ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143666 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் இருபது வருடங்களுக்கு அல்லது அதற்கு மேலும் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று இலங்கை இராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருக்கிறார், என கொழும்பிலிருந்து வெளிவரும் 'சன்டே லீடர்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இவ்வருட ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலப்புலிகளை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று அண்மைக் காலத்தில்தான் ராணுவத் தளபதியும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபயாவும் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை அடுத்த தலை முறைக்கு விட்டு வைக்கப் போவதிலை;லையென்று இந்த இருவரும் தெரிவித்திருந்தார்கள். என்று இப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. இராணுவத் தளபதியின் கூற்றுப் படி 2006 ம் ஆண்டுக்குப் பிறகு 9,000 க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றோழித்திருக்கிறார்கள்…
-
- 4 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் கோத்தபாய குழுவினர் 07.08.2008 / நிருபர் எல்லாளன் யாழ்குடாநாட்டிற்கு சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா மற்றும் கோத்தபாய ராஜபக்ச டொனாட் பேரேரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று காலை 10.00 மணியளவில் விஜயம் செய்துள்ளனர் இங்கு சென்ற இவர்கள் யாழ்குடா படைத்தளபதி டிஸ் சந்திரசிறியைச் சந்தித்து களநிலமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் யாழ்குடாநாட்டில் களநிலைமைகளில் மாற்றம் ஏற்படாதவாறு பார்க்குமாறும் பணித்துள்ளனர். அத்துடன் பலாலியிலிருந்து இக்குழுவினர் யாழ்நகருக்கும் காரைநகர் கடற்படைத்தளத்திற்கும் விஜயம்செய்து படைஉயர்மட்டதளபதிகளுடன் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆலோசித்தாக தெரிவிக்கப்படுகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=…
-
- 4 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தையரும் அவரது சகாக்களும் டுபாய்க்கு செல்வதற்காகப் பயணிக்கவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக குறித்த விமானத்தில் அவர்களால் பயணிக்க முடியாத நிலையில் பிறிதொரு விமானத்தில் செல்ல வேண்டி ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக அவரது பயணத்தில் சில மணிநேரம் தாமதம் ஏற்பட்டதாகவும் அந்தச் செய்திகள் மேலும் கூறுகின்றன. குறித்த விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த இரு எஞ்ஜின்களில் ஒன்றின் எரிபொருட் காவு குழாய்க் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கோளாற்றை விமான நிலையத் தொழில்நுட்பவியலாளர்களால் கண்டு பிடிக்க முடியாது போயுள்ளது. மஹிந்தையரின் பாதுகாப்புப் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். சிறிலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான …
-
- 4 replies
- 829 views
-
-
கிளினொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். கிளினொச்சி நகர், பூனகரி, முழங்காவில், மான்குளம், முள்ளீயவளை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை தற்காலிக தடுப்பு முகாம்களாக்கி அங்கு வவுனியாவில் இருந்து மீழ் குடியேற்றம் என மக்களை அழைத்து வந்து தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார் அந்த அதிகாரி. இந்த பிரதேசங்களில் பாடசாலை, வைத்திய சாலைகள்,கூட்டுறவு கடைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் பொலிஸ் நிலையங்கள் மட்டும் ஒரு சில இடங்களில் திறக்கபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் இங…
-
- 4 replies
- 1.1k views
-
-
புதிய 1000 ரூபா நாணயத்தாள் நேற்று முதல் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்குமான வழிபிறந்துள்ளதை நினைவுகூரும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை நேற்று வெளியிட்டு வைத்தது. மத்திய வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் புதிய நாணயத்தாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். 1998ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயத்தாள் நேற்று முதல் தேசிய ரீதியில் புழக்கத்திற்கு விடப்பட்டது. …
-
- 4 replies
- 862 views
-
-
