ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
நாம் அரசியல் செய்கிறோமா?; மக்களிடம் கேளுங்கள் – இப்படியும் சொல்கிறது இராணுவம்! “யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுகின்றனரா என்பதை பொது மக்களிடம் கேட்டுப் பார்த்தால் விளங்கும். அரசியல்வாதிகள் போலிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்” இப்படிச் சொல்கிறார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய. ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “நேற்று முன்தினம் இராணுவ தளபதி யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் கையளித்தார். இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.…
-
- 5 replies
- 849 views
-
-
புதிதாக அச்சிடப்பட்டுள்ள பல தேசிய கொடிகளில் தமிழரைக் குறிக்கும் செம்மஞ்சள் நிறம் அச்சிடப்படவில்லை சிங்களவரை பிரதிபலிக்கும் கடுஞ்சிவப்பு நிறமே அச்சிடப்பட்டுள்ளது: இலங்கையின் வடக்கில் நடைபெற்று வந்த யுத்தம் முடிவையெட்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இதன் மூலம் தோற்கடிக்கப்பட முடியாது என பலராலும் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது தோல்வி கண்டுள்ளதாகவும் அரச தரப்பு தெரிவிக்கின்றது. இந்த யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் சகலரும் வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் இலங்கை தேசிய கொடியை பறக்கவிடவேண்டுமென படையினரும் காவற்துறையினரும் ஏன் அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. இதற்காக பல இலட்சக்கணக்கில் இலங்கைத் தேசிய கொடிகள் ப…
-
- 5 replies
- 2.7k views
-
-
தற்போது ரொமேனியாவை அதிரவைக்கும் சனல் 4 இன் காலம் மக் ரே ! நேற்றைய தினம் லண்டனில் இருந்து ரொமேனியா நாட்டுக்குச் சென்ற சனல் 4 இன் ஆவணப்படத் தயாரிப்பாளர் காலம் மக் ரே, அங்கே இலங்கை தொடர்பான ஆவணப்படத்தை திரையிட்டுள்ளார். ஐ.நாவின் அனுசரனையோடு சுமார் 200 மாணவர்களுக்கு முன் நிலையில் நோ பயஃர் சூன் காண்பிக்கப்பட்டுள்ளது அன் நாட்டின் தலைநகரில் உள்ள பலகலைக் கழகம் ஒன்றில், அரசியல் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களுக்கு மத்தியிலேயே இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் இதனை பார்த்து அழுதுவிட்டதாகவும், அவர்கள் இலங்கையில் நடப்பதை முதல் முறையாக உணர்ந்துள்ளதாகவும் அங்கிருந்து பேசிய காலம் மக் ரே ரொமேனியா நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே, இலங்கையைப் பற்றிய வி…
-
- 5 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் உண்மை முகம் - புலிகளை அழித்ததற்கு மகிந்தவிற்குப் பாராட்டு தமிழீழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தமது உயரிய உயிர்களை ஈகம் செய்து மாபெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்களை அழித்ததற்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. தமிழ் மக்கள் தமது விடுதலைக்கு உதவுவார் என தற்பொழுதும் நம்பியிருக்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் இந்தக் கருத்து அவரது உதவியாளர்கள் மூலம் நேரடியாக சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்ந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று கொழும்பில் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்க அரசுத் தலைவரது சிறப்பு உதவியாளரும…
-
- 5 replies
- 989 views
-
-
14 AUG, 2023 | 01:58 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. செஞ்சோலை வளாகம் செஞ்சோலைய…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
நாமலின் மின்கட்டணம் செலுத்தப்பட்டது கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகிய நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் மின்சார கட்டணம் தொடர்பான செய்திக்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார். தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில், சுமார் 26 இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்தின் 2.6 மில்லியன் மின்சாரக் கட்டணம் நேற்று (02) நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் செலுத்தப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டு…
-
- 5 replies
- 701 views
-
-
லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கடத்திய இரண்டு பேரை காவல் துறையினர் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகவும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தமக்கு இந்த தகவல் கிடைக்கப் பெற்று உள்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரகீத் எக்நெலிகொட கடத்தப்பட்டிருந்தார். பிரகீத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த இருவரும் இராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ராஜகிரிய பிரதேசத்தில் கடத்தப்பட்ட எக்நெலிகொட மின்னேரிய இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பிரகீத்தை இரண்டு இராணுவ கேர்ணல்களிடம் ஒப்படைத்ததாகத் தெரிவிக…
-
- 5 replies
- 623 views
-
-
இடப்பெயர்வு தான் எங்கள் வாழ்வோ...? மழையால் சிதைந்த இலங்கை இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அங்கே மக்கள் வீட்டு கூரைகளின் மீது ஏறி, படகுகளுக்காக காத்திருந்தனர். இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கே மக்கள் காணாமல்போன தம் பிள்ளைகளை தேடிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை அந்த தீவுத் தேசம் சிதைந்து போய் இருக்கிறது. இம்முறை மனிதர்களுக்கிடையேயான தாக்குதலால் அல்ல. இயற்கை ஒரு பெரும் யுத்தத்தை அம்மண்ணின் மீது நிகழ்த்தி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த பெரும் மழைக்கு, ஏறத்தாழ 155 பேரை காணவில்லை என்று அரசு தரும் புள்ளி விவரங்களே சொல்கின்றன. இன்னும் ஆங்காங்கே மழை கொட்டி தீர்த்து கொண்டுதான் இருக்கின்றது.…
-
- 5 replies
- 750 views
-
-
கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வடக்கிலிருந்து தப்பி ஓடும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின் சன்டே அப்சர்வர் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. நகருக்குள் நுழைய இன்னும் 2 கிலோமீட்டர் தூரமே பாக்கி உள்ளது. எனவே நீண்ட காலத்திற்கு தனது மறைவிடத்தில் பிரபாகரன் பதுங்கியிருக்க முடியாது. தனது போராட்டத்தை பிரபாகரன் இனியாவது கைவிட வேண்டும். ராணுவத்துடன் இனியும் அவர்களால் போரிட முடியாது. இதை அவர் உணர வேண்டும். அவர் தப்பி ஓடக் கூடிய வாய்ப்புகள் இல்லை என்று கூற முடியாது. அவர் தப்பிச் செல…
-
- 5 replies
- 3.5k views
- 1 follower
-
-
தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தங்கயுள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்ற நடநவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புளொட் கட்சி தற்போது, எந்தவொரு பாராளுமன்ற அங்கத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 13 ஆவது த…
-
- 5 replies
- 778 views
-
-
சரத்பென்சகோ முன்னிலையில்! ஆறாவது சனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 13 தினங்கள் உள்ள இத்தருணத்தில், தெற்கே சனாதிபதி தேர்தல் பிரச்சாரம் ஏட்டிக்கு போட்டியாக நடைபெறுகின்றது. தபால் மூலம் வாக்களிப்புக்கள் நிறைவு பெற்றுள்ளது. கிடைக்கப்பெறும் அறிக்கைகளின் பிரகாரம் வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கே தபால் மூலம் வாக்களித்தவர்கள் புள்ளடியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தபால் மூலம் வாக்களிப்பு செய்தவர்கள் அரச பணியாளர்கள் தான். ஆட்சிக்கு வந்தால், வேதனத்தை ரூபாய் பத்தாயிரம் உயர்த்தப்போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு அரச பணியாளர்களை கவர்ந்திருந்தது என தொழிற்சங்க பிரமுகர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் வவுனியாவில் த…
-
- 5 replies
- 907 views
-
-
ட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மீது நேற்று சிலர் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இக் குண்டு வீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன. இதே போன்று மேயருக்கு சொந்தமான வீடு மற்றும் அவன் கணவனின் வர்த்தக நிலையம் என்பனவும் நேற்று உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச் சம்பவங்கள் இடம்பெற்ற போது மேயர் சிவகீத்தாவோ அல்லது அவன் குடும்பமோ அங்கு தங்கி இருக்கவில்லையென தெவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீத்தா ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து பிரசார நடவ டிக்க…
-
- 5 replies
- 1.4k views
-
-
அரச ஊழியர்கள்... வேலை வாய்ப்பிற்காக, வெளிநாடு செல்ல சந்தர்ப்பம். பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான், போலாந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளன. அந்த வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிலவுகின்ற பொருளாதார பின்னடைவை எதிர்கொள…
-
- 5 replies
