Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்தியுள்ள கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நிர்வகத்திற்குள் கிழக்கு மாகாணம் மீண்டும் செல்ல தான் இடமளிக்க போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகளுக்கும், அமெரிக்க மக்களுக்கும், அமெரிகக் அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்திற்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் பிள்ளையான் கூறியுள்ளார். கடந்த 30 வருடங்களாக கிழக்கு மாகாண மக்கள் அபிவிருத்தியைக் கண்டிருக்கவில்லை. இந்த மாகாண மக்களுக்கு இந்த சந்த…

  2. இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை இலங்கை ஜனாதிபதி நியமிப்பாரென ஜனாதிபதி செயலக தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்போதைய தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை இன்று மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் ஷிரானி பண்டாரநாயக்காவை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பார். அதனையடுத்து ஜனாதிபதி கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் சனிக்கிழமை வெளியாகுமெனவும், திங்கட்கிழமை புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவாரெனவும் ஜனாதிபதி செயலக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஆனால் மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதி நியமனத்தை ஏற்க மறுப்பதாக மற்றுமொரு தகவல் கூறுகிறது. htt…

    • 4 replies
    • 750 views
  3. இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு பயணமாகிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புத்த பெருமான் ஞானம் பெற்ற போதிமரம் அமைந்துள்ள புத்தகாயாவுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். புத்தகாயா விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி குழுவினரை, பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் வரவேற்றார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி குழுவினரையும், அவர்கள் புத்தகாயாவில் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/58529-2013-…

  4. மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பிக்குவை கைது செய்யுங்கள் – கூட்டமைப்பு வேண்டுகோள் மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பிக்குவை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் , மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்கு அம்பிட்டிய சுமணரத்ண தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கோரிக்க…

  5. கண்டி - குண்டசாலைப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் சில கனிஷ்ட மாணவர்களை துஷ்பிரயோகப்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசர தொலைபேசி சேவைக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த 3 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பயிற்சி வகுப்பு ஒன்றின் போது கனிஷ்ட மாணவர்கள் சிலரை நிர்வாணமாக்கி அதனை காணொளியாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மேற்படி 2 மாணவர்களை கைதுசெய்துள்ளனர். கைதானவர்களை தெல…

  6. இலங்கையில் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயதெல்லையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருமணம் செய்யக் கூடிய வயதெல்லையை குறைப்பதற்கு தேவையான சட்டப் பின்னணியை அரசாங்கம் உருவாக்க உள்ளது. தற்போது இலங்கையில் காணப்படும் திருமண சட்டத்தின் அடிப்படையில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களே திருமணம் செய்து கொள்ள முடியும். எனினும், 16 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சட்ட மூலம் மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 16 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாயின் தங்களது பெற்றோரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது. தற்போது உள்ள சட்டத்தின் பிரகாரம் …

    • 4 replies
    • 1.2k views
  7. பிரித்தானியாவுக்கான மாணவர்களுக்கான விசா அனுமதி பெற்று பிரித்தானியா வருவதற்காக இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற 18 தமிழ் மாணவர்கள் தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று மதியம் இலங்கை நேரப்படி 1.15 க்கு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த ஏ.எல்.கே.503 விமானத்தில் இவர்கள் பயணிக்க இருந்தனர். குடிவரவு குடியகல்வு பரிசோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்காகக் காத்திருக்கச் செல்கையிலேயே இவர்கள் அனைவரும் பயணத்தைத் தொடர விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கட்டுநாயக்க விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டதற்கு நியாயமான காரணமெதுவும் தெரிவிக்கப்…

    • 4 replies
    • 1.1k views
  8. யாழ்.துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (27) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்தி சென்றவர்களின் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இம்மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். tamilmirror

  9. தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களை நாடாளுமன்றுக்குள் தாக்க முயற்சி! ஆளுந்தரப்பினர் ஆவேசம் சபையில் நேற்று அமளிதுமளி அரச படைகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்களினால் வடக்கு கிழக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை ஆட்சேபித்து நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பமுற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆளுங்கட்சியி னரால் தாக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அறிந்து சபை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தமையால், ஏற்படவிருந்த பெரும் விபரீதமொன்று தவிர்க்கப்பட்டது. நாடாளுமன்றம் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் நேற்றுக்காலை கூடியது. கெப்பிட்டிக்கொல் லாவவில் கிளைமோர் தாக்குதலில் பலியான மக்கள் தொடர்பில் விசேட அறிக்கை …

  10. களுத்துறையில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறி எரிகிறது. தென்னிலங்கை களுத்துறை பகுதியில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியுள்ளது. இன்று நள்ளிரவு 11:30 மணிக்கு களஞ்சியம் வெடித்து சிதறி எரிகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. பதிவு.கொம்

    • 4 replies
    • 2.3k views
  11. குருநகர் இளைஞரின் உயிரைப் பறித்த 'மிஸ்ட் கோல்' காதல்! [sunday 2014-08-03 09:00] தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர், அந்தக் காதல் முறிவடைந்ததால் அதிகளவு மருந்து வில்லைகளை விழுங்கி மரணமானர். குருநகரைச் சேர்ந்த றொபின்சன் ரவிராஸ் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். தவறான தொலைபேசி அழைப்பு ஒன்றினால் குறித்த இளைஞருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக அறிமுகம் ஆவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இருவரும் சந்திக்காத நிலையில் அந்தப் பெண்ணை குறித்த இளைஞர் காதலித்தார் எனக் கூறப்படுகின்றது. தொடர்ச்சியாக அந்த இளைஞர் தனது தொலைபேசி மூலமாகவே காதலை வளர்த்து வந்…