சரத் பொன்சேகா பல விடயங்களில் தமிழ் கூட்டமைப்பிற்கு உத்தரவாதம் – அவர்களின் ஆதரவு கிடைக்கலாம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத்திட்டங்களும் சமாதான வழிமுறைகளும் அடங்கிய ஆவணம் ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா கையளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கையளிக்கப்பட்ட ஆவணத்தில் 10 அம்சங்கள் உள்ளடக்கப்படடுள்ளன. சிவில் நிர்வாகம் மற்றும் இயல்பு நிலையை நிலைநாட்டுதல், துணைப்படைகள் மற்றும் ஆயுதக்குழுக்களை தடைசெய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கான துரித மீள்குடியேற்றம், மற்றும் புனர்வாழ்வு அளித்தல் போன்றவை இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப…
-
- 4 replies
- 662 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசை சிதைக்க சிறிலங்கா திட்டம்: கைக் கூலிகளாக கனடா உலகத்தமிழர் இயக்க ஊழியர்கள் சிலர்! திகதி: 10.10.2010 “நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் நடந்தது என்ன? ஏன் வெளியேறினோம்?” என்னும் தலைப்பில் “மக்கள் பிரதிநிதிகளின் மனம் திறந்த அறிக்கை” எனக் குறிப்பிடும் ஒரு அறிக்கை ரொறன்ரோவில் இருந்து வெளியாகும் பல பத்திரிகைகளில் இந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று வெளியாகிய அதிசயத்தை எமது உடன்பிறப்புகளாகிய தமிழ் மக்கள் யாவரும் அறிவர். குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயத்தைச் சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ் மக்களுக்குத் தற்போது இருக்கும் ஒரேயொரு வழியாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு யாப்பு எழுதியவர்களே இந்த அமைப்பிலும் தங்களுடைய ஆதிக்கத்தைத் தொடர்ந்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
மைத்திரிபால சிறிசேனவிடம்... குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(வியாழக்கிழமை) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். இதன்போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாகவே மைத்திரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து ம…
-
- 4 replies
- 393 views
-
-
அண்மைக்காலமாக, யாழ்ப்பாணத்தின் புற நகர்ப் பகுதியில் அதிகாலையிலும் மாலையிலும் இளைஞன் ஒருவர் மோட்டார் வண்டி ஒன்றில் பாண், பணிஸ், கேக் உள்ளிட்ட உணவுப் பண்டங் களை வீடுவீடாகச் கொண்டு சென்று விற்பனை செய்கின்றார். சுகாதார முறைப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் உணவுப் பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. குச்சொழுங்கைக்கெல்லாம் சென்று தனது விற்பனையை அந்த இளைஞர் முடுக்கி விட்டுள்ளார். வியாபாரம் தாராளம். அதிகாலை வேளையில் வீடுதேடி உணவுப் பண்டம் வருவது எவ்வளவோ வசதியல்லவா? அந்த இளைஞனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நல்ல முயற்சி என்று நினைத்துக் கொண்டு இந்த இளைஞனை விசாரித்தபோது அவர் ஒரு சிங்கள இளைஞர் என்பது தெரிய வந்தது. பார்த்தீர்களா அப்படியயாரு முயற்சி பற்றி நாம் சிந்தித்தோமா எனில் இல்லவே …
-
- 4 replies
- 945 views
-
-
சனிக்கிழமை, 18 ஜூன் 2011 10:17 சிறீலங்கா இராணுவத்தில் பணியாற்றும் மேலும் 108 இராணுவத்தினரை எவ்விதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி கட்டாய ஓய்வில் அனுப்பும் நடவடிக்கையில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா ஈடுபட்டு வருவதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவிற்கு பக்கசார்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்களுக்கு கட்டாய ஓய்வை வழங்க பாதுகாப்புச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். கப்டன் தரம் முதல் மேஜர் ஜெரல் தரத்திலுள்ளவர்கள் வரை பல்வேறு இராணுவ உயர் பதவியில் உள்ள 108 பேரே இவ்வாறு கட்டாய ஓய்வில் அனுப்பப்படவுள்ளனர். http://uyarvu.com/index.php?option=com_content&view=article&id=10326:-…
-
- 4 replies
- 970 views
- 1 follower
-
-
தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite) ரிசர்ச் என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான உடன்பாட்டையும் இலங்கை உள்ளடக்கியுள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகள் தொடர்பான 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட்டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளதாக வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க வருவாயை ஈட்டுவதில் வரி வருவா…
