ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
யாழ்ப்பாணத்தின் அரியாலை கிழக்குப்பகுதியினில் படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்தப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையிலேயே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட இப்பகுதிகளில் படை உயரதிகாரிகள் மக்கள் குடியிருப்பு காணிகளிலிருந்து மணலை திருடி விற்று வருகின்றனர். இரவிரவாக இடம்பெற்று வரும் இம்மணல் கொள்ளையினால் அவர்கள் நாள் தோறும் இலட்சக்கணக்கினில் வருமானம் ஈட்டியும் வருகின்றனா.; இதனால் கடலரிப்பு ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவ்விவகாரம் இன்று நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினில் முன்வ…
-
- 5 replies
- 966 views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணாவை அவரது குடும்பத்துடன் இணைய விடாது பிரித்தானியா தடுப்பது மனித உரிமை மீறலாகும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.7k views
-
-
03 Dec, 2024 | 06:14 PM பலாலியில் அமைந்துள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க அல்லது வட மாகாண ஆளுநர் அலுவலகம் என்பவற்றை தொடர்புகொள்ள முடியும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக 0774653915 என்ற விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளரின் இலக்கமும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல் | Virakesari.lk
-
-
- 5 replies
- 595 views
-
-
தனது மகள் ஹிருணிக்கா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி என்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தெமட்டகொடை வாலிபர் ஒருவர் டிபெண்டர் வாகனத்தில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிருணிக்கா கைது செய்யபட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹிருணிக்கா குறித்து அவரது தாயார் சிங்கள ஊடகமொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார். அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த கடத்தல் சம்பவத்துடன் ஹிருணிக்கா எவ்வகையிலும் தொடர்பற்றவர். அவரது எதிரிகளே இந்தச் சம்பவத்துடன் அவரது பெயரைத் தொடர்புபடுத்தியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருவதில் ஹிருணிக்கா பெரும் பங்களி…
-
- 5 replies
- 1.3k views
-
-
வெள்ளியன்று பிலியந்தலை நகரில் பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டுவெடிப்பச் சம்பவம் குறித்து சங்கரி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளான். சங்கரியின் செய்திக் குறிப்பில் : பிலியந்தலை குண்டு வெடிப்பில் அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இத்தகைய சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இரத்த வெறி பிடித்த ..............ன் மிலேச்சதனமான செயற்பாடு இது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இத்தகைய காட்டு மிராண்டிகளுடனா பேச்சு நடத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருகிறது? புலிகளுக்கு பயந்து தமது பூர்வீக இருப்பிடங்களை விட்டு ஓடி வந்து தென்னிலங்கையில் சிங்கள, இஸ்லாமிய மக்கள் மத்திய…
-
- 5 replies
- 2.2k views
-
-
கடுவலை நீதிமன்றத்துக்கு படையெடுத்த மஹிந்த ஆதரவு அணியினர் - பிணை மறுப்பை தொடர்ந்து கண்ணீர்விட்டு அழுத ஷிராந்தி ராஜபக்க்ஷ (எம்.எப்.எம்.பஸீர்) சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பண சுத்திகரிப்பு கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் நேற்று கடுவலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அங்கு பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் கூடியிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக் ஷ ஆகியோர் மன்றினுள் இருந்தவாறு வழக்கு நடவ…
-
- 5 replies
- 472 views
-
-
பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு சம்பந்தன் அச்சப்படுகின்றார்: ஜனாதிபதி 2012-12-14 09:33:05 தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. அவர்களை சந்தித்து பேசுவதற்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். விரைவில் அவர்கள் பேச்சுக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2073
-
- 5 replies
- 820 views
-
-
அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹில்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 883 views
-
-
நேற்று மலை ஜெனீவா ஜ.நா முன்றறில் திரண்ட தமிழ் மக்கள் பாததைகளை கையில் ஏந்தியவாறு மகிந்தராஜாபக்ச போர்க்குற்றவாளி,தமிழரிற்கு தீர்வு தமிழீழம் என்ற கோசங்களை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடத்துகொண்டிருக்கம் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு பன்னாடுகளின் கதவினை தட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல நாடுகளில் இருந்து சென்ற தமிழர் பிரதிநிதிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்…
