Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நாவுக்கு ஆதரவாக ஏன் தமிழினம் ஓரணியில் திரளக் கூடாது? வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் அநியாயமாகப் பலியாகிய பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற உண்மையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில் வன்னி இறுதிக் கட்டப் போரில் ஒலித்த அவலக் குரல்கள் அந்த மக்களுடன் மரணித்து விடவில்லை; சர்வதேசத்தின் மனச்சாட்சியை உசுப்பிக் கொண்டிருப்பதின் சாட்சியாகவே நிபுணர் குழு வடிவமெடுத்துள்ளது. இறுதிக் கட்டப் போரின்போது கனத்த மனதுடன் மனதுக்குள் அழுது புலம்பும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தனர். அந்தளவுக்கு வெற்றிக் கோஷங்கள் தமிழ் மக்களை வாய் மூடி மௌனிகளாக்கியது. இன்றும்கூட அதே நிலைதான். ஆ…

  2. பெருமளவான புலி உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிக் குறிப்பிடாமல் நாட்டின் பாதுகாப்புக் குறித்து பேச முடியாத நிலை இன்னும் தொடர்வதாக பிரதமர் டி.எம்.ஜயரத்தின தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விட்டு வெளிநாடு சென்றுள்ள மற்றும் இன் னும் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காது மறைந்து வாழ்கின்ற புலனாய்வு மற்றும் தாக்குதல் படை உறுப்பினர்கள் முன்னைய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும்பிரேரணையில் கலந்து கொண்டு நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே…

  3. Here are the full details of the group of white Van criminal abductors (Lanka-e-News -23.Nov.2011, 11.55P.M.) Lanka e News is in receipt of reliable information on the groups involved in the abductions of civilians in the notorious white Van. This whole operation is carried out on the orders of defense Secretary Gotabaya Rajapakse by a former Sergeant Major of the Special Force's (SF's) LRRP unit. His name is Maddumage Wasantha who lost a leg during the Mamaduwa in Vavuniya District army operations. He left the Army because of his disabled condition on medical grounds. Although he is supposed to have left the Arm…

  4. பார்வையிட இங்கே கிளிக் செய்க நன்றி காவலன்.கொம்

    • 4 replies
    • 3.9k views
  5. பாதுகாப்பு குறைக்கப்பட்டமை பிரபாகரனின் குழுவிற்கு பாதை வெட்டும் செயலாகும் வீரகேசரி நாளேடு பொலிஸ் மா அதிபருக்கு அனுர பண்டாரநாயக்க எம்.பி.கடிதம் எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை என்னை கொலைச்செய்வதற்காக பிரபாகரனின் குழுவிற்கு பாதையை வெட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பொலிஸ் மா அதிபரும் ஆலோசனை வழங்கியோருமே முழு மையாக பொறுப்பு கூறவேண்டும் என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனுர பண்டார நாயக்க தெரிவித்துள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவிற்கு அனுப்பிவைத்து அவசர கடிதத்திலேயே அனுர பண்டாரநாயக்க எம்…

  6. யாழ்ப்பாணத்தில் இரண்டு யுவதிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர் இன்று சனிக்கிழமை மாலை யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். ஆரியாலை ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் ஜெயசுகந்தினி மற்றும் யாழ். கொட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய தம்பிரத்தினம் சுவர்ணநந்தின ஆகிய இரு யுவதிகளே காணமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்ட்டள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேர தெரிவித்தார். குறித்த இரு யுவதிகளும் நேற்று தொடக்கம் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. காணமற்போன யுவதிகளில் ஒருவரான நாகேந்திரன் ஜெயசுகந்தினி பத்து பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் …

    • 4 replies
    • 1.2k views
  7. மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட நகல் யோசனைகள் முதலமைச்சரிடம் கையளிப்பு தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பிற்கான நகல் யோசனைகள் இன்று பேரவை இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தியும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உபகுழுவின் உறுப்பினர் தெரிவித்தார். கடந்த ஒருமாத காலமாக உபகுழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கல்விமான்கள் புத்திஜீவிகளிடம் பெறப்பட்ட யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் …