-
- 4 replies
- 778 views
- 1 follower
-
-
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று (05) இரவு தமக்கு கிடைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர “அத தெரண”விற்கு தெரிவித்தார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” வினவிய போது சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டார். https://tamil.adade…
-
- 4 replies
- 510 views
-
-
ஐ.நா வில் தனக்குத் தானே கரி பூசிக் கொண்ட சிறிலங்கா. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் கட்டடத் தொகுதியில் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமே அம்பலப்பட்டு அவமானத்துக்குள்ளாகியது. மனித உரிமைகள் குறித்த 5 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 11 ஆம் நாள் முதல் நடைபெற்று வரும் இக்கூட்டத் தொடரில் அனைத்துலக மனித உரிமைகளின் நிலைமை மற்றும் அதனை பாதுகாப்பது பற்றி பல்வேறு கலந்துரையாடல்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகளு…
-
- 4 replies
- 2.1k views
-
-
வெள்ளை வேன் ஆட்கடத்தலில் பின்னணியில் கோத்தபாய? Thursday, November 24, 2011, 14:21 இலங்கையில் வெள்ளைவான்கள் மூலம் ஆட்களை கடத்திச் செல்லும் குழுவினரை பாதுதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷவே முழுமையான அறிவுறுத்தல்களுக்கு அமைய வழிநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ விசேட அதிரடிப்படையின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவின் முன்னாள் சார்ஜன்ட் மேஜர் ஒருவரே இந்த குழுவை வழி நடத்தி வருவதாகவும் வவுனியா மாமடு பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இவ் ராணுவ அதிகாரி ஒரு காலை இழந்தவர். அங்கவீனம் காரணமாக சேவையில் இருந்து விலகி கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் தற்போது விசேட அதிரடிப்படையின் தலைமையத்தில் இருந்து பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்படாவிடின், கௌரவப் பதவியை தூக்கி எறிவேன் பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படாவிட்டால், தனக்கு வழங்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதித் தலைவர் என்ற கௌரவப் பதவியை தூக்கி எறியப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார். நாடாளுமன்றில் மக்கள் பலம் கொண்ட மூன்றாவது கட்ச…
-
- 4 replies
- 525 views
-
-
ரவி கருணாநாயக்கவின் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன புதிதாக நேற்று சபையில் தமிழ்ப் பெயரை சூட்டி அவரை தமிழராகவர்ணித்தார். அத்துடன் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்பதுவே ரவி கருணாநாயக்கவின் உண்மையான பெயர் என்றும் அந்த பெயரே பாராளுமன்ற ஹன்சாட்டில் பதியப்பட்டிருப்பதாகவும் பந்துல குணவர்தன அடித் துக் கூறினார். எனினும் பந்துல குணவர்தன எம்.பி.யினால் மேற்படி கூறப்பட்டதையடுத்து சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல பந்துல குணவர்தனவுடன் முரண…
-
- 4 replies
- 1.5k views
-
-
நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என்றார். அத்துடன், இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். வேலணை மற்றும் வடக்கு நாரந்தனை, நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) ந…
-
- 4 replies
- 567 views
- 1 follower
-
-
கட்டுரையை முழுமையாகப்படிக்க படத்தை அழுத்துங்கள்.
-
- 4 replies
- 2.9k views
-
-
Out of media player. Press enter to return or tab to continue. தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: சம்பந்தன் தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன். சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் பேரவை என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு அரசியல் அமைப்பு என்கிற சந்தேகங்களும் விமர்சனங்களும் பரவலாக நிலவிவ…
-
- 4 replies
- 669 views
-
-