-
- 5 replies
- 1.2k views
-
-
போர்குற்றத்தில் நானும் நீரும் என மகிந்த சொன்னதால் தலையில் அடித்து கதறிய கருணா March 24, 20134:45 pm அண்மையில் மட்டக்களப்புக்கு சென்ற மகிந்த ராசபக்ச கல்லடி பாலத்தை திறந்து வைத்து விட்டு அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மகிந்த சொன்ன ஒரு விடயத்தை கேட்டு கருணா தலையில் அடித்து கதறியதாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர். இருவரும் ஜெனிவா தீர்மானம் குறித்தும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகள் கொண்ட குழுவை நியமிப்பது தொடர்பாக ஐ.நா.சபை ஆராய்ந்து வருவதாக சர்வதேச நீதிமன்ற குழுவில் இருக்கும் இலங்கையின் முன்னைநாள் நீதியரசர் நிகால் ஜெயசிங்க அண்மையில் மகிந…
-
- 5 replies
- 1k views
-
-
மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள பௌத்தர்கள் கடும் போக்கானவர்கள் அல்ல. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மதத்தின் அடிப்படையில் நாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பௌத்தர்கள் ஏனைய மதத்தவர்களைத் துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும். இத்தலைப்பானது வடக்கில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள். உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது. இக்குறும்படத்திற்கான திரைக்கதை,…
-
- 5 replies
- 469 views
-
-
பிளவுபடாத நாட்டுக்குள்... நிலையான தீர்வை அடைய, ஒற்றுமை அவசியம் – சம்பந்தன் வலியுறுத்து. ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் நிலையான தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து விசேட சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. அதனை தெளிவுபடுத்தும் விதமாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பிற்குள் ஒரு சிலர் பிளவுகளை ஏற்படுத்த காத்திருக்கும் நிலையில் தமது ஒற்றுமையை உறுதி செய்ய சம்பந்தப்பட்டவர்களின் கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் சம்பந்தன் தெரிவித்…
-
- 5 replies
- 442 views
- 2 followers
-
-
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவரைச் சுட்டவன் பெரிய கெட்டிக்காரன் என யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி புகழாரம் சூட்டியுள்ளார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும் கடந்த 26ஆம் திகதி காலையில் அவர் தனது வீட்டில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் வெளியில் சென்று வந்திருந்தார். அதன்படி தற்போது பொலிஸாரினால் குறித்த நபரைக் கைது செய்வதற்க…
-
- 5 replies
- 733 views
-
-
போர்குற்றம் தொடர்பிலான இலங்கையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை - நவ்வி பிள்ளை மலேசிய நிருபர் சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010 Navvi போர் குற்றம் தொடர்பில் இலங்கை உள் நாட்டிலேயே விசாரணை செய்வதில் ஐக்கிய நாடுகள்சபை நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என நவ்வி பிள்ளை கூறியுள்ளார். இதே இலங்கையில் வேளை போர் குற்றம் தொடர்பான பிரச்சினை உரிய முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் வெளிப்படுத்தப்படவில்லை, கையாளவில்லை என தனது அதிருப்தியினையும்தெரிவித்துள்ளார். எல்லோரும் இலங்கையில் நடைபெறப்போகும் தேர்தலினை பார்த்து கொண்டிருக்கின்றோம். என்பதனை மஹிந்த சமரசிங்கவை சந்தித்தபோது ஞாபகப்படுத்தினேன். என கூறிய நவ்வி பிள்ளை இலங்கை அரசாங்கம் வெளி நாட்டு சக்திகளை விசாரணைக்கு அ…
-
- 5 replies
- 984 views
-
-
மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல் மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை நினைவுகூரப்பட்டுள்ளது . 1990ம் ஆண்டு செப்ரம்பர் 20ம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் …
-
- 5 replies
- 762 views
-
-
யாழில் பூரண ஹர்த்தால்; தீவக மக்களும் பெண்கள் அமைப்புக்களும் அழைப்பு! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீவக மக்களும் யாழ்ப்பாணம் பெண்கள் அமைப்புகளும் இணைந்தே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்துள்ளனர். இது தொடர்பான சுவரொட்டிகள் சம்மந்தப்பட்டோரால் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் திருநெல்வேலிப் பகுதி அகிய இடங்களில் ஒட்டப்பட்டுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ”குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளாவர், இவர்களும் தண்டிக்கப்படவேண்டும், வித்தியாவுக்கு முழுமையான நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்க…