- 505 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை நிச்சயிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் பணியில் அரச தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவும், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் மும்முரமாக ஈடுபடுவார்கள் என அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு மாகாணம் விளங்குமெனக் கூறப்படுகின்றது. 2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் வாக்களிப்பதற்குத் தடைவிதித்தது. அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 48 லட்…
-
- 5 replies
- 901 views
-
-
ஜெனிவா கூட்டத்தொடர் – நழுவுகிறது சிறிலங்கா அரசு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு சிறிலங்காவில் இருந்து அரசாங்க குழு ஜெனிவாவுக்கு செல்லாது என்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான விவாதம் வரும் 20ஆம் நாள் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கலந்துரையாடிய பின்னர், உயர்மட்டக் குழுவை இங்கிருந்த அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன தெரிவித்தார். ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்ஏ.அசீஸ் மற்றும் அவரது அதிகாரிகளையே இ…
-
- 5 replies
- 732 views
- 1 follower
-
-
யாழ். குருநகர் பாசையூர் கடற்பரப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா கடற்படைப் படகுகள் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டதில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.1k views
-
-
நிலைமை மோசமடைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் லெபனான், சோமாலியா, சிம்பாப்வே ஆகிய நாடு களுடன் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. [sunday February 03 2008 06:57:26 PM GMT] [யாழ் வாணன்] பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் லெபனான், சோமாலியா, சிம்பாப்வே ஆகிய நாடு களுடன் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. பிரச்சினைகள் தொடர்பான சர்வதேசக் குழு வெளியிட்டுள்ள கண்காணிப்பு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலகில் தற்போது ஏழு நாடுகளில் உள்நாட்டு மோதல்கள் தீவிரமடைந்து, பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. ஜெனியாவில் இன மோதல்கள் காரணமாக டிசம்பர் 27 முதல் ஜனவரி இறுதிப்பகுதிவரை 900 பேர்…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். எமது உடலில் சுவாச அமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில், மனிதர்கள் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் வாழ முடியும். ஆனால், சுவாசிக்காமல் வாழ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுவாச நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதடு தெரிவிக்கையில், உலகளவில் இறப்புக்கான ஏழாவது முக்கிய காரணியாக நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) உள்ளது. இந்த நோய் நிலைமை தொடர்பில் சமூகத்தில் சர…
-
-
- 5 replies
- 352 views
-
-
தமிழ்நாட்டுக்கு ஒரு கருணாநிதி; ஈழத்துக்கு ஒரு சம்பந்தர் என்று சொல்லும் அளவில் இருவரினதும் பக்காப்பொய்யும் நடிப்பும் உச்சத்தைத் தாண்டிவிட்டன. தமிழ் மக்களை ஒரு பொருட்டாகக் கணிக்காத ஒரு மனிதர்தான் சம்பந்தர் என்று அறுதியிட்டுச் சொல்லும் அளவில் அவரின் செயற்பாடு அமைந்துள்ளன. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுங்கள் என்று கேட்டால், சிறைச்சாலைத் திறப்பு என்னிடமா? இருக்கிறது என்று ஒரு மனிதன்- தமிழன் கேட்பதாக இருந்தால் அதை மன்னிக்க முடியுமா? என்பதை தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு கூறிய இரா.சம்பந்தர் யாழ்ப்பாணத் தில் நடந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,பங்காளிக் கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர…
-
- 5 replies
- 501 views
-
-
நாடாளுமன்றின் குறைந்த செயற்திறன் கொண்டவர்களாக அடையாப்படுத்தப்பட்ட 10 எம்பிகள் பட்டயலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான இணைய தளம் வெளியிட்டுள்ளது. இதன்படி பொது ஜன பெரமுன சார்பில் கருணாதாச கொடிதுவக்கு, நிபுண ரணவக்க, மர்ஜான் பலீல், ஜானக பண்டார தென்னகோன், ட்ரிரன் அலெஸ் ஆகியோரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கு.திலீபன்,முஸ்லிம் தேசிய கூட்டணி சார்பில் அலி சப்பிர் ரஹீம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவர் சி.சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் ஆகியோர் இந்த 10 பேரில் காணப்படுகின்றனர். குறைந்த செயற்திறன் கொண்ட எம்பிகள் பட்டியலில் தமிழர் மூவர்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 5 replies