    • 4 replies
    • 638 views
  12. தென்னிலங்கையிலும் பொது மக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் - அநாம தேய "பக்ஸ்' தமிழர் பிரதேசங்களில் அப்பாவி மக்களை இலக்கு வைத்து அரச படைகள் அண்மைக் காலத்தில் நடத்திய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டி, அவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் தொடர்ந்தால் தென்னிலங்கையிலும் பொது மக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை உள்ளடக்கிய அநாம தேய கடிதம் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் ஊட கத் தகவல் நிலையத்துக்கு "பக்ஸ்' மூலம் நேற் றுக் கிடைத்துள்ளதாகத் தெரியவருகிறது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான அரச படை களின் தாக்குதல் சம்பவங்கள் பலவற்றைப் பட்டியலிட்டுச் சுட்டிக்காட்டி அந்தக் கடிதம் வரையப்பட்டுள…

  13. கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு ஏற்பட்ட தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சனநடமாட்டம் குறிப்பிட்டளவில் இருப்பதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார். நேற்று நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவ…

  14. வடக்கில் 700 ஏக்கர் சீனாவுக்கு..! கிளிநொச்சி இரணைமடு குளத்துக்கு தெற்குப் புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணியும் சீனாவுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கிட்டத்தட்ட 500 ஏக்கர் காணிகளை தனது கடன்களை சீர்செய்வதற்கு இரணைமடுவிற்கு தெற்குப் புறமாக சீனாவிற்கு வழங்குவதற்கான முழு முயற்சியையும் இலங்கை அரசு எடுத்திருப்பதாக அறிகின்றேன். இரணைமடுவின் தெற்கு புறமாகவும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையாக உள்ள இயக்கச்சி பகுதியில் மண்டலாய…

  15. முதலமைச்சரின் மனக்குழப்பத்திலான பேச்சுகளுக்கு கூட்டமைப்பு பொறுப்பேற்காது – சுமந்திரன் வடக்கு மாகாண முதலமைச்சர் மன குழப்பம் அடைந்து பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதற்கு கூட்டமைப்பு ஒரு போதும் பொறுப்பேற்காது என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை கூறினார். அவர் அங்கு குறிப்பிடுகையில், “அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. நேற்று முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் 3 தெரிவுகள் முன்னர…

    • 4 replies
    • 721 views
  16. இலங்கையின் நெருக்கத்தை இறுக்கமாக்க வேண்டுமென்கிறது பாகிஸ்தான்: இரு நாடுகளிலும் ஒரே மாதிரியான பிரச்சினைகள் தானாம் [saturday, 2011-07-16 17:40:41] நெருக்கமான உறவைக் கொண்டுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் மேலும் நற்புறவு வலுப்பெறவேண்டும் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் இலங்கையுடன் நெருங்கிய கலாசார தொடர்புகளை கொண்டுள்ளதாகவும, இரு நாடுகளும் தற்போது ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இரு நாடுகளும் பொருளாதாரம் உள்ளிட்ட விடையங்களில் தமக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் …

  17. இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியினையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதியின் செயலாளரிடம் கை…

  18. ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது October 30, 2024 ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ் மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த் தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை (27.10) மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திற் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தமிழ்…

      • Like
    • 4 replies
    • 620 views
  19. 03 JAN, 2025 | 03:17 PM சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202887

  20. இலங்கையில் இனம் அழிக்கப்பட்ட பிறகு கருணாநிதி, தானே ஈழம் தொடர்பாக திரைக்கதை வசனம் எழுதி அந்தப் படத்திற்கு என பெயரும் வைத்து கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக உணமையான தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப்போய் கருணாநிதியை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தகுந்த காரணங்களும் உண்டு. ஆட்சி பறிபோன பிறகு என்ன செய்ய முடியும். இதையே அதிமுக எம்.எல்.ஏவான பழ.கருப்பையா கூறிகையில் குதிரை ஓடிவிட்ட பிறலு லாயத்தை பூட்டுவதற்கு பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி எனச் சொல்கிறார். இதுதொடர்பாக மேலும் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேசுகையில்: ஈழத் தமிழ் இனமே அழிந்து சுடுகாடான பிறகு, உடல், பொருள், ஆவி என 90 வயதில் துள்ளிக் குதிக்கிறார் கருணாநிதி. இப்போது அவரிடம…

  21. Published By: DIGITAL DESK 7 22 FEB, 2025 | 03:44 PM யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த 30 வயதுடையவரே விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத…

  22. இலங்கை இந்திய கடற்பரப்பில் முறுகல்கள் தொடர்கின்றன. தமிழக கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 60 பேரும் இன்று இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க தெரிவித்தார். காங்கேசன்துறையின் வட கடற்பரப்பில் வைத்து இவர்கள் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர். இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததன் காரணமாக கடந்த வாரங்களில், 120 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால், கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் தமிழக காவல்துறையினரால், கைது செய்யப்பட்டிருந்த இன்னும் 45 இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின…

  23. மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள் Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. இதில், 218.2 புள்ளிகளுடன் லக்சம்பர்க், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3வது இடத்திலும், ஓமன் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது. அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்...…

  24. [size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம். நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான நடைமுறைகள் எதற்காக கையாளப்படுகின்றன? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கடந்த காலத்தில் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததால் பலாலி பகுதியில் 500 மீற்றர் வரையான பகுதியே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கு அப்பால் பொதுமக்களே வசித்து வந்தனர். அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்கள் மற்றும் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு வலையங்களை பெருப்பிக்க வே…

    • 4 replies
    • 887 views
  25. மசகு எண்ணை கப்பல் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை September 4, 2020 மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதான மாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிகின்ற நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு இன்று(4) அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்தது. மேலும் இவ்வெச்சரிக்கை திருக்கோவில்இ தம்பிலுவில், உமிரி, பொத்துவில் ,கல்முனை,ஆலையடிவேம்பு ,அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்களை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.