  8. குரங்குகள் பயிர் நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, பயிர் செய்யப்பட்ட நிலங்களை சுற்றி சிறுத்தையின் சிறுநீரைத் தெளிப்பது குறித்து விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது. விவசாய நிலங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க சிறுத்தை சிறுநீரை விரட்டியாகப் பயன்படுத்தலாம் என்று விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வாசனை குரங்குகள் மற்றும் பபூன்கள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்றும், சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சூழ்நிலையால், சிறுத்தையின் சிறுநீர் போன்ற ரசாயனத்தை செயற்கையாக உற்பத்தி செய்து,இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை …

  9. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் பிடியில் சிக்கித் தவித்த கிழக்கு வாழ் மக்களை அரசாங்கம் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை மீட்டெடுப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனிதாபிமான யுத்தமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை நோக்கி அரசாங்கம் நகர்வதனை எம்மால் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். தினமின நாளேட்டுக்கு அளித்த விசேட செவ்வியின் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பிள…

  10. பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை! : யாழ்.அரச அதிபர் பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்தபோது, அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையென பாடசாலையின் அதிபர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக, யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தற்போது பாடசாலைகளில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்கும்போதே யாழ்.அரச அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். பாடசாலைகளில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் பிள்ளைகள் தெரி…

    • 4 replies
    • 374 views
  11. யாழ். மாநகரில் பொலித்தீனுக்குத் தடா : பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு அமையவும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சூழல்நேய நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கவும் இந்த நடவடிக்கையில் சகலரும் இணைந்து கொள்ளவேண்டும். நாளாந்த பாவனையி…

  12. வெளிநாடுகளின் தலையீடின்றியே தமிழருக்குத் தீர்வு - அமைச்சர் மங்கள விடாப்பிடி தமி­ழர் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணும் விட­யத்­தில் வௌிநாட்டுத் தலை­யீட் டைத் தமிழ் கடும்­போக்­கு­வா­தி­கள் கோரி­வ­ரு­கின்­ற­போ­தும் அவ்­வா­றான தேவை இல்­லா­மல் உள்­ளக ரீதி­யி­லேயே தீர்வை வழங்­கு­வ­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது என்று அய­லு­றவு அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்­ளார். பன்­னாட்டு நீதி­ப­தி­களை அனு­ம­திக்­கின்­றோமா இல்­லையா என்­பது அல்ல இப்­போ­துள்ள பிரச்சினை. தமிழர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோமா என்பதுவே இப்போதுள்ள முக்கிய பிரச்சினை என்றும் அவர் கூறினார்.கொழும்பில்…

  13. சமஷ்டி நாட்டை பிள­வு­ப­டுத்­தாது என்­பதில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை வடக்­கிற்­கான சிறப்பு அதி­கா­ரங்கள் மலை­ய­கத்தை போர்க்­க­ள­மாக்கும் என்­கி­றது அஸ்­கி­ரிய பீடம் (லியோ நிரோஷ தர்ஷன்) சமஷ்டி முறைமை நாட்டை பிள­வு­ப­டுத்தி பிரி­வி­னை­வா­தத்தை தோற்­று­விக்­காது என்­பதில் நம்­பிக்­கை­யில்லை. ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்­ப­டுத்த கூடிய எந்­த­வொரு அர­சியல் அதி­கார கோரிக்­கைக்கும் அங்­கீ காரம் வழங்க முடி­யாது. வடக்கு மாகா­ணத்­திற்கு கூடுதல் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்டால் மலை­யகம் அடுத்­தப்­ப­டி­யாக போர் கொடி தூக்கும் என அஸ்­கி­ரிய பீடத்தின் தலைமைச் செய­லாளர் மெத­கம தம்­மா­னந்த அநு­நா­யக்க…