பிரபாகரனே நிராகரித்த 13 ஐ கூட்டமைப்பு ஏன் கேட்கிறது?; இந்தியாவில் கோத்தபாய உதயனுக்கு கருத்து 13ஆவது திருத்தத்தை பிரபாகரனே நிராகரித்திருந்தார், ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு இதனை தூக்கிப் பிடித்துக்கொண்டு ஏன் ஆடுகிறது என்பது மட்டும் தனக்குத் தெரியவில்லை என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கடும் சீற்றத்துடன் தெரிவித்தார். உத்தியோக பூர்வமாக இந்தியாவுக்குச் சென்றுள்ள பாதுகாப்புச் செயலர் அங்கிருந்து "உதயனு'க்கு குறுகிய செவ்வியொன்றை வழங்கியுள்ளார். அந்தச் செவ்வியின் விவரம் வருமாறு: கேள்வி: இந்தியாவுக்கான உங்கள் பயணத்தின் போது 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் பற்றி ஏதாவது பேசப்பட்டதா? கோத்தபாய: இல்லை. அப்படி எதுவுமே பேசப்படவில்லை. கேள்வி: 13 ஆவது தி…
-
- 4 replies
- 576 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சேனல் 4 வெளியிடும் மூன்றாவது திரைப்படமான No Fire Zone நேற்று ஜெனிவாவில் பொதுமக்கள் காட்சிக்கு வந்தது. No Fire Zone இன், 90 நிமிட ஆவணத்திரைப்படமும் முதன்முறையாக இங்கு தான் பொதுமக்கள் காட்சிக்கு வருகிறது என முன்கூட்டியே தெரிந்திருந்தால் திரையரங்கு முழுவதுமாய் நிரம்பி வழிந்திருந்தது. படம் தொடங்குவதற்கு முன்னர், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சுவிற்சர்லாந்து பிரதிநிதியாக கலந்து கொண்ட அம்மையார், இலங்கை அரசு கூறும் பதில்கள் தங்களுக்கு கவலையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக கூறினார். இறுதிப்போர் 2009 இல் முடிவடைந்த பிறகும் தொடரும் சித்திரவதைகள், பெண்கள் மீது நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து ஆதாரத்துடன் தகவல்களை வெளிக்கொணர்ந்தோம். இக்க…
-
- 4 replies
- 876 views
-
-
தமிழ்ஸ் போர் ஒபாமா விற்க்கு ஒரு பகிரங்க மடல் - இலங்கையில் இருந்து Goshan Che என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டது. தமது குரலுக்கு இடம் வழங்குங்கள் எனக் கேட்கப்பட்டமைக்கு அமைவாக இதனை மீள் எழுத்துருவாக்கலுக்கு உட்படுத்துமாறு கோரி மீண்டும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டுகோளை சில நீக்கங்களுடன் பிரசுரிக்கிறோம். இதற்கு பதிலாகவோ, விமர்சனமாகவோ எழுதுபவர்கள் ஆரோக்கியமாக எழுதினால் மட்டுமே அவற்றை பிரசுரிப்போம். என்பதனை அறியத் தருகிறோம். ஆ.ர் அண்மையில் நீங்கள் வெளிவிட்டிருந்த 'கொழும்பு விக்னேஸ்வரன்' என்ற அறிக்கைக்கான எனது பதில் இதோ. முதற்கண் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்கும் வகையில் கருத்துக்களை வெளிவிடுவதை தவிருங்கள். விக்னேஸ்வரனின் மீதான உங்…
-
- 4 replies
- 615 views
-
-
முகாம்களில் அடைப்பட்டிருக்கின்ற மூன்று லட்சம் மக்களில் ஏறத்தாள 1600 மாணவர்கள் வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நூல்கள் மற்றும் சத்துணவு போன்றவற்றை ICUTS என்னும் ” சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் ” ( International Committee of University Tamil Students) எனும் அமைப்பு உதவிகளைப் பெற்று இலங்கை கல்வித்திணைக்களம் ஊடாக அந்த மாணவர்களுக்குச் செய்து வருகின்றது. அது தொடர்பான அவர்களின் அறிக்கை. எம் இனிய தமிழ் நெஞ்சங்களே! வாழ்வில் துன்பம், என்பதை கடந்து துன்பமே வாழ்வாய் எம்மினத்தின் ஒரு பகுதி வாடி வதங்குகிறது. உறவுகளையிழந்து, உறுப்புக்களை தொலைத்து, உடமைகள் அழிக்கப்பட்டு, ஊரையும் பறிகொடுத்து இன்று உணவின்றி, உறங்க ஓ…
-
- 4 replies
- 1.7k views
-
-
மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் வேல்ஸிலிருந்து அருஷ் இலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தி வரும் சுழல்காற்றை விட வேகம் மிக்க சூறாவளி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் காட்சிகள் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ உண்மையானது என ஐ.நா.வின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அல்ஸ்ரனின் அறிக்கை வெளிவந்த சில மணிநேரங்களிற்குள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவசர அவசர…
-
- 4 replies
- 760 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கைத் தமிழ் மக்க ளின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங் களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினரான மாவை சேனாதிராஜா நேற்றுப் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார். நேற்று மாலை வரை இரண்டு நாள்கள் புதுடில்லியில் தங்கியிருந்து இந்திய அரசுத் தலைமையோடும், அதிகாரிகளோடும் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எம்.பிக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநா…
-
- 4 replies
- 682 views
-