- 775 views
-
-
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு 20 நாடுகளிடமிருந்து புலனாய்வு மற்றும் இராணுவ உதவிகள் கிடைத்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம பாராளுமன்றத்தில் கூறினார். “எமது அரசாங்கப் படைகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகள் பெரிதும் உதவியாகவிருந்தன. இராஜதந்திர நடவடிக்கைகளாலேயே உடனடியாகத் தேவைப்பட்ட பொருள்கள் ஆகாயமார்க்கமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன” என அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் குறித்து நட்பு நாடுகளிலிடமிருந்து புலனாய்வுத் தகவல்கள் உடனக்குடன் கிடைத்துவந்ததால் அதனை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தால் இலகுவாக இருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனி…
-
- 5 replies
- 1.5k views
-
-
பொது இடத்தில் மோதிக்கொண்ட... விமல் – பசில் ஆதரவாளர்கள்!! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ பொதுஜன பெரமுனவின் சாமர சுபாஷன டி சில்வா ஆகியோரே கைகலப்பில் ஈடுபட்டனர். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கொத்மலை பிரதேச அபிவிருத்தி கூட்டத்தின் போது வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலில் முடிவடைந்தது. அபிவிருத்தி பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த மோதலுக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள் பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச இடையேயான வெளிப்படையான மோதல், தற்போது கட்சி உறுப்பினர்களிடையே கூட ப…
-
- 5 replies
- 568 views
-
-
வரவு - செலவுத் திட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள் : ஜனாதிபதி விவசாய தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு, 2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனம், 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள், விவசாயத் தொழிற்துறையைப் பலப்படுத்துவதற்காக தேசிய வீடமைப்புக் கொள்கை ஆகிய சில முன்மொழிவுகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெளியிட்டார். தேசிய உணவு உற்பத்தி புரட்சியை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விவசாய தொழிற்துறை பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாத…
-
- 5 replies
- 735 views
-
-
கே பிக்கு ராஜா மரியாததை - பிரேமச்சந்திரன் கவலை - முதலமைச்சர் பதவிக்கு சுரேஷ் முன்ஏற்பாடு (முதலமைச்சர் தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து/இக்காக முன் மொழியபடகூடியவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் , உதயன் வித்யாதரன் என செய்திகள் கசிகின்றன) பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு கைது செய்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட கே.பி. என்ற நபரை வடக்கிலுள்ள அகதி முகாம்களுக்கு இராஜ மரியாதையுடன் அழைத்துச் சென்ற நிலையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களை அகதி முகாம் வாசலில் வைத்து உட்செல்ல அனுமதி மறுத்து திருப்பியனுப்பியது ஜனநாயகமா? எனத் த.தே.கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த செய்தி வீரகேசரி வார வெளியீடில் உள்ளது. சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு அறிக்கை விட்டுள்ளார். ஒவொருவரு…
-
- 5 replies
- 1.4k views
-
-
வன்னி போரில் சரணடைந்தோர்களை சுட்டுக்கொன்ற இராணுவ தளபதி ஐக்கிய நாடுகளின் தூதுவராக செல்கின்றார். போரின் இறுதிப்பகுதியில் வெள்ளைக்கொடியுடன் சரணடந்த போராளிகளான நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரை சுட்டுக்கொன்ற 58 வது டிவிசன் கட்டளை அதிகாரி மேஜர் கெனெரல் சவேந்திர சில்வாவே இவ்வாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர துணைத்தூதராக நியமிக்கப்படவுள்ளார். ஐக்கிய நாடுகளின் தற்போதைய இலங்கைக்கான பிரதி தூதுவரை மீழ அழைக்கும் இலங்கை அரசு சவேந்திர சில்வாவை அனுப்புகின்றது. ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை முறியடிக்க இவரே சரியான ஆழ் என இலங்கை படைத்துறை விளக்கம் வேறு அளித்துள்ளது. தமிழர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இது மட்டுமல்ல கடற்படைத்த…
-
- 5 replies
- 959 views
-