  14. பயங்கரவாதத் தடை... தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !! சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன. இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெள…

    • 4 replies
    • 385 views
  15. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் “மக்கள் போராட்ட பிரஜைகள்” என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இன்று (18) கையளித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்று ஆவணங்களை ஒப்படைத்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதேவேளை, போராட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய சில குழுவினர் முயற்சிப்பதாகவும், மக்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் மக்கள் போராட்ட பிரஜைகள் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சானக பண்டார தெரிவித்துள்ளார். எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய …

    • 4 replies
    • 948 views
  16. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் தமிழர்களுக்கு வழங்க கூடாது – சரத் வீரசேகர. இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் பிரிவினைவாதிகளுக்கு உண்டு என குற்றம் சாட்டியுள்ளார். 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த ஆதரவு வழங்கப்போவதில்லை என சரத் வீரசேகர தெர…

  17. அரசின் அசமந்தப்போக்கை கண்டித்து கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் : ஐ.நா. பிரதிநிதிகளிடம் சுமந்திரன் வலியுறுத்து (ஆர்.யசி) ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி யாவசிடாவையும், அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவர் கேலி கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நாளைய கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்பதையும…

  18. தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை நாம் தவறவிடோம்! - சிவாஜிலிங்கம் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை நாம் தவறவிடத்தயாராக இல்லை” எனவும் தமிழரசுக் கட்சிசார்பில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான தலைமைவேட்பாளராக தான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நவசமாசவாஜி கட்சியுடன் இணைந்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தாம் போட்டியிடுவதை தாம் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் முன்று பிரதேச சப…

  19. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை பின்போடப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற சகல அரசியல் படுகொலைகளும் விசாரணை செய்யப்பட வேண்டும். அந்தவகையில் தவறுகள் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதுடன் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எம…

    • 4 replies
    • 531 views
  20. Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 11:58 AM இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி குறித்த நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடத்துகின்ற, நிர்வகிக்கின்ற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்…

  21. சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு முன்பு வடக்கில் இடைக்கால நிர்வாக ஆலோசனை சபையை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலோசனை சபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான 5 பேரடங்கிய நிர்வாகக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.6k views
  22. யாழ் மக்களுக்கு சுதந்திரச் சோழர் படையணியின் எச்சரிக்கை துண்டறிக்கை சுதந்திர சோழர் படையணி” என்று உரிமைகோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் “யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோள்!” என்று குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு சில இடங்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படித் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிட்டிருப்பது யாதேனில், மதுபான நிலையங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும். தவறான நோக்கத்துடன் செயற்படும் விடுதிகளை அதன் முகாமையாளர்கள் உடனடியாக மூடவேண்டும். அளவிற்கதிதமாக ஒலியை எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்…

    • 4 replies
    • 1.5k views
  23. இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படும் 30 பேர் பற்றிய தகவல்களை வழங்குமாறு அமெரிக்கா கோரியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் அமெரிக்கத் தூதரகம் இந்தக் கோரிக்iயை முன்வைத்துள்ளது. குறித்த காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கம், காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காணாமல் போன 30 பேர் பற்றிய தகவல்களை அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது. குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட நபர்கள் பற்றி முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் விச…

    • 4 replies
    • 790 views
  24. இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் போருக்குப் பிந்திய நிலைமைகள் மற்றும், அரசியல்தீர்வு காண்பதற்கான சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசுக்கு விளக்கமளிக்கவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில வாரஇதழிடம் கூறியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழு இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், இந்திய அரச தலைவர்களையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளது. அண்மையில் சிறில…

  25. சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் காவல்துறையினருடன் நட்பாக இருப்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்(N. Vedanayagam) தெரிவித்துள்ளார். அத்துடன், இது ஆபத்தான நிலைமையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி(Kilinochchi) கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று(16.03.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். போர்ச் சூழல் அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். கடந்த போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.