அவரோடு கைகோர்த்து அவரின் சாட்டையாக இருந்த சரத்பொன்சேகா அவரின் எதிரணியின் வேட்பாளராக இருந்து தோல்வியடைந்திருக்கி…

  17. அனைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களும்... இராஜினாமா செய்ய வேண்டும் -சுமந்திரன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமரை பெரும்பான்மையான மக்கள் நிராகரிக்கும் ஒரு பின்னணியில், நாட்டைக் கட்டியெழுப்ப அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகவே தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள…

    • 5 replies
    • 359 views
  18. இங்கிலாந்தில் வசிக்கும் வசதி படைத்தவர்களின் கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்களை திருடி போலி கடன் அட்டைகளைத் தயாரித்த 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 2,800 போலி கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பெருந்தொகையிலான போலி கடன் அட்டைகள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய கடன் அட்டை மோசடிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி காவல்துறை அதிகாரி பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்களவர். ஒருவர் ஏறாவூரைச் சேர்ந்த தமிழர். சிங்களவர்கள் ஹொரண, ராகம, அம்பேபுஸ…

    • 5 replies
    • 2k views
  19. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறிலங்காவின் அரசாங்கம் மீண்டும் தங்களின் அரசியல் தேவைக்காக உருவாக்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிறிலங்காவில் 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் இனி இல்லை என்று மகிந்தராஜப்ஷவும், அவரின் அரசாங்கமும் அறிவித்திருந்தது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீதான அச்சத்தை பரப்பியும், விடுதலைப் புலிகளை தங்களாலேயே கட்டுப்படுத்த முடியும் என்று தோற்றப்பட்டை உருவாக்கியும், மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிலைபெற்றுள்ளது. இந்த தோற்றப்பாடு இல்லாத பட்சத்தில், மகிந்த அரசாங்கத்தினால் நிலைத்திருக்க முடியாது என்று அந்த ஊடகம் தெர…

    • 5 replies
    • 542 views
  20. 20 AUG, 2023 | 05:11 PM முல்லைத்தீவு, உணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டம் உணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபானசாலை நிலையமொன்று இம்மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்தோடு, அவர்கள் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றினை கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை வழங்கியுள்ளார்கள். இந்நிலையில், கடிதம் வழங்கியும் இதுவரை மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த கிராம மக்கள் …

  21. தனது உடற்பயிற்சி வைத்தியரான ஈலியந்த வைட்டிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் சிகிச்சை பெறவுள்ளார். இதற்காக இந்தியப் பிரதமர் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளார் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பின்னர் தனக்கு நெருக்கமான ஊடகவியலாளரிடமே இந்தத் தகவலை வெளியிட்டார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியப் பிரதமரின் வருகைக்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இலங்கை வந்திருந்தார் எனவும் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்திருந்தார். மூலம்

  22. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வேண்டும்: யசூஷி அகாஸி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை முழுமையாக அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் அவசியத்தை இலங்கைக்கான ஜப்பானிய அரசின் விசேட பிரதிநிதியான யசூஷி அகாஷி வலியுறுத்தியுள்ளார். ஜப்பான், இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின்முக்கியத்துவத்தையும் அகாஷி வலியுறுத்தியதுடன், இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிக்கும் எனவும் எப்போது உதவி தேவைப்பட்டாலும் வழங்கும் எனவும் அகாஷி வலியுறுத்தியதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உ…

    • 5 replies
    • 707 views
  23. சிங்கள ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினால் தமிழீழ ராஜ்ஜியம் உருவாக வழி வகுக்கும் (ஜே.ஜீ. ஸ்டீபன். ப.பன்னீர்செல்வம்) சிங்கள ராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அது சர்வதேச ஆதரவுடன் தமிழீழ ராஜ்ஜியத்தை உருவாக்க வழி வகுக்கும் என சபையில் சூளூரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜா ஐ.நா. அறிக்கை எமக்கு முழுமையாக நம்பிக்கை தராவிடடாலும் ‘கலப்பு' உள்ளக விசாரணை என வலியுறுத்தப்பட்டுள்ளமை ஆறுதலளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை மற்றும் அமெரிக்க தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 20…

  24. தமிழீழ விடுதலை இயக்கம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது – செல்வம் எம்.பி தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரையில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த நாடாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளப் போவதில்லையென தீர்மானித்துள்ளனர். தமிழீழ விடுதலை இயக்க தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று மாவட்ட பொதுக்கூட…

  25. மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - இரு அதிரடிப்படையினர் பலி - ஐவர் காயம் [ த.இன்பன் ] - [ மார்ச்ச 26, 2008 - 07:13 AM - GMT ] மட்டக்களப்பு மாவட்டம் தாண்டியடிப் பகுதியில் வைத்து இன்று காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தாண்டியடி - வலக்காலை வீதியூடாக கால்நடையாக சுற்றுக் காவலில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று காலை 9.00 மணிளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் சேர்…

    • 5 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.