-
- 5 replies
- 706 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடைபெற்ற காலங்களில் இந்தியப் படைகள் சிறிலங்காவில் இருந்தன என்பதை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்காப் படையினருடன் இணைந்து இந்தியப் படையினர் செயற்பட்டதாக, இந்திய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுத் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நேரடியாகப் பதிலளிக்காத, பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, “இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவை எப்போதும் உடைக்க முடியாது. 1948ம் ஆண்டு சிறிலங்காவும், 1947ம் ஆண்டு இந்தியாவும் சுதந…
-
- 5 replies
- 543 views
-
-
By VISHNU 10 AUG, 2022 | 03:04 PM (எம்.வை.எம்.சியாம்) திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பகுதியை ஆக்கிரமித்து ஆலயத்திற்கு செல்லும் வழியின் இருமருங்கிலும் கடைத்தொகுதிகள் அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் ஆலய திருப்பணி வேலைகள் முன்னெடுப்பதற்கு திணைக்களம் இடையூறு விளைவித்து வருவதாகவும் இது தொடர்பாக உரிய தீர்வினை பிரதமர் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத்தர வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்ந…
-
- 5 replies
- 523 views
-
-
Dear all, First, please excuse me as I dont know how to type in Tamil, but I will lean that quickly and write it in Tamil BBC has opened a discussion on their 'Have your Say' section about Child recruitment of GOSL and Sinhala Chauvanists are too busy in that discussion to justify/deny the UN accusation by giving false news and arguments. Since BBC is reacing many nationals worldwide, we should tell our side truths and news. We should gifht against barbaric GOSL in all possible fronts including foreigh media This is the link: http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20061114090536 Please put your comments and shed the light on truth.
-
- 5 replies
- 2.2k views
-
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் நடைபெற்றது. கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 10 பேரையும் நினைவு கூரும் முகமாக இந் நிகழ்வு அனுஸ்டிக்;கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன். தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான பேராசிரியர் சிற்றம்பலம், சி.வி.கே.சிவஞானம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், சொலமன் சிறில், சிவச்சந்திரன், தமிழ் தேசியக்கூட்டமைப்pன் நிர்வா…
-
- 5 replies
- 850 views
-
-
எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களால் 480 மில்லியன் டொலர் மானியத்தை இழக்கும் இலங்கை? 2020 ஆம் ஆண்டுக்கான மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை. குறித்த பட்டியல் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில், இலங்கையின் பொருளாதாரம் மேல் நடுத்தர வருமான நிலைக்கு மாறிய பின்னர் குறித்த பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதாக வட்டார தகவல்கள் கிடைத்துள்ளன. இலங்கை ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் உள்ளது. அத்தோடு இந்த மானியம் தொடர்பாக தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் முன்வைப்பதால், 480 மில்லியன் டொலர் மானியத்தை நாடு இழக்கும் தருவாயில் காணப்படுகின்றது. அந்தவகையில் அமெரிக்காவின் மிலேன…
-
- 5 replies
- 551 views
-
-
http://www.blackjuly83.com/
-
- 5 replies
- 1.8k views
-
-
பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? விக்னேஸ்வரன் கேள்வி Bharati May 18, 2020 பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? விக்னேஸ்வரன் கேள்வி2020-05-18T05:52:17+00:00உள்ளூர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? எனக்கேள்வி எழுப்பியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரபாகரனின் போராட்டத்தை மகாபாரதப்போருடனும் ஒப்பிட்டுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் சரியானது என்று நீங்கள் க…
-
- 5 replies
- 702 views
-
-
தமிழினத்தின் ஒரே காவலர்களாக விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியேறியிருக்கும் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்ட "ஒபாமாவுக்கான தமிழர்கள்" என்ற அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்றுவரும் போரை, விடுதலைப் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறிலங்கா சித்தரித்து வருகின்றது. மேற்குலகமும், மேற்குலக ஊடகங்களும் கூட - உண்மையை மறைத்து - …
-
- 5 replies
- 1.2k views
-